சினிமா ஷூட்டிங் எடுக்கவா… கோயில்? என்ன அக்கிரமம்?! மனம் வெதும்பும் மயிலாப்பூர் அன்பர்கள்!

mylapore temple shooting - 2026

சென்னை மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த கேசவப் பெருமாள் கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்பது கேள்விப் பட்டு, மிகவும் மனம் வெதும்பி புகார் தெரிவித்துள்ளனர் அன்பர்கள். இந்தக் கோயில் தனியார்களால் நிர்வகிக்கப் பட்டு வந்தாலும், அறநிலையத்துறைக்கு கணக்கு காட்டும் கோயிலாகவே இருந்துவருகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து திருக்கோயில் பாதுகாப்புப் பேரவையின் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்தவை…!

500 வருடங்கள் பழமையான மயிலாப்பூர் ஸ்ரீ கேசவப் பெருமாள் திருக்கோயிலில் சினிமா படமெடுக்கின்றனர் எனச் சில பக்தர்கள் இன்றுக் காலை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கோயிலுக்குச் சென்று பார்த்ததில் கோயில் மேலக் கோபுரம் அருகில் மதிலை உடைத்து உருவாக்கிய வாயில் வழியாகச் சென்று ஒரு மிக நீண்ட பஸ் கோயில் உள்ளே நின்று கொண்டு இருந்தது.

அந்தப் பஸ்ஸில் இருந்து மின்சாரம் கொடுக்கப்பட்டு கோயில் உள்ளேயும் வெளியேயும் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தக் கோயில் தென்கலைச் சம்பரதாயக் கோயில். உத்தமர்கள் துறை கண்காணிக்க மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அந்த அருமையானத் தீர்ப்பைத் மிகத் தவறாகப் பயன்படுத்தும் சில அறங்காவலர்கள்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சேவார்த்திகள் மட்டுமே படபிடிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. சுதரசன் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர் விரைந்து சென்னை இணை ஆணையர் மூலம் நடவடிக்கை எடுத்தார். படபிடிப்பிற்கு வந்த கூட்டம் பஸ்ஸை எடுத்துக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறியது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

கோவிலில் பாடப்பிடிப்பு என்பது “தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947″ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் 8,9ற்கு விரோதமானவை என்பதைப் பக்தர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டு, திருக்கோயில்களில் படப்பிடிப்பு காண நேரிட்டால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. என்கிறார்..!

இந்தச் சம்பவம் மயிலாப்பூர் அன்பர்களை பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளது.

கோயிலுக்குள் அறநிலையத்துறை ஈ.ஓ.,க்களும் அதிகாரிகளும் தாங்கள் கார்களில் நேராக வந்து கோயிலுக்குள் இருக்கும் அலுவலகத்துக்கு வாசலில் இறங்கும் வகையில் கோயில் மதில் சுவரை இடித்து, அல்லது வாசல் படிகளில் மாற்றங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இப்படி கோயிலுக்குள் சினிமா ஷூட்டிங் பஸ் வந்து, பிராகார வலம் வரும் பாதையில் ஷூட்டிங் பஸ்ஸை நிறுத்தி, பொருள்களை இறக்கி வைக்க அனுமதித்து என்று… கோயில் நிர்வாகம் ஈடுபட்டதைக் கண்டு தங்கள் மனக்குமுறலை பக்தர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories