அம்மன்பேட்டை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கிருஷ்ணானந்தர் முக்தி!

swami krishnananda maharaj - 2026

அம்மன்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவர், சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் நேற்று முக்தி அடைந்தார்.

சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் (வயது 75) தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவராக இருந்தார். இவர், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான சுவாமி சித்பவானந்த மகராஜிடம் பிரம்மச்சர்ய தீட்சையும், சுவாமி நித்யானந்த மகராஜிடம் சன்யாச தீட்சையும் பெற்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல், அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்தா மடத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். ஆண்டுதோறும் பாரத பண்பாட்டு தேர்வு நடத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், வீரத்துறவி விவேகானந்தர் ரத யாத்திரைகளை மிகுந்த சிரத்தையுடன் நடத்தினார்.

srikrishnanandaswami5 - 2026

தற்போது, வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, அம்மன்பேட்டை ஆசிரமத்தில், பவதாரணி ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். புதிதாக பிரதிஷ்டை செய்ய, அன்னை சாரதாதேவி பஞ்சலோக விக்ரகம் வடிவமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

srikrishnanandaswami4 - 2026

அன்று மாலையில், சுவாமிஜிக்கு ரத்த அழுத்தம் குறைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பின் மடத்திற்கு திரும்பியவர், வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

srikrishnanandaswami - 2026
சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி கிருஷ்ணானந்தர்

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சுவாமி கிருஷ்ணானந்த மகராஜுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மடத்திலேயே முக்தி அடைந்தார். மாலை மடத்தில் சிறப்பு ஆராதனையுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

srikrishnanandaswami1 - 2026
சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி கிருஷ்ணானந்தர்

இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சுவாமி மாத்ரு சேவானந்தா, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்தா, செயலர் சுவாமி சத்யானந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories