ஆன்லைன் மூலம் திருமண மோசடி; பொறியாளர் கைது செய்யப்பட்டார்…..!

criam - 2026

ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் தேடும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் மிகவும் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அரசுப் பெண் மருத்துவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்த பொறியாளரை லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயக நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சக்ரவர்த்தி (34). பொறியாளாரான இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில் ஒரு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் போலி பெயர்களில் தனக்கு மணப்பெண் கோரி பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தொடர்பு கிடைத்த திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள அரசுப் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாக கூறி பழகி, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் அவரைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் மு. கவிதா வழக்குப் பதிந்து சக்ரவர்த்தியைத் தேடி வந்தனர்.

இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து அந்தப் பெண் மருத்துவர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை உயர்நீதி மன்றத்தில், ஒரே புகைப்படத்தை வைத்து பல பெயர்களில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்யும் ஆன்லைன் தகவல் மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் தன்னிடமிருந்து ரூ. 20 லட்சத்தை மோசடி செய்த சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குத் தொடுத்தார்.

விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமண தகவல் மையம் மீதும் சக்ரவர்த்தி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டது.

அதன்படி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மு. கவிதா மற்றும் காவலர்கள் திருவண்ணாமலை சென்று அங்கு வீட்டில் இருந்த சக்ரவர்த்தியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கார் ஒட்டுநர் திருவண்ணாமலை கோசலை பகுதியைச் சேர்ந்த மு. முருகன் (39) ஆகிய இருவரையும் கைது செய்து,

லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் உத்தரவின்பேரில் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories