திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர்கோவிலுக்கு வந்தடைந்தார்.
சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், திருவிழா முடிந்து இன்று காலை மீண்டும் அழகர்கோவில் வந்தடைந்தார். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்ற நிலையில், மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.
மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருளல், இதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.
இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார்.
கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்டதோடு, கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றி 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதோடு, வாசல் வரை வந்து நின்று கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர்.
அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.
இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.
‘ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது… ‘என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ‘ இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.
மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.
எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.
மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.
மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.
இது புரியாமல், ‘ கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ‘ என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.
ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினர் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இது உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானதாகும்.
முன்னதாக, இன்று காலை முதல் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக் மூலம் எப்படி ஆயிரக்கணக்கான கோடிக் கணக்கில் பணத்தை எளிதாகக் கொள்ளையடிக்கலாம் என்னும் முன்னாள் டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை அரசுத் தரப்பில் சரியாக மேற்கொண்டது இவர் தான் என்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதால், இந்த சோதனைகள் பழைய வழக்குகளை மையமாக வைத்தே பொருத்திப் பார்க்கப் படுகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான நான்கு வருட அதிமுக ஆட்சி மற்றும் நான்கு வருட திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக தமிழக காவல்துறையினர் சுமார் 41 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை இதன் உள்ளே வந்திருக்கிறதே தவிர, டாஸ்மாக் தொடர்பில் அமலாக்கத்துறை ஒன்றும் பொய் வழக்கு போடவில்லை என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்குபவர்கள்.
இந்த 41 வழக்குகளும், அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்டது தான்! எம்ஆர்பியை விட அதிக விலைக்கு விற்பனை செய்தது, அட்டைப்பெட்டி டெண்டர் முறைகேடு, போக்குவரத்து டெண்டர் முறைகேடு, கடை வாடகை டெண்டர் முறைகேடு, ஊழியர்கள் டிரான்ஸ்பர் செய்வதில் முறைகேடு மற்றும் லஞ்சம், அதிகாரிகள் கமிஷன் வாங்கியது இதுபோன்ற வழக்குகள் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு ஆட்சி காலத்திலும் பதியப்பட்டு இருக்கிறது.
ஆனால் மது தயாரிப்பு ஆலைகளிடமிருந்து டாஸ்மாக் கருவூலக் கணக்குக்குக் காட்டாமல் நேரடியாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பாட்டில்கள் அனுப்பி விற்பனை செய்யப்பட்டது, திமுக ஆட்சிக் காலத்தில் தான் நடந்திருக்கிறது என்கிறார்கள். மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது சில கடைகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கணக்கில் வராத பாட்டில்கள் இருந்ததால், அது இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்த அனைத்து ஊழல்களின் ஒட்டுமொத்த மதிப்பீடு ஆயிரம் கோடி என்ற அளவில் இருக்கும் என்றாலும், டாஸ்மாக் கருவூலக் கணக்கில் காட்டாமல் நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பில்லில் காட்டாமல் விற்பதன் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் புரண்டிருக்கிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படியும் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் பணம் கரைபுரண்டிருக்கும் என்றும் கணக்குகள் சொல்லப்படுகின்றன.
சில மது தயாரிப்பு ஆலைகளை ஒப்புக்கு தயார் செய்து அவர்களிடமிருந்து நேரடியாக பாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும் வேலையை கனக்கச்சிதமாகச் செய்து வந்தார் டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் விசாகன் என்ற குற்றச் சாட்டு சமூக மற்றும் அரசியல் மட்டத்திலும் கூறப்பட்டு வந்தது.
இவர் குறித்து அடிக்கடி தனது யுடியூப் சேனல்கள் மற்றும் பொதுத் தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர், இவருடைய லேப்டாப்பை சோதனை செய்தபோது மூன்று இ-மெயில் கணக்குகளை வைத்து தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்திருப்பதாகவும், ஒரு இமெயிலில், மது தயாரிப்பு ஆலைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இன்னொரு இமெயில் ஐடியுடன் முதல்வரின் மருமகனுடன் தொடர்பு வைத்திருக்க பயன்படுத்தியதாகவும், இன்னொரு இமெயில் ஐடி மூலம் டாஸ்மாக் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியுடன் தகவல் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
எனவே இந்த சோதனை மத்தியப் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நடத்தப் படுகிறது என்பதும், இதன் பின்னர் பெரும் அரசியல் பூகம்பம் தமிழகத்தில் ஏற்படும் என்றும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
‘இந்தியா – பாக்., இடையிலான மோதலை நான் தான் நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை” என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
டிரம்பின் திடீர் வார்த்தைகள், நமக்கு ஒரு மலையாள நாவலாசிரியரின் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீர் மிகச் சிறந்த சிறுகதை மற்றும் நாவல் ஆசிரியராக அறியப்படுபவர். பஷீரின் ‘ஆனவாரியும் பொன்குரிசும்’ என்ற நாவலில் வரும் எட்டுக்காலி மம்முஞ்ஞு என்ற கதாபாத்திரத்தின் நினைவு திடீரென வந்தது.
எட்டுக்காலி என்பதன் பெயர்ப் பொருத்தம் என்னவோ அந்தக் கதாபாத்திரத்துக்கு எட்டுக்கால் பூச்சியைப் போன்ற உடல்வாகு காரணமாக இருக்கலாம். அவர் ஒரு உதார் பேர்வழி. எங்காவது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அதற்குக் காரணம் நான் தான் என்று உதார் விட்டுக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். காதில் கேட்கும் செய்தியை வேறாக ஊதிப் பெரிதாக்கி கதை விடும் சுபாவம். ஒரு முறை பாருக்குட்டி கர்ப்பமானதாக சுற்றுவட்டார சகாக்கள் சொல்ல, அந்த கர்ப்பத்துக்கும் நானே காரணம் என்று வீண் டம்பம் அடிக்க, கடைசியில் அது ஒரு யானை என்று தெரியவரும்.
இப்போது டிரம்ப் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் காரணம் நானே என்ற அவரது வீண் டம்பம் இப்போது அவரை உச்சபட்ச ஹீரோ நிலையில் இருந்து ஒரு படத்தின் காமெடியன் ரேஞ்சுக்கு இறக்கிக் கொண்டிருக்கிறது. சிலருக்கு சறுக்கல் இப்படித்தான் தொடங்கும் போலும்!
என்னால்தான் இது நடந்தது என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக கடந்த வாரம் பாகிஸ்தான், இந்தியா இடையேயான பிரச்சனையை தீர்க்க உதவினேன். அது மேலும் மேலும் விரோதமாக மாறிக்கொண்டிருந்தது. திடீரென்று வெவ்வேறு ஏவுகணைகள் வானில் செலுத்தப்படும் காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் அதைத் தீர்த்து வைத்தோம். – என்று டிரம்ப் கூறியது, இந்தியாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காரணம், ஒரு ராணுவத் தாக்குதலின் முக்கியமான கட்டத்தில், இந்தியாவின் கை ஓங்கியிருந்த சூழலில், பாகிஸ்தானின் பெரும்பாலான விமானத் தளங்கள் இந்தியாவில் சின்னாபின்னமான நிலையில், இந்தியாவால் பாகிஸ்தானைப் பணிய வைத்து அதன் முன் உள்ள நீண்டகால சவால்களை சரி செய்திருக்க முடியும் என்ற சூழலில், தானாக வந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என்ற போது, தன் நண்பருக்காக மோடி அடிபணிந்துவிட்டார் என்று இந்தியாவில் ஒரு தரப்பு புகைந்து கொண்டிருந்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன். அதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதைத் தடுத்து காப்பாற்றி விட்டேன் என்று சமூக வலைத்தளத்தில் முதல் நபராகத் தெரிவித்தார். இதனை அடிக்கடி பேசியும் வருகிறார். மேலும் வணிக ரீதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நாங்கள் உதவ இருக்கிறோம். வணிகத்தை காட்டி போரை நிறுத்தியவன் நான் ஒருவன் தான் என்று மார்தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவோ, பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே தாக்குதலை நிறுத்தினோம். இதில் கடந்த சில நாட்களாக தரப்புடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த நேரத்திலும் அமெரிக்காவுடன் வணிகம் தொடர்பில் பேசவே இல்லை என்று தெளிவாக உறுதியாக குறிப்பிட்டது. மேலும் தானாக முன்வந்து காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் கூறியதையும் இந்தியா முற்றிலுமாக மறுத்து காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி நாங்கள் பேசுவதாக இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி பாகிஸ்தான் உடன் மட்டுமே பேசுவோம் என்று தெளிவாக தெரிவித்தது. இதுவே ட்ரம் முகத்தில் கரியை பூசியது போல் ஆனது.
இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் டிரம்ப் பேசியபோது, “நான் தான் போர் நிறுத்தம் செய்தேன் ஏன கூறவிரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த உதவி செய்தேன். இந்த பிரச்னை மேலும் மேலும் தீவிரமானது. பல்வேறு வகையான ஏவுகணைகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால், நாங்கள் தீர்வு கண்டோம். நான் இங்கும், அங்கும் செல்ல விரும்பவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரச்னை தீரவில்லை என அறிந்தோம். ஆனாலும் அதனை தீர்த்து வைத்தோம். நாங்கள் வர்த்தகம் குறித்து பேசினோம். போருக்கு பதில் வர்த்தகம் செய்வோம் என்றேன். இதனால், பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் அந்த வழியில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
“ஆயிரம் ஆண்டு பிரச்னைக்காக போரிடுகின்றனர். அந்த பிரச்னையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என நான் சொன்னேன். என்னால் சரிசெய்ய முடியும். நாம் அனைவரும் அமர்ந்து பேசுவோம். ஆயிரம் ஆண்டு பிரச்னைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிடுவீர்கள். நீண்ட காலமாக போர் நடக்கிறது. இது கடினமான ஒன்று. நீண்ட காலமாக போர் நடக்கிறது. அது உண்மையில் ஒரு நாள் கட்டுப்பாட்டை இழந்து செல்லப்போகிறது” என்று பேசினார்.
ஆனால் மேற்குலகை பொருத்தவரை காஷ்மீர் என்பது ஆயிரம் ஆண்டு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது எனினும் பாகிஸ்தான் உருவானதே 75 ஆண்டுகளுக்கு முன் தான் என்பதால், காஷ்மீர் விவகாரமும் நூற்றாண்டுகளுக்குள் உட்பட்ட விவகாரம் தான் என்பதால், இந்தியா அதைப்பற்றி மத்தியஸ்தம் பேசுவதற்கு வேறு நாடுகளின் உதவியை நாட விரும்பவில்லை.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் விவகாரம் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறது. அதில் அப்பட்டமாக இந்திய எதிர்ப்பு என்ற நிலையை காண்பித்தது இந்தியாவில் ட்ரம்புக்கு எதிரான புகைச்சலை மேலும் கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், டிரம்ப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தமாகட்டும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகட்டும் இவை எல்லாம் பேசுவதாக இருந்தால், ” இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, அதை செய்த பிறகு பேசுவோம்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளது கவனம் பெற்றது.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
“பாகிஸ்தானுடனான நமது உறவு மற்றும் பிரச்னை என்பது நிச்சயம் இரு தரப்பானது. பல ஆண்டுகளாக இதே நிலைப்பாடு தொடர்கிறது. இதில் மாற்றம் ஏதுமில்லை. பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூட வேண்டும். என்னசெய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம்.
“சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவே இருக்கும். காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டிய விஷயம் இருக்குமேயானால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அந்நாடு வெளியேறுவதே ஆகும். இது குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.
“இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சிக்கலானது. எந்த வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இரு நாடுகளும் செயல்பட வேண்டும். வர்த்தக ஒப்பந்தத்தில் இதுவே எதிர்பார்க்கப்படும். அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்த கணிப்பும் சரியாக இருக்காது.
“பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்றி விட்டோம். இந்தத் தாக்குதல் தொடங்கிய போது, பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது மட்டுமே குறிவைத்தோம். ராணுவம் மீது அல்ல என்ற செய்தியை அனுப்பினோம். இதில் தலையிடாமல் விலகியிருக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது. ஆனால், அவர்கள் நல்ல அறிவுரையை ஏற்கவில்லை. 10ம் தேதி காலை அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது யார் என்பது தெளிவாக தெரிகிறதே” என்று விளக்கம் அளித்தார்.
ஆனாலும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக, டிரம்ப் தன் மனம் போன போக்கில் பேச்சிக் கொண்டுதான் இருக்கிறார். அதன் மூலம் இதுவரை நெருங்கிய நட்பு வளையத்தில் இருந்த இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்ல வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. ஏற்கெனவே சீனாவை எதிர்த்து களம் ஆடிக் கொண்டிருக்கும் டிரம்புக்கு இருந்த ஒரே வாய்ப்பு இந்தியாவாகத்தான் இருந்தது. இப்போது பாகிஸ்தானை மீண்டும் மடியில் கட்டிக் கொண்டு, இந்திய எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறது டிரம்பின் அமெரிக்க நிர்வாகம் என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்கும் வல்லுநர்கள். எனினும், மீண்டும் யுடர்ன் அடிக்கும் நிலைக்கு ட்ரம்ப் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கிலை. காரணம் அவரிடம் இப்போது நிலையான தன்மை இருப்பதிலை என்பது வெளிச்சமாகியிருகிறதே!
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் 19ஆவது ஓவரில் தான் ரிடயர்ட் அவுட் முறையில் அவுட் ஆவதாகச் சொல்லிவிட்டு மைதானத்தைவிட்டு வெளியில் சென்றுவிட்டார். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
மீதமுள்ள 10 பந்துகளில் தனது அணியின் மெகா ஹிட்டர் ஒருவர் வந்து சிக்ஸ், ஃபோர்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்ற எண்ணத்தில் அஷ்வின் அதைச் செய்தார். ஆனால் அன்றைய தினம் அவரது அணி அவர் எதிர்பார்த்தைப் போல அதிரடியாக ரன் சேர்க்கவில்லை.
இந்த ரிடயர்ட் அவுட் முறை என்றால் என்ன? கிரிக்கெட்டில், “காயத்தால் ஓய்வு பெறுவது (retired hurt) உண்டு. ஒரு பேட்ஸ்மேன் காயம் அல்லது நோய் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி, பின்னர் அவர் உடல்நிலை சரியானபின்பு, அவர்களின் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை என்றால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியும்.
அதே சமயம், “ஓய்வு பெற்றவர்” (retired out) என்பது பேட்டிங் அணி ஒரு பேட்டரை மைதானத்திலிருந்து நீக்குவதற்கான ஒரு மூலோபாய முடிவாகும், மீண்டும் அந்த பேட்டர் பேட்டிங் செய்ய முடியாது.
இந்த ரிடயர்ட் அவுட் முறையின் உச்ச கட்டமாக ஒரு அணி விக்கட் இழப்பின்றி 192 ரன் எடுத்திருந்த நிலையில் அதே 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா?
மகளிர் உலகக் கோப்பை 2025 தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதில் ஒரு தகுதிச் சுற்று போட்டியில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி மற்றும் கத்தார் மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியில், இஷா ரோஹித் ஓசா 113 ரன்களை குவித்து அசத்தினார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை தீர்த்தா சதீஸும் தொடர்ந்து அதிரடி காட்டி 74 ரன்களை குவிதார். இந்த அணி விக்கெட்களை இழக்காமல் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தது. 192/0 ரன்களை எடுத்து விளையாடி வந்தபோது, மழை குறுக்கிடும் நிலை ஏற்பட்டது.
10 பேட்டர்களும்அவுட்
இதனால், பயந்துபோன ஐக்கிய அரபு அமீரக அணி, 192/0 ரன்கள் எடுத்திருந்தபோது, மீதமிருந்த அனைத்து பேட்டர்களும் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் ஆனார்கள். கத்தார் மகளிர் அணி, மிகவும் பலவீனமான அணி என்பதால், தைரியமாக இந்த முடிவை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனே பீல்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி தொடர்ந்து அபாரமாக பந்துவீசியதால், கத்தார் மகளிர் அணி, வெறும் 29 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இந்த 29 ரன்களில், ஓபனர் ரிப்ஜா இமானுவேல் மட்டும் 20 ரன்களை எடுத்திருந்தார்.
இவ்வாறு ரிடயர்ட் அவுட் முறையின் உச்ச கட்ட பயன்பாடு இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டது.
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (16ம் தேதி) திருவனந்தபுரத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் கன்னியாகுமரி எம்.பி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதைப்போல் காவல்கிணறு முதல் திருநெல்வேலி மேலப்பாளையம் வரை உள்ள பகுதிகள் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. ஆனால் இந்த பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்ற காரணத்தால் திருநெல்வேலி எம்.பிக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்த இரண்டு எம்.பிகளும் திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெறும் எம்.பி க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக எம்பிக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக தாம்பரம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் தினசரி விரைவு ரயில் ஆக இயக்கவும் திருநெல்வேலி இல் இருந்து மேட்டுப்பாளையம் வழி செல்லும் வாராந்திர சிறப்புரைகளை தினசரி ரயிலாக இயக்கவும் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
இதுபோல் திருவனந்தபுரம் புனலூர் பயணிகள் ரயிலை செங்கோட்டை வழி மதுரை வரை நீட்டிக்கவும் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் கொல்லம் வழியாக புனலூர் வரை எங்கும் வரையிலை செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு நீடித்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க தமிழக கேரளா எம்பிக்கள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தவும் பொது மக்கள் விரும்புகின்றனர்
தற்போது திருவனந்தபுரம் நாகர்கோவில் டு இரட்டை வழி பாதை பணிகள் மந்த வேகத்தில் நடப்பது விரைந்து செயல்படுத்தவும் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக கோயம்புத்தூர் பெங்களூருக்கு விரைவு ரயில் புதிதாக இயக்கவும் ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கோயம்புத்தூர் செங்கோட்டை கொல்லம் ரயிலை மீண்டும் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு இயங்கும் வாரம் இருமுறை ரயிலை வாரம் மூன்று முறை இயக்கவும் எர்ணாகுளத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் மதுரை வழியாக தினசரி ரயில் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்
கோரிக்கைகளை நாகர்கோவில் திருநெல்வேலி எம்பிக்கள் மற்றும் கேரளா எம்பிக்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் இடம் வலியுறுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மைசூரில் இருந்து தூத்துக்குடி ரயிலில் வருபவர்கள், ஒரு வழியாக, மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை, காலை 07:25க்குப் பிடித்து, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசிக்கு நேரடியாக உடனே செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
காரணம், மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், இந்த ரயில் 5 நிமிடம் முன்கூட்டியே மதுரைக்கு வந்து, செங்கோட்டை செல்லும் ரயிலைப் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
மைசூர்-தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கே வந்து சேருகிறது. இதனால் மதுரைக்கு தற்போது 7.35க்கு வந்து கொண்டிருக்கும் இந்த ரயில், 7.20க்கு மதுரை வரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற 5 நிமிட நேரத்தில் மதுரையில் பயணிகள் ரயில் மாறி செங்கோட்டை பாசஞ்சர் ரயிலைப் பிடித்து தங்கள் ஊர்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளின் வேண்டுகோளைப் பொறுத்து, இனி வருங்காலங்களில், இந்த ரயில் சற்று தாமதமாக கிளம்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படக்கூடும்.
இந்த ரயில் தற்போதைய நேரத்தில் இருந்து 20 நிமிடம் முன்னதாக, தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேரும். இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய விமான நிலையங்களில் முக்கிய பணிகளைச் செய்து வரும் துருக்கி நிறுவனம் Celebi Aviation-க்கு மத்திய அரசு வழங்கிய பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலில் வருகிறது. தில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் பணிகளில் ஈடுபட்டு வந்த துருக்கி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.
“பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஏவுகனைத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல்” – என்றால் துருக்கியின் எர்டோகன். மேலும், பாகிஸ்தானுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று அவரே வெளிப்படையாக ஆதரவும் தெரிவித்தார். முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ட்ரோன் ஆபரேட்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், துருக்கிக்கு பதிலளிக்கும் வகையில், அரசும் துருக்கியின் மீதான உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.
இந்தியா எவ்வளவு உதவி செய்தாலும், அதனை மதிக்காமல் துருக்கி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை இந்திய கல்வி நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. துருக்கியில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப் போவதில்லை என மும்பை வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராஜஸ்தான் மார்பிள் டிரேடர்ஸ் குழுவினர் துருக்கியில் இருந்து மார்பிள்கள் இறக்குமதி செய்யப் போவதில்லை என திருப்பி அனுப்பினர். தொடர்ந்து துருக்கிக்கு எதிரான இந்தியர்களின் கோபம் கூடிக் கொண்டே போனது. இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் துருக்கியுடனான கல்வி தொடர்பில் மறூபரிசீலனை செய்தது.
இந்நிலையில் இந்தியாவில் தில்லி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில் முக்கியமான சில பணிகளை துருக்கியைச் சேர்ந்த செலிபி நிறுவனம், இந்திய அரசின் அனுமதியுடன் செயல்படுத்தி வந்தது. அந்த செலிபி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவந்தது. இதை அடுத்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செலிபி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்ப பெறுகிறோம் – என்று அறிவித்தது.
இந்த செலிபி நிறுவனம் இரண்டு குழுக்களாக இந்தியாவில் செயல்படுகிறது. செலிபி இந்திய விமான சேவைகள் என்று நிறுவனம் மூலம் விமானங்கள் தரையிறங்குவது தொடர்பான பணி நடந்து வந்தன. தில்லி சரக்கு முனைய நிர்வாக இந்தியா என்ற நிறுவனம் மூலம் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் பணி நடந்தது. இவற்றில் சாய்வு தள சேவைகள், விமானம் சுமுகமாக பயணம் செய்யும் வகையில் எடை மேலாண்மை மற்றும் விமான செயல்பாடுகள், விமானத்தில் ஏற உதவும் வாகனங்கள், சரக்கு, அஞ்சல் சேவை மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.
எதிரி நாடான பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யும் துருக்கி நாட்டின் நிறுவன சேவைகளை இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்த சேவை ரத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நெருக்கடிகளை துருக்கிக்கு இந்தியா அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்கள் கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்த காலம் மலையேறி விட்டது. பேரிடர் காலத்தில் துருக்கிக்கு பாரதம் உதவியதும் ஒரு பெரிய தவறுதான். துருக்கியிலிருந்து மார்பிள் வாங்குவதை பாரதத்தின் வடக்குப் பகுதி வணிகர்கள் முற்றாக நிறுத்திவிட்டனர். ஆப்பிள் சந்தைக்கும் ஆப்படித்து விட்டனர். சுற்றுலாப் பயணிகளும் துருக்கிப் பயணத்தை நிறுத்தி வருகின்றனர். துருக்கிக்கு பலகோடி மதிப்புள்ள வணிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கஸ்வா ஏ ஹிந்த், அல் உம்மா, தார் அல் இஸ்லாம் கோட்பாடுகளை 21ம் நூற்றாண்டில் செயல்படுத்த இயலாது என்பதை துருக்கி இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய அரபு நாடுகள் உணர்ந்து கொண்டு விட்டன. இன்று அவை ஆக்கப் பாதையில்! பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு உதவி செய்யத் துடிக்கும் துருக்கியால் சீனாவின் உய்குர் முசுலிம்கள் மதரசா நடத்தவும், ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் உதவ முடியுமா?! – என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் இந்தியர்கள்.
Politicizing the explanation the President asks in the Supreme Court? Who is giving this advice to the Tamil Nadu Chief Minister?
Articles 143,200,201,361 – Constitution of India
Since a war was ongoing with Pakistan, the Tamil Nadu government was unable to address the Supreme Court case against the Governor. Therefore…
This morning, our President of India, Droupadi Murmu, has sent a query to the Supreme Court under Article 143(1) of the Constitution, asking whether the court can recommend a timeline that the President should follow.
“Article 143(1) of the Constitution allows the President to seek the Supreme Court’s opinion in matters of legal and public importance. The top court will now have to set up a Constitution Bench for answering the reference.”
A constitutional bench has been constituted, and it has been asked whether a Supreme Court judge can issue a date-specific order to the President of India, with a request to review the law books and provide an answer.
Even an ordinary person in Tamil Nadu, educated in Tamil medium up to primary school and unaware of what law entails, would know that no court in India can issue any order to the President.
Yet, drafting such a petition and assembling several highly educated judges—leaving no other option but to agree—those two judges will surely say something like, “They are unaware…” (https://indiankanoon.org/doc/1470888/)
Article 361 of the Indian Constitution 361 Protection of President, Governors, and Rajpramukhs
(1) The President, or the Governor of a State, or the Rajpramukh, shall not be answerable to any court for the exercise and performance of the powers and duties of his office or for any act done or purporting to be done by him in the exercise and performance of those powers and duties:
Provided that the conduct of the President may be brought under review by any court, tribunal, or body appointed or designated by either House of Parliament for the investigation of a charge under Article 61:
Further, nothing in this section shall be construed to limit the right of any person to bring appropriate proceedings against the Government of India or the Government of a State.
(2) No criminal proceedings whatsoever shall be instituted or continued against the President, or the Governor of a State, in any court during his term of office.
(3) No process for the arrest or imprisonment of the President or the Governor of a State shall be issued from any court during his term of office.
(4) No civil proceedings in which relief is claimed against the President or the Governor of a State shall be instituted during his term of office in any court in respect of any act done or purporting to be done by him in his personal capacity, whether before or after he entered upon his office as President or Governor of such State, until two months have elapsed after a written notice has been delivered to or left at his office stating the nature of the proceedings, the cause of action, the name, description, and place of residence of the party instituting such proceedings, and the relief which he claims.
It is clearly stated that no court has the authority to issue orders regarding the actions of the President or Governor, and only a court appointed by Parliament under Section 61 to investigate a charge has the authority to do so.
Is the President seeking clarification from the Supreme Court being politicized?… Who is advising the Chief Minister?
The two-judge Supreme Court bench’s ruling on the Governor’s powers, regarding bills and the timeline for the President, was publicized by DMK members as if it were a significant achievement.
Even at that time, legal experts noted that in constitutional matters like the Supreme Court order concerning the President, only a Larger Bench can make a decision. They suggested that the central government could file an appeal or the President could seek clarifications from the Supreme Court under Article 143 of the Constitution.
Should such a request be made, we, like others, stated that the Supreme Court would order a Larger Bench to hear the case. This is a right of the President. It is not political. However, upon seeing today’s statement from the Chief Minister, I was shocked and surprised.
Who is giving such misguided ideas to the Chief Minister? The President seeking clarification from the Supreme Court is a right granted by the Constitution. As the Constitutional Head, the Constitution allows her to raise questions. How can the Chief Minister engage in cheap politics by linking this to the BJP?
Previously, in 1952, during President Rajendra Prasad’s tenure, Prime Minister Nehru sought clarification under Article 143 regarding who holds more authority—President or Prime Minister. In 1988, then-President R. Venkataraman sought clarification under Article 143 regarding the Ram Janmabhoomi issue.
Who is providing wrong advice to the Tamil Nadu Chief Minister, leading her to interfere in the President’s rights and politicize it? This is an overstepping act. The Chief Minister must withdraw her statement. The fear is evident among the Chief Minister and DMK members that if the issue of the Governor’s powers goes to a Larger Bench, the current ruling they secured will become obsolete. No one can permit a person who has taken the constitutional oath to engage in politics that ridicules the Constitution itself.
Poor thing, all the celebrations of displaying this order, with a learned fool wearing a coat and admiring himself on the chief seat, are coming to an end.
குடியரசு தலைவர் உச்சநீதி மன்றத்தில் கேட்கும் விளக்கத்தை அரசியலாக்குவதா?தமிழக முதல்வருக்கு இந்த ஆலோசனையை யார் தருவது?
ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை ஏதோ சாதித்ததுபோல் திமுகவினர் விளம்பரப்படுத்தினர்.
அந்த நேரத்திலேயே குடியரசுத்தலைவர் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டம் அறிந்தோர் இதுபோன்ற அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லார்ஜர் பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு போகலாம் அல்லது குடியரசு தலைவரே அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 143-ன் கீழ் சில விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் கேட்கலாம் என தெரிவித்தனர்.
அவ்வாறு கேட்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் லார்ஜர் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடும் என என்போன்றோர் தெரிவித்தோம். இது குடியரசு தலைவருக்கான உரிமை. இது அரசியல் அல்ல. ஆனால் இன்றைய முதல்வரின் அறிக்கையை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும், வியப்பும் ஏற்பட்டது.
முதல்வருக்கு யார் இவ்வாறு தப்பு தப்பான ஐடியா கொடுப்பது? குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க்ம் கோருவது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்துள்ள உரிமை. அவர் கான்ஸ்டிடியூஷன் ஹெட், அவருக்கான கேள்வியை எழுப்ப அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதை பாஜகவுடன் சம்பந்தப்படுத்தி மலிவு அரசியல் செய்ய முதல்வரால் எப்படி முடிகிறது.
இதற்கு முன் 1952-ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் பிரதமர் நேரு , ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் யாருக்கு அதிகாரம் என 143 பிரிவின் படி Article ஆர்ட்டிக்கல் கீழ் கேட்டுள்ளார். 1988-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்சனை குறித்து அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 143 ஆர்ட்டிகல் கீழ் கேட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் உரிமையில் தலையிட்டு அரசியல் செய்ய தமிழக முதல்வருக்கு யார் தவறான ஆலோசனை சொல்வது? இது அத்துமீறும் செயலாகும். முதல்வர் தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். லார்ஜர் பெஞ்சுக்கு ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரம் போனால் தற்போது வாங்கிய தீர்ப்பு காலாவதியாகும் என்கிற பயம் முதல்வருக்கும், திமுகவினருக்கும் உள்ளது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்தவர் அதையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல் செய்வதை யாரும் அனுமதிக்க முடியாது.