சென்னை, கோவை, மதுரை, ஐ… கலக்கபோகும் மின்சார பேரூந்துகள்….!

VIJEYABASKAR - 2026தமிழகத்தில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-விஐ தரமான பேரூந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்கப்படும்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.

சென்னை: சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது: 12 ஆயிரம் புதிய BS-VI தரத்திலான பேருந்துகளையும் உலகத் தரத்தில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் சுற்றுசுசுழுல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக, சென்னையில் மின்சார பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சென்னை, கோவை, மதுரையில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000

elaktri bus - 2026மின்சார பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் விரைவில் 1,500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் . கழிவறை மற்றும் படுக்கை வசதிகளை கொண்ட பேருந்துகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. சுற்றுச் சூழல் மாசுபடாத வண்ணம் மின்சார பேருந்துகள் வாங்குவது இருக்கட்டும். அவற்றை தங்கு தடையின்றி இயக்க சார்ஜிங் பாய்ண்டுகள் அமைத்தால் மட்டும் போதுமா? அங்கு மின்சாரம் இருக்க என்ன வழி? ஏற்கெனவே தமிழகம் தண்ணீர் பஞ்சம் மற்றும் மின் தடையை சந்திக்கிறது. புதிய மின் பேருந்துகள் பழுதடைந்தால் சரி செய்ய தொழில் நுட்பம், பொறியாளர்கள் மற்றும் மாற்று உதிரி பாகங்கள் கிடைக்க என்ன திட்டம் உள்ளது? இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து அரசு முடிவெடுக்க வேண்டும். ஏதோ அவசர மக்கள் நல்வாழ்வு திட்டம், உலக தரத்தில் வெளி நாடுகளை போல் இங்கும் மின் பேருந்து என்று வண்ண மயமாக படம் காட்டினால் மட்டும் போதாது. கடல் நீரை குடிநீராக்கவும், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் நீண்ட தொலைநோக்குடன் திட்டங்களை தமிழக அரசு உடனே தாமதிக்காது செயல் படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். பல கோடி ரூபாய்கள் செலவு பிடிக்கும். ஆனால் மாண்புமிகு மறைந்த அம்மா அவர்களால் கூட நிறைவேற்றப்படாத இதை இப்போதைய ஓபிஎஸ் – இபி எஸ் அரசு செய்யுமானால், தமிழக மக்கள் இவர்களையும் அதிமுக கட்சியையும் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். வேறு ஒருவரும் வரும் காலங்களில் ஆட்சியைப் பிடிக்கவும் வர முடியாது. செய்வீர்களா? செய்வீர்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories