December 6, 2025, 5:20 AM
24.9 C
Chennai

தமிழகத்தில் மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது…..!

TREE AMBULANS - 2025

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரங்களை காக்க புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி, பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மக்கள் நிரந்தரமாக மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாகும்.

அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ஒன்று மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த சேவையை சமீபத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

இயற்கை சீற்றங்களால் மரங்கள் வேரோடு சாய்ந்தாலோ, கட்டுமான பணிகளுக்காக மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றாலோ, இந்த ‘Tree Ambulance’ சேவையை தொடர்பு கொண்டால் மரத்திற்கு எவ்வித சேதமுமின்றி கொண்டு செல்லப்படும்.

இந்த மரங்கள் பாதுகாப்பாக வேறு இடங்களில் நடப்படும். இந்த சேவையை தொடர்பு கொள்ள 9941006786 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் மரங்கள் அப்புறப்படுத்தப்படும்.

இது ஒரு இலவச எண் ஆகும். இது குறித்து இயற்கை ஆர்வலர் அப்துல்கனி கூறுகையில், ‘தன்னார்வ தொண்டாற்றுவதில் விருப்பம் உள்ளவர்களை வைத்து இந்த சேவை செய்யப்படுகிறது. ஆட்கள் இல்லாத இடங்களில் சிறிய இயந்திரங்கள் மூலம் மரங்கள் காப்பாற்றப்படுகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிலும் சென்னையில்தான் முதன்முறையாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையிலேயே இந்த சேவை தொடங்கப்பட்டது’ என கூறினார்.

மேலும் இதன் அடுத்தகட்டமாக மரங்களை வேரோடு எடுக்கும் ஹைட்ராலிக் இயந்திரங்களை கொண்டு செயல்பட தீவிர பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஹைட்ராலிக் இயந்திரங்கள் வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம், 100 ஆண்டுகள் பழமையான மரங்களையும் கூட இலகுவாக தாய் மண்ணுடன் பெயர்த்து எடுத்து எவ்வித சேதமும் இல்லாமல் மற்றொரு இடத்தில் நட்டுவிடும்.

மரங்களை காக்கும் இதுபோன்ற நவீன இயந்திரங்கள் வாங்க அதிக செலவாகும் என்பதால் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என சாசா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories