December 11, 2025, 9:22 PM
25.5 C
Chennai

தாய் யானையுடன் சேர்ந்த ஆற்றில் அடித்துவரப்பட்ட குட்டி யானை…

03afa8cfe2261ef038f1cdf61d731bd41661828703967188 original - 2025

முதுமலை அருகே ஆற்றில் அடித்துவரப்பட்ட குட்டி யானையை, வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர்.

859622 - 2025

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 29-ம்தேதி பெய்த கன மழை காரணமாக மாவனல்லா ஆற்றில் குட்டி யானை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் இணைந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். தாயின்றி தவித்து வந்த குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை யினர் உடனடியாக ஈடுபட்டனர். குட்டி மீட்கப்பட்ட இடத்தில் தாய்யானை உள்ளதா என கண்காணித்தனர்.

பின்னர் வனத்துறையினர் எட்டு குழுக்களாக பிரிந்து மாவனல்லா, வாழைத்தோட்டம், ஆனைகட்டி, சிங்காரா உட்பட்ட வனப்பகுதிகளில் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சீகூர் வனப்பகுதியில் தனியாக நின்ற பெண் யானையை, குட்டியின் தாய் எனக் கருதி அதன் அருகே குட்டி யானையை விட்டு விட்டு வந்தனர்.

குட்டி யானை, பெண் யானை அருகில் சென்ற நிலையில் அது தாய் யானை தான் என கருதி வனத்துறையினரும் திரும்பினர். இந்நிலையில், குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கச் சென்றபோது, அது மீண்டும் தனியாக மரத்தடியில் நின்று கொண்டிருப்பதை கண்டனர்.

மீண்டும் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதற்கு தேவையான சிகிச்சை அளித்தனர். குட்டி யானைக்கு குளுக்கோஸ், இளநீர் உட்பட்ட திரவ உணவுகள் வழங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூன்றாவது நாளாக சீகூர் வனப்பகுதியில் தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது சீகூர் வனத்துக்கு உட்பட்ட பூதிபட்டி கேம்ப் அருகில் ஒரு யானைக் கூட்டமும், காங்கிரஸ் மட்டத்தில் ஒரு யானை கூட்டமும் இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக குட்டி யானையை வண்டியில் ஏற்றி அப்பகுதிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பூதிபட்டி அருகே இருந்த கூட்டம் நகர்ந்து வேறு இடத்துக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.

இதனால், குட்டி யானையை காங்கிரஸ் மட்டத்துக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பாதைக்கு அருகில் சுமார் 15 மீட்டரில் ஒரு பெண் யானை இருந்தது. உடனடியாக வண்டியை நிறுத்தி மருத்துவர்கள் கலைவாணன் மற்றும் ராஜேஷ்குமார் அந்த யானையைப் பார்த்தனர்.

அந்த பெண் யானை, பால் கொடுக்கும் பருவத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் குட்டி யானையின் மீது சேறு மற்றும் சிறிதளவு சாணத்தையும் பூசி, வண்டியை விட்டு கீழே இறக்கி விட்டனர். அப்போது அந்த பெண் யானை காட்டுக்குள் மெதுவாக நகர்ந்து சென்றது. இவர்கள் குட்டி யானையை பெண் யானை பின்னால் கொண்டு சென்று விட்டனர்.

பெண் யானை ஒரு மேடான பகுதிக்கு சென்று குட்டி யானையை பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் அதை நோக்கி குட்டி யானையை வனத்துறையினர் விரட்டினர். உடனடியாக குட்டியானை பிளிறவே, அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு இளம் ஆண் யானை பிளறியபடி வேகமாக குட்டி அருகே வந்தது. அந்த யானை குட்டியை சுற்றிச் சுற்றி வந்தது.

பின்னர் குட்டியை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு, வனத்துறையினரை சுமார் 200 மீட்டர் தூரம் விரட்டியது. பின்னர் அது மீண்டும் திரும்பிச் சென்று குட்டி யானையை மெதுவாக அழைத்துச் சென்றது. பின் குட்டி யானையிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. தாய் யானை குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று மறைந்தது.

நேற்று காலை குட்டியை விட்ட இடத்துக்குச் சென்று ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அந்த குட்டி பிற யானைகளுடன் செல்வதை உறுதி செய்தனர். தாயிடம் குட்டியை சேர்க்கும் வனத்துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது. தாயிடமிருந்து பிரிந்த குட்டி அதன் தாயுடன் மூன்று நாட்களுக்கு பிறகு இணந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories