February 22, 2026, 6:23 PM
29 C
Chennai

பொள்ளாச்சியில் குழந்தையைக் கடத்திய பெண் கைது! 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு போலீசார் சாதனை!

pollachi child theft - 2026

பொள்ளாச்சியில் பெற்றோரை நம்பவைத்து உடனிருந்து உதவுவது போல் தங்கியிருந்து, பிறந்த குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை 10 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

கோவை மாவட்டம் காளியாபுரம் நரி கல்பதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பெண் ஒருவர் வந்து பேசி அவர்களுடன் பழகியுள்ளார். சிறிது பழகியதும், “எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை, உங்களுடனே இருக்க அனுமதியுங்கள்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் மனமிரங்கிய பாலன் தம்பதி, அந்தப் பெண்ணை அவர்களுடன் தங்க அனுமதித்துள்ளனர்.

இதை அடுத்து அந்தப் பெண்ணும், தேவிக்கு பிரசவம் முடியும்வரை கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். பிரசவம் முடிந்த பின்னர், தாயும் சேயும் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்த நிலையில், மருந்துகள் வாங்குவதற்காக பாலன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது பாலனுடன் தன் கையில் குழந்தையையும் வைத்துக் கொண்டு வெளியே வந்த அந்தப் பெண்மணி, அப்படியே குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளார்.

குழந்தை காணாமல் போனதும், அதை அந்தப் பெண்ணே தூக்கிச் சென்றிருப்பதையும் அறிந்த பாலன் தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகார் அளிக்கவே, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை தூக்கிக் கொண்டு பாலன் உடன் செல்லும் அப்பெண், குழந்தையுடன் வெளியே சென்றுவிடுவது தெரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில், அந்தப் பெண் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆண் குழந்தை பிறந்து ஆறு நாளான நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில், அந்தப் பெண் சிக்கினார். உடுமலை குறிச்சிக்கோட்டை பகுதியில் குழந்தையுடன் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். கடத்திய பெண்னை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தை கடத்தப்பட்ட பத்து மணி நேரத்தில் குழந்தையை மீட்ட பொள்ளாச்சி போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories