December 6, 2025, 8:29 AM
23.8 C
Chennai

திமுக.,நிர்வாகியின் அராஜகம்! கோயில் நிலத்தில் கோசாலை கட்ட எதிர்ப்பு!

analadiswarar temple thottiyam - 2025

கோவில் நிலம் நாங்க ஆட்டையப் போட்ட தான் இருக்கு அதுல நீங்க எப்படி கோசால கட்டலாம்..? – இப்படித்தான் திமுக நிர்வாகி கோசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்!

தொட்டியம் சிவன் கோவில் அருகே கோ சாலை அமைக்க திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது! தொட்டியம் நகரில் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது.

இந்தக் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிக் குழு மற்றும் நிர்வாகத்தின் சார்பில் கோவில் அருகே நந்தவனம் அமைத்து கோசாலை கட்டுவதற்கு முடிவு செய்தார்கள்.

இதை அறிந்த அந்தப் பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வரும் திமுக பேரூர் செயலாளர் நிர்மலா சந்திரசேகர் அந்தப் பகுதியில் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இது தொடர்பாக,  மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது! மேலும் கோவில் அருகில் நந்தவனம் மற்றும் கோ சாலை அமைக்க அனுமதி அளித்தது! இதைத் தொடர்ந்து கோசாலை அமைக்க பூமி பூஜை நடத்தி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று திமுக பேரூர் செயலாளர் நிர்மலா சந்திரசேகர் மற்றும் சிலர் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகிகள் திருப்பணிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் அங்கே பெருமளவில் திரண்டனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி கலைத்தனர்.

கோவில் நிலத்தில் கோசாலை கட்ட திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயில் நிலம் தங்களுக்கே சொந்தம்; கோயில் நிலத்தை ஆட்டைய போடத்தானே நாங்க இருக்கோம் என்று திமுகவினர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

தாங்கள் நடத்தும் பள்ளி மற்றும் தொழிலகங்களுக்கு கோவில் நிலங்களை அவர்கள் அபகரித்து வருகின்றனர்; அதன் ஒரு பகுதியாக இது போன்ற செயலிலும் இந்த நிர்மலா சந்திரசேகர் ஈடுபட்டிருப்பார் என்று உள்ளூர் பிரமுகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

திமுகவினரின் குண்டர் படை அராஜகம் என்றுதான் தொலையுமோ என்று தலையில் அடித்துக் கொண்டு கலைந்து சென்றனர் ஊர் மக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories