பொள்ளாச்சியில் குழந்தையைக் கடத்திய பெண் கைது! 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு போலீசார் சாதனை!

pollachi child theft - 2026

பொள்ளாச்சியில் பெற்றோரை நம்பவைத்து உடனிருந்து உதவுவது போல் தங்கியிருந்து, பிறந்த குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை 10 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

கோவை மாவட்டம் காளியாபுரம் நரி கல்பதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பெண் ஒருவர் வந்து பேசி அவர்களுடன் பழகியுள்ளார். சிறிது பழகியதும், “எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை, உங்களுடனே இருக்க அனுமதியுங்கள்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் மனமிரங்கிய பாலன் தம்பதி, அந்தப் பெண்ணை அவர்களுடன் தங்க அனுமதித்துள்ளனர்.

இதை அடுத்து அந்தப் பெண்ணும், தேவிக்கு பிரசவம் முடியும்வரை கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். பிரசவம் முடிந்த பின்னர், தாயும் சேயும் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்த நிலையில், மருந்துகள் வாங்குவதற்காக பாலன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது பாலனுடன் தன் கையில் குழந்தையையும் வைத்துக் கொண்டு வெளியே வந்த அந்தப் பெண்மணி, அப்படியே குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளார்.

குழந்தை காணாமல் போனதும், அதை அந்தப் பெண்ணே தூக்கிச் சென்றிருப்பதையும் அறிந்த பாலன் தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகார் அளிக்கவே, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை தூக்கிக் கொண்டு பாலன் உடன் செல்லும் அப்பெண், குழந்தையுடன் வெளியே சென்றுவிடுவது தெரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில், அந்தப் பெண் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆண் குழந்தை பிறந்து ஆறு நாளான நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில், அந்தப் பெண் சிக்கினார். உடுமலை குறிச்சிக்கோட்டை பகுதியில் குழந்தையுடன் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். கடத்திய பெண்னை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தை கடத்தப்பட்ட பத்து மணி நேரத்தில் குழந்தையை மீட்ட பொள்ளாச்சி போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories