கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

mukilan tirupathi - 2026

முகிலனை சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று முகிலன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜரானார். விசாரணையில் சிபிசிஐடி கஸ்டடிக்கு செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி விஜய் கார்த்திக் கூறினார்.

தமிழக போலீஸார் தேடுவது அறிந்தும், நீதிமன்றம் தேடிக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டும், தலைமறைவாக இருந்து தண்ணிகாட்டி, திருப்பதியில் ரயில்வே போலீஸாரிடம் மாட்டிக் கொண்ட முகிலன், பின்னர் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப் பட்டார். அவர் குறித்த வழக்கு தொடர்பில்,  முகிலனை கரூர் நீதிமன்றம் எண் ஒன்றில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

முன்னதாக, முகிலனை கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், விசாரணைக் கைதியாக இருக்கும் தன்னை காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையைக் கழற்றிக்காட்டி முகிலன் முறையிட்டார்.

மேலும், நீட் தேர்வு, மாட்டுக்கறி விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி நீதிபதியிடம் முகிலன் முறையிட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

அதற்கு நீதிபதி, நீங்கள் கூறும் முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கூறியதால், நீதிமன்றத்தில் அமர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை துப்பாக்கி சூட்டுக்கு காரணமான ஐ.ஜி மற்றும் டிஐஜி மீது கொலை வழக்கு பதிய உத்தரவிடுமாறும் சிபிசிஐடி போலீஸ் காவல் கேட்பதை ஏற்க மறுக்கும் தனது நிலைப்பாடு குறித்தும் புகார் மனுவில் எழுதினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories