Home Blog Page 113

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

டெல்லி திரில் வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (209/8, மிட்சல் மார்ஷ் 72, நிக்கோலஸ் பூரன் 75, டேவிட் மில்லர் 27, மிட்சல் ஸ்டார்க் 3/42, குல்தீப் யாதவ் 2/20, விப்ராஜ் நிகம் மற்றும் முகெஷ் குமார் தலா ஒரு விக்கட்) டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 211 ரன், அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்கமல் 66, விப்ராஜ் நிகம் 39, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அக்சர் படேல் 22, ஷர்துல் தாகூர், மணிமஆறன் சித்தார்த், திவேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கட்டுகள்) ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.

          இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் அணித்தலைவர், ரிஷப் பந்த், தான் ஒருவேளை டாஸ் ஜெயித்திருந்தால் மட்டையாடியிருப்பேன் என்று சொன்னர். எனவே டெல்லி அணி, லக்னோ அணியை மட்டையாடச் சொன்னது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் எய்டன் மர்க்ரம் (13 பந்துகளில் 15 ரன்), மிட்சல் மார்ஷ் (36 பந்துகளில் 72 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) என அதிரடியாக விளையாடி, 15ஆவது ஓவரில் பூரன் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 169ஆக் இருந்தது.

13ஆவது ஓவரை ஸ்டப்ஸ் வீச வந்தபோது நிக்கோலஸ் பூரன் (0,6,6,6,6,4) நாலு சிக்சர், ஒரு போர் அடித்து தூல் கிளப்பினார். அதன் பிறகு வந்த வீரர்களால் இவர்களைப்போல ஆட முடியவில்லை. டேவிட் மில்லர் (19 பந்துகளில் 27 ரன்) மட்டும் ஏதோ சொல்லும்படி ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

          210 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணி இரண்டு ஓவர்கள் முடிவதற்குள் மூன்று விக்கட்டுகளை இழந்தது. ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (1 ரன்), அபிஷேக் போரல் (பூஜ்யம் ரன்) சமீர் ரிஸ்வி (4 ரன்) என மூவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். ட்யூபிளேசிஸ் (18 பந்துகளில் 29 ரன்) மற்றும் அக்சர் படேல் (11 பந்துகளில் 22 ரன்) இருவரும் டெல்லி அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆடினர்.

12ஆவது ஓவரில் 102 ரன் மட்டுமே எடுத்திருந்த டெல்லி அணி, அதன் பின்னர் கியரை மாற்றி வேகமாக ரன் எடுக்கத் தொடங்கியது. ஓவர் 13இல் 15 ரன், 14இல் 17 ரன், 15இல் 15 ரன், 16இல் 20 ரன், (17இல் 3 ரன்), 18இல் 17 ரன், 19இல் 16 ரன், 20இல் 7 ரன் என மொத்தம் 109 ரன் களை கடைசி 7 ஓவர்களில் டெல்லி அணி எடுத்தது.

ஸ்டப்ஸ் (22 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) விப்ராஜ் நிகம் (15 பந்துகளில் 39 ரன்) எடுத்தனர். இதனால் 19.3 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது

          டெல்லி அணியின் மட்டையாளர், அஷுத்தோஷ் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

pm modi interview - 2026

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் எட்டாவது பகுதி…

வினா – நான் சிறப்பாக இல்லை.

மோதிஜி – நீங்கள் கடியாரத்தைப் பார்க்கிறீர்கள்!!!

வினா – இல்லை இல்லை இல்லை.  நான் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை.  இதில் நான் சிறந்தவன் இல்லை, ஓகே.  உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவத்தில் நீங்கள் இந்தியாவில் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்திருப்பீர்கள்.  அவற்றில் ஒன்று 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்கள்.  நவீன இந்திய வரலாற்றின் மிகச் சவாலான பக்கங்களில் இவையும் ஒன்று.  குஜராத்தின்இந்து முஸ்லிம் குடிமக்களுக்கிடையே கலவரங்கள் மூண்ட போது, சுமார் 1000 பேர் உயிரிழந்தார்கள்.  இது மதரீதியான அழுத்தங்களின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தியது.  நீங்கள் கூறியபடி அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தீர்கள்.  திரும்பிப் பார்க்கையில், அந்தக் காலத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?  இதையும் கூற வேண்டும், இந்தியாவின் சுதந்திரமான உச்சநீதிமன்றம் இருமுறை, 2012 மற்றும் 2022இல் வன்முறையில் உங்கள் பங்கு இல்லை எனத் தீர்ப்பளித்தது.  அந்த காலத்தில் நடந்த கலவரத்திலிருந்து பொதுவாக நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?

மோதிஜி – என்ன புரிந்து கொள்கிறேன் என்றால், முன்னரே நீங்கள் கூறியபடி, இந்த விஷயத்தில் நான் வல்லுனர் இல்லை நான், நேர்காணலை நான் சரியாகச் செய்கிறேனா இல்லையா என்ற குழப்பம் உங்களிடம் ஏற்பட்டது.  எனக்கு என்ன படுகிறது என்றால், நீங்கள் கணிசமாக பாடுபட்டிருக்கிறீர்கள்.  கணிசமான ஆய்வு செய்திருக்கிறீர்கள்.  மேலும் அனைத்தையும் நுணுகிப் பார்க்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.   இது உங்களுக்கு ஒரு கடினமான வேலை, என்று, என்று, நான் கண்டிப்பாக கருதவில்லை ….. 

நீங்கள் எத்தனையோ, போட்காஸ்ட் செய்திருக்கிறீர்கள்….. நான் நம்புகிறேன், நீங்கள் தொடர்ந்து நல்லபடியாகவே செயல்படுகிறீர்கள் என்று.  மேலும் நீங்கள், மோதியிடம்… வினா எழுப்புவதற்கு பதிலாக நீங்கள், பாரதத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயல்கிறீர்கள் என்று நான் உணர்கிறேன்.   அந்த வகையில் நான் கருதுகிறேன், சத்தியத்தைத் தெரிந்து கொள்ளூம் உங்கள் முயற்சியில் நேர்மை புலப்படுகிறது.  இந்த முயற்சிக்காக நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  அந்த பழைய விஷயங்கள் குறித்து நீங்கள் கேட்டீர்கள்.  ஆனால் நீங்கள்… 2002… அந்த குஜராத்தின்…. கலவரங்கள், அதன் முந்தைய நாட்கள் பற்றிய… ஒரு, 12-15 ஆண்டுகள் பற்றிய காட்சியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.  அப்போது உங்களால் கணிக்க முடியும், அப்போது, என்ன நிலை இருந்தது என்று.  

இப்போது, டிசம்பர் 24… 1999.  அதாவது 3 ஆண்டுகள் முந்தைய விஷயம்.  காட்மண்டுவிலிருந்து தில்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம், அதைக் கடத்தி ஆஃப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கொண்டு சென்றார்கள்.  பாரதத்தின் பலநூறு பயணிகளைப் பிணையாகப் பிடித்தார்கள்.  பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல்.  மேலும் ஒரு, புயல் இதோடு சேர்ந்து கொண்டது.   11 செப்டெம்பர் 2001, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது மிகப்பெரிய தாக்குதல் தொடரப்பட்டது. 

இது மீண்டும் ஒருமுறை… உலகத்தை, கவலையில் ஆழ்த்தியது ஏனென்றால்,  இவை அனைத்தையும் செய்தவர்கள் ஒரே வகையானவர்கள்.  அக்டோபர் 2001இல் ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவையில் தீவிரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.  13 டிசம்பர் 2001இலே பாரத பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. 

அதாவது அந்த காலகட்டத்தில் 7-8 மாதங்களில் நடந்த சம்பவங்கள் உலகளாவிய அளவில் நடந்த சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்கள், பாதகங்கள் அப்பாவி மக்களின் படுகொலைச் சம்பவங்கள், அப்போது… பார்த்தால் ஒருவகையிலே… அமைதியற்ற நிலை.  ஒரு தீப்பொறி போதுமானது அந்தச் சூழல் உருவாகி விட்டது, உருவாகி விட்டது.  இந்தச் சமயத்திலே… திடீரென்று, அக்டோபர் 7 2001இலே, எனக்கு… முதல்வராகும் பொறுப்பு திடீரென்று, என்னிடத்திலே அளிக்கப்பட்டது. 

என்னுடைய மிகப்பெரிய பொறுப்பு என்னவென்றால், குஜராத்திலே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.  அந்த நிலநடுக்கத்திற்கு பிறகான புனர்வாழ்வு மிகப்பெரிய பணி கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நிலநடுக்கம் அது.  ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்கள்.  ஆக இந்தப் பணியைச் செய்ய, முதல்வர் என்ற பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.  மிக மகத்துவமான பணி நான் சபதமேற்ற மறுகணமே இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.  நான் எப்படிப்பட்ட நபர் என்றால் எப்போதுமே, அரசோடு எனக்குத் தொடர்பு இருந்ததே கிடையாது.  நான் அரசாங்கத்தில் இருந்ததே கிடையாது.  அரசாங்கம் என்றால் என்ன என்பது தெரியாது.  நான் எம் எல் ஏவாக இருந்தது இல்லை.  நான் தேர்தலில் போட்டியிட்டதே இல்லை.  வாழ்க்கையில் முதன்முறையாக நான் தேர்தலில் போட்டியிட வந்தது.  நான் பிப்ரவரி 24 2002இலே, நான் முதன்முறையாக எம் எல் ஏ ஆனேன்.  ஒரு, தேர்தல் நடந்தது மக்கள் பிரதிநிதி ஆனேன். 

மேலும் நான், முதன்முறையாக, 24ஆம் தேதியன்று, அல்லது 25ஆம் தேதியன்று, அல்லது 26ஆம் தேதியன்று, குஜராத் சட்டப்பேரவையில் கால் ஊன்றினேன்.  பிப்ரவரி 27, 2002இலே, சட்டப் பேரவையில் பட்ஜட் கூட்டத்தொடர் நான் அவையிலே அமர்ந்திருந்தேன்.  அதே நாளன்று, அதாவது எனக்கு, எம் எல் ஆகி மூன்று நாட்கள் ஆகியிருந்தன.   அப்போது கோத்ரா சம்பவம் நடந்தது.  பயங்கரமான சம்பவம் அது.  மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். 

நீங்களே கற்பனை செய்யுங்கள், கந்தஹார் விமானக் கடத்தலாகட்டும் பாராளுமன்றம் மீதான தாக்குதலாகட்டும் அல்லது 9/11 சம்பவமாகட்டும்.  இந்தச் சம்பவங்கள் அனைத்தின் பின்புலம், அதோடு இத்தனை அதிக, எண்ணிக்கையில் மக்கள் இறப்பது, உயிரோடு எரிக்கப்படுவது, நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!!  எதுவும் நடக்க கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம்.   யாருமே விரும்புவார்கள்.  அமைதியே நிலவ வேண்டும். 

அடுத்து பெரிய கலவரங்கள் மூண்டதாக ஒரு மாயத்தோற்றம் பரப்பப்பட்டது.  நீங்கள் 2002க்கு முந்தைய தரவுகளைப் பார்த்தீர்களானால், தெரிய வரும், குஜராத்தில் எத்தனை கலவரங்கள் நடந்தன என்பது.  எப்போதும் ஏதாவது ஓரிட த்தில் ஊரடங்கு இருந்து கொண்டே தான் இருக்கும்.  காற்றாடி…. விடும் போது மதக்கலவரங்கள் சைக்கிள் மோதிக் கொண்டு மதக்கலவரங்கள் மூண்டிருக்கின்றன.  2002க்கு முன்பாக…. குஜராத்திலே, 250க்கும் அதிகமான பெரிய கலவரங்களே நடந்திருக்கின்றன. 

மேலும் 1969இலே நடந்த கலவரம், அது சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது.  அப்போது நான்…. உலகப்படத்தில் இருக்கவே இல்லை…. அந்தக்காலம் பற்றிக் கூறுகிறேன்.  மேலும், இத்தனை பெரிய சம்பவத்துக்கு இது வடிகாலாக ஆனது.  இதனால், வன்முறை வெடித்தது.  ஆனால், நீதிமன்றம் அதை மிகவும், நுணுகி ஆராய்ந்தது.  அலசிப் பார்த்தது.  அப்போது, எங்களின்… எதிர்த்தரப்பினர் ஆட்சியில் இருந்தார்கள். 

எங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தண்டனை, கிடைப்பதை விரும்பினார்கள்.   அவர்களுடைய அயராத முயற்சிகளைத் தாண்டி…. நீதிமன்றங்கள், அதை முழுமையாக ஆராய்ந்து… அலசினார்கள் இருமுறை செய்தார்கள்.   தீர்ப்பு தெளிவுபடுத்தியது.   யாரெல்லாம் குற்றம் செய்தார்களோ, அவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கின.  ஆனால் மிகப்பெரிய விஷயம், எந்த குஜராத்திலே, ஓராண்டிலே, ஆங்காங்கு கலவரங்கள் நடந்து வந்தன. 

2002க்குப் பிறகு… இன்று 2025.  குஜராத்திலே 20-25 ஆண்டுகளாக, எந்தப் பெரிய கலவரமும் நடக்கவில்லை.  முழுமையான அமைதி நிலவுகிறது.  எங்கள் முயற்சி என்னவாக இருந்த தென்றால், நாங்கள் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதில்லை. 

நாங்கள் அனைவருடன் அனைவருக்குமான வளர்ச்சி அனைவரின் நம்பிக்கை அனைவரின் முயற்சி, இந்த மந்திரத்தின் துணையோடு பயணிக்கிறோம்.  திருப்திப்படுத்தும் அரசியலிலிருந்து பேரார்வ அரசியலை நோக்கிச் செல்கிறோம்.  இதன் காரணமாக, யார் என்ன செய்ய வேண்டுமோ, அவர்கள் எங்களோடு இணைகிறார்கள்.  நல்லவகையிலே, குஜராத் வளர்ந்த மாநிலமாக ஆக வேண்டும்.  இந்த திசையில் தொடந்து நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.  இப்போது வளர்ந்த பாரதம் நோக்கிய பயணத்தில் குஜராத் தன் பங்களிப்பை அளித்து வருகிறது.

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் ஏழாவது பகுதி…

வினா – நீங்களும் ஷி ஷிங் பிங்கும் ஒருவரை ஒருவர் நண்பர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள்.  எப்படி இந்த நட்பு அண்மையில் ஏற்பட்ட அழுத்தங்களைக் குறைக்கவும், உறவுகளை பலப்படுத்தவும், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடக்கவும் உதவிகரமாக இருக்கும்.

மோதிஜி – அதாவது, பாரதம் மற்றும், சீனாவுக்கிடையே தொடர்பு, இது ஒன்றும்… இன்றுநேற்றல்ல.  இரண்டுமே பழமையான… கலாச்சாரங்கள்.  பழமையான, நாகரீகங்கள்.  மேலும்… நவீன உலகிலும் கூட, இரண்டின் பங்குபணி இருக்கிறது.  நீங்கள் பழைய பதிவுகளைப் பார்த்தீர்களானால், பல நூற்றாண்டுகளாக, இரண்டும் ஒன்றிடமிருந்து மற்றது கற்று வந்திருக்கின்றன.  இரண்டும் இணைந்து, உலகத்தின் நன்மைக்காக…. பங்களிப்பு அளித்து வந்திருக்கின்றன உலகின் ……பழைய பதிவுகளைப் பார்த்தால் புரியும், உலகத்தின் ஜிடிபியிலே, அதன் 50 சதவீதம் இந்த இரு நாடுகளுடையதாக இருந்தது. 

இத்தனை பெரிய பங்களிப்பு…. பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.  மேலும் முந்தைய நூற்றாண்டுகளில் இருவருக்குமிடையே பிணக்குக்கான எந்த சான்றுகளும் இல்லை.  எப்போதுமே, ஒன்றிடமிருந்து மற்றது கற்பது ஒன்றையொன்று அறிவது என்பதாகவே இருந்தது.  மேலும் புத்தரின் தாக்கம் ஒரு காலத்தில் சீனாவில் நிறைய இருந்தது. 

இங்கிருந்து தான் அந்தச் சிந்தனை…. சென்றது.  நாம், எதிர்காலத்திலும் கூட, இந்தத் தொடர்புகளை பலப்படுத்தி வர வேண்டும் தொடர வேண்டும்.  இந்த… மாதிரியான…. அண்டை நாடுகள் என்றால் ஏதோ வகையில் கருத்து வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்.   எப்போதாவது, கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று எப்போதும் கிடையாது குடும்பத்திலும் இருப்பது தானே!!  ஆனால் எங்களுடைய முயற்சி வேறுபாடுகள் என்னென்ன இருக்கிறதோ, அவை பிணக்குகளாக ஆகக் கூடாது. 

இந்த நோக்கில் எங்கள் முயற்சி இருக்கிறது.  இந்த வகையிலே தான், நாங்கள்.. மோதல்கள் அல்ல, பேச்சுவார்த்தை, இதைத் தொடர, அழுத்தமளிக்கிறோம்.   அந்த நிலையில் தான் …… ஒரு சீரான, கூட்டுறவான… உறவு, மேலும்… இரு நாடுகளினுடைய, சிறந்த நலன்களுக்காக இருக்கும்.  இது உண்மை தான்… எங்களுடைய, எல்லை விவாதம் தொடர்ந்து நடக்கிறது.   2020இலே எல்லையிலே நடந்த சம்பவங்கள், இதன் காரணமாக, எங்களுக்கிடையே, கணிசமான பிளவு ஏற்பட்டது.  ஆனால் இப்போது குடியரசுத் தலைவர் ஷியை நான் சந்திக்க நேர்ந்தது. 

அதன் பிறகு எல்லையிலே இருந்த, அழுத்தங்கள் இளக்கப்பட்டிருக்கின்றன 2020க்கு முந்தைய நிலையை எட்ட பணியாற்றி வருகிறோம்.  இப்போது மெல்லமெல்ல…. அந்த நம்பிக்கையும் அந்த, உற்சாகமும் அந்த ஆர்வமும்  மீட்டெடுக்கப்படும்.  இதற்கு சற்று காலம் ஆகும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி ஆகிவிட்டது. 

நாங்கள் ஒற்றுமையாக இருப்பது ஆதாயமானது மட்டுமல்ல அதோடு, உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் வளத்துக்கும் அவசியமானதும் கூட.  21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனும் போது, நாங்கள் விரும்புவது பாரதம் சீனத்திற்கு இடையே, உரசல்கள் எல்லாம் இயல்பானது தான்.  உரசல்கள் மோசமானவை அல்ல.  அவை மோதல்களாக மாறக் கூடாது. 

வினா – உலகம் உருவாகிவரும் உலகளாவிய போர் பற்றிய கவலையில் இருக்கிறது.  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட அழுத்தம்.  உக்ரைனில் ரஷியவில் ஐரோப்பாவில்.  இஸ்ரேலில்.  மத்திய கிழக்கில்.  21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய யுத்தத்தை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி, போர் அதிகரிப்பு பற்றியும் மோதல் தவிர்ப்பு பற்றியும் உங்கள் கருத்து என்ன?

மோதிஜி – அதாவது கோவிட் பெருந்தொற்று, நம்மனைவரின் எல்லைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்ட து.  நாம் எத்தனை தான் நம்மை, பலமான தேசம் என்று நினைத்துக் கொண்டாலும், வளர்ச்சி அடைந்தவர்களாக நினைத்துக் கொண்டாலும், விஞ்ஞான வளர்ச்சி அடைந்தவர்களாக கருதினாலும் எதுவாக இருந்தாலும் அவரவர் நினைப்புக்கேற்ப.  ஆனால் கோவிட் காலத்தில் நாமனைவரும் தரையிறக்கப்பட்டோம். 

உலகின் அனைத்து தேசங்களும்.  அப்போது உலகம் இதிலிருந்து கற்கும் என்று தோன்றியது.  நாம் ஒரு புதிய உலக வரிசை நோக்கிச் செல்வோம் என்று நினைத்தோம்.   அதாவது, 2ஆம் உலகப்போருக்குப் பிறகு ஒரு உலக வரிசை உருவானது.  அப்படி கோவிடுக்குப் பிறகு ஏற்படும் என்று நினைத்தோம்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நிலைமை என்னவானதென்றால், அதாவது, அமைதியை நோக்கிச் செல்வதற்கு பதிலாக, உலகம் பிளவுபட்டது, நிச்சமற்ற ஒரு நிலைமை உருவானது, போர்கள் அதை மேலும் சிக்கலாக்கியது. 

என்ன நினைக்கிறேன் என்றால் நவீன யுத்தங்கள், வெறும் ஆதாரங்கள், அல்லது நாட்டங்களுக்காக மட்டுமல்ல.  இன்று நான் பார்க்கும் போது, இத்தனை, பல வகையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.  புறப்போர்கள் பற்றி விவாதிக்கப்பட்டாலும் அனைத்துத் துறைகளிலும் மோதல்கள் நடந்து வருகின்றன.  சர்வதேச அமைப்பு தோன்றியது இது கிட்டத்தட்ட பொருத்தமற்றதாக ஆகி விட்டது சீர்திருத்தம் நடைபெறவில்லை.  ஐ.நா. போன்ற அமைப்புகள் தங்கள் பங்களிப்பை, ஆற்ற முடியவில்லை. 

உலகத்திலே யாரெல்லாம், சட்டத்தை, விதிகளைப் பொருட்படுத்தாமல் அனைத்தையும் செய்கிறார்கள் யாராலும் தடுக்க முடியவில்லை.  இத்தகைய சூழ்நிலையிலே, புத்திசாலித்தனம் என்னவென்றால் அனைவரும், மோதல்கள் பாதையை விடுத்து சமரஸப் பாதையை கைக்கொள்ள வேண்டும்.  மேலும், வளர்ச்சிப் பாதையே சரியானது விஸ்தரிப்புப் பாதை தவறானது. 

நான் முன்னரே கூறியது போல, உலக நாடுகள் ஒன்றையொன்று சாந்துள்ளது தொடர்புடையது.  அனைவருக்கும் பரஸ்பரத் தேவை இருக்கிறது.  தனியாக எதையும் சாதிக்க முடியாது.  நான் கவனித்த வரையில் எத்தனை, பலவகை மேடைகளுக்கு நான் செல்ல வேண்டியிருந்தாலும், அதிலே அனைவரையும் கவலை அரித்தெடுக்கிறது…. மோதல் பற்றி.  அதிலிருந்து விரைவாக விடுதலை கிடைக்க வேண்டும் என்று நம்புகிறோம். 

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் ஆறாவது பகுதி…

வினா –  கால்பந்தாட்டம் என்ற விளையாட்டு இந்தியாவை மட்டுமல்ல உலகையே கூட ஒருங்கிணைக்கிறது.  இது தான் விளையாட்டு அளிக்கக்கூடிய ஆற்றல்.  நீங்கள் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள், அங்கே டானல்ட் ட்ரம்ப் அவர்களுடன் உங்கள் நட்பை மேலும் வலுவடையச் செய்தீர்கள்.  டானல்ட் ட்ரம்ப் அவர்களை ஒரு நண்பராக, ஒரு தலைவராக, உங்கள் கருத்து?

மோதிஜி – நான், சம்பவங்களை விவரிக்க விரும்புகிறேன்.  அதைக் கொண்டு நான் எதைப் பற்றிப் பேச விரும்புகிறேன் என்று, நீங்களே முடிவு செய்து கொள்ள முடியும்.  இப்போது ஹூஸ்டனில் எங்களுடைய ஒரு நிகழ்ச்சி இருந்தது.  ஹவ்டி மோதி.  நானும் குடியரசுத்தலைவர் ட்ரம்பும் இருந்தோம்…. அரங்கு முழுவதுமாக நிரம்பி வழிந்தது.  இத்தனை மனிதர்கள் இருப்பது என்பது அமெரிக்க வாழ்விலே மிகப்பெரிய நிகழ்ச்சி விளையாட்டுக்களில் என்னவோ இருக்கும் ஆனால் அரசியல் கூட்ட த்தில் இத்தனை பேர் இருப்பது பெரிய விஷயம். 

இந்திய வம்சாவழியினர் வந்திருந்தார்கள்.  நாங்கள் இருவரும் உரையாற்றினோம்.  அவர் கீழே அமர்ந்து கொண்டு, என் உரையைக் கேட்டார்.  அவருடைய தாராள குணம் அது.  அமெரிக்க குடியரசுத் தலைவர் மேடைக்குக் கீழே அமர்ந்து கொண்டு என் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார், இது அவருடைய பெரிய மனது.  நான் உரையாற்றி விட்டு கீழே சென்றேன்.  நமக்கு நன்கு தெரியும், அமெரிக்காவின் பாதுகாப்பு எத்தனை பெரிய, அளவில் இருக்குமென்று.  எத்தனை… வகையான சோதனைகள் இருக்குமென்று. 

நான் கீழே சென்று, அவருக்கு நன்றி தெரிவித்து யதார்த்தமாக அவரிடம் சொன்னேன்.  உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்று சொன்னால், வாருங்கள் நாம், அரங்கத்தை ஒருமுறை சுற்றிவரலாமே இத்தனை பேர் இருக்கிறார்கள் என்றால் கையசைத்து வணக்கம் சொல்லி வரலாமே என்றேன்.  அமெரிக்காவிலே இது சாத்தியமே இல்லை.  ஆயிரக்கணக்கானோர் மத்தியிலே அமெரிக்க குடியரசுத் தலைவர் செல்வதென்பது.  ஒரு கணம்கூட தாமதிக்காமல், என்னோடு வரத் தொடங்கினார், கூட்டத்திலே.  அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு மொத்தமாக….. திகைத்துத் திக்குமுக்காடிப் போனது.  இந்த நபரிடம் தைரியம் இருக்கிறது என்பது என்னைத் தொட்டது.  இவர் முடிவுகளைத் தாமே எடுக்கிறார்.  மேலும் அடுத்து, மோதி மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.  மோதி கூட்டிக் கொண்டு சென்றார் என்றால், செல்வோம் என்று.  

இந்த பரஸ்பர நம்பிக்கை உணர்வு,  இந்த இத்தனை பலமான உணர்வை அன்று தான் கவனித்தேன்.  நான் குடியரசுத் தலைவர் ட்ரம்பினை அன்று தான்…. உணர்ந்து கொண்டேன்.  பாதுகாப்புக் குழுவினரைக் கலந்து பேசாமல் கூட்டத்திலே செல்வது, அந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.  அவர் மீது தேர்தல் பிரச்சாரத்தின் போது சுடப்பட்ட போது, அப்போது எனக்கு…. குடியரசுத் தலைவர் ட்ரம்ப், ஒன்றாகவே தென்பட்டார்.  அந்த அரங்கிலே என் கையைப் பிடித்துக் கொண்டு பயணித்த ட்ரம்ப், குண்டடிபட்ட பிறகு கூட, அமெரிக்காவுக்காக வாழ்தல், அமெரிக்காவுக்காகவே வாழ்க்கை, இந்த அவருடைய மனவுறுதி, தேசத்திற்கே முதன்மையளிப்பவன் நான்.  அவரோ அமெரிக்காவுக்கு முதன்மை என்பவர்.  நான் பாரதத்திற்கு முதன்மை என்பவன்.  எங்கள் இணை அமோகமாக இணைகிறது.  

இந்த விஷயங்கள் தான், மனதைத் தொடுவன என் கருத்து என்னவென்றால், பெரும்பாலும் உலகத்திலே, அரசியல் தலைவர்களைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால், அனைவரும் பரஸ்பரம் இவற்றின் அடிப்படையிலேயே அளவீடு செய்கிறார்கள்.  ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி உரையாடி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதில்லை.   மூன்றாமவர்களின் இடையீடுகளும் அழுத்தத்துக்கான மேலும் ஒரு காரணம். 

நான் முதன்முறையாக, வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது, அப்போது, குடியரசுத்தலைவர் ட்ரம்ப்…. குறித்து ஊடகங்களில் வெளியான பல விஷயங்கள் முதன்முறையாக வந்திருந்தார் உலகம் சற்று, வித்தியாசமாகவே அவரை கவனித்தது.  எனக்கும் பலவகையாக தெரிவிக்கப்பட்டது.  நான் வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது, முதல் நிமிட த்திலேயே, அவர் ப்ரோட்டோகாலின் அனைத்துச் சுவர்களையும் தகர்த்து விட்டார். 

மொத்த வெள்ளை மாளிகையையும் சுற்றிக் காட்ட அவரே வந்தார்.  எனக்குக் காட்டிக் கொண்டிருந்த போது அவர் கைகளில் எந்தக் காகிதமும் இல்லை என்பதை கவனித்தேன்.  துண்டுச் சீட்டு ஏதும் இல்லை சொல்பவர்கள் யாரும் இல்லை.  எனக்கு விளக்கினார்.  ஆப்பிரகாம் லிங்கன் இங்கே வசித்தார், இந்த தாழ்வாரம் ஏன் இத்தனை நீளமாக இருக்கிறது இந்த மேஜையில் எந்த, குடியரசுத் தலைவர் கையெழுத்து இட்டார்.  தேதிவாரியாகச் சொன்னார் அவர்.  எனக்குள் அது பெரிய பதிவை ஏற்படுத்தியது.  இந்த அமைப்பை எந்த அளவுக்கு கௌரவிக்கிறார் என்று.  எந்த அளவுக்கு…. அமெரிக்க வரலாற்றோடு அவருக்கு ஈடுபாடு இருந்தது.  எத்தனை மரியாதை இருந்தது.  அதை உணர்ந்தேன் திறந்த மனத்தோடு நிறைய விஷயங்களைப் பேசினார். 

என்னுடைய முதல் சந்திப்பின் அனுபவம் அது.  நான் மேலும் கவனித்தேன், அவர் அப்போது, முதல் முறைக்குப் பிறகு அந்த, தேர்தலில், பைடன் வெற்றி பெற்றார்.  இது நான்கு ஆண்டுக்காலம்.  எங்கள் இருவரையும் தெரிந்தவர்கள் யாராவது அவரை சந்தித்தால், இந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது 50 முறையாவது, அவர் கூறியிருப்பார், மோதி என் நண்பர் என்று.  நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.  பொதுவாக இது மிகக் குறைவாக இருக்கும்.   நாங்கள் ஒருவகையில் நேரடியாகச் சந்தித்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களுக்கு இடையிலான நேரடி மறைமுக உரையாடல், அல்லது நெருக்கம், அல்லது நம்பிக்கை, இது சிதையாமல் இருந்தது. 

வினா – தன்னை விட கடுமையாக தீவிரமாக ஒப்பந்தப்பேச்சு நடத்தக்கூடியவர் நீங்கள் என்று அண்மையில் நீங்கள் சென்றிருந்த சமயத்தில் அவர் கூறியிருக்கிறார்.  அவர் எப்படிப்பட்ட ஒப்பந்தப் பேச்சு நட த்தக்கூடியவர், உங்களை கடுமையான ஒப்பந்தப்பேச்சு நடத்துபவர் என்று அவர் கூறுயது பற்றி உங்கள் கருத்து?

மோதிஜி – இதைப் பற்றி நான் ஏதும் சொல்ல இயலாது ஏனென்றால் இது அவருடைய தாராள குணம்.  என்னைப் போன்ற ஒருவரைப் பற்றி….. வயதிலும் அவரை விட இளையவன்.  என்னைப் பொதுவாகப் பாராட்டுகிறார்.  பல்வேறு விஷயங்கள் குறித்துப் பாராட்டுகிறார்.  ஆனால் ஒரு விஷயம் சரியே, என்னுடைய, தேசத்தின் நலன்களையே…. முதன்மையாக கருதுகிறேன்.  

அந்த வகையிலே பாரதத்தின் நலன்களை முன்வைப்பதை அனைத்து மேடைகளிலும் செய்கிறேன்.  யாருக்கும் கெடுதல் செய்ய நான் முன்வைப்பதில்லை.   ஆக்கப்பூர்வமாக முன்வைக்கிறேன்.   யாருக்கும் தவறாக கூட படுவதில்லை.  ஆனால் என்னுடைய விண்ணப்பத்தை….. அனைவரும் அறிவார்கள் மோதி இருந்தால், இதை விண்ணப்பம் செய்வார் என்று.  இந்த வேலையைத் தானே என் நாட்டவர்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள்!!   என் தேசம் தான் எனக்கு எஜமானன்.  நான் அவர்களின் விருப்பங்களைத் தானே நிறைவேற்றுவேன். 

வினா – உங்கள் அமெரிக்க வருகையின் போது பல தலைவர்களுடன் நீங்கள் வெற்றிகரமான பல பேச்சுவார்த்தைகளை நட த்தினீர்கள்.  ஈலான் மஸ்க் ஜே டி வான்ஸ் துல்ஸி கப்பார்ட் விவேக் ராமஸ்வாமி.  அந்த சந்திப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும் விஷயம் ஏதும்?  முக்கியமான தீர்மானங்கள், முக்கிய நினைவுகள்?

மோதிஜி – அதாவது குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார்.  என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி அவருடைய மனதிலே, படிகள் செயல்திட்டம் தெளிவாக இருக்கிறது.  இந்த பின்புலத்தில் அவருடைய குழு உறுப்பினர்களை சந்தித்த போது, மிகச் சிறப்பான குழுவை அவர் தெரிவு செய்திருப்பதாக கருதுகிறேன். 

இத்தனை சிறப்பான குழு எனும் போது குடியரசுத் தலைவர் ட்ரம்புடைய, திட்டங்கள் என்னவோ அவற்றை….. அமல் செய்யும் வல்லமை படைத்த குழுவாக, என் உரையாடல்களிலிருந்து புரிந்து கொண்டேன்.  யாரை சந்திக்க வேண்டியிருந்த தோ, அது துல்ஸிஜியாகட்டும், அல்லது விவேக்ஜியாகட்டும் அல்லது எலான் மஸ்காகட்டும்.  அது ஒருவகை குடும்பச் சூழலாக இருந்தது.   அனைவரும் தங்கள் குடும்பத்தாரோடு சந்திக்க வந்திருந்தார்கள்.  எனக்கு எலான் மஸ்குடன் அறிமுகம் உண்டு நான்…… முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரைத் தெரியும்.  

தன் குடும்பத்தாரோடு குழந்தைகளோடு வந்திருந்தார் இந்த….. சூழல் தான் இருந்தது.  பல விஷயங்கள் பேசினோம் விவாதங்கள் என்னவோ நடந்தன.  இப்போது டோட்ஜ் என்று நடக்கிறதில்லையா அது சரியானதும் கூட.  எந்த வகையில் அவர் செய்கிறார்?   எனக்கும் சந்தோஷமான விஷயம் 2014இலே அவர் வந்தார்.  என்னுடைய தேசத்தை நோய்களிலிருந்தும் தவறான பழக்கங்களிலிருந்தும், எத்தனை விரைவாக விடுவிக்க முடிவது ஒருபக்கம்.  எடுத்துக்காட்டாக, எங்கள் நாட்டிலே நானே கவனித்திருக்கிறேன் 2014ற்குப் பிறகு, எங்களைப் பர்றி, இந்த உலகம் தழுவிய அளவுக்கு விவாதம் ஏதும் இல்லை, குடியரசுத் தலைவரின் டோட்ஜ் செயல்பாட்டோடு ஒப்பீடு செய்யும் அளவுக்கு.  ஆனால் நான் உதாரணம் கூறினால் எப்படி பணிகள் நடக்கிறன என்பதன் புரிதல் உங்களுக்கு ஏற்படலாம்.  

நான் கவனித்த வரையில், அரசாங்கத் திட்டங்களின் ஆதாயங்கள் இருக்கிறதே, குறிப்பாக மக்கள்நலன் தொடர்பான பணிகள்.   இதனால் ஆதாயம் பெற்ற சில பேர், பிறப்பே எடுத்தது கிடையாது.   ஆனால், போலிப் பெயர், கலியாணம் ஆகிறது, விதவைகள் ஆகிறார்கள்.  ஓய்வூதியம் அளித்தல் தொடங்கி விடுகிறது.  ஊனம் ஏற்பட்டு ஓய்வூதியம் கிடைக்கிறது.  நான் இதை ஆராயத் தொடங்கிய போது நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.  100 மில்லியன்…. அதாவது பத்துக் கோடிப் பேர்கள், இப்படிப்பட்ட பத்துக் கோடி போலிப் பெயர்கள், அவர்களை அமைப்பிலிருந்து வெளியேற்றினேன்.  மேலும் இதன் காரணமாக, பணம் மிச்சமானது நானும் நேரடியாகப் பணத்தை வங்கியில் போடுவதைத் தொடங்கினேன். 

தில்லியிலிருந்து அளிக்கப்படும் பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கைச் சென்று சேர வேண்டும்.  இவை காரணமாக என் தேசத்தின் சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்தப்பட்டு….. தவறான கைகளுக்குச் சென்ற பணம் மிச்சமாகி இருக்கிறது.  நேரடி ஆதாயப் பரிமாற்றம் காரணமாக, தொழில்நுட்பத்தை முழுமையாக நான் பயன்படுத்துகிறேன்.  இடைத்தரகர்கள் நீக்கப்பட்டார்கள்.  அரசாங்கத்திலே நாங்கள்,  பொருட்களை வாங்க ஜெம் தளத்தை தொழில்நுட்பத்தின் துணையோடு உருவாக்கினோம்.  ஆக அரசாங்கத்துக்கும் வாங்குவதில் செலவும் நேரமும் மிச்சப்படுகிறது.   போட்டித்தன்மை இருக்கிறது. 

நல்ல பொருட்கள் கிடைக்கின்றன.  அரசாங்கத்தில் தகவிணக்கங்கள் அதிகம் இருக்கின்றன.  நாங்கள் 40000 தகவிணக்கங்களுக்கு முடிவு கட்டினோம்.  ஏராளமான பழைய சட்டங்கள் இருந்தன.  அவசியமே இருக்கவில்லை.   சுமார் 1500 சட்டங்களுக்கு முடிவு கட்டினோம்.  ஆக நானும் ஒரு வகையிலே, அரசாங்கத்திலே இந்த மாதிரியான, விஷயங்கள், ஆளுமை செலுத்தி வந்தன.  இவற்றிலிருந்து விடுதலை அளித்தோம்.  இந்த விஷயங்கள் எல்லாம், அன்றாடப் பணிகளில்,  இவை பற்றி விவாதம் செய்வது இயல்பான ஒன்றாக இருக்கிறது.  

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் ஐந்தாவது பகுதி ….

வினா – இன்னொரு கடினமான உறவு என்று சொன்னால் அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவு.  மிக ஆபத்தான பிணக்குகளில் இது ஒன்று.  தீவிரமான சித்தாந்த முரண்பாடுகள் நிறைந்த இரு அணு ஆயுத சக்திகள்.  எதிர்காலத்திற்கு உள்ளே சென்று நோக்கும், மிகப்பெரிய அமைதி நிறுவனர் நீங்கள்.  ஒரு தொலைநோக்காளர் என்ற வகையிலே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு, இணக்கம், நட்புக்கான பாதை எது என்று கூறுங்களேன்.

மோதிஜி – ஒரு விஷயம், வரலாற்றின் சில விஷயங்கள் பற்றி, உலகில் பலருக்கு தெரிவதில்லை.  1947ற்கு முன்பாக, சுதந்திரப் போராட்ட்த்திலே அனைவரும் இணைந்தே போராடினார்கள்.  தேசம் சுதந்திரம் அடையும், அந்த வேளையை, மிகவும் எதிர்பார்ப்போடும் நோக்கிக் கொண்டிருந்த்து.   அந்த நேரத்திலே, என்ன சங்கடம் இருந்த்தோ, அதன் பல, தரப்புகள் பற்றி நீண்ட விவாதங்களில் ஈடுபடலாம்.  அந்த நேரத்தில் தலைமையில் இருந்தவர்கள் பாரதம் துண்டாடப்படுவதை ஏற்றுக் கொண்டார்கள்.  முஸல்மான்களுக்கென தனி தேசம் வேண்டுமென்றால் அதை அளியுங்கள்.  அப்படி உணர்ந்தார்கள். 

பாரத தேசத்தவர்கள் நெஞ்சினில் கடும்பாறை தாங்கி, மிகுந்த வலியோடு, இதையும் ஏற்றுக் கொண்டார்கள்.  ஆனால் ஏற்றுக் கொண்ட போதும், அதன் விளைவாக உடனடியாக இலட்சக்கணக்கான பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.  பாகிஸ்தானிலிருந்து பல ரயில்களில் மக்களின் சடலங்கள் வந்த வண்ணம் இருந்தன.  பயங்கரமான காட்சி அது.  அவர்கள் வேண்டியது கிடைத்த பிறகு என்ன உணர்ந்திருக்க வேண்டும் நமக்குக் கிடைத்து விட்ட்து, பாரதவாசிகள், கொடுத்து விட்டார்கள், பாரத்த்திற்கு நன்றி தெரிவிப்பதற்கு பதிலாக அவர்கள், தொடர்ச்சியாக பாரத்த்துடன் போர்ப்பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.  மறைமுகப் போர் நடக்கிறது.  இதில் சித்தாந்தமேதும் கிடையாது.  இது சித்தாந்தப் போர் அல்ல.  மக்களைக் கொல் சிதை.  தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்யும் வேலை நடக்கிறது.  இது எங்களுக்கு எதிராக மட்டுமல்ல.  இப்போது உலகத்திலே எங்கெல்லாம் தீவிரவாதச் சம்பவம் நடக்கிறதோ, ஏதோ ஒரு வகையிலே அதன் ஆணிவேர் பாகிஸ்தானிலே, அகப்படுகிறது. 

பாருங்கள் 9/11 எத்தனை பெரிய சம்பவம் நடந்த்து, அமெரிக்காவிலே.  தன் முக்கிய குற்றவாளியான ஓசாமா பின் லாதேன், அவர் கடைசியில் எங்கே இருந்தார்?  பாகிஸ்தானிலே தானே தஞ்சமடைந்தார்.  உலகம் அடையாளம் கண்டு கொண்ட்து, ஒரு வகையிலே, தீவிரவாத, இயல்பு, தீவிரவாத மனப்பான்மை, இது பாரத்த்திற்கு மட்டுமல்ல, மொத்த உலகிற்கும் தீவிரவாத மையமாக ஆகி விட்ட்து.  நாங்கள் தொடர்ந்து அவர்களுக்குக் கூறி வந்திருக்கிறோம், இந்தப் பாதையால் யாருக்கு நன்மை ஏற்படக்கூடும்?  நீங்கள் தீவிரவாதப் பாதையை விட்டொழியுங்கள்.  நாடு ஆதரிக்கும் தீவிரவாதம், நிறுத்தப்பட்டாக வேண்டும். 

நாடு சாரா தீவிரவாதிகளிடம் அனைத்தையும் விட்டு விட்டீர்களா?  அமைதியின் பொருட்டே நானே லாகூருக்கு சென்றேன்.  நான் பிரதம மந்திரி ஆன பிறகு, என்னுடைய பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானுக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தேன்.  நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும், என்றே விரும்புகிறோம் வளமும், அமைதியும் நிறைந்த பாதையிலே அவர்கள் பயணிக்க வேண்டும், அந்த நாட்டவரும், கஷ்ட்த்தில் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.   அங்கிருப்போரும் கூட, தங்கள் அன்றாட வாழ்க்கை இப்படி இருப்பதை, இப்படிப்பட்ட படுகொலைகள், தீவிரவாத சம்பவங்களை விரும்பவில்லை.  குழந்தைகள் இறக்கிறார்கள்.  தீவிரவாதிகள் முளைக்கிறார்கள்.  மக்களின் வாழ்க்கை நாசமாகிறது. 

வினா – உங்களுடைய கடந்தகால முயற்சிகள் தொடர்பாக, பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் வகையில், எதிர்காலப் பாதையை ஏற்படுத்தக்கூடிய முறையிலே, சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் இருக்கிறதா? 

மோதிஜி – மிக முக்கியமான விஷயம் உறவுகளை மேம்படுத்தும் வகையில் மிகப்பெரிய திருப்புமுனை என்றால், பிரதமர் ஆனவுடனேயே, என்னுடைய சபதமேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்த்து.  இது உள்ளபடியே மிகப்பெரிய சம்பவம் ஆகும்.  பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இது நடந்த்து.  என்னிடம் 2013இலே யாரெல்லாம் என்னிடம் வினா எழுப்பினார்களோ, மோதியின் அயலுறவுக்கு என்ன ஆகும்?  அவர்கள் அனைவரும் இதைக் கேள்விப்பட்ட போது, மோதி அவர்கள், சபதமேற்பு விழாவிற்கு சார்க் நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறார் என்றதும், திகைத்துப் போனார்கள். 

இந்தத் தீர்மானம் இந்தச் செயல்பாடு தொடர்பாக, எங்களுடைய அந்நாளைய குடியரசுத் தலைவர் பிரணவ் முகர்ஜி அவர்கள், அவர்கள் தன்னுடைய புத்தகத்திலே எழுதியிருந்தார், அதிலே இந்தச் சம்பவம் குறித்து மிகச் சிறப்பாக வர்ணித்திருக்கிறார்.  உண்மையிலேயே பாரத்த்தின் அயலுறவுக் கொள்கை, மிகவும் தெளிவாக இருக்கிறது.  தன்னம்பிக்கை நிறைந்த்தாக இருக்கிறது.  அது கண்கூடாக காணப்பட்ட்து.  பாரதம் அமைதிக்காக கச்சை கட்டிக் கொண்டிருக்கிறது, இது குறித்த செய்தி உலகமெங்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்ட்து.  இருந்தும் விளைவு சுமுகமாக இருக்கவில்லை. 

வினா – இப்போது லகுவான ஒரு வினா.  யார் சிறந்த கிரிக்கெட் அணி – இந்தியாவா பாகிஸ்தானா?  இரு அணிகளுக்கும் இடையே தீவிரமான போட்டாபோட்டி மைதானத்திலே இருக்கும்.  நீங்கள் பேசிய புவிசார் அரசியல் அழுத்தங்கள் இருக்கும் வேளையிலே, கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் சிறப்பான உறவுகளை ஏற்படுத்த முடியுமா?

மோதிஜி – அதாவது விளையாட்டுக்கள் என்று பார்த்தால், உலகமெங்கிலும், சக்தியை அளிக்கும் பணியைச் செய்கின்றன.  விட்டுக்கொடுக்கும் தகைமை, அனைவரையும் இணைக்கும் பணியை ஆற்றுகின்றது.  நான் விளையாட்டுக்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதை விரும்பவில்லை.  மனித வளர்ச்சியின் மிக முக்கியமான காரணியாக விளையாட்டுக்களை நான் கருதுகிறேன்.  விளையாட்டுக்களை, நான் எப்போதுமே ஆதரித்து வந்திருக்கிறேன். 

அடுத்த விஷயம்…. யார் சிறப்பானவர் யார் இல்லை எனும் போது, இதை, விளையாட்டுத் திறனோடு தொடர்பு படுத்தினால், நான் ஒன்றும் வல்லுனர் அல்ல.  வல்லுனர் யாரோ, அவரால் மட்டுமே பதில் கூற முடியும், யாருடைய ஆட்டம் சிறப்பு எந்த வீர்ருடைய ஆட்டம் சிறப்பு என்று.  ஆனால், விளைவுகளின் மூலம், என்ன தெரிய வருகிறதென்றால், சில நாட்கள் முன்பு தான், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டம் நடைபெற்றது.  அதிலே, கிடைத்த விளைவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம், யார் மேம்பட்ட அணி என்று.  அது காட்டிக் கொடுக்கும். 

வினா – நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மிகப்பெரிய போட்டாபோட்டி புத்தகத்தை பார்த்தேன்.  அதிலே சில அற்புதமான வீர்ர்கள் அற்புதமான ஆட்டங்கள் பற்றிப் படித்தேன்.  அதே போலத் தான் கால்பந்தாட்டமும்.  கால்பந்தாட்டம் இந்தியாவிலே மிகவும் பிரபலமானது.  மேலும் ஒரு கடினமான வினா.  யார் அனைத்துக் காலங்களுக்குமான மிகச் சிறப்பான கால்பந்தாட்ட வீர்ர்?  லயனோல் மெஸ்ஸி, பேலே, மாரடோனா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜிடான்.  யார் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீர்ர் என்று கூறுவீர்கள்?

விடை – நீங்கள் சொல்வது சரிதான் அதாவது பாரத்த்தின் பல இடங்களில் காலபந்தாட்டம், சிறப்பாக விளையாடப் படுகிறது மேலும் கால்பந்தாட்ட்ட்தில் எங்களுடைய, பெண்கள் அணியும் நன்றாகச் செயல்படுகிறது.  ஆண்கள் அணியும் நன்கு விளையாடுகிறார்கள்.  ஆனால் பழைய காலம் பற்றிப் பேசினால், 80கள் காலகட்டம் பற்றி.  அப்போது மரடோனாவின் பெயர் எப்போதும் முன்னே வரும்.  ஒருவேளை அவர் அந்த, தலைமுறையினருக்கு ஒரு, ஹீரோவாக்வும் இருந்திருக்கலாம்.  இன்றைய தலைமுறையினர் பற்றிக் கேட்டீர்களென்று சொன்னால், மெஸ்ஸி என்று தான் சொல்லுவார்கள்.  ஆனால் எனக்கு, (சிரிப்பு) சுவாரசியமான சம்பவத்தை நீங்கள் கேட்ட்தால் பகிர்ந்து கொள்கிறேன்.  எங்கள் நாட்டிலே, மத்திய பிரதேசம் என்று ஒரு மாநிலம் உண்டு.  இந்தியாவின் மத்திய பாகத்திலே.  அங்கே ஷஹ்டோல் என்று ஒரு மாவட்டம் உண்டு.  அது முழுக்க பழங்குடியினர் பகுதி… நிறைய பழங்குடிகள் வசிக்கிறார்கள்.  அங்கே சுயவுதவிக் குழுக்களை நட்த்தும் பழங்குடிப் பெண்கள், அங்கே அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன் எனக்கு சுயவுதவிக் குழுக்களோடு பேசுவதில் அதிக நாட்டமுண்டு, சந்திக்கச் சென்றேன்.  அங்கே நான் கவனித்தேன் சில, விளையாட்டுக்களின் உடைகளை அணிந்த 80-100 இளைஞர்கள், kகுழந்தைகள் சற்று வளர்ந்த பையன்கள் இளைஞர்கள் என இருந்தார்கள். 

அவர்களிடம், நான் இயல்பாகச் சென்றேன்.  அட எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் மினி ப்ராசிலைச் சேர்ந்தவர்கள் என்றார்கள்.   இந்த மினி ப்ராசில் என்றால் என்ன என்றேன் நான்.  எங்களுடைய கிராமத்தை மினி ப்ராசில் என்பார்கள் என்றார்கள்.  எப்படி மினி ப்ராசீல் என்பார்கள் என்றேன் நான்.  எங்களுடைய கிராமத்திலிருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் 4 தலைமுறைகளாக, மக்கள் கால்பந்தாட்டம் ஆடுவார்கள்.  சுமார் 80 தேசிய அளவிலான வீர்ர்கள், எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.  கிராமம் முழுவதும் கால்பந்தாட்டமே மூச்சாக கொண்டிருக்கிறது. 

அவர்கள் கூறினார்கள் எங்கள் கிராமத்தின் வருடாந்திர ஆட்டம் நடக்கும் போது, 20000-30000 பேர்கள் அக்கம்பக்க கிராமங்களிலிருந்து வருவார்கள் என்றார்கள்.  ஆக, பாரதத்திலே கால்பந்தாட்டம் தொடர்பாக, இப்போது ஆர்வம் அதீகரிக்கிறது.  இதை நான் நல்ல அறிகுறியாக காண்கிறேன்.  இது குழுவுணர்வை நன்கு உருவாக்குகிறது.  (சிரிப்பு)

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் நான்காவது பகுதி ….

வினா – ஆனால் இந்தியா என்ற நாடு பற்றிய கருத்தையும் உருவாக்கினார்கள்.  இந்தியாவை ஒருங்கிணைக்கும் கருத்து என்ன?  ஒரு நாடாக இந்தியா என்பது என்ன?  இத்தனை வேறுபட்ட கூறுகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் இணைக்கும், இந்தியாவை ஒரு நாடாக இணைக்கும் அடிப்படைத் த்த்துவம் என்ன?   

மோதிஜி அதாவது ஒரு பாரதம், இதுவொரு, கலாச்சார அடையாளம்.  ஒரு கலாச்சார்ரீதியிலான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நாகரீகம்.  பாரத்த்தின் விசாலத்தன்மையைப் பாருங்கள்.  நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள், ஆயிரக்கணக்கான வழக்குமொழிகள், நீங்கள் பாரத்த்தின் சில மைல்கள் சென்றால் நாங்கள் சொல்லுவோம், 20 மைல்கள் சென்றால் வழக்குமொழி மாறிவிடும்.  வழக்கங்கள் மாறிவிடும் சமையல்முறை மாறிவிடும்.  உடையணிகள் மாறிவிடும்.  தென்னாடு முதல் வடநாடு வரை, தேசம் முழுக்க பன்முகத்தன்மை நிறைந்து கிடக்கிறது. 

ஆனால் மேலும் ஆழமாக ஆராய்ந்தால், அப்போது உங்களுக்கு, ஒரு, இழை புலப்படும் எடுத்துக்காட்டாக எங்கள் நாட்டில், பகவான் இராமன் பற்றி அனைவருமே விரித்துப் பேசுவார்கள்.  இராமனின் பெயரை… அனைத்து இடங்களிலும் நீங்கள் கேட்கலாம்.  ஆனால் நீங்கள் பார்த்தீர்களானால், தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி, ஜம்மு கஷ்மீரம் வரை சென்றால், தங்கள் பெயரிலே இராமன் உடைய பலர் தென்படுவார்கள்.  குஜராத்திற்குச் சென்றால் ராம்பாய் என்பார்கள், தமிழ்நாட்டுக்குச் சென்றால் ராமச்சந்திரன் என்பார்கள், மகாராஷ்டிரம் சென்றால் ராம்பாவு என்பார்கள்.  அதாவது இந்த சிறப்புத்தன்மை தான், பாரத்த்தை ஒன்றிணைக்கிறது. 

எடுத்துக்காட்டாக, நீங்கள், எங்கள் தேசத்தில் நீராடினீர்கள் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்?  பக்கெட்டிலிருந்து நீரை மொண்டு கொள்வீர்கள்.  ஆனால் கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ.  அதாவது பாரத்த்தின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் நதிகளை நினைந்து பார்த்து,  நர்மதே சிந்து காவேரி, ஜலே அஸ்மின், சன்னிதிம் குரு.  அதாவது, அனைத்து நதிகளின் நீரைக்கொண்டு நான் நீராடுகிறேன்.  மொத்த தேசத்தின் நதிகள் எங்கள் நாட்டில் சங்கல்ப பாரம்பரியம் உண்டு.  எந்த ஒரு பணியைச் செய்தாலும், பூஜையிலே, சங்கல்பம் செய்வோம்.  சங்கல்பத்தால் பெரிய வரலாற்றையே எழுதலாம். 

அதாவது, எந்த வகையிலே, தரவுகள் சேகரிப்பு என் தேசத்திலே (சிரிப்பு) செய்தார்கள் என்றால், சாஸ்திரங்கள் எப்படி பணியாற்றின என்பது தனித்தன்மையான விஷயம்.  ஒருவர் சங்கல்பம் செய்கிறார் பூஜை செய்கிறார் திருமணம் நடக்கிறது, அப்போது, மொத்த பிரும்மாண்ட்த்திலிருந்து தொடங்குவார்கள்.  ஜம்புத்வீபே பரதக்கண்டே ஆர்யவர்த்தம் முதல் ஆரம்பித்து, கிராமம் வரை வருவார்கள், பிறகு குடும்பம் வரை வருவார்கள், பிறகு குடும்பத்தின் தேவதையை நினைவில் கொள்வார்கள்.  ஆச்சரியம் என்னவென்றால் இன்றும் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் இது நடக்கிறது.  ஆனால் மேற்கத்திய மாதிரியோ உலகின் வேறு மாதிரிகளோ துரதிர்ஷ்டவசமாக எப்படி இருக்கிறது?  ஆட்சிமுறையை அடிப்படையாக வைத்தே கணக்கில் கொள்ளப்படுகிறது.  பாரத்த்திலும் ஆட்சிமுறை பலவகையாக இருந்திருக்கிறது. 

பல்வேறுபட்ட தனித்தனித் துண்டுகளாகப் புலப்படும்.  அரசர் பேரரசர்களின் எண்ணிக்கையைப் புலப்படுத்தும்.  ஆனால் பாரத்த்தின் ஒருமைப்பாடு, இந்த கலாச்சார பிணைப்புகளால் நீடித்த்து.  எங்கள் தேசத்தில் தீர்த்த யாத்திரைப் பாரம்பரியம் உண்டு.  4 புனித்த் தலங்களை சங்கராச்சாரியார் நிறுவினார்.  இன்றும் கூட இலட்சோபலட்சம் பேர்கள் ஓரிட்த்திலிருந்து வேறு இட்த்துக்கு, தலயாத்திரை மேற்கொள்கிறார்கள்.   எங்கள் தேசத்தில் காசிக்கு மக்கள் வருவார்கள், இராமேஸ்வரத்திலிருந்து கடல்நீரை எடுத்துக் கொள்ளும், அநேக வகைப்பட்ட மக்களைப் பார்க்கலாம்.  அந்த வகையிலே பார்த்தால், எங்கள் பஞ்சாங்கத்தை கவனித்தால், உங்கள் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை தேசத்திலே பார்க்கலாம். 

வினா – நீங்கள் நவீன இந்தியாவின் வரலாற்று நிறுவுதலைப் பார்க்கும் போது, உங்களோடு சேர்த்து, காந்தியடிகள், இதுவரை வாழ்ந்த மிக முக்கியமான மனிதர்களுள் ஒருவர்.  இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் அவரும் ஒருவர்.  காந்தியடிகள் குறித்து வியப்பேற்படுத்திய ஒரு விஷயம் என்ன?

மோதிஜி – உங்களுக்கே தெரியும் நான் பிறந்த்து, குஜராத் மாநிலத்தில்.  என்னுடைய தாய்மொழி குஜராத்தி. காந்தியடிகளும் குஜராத்திலே தான் பிறந்தார்.  அவருடைய தாய்மொழியும் கூட, குஜராத்தி தான்.  அவர் பேரிஸ்டர் ஆனார், அயல்நாடுகளில் வாழ்ந்தார்.  அவருக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன.  ஆனால் உள்ளார்ந்து உறையும் உணர்வு, குடும்பம் அவருக்கு அளித்த நற்பண்புகள், அனைத்தையும் துறந்து விட்டு, பாரத நாட்டவருக்குச் சேவைபுரிய வைத்த்து.  பாரத்த்தின் சுதந்திர வேள்வியில்… அவர் ஈடுபட்டார்.  காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார்.  எடுத்துக்காட்டாகத் தூய்மை.  அவர் தூய்மையின் நேசனாகவும் இருந்தார் தாமே கூட தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.  எங்கே சென்றாலும் தூய்மை பற்றியே பேசினார். 

இன்னொரு விஷயம் பாரதம் சுதந்திரப் போரில் ஈடுபட்ட்து.  பாரதம், முகலாயர்களாக இருக்கலாம், ஆங்கிலேயர்களாக இருக்கலாம் வேறு யாராகவும் இருக்கலாம், இந்தியாவினுடைய பலநூறு ஆண்டுக்கால அடிமைத்தளைகளைத் தாண்டி, அனைத்துக் காலகட்டங்களிலும், அனைத்து பகுதிகளிலே எங்காவது இட்த்திலே, சுதந்திரத்தீ எரியாமல் இருந்த்தில்லை.  இலட்சோபலட்சம் மக்கள் உயிர்த்தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்.  இலட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.  சுதந்திரத்திற்காக இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.  தங்கள் இளமையை சிறைகளில் தொலைத்திருக்கிறார்கள். 

அண்ணல் காந்தியடிகளும் சுதந்திர வேள்வியில் ஈடுபட்டார் ஆனால் என்ன வித்தியாசம்?  அவர்களெல்லாம், தவசீலர்கள் வீரத்திருமகன்கள் தியாகிகள் தேசத்திற்காகத் தியாகம் புரிந்தவர்கள்.  ஆனால் வந்தார்கள் தேசத்திற்காக உயிரை அர்ப்பணித்தார்கள்.  பாரம்பரியம் மிகவும் வலுவாக இருந்த்து.  ஆனால், காந்தியடிகளோ, மக்கள் இயக்கத்தை ஏற்படுத்தினார்.  ஆனால் சாதாரண மக்களில் ஒருவர் துப்புறவு செய்தால் நீ சுதந்திரத்திற்காகச் செய்கிறாய், ஒருவருக்கு கல்வி பயில்வித்தால், நீ சுதந்திரத்திற்காகச் செய்கிறாய், நீ சர்க்காவில் நூல் நூற்கிறாய், நீ சுதந்திரப் பணியில் ஈடுபடுகிறாய்.  நீ, தொழுநோயாளிகள் சேவையில் ஈடுபட்டால் சுதந்திரத்திற்காகச் செய்கிறாய்.  அவர் அனைத்துப் பணிகளையும் சுதந்திரத்தின் வண்ணங்களால் நிறைத்தார்.  இதன் காரணமாக சாமான்ய மக்களும் தாங்களும் சுதந்திர வேள்வியில் பங்குதார்ர்கள் என்று உணர்ந்தார்கள்.  இப்படிப்பட்ட மக்கள் இயக்கத்தை காந்தியடிகள் ஏற்படுத்தினார்.  இதனை, ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

ஆங்கிலேயர்களுக்கு சற்றும் புரியவில்லை, ஒரு சிட்டிகை உப்பு, தாண்டி யாத்திரை, ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வல்லது அதைச் செய்தும் காட்டினார்.  இதுவே வல்லமை.  அவருடைய வாழ்க்கை நடவடிக்கை வழிமுறை, அவருடைய தோற்றம் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தின.  நானே கூட பார்த்திருக்கிறேன், அவர்பற்றிய, பல சிறியபெரிய சம்பவங்கள் புகழ் பெற்றதாக இருக்கின்றன.  அவர் ஒருமுறை வட்டமேஜை மாநாட்டிலே, இந்திய விடுதலை குறித்துப் பேச அவர் வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்றிருந்தார். 

பக்கிங்ஹாம் மாளிகையில் ஜார்ஜ் மன்னரோடு அவர், சந்திக்கும் நேரம் அது.  ஆனால் காந்தியடிகளோ வேட்டியையும் மேல் துண்டையும் போர்த்திக் கொண்டு சென்று விட்டார்.  அங்கே இருந்த காவலாளிகளோ இப்படிப்பட்ட உடையை உடுத்திக் கொண்டு, அரசரைச் சந்திக்க வந்திருக்கிறாரே என வினவினார்கள்.  நான் ஆடை உடுத்திக் கொள்ள என்ன தேவை இருக்கிறது என்றார்.  எத்தனை ஆடை உங்கள் அரசரின் மீது இருக்கிறதோ, அது எங்கள் இருவருக்குமே போதுமானது.  இப்படிப்பட்ட நகைச்சுவை இயல்பு உடையவர் அவர்.  இப்படி காந்தியடிகளின் பல சிறப்புக் குணங்கள் உண்டு. 

என்னைக் கவரும் மேலும் ஒரு விஷயம், சமூகத்தன்மையை விழிப்படையச் செய்வது, மக்கள் சக்தியை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.   அது இன்றும்கூட மகத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். நான் எந்தப் பணியைச் செய்தாலும் என்னுடைய முயற்சி என்னவென்றால், சாமான்ய மக்களை இணைத்துப் பயணிப்பது.  அதிகபட்ச மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.  அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்.  இந்த உணர்வு என் மனதில் கிடையாது.  சமுதாயத்தின் சக்தி அளவிட முடியாத ஒன்று.  இதுவே என்னுடைய நம்பிக்கை. 

வினா – ஆக அவர் தான் 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவர்.  நீங்கள் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர்.  இந்த இரண்டு நூற்றாண்டுகள் வேறுபட்டவை.  நீங்கள் புவிசார் அரசியலின் வித்தகராக விளங்குகிறீர்கள்.  அந்த வகையில் மிகச் சக்திவாய்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நட்த்தும் போது, நேசிக்கப்படுவது சிறந்த்தா, அச்சமேற்படுத்துவது சிறந்த்தா?  உங்களின் நிபுணத்துவமே அனைவராலும் நேசிக்கப்படுவது, ஆனால் அனைவருக்கும் உங்கள் பலத்தின் மீது அச்சமுண்டு.  இந்த நிதானத்தை எப்படி தக்க வைக்கிறீர்கள்? அந்த நிதானம் பற்றி?

மோதிஜி – முதல் விஷயம் என்னவென்றால், இப்படி ஒப்பீடு செய்வது, உகந்ததாக இருக்காது.  அதாவது 20ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர், காந்தியடிகள்.  அது 20 ஆகட்டும் 21ஆகட்டும் 22 ஆகட்டும்.  காந்தி மாபெரும் தலைவராக அனைத்து நூற்றாண்டுகளுக்கும் இருப்பார்.  வரவிருக்கும் நூற்றாண்டுகளிலும் காந்தியடிகளே மாபெரும் தலைவர்.  ஏனென்றால் நான் அவரை அந்த பிம்பமாகவே பார்க்கிறேன் இன்றும் கூட அவரை, உகந்தவராகவே காண்கிறேன். 

அதே வேளையில் மோதி பற்றிப் பேசினால், என்னிடம் ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், என் தேசம் எத்தனை பெரியதோ அதை விடப் பெரியதாக பொறுப்பு இல்லை.  என் தேசத்தின் மகத்துவத்தை விட தனிநபர் மகத்துவமானவர் அல்ல.  என்னுடைய பலம் என்றால், அது மோதி அல்ல.  140 கோடி நாட்டுமக்கள்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரப் பாரம்பரியம், இதுவே என் வல்லமை ஆக நான் எங்கே சென்றாலும், மோதி செல்வதில்லை.  பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வேதம் தொடங்கி விவேகானந்தர் வரையான பாரம்பரியத்தை, 140 கோடி நாட்டு மக்களுடைய, கனவுகளையும் எதிர்பார்ப்புக்களையும் தாங்கியே நான் பயணிக்கிறேன். 

அந்த வகையிலே நான் உலக நாடுகளின் தலைவர்களோடு கைகுலுக்கும் போது, மோதி கை குலுக்கவில்லை.  140 கோடி மக்களின் கைகள் குலுக்குகிறார்கள்.  வல்லமை மோதியுடையது கிடையாது.  வல்லமை பாரத்த்தினுடையது.  மேலும் இதுதான் காரணம்.  எனக்கு நினைவிருக்கிறது 2013இலே, என்னுடைய, கட்சி என்னை பிரதம மந்திரி வேட்பாளராகத் தேர்வு செய்த போது, என்னைப் பற்றி ஒரே ஒரு விமர்சனம் தான் முன்வைக்கப்பட்ட்து.  அது பரவலாகவும் பேசப்பட்ட்து. 

மோதி ஒரு மாநிலத்தின் தலைவர் தானே.  ஒரு மாநிலத்தை மட்டுமே நிர்வகித்திருக்கிறார்.  அவருக்கு அயலுறவு பற்றி என்ன தெரியும்?  அவர் அயல்நாடுகளுக்குச் சென்று என்ன செய்வார்?  இப்படி பல விஷயங்கள் பேசப்பட்டன.  என்னைப் பேட்டி கண்டவர்கள் அனைவரும், இதே கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.  அதற்கு நான் விடையளித்தேன்.  நான் கூறினேன், பாருங்கள் ஐயா.  ஒரு பத்திரிக்கை பேட்டியில் என்னால் மொத்த அயலுறவு பற்றி விளங்க வைக்க முடியாது.  அது அவசியமும் கிடையாது.  ஆனால் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்.  அதாவது இந்தியா, கண்களை, தாழ்த்தியும் பேசாது, கண்களை, மேலுயர்த்தியும் பேசாது, ஆனால் இப்போது இந்தியா, கண்ணோடு கண் நோக்கிப் பேசும்.  நான்… 2013இலே இந்த வகையிலே பேசினேன்.  இன்றும் கூட, இந்த எண்ணப்படியே… நடக்கிறேன். 

எனக்கு என் தேசம் தான் முதன்மையானது.   ஆனால், யாரையாவது தாழ்த்திப் பேசுவது, யாரைப்பற்றியும் பொல்லாங்கு கூறுவது, இது என்னுடைய கலாச்சாரப் பண்பும் இல்லை, என் கலாச்சாரப் பாரம்பரியமும் இல்லை.  நாங்கள் விரும்புவதெல்லாம் என்னவென்றால், மனித சமூகம் முழுமையின் நலன் மட்டுமே.  பாரதம் உலகம் வாழ வேண்டும் என்றே விரும்பி வந்திருக்கிறது.  உலக சகோதரத்துவத்தினையே சிந்தித்திருக்கிறது.  பல நூற்றாண்டுகள் முன்னரே கூட உலகையே ஓர் குடும்பமாகப் பார்த்தவர்கள் நாங்கள்.  ஒட்டுமொத்த பிரும்மாண்டத்தின் நலன் பற்றிச் சிந்திக்கும், மக்கள் நாங்கள். 

அந்த வகையிலே நீங்களே கவனித்திருக்கலாம், நமது உரையாடலில் என்ன நடக்கிறது?  நான் உலகத்தின் முன்பாக, பல்வேறு கருத்துக்களை முன்வைத்தேன்.  அந்தக் கருத்துக்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்!!  எடுத்துக்காட்டாய் ஒரு விஷயம் கூறியிருந்தேன்.  சுற்றுச்சூழல் பற்றிப் விவாதிக்கும் போது நான் கூறினேன்,  ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு மின்தொகுப்பு.  இது ஒரு பக்கம் கோவிட் வாட்டிக் கொண்டிருந்த போது, ஜி 20இலே தான் நான் பேசியிருந்தேன். 

நான் கூறினேன்… ஐயா எங்களுடைய, ஒரு ஆரோக்கியம் பற்றிய கோட்பாட்டை, நாம் மேம்படுத்த வேண்டுமென்றேன்.  அதாவது எப்போதுமே என்னுடைய முயற்சி என்னவாக இருந்த்து என்றால், எடுத்துக்காட்டாய் ஜி 20யுடைய என்னுடைய லோகோ, ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்.  அனைத்து விஷயங்களிலும் எங்களை வார்த்தெடுக்கும் பண்பான ஒற்றுமையை இணைத்தோம்.  இப்போது நாங்கள் புதுப்பிக்கவல்ல எரிசக்தி தொடர்பான இயக்கத்தை முடுக்கினோம்……………. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை ஏற்படுத்தினோம்.  ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு மின்தொகுப்பு.   உலகம் தொடர்பாக அதே உணர்வு. 

கோவிட் காலத்தில் ஆரோக்கியம் தொடர்பாக, ஒரு பூமி ஒரு ஆரோக்கியம் என்றோம்.  ஒரு பூமி ஒரு ஆரோக்கியம் எனும் போது, அனைத்து உயிர்களும் அது தாவரங்களாகட்டும், விலங்கினங்கள் ஆகட்டும், அல்லது மனிதர்களாகட்டும்.  அதாவது… எப்போதும் எங்கள் முயற்சி என்னவென்றால், உலகத்தின் நலனுக்கு ஆதாரமான விஷயங்கள் தொடர்பாக நாம் முயற்சி செய்ய வேண்டும்.  நாமனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். 

இன்று உலகம், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது.  தனியாக யாராலும் செயல்பட முடியாது.  இன்று உலகம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது.  தனியாக எதையும் செய்ய முடியாது.  அந்த வகையிலே அனைவரோடும் இணைந்து செயல்பட வேண்டும்.  மேலும் அனைவரும் அனைவரோடும் இசைவாகப் பயணிக்க வேண்டும்.  நாம் இந்தப் பணியை முன்னெடுக்க முடியும்.  ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்பு பிறந்த்து, உலகப்போருக்குப் பின்னால்.  ஆனால் காலத்தால், அதில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் நடக்கவில்லை.  இதன் காரணமாக அதனால், எத்தனை செய்ய முடிந்த்து செய்ய முடியவில்லை என்ற விவாதம் நடக்கிறது. 

வினா – நீங்கள் உங்கள் அனுபவங்கள் பற்றிப் பேசினீர்கள், உலகின் பல இடங்களில் போர் நிலவும் வேளையிலே புவிசார் அரசியலில் மிகப்பெரிய சமரஸம் உருவாக்கும் உங்கள் பலம் குறித்துப் பேசினீர்கள்.   அமைதியை ஏற்படுத்த உங்களுடைய செயல்முறையை விளக்க முடியுமா?  போரில் ஈடுபட்டிருக்கும் இரு நாடுகளுக்கிடையே எப்படி சமரஸத்தை ஏற்படுத்த முடியும்?  எடுத்துக்காட்டாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே. 

மோதிஜி – கவனியுங்கள் நான் பிரதிநிதியாக விளங்கும் தேசம், பகவான் புத்தனின் பூமியாகும்.  நான் பிரதிநிதியாக விளங்கும் தேசம், பகவான் காந்தியடிகளின் பூமியாகும்.  இவர்கள் எப்படிப்பட்ட மாமனிதர்கள் என்றால், இவர்களுடைய உபதேசங்கள், இவர்களின் சொல் செயல் நோக்கம், முழுமையாக அமைதிக்கே அர்ப்பணிக்கப்பட்ட்து.  அந்த வகையிலே, கலாச்சார்ரீதியாக வரலாற்றுரீதியாக எங்களுடைய பின்புலம் எந்த அளவுக்கு பலமானதென்றால், நாங்கள் அமைதி குறித்துப் பேசும் வேளையிலே, உலகம்… எங்களுக்குச் செவிமடுக்கிறது. 

ஏனென்றால் இது புத்தனின் பூமி.  இது காந்தியடிகளின் பூமி.  உலகம் நாங்கள் சொல்வதைக் கேட்கிறது.  மேலும் நாங்கள், போரின் தரப்பாளர்கள் அல்ல.  நாங்கள் சமரஸத்தின் ஆதரவாளர்கள்.  நாங்கள் இயற்கையோடும் பிணக்கை விரும்பவில்லை, நாங்கள் நாடுகளுக்கிடையேயும் போரை விரும்பவில்லை.  நாங்கள் சமரஸ விரும்பும் மக்கள்.  இதில் எங்களால் பங்களிப்பு ஏதும் அளிக்க முடிந்தால், நாங்கள் எப்போதுமே முயன்று வந்திருக்கிறோம்.  எடுத்துக்காட்டாக, எங்களுக்கு ரஷியாவுடனும் நெருங்கிய உறவு, உக்ரைனுடனும் நெருங்கிய உறவு. 

என்னால் ஜனாதிபதி புடினுடன் அமர்ந்து கொண்டு உலகிற்கு உரைக்க முடியும், இது போருக்கான காலம் அல்ல என்று.  நான் ஜெலன்ஸிக்கும் ஒரு நண்பன் என்ற முறையிலே கூற முடியும், ஐயா, உலகம் எத்தனை தான் உங்களுக்குத் துணையாய் நின்றாலும், போர்க்களத்திலே எப்போதும், முடிவுகளைக் காண முடியாது.  முடிவுகள் எப்போதும் மேஜையிலே தான் எட்ட முடியும்.  முடிவுகளை எப்போது எட்ட முடியுமென்றால், அந்த மேஜையிலே, உக்ரைனும் ரஷியாவும் இருவரும் இருக்கும் போது தான் உலகனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக என்ன தான் மண்டையை உடைத்துக் கொண்டாலும், அதனால் முடிவுகளை எட்ட முடியாது.  இருதரப்பும் இருக்க வேண்டியது அவசியம். 

தொடக்கத்தில் புரிய வைக்க முடியவில்லை ஆனால் இன்று ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையால், எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ரஷியா உக்ரைன் இருவரும்… நான் நம்பிக்கையாளன்.  அவர்கள் நிறைய, ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.  உலகிற்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  உலகத் தென்னாடுகளுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  உலகம் முழுவதிலும் உணவு, எரிபொருள் மற்றும், உரங்கள், சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.  மிக விரைவாக அமைதி திரும்ப வேண்டும் என்று உலகம் விரும்புகிறது.  நான் அமைதியின் தரப்பாளன் என்று எப்போதுமே கூறி வந்திருக்கிறேன்.  நான் சார்பில்லாதவன் இல்லை நான் அமைதித் தரப்பாளன்.  தொடர்ந்து முயன்று வருகிறேன். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் மூன்றாவது பகுதி..

வினா – நீங்கள் கூறியது போல இந்தச் சிறுவன் கண்ட கனவுகளில் ஒன்று இன்று உங்களோடு உரையாடுவது தான்.  இது நிஜமா என்று என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.  17 வயதிலே மிக சுவாரசியமான ஒரு விஷயம் நடந்தது.  நீங்கள் வீட்டைத் துறந்து ஈராண்டுகள் வரை இமயமலையில் சஞ்சாரம் செய்தீர்கள்.  காரணத்தை அறியவும் நிலையான சத்தியத்தைத் தேடியும் கடவுளை நாடியும் சென்றீர்கள்.  உங்கள் வாழ்வின் இந்தக் காலகட்டம் பற்றி அதிகம் தெரியவில்லை.  மிக குறைந்த தேவைகளோடு நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள்,  ஒரு யோகியைப் போல.  பல நேரம் தலைக்கு மேலே கூரை கூட இருக்கவில்லை.   அந்தக் காலகட்ட த்தின் நினைவில் கொள்ளத்தக்க ஆன்மீக அனுபவங்கள் என்னவாக இருந்தன என்று கூறுங்களேன்!!

மோதிஜி – கடினமாக நீங்கள் உழைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது.  பாருங்கள், நான் இந்த விஷயம் தொடர்பாக அதிகம் பேசுவதில்லை என்றாலும், சில புற விஷயங்கள் குறித்துக் கண்டிப்பாக நான் பகிருகிறேன்.  அப்போது நான், ஒரு சிறிய இட த்தில் வசித்து வந்தேன்.  எங்களுடைய வாழ்க்கை சமூகமயமானதொரு வாழ்க்கை தான். 

ஏனென்றால்…. மக்களுக்கு மத்தியிலே வாழ்வது சமூகப்பாங்கான வாழ்க்கை.  கிராமத்தில் இருந்த ஒரு நூலகம் செல்வது அங்கே புத்தகங்களைப் படிப்பது.  அந்தப் புத்தகங்களை நான் படிக்கும் போது, எனக்கு என்ன தோன்றும் என்றால் நான் என் வாழ்க்கையை, நானும் ஏன் அப்படி பயிலக்கூடாது அப்படிச் செய்யலாமே!! நான் ஸ்வாமி விவேகானந்தர் பற்றிப் படிக்கும் போதும், சத்ரபதி சிவாஜி மகராஜ் பற்றிப் படிக்கும் போதும், இப்படி எப்படி வாழ்ந்தார்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் என்று தோன்றும்!!! 

இதற்காக நானுமே கூட என்னிடம், பல சோதனைகளை மேற்கொண்டேன், என்னிடத்தில்.   இந்தச் சோதனைகளின் நிலை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இவை, உடலோடு தொடர்புடையனவாக இருந்தன.  பொதுவாக, எங்கள் ஊரில் அதிக குளிர் இருக்காது.  ஆனால் டிசம்பர் மாதத்தில், சில சமயம் குளிரும்.  இருந்தாலும் கூட, இரவிலே, அப்போது, இயல்பாக சற்றுக் குளிரத்தான் செய்யும். 

சில சமயம் நான் தீர்மானம் செய்வேன், இன்று நான் திறந்தவெளியிலே, உறங்குவேன் என்று.  உடலைப் போர்த்திக் கொள்ள, எந்தப் போர்வையையும் பயன்படுத்த மாட்டேன்.  குளிர் என்ன செய்கிறது என்று பார்த்து விடுவோமே!!   சில வேளைகளில் என் சிறிய வயதிலே இப்படிப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். 

இப்படி பல பரிசோதனைகளைச் செய்திருக்கிறேன்.  அடுத்து, என்னைப் பொறுத்தமட்டில், நூலகம் செல்வது… பல புத்தகங்கள் படிப்பது, குளக்கரைக்குச் செல்வது, குடும்பத்தாரின் துணிமணிகளைத் துவைப்பது, இதோடு நீச்சல் பயிற்சியும் நடக்கும் இது ஒருவகையிலே உடல்பயிற்சியாகவும் இருந்தது.  இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம்…. என் வாழ்க்கையோடு இணைந்திருந்தன.  இதற்குப் பிறகு நான் (செருமல்) விவேகானந்தரைப் பற்றிப் படிக்கையில் நான் மேலும் கவரப்பட்டேன். 

ஒருமுறை ஸ்வாமிஜி பற்றிப் படிக்கையில், அவர் தாயார் நோய்வாய்ப் பட்டிருந்தார், அப்போது, இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்றார், அவரோடு சண்டை போடுவார் விவாதங்களில் ஈடுபடுவார்.  தன்னுடைய தொடக்ககட்ட நாட்களில்.  அவர் எத்தனை…. சக்தியைப் பயன்படுத்த முடியுமோ பயன்படுத்தினார்.   என் தாய் நோயில் படுத்திருக்கிறார் நான் சம்பாதித்துக் கொண்டிருந்தேன் இன்று என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.  என்னை ஏன் பிடுங்குகிறாய் என்றார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.  காளி அன்னை அங்கே இருக்கிறாள்.   அன்னை காளி இருக்கிறாள்.  உனக்கு என்ன தேவையோ அவளிடம் பெற்றுக் கொள் என்றார்.  

விவேகானந்தர் சென்றார், காளி தேவியின் விக்கிரஹம் முன்பு சென்று, மணிக்கணக்காய் அமர்ந்து, சாதனையில் ஈடுபட்டார்.  அமர்ந்தபடியே இருந்தார்.  பல மணிநேரம் கழித்துத் திரும்பி வந்தார்.   கேட்டாயா என்று வினவினார் பரமஹம்சர்.  உன் தாயிடம் கேட்டு விட்டாயா?   இல்லை என்றார்…. கேட்கவில்லை என்றார்.  அப்படியென்றால் பாதகமில்லை நாளை மறுபடி கேள் என்றார்.  உன் வேலையை அம்மா செய்து கொடுப்பாள் அவளிடமே கேள்.   இரண்டாவது நாள் மூன்றாவது நாளும் சென்றார்.  

அப்போது தான், அவர் கவனித்தார், என்னால் ஏன் எதையும் கேட்க முடியவில்லை?  என் தாயின் உடல்நிலை சரியில்லை எனக்குத் தேவை இருக்கிறது.   நான் தாயின் முன்பாக அமர்ந்திருக்கிறேன் அவளிடம், என்னை இழந்திருக்கிறேன்.  அனால் என்னால் தாயிடம் எதையும் கேட்கவே முடியவில்லையே!!  வெறும் கைகளோடு த்ரும்ப வருகிறேனே!!  நான் எதையும் கேட்கவில்லை என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கூற வேண்டியிருக்கிறது. 

தேவியிடம் சென்று எதையும் வேண்ட முடியாமல் இருப்பது, அந்த ஒருவிஷயம் அவருடைய மனதிற்குள்ளேயொரு, சுடரை ஏற்றியது.  அவர் வாழ்க்கையில் அதுவொரு தீப்பொறியானது.  அதிலிருந்து தான், அளித்தல் உணர்வு பிறந்தது.  என் கருத்துப்படி இது ஒருவேளை, விவேகானந்தரின் வாழ்வின் இந்த, சின்ன சம்பவம் என் வாழ்க்கையை மிகவும் ஆழமாகத் தொட்டது. 

அதாவது உலகிற்கு எதை அளித்தால், என் மனதில் சந்தோஷம் பிறக்கும்.  உலகிலிருந்து பெற என்னிடம் தாகத்தின் வறட்சியே இருக்கும்.   என் மனம் தேடத் தொடங்கியது.  சிவன் – சீவன் இரண்டின் ஒருமை என்றால் என்ன?  சிவனுக்கு சேவை செய்வது என்றால் சீவனின் சேவையில் ஈடுபடு.  சிவன் – சீவன் இரண்டிடம் இருக்கும் ஒருமையை அனுபவித்து உணர்.   மெய்யான அத்துவைதத்தை இதில் தான் வாழ முடியும்.  

இப்படிப்பட்ட உணர்வுகளை என் மனம் கடைந்து கொண்டிருந்தது.  பிறகு இந்தச் சிந்தனை என் மனதை ஆக்ரமிக்கத் தொடங்கியது.   எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது.  நாங்கள் வசித்துவந்த பகுதியில், அதன் வெளியே ஒரு, மகாதேவருடைய ஒரு… ஆலயம் இருந்தது.  அங்கே ஒரு புனிதர் வந்தார்.   அந்தப் புனிதர் ஒருவகை, சாதனையில் ஈடுபட்டிருந்தார் நானுமே அவரிடம் சற்று கவரப்பட்டிருந்தேன் இவரிடம், ஏதோ ஆன்மீக சக்தி இருக்கலாம் என்று கருதினேன். 

ஏனென்றால் விவேகானந்தர் பற்றி படித்திருந்தேன் ஆனால் அவரை பார்த்ததில்லை.   இப்படிப்பட்டவர்களைத் தான் காண முடிந்தது.  அவர்…. நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்திருந்தார்.   அவர் தன்னுடைய கரங்களிலே, எங்கள் ஊரில் ஜவேரா என்று அழைப்பார்கள் பயிர் செய்வோம், இந்த ஒருவகைப் புல்லை கைகளில் இப்படி வைத்து உறங்குவது.  9ஆவது நாள் வரை.  இப்படி ஒரு விரதம் உண்டு.  அந்த மகாத்மா இவ்வாறு செய்து வந்தார்.   அந்த நாட்களில் தான் என்னுடைய, மாமாவின் குடும்பத்திலே என் சித்திகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருந்தது.  என் குடும்பம் முழுவதும் மாமாவின் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு.  மாமாவின் வீட்டிற்குச் செல்வது என்பது எந்தக் குழந்தைக்கும் சந்தோஷமான விஷயம் தான்.   நான் இங்கே தான் இருப்பேன் நான் வரமாட்டேன் என்று என் வீட்டாரிடம் கூறி விட்டேன்.  நான் இந்த சுவாமிஜியின் சேவையில் ஈடுபடுவேன்.  இவர் கைகளில் இதை வைத்திருப்பதால் உண்ணவோ அருந்தவோ முடியாது நான் உதவுவேன் என்றேன். 

அந்தச் சிறுவயதில் நான் திருமணத்திற்குச் செல்லவில்லை இவரோடு இருந்தேன்.  அந்த சுவாமிஜியின் சேவையில் ஈடுபட்டிருந்தேன்.   இந்தத் திசையில் தான் என் மனம் ஈடுபட்டிருந்தது.  சில சமயம் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் என், ஊரைச் சேர்ந்தவர்கள் விடுமுறையில் வந்தால், சீருடை அணிந்து அவர்கள் செல்லும் போது, நாள் முழுக்க நானும் அவர்கள் பின்னாலே சுற்றிச்சுற்றி வருவேன்.  அட தேச சேவையில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்று!!  ஆனால் ஒன்று, எனக்காக அல்ல ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது.  அதிகப் புரிதல் இல்லை.  எந்தச் செயல்திட்டமும் கிடையாது.   பசி இருந்தது அதாவது இந்த, வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள அடையாளம் காண.  

இப்படித் தான் நான் வெளிப்பட்டேன், கிளம்பி விட்டேன்.   அங்கே ராமகிருஷ்ண மிஷனோடு எனக்கு, தொடர்பு ஏற்பட்டு அங்கே இருந்த துறவிகள் என்னை மிகவும் நேசித்தார்கள் ஆசியளித்தார்கள்.  ஸ்வாமி ஆத்மஸ்தானந்தாஜியுடன் என் நெருக்கம் அதிகமானது.  அவர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்.  அவருடைய வாழ்வின் கடைசித் தருணங்களில்…. என்னுடைய ஆசை என்னவென்றால், பிரதமர் இல்லத்தில் அவர் வசிக்க வேண்டும் என்பது தான்.  பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார், நீ ஏன் இங்கே வர நினைக்கிறாய், நீ செய்ய வேண்டிய வேலை வேறிடத்திலே.  உன்னுடைய நலன் உனக்கு முதன்மையா அல்லது சமூக நலன் முதன்மையா?  விவேகானந்தர் கூறியதெல்லாம் சமூக நன்மைக்குத் தானே?   நீ சேவை புரியவே படைக்கப்பட்டிருக்கிறாய்.  

நான், ஒருவகையிலே, அப்போது ஏமாற்றமடைந்தேன், உபதேசம் கிடைத்ததே தவிர உதவி கிடைக்கவில்லை.  பிறாகு நான் என் பாதையில் பயணித்தேன், பல இடங்களில், இமயமலைப் பகுதிகளில் திரிந்தேன்,  நிறைய அனுபவம், அடைந்தேன், பார்த்தேன், பலவகையான அனுபவங்களை, பெற முடிந்தது பல மனிதர்களோடு, பெரிய தவசீலர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் என் மனம் ஒரு நிலையில் நிலைபெறவில்லை.   வயதும் இளவயது அதிக தாகம் இருந்தது.  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பு இருந்தது.  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது, அங்கிருக்கும் சூழல் வேறானது மலைகளின்….. பனிமூடிய சூழலில் வசிக்க வேண்டியிருந்தது.   ஆனால் அனைத்தும் என்னை உறுதிப்படுத்த உதவிகரமாக இருந்தன.   எனக்குள்ளே இருந்த வல்லமை, இது எனக்கு பலத்தை அளித்தது.  

சாதனையில்…. ஈடுபடுவது, விடியும் முன்பாக எழுவது நீராடுவது, மக்கள் சேவையில் ஈடுபடுவது, இயல்பாகவே, மூத்த துறவிகள் இருந்தார்கள் தவசீலர்களுக்கு சேவை புரிவது.  ஒருமுறை அங்கே…. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டது.  நான் பல கிராமவாசிகளின்…. சேவையில் ஈடுபட்டேன்.  இந்த இந்த புனிதர்கள் துறவிகள், இவர்களருகே நான் வசித்த போது, பெரும்பகுதி ஒரே இட த்திலே நான் தங்குவது கிடையாது, நான் திரிந்து கொண்டே இருந்தேன்.   இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தேன். 

வினா – இராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ஆத்மஸ்தானந்தா தான் மோதிஜியின் ஆதர்சம் என்பது பற்றித் தெரியாதவர்களுக்கு, அவர் தான் பிரதமரை சேவைப்பாதையில் ஈடுபடுத்தினார்.  அந்த வகையில் வாழ்க்கையின் வேறு ஒரு சாத்தியக்கூறும் இருந்திருக்கலாம், அதிலே சன்னியாஸம் மேற்கொண்டு, அனைத்தையும் துறந்து நீங்கள் ஒரு துறவி ஆகியிருக்கக் கூடும்.  ஆக துறாவி நரேந்திர மோதி ஒரு வாய்ப்பு, பிரதமர் நரேந்திர மோதி இன்னொரு வாய்ப்பு.  அவர் தான் சேவைப் பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்க உதவினார். 

மோதிஜி – அதாவது பாருங்கள், புறப்பார்வையால் பார்த்தால் என்ன தோன்றும் என்றால், என்னை தலைவர் என்றோ பிரதமர் என்றோ முதல்வர் என்றோ மக்கள் அழைக்கலாம்.  ஆனால் எனக்குள்ளே வாழ்க்கை, அது சீராக இருந்தது.  சிறுவயதிலே தாய், குழந்தைகளுக்கு…. மருத்துவம் பார்த்தது, அந்த வேளையில் குழந்தைகளை கவனித்துக் கொண்ட, மோதி, இயமத்தில் திரிந்து கொண்டிருந்த மோதி, அல்லது இன்று, இந்த இடத்திலே அமர்ந்து கொண்டு, பணியாற்றும் மோதி.  

இவர்கள்…. அனைவரிடத்திலும் ஒரு சீரான இழை இருக்கிறது.  ஒவ்வொரு கணமும் மற்றவர்களுக்காக மட்டும், வாழ வேண்டும்.   அந்த சமநோக்கு காரணமாக எனக்கு, துறவி தலைவர் இருவருக்கும் இடையே, வேறுபாடில்லை உலகின் பார்வையில் இருக்கலாம்.  அந்த ஆடை வேறு வாழ்க்கை வேறு, நாள்முழுக்க மொழி வேறு, இங்கே பணி வேறு.  ஆனால் எனக்குள்ளே இருக்கும் தனித்தன்மை, அது என்னவோ, அதே விலகி நிற்கும் உணர்வோடு, கடமையைச் செய்கிறது. 

வினா – உங்களுடைய மற்றுமொரு பக்கம் என்றால் நீங்கள் எப்போதுமே தேசத்திற்கே முதன்மை அளித்து வந்திருக்கிறீர்கள், தனிநபருக்கு அல்ல.  உங்களுக்கு 8 வயதான போது நீங்கள் ஆர். எஸ். எஸ்ஸிலே இணைந்தீர்கள்.  இது இந்து தேசியத்தை முன்னிறுத்தும் இயக்கம்.  நீங்கள் இந்த அமைப்பைப் பற்றியும், இன்று நீங்கள் இருப்பதற்கு அது உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தையும், உங்கள் அரசியல் கருத்துக்கள் உருவாக்கத்தில் அதன் பங்குபணி பற்றியும் கூற முடியுமா?

மோதிஜி – அதாவது ஒரு விஷயம்.   சிறுவயதிலேயே கூட எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் இயல்பு.  எனக்கு நினைவிருக்கிறது எங்கள் பகுதியிலே ஒரு, மாக்கோசி என்ற ஒருவர் பெயர் சரியாக நினைவு இல்லை சேவா தளத்தைச் சேர்ந்தவர் அவர்.  மக்கோசி சோனி என்பது மாதிரி பெயர் உடையவர்.  அவர் தன் கைகளிலே வாசிக்க கூடிய ஒரு தப்பட்டையை வைத்திருப்பார்.   தேசபக்திப் பாடல்களைப் பாடுவார், அவர் குரலும் அருமையாக இருக்கும்.  எங்கள் கிராமத்திற்கும் வருவார்.  பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகள் நடக்கும்.   நான் பித்துப் பிடித்தவனைப் போல அவருக்குப் பின்னே பாட்டுக் கேட்டுக் கொண்டே சென்று விடுவேன்.   இரவு முழுக்கவும், அவருடைய, தேசபக்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.  ஏன் பிடித்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது.  

இதைப் போலத் தான் எங்கள் பகுதியில் ஆர் எஸ் எஸ்ஸின் ஷாகா நடந்து வந்தது.   ஷாகாவில் விளையாட்டுக்களோடு தேசபக்திப் பாடல்கள் பாடுவோம்.  அது மனதுக்கு இதமாக இருக்கும் மனதுக்கு அது பெரும் உற்சாகத்தை அளிக்கும்.  இப்படித் தான் நாங்கள் சங்கத்தில் இணைந்தோம்.   சங்கத்தின் கலாச்சாரம் எங்களைத் தொட்டது.  என்னவென்றால், என்ன நினைத்தாலும் என்ன செய்தாலும், எதைப் படித்தாலும் கூட நிறைய படிக்க வேண்டும் அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.  உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அதிகம் செய்து அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.  இதைத் தான் அங்கே தொடர்ந்து கற்பித்து வந்தார்கள்.  சங்கம் அது மிகப்பெரிய ஒரு அமைப்பு.  மேலும், அது தனது நூற்றாண்டை இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது.  

அதோடு உலகத்திலே இத்தனை பெரிய, ஸ்வயம்சேவக அமைப்பு, இருப்பதாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.  கோடிக்கணக்கான மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள்.  ஆனால் சங்கத்தினைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதானது இல்லை.  சங்கத்தின் பணிகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.  மேலும் சங்கம், தன்னைத் தானே, ஒரு, வாழ்கையின் குறிக்கோள் என்போம் இல்லையா, இது தொடர்பாக, ஒரு நல்ல வழியைக் காட்டுகிறது.  இரண்டாவதாக தேசமே அனைத்தும் ஆகும்.  மேலும் மக்கள் சேவையே மகேசன் சேவை.  இதைத் தான் எங்களுடைய, வேதகாலத்திலிருந்து கூறுவது எங்கள் ரிஷிகள் கூறியது ஸ்வாமி விவேகானந்தர் கூறியது, இதைத் தான் சங்கத்தவர்கள் கூறுகிறார்கள்.  ஸ்வயம்சேவகர்களிடம் கூறுவதெல்லாம், சங்கத்திலிருந்து நீங்கள் கற்ற பாடங்களை, ஒரு மணிநேரம் ஷாகாவில் இருப்பது அல்ல சீருடை அணிவது மட்டுமல்ல, நீங்கள் சமூகத்துக்காக உங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும் இந்த உத்வேகத்தால், இன்று ஏராளமான பணிகள் எடுத்துக்காட்டாக, சில ஸ்வயம்சேவகர்கள் சேவாபாரதி என்ற சுயவுதவி அமைப்பை ஏற்படுத்தினார்கள். 

இந்த சேவாபாரதி ஏழைகள் வசிக்கும் பகுதிகள் அவர்களின் குடிசைப் பகுதிகள், இதனை அவர்கள் சேவா பஸ்தி என்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த வரையில் கூறுகிறேன், கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம், சேவை மையங்களை நடத்துகிறார்கள்.  எந்தவொரு அரசின் உதவியேதும் இல்லாமல், சமூகத்தின் உதவியோடு, அங்கே செல்வது குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது, அவர்கள் உடல்நலம் பற்றி அக்கறை போன்று பணியாற்றுகிறார்கள்.  நற்பண்புகளை சொல்லித் தருவது.  அந்தப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளுதல்.  நீங்களே பாருங்கள் ஒண்ணேகால் இலட்சம் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல.  அதே போல சில ஸ்வயம்சேவகர்கள், சங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தை நடத்துகிறார்கள். 

அவர்கள் காடுகளிலே வனம்வாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து, வனவாசி மக்களின் சேவையில் இப்படி 70000க்கும் மேற்பட்ட, ஏகல் வித்யாலயாக்கள் ஓராசிரியர் பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள்.  மேலும் அமெரிக்காவிலும் சிலர் இருக்கிறார்கள், இவர்கள் பழங்குடிக்ளுக்காக, 10-15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள், இந்தப் பணிக்காக.  அவர்கள் சொல்கிறார்கள், ஒரு மாதம் ஒரு கோகோ கோலா குடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு கோகோகோலா குடிக்காமல், அந்தப் பணத்தை, ஓராசிரியர் பள்ளிக்குத் தருவோம்.  இப்படி 70000 ஓராசிரியர் பள்ளிகளை பழங்குடியினக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  சில ஸ்வயம்சேவகர்கள், கல்வித் துறையில் மாற்றம் உண்டாக்க வித்யா பாரதி அமைப்பை ஏற்படுத்தி, சுமார் 25,000, பள்ளிகளை நடத்துகிறார்கள், தேசத்திலே.   30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் நான் கருதுகிறேன் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது.  நற்பண்புகளுக்கும் முதன்மை அளிக்கப்படுகிறது.  களப்பணி அனுபவம் உள்ளவர்களால்.  திறன் மேம்பாட்டில் கவனம்.  சமூகத்துக்கு சுமையாக இருக்க கூடாது. 

அதாவது…… வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர்கள் பெண்களாகட்டும் இளைஞர்களாகட்டும், தொழிலாளிகள் ஆகட்டும்.  ஒருவேளை, உறுப்பினர் அடிப்படையில் கூறவேண்டும் என்றால், பாரதீய மஸ்தூர் சங்கம், அதற்கு சுமார்…. 55000 சங்கக் கிளைகள் இருக்கின்றன.  மேலும் கோடிக்கணக்கானோர் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.  ஒருவேளை உலகத்திலே, இத்தனை பெரிய தொழிலாளர் சங்கம் இருக்காது என்று நினைக்கிறேன்.   கற்பித்தல் எப்படி இருக்கிறது?  இடதுசாரிகள் எல்லாம், தொழிலாளர் இயக்கத்துக்கு வலு சேர்த்தார்கள்.  தொழிலாளர் இயக்கங்களின் கோஷம் என்னவாக இருக்கிறது?  Workers of the World Unite.  உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருங்கள்!!   ஒரு கை பார்க்கலாம்… இதுவே உணர்வு. 

ஆனால் மஸ்தூர் சங்கத்தினர் ஆர் எஸ் எஸ்ஸின் ஷாக்காக்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?   அவர்கள் கூறுகிறார்கள், தொழிலாளர்க்ளே, உலகத்தை இணையுங்கள்.  அவர்கள் கூறுகிறார்கள், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!!  இவர்கள் கூறுகிறார்கள் தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்!!   எத்தனை பெரிய வித்தியாசம்……. வாக்கியத்தில் சொற்கள் இங்கே அங்கே மாற்றி இருந்தாலும் எத்தனை பெரிய, கருத்தியல் மாற்றம்!!  சங்கத்தின் ஷாகாவிலிருந்து வெளிப்பட்ட இவர்கள், தங்கள் விருப்பம் நாட்டம் இயல்புக்கு ஏற்ப பணியாற்றும் போது, இந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.   இவர்கள் ஆற்றும் பணியைப் பார்த்தீர்களென்றால், அப்போது நீங்கள், 100 ஆண்டுகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கமானது, பாரதத்தின், பகட்டுநிறைந்த உலகிலிருந்து விலகியிருந்து, ஒரு சாதகனைப் போல, அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்.   இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

செம்மையான வாழ்க்கை எனக்குக் கிடைத்தது.  மேலும் என்னுடைய நற்பேறு என்னவென்றால், சில காலத்துக்கு, சில நாட்கள் துறவிகளுக்கு இடையே கழிக்க முடிந்தது.  அந்த வகையில் எனக்கு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.  அமைப்பு வாயிலாக, செம்மையான வாழ்க்கை கிடைத்த்து.  துறவிகள் வாயிலாக ஆன்மீக அனுபவம் வாய்த்த்து.  ஸ்வாமி ஆத்மஸ்தானாந்ந்த் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்க என் கைபிடித்து அழைத்துச் சென்றார்கள்.  ஒவ்வொரு கணமும் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.  ஆக இராமகிருஷ்ண மிஷன், ஸ்வாமி விவேகானந்தர், அவர்களின் வழிகாட்டுதல்கள், சங்கத்தின், சேவையுணர்வு.  இவையனைத்துமே என்னை உருவாக்குவதில், மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கின்றன. 

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

rss abps datrayea hosaballe - 2026

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய சக்திகளால் ஹிந்துக்களும் பிற சிறுபான்மை சமூகங்களும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை, அநீதி, ஒடுக்குமுறை குறித்து அகில பாரதிய பிரதிநிதி சபா தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலுக்கு தெளிவான உதாரணம்.

வங்கதேசத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தின் போது, மடங்கள், கோயில்கள், துர்காபூஜை பந்தல்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், தெய்வங்களை அவமதித்தல், காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சொத்துக்களை சூறையாடுதல், பெண்கள் கடத்தல் / பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் போன்ற பல சம்பவங்கள் தொடர்கின்றன. இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஹிந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே.

அப்படியிருக்க இவற்றின் அரசியல் அம்சத்தை மட்டுமே பேசி மதக் கோணத்தை மறுப்பது, உண்மையை மறுப்பதாகும். வங்கதேசத்தில் இந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் மீது தீவிர இஸ்லாமிய சக்திகளின் துன்புறுத்தல் என்பது புதிதல்ல. வங்கதேசத்தில் ஹிந்து மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருவது (1951 ல் 22 % இன்று 7.95 %) அவர்கள் வாழ்வுக்கே ஆபத்து. இருப்பினும், கடந்த ஆண்டில் காணப்பட்ட வன்முறைக்கும் வெறுப்புக்கும் அரசாங்கமும் அதிகார வர்க்கமும் அளிக்கும் ஆதரவு கட்ம் கவலை தருவது. தவிர வங்கதேசத்தில் தொடர்ந்து வரும் பாரத எதிர்ப்பு அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை கடுமையாக சேதப்படுத்தும்.

ஒரு நாட்டை மற்றொரு நாட்டிற்கு எதிராகத் தூண்டும் அவநம்பிக்கை / மோதல் சூழலை உருவாக்குவதன் மூலம் பாரதத்தைச் சுற்றிலும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகளின் கூட்டு முயற்சி நடக்கிறது. சர்வதேச உறவுகளில் வழிநடத்தும் நிபுணர்களும் அறிஞர்களும் இத்தகைய பாரத எதிர்ப்பு சூழ்நிலை, பாகிஸ்தான் மற்றும் டீப் ஸ்டேட் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், அவற்றை அம்பலப்படுத்தவும் பிரதிநிதி சபா அழைப்பு விடுக்கிறது. இந்த வட்டாரம் முழுதும் ஒரு பொதுவான கலாச்சாரம், வரலாறு, சமூகப் பிணைப்புகொண்டது என்பதை பிரதிநிதி சபா அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறது. இதன் காரணமாக ஒரு இடத்தில் ஏற்படும் எந்தவொரு எழுச்சியும் பிராந்தியம் முழுவதும் கவலையை ஏற்படுத்துகிறது. பாரதமும் அண்டை நாடுகளும் பெற்றுள்ள இந்த பொதுவான மரபை வலுப்படுத்த விழிப்புடன் இருக்கும் அனைத்து மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பிரதிநிதி சபா கருதுகிறது.

இந்தக் காலகட்டத்தில் வங்கதேச ஹிந்து சமூகம் இந்த அட்டூழியங்களை அமைதியான, ஒருன்கிணைந்த, ஜனநாயக முறையில் தைரியமாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் இந்த மனோதிடத்திற்கு உலகு தழுவிய அளவிலும் பாரத ஹிந்து சமூக சார்பிலும் தார்மிக / மானசிக ஆதரவு கிடைத்தது பாராட்டத்தக்கது. பாரதத்திலும் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் இந்த வன்முறைக்கு எதிராக தங்கள் கவலையை வெளிப்படுத்தின, ஆர்ப்பாட்டங்கள் / மனுக்கள் மூலம் வங்கதேச ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு / கௌரவம் / மரியாதை கோரின. இந்தப் பிரச்சினையை சர்வதேச அளவிலான பல தலைவர்களும் தங்கள் மட்டத்தில் எழுப்பியுள்ளனர்.

வங்கதேச ஹிந்துக்களுக்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் பாதுகாப்பு தேவை என்று உணர்ந்து அவர்க்ளோடு இணைந்து செயல்பட பாரத அரசு உறுதிபூண்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கத்திடமும், பல உலகளாவிய தளங்களிலும் பாரத அரசு இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளது. வங்கதேச ஹிந்து சமூகத்தின் பாதுகாப்பு, கண்ணியம், நல்வாழ்வு இவற்றை உறுதி செய்வதற்கும், வங்கதேச அரசை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் நீடித்து ஈடுபடுத்துவதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு பிரதிநிதி சபா பாரத அரசை வலியுறுத்துகிறது.

வங்கதேச ஹிந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற செயல்களை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இந்த வன்முறைகளை நிறுத்த ஐ.நாவும் உலக சமூகமும் வங்கதேச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதிநிதி சபா கருதுகிறது. வங்கதேச ஹிந்துக்கள் / பிற சிறுபான்மை சமூகங்களுடன் இணைந்து குரல் எழுப்ப பல்வேறு நாடுகளை, சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த ஹிந்து சமூகத்தினருக்கும் தலைவர்களுக்கும் பிரதிநிதி சபா அழைப்பு விடுக்கிறது.

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 2

உலகம் அமைதி காண, வளம் பெற இணக்கமான, ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயம் உருவாக்குவோம்

மனித குல ஒற்றுமை, அனைவருக்கும் நல வாழ்வு எனும் லட்சியத்தை நோக்கிபன்னெடுங்காலமாக ஹிந்து சமுதாயம் மிக நீண்ட, பிரமிப்பூட்டும் பயணத்தில் முனைந்துள்ளது.

எத்தனையோ கொந்தளிப்புகளுக்கு மத்தியில், துறவிகள், ஞானிகள், பல புகழ்பெற்ற மாதரசிகள் உள்பட சான்றோர்களின் ஆசியாலும் முயற்சியாலும் நமது தேசம் தொடர்ந்து முன்னேற முடிந்தது.

காலங்காலமாக நமது தேசத்தில் பரவியிருந்த பலவீனங்களை ஒழிக்கவும், ஒருங்கிணைந்த, நற்குணமுள்ள, சக்திவாய்ந்த தேசமாக பாரதத்தை உருவாக்கி, உலகின் தலைசிறந்த நாடாக்கவும் 1925 ல் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை துவக்கினார். மனித நிர்மாணம் எனும் சங்கத்தின் முக்கிய பணி நிறைவேற தினசரி ஷாகா வடிவில் தனித்துவமான முறையை ஏற்படுத்தினார். தேசத்தின் தொன்மையான பாரம்பரியத்துக்கு, பண்பாட்டுக்கு இசைவான தேச நிர்மாணம் எனும் தன்னலமற்ற தவமாக அது உருவெடுத்தது. அவரது வாழ்நாளிலேயே இந்த முன்னெடுப்பு நாடு முழுதும் பரவியது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கர்) அவர்களின் தொலைநோக்கு வாய்ந்த தலைமையில், என்றும் நிலைத்த தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு தேசிய வாழ்வின் பல்வேறு துறைகளில் சமகால சூழலுக்கு ஏற்ப, செயல்முறைகளை உருவாக்கும் பணி தொடங்கியது.

இந்த நூறாண்டுப் பயணத்தில், தினசரி ஷாகா தரும் நற்பண்பு காரணமாக சமுதாயத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் அன்பையும் பெற்றுள்ளது சங்கம். இந்த காலகட்டத்தில் சங்க ஸ்வயம்சேவகர்கள், மதிப்பு-அவமதிப்பு, விருப்பு – வெறுப்பு இவற்றை கடந்து, அன்பால், பாசத்தால் உருவாகும் ஆற்றல் கொண்டு அனைவரையும் அரவணைத்து இணைக்க முயற்சித்துள்ளனர். சங்கம் சந்தித்த பல்வேறு சவால்களை எதிர்கொள்ள ஆதரவு, நல்லாசி வழங்கிய துறவிகளையும், சான்றோர்களையும் (சஜ்ஜன் சக்தி), அத்துடன் தன்னலம் பாராது சங்கப்பணிக்கே வாழ்க்கையை அர்ப்பணித்த சங்க ஸ்வயம்சேவகர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவரது பங்களிப்பையும், சங்கத்தின் நூறாவது ஆண்டில் நினைவுகூர்வது நமது கடமையாகும்.

வளமான பாரம்பரியம் கொண்ட தொன்மையான கலாச்சாரம் என்பதால், பாரதம் உலகில் சுமுக சூழல் உருவாக்கும் அனுபவ ஞானம் வாய்ந்துள்ளது. முழு மனித குலத்தையும் பிளவு சக்திகளிடமிருந்தும் சுய அழிவுப் போக்கிலிருந்தும் நமது சிந்தனை பாதுகாக்கிறது; உயிர்ப்புள்ள, சடமான அனைத்தின் ஆன்மநேய ஒருமையுணர்வையும் அமைதியையும் உறுதி செய்கிறது.

தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, தன்னம்பிக்கை நிறைந்த, ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கையின் ஆதாரத்தில்தான் ஹிந்து சமுதாயம் தனது உலகளாவிய பொறுப்பை திறம்பட நிறைவேற்ற முடியும் என்று சங்கம் நம்புகிறது. எனவே, அனைத்து வித பாரபட்சங்களையும் நிராகரித்து, இணக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையின் அடிப்படையில் பண்பான குடும்பங்களை ஊக்குவிக்கவும், தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை, குடிமக்களுக்குரிய கடமைகளை சரிவர பின்பற்றும் சமுதாயத்தை, தன் சுயம் உணர்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் ஆர்.எஸ்.எஸ். உறுதி பூணுகிறது. சமுதாயம் சந்திக்கும் சவால்களை முறியடித்து, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஆன்மிகத்தில் தோய்ந்த, சுபிட்சமான, வலுவான தேசிய வாழ்க்கையை நாம் உருவாக்க இது உதவும்.

சான்றோர்களின் தலைமையின் கீழ் முழு சமுதாயத்தையும் ஒன்றிணைத்து, இணக்கமான, ஒன்றிணைந்த பாரதத்தை உலகிற்கு ஒரு முன்மாதிரி தேசமாக முன்வைக்க அகில பாரத பிரதிநிதி சபை உறுதி பூணுகிறது

தாய்மொழிக்காக வாழ்ந்தாக வேண்டும்: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில் இருந்து…

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

அதன் இரண்டாம் பகுதி…

வினா – தொடக்கத்திற்குச் செல்வோம்.  மிக எளிய நிலையிலிருந்து உயர்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக ஆனீர்கள்.  இது பலருக்கு உத்வேக காரணியாக இருக்கும் என்பது உண்மை.  உங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம், நீங்கள் ஓர் அறை இருக்கும் வீட்டில் வளர்ந்தீர்கள், மண் தரை, குடும்பம் மொத்தமும் அதில் வசித்தது.  உங்கள் சிறுவயது பற்றிச் சொல்லுங்கள்.  எப்படி உங்கள் எளிய தொடக்கம் உங்களை உருவாக்க உதவியது.   

மோதிஜி – நான் பிறந்தது, குஜராத்தில் நடந்தது.  மேலும் குஜராத்திலே, வடக்கு குஜராத்திலே… மெஹ்சானா மாவட்ட த்திலே.  வட்நகர் என்றதொரு சிறிய குடியிருப்புப் பகுதியிலே.   உள்ளபடியே அந்த இடம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  அங்கே, அங்கே தான் நான் பிறந்தேன்.  அங்கே தான் நான் படித்தேன்.  இப்போது நாம், இன்றைய உலகைப் பார்க்கும் போது நான் கிராமத்தில், அங்கே வசிக்கும் காலத்தில், நான் வாழ்ந்த சூழ்நிலையில், என் கிராமத்திற்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு. 

பார்க்கப் போனால் உலகத்திலே, இது மிகவும் அரிதான ஒன்று.  நான் பள்ளிக்கூட த்திலே படிக்கும் போது, அப்போது என் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் இருந்தார், அவர் எப்போதுமே கூறுவார், பிள்ளைகளா நீங்கள் எங்கு சென்றாலும் கூட, எந்த இடத்திலும், எங்காவது ஏதோ, செதுக்கப்பட்ட கடிதங்கள் ஏதாவது காண நேர்ந்தால் அல்லது வரையப்பட்ட கடிதங்கள் கிடைத்தால், செதுக்கப்பட்ட சிற்பம் ஏதும் கிடைத்தால் அதைப் ப்ள்ளியின் இந்த மூலையில் சேகரித்து வையுங்கள் என்பார். 

எனக்கு இதில் ஆர்வம் அதிகரித்த போது புரிய வந்த போது தெரிய வந்தது, எங்களுடைய கிராமம் பழமையானது வரலாற்றுப்பூர்வமானது, பள்ளியில் விவாதம் நடக்கும் அதிலிருந்தும் தகவல்கள் கிடைத்தன.  பின்னர் ஒரு காலம் சீனா ஒரு படத்தைத் தயாரித்தார்கள்.  நான் அந்த திரைப்படம் தொடர்பாக செய்தித்தாள் ஒன்றில் படிக்க நேர்ந்தது. 

சீனத் தத்துவ ஞானி ஹுவான் சுவாங், அவர் என் கிராமத்தில் கணிசமான காலம் வாந்திருக்கிறார்.  பல நூற்றாண்டுகள் முன்பாக வந்திருக்கிறார்.  பௌத்த கல்வியின் ஒரு பெரிய மையமாக இருந்திருக்கிறது.  நான், அது தொடர்பாகத் தெரிந்து கொண்டேன்.  பிறகு, சுமார், 1400இலே, அது பௌத்த கல்வியின், மையமாக இருந்திருக்கிறது.  12ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெற்றிச்சின்னம், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆலயம், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு சகோதரிகள் இவர்கள் சங்கீதத்தில் மிகப்பெரிய, நிபுணர்களாக இருந்தார்கள்.  தானாவும் ரீரியும்.   இப்படி ஏராளமான விஷயங்கள் வெளிவரத் தொடங்கின. 

என் சிந்தையை ஈர்த்தன.  நான் முதல்வராக ஆன போது…. நான் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டேன்.   அகழ்வாய்ப்பு பணியை மேற்கொண்ட போது தெரிய வந்தது, இது அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான புத்த பிக்குக்களின் மையமாக இருந்து வந்திருக்கிறது.   மேலும் பௌத்த ஜெயின் ஹிந்து, மூன்று பாரம்பரியங்களின் தாக்கம் அங்கே இருந்திருக்கிறது.  மேலும், எங்களுக்கு வரலாறு புத்தகங்களோடு மட்டும் நின்று போகும் விஷயமாக இருக்கவில்லை. 

அங்கே, ஒவ்வொரு கல்லும் பேசியது.   ஒவ்வொரு சுவறும் பல்லாயிரம் கதைகள் சொல்லின.  பிறகு நாங்கள், அகழ்வாய்வு செய்யும் பணிகளைத் தொடங்கிய போது, அங்கே கிடைத்த பொருட்கள் வரலாற்றுரீதியான மகத்துவம் வாய்ந்தவை.  இதுவரை அங்கே 2800 ஆண்டுகள் வரையான, சான்றுகள் கிடைத்திருக்கின்றன.  இது உள்ளபடியே, மிகப்பெரிய வகையிலே, அழிக்கமுடியா அளவுக்கு, 2800 ஆண்டுகளுக்கு முன்பு வசிப்பிடமாக இருந்தது.  மனிதர்கள் அங்கே வாழ்ந்தார்கள், 2800 ஆண்டுகள் முன்பான அவர்கள் வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.  

இப்போது அங்கே சர்வதேச தரத்திலான ஒரு, அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருக்கிறது, மக்கள் பார்க்கலாம்.  குறிப்பாக அகழ்வாய்வு மாணவர்களுக்கு இது ஒரு பெரிய, ஆய்வுக் களமாக ஆகியிருக்கிறது.  என்ன கூற வருகிறேன் என்றால் நான் பிறந்த இடத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்தும் இருக்கிறது.  என்னுடைய நற்பேற்றைப் பாருங்கள் சில விஷயங்கள், எப்படி நடக்கின்றன என்று தெரியாது.  காசி என் கர்மபூமியாக ஆனது.  பாருங்கள் காசியும் என்றும் அழியாதது. 

காசியை பனாரஸ் வாராணசி என்றெல்லாம் அழைப்பார்கள்.  அதுவும் கூட பல்லாயிரம் ஆண்டுகளாக, நிரந்தரமான உயிர்ப்புடைய ஒரு நகரம்.  ஒருவேளை இது இறைவனால் நியமிக்கப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம் வட்நகரில் பிறந்த ஒரு மனிதன், காசிக்குச் செல்கிறான், அதைத் தனது கர்மபூமியாக்கி இருக்கிறான், அன்னை கங்கையின் திருப்பாதங்களில் வாழ்கிறான்.  அதே வேளையிலே, என்னுடைய குடும்பத்திலே தந்தையார் இருந்தார் தாய் சகோதர சகோதரிகள், என்னுடைய சித்தப்பா சித்தி என் தாத்தா பாட்டி அனைவரும், கூட இருந்தார்கள். 

இப்போது நாம் இருக்கும் இந்த அறை கூட பெரியதாக இருக்கிறது.  அதிலே ஜன்னலேதும் கிடையாது ஒரு சிறிய கதவு உண்டு.  அங்கே தான் பிறந்தோம் அங்கே தான் வளர்ந்தோம். இப்போது இங்கே தான் ஏழ்மை வருகிறது.  இன்றைய நிலையிலிருந்து பார்த்தோம் என்றால் பொதுவாழ்க்கைக்கு மக்கள் வருவதைப் பார்க்கும் போது, என்னுடைய வாழ்க்கை கொடூரமான ஏழ்மையிலே தான் கழிந்தது.  ஆனால் நாங்கள் என்றுமே, ஏழ்மையை, ஒரு சுமையாகவே கருதியதில்லை.  ஏனென்றால் எந்த மனிதன் நேர்த்தியான காலணி அணிபவரோ, அவரிடம் காலணி இல்லாது போனால், அது அவருக்குக் கஷ்டமாக இருக்கும்.  

நாங்களோ வாழ்க்கை முழுவதும் காலணி அணீந்ததே இல்லை எனும் போது, காலணி அணிவது எத்தனை சிறப்பு என்பது எங்களுக்கு எங்கே தெரியும்!!   அதை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையிலேயே நாங்கள் இல்லை.  அப்படித் தான் நாங்கள் வாழ்ந்தோம்.  மேலும் எங்களுடைய தாயார், அவர் கடுமையாக உழைப்பார்.  எங்கள் தந்தையார் கடும் உழைப்பாளி எங்கள் தந்தையாரின், சிறப்புத் தன்மை என்னவென்றால் எத்தனை ஒழுங்குமுறை நிறைந்தவர் என்றால், காலை 4-4.30 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்.  நிறைய, கோயில்களுக்குச் சென்ற பிறகு தான் அவர் கடைக்குச் செல்வார்.  அவர் ஒரு தோல்காலணியை அணிந்திருப்பார், அது கிராமத்திலேயே தயார் செய்யப்பட்டிருந்தது.  மிகவும் கடினமானதாக அது இருக்கும்.   அது அதிக ஒலி எழுப்பும் டக் டக் டக் என்று.   

அவர் கடைக்குப் போகும் வேளையிலே மக்கள் நாங்கள், எங்கள் கடிகாரத்தை சரி பார்த்துக் கொள்வோம் என்பார்கள்.   இப்போது, தாமோதர்பாய் கிளம்பிட்டாரு என்பார்கள்.  அந்த அளவுக்கு அவர் வாழ்க்கையில் ஒழுங்குமுறை இருந்தது.  கடுமையான உழைப்பாளி அவர் இரவு வெகுநேரம்வரை பணியாற்றுவார்.   அதே போல எங்கள் தாயாரும் கூட வீட்டு நிலையை, கருத்தில் கொண்டு கடினமாக உழைப்பார்.   ஆனால் இதையெல்லாம் தாண்டியும் கூட, நாங்கள் எப்போதுமே, பற்றாக்குறையான வாழ்க்கை, இருந்தாலும் அது எங்கள் மனதை பாதிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை.   எனக்கு நினைவு இருக்கிறது.

நான் பள்ளியில் காலணியேதும் அணிந்ததே கிடையாது.  ஒருநாள் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது வழியில் என் மாமாவை வழியில் சந்திக்க நேர்ந்தது.  என்ன இப்படியா பள்ளிக்குச் செல்கிறாய் என்று என்னைக் கேட்டார்.   காலணி இல்லையா என்றார்.  அவர் உடனே எனக்கு ஒரு கான்வாஸ் காலணியை வாங்கி, எனக்கு அணிவித்தார்.   அப்போது அதன் விலை  10-15 ரூபாய் இருக்கும், அந்தக் காலணி.   அது ஒரு, கான்வாஸால் ஆன காலணி கறைபடிந்து விடும்.   வெள்ளை கான்வாஸ் காலணி அது.  நான் என்ன செய்வேன் என்றால், பள்ளியிலே, மாலையில் பள்ளி விட்டபிறகு, நான் கொஞ்ச நேரம் பள்ளியில் தங்குவேன்.  

டீச்சர் சாக்கட்டியைப் பயன்படுத்தி, அதன் மிச்ச துண்டுகள் எறிந்திருப்பாரே, 3-4 அறைகளுக்குச் சென்று சேகரிப்பேன்.  அந்தச் சாக்கட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வருவேன்.   அதை நீரில் நனைத்துக் கொண்டு, பாலிஷ் செய்து, அதை என் கான்வாஸ் காலணிகளில் பூசி, பளபளவென்று ஆக்கி அணிந்து செல்வேன்.  அது எனக்கு பெரிய சொத்து ரொம்ப பெரிய சந்தோஷமாக இருக்கும்.   அது ஏனென்றே தெரியவில்லை என் தாயார் என் சிறுவயதிலிருந்தே தூய்மை விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார்.  அதன் தாக்கம் எங்கள் மீதும் ஏற்பட்டது.  ஆடைகளை சீராக அணிவது என்ற பழக்கம் அது சிறுவயது காலத்திலேயே கூட இருந்தது.  என்ன இருக்கிறதோ அதை சீராக அணிய வேண்டும்.   

என்னுடைய ….. துணிகளை அயர்ன் செய்ய இஸ்திரி போட எங்களிடம் போதுமான வசதிகள் இருக்கவில்லை.  அதற்கு நான் தாமிரபாத்திரத்தில் நீரை ஊற்றி அதைச் சுட வைத்து, அதை இடுக்கியால் பிடித்துக் கொண்டு நானே, என் துணிக்கு இஸ்திரி போடுவேன்.   பள்ளிக்குச் சென்று விடுவேன்.  வாழ்க்கையை ஆனந்தமாக சந்தோஷமாக கழித்தோம் இது ஒன்றும், நாம் ஏழைகள் அவர்கள் பணக்காரர்கள் என்று எல்லாம் எந்த சிந்தனையும் கிடையாது, இது தான் வாழும் பண்பாக இருந்தது.  எது இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்வது பணியாற்றிக் கொண்டே இருப்பது.  இல்லை என்று எதற்கும் வருந்தக்கூடாது. 

என் வாழ்க்கையின் இந்த அனைத்து விஷயங்களும் கூட, அது அதிர்ஷ்டமாக இருக்கட்டும் துர்பாக்கியமாக இருக்கட்டும், அரசியலில் சூழல் காரணமாக இதெல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.   முன்னர் நான், முதல்வர் ஆன வேளையிலே, டிவிக்காரர்கள் என் கிராமத்திற்குச் சென்று விட்டார்கள், என் நண்பர்களிடம் வினவினார்கள், என் வீட்டைப் படம்பிடித்தார்கள்.  அப்போது தான் தெரிய வந்தது… நான் எங்கிருந்து வருகிறேன் என்று.  அதற்கு முன்பாக யாருக்கும் என்னைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 

என் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது.  என் தாயாரைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்.  சேவையுணர்வு அவருடைய இயல்பிலேயே இருந்தது.  அவருக்குப் பாரம்பரியமாக…. சில விஷயங்கள் இயல்பாகவே வரும்.  மருந்துகள்.  குழந்தைகளுக்கு அவரே வைத்தியம் பார்ப்பார்.  காலையிலே சூரியன் உதிக்கும் முன்பாகவே குழந்தைகளுக்கு வைத்தியம் பார்ப்பார்.  ஆகையால் காலையிலேயே மக்கள் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவார்கள் அவை அழும் ஆகையால் நாங்களும் சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டியிருந்தது. 

தாயார் தொடர்ந்து வைத்தியம் பார்த்து வருவார் இந்த சேவையுணர்வு இருக்கிறதே, அது இந்தக் காரணத்தாலே தான் வளர்ந்து மலர்ந்திருக்கிறது.   சமூகத்தின்பால் புரிந்துணர்வு மக்களுக்கு நல்லது செய்தல்.  இத்தகைய குடும்பம் காரணமாக, உள்ளபடியே பார்த்தால், தாயாரின் தந்தையாரின், என் ஆசிரியர்களின் யாரோடெல்லாம் எனக்கு அறிமுகம் ஆனதோ எல்லோராலும், என் வாழ்க்கை உருவானது. 

வினா – இதைக் கேட்கும் பல இளைஞர்கள் உங்கள் வாழ்க்கையால் உத்வேகம் அடைந்திருக்கின்றார்கள்.   எளிய தொடக்கத்திலிருந்து இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக ஆகியிருக்கிறீர்கள்.  உலகில் தத்தளித்துக் கொண்டிருக்கும், வழிதேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் ?  அவர்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

மோதிஜி – நான் அனைத்து இளைஞர்களுக்கும் கூற விரும்புவதெல்லாம், வாழ்க்கையிலே, இரவு எத்தனை தான் இருள் நிறைந்ததாக இருக்கட்டும், அது இரவு மட்டும் தான்.  பொழுது புலர்வது உறுதி.  அந்த வகையிலே, நம்மிடம் பொறுமை வேண்டும் தன்னம்பிக்கை வேண்டும்.  சரி இது தான் நிலைமை.  சூழ்நிலையால் நான் இல்லை. 

இறைவன் என்னை ஏதோ காரணத்திற்காக அனுப்பியிருக்கிறார் என்ற உணர்வு வேண்டும்.  நான் ஒன்றும் தனியாள் அல்ல.  யார் என்னை அனுப்பியிருக்கிறாரோ அவர் என்னுடன் கூடவே இருக்கிறார்.  இந்த அசையா நம்பிக்கை வேண்டும்.   சிரமங்கள் எல்லாம் சோதிக்க மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன.  சிரமங்கள் என்னை தோல்வியடைய ஏற்படவில்லை.  கஷ்டங்கள் என்னை உறுதிப்படுத்தவே அமைந்திருக்கின்றன.  கஷ்டங்கள், எனக்கு, ஏமாற்றம் அடைய ஏற்படவில்லை. 

நான் அனைத்துக் கஷ்டங்கள் சங்கடங்களை, எப்போதும் சந்தர்ப்பங்களாக மாற்றுகிறேன்.  இதையே இளைஞர்களுக்கு நான் கூறுவேன்.  இரண்டாவதாக பொறுமை தேவை…. குறுக்குவழி உதவாது.  எங்கள் நாட்டில் ரயில் நிலையங்களில், எழுதப்பட்டிருக்கும்.   பாலம் வழியாக கடப்பதற்கு பதிலாக சிலர் தடங்களில் இறங்கி சிலர் குறுக்கே கடப்பார்கள். 

ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருக்கும்.  ஷார்ட்கட் வில் கட்யூ ஷார்ட்.  நான் இளைஞர்களிடமும் இதையே கூற விரும்புகிறேன் ஷார்ட்கட் வில் கட்யூ ஷார்ட்… குறுக்குவழி உதவாது.  பொறுமை தேவை நிதானம் வேண்டும்.   மேலும் நமக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் கூட, அதை உயிர்ப்பால் நிரப்ப வேண்டும்.  அதைத் துடிப்போடு வாழ்ந்து பார்க்க வேண்டும்.  அதில் சந்தோஷம் அடைய வேண்டும்.  

என் கருத்து என்னவென்றால் இது மனிதனின் வாழ்க்கையில், சிறப்பை அளிக்கும்.  ஒருவரிடத்திலே நிறைய இருக்கிறது.   வளம் நிறைந்திருக்கிறது கவலையே இல்லை.  அவரும் கூட, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கினார் என்றால் அவரும் நஷ்டப்பட்டுப் போவார்.  இதெல்லாம் என்னிடம் இருக்கலாம் இருந்தாலும் கூட, நான் என் திறமையால் பெருக்குவேன், என்று முடிவெடுக்க வேண்டும்.  என்னுடைய திறமையால் சமூகத்துக்கு, நிறைய பங்களிப்பு அளிக்க வேண்டும்.  நான் நல்ல நிலையில் இருந்தாலும் கூட செய்ய நிறைய இருக்கிறது.  நான் மோசமான நிலையில் இருந்தாலும் கூட செய்ய நிறைய பணி இருக்கிறது. 

இதையே, விரும்புகிறேன் அடுத்ததாக நான் பார்க்கிறேன் சிலர், போதும்பா இத்தனை கற்றுக் கொண்டே இதோடு போதும் என்பார்கள்.  வாழ்க்கையிலே, உள்ளே இருக்கும் மாணவனை என்றுமே மரணிக்க விடக்கூடாது.  தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.  அனைத்தையும் கற்றுக் கொண்டே, முடிந்தமட்டில், இருக்க வேண்டும்.  

ஒருவேளை ஏதோவொரு, காரியத்திற்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்றால், என்னுடைய மொழி குஜராத்தி மொழி, குஜராத்தி என் தாய்மொழி.  மேலும், நான், ஹிந்தி மொழியை, அறிந்திருக்கவில்லை.  வாக்குசாதுர்யம் என்றால் என்ன?  எப்படி உரையாட வேண்டும்?   தந்தையாரோடு தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த போது.   மிகச் சிறிய வயதிலே ஏராளமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

அப்போது ஒவ்வொரு முறையும் ஏதாவது கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  அவர்களின் நடைமுறை பேசும் வழிமுறை, இவற்றிலிருந்து நான் கற்று வந்தேன்.   ஆம், இந்த விஷயங்கள், இந்த நிலையில் நாம் இன்று இல்லையென்றாலும் அப்படி இருந்தால், ஏன் இப்படி செய்யக் கூடாது?   இப்படி ஏன் நடக்க கூடாது?  இந்தக் கற்கும் இயல்பு இருக்கிறதே, எப்போதும் இருக்க வேண்டும்.  மேலும், நான் பார்த்த இன்னொரு விஷயம் பெரும்பாலான பேர்களிடம், ஆவது அடைவது தொடர்பான ஒரு கனவை வைத்திருப்பார்கள்.  இலக்கு வைத்திருப்பார்கள். 

அது இல்லாது போனால், ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சும்.   ஆகையால் எப்போதும் என் நண்பர்களிடம், உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கும் போதெல்லாம் கூறுவேன், ஆவது அடைவது என்ற கனவைக் காண்பதற்கு பதிலாக, ஒன்றைச் செய்யும் கனவைக் காணுங்கள் என்பேன்.  ஒன்றைச் செய்யும் கனவைக் காணும் போது, உதாரணமாக பத்தை எட்டத் தீர்மானித்து எட்டை எட்டினால், ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்.  நீங்கள் பத்தை எட்ட முயல்வீர்கள். 

ஆனால் நீங்கள் ஆவது தொடர்பாக கனவு கண்டால், அப்படி ஆகவில்லையென்றால், நீங்கள் அடைந்ததைக் கூட நீங்கள் சுமையாக உணர்வீர்கள்.   ஆகையால் வாழ்க்கையிலே இந்த முயற்சியை மேற்கொள்ள முயல வேண்டும்.  அடுத்தபடியாக, எது கிடைத்தது எது கிடைக்கவில்லை, என்பதற்கு பதில் என்ன கொடுப்பேன் என்ற உணர்வு வேண்டும்.  மகிழ்ச்சி இருக்கிறதில்லையா, அது, நீங்கள் எதை அளித்தீர்கள் என்ற கர்ப்பத்திலிருந்து பிறக்கிறது.

உபவாசம் ஒரு தவம்: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

pm modi interview - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

இதன் முதல் பகுதி…

வினா – நான் ஒன்றைக் கூற் வேண்டும், நான் இப்போது விரதத்தில் இருக்கிறேன்.  கிட்டத்தட்ட 2 நாட்கள், 45 மணிநேரம்.  தண்ணீர் மட்டுமே உணவேதும் கிடையாது.  இந்த உரையாடலுக்கு மரியாதை அளிக்கும் வகையிலே, அந்த ஆன்மீக அனுபவத்தை நானும் பெற.   நீங்கள் பல நாட்கள் தொடர்ந்து உண்ணாநோன்பு இருப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஏன் உண்ணாநோன்பினை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள், அப்போது உங்கள் மனம் எங்கே செல்கிறது என்று கூற முடியுமா?

மோதிஜி – எனக்கு இது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.  நீங்கள் இப்போது, உபவாசம் இருக்கிறீர்கள் என்று கூறும் போது.   அதுவும் உங்கள் நோக்கம், எனக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என்பது.  இதற்கு நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  பாரதத்திலே, இருக்கும் சமய பாரம்பரியங்கள், அவை… உண்மையிலேயே வாழ்க்கைமுறைகள்.  மேலும், எங்களுடைய உச்சநீதிமன்றம், இந்துசமயம் பற்றி அருமையாக விளக்கமளித்திருக்கிறது.   எங்களுடைய உச்சநீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்றால், இந்து மதத்திலே எந்த பூஜை புனஸ்காரங்கள் வழிமுறைகள் பற்றி இல்லை.  ஆனால் இது, வாழ்க்கை முறையாகும்.  வாழ்க்கையை வாழும் வழிமுறை. 

மேலும் அதிலே எங்களுடைய சாஸ்திரங்களிலே, சரீரம் மனம் புத்தி ஆன்மா, மனிதப் பண்பு…. இதனை, எந்த வகையிலே மேம்படுத்துவது இந்த அனைத்து விஷயங்கள் பற்றி ஒருவகையிலே, விவாதங்களும் உண்டு வழிகாட்டல்களும் உண்டு, பாரம்பரியங்கள் உண்டு வழிமுறைகள் உண்டு.  அதிலே ஒன்று…. உண்ணாநோன்பாகவும் இருக்கிறது.  உபவாசமே அனைத்தும் கிடையாது.  மேலும், பாரதத்திலே, கலாச்சாரமாகட்டும் தத்துவங்களாகட்டும், சில வேளைகளில் நான் கவனிக்கிறேன் ஒழுங்குமுறைக்காக, நான்….. எளிய மொழியில் பேசினேன் என்றால், இந்தியாவைப் பற்றித் தெரியாதவ, பார்வையாளர்களுக்கு கூறுவேன் என்றால், வாழ்க்கையின்… உட்புற வெளிப்புற இருவழி ஒழுங்குமுறைக்காக இது, மிகவும் பயனுடையதாக இருக்கிறது.  இது வாழ்க்கையை உயர்த்தவும் பயனாகிறது.

நீங்கள் உபவாசம் இருக்கும் போது, நீங்களே கவனிக்கலாம் நீங்களே கூறினீர்கள் இருநாட்களாக நீங்கள் நீரை மட்டுமே அருந்தி வருகிறீர்கள் என்று.  உங்களுடைய அனைத்து இந்திரியங்களும் குறிப்பாக, மணம் தொடர்பானதோ தொடுதல் தொடர்பானதோ சுவை தொடர்பானதோ, இவை எத்தனை விழிப்படைந்திருக்கும் என்றால், உங்களால் நீரின் மணத்தைக் கூட உணர முடியும்.  முன்னர் நீங்கள் நீரை அருந்தும் போது நீரின் மணத்தை உணர்ந்திருக்க மாட்டீர்கள்.  

யாராவது தேநீரை எடுத்துக் கொண்டு உங்களைக் கடந்து சென்றால், தேநீரின் மணமோ காப்பியின் மணமோ வரும்.  நீங்கள் ஒரு சிறிய மலரை முன்னரும் பார்த்திருக்கலாம் இன்றும் பார்க்கலாம்.  அதை நீங்கள் சுலபமாக அடையாளம் காண முடிகிறது.  அதாவது உங்களுடைய அனைத்து இந்திரியங்களும், பெரிய அளவிலே, மிகவும்…. செரிவூட்டப்பட்டு விடுகின்றன.   மேலும் அவற்றின், திறன் இருக்கிறதில்லையா, விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அதற்கு எதிர்வினை ஆற்றும் திறன், பலமடங்கு அதிகரித்து விடுகின்றன.  நான் இதை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.   இரண்டாவதாக என்னுடைய அனுபவம்.  இது உங்களுடைய கருத்தோட்டத்திற்கு, பெரிய அளவிலே, கூர்மை அளிக்கிறது, புதியனவற்றை அளிக்கிறது, மாற்றி யோசிக்கும் எண்ணமிடலை, எனக்குத் தெரியாது உபவாசம் இருக்கும் மற்றவர்களின் அனுபவம் எப்படி என்று, ஆனால் எனக்கு உண்டு.  இரண்டாவதாக பெரும்பாலானவர்களுக்கு உபவாசம் என்றால், உணவைத் துறப்பது.  உண்ணாமல் இருப்பது.  இதுவும் ஒரு உடல்ரீதியான செயல்பாடாகி விடுகிறது. 

யாரோ ஒரு மனிதனுக்கு… ஏதோ கஷ்டம் காரணமாக உணவு கிடைக்கவில்லை.  வயிறு காலியாக இருக்கிறது.  இதை எப்படி உபவாசம் என்று கொள்ள முடியும்?   இது ஒரு அறிவியல்பூர்வமான செய்ல்பாடு.   எடுத்துக்காட்டாக நான், நீண்டகாலமாக உபவாசம் இருந்து வருகிறேன் என்றால் உபவாசம் இருக்கும் முன்பாக, நான் 5-7 நாட்கள், ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய என்னென்ன உண்டோ, ஆயுர்வேத வழிமுறைகள் யோக வழிமுறைகள், அல்லது எங்கள் பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறேன்.  பிறகு என் முயற்சி உபவாசத்தைத் தொடங்கும் முன்பாக, நிறைய தண்ணீர் அருந்துவேன், முடிந்த அளவுக்கு நீரை, பருகுவேன்.   நச்சுத்தன்மை அகற்றல் என்று கூறுவார்களில்லையா, இதற்கு ஒருவகையிலே உடல் தயாராகி விடுகிறது.   அடுத்து நான் உபவாசம் இருக்கும் போது எனக்கு அது ஒரு பக்தியாகிறது. 

என்னைப் பொறுத்த வரையில் உபவாசம் ஒரு ஒழுங்குமுறை.   மேலும் நான் உபவாசம் இருக்கும் வேளையிலே, எத்தனை தான்…. வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், அப்போதும் நான், என் உள்மனத்திலே அமிழ்ந்து போய் இருக்கிறேன், எனக்கு உள்ளே ஆழ்ந்திருக்கிறேன்.  இந்த என்னுடைய அனுபவம் ஒரு அற்புதமான ஒன்றாக இருக்கிறது.  மேலும் இந்த உபவாசத்தை ஏதோ புத்தகத்தைப் படித்தோ யாரிடமோ உபதேசம் பெற்றுக் கொண்டோ அல்லது, என் குடும்பத்தில் யாரோ உபவாசம் இருக்கிறார்கள் என்பதைப் பின்பற்றி எல்லாம் செய்யவில்லை.  எனக்கு சொந்தமாக ஒரு அனுபவம் உண்டு.  பள்ளிப்பருவத்திலே, எங்கள் பக்கத்தில் காந்தியடிகளின் விருப்பம் என்னவென்றால், பசுப்பாதுகாப்பு.  இது தொடர்பாக ஒரு இயக்கம் நடந்து வந்தது அரசாங்கம் சட்டமேதும் இயற்றவில்லை.   அந்தக்காலத்தில் தேசம் நெடுக, ஒரு நாள் உபவாசம் இருந்தார்கள் பொதுவிடத்தில் அமர்ந்து கொண்டு உபவாசம் இருக்கும் நிகழ்ச்சி அது. 

நாங்களோ சிறுவர்கள்.  அப்போது தான் தொடக்கப்பள்ளியிலிருந்து வெளிவந்தோம்.  அதில் பங்கெடுக்க வேண்டும் என்று என் மனதில் தோன்றியது.  அதுதான் என் வாழ்க்கையின் முதல் அனுபவமாக இருந்தது.  அத்தனை சிறிய வயதிலே எனக்கு, பசி எடுக்கவில்லை உண்ண வேண்டும் என்ற விருப்பமில்லை என்னிடம் புதியதொரு விழிப்புநிலை உண்டானது புதிய சக்தி கிடைத்தது.  இதில் ஏதோ விஞ்ஞானம் இருக்கிறது என்று எனக்கு உறுதிப்பட்டது.  இதிலே உண்பதோ உண்ணாமல் இருப்பதோ என்ற இருமைகள் இல்லை.  இவற்றுக்கு அப்பாற்பட்ட விஷயம். 

பிறகு மெல்லமெல்ல எனக்கு நானே, பல பிரயோகங்கள் மூலம் என் உடலை உள்ளத்தை, உறுதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.  இப்படிப்பட்ட நீண்டதொரு செயல்பாட்டிற்குப் பிறகு உபவாசத்தை மேற்கொண்டேன்.  அடுத்த விஷயம் என்னவென்றால் என்னுடைய செயல்பாடு தடைப்பட்டதே இல்லை.  நான் அதே அளவு பணியாற்றுகிறேன், சில வேளைகளில் அதிகம் செய்கிறேன் என்றும் உணர்கிறேன்.  இன்னொரு விஷயம் என்னவென்றால் உபவாச காலத்திலே ஒருவேளை, என் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டியிருந்தால், எங்கிருந்து கருத்துக்கள் வருகின்றன எப்படி வருகின்றன என்று, நான் ஆச்சரியப்பட்டுப் போகிறேன்.   அற்புதமான உணர்வை உணர்கிறேன்.

வினா – அப்போதும் நீங்கள் உலகநாட்டின் தலைவர்களை சந்திக்கிறீர்கள், அப்போதும் இந்தியநாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கிறீர்கள், அப்போதும் உலகத் த்லைவர் என்ற பங்காற்றுகிறீர்கள், சில வேளைகளில் 9 நாட்கள் கூடத் தொடர்ந்து உபவாசம் இருந்த பிறகும்.

மோதிஜி – அதாவது என்னவென்றால் இதற்கு நீண்ட வரலாறு உண்டு ஒருவேளை கேட்டால்…. நீங்கள் களைத்துப் போவீர்கள்.  எங்கள் நாட்டிலே, ஒரு சாதுர்மாஸ்ய பாரம்பரியம் உண்டு.  மழைக்காலம் வரும் போது, அப்போது செரிமானசக்தி கணிசமாகக் குறையும் என்று நாமறிவோம்.   இந்த மாரிக்காலத்திலே, ஒரு வேளை தான் உண்ண வேண்டும் 24 மணிநேரத்தில் ஒருவேளை மட்டுமே.  அது கிட்டத்தட்ட, ஜூன்மாத நடுவிலிருந்து தொடங்குகிறது.  தீபாவளிக்குப் பிறகு கிட்டத்தட்ட நவம்பர் வந்து விடுகிறது.  சுமார் 4 மாதங்கள் நாலரை மாதங்கள்.  இந்தப் பாரம்பரியத்தை நான் பின்பற்றுகிறேன்.   இதிலே 24 மணி நேரத்திலே, ஒருமுறை தான் உண்கிறேன்.   பிறகு அடுத்ததாக, நவராத்திரி வருகிறது இது, பொதுவாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வருகிறது.  அப்போது நாடு முழுவதிலும் துர்க்கா பூஜை உற்சவம் நடக்கிறது. 

சக்தி உபாசனை உற்சவம் நடக்கிறது.  அது ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது.  அந்த வேளையில் நான் முழுமையாக, நான் வெந்நீர் மட்டுமே பருகுகிறேன் உள்ளபடியே, வெந்நீர் தான் என் வாடிக்கை எப்போதும் நான் வெந்நீரையே பருகுவேன்.  இது என்னுடைய நீண்டநாள் பழக்கம் இதை பின்பற்றி வருகிறேன்.  மேலும் மார்ச் ஏப்ரல் மாத வாக்கிலே, ஒரு நவராத்திரி வருகிறது…. இதை எங்கள் நாட்டில், சைத்ரீ நவராத்திரி என்பார்கள்.  இது இந்த ஆண்டிலே, மார்ச் 31 முதல் தொடங்குகிறது. 

அந்த 9 நாட்கள் உபவாசம் இருக்கிறேன் அந்த நாட்களிலே ஒரு பழம் மட்டும், பகலிலே ஒருமுறை மட்டும், இப்போது 9 நாட்களில் நான் பப்பாளிப்பழத்தை உண்கிறேன் என்றால், இந்த 9 நாட்களில் பப்பாளியைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன்.  அதுவும் ஒருமுறை மட்டுமே உண்பேன்.  இப்படி என்னுடைய 9 நாட்கள் உபவாசம் இருக்கிறது.  இப்படி ஆண்டு முழுவதும் என்னுடைய, பல்லாண்டுக்காலமாக வழிமுறையைப் பின்பற்றுகிறேன், இதை நான், 50-55 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறேன். 

வினா – சில சமயங்களில் நீங்கள் உலகநாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது, உபவாசம் இருந்தீர்கள்.  அவர்கள் இதைப் பற்றி என்ன நினைத்தார்கள், எப்படி நோக்கினார்கள்?  நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்.  கடந்த இரண்டு நாட்கள் நான் உபவாசம் இருந்தது மூலம், மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தி, அனைத்தையும் உணரும் சக்தி அதிகரித்திருக்கிறது.   ஆனால் உலகநாடுகளின் தலைவர்களோடு உங்கள் ஊடாடல் அந்த வேளையில் எப்படி இருந்தது?

மோதிஜி – அது என்னவென்றால், பெரும்பாலானவர்களுக்கு இதுபற்றி நான் தெரிவிப்பதில்லை.  இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் இதை விளம்பரம்படுத்த நான் விரும்புவதில்லை ஆனாலும், மக்களுக்கு கொஞ்சம் தெரிய ஆரம்பித்து விட்டது நான், சி எம்-பி எம் ஆன பிறகு தான் மக்களுக்கு தெரிய வந்தது ஆனால் இது, என்னுடைய மிகத் தனிப்பட்ட விஷயம் மட்டுமே.  ஆனால் தெரிய வந்ததற்குப் பிறகு நல்ல முறையிலே நான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுகிறேன் இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.  இது ஒன்றும் என் தனிப்பட்ட சொத்து இல்லையே!! 

என்னுடைய அனுபவம் யாருக்கும் பயனுடையதாக இருக்கலாமே!!  என்னுடைய வாழ்க்கையே மற்றவர்களுக்காகத் தானே எடுத்துக்காட்டாக, நான், பிரதமர் ஆன பிறகு, அப்போது ஜனாதிபதி, ஓபாமாவுடன் வெள்ளை மாளிகையில், இருதரப்பு சந்திப்பு நடந்தது.  அவர் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  அப்போது இரு அரசுகளுக்கும் இடையே விவாதிக்கப்பட்டது என்ன இது, டின்னரை அவசியம் செய்யுங்கள் ஆனால், பிரதமர் ஏதும் உண்ணவில்லையே!! 

அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள் என்ன இது, இத்தனை பெரிய தேசத்தின் பிரதமர் வருகிறார் அவர் எதுவும் உண்ணாமல் எப்படி என்றார்கள்!!   நாங்கள் அமர்ந்த போது எனக்கு வெந்நீர் வந்தது.  நான் மிகுந்த நகைச்சுவையோடு ஓபாமா அவர்களிடம் கூறினேன், பாருங்கள் ஐயா என்னுடைய டின்னர் வந்து விட்டது.  இப்படிச் சொல்லி நான் கோப்பையை எடுத்து வைத்தேன்.  பிறகு இரண்டாவது முறை நான் சென்ற போது, அவருக்கு நினைவு இருந்தது.  பாருங்கள் போன முறை நீங்கள் உபவாசத்தில் இருந்தீர்கள்…இந்த முறை நீங்கள், இந்த முறை சென்ற போது மதிய உணவு.   இந்த முறை உபவாசம் இல்லை இரண்டு மடங்கு உண்ண வேண்டும் என்றார்.