சென்னை மாநகர போக்குவரத்து பிரச்சனைகள் – விரிவாக்கம்

சென்னை மாநகரின் நெருக்கடி குறித்து மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) சில செய்திகளை படிக்க நேர்ந்தது. சென்னை மாநகரில் 1992இல் 6 லட்சம் வாகனங்கள் இருந்தன. 2001இல் 13 லட்சம் வாகனங்களாகப் பெருகின. இந்த கணக்கு 2012ன்படி சென்னையில் இன்றைக்கு 36 லட்சம் வாகனங்கள் இருந்தன. தற்போது ஒரு கோடியை எட்டிவிடும் அளவுக்கு சூழல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரம் மாசுபடுவதும், வாகன ஒலிப்பான்களுடைய சத்தங்கள் பொறுக்க முடியாமலிருக்கும் நிலையில் உள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அபாயகரமாக அமையும்.
தினமும் 1500 புது வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன் இருந்த சென்னையின் சாலைகள் அதே அளவில் தான் இன்றும் உள்ளன. ஆனால் சாலை விரிவாக்கம் என்று பெரியளவில் செய்யப்படவில்லை. வாகனங்கள் மட்டும் பெருக்கப்படுகின்றன. யார் கேட்டாலும் எளிதாக வாகனத்தை வாங்கிவிடலாம். ஒரு வீட்டிற்கு 4 அல்லது 5 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கிவிட்டு தெருவில் நிறுத்த வேண்டிய நிலைமை. வெளிநாடுகளில் வாகனங்கள் வாங்குவதில் நகரத்தின் சுற்றுச்சூழல் நன்மையை கருதி சில கட்டுப்பாடுகள் உண்டு. சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் வாகன ஒலிப்பான்கள் மூலம் சத்தங்களை எழுப்ப முடியாது. எழுப்பினால் அது குற்றமாகும். ஆனால் விலையுயர்ந்த வாகன ஒலிப்பான்களை வைத்துக்கொண்டு ஒலித்தால் தான் அந்த வாகனத்திற்கும், அதன் உரிமையாளருக்கும் மரியாதை என்ற போலித்தனமான உணர்வுகள். பெரிய வாகனங்கள் இருந்தால் தான் கௌரவம் என்ற மடத்தனமான எண்ணங்கள் இதற்காகவே கோடிக்கணக்கில் கடன் வாங்கி வாகனங்களை வாங்கும் பாசாங்குத்தனமான போக்குகள் போன்ற பொய்யான நிலைப்பாடுகள் நம்மிடையே உள்ளன. அரசாங்கமும் இதை கட்டுப்படுத்தாமல் புதுப் புது விதமாக ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வாடகை ஊர்திகள் என தேவையில்லாத போக்குவரத்து உரிமங்களை தாராளமாக அள்ளி வழங்கி தேவையற்ற போக்குவரத்து நெரிசல்களை அரசே உருவாக்கி சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு பக்கம் மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்னை, வேலையிழப்புகள், வெறும் கடன் அட்டைகளை தேய்த்தாலே வாகனங்கள் வழங்கப்படுகிறது. அதனுடைய கடன்களை கட்ட முடியாமல் தினமும் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள். இப்படியான போக்கு சென்னை நகரில் மட்டுமல்லாமல் சமூகத்தில் எல்லா நகரங்களிலும் புரையோடிப் போய்விட்டன. இதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசரமும், அவசியமும் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
#சென்னை_மாநகர_விரிவாக்கம்
#சென்னை_போக்குவரத்து_நெரிசல்
#சென்னை_வாகன_பெருக்கம்
#Congestion_on_Chennai_city
#Madras_musings
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-02-2018
Madras musings article….
ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories