மைசூரில் இருந்து வறீங்களா? ஒரு வழியா மதுரை – தென்காசி ரயிலைப் பிடிக்க வசதி கிடைச்சிருக்கு!

Published:

railway news - 2026
#image_title

மைசூரில் இருந்து தூத்துக்குடி ரயிலில் வருபவர்கள், ஒரு வழியாக, மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை, காலை 07:25க்குப் பிடித்து, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசிக்கு நேரடியாக உடனே செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

காரணம், மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், இந்த ரயில் 5 நிமிடம் முன்கூட்டியே மதுரைக்கு வந்து, செங்கோட்டை செல்லும் ரயிலைப் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

மைசூர்-தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கே வந்து சேருகிறது. இதனால் மதுரைக்கு தற்போது 7.35க்கு வந்து கொண்டிருக்கும் இந்த ரயில், 7.20க்கு மதுரை வரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற 5 நிமிட நேரத்தில் மதுரையில் பயணிகள் ரயில் மாறி செங்கோட்டை பாசஞ்சர் ரயிலைப் பிடித்து தங்கள் ஊர்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளின் வேண்டுகோளைப் பொறுத்து, இனி வருங்காலங்களில், இந்த ரயில் சற்று தாமதமாக கிளம்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படக்கூடும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இந்த ரயில் தற்போதைய நேரத்தில் இருந்து 20 நிமிடம் முன்னதாக, தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேரும். இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img