December 5, 2025, 2:28 PM
26.9 C
Chennai

கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்கிய தேனூர் சுந்தர்ராஜப் பெருமாள்!

thenur sundarraja perumal - 2025
#image_title

மதுரை மாவட்டம் தேனூரில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்!ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்)கோவில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது.இதையொட்டி சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

தொடர்ந்து பூஜைகள் நடந்தது வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார். பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திருவிளக்கு பூஜை மற்றும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி . நடைபெற உள்ளது

நாளைமாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.இரண்டு நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பரம்பரைதர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் குடும்பத்தார் சார்பாக அன்னதானம் மற்றும் புத்தாடை வழங்கப்படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

நாளை மறுநாள்அதிகாலை வைகைஆற்றில் இருந்து ஸ்ரீதேவிபூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடைபெறம் பின்னர்,சுவாமி திருக்கோயில் வந்து சேரும். மூன்று நாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியன் பாண்டியன் கூறியதாவது. பண்டைய புராணங்களில் ஒன்றான மண்டுக புராணத்தில் அழகர் கருணை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. அதில் மண்டுக மகரிஷிக்கு சுந்தரராஜர் என்ற பெயரில் திருமால் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுக்கும் லீலை சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தேனூர் கிராமத்தில் தான் பல்லாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது.

இதனால் தேனூர் சுந்தரராஜ பூமி என்று இன்றும் பேசப்படுகிறது. இப்பெரும் விழாவில் அழகர்கோவிலில் இருந்து ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடாகி தேனூர் வைகையாற்றில் எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் தரும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. திருமலை மன்னர் தேனுருக்கு விஜயம் செய்து இந்தத் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்து தலைநகர் மதுரையில் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாண திருவிழாவுடன் இணைந்து நடத்துவதற்கு மதுரைக்கு இத்திருவிழா மாற்றப்பட்டது.

மேற்படி திருவிழாவானது சுமார் 365 ஆண்டுக்குப் பின் 2008 ஆம் ஆண்டு முதல் வைகாசிப் பௌர்ணமியன்று எங்கள் பெறும் முயற்சியாலும் கிராம பொது மக்களின் ஒத்துழைப்போடு தேனூரில் அதிகவிமர்சையாகநடைபெற்று வருகிறது. இந்தாண்டு மேற்படி திருவிழா 15ம் ஆண்டு திருவிழாவாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories