ஒழுக்கம் குறித்து பேசினேன்… உயர்வு தாழ்வு பற்றி அல்ல! சர்ச்சைக்கு எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் விளக்கம்!

m a venkatakrishnan - 2026

தமது பேச்சு தவறாக எடிட் செய்யப் பட்டு வேண்டுமென்றே சமூகத் தளங்களில் பரப்பப் பட்டு அவதூறு செய்யப் படுவதாக வைணவ அறிஞரும் சென்னை பல்கலையில்., பேராசிரியராக பணி புரிந்தவருமான எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில்

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி கேரள பிராமண சமாஜத்தின் மூலம் அனைத்துலக தமிழ் பிராமணர்கள் கருத்தரங்கம் மூன்று நாள்கள் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட அனைவரும் பிராமண சமுதாயத்தின் சிறப்புகளைப் பற்றி பேசினார்கள். நான் பேசும்போது திருக்குறளில் ஒழுக்கமுடைமை என்கிற அதிகாரத்தில் உள்ள மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் என்ற குறளை எடுத்துக்கொண்டு, பிராமண சமுதாயத்தில் பிறப்பொழுக்கம் என்பது பற்றி பேசினேன்.

mav statement - 2026அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்று, உயிரினங்கள் அனைத்திற்கும் கருணை காட்டுவது அந்தணர்களுடைய/ பிராமணர்களுடைய பிறப்பு ஒழுக்கம் என்று நான் விளக்கமாகச் சொன்னேன். இதற்கு ஒரு சில உதாரணங்களையும் நான் காட்டினேன்.

எந்த இடத்திலும் நான் மற்ற சாதியினரைக் குறை கூறிப் பேசவில்லை. எந்த இடத்திலும் நான் பிராமண சாதியானது மற்ற சாதிகளை காட்டிலும் உயர்ந்தது என்றும் கூறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏறக்குறைய நான் அரை மணி காலம் பேசிய பேச்சில் ஒரு நான்கு நிமிடத்தை மட்டும் போட்டு நான் பேசிய விஷயத்தைத் திரித்துக் கூறுகிறார்கள்.

நான் பேசிய பேச்சின் முழு வீடியோவை பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது அனைவருக்கும் புரியும்… என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் சாதி உயர்வு தாழ்வு குறித்தும் சாதீய ரீதியாகப் பேசியதாகவும் புகார் மனுவை விளம்பர நோக்கில் தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியாக ஓரிருவர் அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிகழ்ச்சியில் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் பேசியவற்றின் முழு வீடியோ ஒளிப்பதிவு…

1 COMMENT

  1. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – எனும் குறள் – நீத்தார் பெருமை, ரிஷிகளை அந்தணர் என அழைத்து முனிவர் பற்றி வள்ளுவர் கூறியுள்ளார், அதை பார்ப்பனரோடு இணைப்பதே தவறு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

Topics

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories