வடபழனி பெண் கொலையில் கணவன் உள்ளிட்ட இருவர் கைது!
அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினோம். இதில் அவர் தன் மனைவியைக் கொன்றுவிட்டு, நகைகளை மறைக்க, தனது நண்பரான பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜை அழைத்து நகைகளைக் கொடுத்துவிட்டு, தன்னை தாக்கி சுய நினைவிழந்த நிலையில் கிடப்பது போல் வீட்டின் பின்பகுதியில் போடச் சொல்லி, அனுப்பியுள்ளார் என்று கூறின போலீஸார்.
விஜய் ஆண்டனி’யின் ‘காளி’ வெளியீட்டுக்கு இடைக்கால தடை
இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
ஜெயலலிதா ஆவி கடுங் கோபத்தோட துரத்துது… தமிழக பிரச்னைகளுக்கு காரணமே அதான்: கண்டுபிடித்த சிம்பு!
தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று காலை மௌன அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் வழக்கம் போல் தனி டிராக்தான். எந்த வித அலட்டலும் இல்லாமல் என் வழி தனி வழி என இந்த அரசியல் நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தன் கலையுலக வாழ்வில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்து விட்டார்.
செல்போன், லேப்டாப், கேமரா, பேனர், கொடி, பட்டாசு… அனுமதி இல்லை: சேப்பாக்கம் மைதானத்தில் கெடுபிடி அதிகம்!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள் செல்போன், லேப்டாப், கேமரா, பேனர்கள், கொடிகள், பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.
குழந்தை இல்லைன்னு கேலி செய்ததுக்காக கொலையா?: வடபழனி பெண் கொலையில் திடீர் திருப்பம்!
15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தது போலீஸார், குழந்தையின்மையைக் காரணம் கட்டி, மனைவி தன்னை அவமானப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறியதாக தகவல் கூறியுள்ளனர்.
எதிர்ப்பு எதிரொலி; சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து!
காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.
அணி வீரர்களுக்கு ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் வெறிப் பேச்சு!
நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர் என்று எச்சரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்; கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கைது!
சென்னை அடையாறில் இருந்து சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். கராத்தே தியாகராஜன் தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருக்க பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ரஜினியின் பவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர்
ஸ்டாலின் பேச்சை திடீரென கட் செய்த ஊடகங்கள் குறித்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்டாலினை விட ரஜினியை ஊடகங்கள் பெரிதாக கருதுவதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வந்ததால் திமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸை கேள்வி கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நாடகமாடுகிறது. கர்நாடகாவில் சித்தராமய்யா ஆட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக இங்கு போராட்டம் நடத்தி வருகிறது.
காவிரியை வைத்து அரசியல் செய்பவர்களால் தண்ணீர் வாங்கிக் கொடுக்க முடியாது: எதார்த்தவாதி சிம்பு
தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும்”