December 6, 2025, 7:09 AM
23.8 C
Chennai

அம்மன்பேட்டை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கிருஷ்ணானந்தர் முக்தி!

swami krishnananda maharaj - 2025

அம்மன்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவர், சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் நேற்று முக்தி அடைந்தார்.

சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் (வயது 75) தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவராக இருந்தார். இவர், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான சுவாமி சித்பவானந்த மகராஜிடம் பிரம்மச்சர்ய தீட்சையும், சுவாமி நித்யானந்த மகராஜிடம் சன்யாச தீட்சையும் பெற்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல், அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்தா மடத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். ஆண்டுதோறும் பாரத பண்பாட்டு தேர்வு நடத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், வீரத்துறவி விவேகானந்தர் ரத யாத்திரைகளை மிகுந்த சிரத்தையுடன் நடத்தினார்.

srikrishnanandaswami5 - 2025

தற்போது, வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, அம்மன்பேட்டை ஆசிரமத்தில், பவதாரணி ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். புதிதாக பிரதிஷ்டை செய்ய, அன்னை சாரதாதேவி பஞ்சலோக விக்ரகம் வடிவமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

srikrishnanandaswami4 - 2025

அன்று மாலையில், சுவாமிஜிக்கு ரத்த அழுத்தம் குறைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பின் மடத்திற்கு திரும்பியவர், வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

srikrishnanandaswami - 2025
சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி கிருஷ்ணானந்தர்

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சுவாமி கிருஷ்ணானந்த மகராஜுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மடத்திலேயே முக்தி அடைந்தார். மாலை மடத்தில் சிறப்பு ஆராதனையுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

srikrishnanandaswami1 - 2025
சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி கிருஷ்ணானந்தர்

இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சுவாமி மாத்ரு சேவானந்தா, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்தா, செயலர் சுவாமி சத்யானந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories