December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் நள்ளிரவில் நடத்திய தர்ணா போராட்டத்தால் பரபரப்பு….!

sevandiyar - 2025

டிக்கெட் பரிசோதகரை கண்டித்து விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்த உழவாரப்பணி சிவனடியார்கள் 151 பேர் கடந்த 28-ந் தேதி காசிக்கு யாத்திரை சென்றனர்.

வட நாட்டில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை சென்ற அவர்கள் சென்னை வந்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று நள்ளிரவு விருத்தாசலம் வந்தனர்.

சிவனடியார்கள் அனைவரும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றவுடன் இறங்கி ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர்.

அப்போது ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அவர்களை வழிமறித்து உங்களிடம் டிக்கெட் உள்ளதா? என கேட்டுள்ளார். அப்போது டிக்கெட் வைத்திருப்பவர் பின்னால் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறியுள்ளனா்.

ஆனால் அதை ஏற்காத அந்த டிக்கெட் பரிசோதகர் சிவனடியார்களிடம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து டிக்கெட் வைத்திருந்த நபர் அங்கு வந்து அனைத்து டிக்கெட்டையும் டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினார். ஆனாலும் டிக்கெட் பரிசோதகர் சிவனடியார்களை மீண்டும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சிவனடியார்கள் அனைவரிடமும் டிக்கெட் இருப்பதை உறுதி செய்த அவர்கள் டிக்கெட் பரிசோதகரை சமாதானப்படுத்தியுள்ளனா்.

ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை, சிவனடியார்கள் தன்னை தாக்க முயன்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரயில்வே போலீசாரிடம் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவனடியார்கள் டிக்கெட் பரிசோதகரை கண்டித்து ரெயில் நிலைய வளாகத்திலேயே அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் சிவனடியார்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நள்ளிரவில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories