தென்காசியில் இஸ்லாமிய அமைப்பு ஒட்டிய திப்பு ஜெயந்தி போஸ்டர்கள்! காவல்துறையைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கும் மக்கள்!

tippu poster2 - 2026

தென்காசியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு திப்பு ஜெயந்தி குறித்து ஒட்டியுள்ள போஸ்டர்கள், நான்கு நாட்கள் கடந்தும் இப்போதும் பொதுமக்கள் பார்வையில் உள்ளன.

திப்பு சுல்தான், ஆயிரக்கணக்கான இந்துக்களை கொலை செய்தும், மதம் மாற்றியும் இருநூறு ஆண்டுகால வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயர் பெற்றவனாய்த் திகழ்ந்தான். தனது ஆட்சியைப் பாதுகாக்க, பொதுமக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க, துவக்கத்தில் ஸ்ரீரங்கப் பட்டணம் கோயிலுக்கு உதவுவது போல் நடித்தவன். பின்னாளில் மதவெறி கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி இந்து மக்களை வாள் முனையில் கொன்று குவித்தான். இவை எல்லாம் திப்புவின் வரலாற்றில் ரத்தக் கறை படிந்த நிகழ்வுகள்.

அதனால்தான், கர்நாடகத்தில் இந்துக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த திப்புவுக்கு விழா எடுப்பது, இஸ்லாமிய ஓட்டு வங்கிக்கு உதவும் என்ற மத அடிப்படைச் சிந்தனையில் காங்கிரஸின் முன்னாள் முதல்வர் சித்தராமையா இயங்க, இந்தப் பிரச்னையில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று இந்நாள் முதல்வர் குமாரசாமி ஒதுங்கிக் கொண்டார். அதுவே கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் விவாதங்களை சூடாக்கியிருக்கிறது.

திப்புவுக்கு அரசு விழா எடுப்பதை கர்நாடகத்தில் அதனால்தான் பாஜக., எதிர்த்து வருகிறது. திப்பு குறித்து உண்மையைப் பேசிய பத்திரிகையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை கர்நாடகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

தென்காசியில் இஸ்லாமிய வெறியர்களால், குமார் பாண்டியன் படுகொலை நிகழ்ந்ததற்குப் பிறகு, கடந்த பத்தாண்டுகளாக, போஸ்டர் ஒட்டுவதில் கெடுபிடி காட்டி வந்தனர் போலீஸார். இந்து அமைப்புகளின் போஸ்டர்கள் என்று மட்டும் இல்லை… இந்துக்களின் பண்டிகைகள், கோயில் திருவிழாக்களின் போஸ்டர்கள் ஒட்டுவதைக் கூட ஏதோ தேச துரோகக் குற்றம் போல் தடுத்து, வழக்குகள் போட்டு கெத்து காட்டி வந்த போலீஸார், இஸ்லாமிய அமைப்புகளின் போஸ்டர்கள் ஒட்டுப் படுவதில் எந்த வித எதிர்ப்பையும் காட்டுவதில்லை என்று குறை சொல்கிறார்கள் இந்து அமைப்பினர்.

செங்கோட்டையில் இந்துக்கள் கடைகளில் இந்துக்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்கே, நகர இந்து முன்னணி தலைவரைக் கைது செய்து வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால், இஸ்லாமிய அமைப்புகளை கண்டும் காணாமல் சாய்ஸில் விட்டுவிடுகின்றனர் என்று சொல்லி போலீஸாரைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கின்றனர் தென்காசி வாழ் இந்துக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories