‘பழகிய’ வீடியோவை வைத்து மிரட்டியவனுக்கு பணம் கொடுக்க பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாணவி!

rape-victim கோவை: தன்னுடன் பழகியபோது, உல்லாசமாக இருந்த வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு,  பிறகு மிரட்டியதால் பயந்து போன மாணவி, அவனுக்கு பணம் கொடுப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, துணை ஆய்வாளர்கள் சாஸ்தா மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் அந்த விடுதியைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது அந்த விடுதியில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவது உறுதிகத் தெரிந்துள்ளது.  அவர்களைப் பிடிக்க முடிவு செய்த காவல்துறையினர், அதிரடியாக அந்த விடுதிக்குள் புகுந்து சிலரைக் கைது செய்தனர். பின்னர், பொறியியல் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.  அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கோவைப்புதூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி(38) ஆகியோரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்துக்குப் பயன்படுத்திய கார், 2 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 1,860 ஐ பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது 3 பெண்களில் ஒருவரான அந்த மாணவி, தான் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருவதாகவும்,  மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். இருவரும் நெருங்கி பழகியபோது பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததாகவும், அந்தக் காட்சிகளை மாணவர் இவருக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில், அந்த மாணவர் மீண்டும் மாணவியைச் சந்தித்து, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இணைய தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டினாராம். இதனால் அவமானம்  என்பதை உணர்ந்து அந்த மாணவி முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று பணத்தைக் கொடுத்ததாகவும், பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்டதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories