கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

mukilan tirupathi - 2026

முகிலனை சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று முகிலன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜரானார். விசாரணையில் சிபிசிஐடி கஸ்டடிக்கு செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி விஜய் கார்த்திக் கூறினார்.

தமிழக போலீஸார் தேடுவது அறிந்தும், நீதிமன்றம் தேடிக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டும், தலைமறைவாக இருந்து தண்ணிகாட்டி, திருப்பதியில் ரயில்வே போலீஸாரிடம் மாட்டிக் கொண்ட முகிலன், பின்னர் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப் பட்டார். அவர் குறித்த வழக்கு தொடர்பில்,  முகிலனை கரூர் நீதிமன்றம் எண் ஒன்றில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

முன்னதாக, முகிலனை கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், விசாரணைக் கைதியாக இருக்கும் தன்னை காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையைக் கழற்றிக்காட்டி முகிலன் முறையிட்டார்.

மேலும், நீட் தேர்வு, மாட்டுக்கறி விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி நீதிபதியிடம் முகிலன் முறையிட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

அதற்கு நீதிபதி, நீங்கள் கூறும் முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கூறியதால், நீதிமன்றத்தில் அமர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை துப்பாக்கி சூட்டுக்கு காரணமான ஐ.ஜி மற்றும் டிஐஜி மீது கொலை வழக்கு பதிய உத்தரவிடுமாறும் சிபிசிஐடி போலீஸ் காவல் கேட்பதை ஏற்க மறுக்கும் தனது நிலைப்பாடு குறித்தும் புகார் மனுவில் எழுதினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories