December 5, 2025, 7:58 PM
26.7 C
Chennai

பருப்பு வியாபாரியின் கையை வெட்டி பணம் பறிப்பு; கொள்ளையருக்கு போலீஸ் வலைவீச்சு……!

vettu 2 1 - 2025திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வியாபாரி கையை வெட்டி துண்டித்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாபிரபு (வயது 50), இவர் அந்த பகுதயில் உள்ள பலசரக்கு கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லரை விற்பனைக்காகவும் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். அதற்கான பணத்தை வாரந்தோறும் கடைகளுக்கு சென்று வசூல் செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ராஜாபிரபு பணத்தை வசூல் செய்வதற்கு தனது பைக்கில் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டார்.

கழுகுமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையம் வழியாக நகருக்குள் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ராஜாபிரபுவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை திடீரென்று வழி மறித்தனர்.

மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி ராஜாபிரபுவிடம் பணத்தை தருமாறு கேட்டனர்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளால் ராஜாபிரபுவின் வலது கையில் சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரின் வலது கை துண்டானது. பின்னர் ராஜாபிரபு வைத்து இருந்த ரூ.15 ஆயிரத்தை அவர்கள் கொள்ளை அடித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜாபிரபு வேதனையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சங்கரன்கோவில் டவுன் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ராஜாபிரபுவையும், துண்டிக்கப்பட்ட வலது கையையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜாபிரபு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சங்கரன்கோவில் பகுதியில் இதுவரை வீடு புகுந்து திருட்டு, கடையில் பணத்தை எடுத்து கொண்டு ஓட்டம், வங்கியில் பணம் எடுத்து விட்டு வந்த முதியவரை ஏமாற்றி பணம் பறிப்பு என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

இவற்றில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தற்போது பணத்திற்காக வியாபாரியின் கையை வெட்டிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories