தமிழகத்தில் மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது…..!

TREE AMBULANS - 2026

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரங்களை காக்க புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி, பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மக்கள் நிரந்தரமாக மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாகும்.

அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ஒன்று மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த சேவையை சமீபத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

இயற்கை சீற்றங்களால் மரங்கள் வேரோடு சாய்ந்தாலோ, கட்டுமான பணிகளுக்காக மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றாலோ, இந்த ‘Tree Ambulance’ சேவையை தொடர்பு கொண்டால் மரத்திற்கு எவ்வித சேதமுமின்றி கொண்டு செல்லப்படும்.

இந்த மரங்கள் பாதுகாப்பாக வேறு இடங்களில் நடப்படும். இந்த சேவையை தொடர்பு கொள்ள 9941006786 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் மரங்கள் அப்புறப்படுத்தப்படும்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இது ஒரு இலவச எண் ஆகும். இது குறித்து இயற்கை ஆர்வலர் அப்துல்கனி கூறுகையில், ‘தன்னார்வ தொண்டாற்றுவதில் விருப்பம் உள்ளவர்களை வைத்து இந்த சேவை செய்யப்படுகிறது. ஆட்கள் இல்லாத இடங்களில் சிறிய இயந்திரங்கள் மூலம் மரங்கள் காப்பாற்றப்படுகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிலும் சென்னையில்தான் முதன்முறையாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையிலேயே இந்த சேவை தொடங்கப்பட்டது’ என கூறினார்.

மேலும் இதன் அடுத்தகட்டமாக மரங்களை வேரோடு எடுக்கும் ஹைட்ராலிக் இயந்திரங்களை கொண்டு செயல்பட தீவிர பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஹைட்ராலிக் இயந்திரங்கள் வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம், 100 ஆண்டுகள் பழமையான மரங்களையும் கூட இலகுவாக தாய் மண்ணுடன் பெயர்த்து எடுத்து எவ்வித சேதமும் இல்லாமல் மற்றொரு இடத்தில் நட்டுவிடும்.

மரங்களை காக்கும் இதுபோன்ற நவீன இயந்திரங்கள் வாங்க அதிக செலவாகும் என்பதால் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என சாசா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories