கோவை சம்பவத்தில் தமிழக முதல்வர் வாய் திறக்காமல் இருக்கிறார் ஏன்?-ஜெயக்குமார்..

941204 jaykumar33 - 2026

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்தநாளன்று சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதற்காக உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம். தற்கொலை தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இதனால் 4 நாட்களுக்கு மேலாக மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது. ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போதுமான விளக்கத்தை அளித்துவிட்டார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து விவகாரத்திற்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் மட்டுமே பொறுப்பு. ஏனென்றால் ஓபிஎஸ்-க்கு அப்போது முதல்-அமைச்சரின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இவர்கள் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்று தான் விசாரணை அறிக்கையின் முடிவு இருக்கிறது. விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்ற திருக்குறளை பார்த்து, நாடே கண்ணீர் சிந்தக் கூடிய நிலைதான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறப்பிற்கு 5 லட்சம் கொடுத்தது போதாது,உயிரிழந்த செய்தியாளர் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ, அதை அரசு வழங்க வேண்டும்.இல்லையென்றால் அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். இரவு,பகல் பாராமல் பாடுபடும் ஊடக நண்பர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு காண்ட்ராக்டர் உட்பட யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories