பருப்பு வியாபாரியின் கையை வெட்டி பணம் பறிப்பு; கொள்ளையருக்கு போலீஸ் வலைவீச்சு……!

vettu 2 1 - 2026திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வியாபாரி கையை வெட்டி துண்டித்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாபிரபு (வயது 50), இவர் அந்த பகுதயில் உள்ள பலசரக்கு கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லரை விற்பனைக்காகவும் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். அதற்கான பணத்தை வாரந்தோறும் கடைகளுக்கு சென்று வசூல் செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ராஜாபிரபு பணத்தை வசூல் செய்வதற்கு தனது பைக்கில் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டார்.

கழுகுமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையம் வழியாக நகருக்குள் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ராஜாபிரபுவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை திடீரென்று வழி மறித்தனர்.

மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி ராஜாபிரபுவிடம் பணத்தை தருமாறு கேட்டனர்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளால் ராஜாபிரபுவின் வலது கையில் சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரின் வலது கை துண்டானது. பின்னர் ராஜாபிரபு வைத்து இருந்த ரூ.15 ஆயிரத்தை அவர்கள் கொள்ளை அடித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜாபிரபு வேதனையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சங்கரன்கோவில் டவுன் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ராஜாபிரபுவையும், துண்டிக்கப்பட்ட வலது கையையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜாபிரபு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சங்கரன்கோவில் பகுதியில் இதுவரை வீடு புகுந்து திருட்டு, கடையில் பணத்தை எடுத்து கொண்டு ஓட்டம், வங்கியில் பணம் எடுத்து விட்டு வந்த முதியவரை ஏமாற்றி பணம் பறிப்பு என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

இவற்றில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தற்போது பணத்திற்காக வியாபாரியின் கையை வெட்டிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories