February 22, 2026, 2:22 PM
30.4 C
Chennai

தமிழகத்தில் மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது…..!

TREE AMBULANS - 2026

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரங்களை காக்க புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி, பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மக்கள் நிரந்தரமாக மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாகும்.

அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ஒன்று மரங்களை காக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த சேவையை சமீபத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

இயற்கை சீற்றங்களால் மரங்கள் வேரோடு சாய்ந்தாலோ, கட்டுமான பணிகளுக்காக மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றாலோ, இந்த ‘Tree Ambulance’ சேவையை தொடர்பு கொண்டால் மரத்திற்கு எவ்வித சேதமுமின்றி கொண்டு செல்லப்படும்.

இந்த மரங்கள் பாதுகாப்பாக வேறு இடங்களில் நடப்படும். இந்த சேவையை தொடர்பு கொள்ள 9941006786 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் மரங்கள் அப்புறப்படுத்தப்படும்.

இது ஒரு இலவச எண் ஆகும். இது குறித்து இயற்கை ஆர்வலர் அப்துல்கனி கூறுகையில், ‘தன்னார்வ தொண்டாற்றுவதில் விருப்பம் உள்ளவர்களை வைத்து இந்த சேவை செய்யப்படுகிறது. ஆட்கள் இல்லாத இடங்களில் சிறிய இயந்திரங்கள் மூலம் மரங்கள் காப்பாற்றப்படுகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிலும் சென்னையில்தான் முதன்முறையாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையிலேயே இந்த சேவை தொடங்கப்பட்டது’ என கூறினார்.

மேலும் இதன் அடுத்தகட்டமாக மரங்களை வேரோடு எடுக்கும் ஹைட்ராலிக் இயந்திரங்களை கொண்டு செயல்பட தீவிர பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஹைட்ராலிக் இயந்திரங்கள் வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம், 100 ஆண்டுகள் பழமையான மரங்களையும் கூட இலகுவாக தாய் மண்ணுடன் பெயர்த்து எடுத்து எவ்வித சேதமும் இல்லாமல் மற்றொரு இடத்தில் நட்டுவிடும்.

மரங்களை காக்கும் இதுபோன்ற நவீன இயந்திரங்கள் வாங்க அதிக செலவாகும் என்பதால் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என சாசா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories