December 6, 2025, 1:45 AM
26 C
Chennai

பூரண மதுவிலக்கு கோரி தேசியக் கொடியுடன் போராடிய பெண் கைது பரபரப்பு…..!

CHNNAI LEADY - 2025

தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி மெரினா பீ்ச்சில் உள்ள காந்தி சிலை முன்பு தேசிய கொடியுடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு போராட்டம், பேரணி, உண்ணாவிரதங்கள் நடத்த சென்னை மாநகர காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த தடையை மீறி அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதை தடுக்கும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் நேப்பியார் பாலம் வரை 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் நபர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலை 9.30 மணி அளவில் பெண் ஒருவர் வந்தார்.

ஆனால் அந்த பெண் திடீரென கையில் தேசிய கொடியை பிடித்தப்படி காந்தி சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம் நடத்த தடைசெய்யப்பட்ட பகுதியில் பெண் ஒருவர் தேசிய கொடியுடன் அமர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை அங்கிருந்த அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் அந்த பெண் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். மது உற்பத்தி செய்யும் ஆலைகளை மூட வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு மையம் திறக்க வேண்டும் ஆகிய கோரிகளை தமிழக அரசு நிறைவேற்றினால் தான் நான் உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறிவிட்டார்.பின்னர் கடும் போராட்டத்திற்கு இடையே பெண்ணை மெரினா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி கலைச்செல்வி(40) என தெரியவந்தது.

இவர் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

பிறகு கலைச்செல்வியின் கணவர் கணபதியை போலீசார் நேரில் வரவழைத்து முன் அறிவிப்பு இன்றி தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்த கூடாது என்று கடுமையாக எச்சரித்து,

எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா காந்தி சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories