பூரண மதுவிலக்கு கோரி தேசியக் கொடியுடன் போராடிய பெண் கைது பரபரப்பு…..!

CHNNAI LEADY - 2026

தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி மெரினா பீ்ச்சில் உள்ள காந்தி சிலை முன்பு தேசிய கொடியுடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு போராட்டம், பேரணி, உண்ணாவிரதங்கள் நடத்த சென்னை மாநகர காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த தடையை மீறி அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதை தடுக்கும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் நேப்பியார் பாலம் வரை 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் நபர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலை 9.30 மணி அளவில் பெண் ஒருவர் வந்தார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

ஆனால் அந்த பெண் திடீரென கையில் தேசிய கொடியை பிடித்தப்படி காந்தி சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம் நடத்த தடைசெய்யப்பட்ட பகுதியில் பெண் ஒருவர் தேசிய கொடியுடன் அமர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை அங்கிருந்த அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் அந்த பெண் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். மது உற்பத்தி செய்யும் ஆலைகளை மூட வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு மையம் திறக்க வேண்டும் ஆகிய கோரிகளை தமிழக அரசு நிறைவேற்றினால் தான் நான் உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறிவிட்டார்.பின்னர் கடும் போராட்டத்திற்கு இடையே பெண்ணை மெரினா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி கலைச்செல்வி(40) என தெரியவந்தது.

இவர் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

பிறகு கலைச்செல்வியின் கணவர் கணபதியை போலீசார் நேரில் வரவழைத்து முன் அறிவிப்பு இன்றி தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்த கூடாது என்று கடுமையாக எச்சரித்து,

எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா காந்தி சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories