இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான் அருகே தென்கரையில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை 20 மணி 40 நிமிடத்தில் பேனரில் எழுதி சாதனை செய்த தமிழாசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தை சேர்ந்த ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன். இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினுடைய சிஷ்யையாகவும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.
தமிழ் மீது தீவிர பற்று கொண்ட இவர் தொல்காப்பிய நூல்கள் பற்றிய ஆய்வுகளை குழுவாக சேர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவரது கவிதைகள் இலங்கை வானொலியில் ஆறுக்கும் மேற்பட்ட முறைகள் வாசிக்கப்பட்டுள்ளது.
இவர் சியாம் ஆர்ட் அகடாமி மூலம் தமிழ் ஆர்வலர்களுடன் சேர்ந்து உலக சாதனை படைப்பதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். அந்த வகையில் தொல்காப்பியரின் உருவப்படம் பொறித்த பேனரில் தொல்காப்பியத்தின் 1602 நூற்பாக்களை 20 மணி நேரம் 40 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.
இவரின் இந்த முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர் எதிர்காலத்தில் தனியாக கவிதை நூல் வெளியிடுவது தனது ஆசை என்று கூறும் இவர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் கூறுகிறார்.
இது குறித்து இவர் கூறுகையில், மதுரை மாவட்டம் தென்கரையில் குடியிருந்து வருகிறேன். பலருக்கும் தொல்காப்பியர் என்ர பெயர் தெரியும் ஆனால் அவரின் உருவம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இன்றைய தலைமுறையினர் எங்கும் அவர் வரைபடத்தைப் பார்த்ததும் கிடையாது.
முதல் முறையாக சியாம் ஆர்ட் அகாடமி மூலம் தொல்காப்பியர் எப்படி இருப்பார் என்று ஓர் உருவத்தைக் கொடுத்தார்கள். அவர்களும் நாங்களும் அதாவது தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து தொல்காப்பியர் உருவப்படம் வரைந்து அவருக்குள்ளேயே தொல்காப்பியரின் நூற்பாக்களை எழுதலாம் என்று நினைத்து ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இது ஒரு குழுவாக சேர்ந்து செய்யப்பட்ட செயல்பாடு தான்! 45 பேர் சேர்ந்து குழுவாகச் செய்திருக்கிறோம். இதில் என் முயற்சி என்று எடுத்துக்கொண்டால், 20 மணி நேரம் 40 நிமிடத்தில் 1602 நூற்பாக்களை இந்த உருவப்படத்துக்குள்ள வரைந்திருக்கிறேன். நான் ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.
சாதிக்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை. அதன் முதல் முயற்சி தான் இது. இதைத் தாண்டி நான் ஒரு கவிஞரும் கூட! நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். என்னுடைய எதிர்கால ஆசை என்று பார்த்தால் தனியாக ஒரு கவிதை புத்தகம் வெளியிட வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக உள்ளது.
முள்ளிபள்ளத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தருகிறேன். கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் வளர்க்க வேண்டும்.
இந்த தொல்காப்பியத்தின் சிறப்பு என்னவென்றால், முதல் முதலில் தோன்றிய இலக்கண நூல் எது என்று பார்த்தால் அகத்தியம் தான்! ஆனா அதன் முழுமையான நூட்பாக்களும் பாடல்களும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை! பெயர் மட்டும்தான் கிடைத்தது.
ஆனால் எழுத்து பூர்வமாக கிடைத்த முதல் இலக்கண நூல் என்று பார்த்தால் நம் தொல்காப்பியத்தை மட்டும்தான் சொல்ல முடியும். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இலக்கணமும் தொல்காப்பியமும் மட்டும்தான் என்று, முடித்துக் கொள்கிறார்கள். அதைச் சார்ந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த தொல்காப்பியர் படமும் அதற்குள் எழுதப்பட்ட எழுத்துக்களும்!
இது தவிர இலங்கை வானொலியில் 7 முறை எனது கவிதைகள் வாசிக்கப்பட்டு இருக்கிறது. நான் பட்டப் படிப்பு படித்த பின்பு தான் தமிழ் மேல் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு தான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். இதற்கு எனது குடும்பத்தினர் குறிப்பாக எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருப்பது எனக்கு பெருமைக்குரிய ஒன்று.
இன்னும் தமிழ் மொழி நமது மாணவர்கள் மத்தியில் நன்றாக வளர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன மாதிரியான உதவிகள் இருந்தாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆகையால் பெற்றோர்களாகிய நீங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு, உங்கள் குழந்தைகளுக்கு பிழையில்லாமல் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மொழிக்கு உயிர் கொடுப்பது முக்கியமல்ல, புத்துயிர் கொடுக்க வேண்டும். ஆகையால் நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் மொழியை வளர்ப்போம்” – என்று கூறினார்
பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சன்ரைசர்ஸ் அனி முதலில் மட்டையாட வந்தது. சன்ரைசர்ஸ் அணியின் முக்கியமான மட்டையாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக ஆடினர். அபிஷேக் ஷர்மா (11 பந்துகளில் 24 ரன்), ட்ராவிஸ் ஹெட் (31 பந்துகளில் 67 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்), இஷான் கிஷன் (ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 106 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) நிதீஷ் குமார் ரெட்டி (15 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), ஹென்றி கிளாசன் (14 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் அதிகமாக வைத்து ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 286 ரன் எடுத்திருந்தது. ஓவருக்கு 14.3 என்ற ரன் ரேட்.
இந்தக் கடினமான இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (1 ரன்), ரியான் பராக் (4 ரன்), நிதீஷ் ராணா (11 ரன்) ஆகியோரை ஐந்தாவது ஓவருக்குள் இழந்தது. அதன் பின்னர் சஞ்சு சாம்சன் (37 பந்துகளில் 66 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (35 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஒரு நல்ல நிலைமக்குக் கொண்டு வந்தனர். ஆனாலும் எடுக்கவேண்டிய ரன்ரேட் மிக, மிக அதிகமாக இருந்தது. அச்சமயத்தில் 14ஆவது ஓவரில் சஞ்சு மற்றும் 15ஆவது ஓவரில் ஜுரல் இருவரும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் (23 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஷுபம் துபே (11 பந்துகளில் 34 ரன், 1 ஃபொர், 4 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 242 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் ராஜஸ்தான் அணி 44 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சன்ரைசர்ஸ் அனியின் இஷான் கிஷன் ஆட்ட நாயனாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது ஆட்டம் : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணியை (155/9, திலக் வர்மா 31, சூர்யகுமார் யாதவ் 29, தீபக் சாஹார் 28, நூர் அகமது 4/18, கலீல் அகமது 3/29, எல்லீஸ், அஷ்வின் தலா ஒரு விக்கட்) சென்னை அணி (19.1 ஓவர்களில் 158/6, ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65, ருதுராஜ் கெய்க்வாட் 53, விக்னேஷ் புதூர் 3/32, தீபக் சாஹார் மற்றும் வில் ஜேக்ஸ் தலா ஒரு விக்கட்) நான்கு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது ஓவருக்குள் ரியன் ரிக்கில்டன் (13 ரன்), வில் ஜேக்ஸ் (11 ரன்) இருவரும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் (29 ரன்), திலக் வர்மா (31 ரன்) இருவரும் சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர்களை சமாளித்துக் கொண்டிருந்தபோது நூர் அகமது பந்தில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். தோனி ஓர் அற்புதமான ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மட்டையாளரிகளில் தீபக் சாஹர் தவிர பிறரால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. சென்னை அணியில் நூர் அகமது நாலு விக்கட்டுகளையும் கலீல் அகமது 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது.
156 என்ற இலக்கை அடைய சென்னை அணி கொஞ்சம் சிரமப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ரச்சின் ரவீந்திரா (65 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (53 ரன்) ஆகியோரைத்தவிர ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆயினும் மும்பை பந்துவீச்சாளர்களால் ரன்னையும் கட்டுப்படுத்த முடியவில்லை; விக்கட்டுகளையும் எடுக்க முடியவில்லை. இதனால் சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நூர் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தென்காசியில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை மனு அளித்தார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டபோது, இன்று புதுடெல்லியில் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து, தென்காசி மற்றும் தென்தமிழக தொழில், சுற்றுலா வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கத் தேவையான நான்கு முக்கிய ரயில் கோரிக்கைகளை அளித்தேன். அவற்றை கனிவோடு கவனிப்பதாக உறுதியளித்தார்… என்றார்.
அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…
தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமான தென்காசிக்கு மேம்பட்ட ரெயில் சேவைகள் வழங்குவதற்கான அவசர தேவையை தாங்கள் கருணையுடன் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பண்டையகால பாண்டிய அரசின் தலைநகராக விளங்கிய தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள், சங்க இலக்கியப் பாரம்பரியமும், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் போன்ற இந்து புனிதத் தலங்களும் உள்ள பகுதிகளாக உள்ளன.
தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், செங்கோட்டை போன்ற பகுதிகள் தொழில், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஆன்மிகத்தில் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இருப்பினும், முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
— ராஜபாளையம், சிவகாசி வழியாக தென்காசிக்கும் பெங்களூருக்கும் இடையே புதிய ரயில்.
— தென்காசி மற்றும் மதுரை வழியாக 06003/04 & 06029/30 சிறப்பு ரயில்களை முறைப்படுத்துதல்.
— 12651/12652 தமிழ்நாடு சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக, திருநெல்வேலி வரை நீட்டிப்பு.
— தென்காசியை மும்பையுடன் இணைக்கும் வகையில் 11021/11022 சாளுக்ய எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாஜக., ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய தமிழக பாஜக., தலைவர் கு.அண்ணாமலை, ”தமிழகத்தில் பாஜக., ஆட்சிக்கு வந்தால், ஒவ்வோர் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்,” என உறுதிபடக் கூறினார்.
பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது …
திமுக., மேடையில் ஆபாசப் பேச்சுகள் மட்டுமே இருக்கின்றன. அவர்கள் பேசுவது எல்லாம் ஆபாச பேச்சுகள். அதற்கு கைதட்ட 100 பேர். இப்படி சிலர் கைதட்டுவதால், நாம் சரியான பாதையில் போகிறோம் என்ற மாய உலகத்தில் முதல்வர் அமர்ந்துள்ளார். அங்கு இருக்கும் தொண்டர்கள், ஆபாச பேச்சுக்கு கைதட்டுவதே காரணம். வட மாநிலத்தவர்களை அமைச்சர்கள் விமர்சித்து பேசுகின்றனர். இதற்கும் கைதட்டுகின்றனர். இவர்கள் யாரும் கும்மிடிப்பூண்டியை தாண்டி இந்தியா எப்படி இருக்கிறது என பார்த்தது கிடையாது.
இவர்கள் 1967ல் இருந்த மாய உலகத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தைக் கடந்து பாரதம் முழுவதும் சென்றால் நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும். வட மாநிலங்களில் இருப்பவர்கள் யாரும், நம்மை இழிவாகப் பேசியது இல்லை. எந்த அரசியல்வாதியும் தமிழ் சமுதாயத்தை பற்றி தவறாக பேசவில்லை. ஆனால், திமுக., தலைவர்கள் மட்டும் ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றியும் தவறாகப் பேசுகின்றனர்.
திமுக.,வினருக்கு அவர்கள், குடும்பத்தினர் மட்டும் ஆட்சியில் உள்ளதால் வெளியே வரவே பயம். மக்களின் மனநிலை தெரியாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களுடன் பழகினால்தான் மக்கள் என்ன நினைப்பார்கள் என தெரியும். ஆனால், அண்ணாதுரைக்கு பிறகு, திமுக.,வினர் கூண்டுக்கிளியாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வெளியே வந்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதே தெரியாது.
தேசிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழி தான் கற்றல் மொழியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதனை திமுக.,க்காரன் சொல்ல மாட்டான். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்கள் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 6,7,8ம் வகுப்புகளில் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம்.
திமுக., காங்கிரசுடன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, 3வது கட்டாய மொழி ஹிந்திதான் இருந்தது. முதல்முறையாக மும்மொழி கொள்கையில், மூன்றாவது மொழியாக, விருப்பமான மொழியை எடுத்துப் படியுங்கள் என கூறப்பட்டுள்ளது. அதற்காகவே கையெழுத்து இயக்கம் தொடங்கி 28 நாளில் 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக, கவர்னருக்கு எதிராக திமுக., ஆரம்பித்த கையெழுத்து இயக்கத்தில் எத்தனை பேர் கையெழுத்து போட்டுள்ளனர் என தெரியாது’; ஆனால் பாஜக.,வின் கையெழுத்து இயக்கத்தில் இணையதளத்தில் 8,20,336 பேர் கையெழுத்து போட்டுள்ளனர். நேரடியாக 17,89,694 பேர் கையெழுத்து போட்டுள்ளனர். நேற்று மாலை வரை 26,10,033 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். இது தமிழகத்தில் அரசியல் புரட்சி. இதே வேகத்தில் போனால், 2 கோடி கையெழுத்தை நோக்கி போயிருப்போம். இன்னும் 74 லட்சம் கையெழுத்து தேவைப்படுகிறது. 8 வது மாநாடு நடக்கும் போது நமது இலக்கான ஒரு கோடியைத் தாண்டி இரண்டு கோடியை நோக்கிச் சென்றிருப்போம்.
திமுக.,வில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. உதயநிதி பட்டம் வாங்கியது தெரியாது. எங்கு படித்தார் தெரியாது. கல்வி அமைச்சர் அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ளார். இவர் ஸ்டாலின் பின்னால் செல்வார். இதற்கு பிறகு நேரம் இருந்தால் கல்வியை பார்ப்பார். இவர்களுக்கு கல்வியைப் பற்றி என்ன தெரியும்.
பல வழக்குகளில் சிக்கிய திமுக., அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து நம் குழந்தைகள் என்ன படிக்கப் போகின்றனர் என முடிவு செய்யப் போகின்றனர். அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வரும்போது உலகத் தரம் வாய்ந்த குழந்தைகள் தயார்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வந்தால் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும். அரசுப் பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம்.
ஆனால், திமுக.,வினர் நடத்தும் பள்ளியில் ஒரு கல்வி முறை, அரசுப் பள்ளியில் தரமில்லாத கல்வியைக் கொடுத்து திமுக., தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்காகத்தான் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் படுத்துகின்றனர். அனைத்து தனியார் , சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழிகள் படிக்கின்றனர். தமிழகம் வளராமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் இங்கிருப்பவர்கள் பேசுவது வேறு யாருக்கும் புரியாது.
அடுத்து பாஜக., ஆட்சிக்கு வரும் போது, தே.ஜ., கூட்டணி ஆட்சியில் அமரும் போது அரசு, தனியார் பள்ளிகளில் சம கல்வி வரும். அரசுப் பள்ளியை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம் – என்று பேசினார்.
இன்றைய திருச்சி கூட்டம் குறித்து அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது…
இன்று மாலை, திருச்சியில், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழியினைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
இந்தப் பொதுக்கூட்டத்தை வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்த, தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்கள், திருச்சி நகர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவில், இதுவரை இரண்டு முறை, புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. காலத்துக்கேற்ப கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இஸ்ரோவின் தலைவராக இருந்த ஐயா திரு. கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைத்த குழு உருவாக்கியதே, தற்போது கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை.
இதன் முக்கியமான அம்சம், ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழிக் கல்வி. மூன்றாவது மொழியாக, மாணவர்களுக்கு விருப்பமான ஒரு இந்திய மொழி. ஆனால், திமுக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி மொழியாக இருந்தது.
தமிழக அமைச்சர்களாக இருப்பவர்கள் பின்னணியைப் பார்த்தால் ஒருவர் கூட, எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்தான். இவர்கள் அனைவரும், நமது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்க, மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை, அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கிடைப்பதைத் தடுக்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கை மூலம், நமது குழந்தைகள் விருப்பப்படும் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, மேல்நிலைப் பள்ளியில், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட உலக மொழிகளையும் அரசுப் பள்ளிகளிலேயே கற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். ஆனால், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வருமானம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக அரசு.
எனவே தான், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பாக, ஒரு கோடி கையெழுத்துகளை பெறுவோம் என்ற இலக்கோடு சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை கடந்த மார்ச் 5 அன்று தொடங்கினோம். நேற்று வரை, 18 நாட்களில், 26 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், தங்கள் கையெழுத்திட்டு ஆதரவளித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சியாகவே இதனைக் காண்கிறோம். இதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழக பாஜக சகோதர சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நேற்று, சென்னையில் இந்தி கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து திமுக ஒரு கூட்டம் நடத்தியது. தமிழகத்தைக் குப்பைக் கிடங்காக மாற்றும் கேரள மாநில முதலமைச்சர், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் துணை முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று, நமது பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் உறுதியளித்த பிறகும், தனது அரசியல் லாபத்துக்காகத் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக மக்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சி வரும் தேர்தலில் நிச்சயம் அகற்றப்படும். தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நிச்சயம் அமல்படுத்தப்படும். அதற்காக, நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் திரு H ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணித் தலைவி திருமதி வானதி சீனிவாசன் மற்றும் மாநில நிர்வாகிகள், பல்வேறு மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், தமிழக பாஜக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
RSS Sarkaryavah Dattatreya Hosabale Ji started his briefing by paying homage to the freedom fighters Bhagat Singh, Rajguru and Sukhdev who were martyred on this day in 1923. He recalled their contribution to the freedom movement and urged the society to draw inspiration from their sacrifices.
Dattatreya Hosabale Ji then spoke on the ABPS statement on Rani Abbakka.
On her 500th birth anniversary, the RSS Sarkaryavah paid homage to Maharani Abbakka, recognised her as Bharat’s great woman freedom fighter, a skilled administrator, and a fearless warrior. She valiantly defended the small state of Ullal (Dakshina Kannada, Karnataka) against the Portuguese.
Honoring her contributions, the Government of Bharat issued a postal stamp in 2003 and named a patrol vessel after her in 2009. Dattatreya Hosabale Ji urged the society to draw inspiration from her courage and leadership for nation-building.
Briefing the media on the ABPS, he said that the Sangh has been successful in reaching out to every corner of the country. The Sangh not only works to unify the nation but has actively involved in relief and rehabilitation activities during and after natural calamities.
The Sangh completes 100 years on the Vijayadashami day this year. As has been conveyed earlier, the coming year will be focused on expansion and consolidation of its work. Sangh’s purpose is not to celebrate the milestone but to 1). introspect, 2). acknowledge the society for its support for Sangh work and 3). rededicate ourselves to the cause of the nation and organising the society. We resolve to work more meticulously, qualitatively and comprehensively in the centenary year, he said.
Apart from the resolution on Bangladesh, the ABPS has resolved on the 100 years of RSS. As Doctor ji said during its formation, the Sangh is not beginning any new task but is continuing the mission that has been ongoing for many centuries.
From the next Vijayadashami day, the Sangh will focus on specific activities during the Sangh Shatabdi (centenary). They are as follows:
Shatabdi year will commence on the occasion of Vijayadashmi 2025, where Khand or Nagar level programs of Swayamsevakas in Ganavesh (Sangh Uniform) will be held. Sarsanghchalak will address the Swayamsevaks on the occasion as every year, he said.
Large scale home to home contact campaign for three weeks has been planned with the theme “Har gaon, Har basti-ghar-ghar” (every village, every locality and home to home) generally between November 2025-January 2026. Sangh literature will be distributed and events will organised by the local units.
He briefed that Hindu Sammelans at all Mandal or basti (locality) will be organised with the message of unity and harmony in daily life of all without discrimination, contribution of everyone to the cause of the nation and participation of every individual in Panch Parivartan.
Samajik Sadbhav meets (social cohesion) at Khand / city level will be organised, with the emphasis on living as one harmoniously, he said. He also said the agenda of these meets will also be to live a modern life without losing the cultural foundations and Hindu character. He quoted the example of Mahakumbh where people from all walks of life came together.
Dattatreya Hosabale Ji said that important citizens dialogues will be organised at district level. These programs will focus on setting the right narratives on national issues and set aside the wrong narratives prevalent in society today.
Special programs for Youth will be planned by Prant units. Several programs for the youth aged between 15 and 30 will be taken up that will focus on nation building activities, service activities and Panch Parivartan. Local units will plan these events as per the need, he said.
Answering a question on demand of Hindu organisations on repealing the Wakf act, he said that many farmers are also affected by encroachment of their lands by the Wakf. The government is working on a solution and the wrongs must be addressed.
Regarding Aurangzeb, he said that those who are icons for the betterment of the society and nation must be our idols and not those who are known for intolerance and do not represent the ethos of this nation. Opposition to those like Aurangzeb is not religious but in the interest of the nation and its cohesion. Though we gained political freedom in 1947, mental colonisation is a reality even to this day and decolonization of the mind is much required.
On a question on reservation based on religion, he said that the courts have several times set such actions of the government aside as it is unconstitutional. Any one going with such political moves are going against the purpose of the makers of constitution, he said.
On his statement about the present national scenario especially over the situation in Manipur, he said that the government has taken certain steps based on their assessment and Sangh has only said that all measures must be taken that will resolve the issue and the lives of people of Manipur return to normal and live harmoniously.
Answering a question on the agenda of the Sangh during the last 100 years, he said that the reawakening of the Hindu society has been the agenda. Sangh agenda is to organise, the Hindu society. It was an uphill task due to several inherent faults like untouchability. Sangh is steadfastly working on achieving the same through the Shakhas and its nationwide activities that bring everyone together for a harmonious society and nation.
RSS Akhil Bharatiya Pratinidhi Sabha Calls for Global Solidarity with the Hindu Community in Bangladesh
Bengaluru, 22 March 2025.
RSS Sah Sarkaryavah Arun Kumar Ji briefed the media on the resolutions passed by the Akhil Bharatiya Pratinidhi Sabha (ABPS) today. He was joined by Sunil Ambekar, Akhil Bharatiya Prachar Pramukh on the dais. Other senior functionaries present during the briefing were Karnataka Uttar and Dakshin Prachar Pramukh Arun Kumar, Kshetra Prachar Pramukh Aayush Nadimpalli, Akhil Bharatiya Sah Prachar Pramukhs Pradip Joshi and Narendra Kumar.
Arun Kumar Ji briefed that the analysis, evolution of the organizational work, impact and transformation of the society was taken up during the ABPS. He said that the RSS had focused on the expansion and consolidation of impactful work in the last 100 years. He briefed the media on the journey of the RSS and provided details of its gradual expansion from a single shakha to the entire country. The Sangh aims to be ‘Sarva Sparshi, Sarva Vyapi’, touching all aspects of the society and nation he said. In this respect, Sangh is present in 134 premiere institutions today and aims to reach all institutions in the coming years.
Sangh works in remotest and tribal parts of the country today. For instance, there are 1031 shakhas in Janjati (tribal) areas of Koraput and Bolangir in Odisha, consisting of Karyakartas of those communities.
The RSS works through consultation and mutual agreement and thousands of meeting are conducted with various stakeholders in the society. Briefing on the work on women empowerment during the last year, he said nearly 1.5 lakh men and women personalities were contacted and interactions were organised with them.
As part of the Lokmata Ahilya Devi Holkar 300th birth year celebrations, he said that 22,000 events and summits to highlight the contribution of great Lokmata Ahilya Devi were held across the country, covering people of all walks of life. As part of the same celebrations, events to bolster women participation and contribution to the society were held. In this respect, 472 women-centric 1-day summits were organised during the year where 5.75 lakhs women participated.
Sangh works towards a solution wherever there is an issue. For instance, in Madhya Pradesh’s Jhabua district, there were disabled children who were neglected and had no avenues to build a normal life. Sangh karyakartas identified such children and arranged not only for their medical support but were also provisioned with various avenues for a livelihood to lead a respectable life.
Expansion of Sangh work doesn’t mean the increase in the numerical strength of the RSS, but it indicates the increase in the positive strength of the society, he said.
Resolution on Persecution of Hindus in Bangladesh
Speaking on the resolution on Bangladesh passed by the ABPS titled ‘A call to stand in Solidarity with Hindu Society of Bangladesh’, he said that the RSS expresses deep concern over the escalating violence, oppression, and targeted persecution faced by Hindus and other minority communities in Bangladesh at the hands of radical Islamist elements. The resolution passed by the ABPS on the situation in Bangladesh called out the systematic attacks on religious institutions, brutal killings, forced conversions, and destruction of Hindu properties. The statement said that the cycle of violence has created an existential crisis for the Hindu community in Bangladesh. The ABPS resolution strongly condemned these acts of religious intolerance and human rights violations and urges the global community to take decisive action.
Unabated Persecution of Hindus in Bangladesh
Arun Kumar ji in his briefing said that the attacks on maths, temples, desecration of deities, looting of properties, and forcible religious conversions is condemnable but the perpetrators of these crimes have been emboldened by institutional apathy and government inaction.
Highlighting the continuous decline of the Hindu population in Bangladesh – from 22% in 1951 to just 7.95% today, Arun ji said that it reflects the severity of this crisis. The historical oppression of Hindus, especially among the Scheduled Castes and Scheduled Tribes, remains a persistent issue. However, the level of organized violence and the government’s passive response in the last year is deeply alarming, he said.
Growing Threat to Regional Stability
Arun Kumar Ji said that the ABPS also raises concerns about the rising anti-Bharat rhetoric in Bangladesh, which threatens to strain the historically deep-rooted ties between the two nations. The resolution warns of the interference of international forces, including Pakistan and deep-state elements, who seek to destabilize the region by fueling communal tensions and fostering distrust. The ABPS resolution underscored that Bharat and its neighboring countries share a common cultural and historical heritage, and any form of communal discord in one part of the region affects the entire subcontinent, he briefed.
Commendable Resistance from Hindu Society and Global Support
Despite facing severe persecution, Hindus in Bangladesh have shown remarkable resilience in their struggle for justice and religious freedom, said Arun Kumar.
Their peaceful, collective, and democratic resistance has been met with strong moral and psychological support from Hindus in Bharat and across the world. The Government of Bharat has reiterated its commitment to standing with Hindus and other minorities in Bangladesh. It has engaged in diplomatic efforts with the Bangladesh government and has raised the issue at multiple international forums, he said.
The ABPS resolution further called upon international organizations such as the United Nations and the global community to take serious note of these inhumane acts and pressurize the Bangladesh government to take concrete steps to halt violence against Hindus and other minorities.
He reiterated that the RSS remains resolute in its commitment to protecting the rights, dignity, and religious freedom of Hindus in Bangladesh and urges immediate intervention to address this grave humanitarian and existential crisis.
Answering a question on the unresolved issue of languages in border areas of many states, he said that all languages are equal and any issue related to the language must not divide people. We are one people, one nation and this is our uniqueness. We believe that food, region, language must not become tools to divide but must unite us all, he said.
உலகின் ஆன்மிக குருவாய் பாரதம் திகழ வேண்டும் என்ற கனாக் கண்டவர்கள் நம் குருமார்கள். ஆனால், இந்த பாரதத்தின் ஆன்மிக குருவாய்த் திகழ்ந்தது நம் தமிழ் மண் தானே!ஆன்மிக, இறை நெறித் தத்துவங்களுக்கு குறைவில்லாத தெய்வீக மண் இந்த பாரத புண்ணிய பூமி. பன்முகத் தன்மை கொண்ட பல தத்துவங்கள். போதிப்பது ஒற்றை இறைத் தன்மையை!
ஆகாயத்தில் இருந்து மண்ணில் வீழும் மழைத் துளி, அங்கங்கே சிறு சிறு ஓடைகளாகி, ஆறுகளாகி, முடிவில் சாகரத்தில் சேர்கிறது. சாகரத்தின் நீரை ஆதவன் தன் வெப்பக் கிரணங்களால் உறிஞ்சி மீண்டும் ஆகாயத்தில் சேகரித்து மழையால் மண்ணைக் குளிர்வித்து மீண்டும் நீர் சாகரத்தில் சேகரமாகிறது. இந்த மழை நீர்த் தத்துவம் போல், ஆன்மாவின் இறை சுற்றுப் பயணத்தை விளக்கியிருக்கிறார்கள் நம் ஆசார்ய புருஷர்கள்.
ஆயின் இந்த ஆசார்ய புருஷர்களின் தோற்றம் நம் தென்னகத்தில் நிகழ்ந்தவை என்பதுதான் ஆச்சரியமான உண்மை. ராமனும் கிருஷ்ணனும் வட புலம் சார்ந்த கடவுளர்கள் என்று தென்னகத்தில் ஒதுங்கிப் போய் விட முடியாது. அந்த ராமனையும் கண்ணனையும் வட நாட்டை விட தென்னகத்து ஆசார்ய புருஷர்கள்தான் கடவுளாய் உணர்ந்து தெளிந்து தத்துவம் படைத்தார்கள்.
பாரத தேசத்தில் ஆசார்யர்கள் கடந்த ஈராயிரம் வருடங்களுக்குள் எத்தனையோ பேர் தோன்றியிருக்கிறார்கள். வைணவ நெறியில் புஷ்டீ மார்க்க வைணவம் நிறுவிய வல்லபாசார்யர், கிருஷ்ண சைதன்யர் என பல ஆசார்யர்கள் இருந்தாலும், இந்த தேசம் மூவரை மட்டுமே நிறைவான ஆசார்யர்களாக போற்றிக் கொண்டாடுகிறது.
ஆசார்யர் என முழுதாய்க் கொண்டாட, அவர் பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியிருக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் எழுதியிருக்க வேண்டும். முக்கியமாக, பிரம்ம சூத்திரத்துக்கு வியாக்யானம் படைத்திருக்க வேண்டும்! இவற்றை நிறைவு செய்தவர்கள் சங்கர, ராமானுஜ மத்வாச்சாரியர்கள்.
சிலமுறை முயன்றும், ஆதி சங்கரர் கரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குப் பதிலாய், லலிதா சஹஸ்ரநாமமே கிடைத்தது என்பர். அதற்கு அவர் விளக்கவுரை எழுதினார்.
இவர்கள் மூவரும், மூன்று தத்துவங்களை முழுதாய்ப் படைத்த மகான்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல எனக் கண்ட ஆதி சங்கரரும், இரண்டல்ல என்றாலும் ஒன்றல்ல எனக் கண்ட ராமானுஜரும், இரண்டும் வேறானவை எனக் கண்ட மத்வாசார்யரும் தென்னகத்தில்தான் அவதரித்தார்கள்.
இந்தத் தென்னகம், தத்துவக் கடலாய்த் திகழ்ந்தது. வேத காலத்தில் இறைத் தத்துவங்களை உணர்ந்து அறிந்து தொகுத்த முனிவர்கள் கங்கைக் கரையில் அமர்ந்திருந்தார்கள். அவற்றின் விளக்கங்களாய் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத தத்துவங்களைப் படைத்த ஆசார்யர்கள், தென்னகத்தில், காவிரிக் கரையில் தடம் பதித்தார்கள்!
நேபாளத்தில் உள்ள ஜனகபுரி நாயகி சீதை அயோத்தியில் அவதரித்த ராமனின் துணையானார். அந்த ராமனோ, பின்னாளில் கானகம் ஏக, தென்னகம் நோக்கி வந்தான். இங்கே அவன் பாதம் பதித்த முத்திரைத் தடங்கள் ஏராளம்! அந்த ராமனே, பண்டைத் தமிழ் மண்ணில் சங்க இலக்கியங்களாலும் பாடப் பெற்ற புண்ணியன் ஆனான். அந்த அழகுத் தமிழ் இலக்கியங்களை அடியொற்றி பின்னாளில் பக்தி இலக்கிய மரபில் துளித்த ஆழ்வார்கள், ராமனைப் பாடிப் பரவசம் எய்தினர்! ராமன் சென்ற இடங்கள் எல்லாம் புனிதத் தலங்கள் ஆயின. அவற்றைப் பாடிப் பரவிய ஆழ்வார்களால், அவை திவ்யதேசங்கள் ஆயின.
பண்டைத் தமிழர் மரபில் முல்லைத் தெய்வமாய் போற்றப் பட்ட திருமாலுக்குத்தான் எத்தனை சிறப்பு! பரிபாடலும் சிலப்பதிகாரமும் சிறப்பித்துக் கூறும் மாயோன் வடிவை! குறிஞ்சிக் கடவுள் சேயோன், கைலாசத்தின் நாயகன் சிவபெருமானின் புதல்வன் என வழிபாட்டில் முதலிடம் பெற்றான். அந்த சிவபெருமானுக்கு தென்னகத்தில், நாயன்மார்கள் பாடிய அழகுத் திருத்தலங்கள் எத்தனை எத்தனை! கைலாசபதியோ தென்னாடுடைய சிவன் ஆனார்!
பண்டைய பாரதத்தின் இரு வேறு மொழிகளாகத் திகழ்ந்தவை இரட்டைச் சகோதரிகளாய்ப் பிறந்த வடமொழியும் தென்மொழியும்! இவை இரண்டும் சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து தோன்றியவை என புராணம் கூறும். உடுக்கையின் இரு பகுதிகளிலும் இருந்து தோன்றிய காரணத்தால்தான், அவை இரட்டைச் சகோதரிகள் எனப்பட்டன. வட நாட்டில் பின்னர் கிளைத்த மொழிகளின் தாயாய் சமஸ்கிருதம் ஆனது. தென்னகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாயாய் தமிழ் ஆனது!
இந்தத் தமிழ் மண், தத்துவங்களின் கடலாய்த் திகழ்ந்தது. எங்கெங்குத் திரும்பினும், பக்த கவிகள், ஆன்ம தத்துவம் உணர்ந்த அறிஞர் பெருமக்கள்,தங்கள் தத்துவங்களால் மக்களை நல்வழிப் படுத்திய ஞானப் பேராசான்கள் என ஆன்மிக நிலமாய்த் திகழ்ந்தது!
வடமொழி வேதங்களின் தத்துவ விளக்கமாய், தமிழில் தமிழ்மறை தத்துவ தரிசனங்களைப் படைத்தார்கள், பக்தி இலக்கியக் காலத்தில் உதித்த ஆழ்வார்கள் மற்றும் சைவம் போற்றிய நாயன்மார்கள். மனிதப் பிறப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய்த் திகழ்ந்தவர்கள் தமிழர்கள். சொல்லும் செயலும் சிவனுக்கும் சக்திக்கும் ராமனுக்கும் கண்ணனுக்குமாய் முழுதாய் அமைந்திருந்தது. இவற்றின் வெளிப்பாடு பக்தி இலக்கியங்களாய் முகிழ்த்தன.
உதாரணத்துக்கு ஒன்று! ஒருமுறை என் சிறு வயதில் பெரியோரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அர்த்த பஞ்சக ஞானம், அர்த்த பஞ்சக ஞானம் என்ற வார்த்தைகள் அடிக்கடி என் காதில் விழுந்தன. பஞ்சக என்று அவர்கள் தவறாகச் சொல்கிறார்கள் போலும், பஞ்ச என்றுதான் இருக்கும் என, அதிபுத்திசாலித்தனமாக எண்ணி, அர்த்தம் சொல்வதில் பஞ்சம் இருக்கும் ஞானம் போலும் என்று அந்தப் பதின்ம வயதில் எண்ணியதுண்டு. பிறகு, அது பஞ்ச அல்ல, பஞ்சக எனும் ஐந்து என்று அறிவுக்கு எட்டியது. அப்போதுதான், அந்த ஞானம் பெறாவிட்டாலும், குறைந்தது அந்த ஐந்து என்ன என்றாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.
ஒருநாள், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி சொல்லத் தொடங்கியபோது, முன்னதாக வரும் தனியன்கள் சொல்லி வந்தேன். யதேச்சையாக பராசர பட்டர் எனும் ஆசார்யர் அருளிய இந்த தனியனில் சற்று நின்று நிதானித்து ஊன்றி அனுபவித்தேன்…
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும் தக்க நெறியும் தடையாகி- தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் யாழின்இசை வேதத் தியல்
– என்ன ஓர் அருமையான வெண்பா!
அடடா.. அர்த்த பஞ்சக ஞானத்தைப் பெற, அதாவது ஐம்பொருள் அறிவு குறித்து அறிய என்னமாய் நம்மாழ்வாரைத் துணைக்குக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
இதில் என்னவெல்லாம் சொல்கிறார்… மிக்க இறை நிலை, மெய்யாம் உயிர் நிலை, தக்க நெறி, தடையாகும் ஊழ்வினை, மோட்ச வாழ்வாகிய வாழ்நிலை – இவை ஐந்தையும் அறியும் நிலைதான் இந்த மனிதப் பிறப்பாகிய பிறவிக்கு திருப்தி நிலை!
சத் சித் ஈஸ்வரன் எனும் மூன்றின் அடிப்படையில் ஆன்ம ஞானம் அமைகிறது. இம்மூன்றில் முடிவாகிய ஈஸ்வரனின் இயல்பு என்பதை, பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் என ஐந்தாக விளக்குவர்.
ஆன்மாவின் இயல்பு என்பது, நித்தியர், முக்தர், பக்தர், கேவலர், முமுட்சு என ஐவகையாக வெளிப்படும்.
ஆன்மா அடையும் பயனென்பது, புருஷார்த்தம் அதாவது புருஷனாகிய ஆன்மாவால் அடையப்படும் பயன் என்பது, அறம், பொருள், இன்பம், ஆன்ம அனுபவம், பகவத் அனுபவம் என ஐந்தாகும்.
ஆன்மா, இந்தப் பயனை அடைவதற்கான வழிகளாக கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசார்ய அபிமானம் என ஐந்து வழிகள் உள்ளன.
இந்தப் பயனை அடைவதற்குத் தடையாக, அதாவது விரோதியாக உள்ளவை, சொரூப விரோதி, பரத்துவ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, பிராப்தி விரோதி என ஐவகை.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஒன்றே போதும், இந்த அர்த்த பஞ்சக ஞானத்தை நாம் பெறுவதற்கு! உயர்வற உயர்நலம் உடையவன் இறைவன். இந்த ஆன்மாவுக்கான சொரூபம் அடியேன் எனும் தாஸ்ய நிலை. சரணாகதி செய்வதே அவனை அடைய வழி. பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் அவனை அடையத் தடையாக நிற்கும் விரோதிகள். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதே பரம புருஷார்த்தமாகிற பேறு… எனும் இந்த ஐந்து அறிவு நிலையை அடையப் பெறுவது நம் பாக்கியம்!
அதற்கு ஆழ்வார்களின் தமிழ் நமக்குத் துணை நிற்கிறது. ஆழ்வார்களிலும் இயல்பிலேயே பெண்ணாய்ப் பிறந்த ஆண்டாளின் அழகுத் தமிழ், நம் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண். அதனால்தானே தமிழக அரசின் சின்னமாய் ஆண்டாள் ஆலய கோபுரம் தன்னை இருத்திக் கொண்டது!
இறைவனை நாயக நாயகி வடிவத்தில் பாடினர் ஆழ்வார்கள். ஆயினும் ஜென்ம ஸித்த ஸ்த்ரீத்வம் எனும்வகையில் ஆண்டாள் இயல்பில் பெண்ணாய் அவதரித்து, பெண் தன்மை ஏறிய பாசுரங்களால், நாயக நாயகித் தன்மையை பொதிந்து பாடினார். அந்த அழகுத் தமிழுக்கு ஓர் உதாரணம்!
கருப்பூரம் நாறுமோ..? கமலப்பூ நாறுமோ..? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..? மருப் பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. – என்று ஆண்டாள் நாச்சியார் வெண் சங்கமான பாஞ்சஜன்யத்தைப் பார்த்துக் கேட்கும் இந்த இலக்கிய பக்திச் சுவை தனி ரகம்தான்!
சங்க காலத் தமிழ் முதல் இந்தக் காலம் வரை… காதலன் அல்லது காதலியின் நினைவில், பிரிவினால் வாடும் இணையர், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்து, தொட்டு அந்தப் பிரிவுத் துயரைப் போக்கிக் கொள்ள முயலுவர்.
குறுந்தொகையில் ஒரு பாடல்… புகழ்பெற்ற பாடல்… ஔவையார் பாடியது. 23வது பாடல்.
குறத்தி ஒருத்தி. ஊரெல்லாம் சுற்றி ஓர் ஊருக்கு வருகிறாள். அங்கே ஓர் இல்லத்தில் தலைவி ஆனவள் தலைவிரி கோலமாக சோகத்தில் ஆழ்ந்திருந்தாள்.
குறத்தியின் பாடல் கேட்டு அவள் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அப்போது அவள் தோழி குறத்தியிடம் வந்து, ”முன்பு ஒரு முறை தலைவனின் மலையைப் பற்றிப் பாடினாயே அதைப் பாடேன்… என் தோழி அதைக் கேட்க வேண்டுமாம்!” என்றாள்.
அதைக் கேட்டு, தலைவியின் தாய் அதிர்ந்தாள். ”என்ன..? அவரின் மலையைப் பாட வேண்டுமா? அதை என் மகள் கேட்க விரும்புகிறாளா? யார் அவர்? இவள் ஏன் அதைக் கேட்க வேண்டும்” என்று எண்ணியவளாக, தோழியிடம் விளக்கம் கேட்டாள்.
அதற்கு தோழி, ”ஒரு நாள் இவள் தினைப்புனத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தாள். திடீரென ஒரு யானை வந்தது… புனத்தை அழிக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து இவள் அஞ்சினாள். அப்போது அழகும் திறனும் உடைய மன்னன் ஒருவன் அந்த யானையின் மேல் வேல் எறிந்து ஓட்டி இவளைக் காப்பாற்றினான். அன்று முதல் இவள் அந்த மன்னனின் நினைவாகவே இருக்கிறாள். அதுவே இவளின் உடல் மெலிவு முதலானவற்றின் காரணம்…” என்றாள்.
இப்படி, குறத்தியாகிய அந்த அகவல் மகள் பாடும் போது, “அவர் நன்னெடுங் குன்றத்தை இன்னும் பாடு’ என்று தோழி சொன்னாள். அவ்வாறு வரும் பாட்டு இது.
அகவல் மகளே, அகவல் மகளே, மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல் அகவல் மகளே, பாடுக பாட்டே; இன்னும் பாடுக, பாட்டே; அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
தெய்வங்களை அழைத்துப் பாடும் குறப் பெண்ணாகிய அகவல் மகளே, நீ பாட்டுப் பாடு! இன்னும் பாட்டுப் பாடு! அவருடைய நல்ல உயர்ந்த மலையை முன்பு பாடினாயே, அந்தப் பாட்டைப் பாடு! என்றாள். காரணம்… அந்த மலையைப் பற்றி இவள் பாடி, அதைக் கேட்க, அந்த நினைவில் மன்னனின் எண்ணத்தை மனதில் நிலைத்திருக்கச் செய்து, அந்த நினைவு சுகத்தில் தன் தலைவி மூழ்கியிருக்கலாமே…” என்பது தோழியின் எண்ணம்.
இது போல், அகத்துறைப் பாடல்கள் நம் இலக்கியங்களில் அதிகம். இன்னொரு பாடல்…
குறிஞ்சியில் கபிலர் பாடிய பாடல். இதில், காதலன் வாழும் மலையை தொலைவில் இருந்தே பார்த்து, ஏக்கப் பெருமூச்சோடு தன் தாபத்தைத் தணித்துக் கொள்கிறாள் இந்தக் காதலி.
அன்னையே, நீ வாழ்வாயாக! நான் சொல்லும் இதனைக் கேட்க விரும்புவாயாக… அன்னையே, குறவர்கள் கிழங்குகளைப் பறித்ததால் அங்கே ஆழமான குழிகள் உண்டாயின. அந்தக் குழிகள் நிறையும்படி, வேங்கை மரத்தின் பொன்னிறம் மிக்க புதிய மலர் உதிர்ந்து இறைந்து கிடக்கிறது. அப்பேர்ப்பட்ட நிலத்தை உடைய தலைவருடைய நாட்டில், நீலமணி போன்ற திருமாலின் நிறத்தை ஒத்த பெரும் மலையும் உண்டு. அந்த மலை மறையும் போதெல்லாம், பாத்தியிலே வளர்ந்த மலர் போன்ற இவளுடைய நீண்ட கண்களில் நீர்த் துளிகள் நிரம்புகின்றன… – என்று காதலியின் துயரத்தை வெளிப்படுத்துகிறாள் தோழி.
மாலையில் பார்வையில் இருந்து மறையும் வரை அந்த மலை இவள் கண்களில் பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மலையைப் பார்த்து, தன் தலைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை உள்ளத்தில் போட்டு வைக்கிறாள் தலைவி. மாலையில் அது மறையத் தொடங்கும்போது, தலைவியின் கண்கள் பிரிவினால் கண்ணீரைச் சிந்துகின்றன.
இப்படி பண்டைத் தமிழர் வாழ்வியலிலும் இயல்பாய்ப் புகுந்து கலந்து கரைந்திருந்தது பக்தியும் பண்பாடும். காணும் இடமெல்லாம் சக்தியின் வடிவம். செயலெல்லாம் பெருமானுக்கானதே என்று வாழ்ந்த பண்டைய தமிழ் இலக்கிய மரபை ஒட்டித் தான், பக்தி இலக்கியத்திலும் ஆண்டாள் நாச்சியார் திருமொழி எனும் பாடல்களைப் பாடினார்.
மானிடவர்க்கு என்று பேச்சுப் படின் வாழகில்லேன்… என்று, தெய்வக் காதலில் கரைந்தவள் ஆண்டாள். அதுவும் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீதான காதலில் கரைந்த ஆண்டாள் நாச்சியார், கற்பூரம் நாறுமோ பாடலில், கண்ணனின் கை விட்டு நீங்காது இருக்கும் வெண்சங்கத்திடம் கண்ணனின் திருவாய்ச் சுவை பற்றிய அனுபவத்தைக் கேட்கின்றார்!
திரு ஆழி எனப்படும் சக்கரம் மிகவும் மேன்மை வாய்ந்தது. சக்கரப் படை கொண்டே கண்ணன் பகைவரின் சிரம் அறுத்தான். சங்கத்தின் முழக்கம் கேட்டால் பகைவரின் தொடைகள் இரண்டும் நடுக்கமுறும். அவ்வளவு பயத்தை பகைவருக்குத் தோற்றுவிக்கத் தக்கது போர்க்களத்தில் சங்கத்தின் பேரொலி.
இதில், சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். ‘அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்’ என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி,
ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம். அந்த பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது அது. அதனை நினைத்தபடியே… கண்ணனின் நினைவுகளில் மூழ்கிப் போனாள் ஆண்டாள். வெண்சங்கம் பெற்ற பேற்றினை தானும் பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாகத்தான், அதன் அனுபவத்தை இப்படிக் கேட்கிறாள்…
ஆக, இந்தத் தமிழ் மண் பாரதத்துக்கே ஆன்மிகத்தை வாழ்ந்து காட்டி அனுபவமாய்த் தந்த மண். அந்த மண்ணில் பிறந்து வாழும் நாம் பெரும் பேறு பெற்றவர்கள்! யாம் செய்த பெருந்தவத்தால் இம்மண்ணில் பிறந்தோம் என்று பெருமிதமாய்ச் சொல்லலாம்!
உலக வானிலை ஆய்வாளர்களின் உலக வெப்பமயமாதல் பற்றிய கணிப்புகள் சரியாகிவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. நமது காலநிலை தீயில் எரிகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும், பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகவும் வெப்பமானவை.
நிலப்பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கின்றது என்றால், கடல் வெப்பமும் சாதனைகளை முறியடித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் இதன் விளைவுகளை உணர்கிறது. காட்டுத்தீயின் சேதம், வெள்ளம் அல்லது முன்னோடியில்லாத புயல்களால் உலக நாடுகள் பாதிப்படைகின்றன.
1950ஆம் ஆண்டு உலக வானிலை கழகம் (World Meteorolorogical Organisation) உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 23ஆம் தேதியை உலக வானிலை ஆய்வு நாளாக நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொவொரு ஆண்டும் இந்நாள் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான உலக வானிலையாய்வு தினத்தின் மையக்கருத்து – ஆரம்ப எச்சரிக்கை இடைவெளியை நாம் அனைவரும் இணைந்து குறைப்போம் – என்பதாகும். இது இந்தப் புதிய காலநிலை நிலவும் சூழலில், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் ஆடம்பரமாக வெளியே காட்டுவதற்கு மட்டும் உள்ளவை அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவை வளமான வாழ்வின் முக்கியமான தேவைகள் மற்றும் சிறந்த முதலீடுகள். இவை கிட்டத்தட்ட பத்து மடங்கு வருமானத்தை வழங்குகிறது.
ஆயினும்கூட, உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகளில் இன்னும் இந்த உயிர்காக்கும் அமைப்புகளை உருவாக்குவதில் நல்ல புரிதல் இல்லை. டிஜிட்டல் யுகத்தில், பயனுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் பற்றி மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுவது அவமானகரமானது.
2027ஆம் ஆண்டுக்குள் எல்லா இடங்களும் ஒரு எச்சரிக்கை அமைப்பு மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் தனது முன்முயற்சிக்கான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய உலகம் ஒன்று கூடி, அவசரமான நடவடிக்கை மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
நாடுகளுக்குள் இயற்கைப் பேரிடர்கள் பற்றி வானிலை எச்சரிக்கைகள் வழங்குவதற்கு உயர்மட்ட அரசியல் ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவில் ஊக்கம், அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் அதிக ஒத்துழைப்பு மற்றும் நிதியத்தை அதிகரிக்க பெரிய முயற்சி தேவை. பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிப்பது முக்கியமானது. கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட எதிர்கால ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றங்களைச் செய்தது, அது முழுமையாக வழங்கப்பட வேண்டும். எனவே COP29 நிதி முடிவு இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், காலநிலை நெருக்கடியை மூலத்தில் சமாளிக்கும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் விரைவான மற்றும் ஆழமான குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைவதைத் தடுக்கிறது. இந்த ஆண்டு அனைத்து நாடுகளும் உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தேசிய காலநிலை செயல் திட்டங்களை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
இந்தியாவில் இந்திய வானிலை ஆய்வுத்துறை இயற்கைப் பேரிடர்களான, புயல், பெருவெள்ளம், பெருமழை போன்றவற்றிற்கான எச்சரிக்கைகளை வழங்குகிறது. இதற்காக நவீன டாப்ளர் வெதர் ரடார்களை நாடெங்கிலும் அமைத்து வருகிறது. சென்னையில் துறைமுக பொறுப்புக்கழக நூற்றாண்டுவிழாக் கட்டிடத்தின் மேல்மாடியில் S-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரணையில் NIOT வளாகத்தில் ஒரு C-Band டாப்ளர் வெதர் ராடார் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலும் காரைக்காலிலும் S-Band டாப்ளர் வெதர் ராடார்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை நகரில் பெருமழக்காலத்தில் பெருவெள்ள எச்சரிக்கை வழங்க ஏதுவாக இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் தானியங்கி வானிலை நிலையங்களும், தானியங்கி மழைமானிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல் 2025 – முதல் ஆட்டம் – கே கே ஆர் vs ஆர் சி பி – கொல்கொத்தா – 22.03.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (174/8, அஜிங்க்யா ரஹானே 56, சுனில் நரேன் 44, ரகுவன்ஷி 30, க்ருணால் பாண்ட்யா 3/29, ஹேசல்வுட் 2/22, யஷ் தயால், ரசிக் சலாம், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (16.2 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 177 ரன், பில் சால்ட் 56, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 59, ரஜத் படிதர் 34, லியம் லிவிங்க்ஸ்டோன் 15, வருண் சக்ரவர்த்தி 1/43, சுனில் நரேன் 1/27, வைபவ் அரோரா 1/42) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று கொல்கொத்தாவில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச்ரஸ் பெங்களூரு அணியும் கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. கொல்கொத்தா அணியில் அஜிங்க்யா ரஹானே அணித்தலைவராக இருந்தார். பெங்களூரு அணிக்கு ரஜத் படிதர் அணித்தலைவராக இருந்தார்.
பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியின் தொடக்க வீரரான க்விண்டன் டி காக் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (26 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) உடன் அஜிங்க்யா ரஹானே (31 பந்துகளில் 44 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) இணைந்து ஆடி 10 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோரை 2 விக்கட் இழப்பிற்கு 109 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர். மிக மெதுவாக ஆடக்கூடிய, சிறந்த டெஸ்ட் மட்டையாளராகக் கருதப்படும் ரஹானே இன்று அதிரடியாக ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 10ஆவது ஓவர் முடிவில் சுனிலும் 11ஆவது ஓவரில் ரஹானேயும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ரன் ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. சில விக்கட்டுகளும் வேகமாக வீழ்ந்தன. 20 ஓவர் முடிவில் எட்டு விக்கடுகள் இழப்பிற்கு கொல்கொத்தா அணி 174 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (31 பந்துகளில் 56 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் விராட் கோலி (36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (இம்பாக்ட் பிளேயர்) (10 பந்துகளில் 10 ரன்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் லியம் லிவிங்க்ஸ்டோன் (5 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடி 16.2 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 177 ரன் அடித்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
பெங்களூரு அணியின் சுழல் பந்துவீச்சாளர், தனது பந்துவீச்சின் மூலம் மூன்று விக்கட் எடுத்த க்ருணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கிரிவலப்பதை வழியாக இழுத்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழா வாகும் 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி பெரு விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்துகொண்டு முருகப்பெருமான் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இரவு மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் வழியனுப்பு விழா நடைபெற்றது.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் கிரிவலப்பாதையில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5: 45 மணிக்கு தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது.
தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷமிட்டபடி தேரை வரம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்கள்.