லாரி மோதி காரில் தீப்பிடித்த சம்பவம் – உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு!

Published:

marder 1 - 2026

ஓசூர் அருகே கூலிப்படையினரால் காரின் மீது டிப்பர் லாரி மோத வைத்தும் பெட்ரோல் குண்டு வீசியும் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

சானமாவு என்ற இடத்தில் நவம்பர் 11ம் தேதி கார் மீது டிப்பர் லாரி மோதி கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டுனர் முரளி என்பவர் உயிரிழந்தார்.

சாலை விபத்தாக கருதப்பட்ட இச்சம்பவம் கூலிப்படையினரால் ஆனந்த்பாபு-நீலிமா தம்பதியை கொல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என்று தகவல் வெளியானது.

காரில் பயணித்த ஆனந்தபாபு வழியில் இறங்கிவிட நீலிமாவும் அவர் மகளும் ஓட்டுனர் முரளியுடன் காரில் சென்றனர். காரில் தீப்பிடித்த நிலையில் முரளி உயிரிழந்தார்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நீலிமா பெங்களூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவரும் நேற்று உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கூலிப்படையினரை போலீசார் தேடி வந்த நிலையில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img