Home Blog Page 111

நம் பண்டைய நூல்களில் உள்ளது நம் வரலாறு!

hindu
ohm

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

நம் முனிவர்கள் அளித்த இலக்கியங்கள், நம் கலாச்சரத்திற்கும், தர்மத்திற்கும் வரலாலாற்றுக்கும் ஆதாரனமானவை. அவை வேதம், வேதாந்தம், புராணம், மந்திர  சாஸ்திரங்கள், காவியங்கள், கலைகள், மருத்துவம், நீதி சாஸ்திர நூல்கள் போன்றவை,  இதில் சிறப்பு என்னவென்றால், இவை ஒன்றோடொன்று பரஸ்பரம் தொடர்பு கொண்டவை. வேறு வேறானவை அல்ல. இந்தத் தொடர்பை கணக்கில் கொண்டு நம் இலக்கியங்களை ஆராய வேண்டும்.

ஆனால் நம் தேசத்தை முற்றுகையிட்டு, நம்மை ஆண்டவர்கள், நம் தேச வரலாற்றையும், சம்பிரதாயங்களையும் இலக்கியங்களையும் தம் பார்வையால் பார்த்து, அவற்றை வெவ்வேறாகக் கண்டு, தமக்குத் தோன்றிய விதத்தில் காலக் கணக்கீடு செய்தார்கள். அவர்களால் தவறாக எழுதப்பட்ட வரலாற்றை நம்மைக் கொண்டு படிக்கச் செய்தார்கள். அவர்களின் சிந்தனை விதமே சரியானது என்ற உணர்வை நம் தேசத்தின் ஆன்மீக அறிஞர்களுக்கும் பழக்கினார்கள்.

அதன் தாக்கத்தால், அறிஞர்கள் சிலர், வேதத்தையும், வேதாந்தத்தையும் மதிப்பார்கள். ஆனால் புராணங்களைக் கீழானதாக நினைப்பார்கள். உபாசனை நூல்களை நிராகரிப்பார்கள். 

இவையனைத்தும், ஒன்றோடொன்று இணைந்து, பரஸ்பரம் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்பதை அவர்கள் உணர்வதில்லை. புராணங்கள் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்படும் பல கருத்துக்கள், நம் அற்புதமான அறிவியல் செல்வங்களைப் பேசுகின்றன.

புராணங்கள் பதினெட்டுதானா? எல்லாமே வியாசர் எழுதியதா? போன்ற சந்தேகங்கள் உள்ளன. ஆனால் வியாசருக்கு முன்னரும் பின்னரும் கூட புராணங்களின் வடிவமைப்பில் வந்த நூல்கள் பல உள்ளன. அவற்றின் ஆசிரியர்கள் யார்? எந்த காலத்தைச் சேர்ந்தவர்? போன்றவற்றை பற்றி சர்ச்சை செய்வதை விட, அவற்றில் காணப்படும் பயன்தரும் கருத்துக்களை ஏற்பது சிறந்தது. 

புராணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஜோதிடம், கோள்களின் இயக்கம்,  நட்சத்திரங்களின் இடமாற்றம், போன்ற விவரங்களைக் கணக்கிட்டு உண்மையான பாரத தேச வரலாற்றை எழுதிய ‘பாரத சரித்திர பாஸ்கரர்கள்’ என்று போற்றப்பட்ட ‘ஸ்ரீ கோட்ட வேங்கடாசலம்’ போன்ற மகநீயர்களின் நூல்களை, நம் தேசத்தின் மேதாவிகளும், கல்வி அமைப்புகளும் ஏற்பதில்லை. மேற்கத்தியர்கள் எழுதிய தவறான வரலாறுகளே பாட நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்வுகளும் அவர்களின் கண்ணோட்டத்திலேயே நடந்தன.

வினாடி, நொடி, அதற்கும் குறைவான நுண்ணிய கால அலகுகள், சூட்சும காலங்கள் முதல் யுகம், மகா யுகம், கல்பம் போன்ற பெருங்கால வரையறைகளையும் கணித்துக்  கூறிய விஞ்ஞானம் நம்முடையது. மகாகவி திரு. விஸ்வாத சத்தியநாராயணா போன்ற  மகநீயர்கள் இந்த விஞ்ஞானத்தை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து உயர்ந்த நூல்களை  தெலுங்கில் படைத்தனர்.

ஆனால் நம்மவர்கள் பலர் அவற்றைக் கூர்ந்து படிக்கவில்லை. அவர்கள் கூறிய ஆதாரங்களாக ஏற்கவில்லை. புராணங்களில் காணப்படும் சங்கேத மொழிகளையும், குறியீடுகளையும், சாஸ்திரக் கருத்துக்களையும் ஆழமாக ஆராயவில்லை. ஒருவேளை அவ்வாறு ஆராய்ந்திருந்தால், பல அற்புதமான கருத்துக்களை உலகிற்கு அளித்திருக்க முடியும். 

தற்போது இளையதலைமுறையினர் சிலர் அவற்றைப் பயின்று, நேர்மையான முறையில் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி நிலையங்களும், அதிகார அமைப்புகளும் அவற்றை ஏற்கும் காலம் வர வேண்டும்.

புராணங்களை வரலாற்று நூல்கள் என்று கூறாவிட்டாலும், வரலாற்றுக்குத் தேவையான சான்றுகள் பலவற்றை அவற்றிலிருந்து பெற முடியும். ஆனால் வரலாற்று மனிதர்களிடம்  தெய்வீகத்தைக் கற்பித்து, இல்லாததும் பொல்லாததுமான கற்பனைகளைச் செய்தார்கள் என்று சிலர் ஏளனம் செய்கின்றனர். ஆனால், பண்டைக் கால பாரத தேசத்தில், தெய்வீகத்தை இயல்பாகப் பெற்ற மகநீயர்கள் இருந்தார்கள். அதை அறிய இயலாத, நவீனகால ‘திரித்தல்’ பார்வையைப் பற்றி என்ன கூறுவது?   

புராணம் முதலான நூல்களில் வரலாற்றுக் கருத்துக்களோடு கூட பூகோள கருத்துக்களும் உள்ளன. அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த சில சொற்களும், மொழியும் உடனடியாக நமக்குப் பொருள் புரியாமல் போகலாம். ஆனால், அவற்றில் குறித்துள்ள  இடங்கள், அதே பெயர்களோடு, சிறிதளவு மாற்றங்களோடு இன்றும் உள்ளன.

இன்னொரு முக்கியமான விஷயம், தீர்த்த, க்ஷேத்திரங்களின் வர்ணனை. அவற்றை விளக்கும் புராணங்களில், முக்கியமான தீர்த்தம் அல்லது முக்கியமான திருத்தலம் பற்றிக் கூறி, அவற்றுக்கு எந்தெந்த திசையில் என்னென்ன இருந்தன, எந்த அளவீடுகளில், எத்தனை தொலைவில் இருந்தன என்று விவரித்துள்ளார்கள்.

இதில் வியப்பு என்வென்றால் அவை இப்போதும் அதே போல் அங்கெல்லாம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றில் பல இன்று சிதிலமாகிப் பாழ்டைந்து பண்டைய புகழுக்கு  வெறும் அடையாளங்களாக நிற்கின்றன. அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள், எந்த நூலையும் பார்க்காமலே, அந்த தீர்த்தங்களின் தெய்வீகத்தை உணர்ந்து, மிகவும் அன்பாக வணங்கி வருவதைக் காண முடிகிறது.

ஸ்காந்த புராணத்தில் இருக்கும் காசி கண்டத்தில், பல்வேறு தீர்த்த, க்ஷேத்திரங்கள் விவரிக்கபப்ட்டுள்ளன. அவற்றைப் படித்து, வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பேராசிரியர் ஒரு சித்திரத்தை வரைந்து எடுத்துக் கொண்டு காசிக்கு வந்தார். அங்கிருந்த பல்கலைக் கழகத்தின் ஒரு ஆசிரியரின் உதவியோடு, அந்ததந்த க்ஷேத்திரங்களை தரிசித்தார். அவை குறித்த சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அதைப் பார்த்து நம் காசி பல்கலைக் கழக ஆசிரியர் வியந்ததோடு, தானும் உற்சாகம் பெற்று, பல ஆய்வுகளை நடத்தி, அந்த இடங்களின் சிறப்புகளை விவரித்தார்.

அதே போல், புராணங்களை ஆதாரமாகக் கொண்டு, ‘ராம ஜன்ம பூமி’ எந்த இடத்தில், எந்த எல்லையில் இருந்தது என்பதையும், அதன் பல்வேறு திக்குகளில் என்னென்ன இடங்கள் இருந்தன என்பதையும் ஆராய்ந்து, ‘அது வெறும் இன்றைய ஹிந்துக்களின் நம்பிக்கையல்ல. அவர்களின் நம்பிக்கைக்கு சாஸ்திர ஆதாரங்கள் உளளன’ என்று திரு. பராசரர் போன்ற மேதைகள் விவரித்து, ‘ராம ஜன்ம பூமி’ நூற்றுக்கு நூறு பங்கு ஹிந்துக்களுடையதே என்று நிரூபித்தார்கள்.

ராஜா விக்கிரமாதித்யன் நிர்மாணித்த, பெருங்கோவில் காலப் போக்கில் முகலாய அரசர் பாபரால் அழிக்கப்பட்ட உண்மையை நிரூபிப்பதற்கு அங்கு கிடைத்த சிற்பங்களின் எச்சங்கள் உதவி புரிந்தன. அதன் மூலம் சாதகமான தீர்ப்பையும், ராம ஜன்ம பூமியையும் நாம பெற முடிந்தது. 

விக்கிரமாதித்யன் போன்ற பேரரசர்களின் சரித்திரத்தையே, வரலாற்றில் எழுதாத மேல்நாட்டு மேதைமையை நாம் நம்புகிறோம். ஆனால் அப்படிப்பட்ட மகாபுருஷரை மறந்து, எத்தகைய உயர்ந்த வரலாறுகளை நாம் இழந்து நிற்கிறோம் என்பதைக் கூட  அறியாமல் இருக்கிறோம்.

பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை இருக்கும் தீர்த்தங்கள், க்ஷேத்திரங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், போன்றவற்றை புராணங்கள் எவ்விதம் விவரித்துள்ளன என்று ஆராய்ந்து, எடுத்துரைத்தால், பாரத தேசத்தின் பெருமையையும் அற்புதங்களையும் உலகத்தாருக்கு உணர்த்த முடியும். அவ்விதமாக, நேர்மறை உணர்வோடு பண்டைய இலக்கியங்களை ஆராய வேண்டும். 

(தலையங்கம், ருஷிபீடம், தெலுங்கு மாத இதழ், ஏப்ரல், 2௦25)

மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு!

madurai collector car seized - 2026

வீட்டு வசதி வாரியத்திற்கு நில எடுப்புக்கான பணத்தை முழமையாக ஒப்படைக்காத மாவட்ட நிர்வாகம் – மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்!

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த கருப்பையா- மீனாட்சியம்மாள் தம்பதி என்பவருடைய 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை 1973ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைக்க அன்றைய மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் 19ஆயிரத்தி 688 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வாங்கப்பட்ட நிலத்திற்கான தொகை போதாது என கருப்பையா நீதிமன்றத்தை நாடி 1982 ஆம் ஆண்டு சென்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஏக்கர் 14 சென்ட் நிலத்தை 2லட்சத்தி 14ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதில், குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு தொகையை முழுமையாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி  மாவட்ட நிர்வாகத்தினுடைய ஆட்சியர் காரை, பறிமுதல் செய்தனர். 

ஒரு லட்ச ரூபாய் தொடர்ந்து பணத்தை ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்து பாண்ட் எழுதிக் கொடுத்து காரை எடுத்துச் சென்றனர். 2010 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பணத்தை தொடர்ச்சியாக தராமல் காலம் தாழ்த்தி வந்தனர் வாகனத்தை ஒப்படைக்க கோரி நீதிமன்றத்தை அணுகிய போது கடந்த மாதம் ஜனவரி21 தேதி பிணை முறிவு பத்திரம் ரத்து செய்து வாகனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ச்சியாக வாகனத்தை ஒப்படைக்காமல் இருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்ற மீனா மற்றும் வாரிசுதாரர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் ஆர் செல்வராஜ் மற்றும் வாரிசுதாரர்கள் ஆட்சியில் காரை பறிமுதல் செய்ய காத்திருக்கின்றனர்.

பிரதமர் மோடியால், ராம நவமியில் திறக்கப்படும் ராமேஸ்வரம் பாலம்!

pm modi inaugurate new pamban bridge - 2026

ராம நவமி தினமான ஏப் 6-ம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக வண்டி எண் 16103/16104 ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி விரைவு ரயில் 06.04.2025 ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மேலும் திருவனந்தபுரம் மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயங்கும். ஆனால் பலரும் எதிர்பார்த்த எர்ணாகுளம் செங்கோட்டை மதுரை ராமேஸ்வரம் ரயில் இயக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது, கேரளா தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராம நவமி தினமான ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா, ஏப். 6-ம் தேதி ராம நவமியன்று ராமேஸ்வரத்தில் நடக்கவுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் 2019 மார்ச் 1-ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.535 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகளை கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வுசெய்து, சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அவர் சுட்டிக்காட்டிய பணிகள் சரி செய்யப்பட்டன.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்.6-ம் தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

மேலும், அன்று ராமேஸ்வரத்திலிருந்து புதிய ரயில் சேவையைத் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்காக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே விழாவுக்கான மேடை அமைக்கப்படும்.

ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும். மேலும், பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ரயில் பாதைக்கான நிலங்களைக் கையப்படுத்த வேண்டும். இதனால், தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தாமதமாகும் – என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் வருவது உறுதியாகி உள்ளதாக இன்று ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் ஆறாம் தேதி மதியம் காலை 11 மணி ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் நடக்கும் விழாவில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து தாம்பரம் – ராமேஸ்வரம் – தாம்பரம் புதிய ரயில் சேவை துவக்கி வைப்பார் என்பது உறுதியாகி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறக்கும் போது, தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எர்ணாகுளம் ஆலப்புழா கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு புதிதாக ஒரு ரயில் இயக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த ரயில் இயக்குவதாக இந்த அறிவிப்பும் இல்லை. இது நெல்லை தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்டம் மக்களிடையும் கேரள மக்களிடையும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் செங்கோட்டை ராமேஸ்வரம் இடையே ஒரு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை மீண்டும் இயக்கவும் கொல்லம் செங்கோட்டை கோவை வழித்தடத்திலும் கொல்லம் செங்கோட்டை சென்னை இடையே மேலும் ஒரு புதிய ரயிலையும் இயக்கவும் தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கல்லூரி மாணவர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் மதுரை வழியாக பெங்களூர் மைசூருக்கு தினசரி ரயில் இயக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் ராமேஸ்வரம் மதுரை விருதுநகர் செங்கோட்டை ரயில் வழித்தடத்தை இருவழிப்பாதையாக மாற்றவும் தென்னக ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேறுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தர்பூசணியில் செயற்கை கலர் ஏற்றப்பட்டுள்ளதா? கரூரில் அதிகாரிகள் தீவிர சோதனை!

fodd safety inspection in karur - 2026

கரூர் மாவட்டத்தில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

உணவுப்பாதுகாப்பு துறையின் கரூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் ஆகியோர் கரூர் மாவட்டத்தில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் செயற்கை வண்ண நிறமிகள் ஏதேனும் ஏற்றப்பட்டுள்ளதா ? கடைகளில் அதற்கான ஊசிகள் ஏதேனும் உள்ளதா ? அழுகிய பழங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகின்றனவா ? சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பழங்களில் எலிகள் ஏதேனும் கடித்து சேதராமாகியுள்ளதா ? உள்ளிட்டவைகள் குறித்த சோதனை நடத்தப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு துறையின் கரூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் ஆகியோர் அடங்கிய இந்த குழுவில் தர்பூசணி பழங்கள் குறித்த அதிரடி ஆய்வு வியபாரிகள் மத்தியில் ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியது

டாஸ்மாக் விபரீதம்: உசிலம்பட்டியில் காவலர் கொலை; சாலை மறியல்!

protest in usilampatti - 2026

உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது ,
உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கும் போது ஏற்பட்ட தகராறின் காரணமாக நாவார்பட்டி அருகே ஹரிஹரன் என்பவரது தோட்டத்தில் வைத்து காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். காவலருடன் வந்த கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் , இந்த சம்பவம் தொடர்பாக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு இன்று குற்றவாளிகளை கைது செய்ய கோரி காவலரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என,
உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இருந்த போதும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காவலரின் உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர்.

‘தமிழர் பாசாங்கு’; திமுக.,வின் இரட்டை வேடம்: தோலுரித்த அமித் ஷா!

1723147 amith sha - 2026

காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தபோது, தமிழகத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல முறை தன்னைச் சந்தித்தபோதும் அது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், திமுக எம்பிக்கள் இரட்டை வேடம் போடுவதை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah அவர்கள்.– என்று கு. அண்ணாமலை கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது திமுக., எம்பி., கனிமொழி பேசுகையில், குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும். அந்த வகையில், இலங்கை தமிழ் அகதிகளை நீண்ட கால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கே பிறந்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு உடனடியாக பதில் அளித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இத்தனை தமிழ் அகதிகள் வந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? என்றும் கேட்டார். அவர் மிகவும் நன்றாகத்தான் பேசினார். இலங்கை அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனது இதயமும் வலிக்கிறது. அகதிகளுக்கான எங்கள் கொள்கை என்ன? என்று கனிமொழி கேட்டார். நான் அதை பற்றி விளக்கம் அளிக்கிறேன்..

இலங்கை அகதிகளுக்கான 1986-ம் ஆண்டின் இந்திய அரசாங்கத்தின் கொள்கை அப்படியேதான் இப்போதும் உள்ளது. நீங்கள் (திமுக) 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்த போதும் கொள்கை அப்படியே இருந்திருக்கிறது.. 10 ஆண்டுகளாக தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தார், டி.ஆர்.பாலுவும் ஒரு அமைச்சராக இருந்தார். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களா? அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. எங்களுக்கும் வசதியாக இருந்திருக்கும்.

தமிழ் அகதிகளுக்கான நீங்கள் வகுத்த கொள்கையில் நாங்கள் ஒரு ‘கமா’வைக் கூட மாற்றவில்லை. திமுக., அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட அதே கொள்கையை நாங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏதேனும் மாற்றங்களை விரும்பினால், அவற்றை என்னிடம் கொடுங்கள். அதை நாங்கள் பரிசீலிப்போம்..” என்றார். 

அப்போது வடசென்னை தொகுதி எம்பி., கலாநிதி வீராசாமி குறுக்கிட்டு, “நீங்கள் ஏதாவது செய்யுங்கள்!” என்று அமித் ஷாவைp பார்த்து கோரிக்கை வைத்தார். 

அதற்கு பதில் அளித்த அமித்ஷா,  “இதுவரை, திமுக., எம்பி.,க்கள் அனைவரும் வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக நான்கு முறை என்னை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரு முறைகூட அவர்கள் தமிழ் அகதிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் இப்போது ”ஏதாவது செய்யுங்கள், ஏதாவது செய்யுங்கள்” என்று கூறுகிறார்கள். நீங்கள் தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சினையை ஒருபோதும் எழுப்பவில்லை. உங்கள் கொள்கை நல்லதாகத்தான் இருக்கும் என்று கருதி, நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம். இப்போதும் கூட, நீங்கள் ஏதாவது பரிந்துரைத்தால், நாங்கள் அதைப் பரிசீலிப்போம்”  என்று பதில் அளித்தார் அமித் ஷா..

ஆக திமுகவின் இரட்டை வேஷம் அம்பலமாகியுள்ளது.

IPL 2025: வல்லவனுக்கு வல்லவன்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – 27.03.2025

வல்லவனுக்கு வல்லவன் இந்த இவ்வையத்தில் உண்டு

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியை (190/9, ட்ராவிஸ் ஹெட் 47, அனிகெட் வர்மா 36, நிதீஷ் குமார் ரெட்டி 32, கிளாசன் 26, ஷர்துல் தாகூர் 4/34, ஆவேஷ் கான், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (16.1 ஓவரில் 193/5, நிக்கோலஸ் பூரன் 70, மிட்சல் மார்ஷ் 52, அப்டுல் சமத் 22, பேட் கம்மின்ஸ் 2/29, ஷமி, சாம்பா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), அதற்கடுத்து வந்த இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த நிதீஷ் குமார் ரெட்டி (28 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர்) மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் உடன் இணைந்து (28 பந்துகளில் 47 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான ஹென்றி கிளாசன் (17 பந்துகளில் 26 ரன்,) அனிகெத் வர்மா (13 பந்துகளில் 36 ரன்) பாட் கம்மின்ஸ் (4 பந்துகளில் 18 ரன், 3 சிக்சர்), ஹர்ஷல் படேல்  (11 பந்துகளில் 12 ரன்)ஆகியோர் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது.

          191 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் தொடக்க வீரர் ஐடன் மர்க்ரம் (1 ரன்) மோசமான தொடக்கம் தந்தார். அவருடன் களமிறங்கிய மிட்சல் மார்ஷ் (31 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஜோடியாக நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 70 ரன்) மிக அற்புதமாக விளையாடினார்.

அவரது ஆட்டத்தால் லக்னோ அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அதன் பின்னர் வந்த ரிஷப் பந்த் (15 பந்துகளில் 15 ரன்), ஆயுஷ் பதோனி (6 பந்துகளில் 6 ரன்), டேவிட் மில்லர் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்), அப்துல் சமத் (8 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் 16.1 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைய உதவிசெய்தனர்.

          லக்னோ அணியின் பந்துவீச்சாளர், ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த வருட ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாம் அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாரிவிட்டது. பந்துவீச்சாளர்கள் மட்டையாளர்கள் சிக்சராக அடிப்பதைப் பார்த்துக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டவாறு செல்கின்றனர். நேற்று ஷமியின் பந்துகளை நிக்கோலஸ் பூரன் சிக்சர் அடிக்கும்போது பரிதாபமாக இருந்தது.

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

kadeswara subramaniam hindu munnani - 2026

முஸ்லிம்களின் ஓட்டிற்காக தமிழர்களின் அடிப்படை உரிமையை மறுக்க துணை போகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று, இந்து முன்னணி எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

இன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்வதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வக்ஃப் வாரியத்திற்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி அநியாயம் செய்தது. இதன் மூலம் முறைகேடாக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசின் சொத்துக்களை, இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களை வக்ஃப் சொத்து என்று ஆக்கிரமிக்கும் போக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் மத்திய அரசு, வக்ஃப் வாரியம் திருத்த சட்டம் குறித்து மக்களின் கருத்தை கேட்டு ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்த்ததால் மத்திய அரசு பாராளுமன்ற கூட்டுக்குழுவை ஏற்படுத்தியது. பாராளுமன்ற கூட்டுக்குழு நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யவுள்ளது.
வக்ஃப் வாரிய சொத்து பிரச்சினை தமிழகத்தில் இல்லையா? அரசுக்கு அதைப்பற்றி தெரியாதா? பாதிக்கப்பட்டவர்கள் கதறல் காதில் விழவில்லையா?

எவ்வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்து என குறிப்பிட்டு பல பேர்களின் தலையில் மன்ன அள்ளிப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது தமிழ்நாடு வக்ஃப் வாரியம்.

உதாரணமாக திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்பட சுமார் 375 ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரிய சொத்து என்று கூறியது. அங்குள்ள இந்துக்கள் தங்கள் சொத்துக்களை விற்பதற்கு வக்ஃப் வாரியத்திடம் தடையில்லாத சான்றிதழ் (NOC) வாங்கி வரும்படி பதிவாளர் கூறினார். அப்போதுதான் தமிழர்களுக்கு வக்ஃப் வாரியத்தின் முறைகேடாக சொத்து அபகரிப்பு பித்தலாட்டம் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி பகுதி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலசமுத்திரம், நெல்லை மாவட்டம் பழைய பேட்டை, ராணிப்பேட்டை வேப்பூர், சென்னை திருவல்லிக்கேணி என பல பகுதிகளில் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்து என்று எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் உரிமை கொண்டாடியது வக்ஃப் வாரியம்.

மக்களின் எதிர்ப்பின் காரணமாக நயவஞ்சகமாக ஒரு சதியை தமிழக அரசு செய்தது. அது தற்காலிகமாக வக்ஃப் வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பத்திர பதிவை செய்ய மாவட்ட ஆட்சியர் அதிகாரத்தை பயன்படுத்த வைத்தது.

தங்கள் சொத்துக்களை வக்ஃப் வாரியம் சட்டவிரோதமாக அபகரிக்க திமுக உள்பட அரசியல் கட்சிகள் துணைபோகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி பணத்தை கொடுத்து சட்டப்படி வாங்கி பதிவு செய்த சொத்துக்களை கள்ளத்தனமாக வக்ஃப் வாரிய சொத்து என்று அபகரிப்பது குறித்து பாஜக தவிர மற்ற அரசியல் கட்சிகள் வாயை திறக்கவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழக முதல்வர் கொண்டு வரும் மசோதா தமிழக மக்களுக்கு விரோதமானது.

மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மாநில அரசு கொண்டு வரும் மசோதாவின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்.

திருத்த மசோதாவை தமிழக மக்கள் பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பாரம்பரியமான நமது சொத்துக்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

“நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி”: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

1719347 mk stalin - 2026
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

“தங்கள் வாக்கு வங்கிகளைத் திருப்திப்படுத்த பிரிவினைவாதம் பேசுகிறார்கள் சிலர்” என்று யோகி ஜி சொன்னது தன்னைத் தான் என்று புரிந்து கொண்ட திமுக., தலைவரும் தமிழக மாநில முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின், “எங்கள் இருமொழிக் கொள்கையைக் கண்டு பாஜக பயந்து விட்டது” என்று பதிவிட்டார். பதிலுக்கு அந்தப் பதிவை கோட் செய்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீங்கள் உண்மையில் ஒரு மோசடிப் பேர்வழி என்று பதில் கொடுத்துள்ளார். 

“தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, மொழி குறித்த பிளவுகளை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்திருந்தார். 

யோகி ஆதித்யநாத் தன்னைத்தான் விமர்சிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட ஸ்டாலின், அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், ‘மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?’ என்று நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு பதில் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினின்  இந்தக் கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1905118095347507462

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் பாதுகாவலர் என்ற போர்வையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு மோசடியாளராகத் திகழ்கிறார். பொதுவாக மோசடி செய்பவர்கள் பணக்காரர்களைக் குறிவைத்துதான் ஏமாற்றுவார்கள். ஆனால் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்து திமுக., ஏமாற்றுகிறது.

தமிழக முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்கப்படுவதும், ஆனால் அதனை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒட்டுமொத்த நாட்டுக்கே தெரியும். எனவேதான் உங்களை கபட நாடகம் ஆடுபவர் என்று அழைக்கிறார்கள்.

அங்கங்கே தனது கட்சிக்காரர்கள் நடத்தும் நாடகங்களை தமிழக மக்களின் குரல் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உங்கள் முயற்சிகள் அம்பலமாகி விட்டதை நீங்கள் உணரவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

அறியாமை என்னும் பேரின்ப உலகில் நீங்கள் வாழுங்கள்; நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம்!

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

pm modi inaugurate new pamban bridge - 2026

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் மூலம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிமீ., முதல் 50 கிமீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் உப்பு நீர் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் ‘தூக்கு பாலத்தில்’ அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022 டிசம்பர் 22-ம் தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இரட்டைப் பாதைக்கான இடவசதியுடன் கூடிய வகையில், மின்சார ரயில் போக்குவரத்துக்கு ஏற்ப, கடலின் நடுவே 2.1 கிமீ., தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது.

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தபோது, ஒரு சில குறைகளைச் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு ஆணையர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப் பட்டதை அடுத்து, புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து,பிப்ரவரி மாதத்தில் இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. பாம்பன் புதிய ரயில் பாலம் மத்திய அரசின், குறிப்பாக பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என்பதால், முக்கியமாக காசியான வாரணாசி தொகுதி எம்பி.,யான பிரதமர் மோடியே காசி-ராமேஸ்வரம் இணைப்புப் பாதையை விரும்பிச் செய்வதால், அதை பிரதமர் மோடியே நேரில் வந்து திறந்து வைப்பார் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

கடந்த மார்ச் 23ம் தேதி தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கௌஷல் கிஷோர் தலைமையில், ரயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில், பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் 12 பெட்டிகள் கொண்ட புதிய ரயில் இந்தப் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது.

இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நேரடியாக வருவதாகத் தகவல் வெளியானது. அவரது பயண திட்டப் படி, 5-ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழாவில், தமிழக மாநில முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாஜக., மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பலரும் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.

பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில், ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை ராமேஸ்வரம் பகல் நேர எக்ஸ்பிரஸ் உள்பட, பிற மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேரடி ரயில் போக்குவரத்துக்கு அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.