February 22, 2026, 3:40 PM
30.4 C
Chennai

கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன்; விசாரணை நாளை ஒத்திவைப்பு!

mukilan tirupathi - 2026

முகிலனை சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது இன்று முகிலன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜரானார். விசாரணையில் சிபிசிஐடி கஸ்டடிக்கு செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி விஜய் கார்த்திக் கூறினார்.

தமிழக போலீஸார் தேடுவது அறிந்தும், நீதிமன்றம் தேடிக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டும், தலைமறைவாக இருந்து தண்ணிகாட்டி, திருப்பதியில் ரயில்வே போலீஸாரிடம் மாட்டிக் கொண்ட முகிலன், பின்னர் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப் பட்டார். அவர் குறித்த வழக்கு தொடர்பில்,  முகிலனை கரூர் நீதிமன்றம் எண் ஒன்றில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

முன்னதாக, முகிலனை கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், விசாரணைக் கைதியாக இருக்கும் தன்னை காவல்துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையைக் கழற்றிக்காட்டி முகிலன் முறையிட்டார்.

மேலும், நீட் தேர்வு, மாட்டுக்கறி விவகாரத்தில் போடப்பட்ட வழக்கு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி நீதிபதியிடம் முகிலன் முறையிட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

அதற்கு நீதிபதி, நீங்கள் கூறும் முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கூறியதால், நீதிமன்றத்தில் அமர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை துப்பாக்கி சூட்டுக்கு காரணமான ஐ.ஜி மற்றும் டிஐஜி மீது கொலை வழக்கு பதிய உத்தரவிடுமாறும் சிபிசிஐடி போலீஸ் காவல் கேட்பதை ஏற்க மறுக்கும் தனது நிலைப்பாடு குறித்தும் புகார் மனுவில் எழுதினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories