வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை – இலங்கை பிரதமர்

Published:

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நிருபர்களிடம் நேற்று தெரிவித்ததாவது:-

எனது அரசு இலங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். வெளிநாட்டு நீதிபதிகள், இங்கு செயல்படுவதை அரசியல் சாசனம் அனுமதிக்காது. எனவே, உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்ய முடியாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் எடுத்துக் கூறுவார்.

அதேசமயத்தில், சர்வதேச நிபுணர்களின் உதவியை ஏற்றுக்கொள்வோம். அதற்கு கூட இலங்கை நீதித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். ராஜபக்சேவின் தவறால்தான், சர்வதேச விசாரணையை சந்திக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஆனால், நாங்கள் இப்பிரச்சினையை சரியாக கையாண்டு, போர்க்குற்ற விசாரணையை சந்திப்பதில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றி உள்ளோம் என ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img