கொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்!

nagarcoil commissioner - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 5 நபர்களின் தொடர்புகளை ஆய்வு செய்ததில் கொரானா நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் 165 நபர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.இந்த 165 நபர்களும் தற்போது வீட்டு தனிமைப் படுத்துதலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறப் பட்டுள்ளது.

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அலட்சியத்தால் நாகர்கோவிலில் கரோனா கூடுதலாக பரவ வாய்ப்பு உள்ளது என்று புகார் கூறுகின்றனர் அங்குள்ளவர்கள்.

நான்கு நிருபர்கள் அவரிடம் சென்று, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தும் ஸ்டிக்கர் ஓட்டினீங்க… ஆனால் அவர்கள் வெளியில் சுற்றித் திரிகிறார்கள்… என்று மாவட்ட ஆட்சியர் அலுவத்தில் வைத்து சொன்னார்கள். அப்போது அவர் அந்த நிருபர்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கா..? என்று கேட்டார். அது மட்டும் அல்லாமல், நீங்க முதல்ல தூரமா நின்னு பேசுங்க என்று சொல்லி அவமானப்படுத்தினார்.

தாங்கள் கண்டதைச் சொன்ன நிருபர்கள் வார்த்தைகளை அலட்சியபடுத்திய இந்த ஆணையர் பொதுமக்கள் சொன்னால் கேட்பாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முகத்தில் முககவசம் அணியாமல், வெறுமனே சென்று பேசிக் கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு, ஆணையரே இப்படி செய்யலாமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

முகக் கவசம் அணிந்து பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக அதுவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு அதிகாரியாக இருக்க வேண்டிய ஆணையரே, முகக்கவசம் அணியாதபோது வேறு யார் அணிவார்? அவர் சொல்லி யார் கேட்பார்? அதுவும் அவர் நிற்கும் இடம் எது தெரியுமா? கரோனாவால் பாதிக்கப்பட்ட டிஸ்லரி சாலையில் உள்ள தெரு தான் என்ரு கூறுகின்றனர் பொதுமக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories