February 21, 2026, 7:52 PM
29 C
Chennai

கேரளாவில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட தமிழக இளைஞர் கைது; மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

kallanote 2 - 2026

கேரள மாநிலம் இடுக்கியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனியைச் சோ்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி அருகே நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் நேற்று முன்பதினம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தனிப்படை அமைத்து கள்ள நோட்டு கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தேனியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கூடலூர், தேவாரம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் கூடலூரில் ஒரு அறையில் தங்கி இருந்த 2 பேர் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்தது.

கூடலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 26) என்பவரும் தேவாரத்தைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் நெடுங்கண்டம் தூக்குப்பாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனா்.

சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு ஆட்டோவில் ஏறி தங்களது அறைக்கு வந்துள்ளனர்

. ஆட்டோ டிரைவரிடமும் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளனர். அவர்கள் 2 பேரும் நெடுங்கண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்துள்ளனா். இதனையடுத்து அவர்கள் தங்களை தேடுவதை அறிந்து கூடலூருக்கு வந்து விட்டனர்.

போலீசார் அதிரடியாக சென்று அவர்கள் தங்கி இருந்த அறையில் சோதனையிட்டனர். அப்போது அருண்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதை ஒத்துக் கொண்டார்.

அவர் அறையில் இருந்து ரூ.7,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கூடலூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பல முறை கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனியில் நக்சலைட்டு உள்ளிட்ட தீவிரவாத செயல்களுககு கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து இரு மாநில எல்லை பகுதியில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வந்தனர்.

தற்போது அதே போல் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்கள் கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பிடிபட்ட அருண்குமாரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories