December 7, 2025, 1:09 AM
25.6 C
Chennai

பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர்..

IMG 20230325 WA0095 - 2025

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.

கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும் முன் முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் பிரதமர்  மோடி ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

500x300 1855113 modi02 - 2025

இந்த நிறுவனம், சிக்கபல்லபூரின் முட்டெனஹள்ளியில் சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீ சத்ய சாய் உயர்திறன் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வணிகமயமாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கும் தொலைநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதிகளை கட்டணமின்றி வழங்கவுள்ளது. இந்த நிறுவனம் 2023-ம் கல்வி ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கும்.

1855115 modi - 2025

இதனிடையே நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் உலகத்தரத்தில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக பெங்களூரு மெட்ரோ திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள 13.71 கி.மீ. நீள வழித்தடத்தை பிரதமர் மோடி  ஒயிட்ஃபீல்டு(கடுகோடி) மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் டிக்கெட் பெற்றுக் கொண்டு ரயிலில் பயணம் செய்தார். அப்போது, பிரதமர் மோடி மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். ரூ.4,250 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் பெங்களூரு நகர பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பயணத்தை எளிதாக்கி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories