மயிலைக்கு புகழ்சேர்த்த ‘சமையல் செல்லப்பா’வை அடுத்து… ‘ஜன்னல் பஜ்ஜி கடை’ ரமேஷ்! கொரோனாவால் பரிதாபம்!

mylapore jannal bajji shop
mylapore jannal bajji shop

மயிலாப்பூருக்கு பெயர் சேர்த்த ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு மரணம் அடைந்தது, மயிலைவாசிகளிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மயிலாப்பூரில் மிகவும் புகழ்பெற்ற சமையல் காண்ட்ராக்டரான செல்லப்பா என்பவர், கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவையே மயிலைவாசிகளால் ஜீரணிக்க இயலாமல் போன நிலையில், தற்போது மயிலைவாசிகளால் மிகவும் விரும்பப் படும் நபரான ஜன்னல் பஜ்ஜிக்கடை ரமேஷ் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bajjikadai horz
bajjikadai horz

நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கை கொரோனா தாக்கியது. இதனால், பயந்து போன ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். அது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் புகழ்பெற்றதுதான்.

ஜன்னல் கடை என்பது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. கடையின் உரிமையாளர்களில் ஒருவர் ரமேஷ் என்ற சிவராமகிருஷ்ணன்( வயது 58). ஒரே ஒரு ஜன்னல் வழியே, தன் சகோதரர் சந்திரகேகருடன் பஜ்ஜி வடை, தோசை என விற்பனை செய்வார். இந்தக் கடையில் தயாரிக்கப்படும் பஜ்ஜி, வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி மயிலாப்பூருக்கு வரும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக இருந்தது. மயிலை கோயிலுக்கு வரும் எவரும் இந்தக் கடையின் தயாரிப்புச் சுவையை ரசிக்காமல் போனதில்லை. இங்கு பரிமாறப்படும் சாம்பார், சட்னி ரகங்களும் தனித்துவ சுவையுடன் இருக்கும்.

மயிலாப்பூரின் அடையாளமாகவே மாறிவிட்டது ஜன்னல் பஜ்ஜி கடை. அலைமோதும் கூட்டத்தை சமாளிக்க, கடையை விரிவுபடுத்துமாறு பலரும் கூறியும், கடைசி வரை ஜன்னல் ஓரத்தில் இருந்தே ரமேஷ் பஜ்ஜி விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் கொரோனாவுக்கு உயிரிழந்துவிட்டார். இந்தச் செய்தி, மயிலாப்பூர் மக்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.

இது குறித்து ரமேஷ் குடும்பத்தினர் கூறுகையில், ”எங்களுக்கு எல்லாவிதத்திலும் அவர் உதவியாக இருந்தார். ஆடிட்டர் பணி செய்து கொண்டே தன் சகோதரர் சந்திரசேகருக்கு பஜ்ஜி கடையில் உதவியாக இருந்தார். அவரின் மறைவு பெரும் இழப்பு. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகே நாங்கள் கடையை திறக்க முடிவு செய்துள்ளோம். அவர் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories