குற்றாலத்திற்கு குளிக்க வந்த குமரிகளை குஜாலுக்கு அழைத்த 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது…..!

criam 3 - 2026

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும்.

இந்த காலகட்டத்தில் சீசனை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குளித்து மகிழ்ந்திட குற்றாலம் நோக்கி படையெடுத்து வருவது வழக்கம்.

இவர்களுக்காக தங்கும் விடுதிகள், தனியார் நவீன காட்டேஜ்களும் தனித்தனியாக உள்ளன

இந்நிலையில் குற்றாலம் விடுதியில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 போலீசார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் மாலை குற்றாலத்தில் தனியார் காட்டேஜில் சீசனை அனுபவிப்பதற்காக நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த ரமணி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் தங்கியிருந்தார்.

இவர்களை நெல்லை அருகே உள்ள கீழஓமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கிளிண்டன் (23) என்பவர் உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், அவர்கள் மறுக்கவே கிளிண்டன் நண்பர்களான ரமேஷ்பாபு, விஜய்ஆனந்த் ஆகியோரை உதவிக்கு அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது அங்கு நெல்லை ஆயுதப்படையில் போலீஸ் வேன் டிரைவராக பணியாற்றும் மணிகண்டன், போலீஸ்காரர் மகாலிங்கம் ஆகியோரும் வந்து அந்த இளைஞர்களுடன் சேர்ந்து ரமணியை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

அவர் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்ததாகவும் தெரிகிறது.

தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து பெண்ணை மிரட்டியது, பணம் பறித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சங்கரன்கோவில் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories