February 22, 2026, 11:25 AM
29.6 C
Chennai

ஆன்லைன் மூலம் திருமண மோசடி; பொறியாளர் கைது செய்யப்பட்டார்…..!

criam - 2026

ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் தேடும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் மிகவும் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அரசுப் பெண் மருத்துவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்த பொறியாளரை லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயக நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சக்ரவர்த்தி (34). பொறியாளாரான இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில் ஒரு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் போலி பெயர்களில் தனக்கு மணப்பெண் கோரி பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தொடர்பு கிடைத்த திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள அரசுப் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாக கூறி பழகி, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் அவரைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் மு. கவிதா வழக்குப் பதிந்து சக்ரவர்த்தியைத் தேடி வந்தனர்.

இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து அந்தப் பெண் மருத்துவர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை உயர்நீதி மன்றத்தில், ஒரே புகைப்படத்தை வைத்து பல பெயர்களில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்யும் ஆன்லைன் தகவல் மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் தன்னிடமிருந்து ரூ. 20 லட்சத்தை மோசடி செய்த சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குத் தொடுத்தார்.

விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமண தகவல் மையம் மீதும் சக்ரவர்த்தி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டது.

அதன்படி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மு. கவிதா மற்றும் காவலர்கள் திருவண்ணாமலை சென்று அங்கு வீட்டில் இருந்த சக்ரவர்த்தியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கார் ஒட்டுநர் திருவண்ணாமலை கோசலை பகுதியைச் சேர்ந்த மு. முருகன் (39) ஆகிய இருவரையும் கைது செய்து,

லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் உத்தரவின்பேரில் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories