December 6, 2025, 1:20 AM
26 C
Chennai

கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

mukilan tirupathi - 2025

முகிலனை சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று முகிலன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜரானார். விசாரணையில் சிபிசிஐடி கஸ்டடிக்கு செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி விஜய் கார்த்திக் கூறினார்.

தமிழக போலீஸார் தேடுவது அறிந்தும், நீதிமன்றம் தேடிக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டும், தலைமறைவாக இருந்து தண்ணிகாட்டி, திருப்பதியில் ரயில்வே போலீஸாரிடம் மாட்டிக் கொண்ட முகிலன், பின்னர் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப் பட்டார். அவர் குறித்த வழக்கு தொடர்பில்,  முகிலனை கரூர் நீதிமன்றம் எண் ஒன்றில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

முன்னதாக, முகிலனை கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், விசாரணைக் கைதியாக இருக்கும் தன்னை காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையைக் கழற்றிக்காட்டி முகிலன் முறையிட்டார்.

மேலும், நீட் தேர்வு, மாட்டுக்கறி விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி நீதிபதியிடம் முகிலன் முறையிட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

அதற்கு நீதிபதி, நீங்கள் கூறும் முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கூறியதால், நீதிமன்றத்தில் அமர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை துப்பாக்கி சூட்டுக்கு காரணமான ஐ.ஜி மற்றும் டிஐஜி மீது கொலை வழக்கு பதிய உத்தரவிடுமாறும் சிபிசிஐடி போலீஸ் காவல் கேட்பதை ஏற்க மறுக்கும் தனது நிலைப்பாடு குறித்தும் புகார் மனுவில் எழுதினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories