ராஜராஜ சோழனை அவதூறாகப் பேசிய பா.ரஞ்சித் மீது புகார்! நெல்லை விஷ்வ ஹிந்து பரிஷத் ஆணையரிடம் மனு!

nellai complaint - 2026

கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர்பாரூக் என்ற மணி நினைவு நாளில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பனந்தாள் தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் இயக்குனர் ரஞ்சித் ஆசிய கண்டத்தை ஆண்ட இந்து மாமன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறான கருத்தைப் பரப்பி அவதூறு செய்து பேசி இருந்தார்

அவர் கூறியவை: ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் நம்முடைய இருண்ட காலம். அவருடைய ஆட்சிக் காலத்தில் தஞ்சை டெல்டா பகுதியிலிருந்து என் நிலங்கள் மிகப் பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் பறிக்கப்பட்டது! நானூறு பெண்களை விலை மாதர்கள் மாற்றி மங்கள விலாஸ் வைத்துவிட்டு மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்தது! அவருடைய ஆட்சி காலத்தில்தான்! மாடு உன் தெய்வம் என்றால் அதை வெட்டி தின்பவன் நான்.

முடிந்தால் இந்து மடங்களில் உள்ள எங்கள் நிலங்களை மீட்டுத் தாருங்கள்! பொட்டு வைத்து வருகின்றவர்கள் நாங்கள் இல்லை! அவர்கள் இந்துக்கள் நாங்கள் புத்தர்கள் என்று அவர் பேசிய நச்சு கலந்த பிரிவினைவாத பேச்சு யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது

அதை பார்த்த இந்துவாகிய என் மனது மிகவும் வேதனை அடைகிறது! இந்து மாமன்னர் ராஜராஜ சோழன் மீது அவதூறு பரப்பும் அவர் புகழுக்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் பேசியுள்ளார்!

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாடுகளை வெட்டி தின்பேனென்று இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும் இந்த மடங்கள் மீது தேவையற்ற வதந்திகளை பரப்பி ஹிந்து ஹரிஜன மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பேசிய பா ரஞ்சித் பேச்சு, இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது

எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இந்திய சாசன சட்டப் பிரிவு 21ன் கீழ் மற்றும் இந்திய சட்டம் 295 – 97 295a 298 மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 490 வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • இவ்வாறு மனு எழுதி அதன் நகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது! விஷ்வ ஹிந்து பரிஷத் திருநெல்வேலி மாவட்ட செயலர் ஆறுமுகக்கனி பெயரில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது
ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குகொண்டுள்ளனர். முன்னதாக இன்று காலை மனு அளிப்பதற்காக மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இவர்கள் சென்றிருந்த போது, தாமதப் படுத்தியதாகவும், மனு அளிக்க உடனே அனுமதி கொடுக்கவில்லை என்றும் கூறப் பட்டது. பின்னர் பா.ரஞ்சித் குறித்து புகார் மனு அளிக்கப் பட்டதன் ரசீது கொடுக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories