“ஓஸிக்கு ‘சரக்க’ குடுடான்னா… மாட்டேன்றான்!” ஆத்திரத்தில் மதுபாட்டிலால் உடலைக் கீறிக் கொண்ட இளைஞர்!

21 May28 TASMAC - 2026

ஓஸிக்கு மது குடிக்க பாட்டில கொடுடான்னா மாட்டேன்றான்… என்று கூறி தன் உடலைக் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார் ஓர் இளைஞர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை இளைஞர் ஒருவர் வந்தார். அவர், பல்லடம் ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பது தெரியவந்தது.

அவர் அங்கே மதுவாங்கி குடித்தார். போதை தலைக்கு ஏறியதும் மீண்டும் மது குடிக்க விரும்பினார். டாஸ்மாக் விற்பனையாளரிடம் தனக்கு மேலும் மது வேண்டும் என்று கேட்டார்.

ஆனால் அவரோ பணம் கொடுத்தால்தான் பாட்டில் என்றார். தன்னிடம் பணம் இல்லை என்றும், இலவசமாக சரக்கைக் கொடுங்கள் என்றும் அடம் பிடித்தார் அந்த இளைஞர்.

palladam tasmac store free alcohol ask youth suicide attempt - 2026

ஆனால் விற்பனையாளர் மது கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த மூர்த்தி மதுபாட்டிலை உடைத்து உடலைக் கீறினார். அவர் உடலில் இருந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தனக்கு மது கொடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மூர்த்தி மிரட்டியதுடன், உடலில் இருந்து ரத்தம் வழிந்தோட, அதே பகுதியில் தள்ளாடியபடி நடமாடினார்!

இதை அடுத்து போலீஸாருக்கு தகவல் பறந்தது. பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடமும் மூர்த்தி குடிக்க பணம் கேட்டு கெஞ்சினார். போலீசார் லாகவமாகப் பேசி மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories