December 6, 2025, 11:32 AM
26.8 C
Chennai

பொள்ளாச்சியில் குழந்தையைக் கடத்திய பெண் கைது! 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு போலீசார் சாதனை!

pollachi child theft - 2025

பொள்ளாச்சியில் பெற்றோரை நம்பவைத்து உடனிருந்து உதவுவது போல் தங்கியிருந்து, பிறந்த குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை 10 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

கோவை மாவட்டம் காளியாபுரம் நரி கல்பதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பெண் ஒருவர் வந்து பேசி அவர்களுடன் பழகியுள்ளார். சிறிது பழகியதும், “எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை, உங்களுடனே இருக்க அனுமதியுங்கள்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் மனமிரங்கிய பாலன் தம்பதி, அந்தப் பெண்ணை அவர்களுடன் தங்க அனுமதித்துள்ளனர்.

இதை அடுத்து அந்தப் பெண்ணும், தேவிக்கு பிரசவம் முடியும்வரை கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். பிரசவம் முடிந்த பின்னர், தாயும் சேயும் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்த நிலையில், மருந்துகள் வாங்குவதற்காக பாலன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது பாலனுடன் தன் கையில் குழந்தையையும் வைத்துக் கொண்டு வெளியே வந்த அந்தப் பெண்மணி, அப்படியே குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளார்.

குழந்தை காணாமல் போனதும், அதை அந்தப் பெண்ணே தூக்கிச் சென்றிருப்பதையும் அறிந்த பாலன் தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புகார் அளிக்கவே, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை தூக்கிக் கொண்டு பாலன் உடன் செல்லும் அப்பெண், குழந்தையுடன் வெளியே சென்றுவிடுவது தெரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில், அந்தப் பெண் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆண் குழந்தை பிறந்து ஆறு நாளான நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில், அந்தப் பெண் சிக்கினார். உடுமலை குறிச்சிக்கோட்டை பகுதியில் குழந்தையுடன் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். கடத்திய பெண்னை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தை கடத்தப்பட்ட பத்து மணி நேரத்தில் குழந்தையை மீட்ட பொள்ளாச்சி போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories