‘பழகிய’ வீடியோவை வைத்து மிரட்டியவனுக்கு பணம் கொடுக்க பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாணவி!

rape-victim கோவை: தன்னுடன் பழகியபோது, உல்லாசமாக இருந்த வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு,  பிறகு மிரட்டியதால் பயந்து போன மாணவி, அவனுக்கு பணம் கொடுப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, துணை ஆய்வாளர்கள் சாஸ்தா மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் அந்த விடுதியைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது அந்த விடுதியில் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவது உறுதிகத் தெரிந்துள்ளது.  அவர்களைப் பிடிக்க முடிவு செய்த காவல்துறையினர், அதிரடியாக அந்த விடுதிக்குள் புகுந்து சிலரைக் கைது செய்தனர். பின்னர், பொறியியல் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.  அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கோவைப்புதூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி(38) ஆகியோரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்துக்குப் பயன்படுத்திய கார், 2 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 1,860 ஐ பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது 3 பெண்களில் ஒருவரான அந்த மாணவி, தான் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருவதாகவும்,  மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். இருவரும் நெருங்கி பழகியபோது பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்ததாகவும், அந்தக் காட்சிகளை மாணவர் இவருக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில், அந்த மாணவர் மீண்டும் மாணவியைச் சந்தித்து, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இணைய தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டினாராம். இதனால் அவமானம்  என்பதை உணர்ந்து அந்த மாணவி முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று பணத்தைக் கொடுத்ததாகவும், பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்டதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories