ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தென்காசியில் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மே8ஆம் தேதி நடைபெறும் என திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட சபரிமலை, ஆரியங்காவு, அச்சன்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் செய்ய வேண்டிய திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
மே 8ஆம் தேதி வியாழக்கிழமை காலை ஆரியங்காவு திருக்கோவிலிலும் பிற்பகல் அச்சன்கோவில் திருக்கோவிலிலும் இந்த ஆய்வுக் கூட்டம் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் நடக்கிறது
வியாழக்கிழமை அன்று மாலை தென்காசியில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு தென்காசி ரயில்வே ரோடு ஜெகநாத் அரங்கத்தில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெறுகிறது.
இத்தகவலை தெரிவித்துள்ளார் அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளரும்.. திருஆபரணபெட்டி கோஷயாத்தியின் கேரள ரக்சாதிகாரியுமான தென்காசி ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன் குருசாமி. கேரளா தேவசம் போர்டு தலைவர் தென்காசியில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.
எனவே அச்சன்கோவில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டி உறுப்பினர்கள் ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சபரிமலை மற்றும் அச்சன்கோவில் திருக்கோவில்களில் செய்ய வேண்டிய திருப்பணிகள் மற்றும் வசதிகள் குறித்த ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது பாரத ராணுவம் துல்லியத் தாக்குதல் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், பாரத நாட்டின் விமானம் இரண்டு பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு மற்றும் விமானப் படை அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் பாகங்கள் இந்தியாவில் உள்ள காஷ்மீரில் விழுந்ததாகவும், ஓர் இந்திய அதிகாரி இதனைக் கூறியதாகவும் தெரிவித்து, தி ஹிந்து பத்திரிகையின் சமூக செய்தித் தளத்தில் பதிவிடப்பட்டது.
இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. பொய்யான தகவலை பகிர்ந்ததாகக் குறிப்பிட்டு, எழுந்த கண்டனங்கள் எதிர்ப்புகளை அடுத்து, அந்தப் பதிவு எந்த விளக்கமும் குறிப்பிடாமல் சமூகத் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், சீனாவின் அரசு சார்பு ஊடகமான குளோபல் டைம்ஸில், தி ஹிந்துவில் இடம்பெற்றதாக மேற்கோளிடப்பட்டு, அதே செய்தி வெளியிடப்பட்டது.
இதற்கு, சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் இருந்து பதில் வெளியிடப்பட்டது. India in China @EOIBeijing என்ற இந்திய தூதரக அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தின் ஹேண்டிலில், இதற்கான விளக்கங்கள் பகிரப்பட்டன. அவை….
அன்புள்ள @globaltimesnews, இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன், உங்கள் உண்மைகளைச் சரிபார்த்து, உங்கள் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
#OperationSindoor பின்னணியில் பல பாகிஸ்தான் சார்பு (ஹேண்டில்ஸ்) கையாளுதல்கள் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி, பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. ஊடகங்கள் ஆதாரங்களைச் சரிபார்க்காமல் அத்தகைய தகவல்களைப் பகிரும்போது, அது பத்திரிகை நெறிமுறைகளில் பொறுப்பு மற்றும் கடுமையான குறைபாட்டை பிரதிபலிக்கிறது.
#OperationSindoor தற்போதைய சூழலில் விபத்துக்குள்ளான விமானங்கள் என்று பரப்பப் படுபவை பழைய படங்கள். அவை பல்வேறு வடிவங்களில் மீண்டும் பழைய படங்களுடன் போலிச் செய்திகளாகப் பரப்பப்படுவதை @PIBFactCheck வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
ஒன்று, செப்டம்பர் 2024ல் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை (IAF) MiG-29 போர் விமானம் தொடர்பான முந்தைய சம்பவத்திலிருந்து வந்தது. மற்றொன்று 2021 இல் பஞ்சாபில் இருந்து வந்த IAF MiG-21 போர் விமானம்.
இந்தப் பிரச்சினையின் உண்மைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.
ஏப்ரல் 22, 2025 அன்று, பாகிஸ்தானிய மற்றும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், இந்தியாவில் ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர்.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து, தங்கள் மதத்தின் அடிப்படையில் தங்களை அடையாளம் காணுமாறு மக்களிடம் கேட்டு, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேரைக் கொன்றனர், இது 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.
பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அருகிலிருந்தும், அவர்களது குடும்பத்தினர் முன்னிலையிலும், தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட விதம் குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதோடு அவர்கள் செய்தியை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வற்புறுத்தலும் இருந்தது.
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இந்தக் குழு ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு முன்னணி குழுவாகும்.
ஐ.நா.வின் 1267 தடைகள் குழுவின் கண்காணிப்புக் குழுவிற்கு, TRF பற்றிய உள்ளீடுகளை இந்தியா அரையாண்டு அறிக்கையில் மே மற்றும் நவம்பர் 2024 இல் வழங்கியது, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு பின்னால் இருக்கும் அதன் பங்கை வெளிப்படுத்தியது.
முன்னதாக, டிசம்பர் 2023 இல், TRF போன்ற சிறிய பயங்கரவாதக் குழுக்கள் மூலம் செயல்படும் LeT மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது குறித்து கண்காணிப்புக் குழுவிடம் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்த விஷயத்தில் ஏப்ரல் 25 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செய்திக்குறிப்பில் TRF பற்றிய குறிப்புகளை நீக்க பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிகழ்த்துவதில் பாகிஸ்தானின் நீண்ட பதிவு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கேள்விக்கே இடமில்லை. உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதிகளுக்கு சொர்க்கமாக, புகலிடமாக பாகிஸ்தான் தகுதியான பெயரைக் கொண்டுள்ளது. அங்கே சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பாக இருந்து சகல வசதிகளையும் அனுபவிக்கின்றனர்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஏப்ரல் 25, 2025 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டது, ‘இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களைப் பொறுப்பேற்று அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை’ அடிக்கோடிட்டுக் காட்டியது.
தாக்குதல்கள் நடந்து பதினைந்து நாட்கள் கடந்தும், அதன் பிரதேசத்திலோ அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திலோ உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானிடமிருந்து எந்த வெளிப்படையான நடவடிக்கையும் இல்லை.
மாறாக, அது செய்ததெல்லாம், மறுப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் கொண்டிருந்த கவனம் மட்டுமே. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத தொகுப்புகள் பற்றிய எங்கள் உளவுத்துறை கண்காணிப்பின்படி, இந்தியாவுக்கு எதிராக மேலும் அவர்கள் மூலம் தாக்குதல்கள் வரவிருப்பதைக் குறித்துக் காட்டியிருந்தது. எனவே அதைத் தடுக்கவும் முன்கூட்டியே தடுக்கவும் ஒரு கட்டாயம் ஏற்பட்டது.
அதற்கேற்ப இந்தியா பதிலளிப்பதற்கும், பயங்கரவாதத் தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கவும், இதுபோன்ற எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுக்கவும் அதற்குண்டான உரிமையைப் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கைகள், அளவிடப்பட்டவை, அதிகரிக்காதவை, விகிதாசாரமானவை, மற்றும் பொறுப்பானவை. பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதிலும், இந்தியாவிற்குள் அனுப்பப்படக்கூடிய பயங்கரவாதிகளை முடக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
உலகம் பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியின் மனைவி இந்திய இராணுவ பதிலடியை தனது மறைந்த கணவருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி என்று பாராட்டியுள்ளார். என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது, மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், எங்கள் நம்பிக்கையை அவர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்,” என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்
இந்திய ராணுவத்தின் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினர், நீதிக்கான வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆயுதப் படைகளுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான சுபம் திவேதி, தனது மனைவி மற்றும் மைத்துனியுடன் பஹல்காமிற்குச் சென்றிருந்தபோது, ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளான சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் தலையில் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்நிலையில் இன்று பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அளிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது மனைவி அஷான்யா திவேதி பேசினார். “இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவருக்கும், குறிப்பாக ஆயுதப் படைகளில் உள்ள எங்கள் பணியாளர்களுக்கும், குறிப்பாக நடவடிக்கையை தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர், கணவர்களை இழந்த எங்களுடன் அவர்கள் நிற்பதை தெளிவாகக் காட்டுகிறது. பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அது ஒழிக்கப்படும் என பிரதமர் என்ன சொன்னாரோ, அதை அவர் நிரூபித்தார். ” என்றார்.
மேலும்,, “பயங்கரவாதிகள் எங்களை பாதிக்கப் படக் கூடியவர்களாக மாற்றுவதற்காக எங்கள் கணவர்களைக் கொன்றனர், ஆனால் நாங்கள் போராடுவோம். பிரதமர் மோடி அவர் சொன்னது போல் பழிவாங்கினார், இந்த பயங்கரவாதிகள் முடிவுக்கு வருவார்கள்” என்று கூறினார்.
ஷுபாமின் சகோதரரும் இந்த விரைவான நடவடிக்கையை வரவேற்றார். “நாடு முழுமையும் மோடி ஜிக்கும் நமது ஆயுதப் படைகளுக்கும் நன்றி தெரிவிக்கிறது. யாராவது இந்த வழியில் நம் நாட்டை சவால் செய்தால், நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் நமது காயங்களுக்கு மருந்தாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
“அந்தத் தாக்குதலின் போது உயிர் இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் உண்மையிலேயே அஞ்சலி செலுத்துகிறது.” என்றார்.
ஷுபாமின் தந்தையும் அரசாங்கத்தின் உறுதியைப் பாராட்டினார். “அதிகாலை 2 மணியளவில் எனக்கு தகவல் கிடைத்தது. இந்திய அரசாங்கமும் ஆயுதப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. நாட்டுக்காகவும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்காகவும் பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி பயங்கரவாதத்தை அழித்துவிட்டார். நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.”
புதன்கிழமை அதிகாலை தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள ஒன்பது உயர் மட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புத் தளங்களை குறிவைத்தது. இந்திய ராணுவம் தாக்குதல்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற துல்லியத்துடன் நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தானில் உள்ள எந்த பொதுமக்கள் அல்லது இராணுவ நிலைகளையும் பாதிக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தியது.
பகல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளாவின் ராமச்சந்திரனின் மகள் ஆரத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்ததற்காக இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார். தனது தாயின் சிந்தூரைக் (குங்குமத்தைக்) கைப்பற்றியதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த நடவடிக்கைக்கு #OperationSindoor என்ற சரியான பெயரை வழங்கியதற்காக படைகளைப் பாராட்டினார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது பாரத ராணுவத்தின் விமானப்படை துல்லிய தாக்குதலை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒன்பது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் பயங்கரவாத முகாம்களை மட்டுமே மையமாக வைத்து நடத்தப்பட்டது என்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதோ பாகிஸ்தான் பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் பாரத ராணுவம் தெளிவாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரத ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் உட்புறப் பகுதியில் இந்த துல்லிய தாக்குதல் விமானப்படையின் மூலம் நடத்தப்பட்டுள்ளது. கோட்லி, பஹ்வல்பூர், முசாபர்பாத், பர்னாலா உள்பட மொத்தம் 9 பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளது பாரத ராணுவம். இந்தத் தாக்குதல் மூலம் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பயங்கரவாத முகாம்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் அழிக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதத்தின் இந்த நடவடிக்கைக்கு சூட்டப்பட்ட பெயர் பலர் கவனத்தையும் ஈர்த்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பாரதம் முழுவதும் பரவலாக மக்கள் தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது பாரத ராணுவம் மேற்கொண்ட மிகச் சரியான பதிலடி நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் ஏன்?
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’. திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள கண் எதிரில் அவரவர் கணவன் சுட்டுக்கொல்லப்பட்டு தங்கள் நெற்றி வகிட்டுக் குங்குமத்தை இழந்தனர்.
எனவே பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, பாரத ராணுவத்தின் இந்த பதிலடி நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என பெயர் வைத்துள்ளனர்.
முக்கியமாக, இந்த நடவடிக்கை நடந்த நேரம், நடந்த விதம் உலகை ஆச்சரியப் படுத்தியுள்ளது. போர்க் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து, முந்திய நாள் நள்ளிரவிலேயே அதிரடியாக தாக்குதலை தொடங்கி அசத்தியது பாரத ராணுவம்.
பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டு இன்று நாடு தழுவிய போர்க் கால ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போர்க் கால ஒத்திகைக்கு முன்பே இந்திய ராணுவம் மே.7 இன்று நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இது எவருமே எதிர்பார்க்காத ஒன்று.
பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால் அதன்பின் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அல்லது சில நாட்கள் கழித்தே போர் தொடங்கும். அதுபோன்றுதான் இன்று நடைபெறும் போர் ஒத்திகைக்குப் பின்னரே இந்தியா போரைத் தொடங்கும் என பாகிஸ்தான் நம்பியிருந்த வேளையில், பாரத ராணுவம் மிகவும் சாதுர்யமாக பாகிஸ்தானை ஏமாற்றி இரவோடு இரவாக பாகிஸ்தான் , மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் துல்லியத் தாக்குதலாக, விமான மூலம் குண்டுகளை வீசியுள்ளது. தங்கள் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது நடந்த இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான நிலை குலைந்து போயுள்ளது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தினார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது. இதை அடுத்து, பாகிஸ்தானில் லாகூர், சியல்கோட் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
பெண்களுக்கான நீதி நிலைநாட்டப்பட்டது
இதனிடையே, இந்த பதிலடி சம்பவத்தில் நீதி நிலைநாட்டப் பட்டுள்ளதாக பாரத ராணுவம் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.அதில் பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவநிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! நீதி நிலைநாட்டப் பட்டுள்ளது ; ஜெய்ஹிந்த் என பதிவிடப்பட்டிருந்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வெளியுலகுக்கும் நாட்டுக்கும் இந்தச் செய்தியைச் சொல்வதற்காக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஊடகத்தினரை அழைத்து, விளக்கம் அளித்தார். அவர் ”பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் ” என கடுமையாக சாடினார்.
இன்று காலை 10.30க்கு மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். இதில் மத்திய அரசின் தரப்பு விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. செய்தியாளர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.
இதில் விக்ரம் மிஸ்ரி கூறியபோது, “பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம்.
பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான். பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டது.
மத மோதலைத் தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது; பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாத பாகிஸ்தான் அரசு அவர்களை ஆதரிப்பது உலகத்துக்குத் தெரியும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்; அதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்த சர்ஜால் சாய்ல்கோட் முகாம் அழிக்கப்பட்டது. பதான்கோட் தாக்குதலுக்குத் திட்டம் வகுக்கப்பட்ட மெஹ்மூனா ஜோயா முகாம் அழிக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கான பயிற்சி கொடுத்த மார்கஸ் டைபா முகாமும் தகர்க்கப்பட்டது. அஜ்மல் கசாப் பயிற்சி எடுத்தது இங்கு தான். முசாபராபாத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயிற்சி மையம் குறிவைத்து அழிக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.
மகளிர் சக்தியின் குறியீடு
இதன் பின்னர், செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்த பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்தத் தாக்குதல் குறித்துக் கூறிய போது, “21 பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மும்பை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர்.
பெண்களின் மீதான உளவியல் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை அழிக்கும் ‛ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாரத ராணுவம் மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டுள்ளனர். இதனை வெளிப்படுத்தவே பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்தது பாரத ராணுவம். இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் அதற்கு அடையாளமாக முன்னிறுத்தப் பட்டனர்.
குறிப்பாக, பஹல்காம் தாக்குதலில் ஹிந்து ஆண்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று, ஹிந்து பெண்களை தங்கள் சிந்தூரை (குங்குமத்தை) இழக்க வைத்தனர். ஹிந்து மத வழக்கப்படி பெண்கள் நெற்றியில் திலகம் (சிந்துார்) இட்டுக்கொள்வது வழக்கம். பயங்கரவாதிகளின் கொடூரச் செயலால் இந்த ஹிந்துப் பெண்கள் திலகத்தை இழந்தனர். இந்தக் கொடுமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ‛ஆபரேஷன் சிந்துார்’ என இந்தத் தாக்குதலுக்குப் பெயரிடப்பட்டது.
இது தொடர்பில் மத்திய அரசு வெளியிட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையின் ஆங்கில எழுத்துகளில் ‘O’ என்ற எழுத்து குங்கும டப்பா வடிவத்திலும், அந்த டப்பாவிலிருந்து குங்குமம் சிதறிக் கிடப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக முதலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பாரதம், சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. Operation Sind Or Operation Sindoor என இந்த இரண்டு நடவடிக்கைகளையும் மையமாக வைத்து கருத்துகள் பகிரப்பட்டன.
முக்கியமாக, பேடித்தனமாக பெண்களை விதவைகளாக்கிய பயங்கரவாதிகள் மீது அச்சம் என்பதை அறியாத எங்கள் நாட்டு பெண்கள் தாக்குவார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் பாரதம் செயல்பட்டுள்ளது. இதன் குறியீடே, பெண்களை வைத்தே தாக்குதல் நடந்தது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வீராங்கனைகள்!
இவர்களில் ராணுவ கர்னல் சோபியா குரோஷி குஜராத்தைச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டம் பெற்றவர். ராணுவ குடும்பப் பின்னணி கொண்டவர். தற்போது கர்னல் அதிகாரியாக உள்ளார். அவரின் தாத்தா பிரிட்டிஷ் கால இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையும் ராணுவத்தில் சேவை புரிந்துள்ளார். ராணுவ குடும்பம் என்பதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே ராணுவக் காற்றை சுவாசித்தவர். 1999ம் ஆண்டு ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி, ராணுவ தகவல் தொழில்நுட்ப படைப்பிரிவின் கர்னலாக இருக்கிறார்.
இவர், 2006 காங்கோவில் ஐ.நா., அமைதி காக்கும் பணியில் செயலாற்றினார். பஞ்சாப் எல்லையில் பராக்ராம் ஆபரேஷனில் இடம்பெற்றார். 2016ல் சர்வதேச ராணுவ பயிற்சியின் போது உலகம் முழுவதும் மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்றன. அதில் இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி இவர்.
இன்னொருவர், விங் கமாண்டர் வியோமிகா சிங். இவர், 2004ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பின்னர் பைலட்டாக பயிற்சி பெற்றார். ஹெலிகாப்டர்களை இயக்குவதில் வல்லமை பெற்றார். மீட்புப் பணிகள், பேரிடர் காலங்கள், மற்ற முக்கிய ஆபரேஷன்களில் ஹெலிகாட்பர்களை திறமையாக இயக்கி கவனம் பெற்றார். 2017ல் விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். விமானப் படையில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக இருப்பவர் இவர்.
வியோமிகா என்றால் காற்று என்று பொருள்படுமாம். அதன்படி, வாயு வேகத்தில் செயலாற்றி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
அன்று மோடியிடம் போய் சொல்ல என கோழைத்தனமாக…. அப்பாவி பொதுமக்களை தாக்கிவிட்டு பேடித்தனமாக சுவர் ஏறி குதித்து ஓடிப்போனவர்களை… அவர்களை தயார்படுத்தியவர்களை… ஆதரித்தவர்களை…. அவர்களுக்கு உச்ச பட்ச பாதுகாப்பு அளித்தவர்களை…
அவர்கள் வாழ்ந்த பகுதியில் வைத்தே ., அங்கு உள்ள அப்பாவி பொதுமக்களுக்கு கொஞ்சம் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல்…. துல்லியமாக இருந்த இடத்தில் இருந்தே தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறார்கள் நம்மவர்கள்.
ஒரு பாகிஸ்தானிய பிரஜை கூட இந்த தாக்குதலில் கொல்லப்படவில்லை……ஆன போதிலும் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை தாண்டிடும் இன்று இரவு பொழுதிற்குள் என்கிறார்கள்..
அப்படி என்றால் இவர்கள் அத்தனை பேரும் தீவிரவாத அமைப்பை சேர்க்கைகள் என அடித்து கூறுகிறார்கள்.
பாகிஸ்தானிய தரப்பில் எதிர்பார்த்தது ஒசாமா பின் லேடனை வேட்டையாடியது போலான தாக்குதல் சம்பவத்தை…. அதற்கு உதாரணம் இந்த இறப்பு விகிதம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தான் பார்த்து பார்த்து செய்து வைத்து விட்டு காத்திருந்தார்கள்.
அப்படி யாரெல்லாம் பாதுகாத்து வந்தது பாகிஸ்தான்……..????
இதில் யாரெல்லாம் கொல்லப்பட்டு இருப்பதாக உளவு தகவல்கள் சொல்கிறது….???
காந்தகார் விமான கடத்தல் சம்பவம் ஞாபகம் இருக்கின்றதா….!!! அதில் மூளையாக செயல்பட்ட மஸூத் அஸார், தற்போது ஜெய்ஷிரி முகம்மது இயக்கத்தின் தலைவன்…அந்த இயக்கத்தின் உயிர் நாடி இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவத்தில் உருக்குலைந்து உருகி ஆவி ஆகி இருக்கிறான்.
சுமார் ஆயிரத்து நூறு கிலோ எடை கொண்ட ஏவுகணை அது. அவன் உருவாக்கி பராமரித்து வந்த மசூதி ஒன்றில்…. அவனது மேற்பார்வையில் இயங்கி வந்த மதராஸா கட்டிடத்தோடு மொத்தமாக அழித்தொழித்திருக்கிறார்கள்.
வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசை தலை குனிய வைத்த நிகழ்வு அது. IC 814 எண் கொண்ட அந்த பயணிகள் விமானத்தை கடத்தி சென்று, இந்த தீவிரவாதியை தான் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு சென்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
24 நிமிடங்கள்
23 ஏவுகணைகள்.
9 இடங்களில் 5 பாகிஸ்தானிலேயே வருகிறது. இன்று மட்டும் ஒன்றேகால் மணியளவில்… அதிகாலையிலேயே பாகிஸ்தானில் சூரியன் உதித்தது. ஏவுகணை வெடித்து பற்றி எறிந்த தீப்பிழம்பு செஞ்சூரியனையே விஞ்சியது காணொளி காட்சிகளில் மிகத் தெளிவாக தெரிந்தது.
மணமான ஒரே வாரத்தில் தனது திலகத்தை இழந்து நின்ற….. இந்தியக் கொடி போர்த்திய பெட்டி முன் அலறலாய் வெளிப்பட்ட ஜெய்ஹிந்த் என்கிற அந்த பெண்ணின் குரல்…. இன்றைய தாக்குதல் சமயத்தில் பலரது யாஹல்லா என்கிற தீனமான குரல்… நிச்சயமாக மருந்திடத்ததாக அமைந்திருக்கும். அதில் சந்தேகமேயில்லை.
அவரை ஏன் உலகத் தலைவர் என்கிறோம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். தன் குடிகளுக்கு எது தேவையோ… அதனை அது தேவைப்படும் சமயத்தில் என்ன விலை கொடுத்தேனும் கொண்டு வந்து தருகிறார்.
பங்கர் பஸ்டர் குண்டுகள்…
ஸ்கால்ப் ஏவுகணைகள்…. இன்னமும் எண்ணற்ற அதி நவீன ஆயுதங்களை கொண்டு… சொல்லிச் சொல்லி அடித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு ரஃபேல் விமானங்கள் தான் பிரதான பங்கு வகித்திருக்கிறது. ஆளில்லா உளவு விமானங்கள் முதற்கொண்டு தற்கொலை ட்ரோன்கள் வரை டஜன் கணக்கில் இறக்கி இருக்கிறார்கள்.லஷ்கர் ஈ தொய்பா முகாம்களை சேர்ந்த முக்கியமான தலைகளில் கிட்டத்தட்ட பதினைந்து பேரை தூக்கி இருக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த தாக்குதல் சம்பவம் ஆக்ரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்.
தாக்குதல் நடத்தியது… தாக்குதலுக்கான திட்டமிடல்… அத்தனையும் உலகத் தரம். நாளைய உலகில் பாடமாக வைத்து படிக்க இருக்கும் அளவிற்கு ஆகச் சிறந்த வழிகாட்டல் இது.
இன்றைய தினம் நாடு முழுவதும் சுமார் 284 இடங்களில் போருக்கான பாதுகாப்பு ஒத்திகை நடக்க இருப்பதாக அறிவித்துவிட்டு நல்லிரவில் இறங்கி அடித்தாடி இருக்கிறார்கள். அத்தனையும் துல்லியமான தாக்குதல். அவ்வளவும் ஆகச் சிறந்த உளவு தரவுகள்.
இத்தனைக்கும் ….
இதனை எந்த ஒரு இடத்திலும் அலட்டலாக அறிவிக்கவில்லை. அது தான் சாமர்த்தியம்.அதேசமயம் இதனை தாக்குதல் நடத்திய இரண்டு பெண்கள்… ஆம் நம் இந்திய வீராங்கனைகள் தான் வழி நடத்தி இருக்கிறார்கள்… அவர்களை கொண்டே இதனை அறிவிக்க செய்து அசரடித்திருக்கிறார்கள்.
அவர்கள்…. இந்த ஆப்ரேஷன் ஸிந்தூர் நடத்தி காட்டியவர்கள் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோம்கா சிங்.
அவர்கள் ஜென்மத்திற்கும் இதனை மறக்க மாட்டார்கள். கூப்பிட்டு வைத்து கன்னத்தில் அறைந்திருந்தாலும் இத்தனை விசனப்பட்டு இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொண்டுள்ள மதச் சிந்தனை அத்தகையது.
மனோதத்துவத்தில் மகோன்னத விதத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
இனி பாகிஸ்தான் பதில் தாக்குதல் என ஏதேனும் செய்ய நினைத்தால் அது அவர்களுக்கு அடுத்த அடி ஒவ்வொருவரின் பிட்டத்திலேயே விழும். அநேகமாக இதை அங்கு உள்ள பெண்களே செய்திட கூடும். இது இன்னமும் அசிங்கம் அவர்களுக்கு.
அப்படி ஒரு ஆட்டம் இது.
இந்த சூட்சுமம் இங்கு உள்ள பலருக்கு புரியவில்லை. 25+1 உயிர்களுக்கு பதிலடிக்கு ஏன் இத்தனை பெரிய செலவு என்கிறார்கள் விஷயம் புரியாத ஞான சூன்யங்கள். நம்மவர்கள் பதிலடி கொடுக்கவில்லை….. பதில் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அது உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக…..இனி எவன் ஒருவனும் மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்களில் அத்தனை சுலபத்தில் இறங்கி விட மாட்டார்கள்.
இன்னமும் சரியாக சொல்வதென்றால்….. அமைப்பு ரீதியாக மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்திவிட்டு ஓடி விட முடியாது. அவர்கள் எங்கு சென்றாலும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ….வந்து உதைப்போம் என்கிறார் இவர்.
அமைப்பு ரீதியாக இல்லை என்றால்….. அடுத்ததாக தேசத்தை முன்னிறுத்தி…. அதாவது தான் இந்த தேசத்தவன் என்பதாக அறிவித்துக் கொண்டோ அல்லது அந்த தேசமோ நேரிடையாக களத்தில் இறங்கி நின்றால்……
அப்படி நிற்பதற்கு மட்டுமே தற்சமயம் சாத்தியம் உள்ளதாக மாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள், நம்மவர்கள்.
உதாரணத்திற்கு….. ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டவர்களை யாராக அடையாளம் காட்ட முடியும்.????
அமைப்பா அல்லது தேசமா…
அமைப்பு என்றால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்பை பாகிஸ்தான் பராமரிக்கிறது என்றாகும்.
தேசம் என்றால் பாகிஸ்தானிய பிரஜையாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவதற்கு அந்த தேசமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இப்போது என்ன செய்ய முடியும் பாகிஸ்தானால்.
எது செய்தாலும் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும்…. காரணம் தற்சமயம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சுழல் முறை தலைவர் பதவியில் பாகிஸ்தான் இருக்கிறது.
ஆக தடம் பார்த்து தட்டி இருக்கிறார்கள்.
சாணக்யா தேசம் என்பதை மீண்டும் ஒரு முறை மெப்பித்திருக்கிறார்கள்.
சரி……. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் எந்த ஒரு பதில் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றாலும் அப்போதும் வெற்றி நமதே…. எவ்விதம் எனில்….. அவர்கள் மறைமுகமாக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மதத்தின் பெயரால் அடைக்கலம் கொடுத்தது ஊர்ஜிதம் ஆகி விடும். ஆக இஸ்லாம் இனிய மார்க்கம் என யாரும் இனி வரும் நாட்களில் அத்தனை சுலபத்தில் சொல்லிட முடியாது.காரணம் பாகிஸ்தானிய பிரதமர் தன்னை இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தானியர் என அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
அடுத்ததாக வரும் 23 ஆம் தேதிக்கு முன்னதாக மீண்டும் ஒரு சம்பவம் இருக்கிறது என பூடகமாக…. விஷயம் அறிந்த வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.
இன்றைய தினம் பாகிஸ்தானில்… பங்கு வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்கள் பலத்த சரிவை சந்தித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தனிக் கதை.
பொருளாதார ரீதியாக இது மிகப் பெரிய அடி. எல்லையில் நம்மவர்கள் பலத்த இடி கொடுத்து இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் திமிறும் என்றா நினைகின்றீர்கள்…….?????
இன்றைய சம்பவம்
காயத்திற்கு வெறும் மருந்து மட்டுமே. நாட்பட்ட வியாதிகளுக்கு தரமான மருத்துவ சேவை வரும் நாட்களில் இருக்கிறது.
“ஆப்ரேஷன் சிந்தூர்” எனும் வெற்றி செய்தியை கேட்டு பெருமிதப்படுகிறோம். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கும் வீரதீர செயல் செய்த இந்திய இராணுவத்திற்கு இந்து முன்னணியின் வீர வணக்கம். பாரத இராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
கடந்த ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி பஹல்காமில் சுற்றுலா வந்த 26 அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால் நாடே சோகத்தில் உறைந்திருந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது பாரத இராணுவம் நேற்று “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் அனைவரும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உணர்ச்சிகளை தூண்டக்கூடிய வகையில், விமர்சனம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலோ, கேட்டாலோ அதன் உண்மை தன்மையை அறியாமல் பகிர வேண்டாம். வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கருத்து மோதல்கள் உருவாகி வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் விஷயத்தில் இணையத்தில் கருத்து சொல்வதை தவிர்ப்போம்.
கடந்த காலங்களில் நமது தேசம் அண்டை நாடுகளுடன் போர் புரியும் போது எத்தகைய சூழல்களில் ஒத்துழைப்பு கொடுத்தோமோ அதைவிட நூறு சதவீதம் இப்பொழுதும் ஒத்துழைப்பு கொடுப்போம்.
அதேபோல நமது இராணுவத்தை பற்றியோ, தேசத்தை பற்றியோ தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் உடனடியாக நேரிலோ, தொலைபேசி மூலமோ, இணைய வழியிலோ தேசிய புலனாய்வு முகமையில் புகார் அளிப்போம். அதேபோல இன்று நாட்டின் பல மாவட்டங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நமது ராணுவத்திற்கு வலு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லோரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பாகிஸ்தான் இராணுவம் பாரதத்தை திரும்ப தாக்க வேண்டும். பயங்கரவாதிகள் கொண்டு தாக்க கூடாது. அப்போதுதான் இது முழு யுத்தமாக மாறும்.
வெறுத்துப் போய்விட்டது சமாதானம் பேசிப் பேசி. இவர்களுக்கு என்ன செய்தாலும் புத்தியே வரப்போவதில்லை. இவர்களை வைத்துக்கொண்டு உள்ளூரில் எச்சக்கலை நாய்கள் செய்யும் அரசியலும் சகிக்கவில்லை.
அதனால் பயங்கரவாதிகள் என்று எதுவுமே இருக்க வேண்டாம். ஆயுத பொருளாதாரமும் இதை உத்தேசித்து தான் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் இன்னும் பல மேற்கத்திய நாடுகளும் பாகிஸ்தானுக்கு பணம் கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதை அவர்களே ஒப்புக்கொண்டு உள்ளார்கள்.
எவ்வளவு அதிகமாக அழிக்க முடியுமோ அழித்து விடுவோம். இதனால் நம் மீதும் சில தாக்குதல்கள் ஏவப்படலாம். நமது தரப்பிலும் சில அழிவுகள் ஏற்படலாம். பாதகம் இல்லை. அதை நாம் எப்படியோ சமாளித்துக் கொண்டு விடுவோம். காரணம் 1400 ஆண்டுகளாக மாபெரும் அழிவுகளை சந்திப்பதற்கு பதில் இந்த கடைசி முறையாக ஒரு அழிவை சந்தித்து விட்டு எதிரியை மொத்தமாக முடித்துவிட்டு இனி எதிரியில்லை எனும் நிலைமைக்கு கொண்டு போய் விட்டு அதன் பிறகாவது நிம்மதியாக வாழ்வோம்.
அவர்கள் கூறுகிறார்கள் மரணத்துக்கு பிறகு தான் தங்களுக்கு வாழ்வு ஆரம்பிக்கிறது என்று. அதை அவர்களுக்கு அளித்து விடுவோம். போதும் இந்த வாழ்வா சாவா போராட்டம்.
அப்பாவி உயிர்கள் என்று எதுவுமே கிடையாது. அப்படி அப்பாவிகளாக அங்கு இருப்பவர்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எப்போது எதிரி பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிகிறதோ அப்போதே அவர்களும் எதிரிகளாக ஆகிவிட்டார்கள். பெற்றுக் கொடுக்கும் போது எதிரிகளாக தெரியாதவர்கள் எப்படி கொலை செய்யப்படும்போது மட்டும் அப்பாவிகளாக தெரிகிறார்கள்?
தேவையே இல்லை அப்படி ஒரு அப்பாவி. எல்லோரையும் மொத்தமாக முடித்து விடுங்கள். எல்லோருக்கும் சேர்த்து வேண்டுமானால் பிண்டம் வைத்து விடுவோம்.
ஆனந்த் வெங்கட்
பஹல்பூருக்கு பதில் பஹவல்பூர் – மசூத் ஆசாத்தின் ஃபேமிலி 14 பேர் மர்கயா!
பாகிஸ்தானின் மிக பாதுகாப்பான சில இடங்கள் என்றால் “மர்கஸ் சுப்ஹான் அல்லா” என்ற பஹவல்பூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான ஒரு ட்ரெய்னிங்க் கேம்ப் மற்றும் லஸ்கரின் தலைமை அலுவலகம்.
கிட்டத்தட்ட 100 ரூம்களுக்கு மேல் Spa, நீச்சல் குளம், தியேட்டர், ட்ரெய்னிங், ரகசியமான பங்கர்கள், ஆலோசனை தளங்கள் முதல் எமெர்ஜென்ஸி ஹாஸ்பிடல் வரை அங்கே உள்ளது. மசூத் ஆசாத் தொடர் டயாலிஸ் செய்யப்படும் நோயாளி, அவனுக்கு அங்கே மருத்துவம் பார்க்கும் அளவிற்கு எமெர்ஜென்ஸி மருத்துவ வசதிகள் உண்டு!
இதற்கு சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பும், ரேடார் பாதுகாப்பும் உள்ளது. இதை இந்தியாவில், ராஜஸ்தானில் உள்ள பிஹானூரில் இருந்து ரஃபேல் விமானத்தால் ஏவப்பட்ட ஏவுகணை 102 கிமீ தாண்டி சென்று தாக்கியுள்ளது.
இதில் தாக்குதல் கேட்டு அக்கப்பக்கத்தில் செய்தி பரவி சைக்கிளில் கூட பார்க்க வந்துவிட்டார்கள், ஆனால் சீனாவின் வான்பாதுகாப்பு சிஸ்டத்திற்கு இன்னும் விஷயம் தெரியவில்லை.
இது தற்போதைய மிக மோசமான நிலை என்பதால் சீனா தனது பாதுகாப்பு சிஸ்டத்தை பயன்படுத்தியதாக சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதில் மசூத் ஆசாத்தின் குடும்பத்தில் அவனது சகோதரி உற்பட 14 பேர் மர்கயா! இந்த பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டதா? அதில் ஆசாத்தின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் PoK கில் பறந்த JF-17 விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். இது ஒற்றை எஞ்சின் விமானம் என்பதும், மூக்ககுப்பகுதி கருப்பாக இருப்பதால் சீனாவின் JF-17 ஆகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் பாகிஸ்தான் இந்தியாவின் விமானம் என்கிறது. இந்தியாவின் மிராஜ் ரக விமானம் மட்டுமே அதுபோல உள்ளது. நம் விமானம் இந்திய எல்லையை கடந்து செல்லவில்லை, என்பது மட்டுமல்ல, நமது அனைத்து விமானமும் திரும்ப தரை இறங்கிவிட்டது என்ற இந்திய ஏர்ஃபோர்ஸ் உறுதி செய்துள்ளது.
அதாவது சீனாவின் எந்த பொருளும் நம்பும்படியாக இல்லை என்பது மீண்டும் உறுதிபட்டுள்ளது.
இது LeT தலைமையகம் மட்டுமல்ல மற்ற தீவிரவாரகளின் தலைமையகமும் தரைமட்டமாகி இருக்கிறது. மொத்தம் 9 இடங்கள், 21 இடங்கள், அதில் 9 இடங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாரிகளின் தலைமை அலுவலகங்கள்.
அதகளம் பண்ணியிருக்கிறார்கள் நம்மவர்கள். ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் துல்லியமான தாக்குதலை நடத்தியது நம் இந்திய விமானப் படை விமானங்கள்.
ஜெய்-ஷி-முகமது, லஷ்கர் ஈ தொய்பா முகாம்களை அடித்து தொம்சம் செய்திருக்கிறார்கள். நம் பக்கத்தில் எந்த ஒரு சேதாரமும் இல்லை.
அதேசமயம் பக்கிகள் ஏகப்பட்ட தவறான தகவல்களை தற்சமயமே பரப்பிப்கொண்டு வருகிறார்கள் .
பாகிஸ்தானிய பிரதமர் ஷப்பா ஷெரிப் இந்திய ராணுவம் ஐந்து நிலைகளை தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டிய நிலையில் நம் இந்திய தரப்பில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டபடி 9 இடங்களை நம் இந்திய நிலப்பரப்பில்…. இந்திய வான் பகுதியில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தி அதிரடித்திருக்கிறார்கள்.
அட்டகாசமான நகர்வு இது.
ஏனெனில் இன்றைய தினம் இந்தியா முழுவதும் அதி உஷார் நிலைக்கு கொண்டு சென்று போர்க்கால யுத்த ஒத்திகை பார்க்க உத்தரவு கொடுத்தவர்கள்….. இன்று அதிகாலை நேரத்திலேயே பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அங்கு சேதாரம் அதிகம் என்கிறார்கள்.
யுத்த காலத்தில் எதிர்ப்பாராத நேரத்தில் எதிர்ப்பாராத இடத்தில் பலமாக தாக்குதல் நடத்துவது தான். அதனை மிக செம்மையாக செய்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
போதாகுறைக்கு,
குறித்த நாளில்…
குறித்த நேரத்தில் வெகு துல்லியமான தாக்குதலை LOC யில் நடத்தி அசரடித்திருக்கிறார்கள்.
அங்கு… அவர்கள் தரப்பில் இருந்து நம்முடைய இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு சேதாரமும் நம் பக்கத்தில் இல்லை.
பஞ்சாப் மாகாணத்தில் யுத்த கால அவசரநிலை பிரகடனம் செய்து இருக்கிறார்கள் அவர்கள்.
இது ஒரு புறம் இருக்க…..
தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள் அமைப்புக்கள் மீது தான். பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் மீதல்ல என்பதை நம் தரப்பில் இருந்து வெளியிட்ட தகவலில் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
அதாவது போர் அறிவிப்பு ஏதும் நம் பக்கத்தில் இருந்து வெளியிடவில்லை என்பது இதன் அர்த்தம்.
இன்னமும் நுட்பமாக சொன்னால்…… நீங்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி எங்களுடையது. அங்கு கூடாரம் அமைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய அரசு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் தேவையில்லாமல் நீங்கள்… அதாவது பாகிஸ்தான் ராணுவம் தலையிடுமானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என நேரடியாக, அதேசமயம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அப்படி என்றால் இது ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலவா என்றால்……. அதில் தான் விஷயமே இருக்கிறது.
எப்படி….?!?!?
தற்சமயம் இங்கு ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வந்தால் அது போர். ஒருவேளை திருடனுக்கு தேள் கொட்டிய கதை என பேசாமல் இருந்தால்…. மீதமுள்ள 31 இடங்கள் தாக்க மீண்டும் ஒரு முகூர்த்தம் நிச்சயக்கப்படும்.
இனி இது பாகிஸ்தானுக்கான செக்-மேட்.
ஒடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதேசமயம் எந்த ஒரு நடவடிக்கைகளையும் அத்தனை சுலபத்தில் எடுக்க முடியாது.
என்ன செய்தாலும் அடி பலமாக விழும். முதுகெலும்பு முறுயும்.
இது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்… சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம் இது வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
நம் தரப்பில் இதற்கு ஆப்ரேஷன் ஸிந்தூர் என இதற்கு பெயர் கொடுத்து இருக்கிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது , ஜெய் ஹிந்த்….என நம் தரப்பில் மிக சுருக்கமாக செய்தி வெளியிட்டு முடித்துக் கொண்டார்கள் நம்மவர்கள்.
வேறோர் விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இது ஏற்கனவே நம் பதிவில் பார்த்தது போல கோச்சார ரீதியில் குறித்த நாளில் தாக்குதல் நடத்தி இருப்பது தான். நிச்சயமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தாது. மீறி நடத்தினால் அது இருக்காது.
அந்த அளவிற்கு மிக மிக துல்லியமான உளவு தரவுகள்… கால நிலை என அத்தனையும் கவனித்தில் கொண்டு கன கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். அதேசமயம் தந்த்ரோபாயமாக மிக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு கொடுத்திருக்கும் பெயர் இன்னமும் துல்லியமானது…. தரமானது. ஆபரேஷன் ஸிந்தூர். இதற்கு வெற்றி திலகம் என்றும் ஒரு பொருள். அதேசமயம் நம் இந்திய தேசத்தின் நெற்றி திலகம் போன்ற இடத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் நடவடிக்கை என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்
மகளிர் சக்தியே பதிலடி!
இந்தியா இன்று நடத்திய பாகிஸ்தான் மீதான துணிகரமான தாக்குதலுக்கு பெண் வீராங்கனைகளை களமிறக்கியிருக்கின்றது இது பல பதில்களை மிக அர்த்தமாக தருகின்றது
முதலாவது இந்து பெண்கள் குங்குமம் இழந்த கொடிய தீவிரவாதத்துக்கு பதிலடி, காஷ்மீர் பஹல்ஹாமில் சித்திரை மாதம் 9ம் தேதி அதாவது ஏப்ரல் 22ம் தேதி அன்று நடந்த பெரும் தாக்குதலில் இந்து பெண்களின் கதறலுக்கு இந்து பெண்கள் மூலமாகவே பதிலடி கொடுத்து சதிகாரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள் என்பது
இரண்டாவது இது உலக அரங்கில் இந்திய ராணுவத்துக்கு நற்பெயரை பாதுகாக்கும், பெண்களை களமிறக்கி பெண்களுக்கு எதிரான அநீதியினை இந்தியா ஒடுக்குகின்றது என்பது உலக அரங்கில் தனி கவனமும் சலுகையும் பெற்றுதரும்
மூன்றாவது இந்திய ராணுவத்தின் வலிமையான பெண்கள் படை பிரிவு எந்த நாட்டுக்கும் சளைத்தல்ல, இந்தியா பெண்களுக்கு பெரும் இடம் கொடுக்கும் நாடு எனபதை சொல்லி, பாகிஸ்தானை ஒடுக்க பெண்களே போதும் என முகத்தில் அறைந்து சொல்லியிருக்கின்றது
இது நிச்சயம் வரலாற்று புரட்சி
இரு பெண் தளபதிகள் அங்கே அப்படி அறிமுகபடுத்தபடுகின்றார்கள் இவர்கள்தான் தாக்குதலை முன்னின்று செய்தவர்கள்
ஒருவர் சோபியா குரேஷி வயது 35, இவர் குஜராத்தின் வதோரா பகுதியினை சேர்ந்தவர், பயோ கெமிஸ்ட்ரி படிப்புடன் ராணுவத்துக்கு வந்தவர் தன் தனி தைரியம் மற்றும் திறமையால் ராணுவத்தை அசரவைத்து பெரும் இடம் பிடித்தார்
இது அவருக்கு எளிதாக வந்த இடமல்ல, 18 ஆண் தளபதிகளுடன் போராடி தன்னை பல களங்களில் நிருபித்து பெற்ற இடம்
இரண்டாம் பெண் வியோமிக்கா சிங், இவர் உத்திரபிரதேச பக்கம் சார்ந்தவர் என அறியபடுகின்றது, பட்டபடிப்புடன் இந்திய ராணுவ பைலட் பணிக்கு வந்தவர் சுகோய் 30 போன்ற நவீன விமானங்களை வழிநடத்தும் பயிற்சி பெற்றவர் வயது 34 என்கின்றன செய்திகள்
வயோமிக்கா என்றால் காற்று என பொருள்
35 ஆயிரம் அடி உயரத்தில் மின்னல் வேக போர் விமானத்தை கையாள்வது கடினம் அதனை அனாசயமாக செய்திருக்கின்றார் இப்பெண்
இவர்கள் இருவர்தான் இந்த திட்டத்தை வரைந்திருக்கின்றார்கள் , இங்கே மனித உளவு தகவலும் கைகொடுத்திருக்கின்றது
திட்டம் உறுதி செய்யபட்டவுடன் நள்ளிரவு தாக்குதலை, மிக கடினமான இத்தாக்குதலை எளிதாக செய்து முடித்திருக்கின்றார்கள்
இப்போது இந்திய ராஜதந்திரி விக்ரம் சிங்குடன் இருவரும் பத்திரிகைகளுக்கு அறிமுகமானார்கள். உலகம் கைதட்டி வரவேற்கின்றது
பாகிஸ்தானுக்கு இதைவிட அவமானம் வாழ்நாளில் இருக்கவே முடியாது, அந்த தீவிரவாத கூட்டத்துக்கும் இருக்க முடியாது
இது நாயகி தேவி, ஜீஜாபாய், ராணி வேலுநாச்சியார் , தாரபாய் வாழ்ந்த மண் என்பது மீண்டும் உலகுக்கு நிருபிக்கபட்டிருக்கின்றது
இந்த பெண்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன, பாரத தேசம் இப்பெண்களால் பெருமை அடைகின்றது
மோடியின் ஆட்சி அப்படியானது என்பதை உலகம் கைதட்டி வாழ்த்துகின்றது, பாரத பெண்கள் குலம் இன்று பெரும் இடத்தில் நிர்கின்றது
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஓது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப் புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே! மாற்றி வையம் புதுமை யுறச்செய்து மனிதர் தம்மை அமர்க ளாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல் அருளி நாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்”
அவன் ஆன்மா இன்று ஆனந்த பெருவுகை கொண்டிருக்கும்
பாரதியின் குரு சுவாமி விவேகானந்தர் சொல்வார் “எங்கள் மத பெண்கள் அறிவும், திறமையும் மிக்கவர்கள். எங்கள் சம்பிரதாயத்தில் ரிஷிகள் கூட மனைவியோடுதான் யாகங்கள் செய்வார், சமயத்தில் ரிஷிகள் மந்திரத்தை மறந்தால் கூட மனைவிதான் சொல்லி கொடுப்பாள்
அதாவது பெண் என்பவள் சக்திவாய்ந்த பின்னணி, ஆண் தடுமாறும்போது தாங்கி பிடிப்பவள்
இதனால்தான் எங்கள் தர்மம் ஆண்களை முன்னிறுத்தி பெண்களை பின்னால் வைத்தது, அதன் பெயர் அடிமைதனம் அல்ல, பெண் ப்லவீனமானவள் என்பதால் அல்ல , மாறாக அவளே பலமிக்கவள் ஆண் வீழ்ந்தாலும் அவனை விட மனதால் அறிவால் மிக்க பலமான அவள் வெற்றிய்னை தேடி தருவாள் , அவளே தன்னையும் குடும்பத்தையும் நாட்டையும் காப்பாள் என்பதற்காக
இதையே எங்கள் புராணம் சொன்னது , எங்கள் மதம் சொன்னது, எங்கள் வாழ்வியல் தர்மம் சொன்னது
எங்கள் இதிகாசத்தின் பெண்கள் வீரமானவர்கள் எங்கள் சீதையும் பாஞ்சாலியும் சக்திமிக்கவர்கள், அவர்கலே எதிரிகளை அழித்திருக்கலாம் ஆனால் அப்படி செய்தால் தங்கள் கணவர்க்கு அவமானம் என்றே அவர்களுக்காய் விட்டு கொடுத்தார்கள்
இதைத்தான் எங்கள் நாட்டு அரசிகளும் செய்தார்கள்
ஓ உலகத்தீரே, எங்கள் சிவனுக்கே சக்தி கொடுப்பவள் பெண் என கொண்டாடும் மாபெரும் தர்மத்தின் வழி வந்தவனாய் சொல்கின்றேன், உரிய காலம் வரும்போது எங்கள் நாட்டு பெண்கள் எவ்வளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பதை உணார்வீர்கள், எங்கள் மதமும் வாழ்வியல் தர்மமும் காலம் காலாமாய் அவர்களை அவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக உருவாக்கி வைத்திருக்கின்றது”
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் தொடங்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது. சிந்தூர் என்பது, குங்குமத்தைக் குறிக்கும். பெண்களின் குங்குமத்தைப் பறித்த பயங்கரவாதிகளை இல்லாமல் செய்யும் பாரத ராணுவத்தின் செயலாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது- ஜெய்ஹிந்த் என்றூ, இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.
கோட்லி, பஹ்வால்பூர், முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய ராணுவம், ‘பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் அல்லது பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தலைமையகங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தானும் உறுதிப் படுத்தியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப், ஐந்து இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முரிடிக் என்ற இடத்தில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குண்டுவீசி அழித்தது இந்திய ராணுவம். மேலும், தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி இது என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளது.
பாரதத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், சுற்றுலா சென்ற அப்பாவிப் பொதுமக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை ராணுவம் தேடி வருகின்றது. இருப்பினும், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு அனுப்பி கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலும் அழிப்பதே இந்தியாவின் பணி என்று குறிப்பிடப்பட்டது. அதன்படி பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற இரண்டே வாரங்களில் இந்தியா பதிலடிகொடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. எனினும் எல்லைப் பகுதியில் பதிலடி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தியா நடத்திய தாக்குதலால் நள்ளிரவில் பீதியில் உறைந்தனர் லாகூர்வாசிகள்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ளோர் இந்த தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்து “பாரத் மாதா கி ஜெய்- ஜெய்ஹிந்த்” என சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் இவ்வாறு சமூகத் தளங்களில் பதிவிட்டு தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், கிரண் ரிஜிஜு, பியுஸ் கோயல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். மேலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் முதலமைச்சர்களும் இவ்வாறு வரவேற்பு தெரிவித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர்:
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 3 பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல் 2025 – மும்பை vs குஜராத் – வாங்கடே, மும்பை – 06.05.2025
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
மும்பை இந்தியன்ஸ் அணியை (155/8, வில் ஜேக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கார்பின் போஷ் 27, சாய் கிஷோர் 2/34, சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான், ஜெரால்ட் கோயட்சி தலா ஒரு விக்கட்) குஜ்ராத் டைடன்ஸ் அணி (19 ஓவர்களில் 147/7, ஷுப்மன் கில் 43, ஜாஸ் பட்லர் 30, ரூதர்ஃபோர்ட் 28, பும்ரா 2/19, போல்ட் 2/22, அஷ்வினி குமார் 2/28, தீபக் சாஹார் 1.32) டக்வொர்த் லூயிஸ் முறையில் 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. பொதுவாக மட்டையாடுவதில் சிறந்து விளங்கும் மும்பை அணி இன்று தொடக்கம் முதலே சொதப்பியது. தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (2 ரன்), ரோஹித் ஷர்மா (7 ரன்) இருவரும் முதல் நாலு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
அடுத்த ஜோடியான வில் ஜேக்ஸ் (35 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (24 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர்) இருவரும் 12ஆவது ஓவர் வரை விளையாடி அணிக்கு வேகமாக ரன் சேர்த்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த திலக் வர்மா (7 ரன்), ஹார்திக் பாண்ட்யா (1 ரன்), நமன் திர் (7 ரன்), ஆகியோர் இன்று ஏமாற்றினர்.
கோர்பின் போஷ் (22 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இறுதியில் சற்று ஆறுதல் தந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன் எடுத்தால் வெற்றி, என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் (5 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (46 பந்துகளில் 43 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தார்.
மும்பையின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். 18ஆவது ஓவர் முடிந்தபோது குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 136 ரன் எடுத்திருந்தது. அச்சமயத்தில் மழை குறுக்கிட்டது.
இரவு 1229க்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் அணிக்கு ஆட்டம் 19 ஓவராகக் குறைக்கப்பட்டு, இலக்கு 147 என மாற்றியமைக்கப்பட்டது. அதாவது கடைசி ஓவரில் அந்த அணி 15 ரன் எடுக்க வேண்டும். தீபக் சாஹர் கடைசி ஓவரை வீசினார்.
ராகுல் திவாத்தியா மற்றும் கோயட்சி இருவரும் குஜராத் அணிக்காக விளையாடினர். முதல் பந்தில் 4, இரண்டாவது பந்தில் சிங்கிள், மூன்றாவது பந்தில் சிக்சர், நாலாவது பந்தில் 1 ரன்; அது நோபாலாகப் போனது. மீண்டும் வீசப்பட்ட நாலாவது பந்தில் 1 ரன். ஐந்தாவது பந்தில் கோயட்சி ஆட்டமிழந்தார்.
ஆறாவது பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி. மிட்-ஆஃப் திசையில் அடிக்கப்பட்ட பந்தை எடுத்த பாண்ட்யா பந்துவீச்சாளர் ஸ்டம்பில் வீசினார்; ஆனால் அது ஸ்டம்பை அடிக்க வில்லை. அதனால் குஜராத் அணி வெற்றி பெற்றது.
அலங்காநல்லூர் அருகே வினோதமாக ஒரு கிராமத்தினர் மற்றொரு கிராமத்திற்கு சென்று சாமி ஆடி அவர்களுக்கு அருள் வாக்கு கூறும் திருவிழா: ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு:
மதுரை மாவட்டம் , சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான வைகை ஆற்றல் கள்ளழகர் இறங்கும் நிகழ்வாகும். இந்த திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் பெருசு பட்டி பங்காளிகள் முத்து கருப்புசாமி வணங்கும் கிராமத்தினர் திரிப்பந்தம் எடுத்து சாமி ஆடி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள அழகாபுரி என்னும் கிராமத்திற்கு சென்று அழகாயி சாமிக்கு பாத்தியப்பட்ட கவுண்டர் 48 பங்காளிகள் குடும்பத்தினரும் அழகர்சாமி. கன்னியப்பன்.ஜெகநாதன் பாரதிதாசன், இளையராஜா / புகழேந்தி. பிரேம்குமார். ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இணைந்து பழமை மாறாமல் இங்கு வந்து சாமி அடி அருள் வாக்கு கூறுவது வழக்கம். மேள தாளங்கள் முழங்க கோவில் முன்பு வலசை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சாமியாடி அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், முக்கிய நிகழ்வாக பல ஆண்டுகளுக்கு முன்பு அழகாபுரி கிராமத்தில் ஒரே வீடு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஒருவர் உங்கள் குழந்தைகள் இல்லையா என கேட்டு அவர்களுக்கு அருள்வாக்கு கூறி அவர்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
அந்த நிகழ்வை சுட்டிக் காட்டும் வகையில் இந்த சித்திரை மாதம் வலசை கிராமப் பகுதி மக்கள் இங்கு அழகாபுரி 48 பங்காளி குடும்பத்தினரும் இணைந்து இந்த வினோதமான திருவிழாவில் சாமியாடி குழந்தை இல்லாதவர்களுக்கு அருள் வாக்கு . குழந்தை வரம் மற்றும் பல்வேறு வரங்களை பொதுமக்களுக்கு சாமி அடிகள் அருள்வாக்காக வழங்குவார்கள்.
இதில் , அதிசிய நிகழ்வாக சாமியாடிகள் ஆண்டுதோறும் வந்து அருள்வாக்கும் கூறும் திருவிழா அன்று இந்த அழகாபுரியை சேர்ந்த 48 பங்காளிகளின் ஒருவர் குடும்பத்தில் உள்ள பசு மாடு கன்று பிறந்து , அதன் (முதல் பால்). சீம்பால் கொண்டு வந்து இந்த சாமியாடிகளுக்கு வழங்குவது தொன்று தொட்டு நடைபெறுவது வழக்கமாக உள்ளது .
அதுபோன்று, இந்த வருடமும் பசு மாடு கன்று ஈன்று அதனுடைய பசுவின் (முதல் பால்)சீம்பாலை சாமி ஆடிகளுக்கு வழங்கினார்கள். இந்த வினோத திருவிழா ஆண்டு தோறும் இந்த பகுதியில் நடைபெறுகிறது. இதில், ஏராளமான ஊர் கலந்து கொண்டு அருள்வாக்கு பெற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.