Home Blog Page 115

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

sivakasi corporation councellors boycot - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக பாஜக உறுப்பினர் குற்றச்சாட்டு…

காங்கிரஸ் உறுப்பினர் மறுப்பு தெரிவித்ததால் பாஜக காங்கிரஸ் உறுப்பினரிடையே ஒருவருக்கொருவர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு….

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மேஜையை தூக்கி வீசியதால் கலேபரமான மாமன்ற கூட்டம்…

மாமன்ற கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த பாஜக கவுன்சிலரை சூழ்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்-இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு- போலீஸ் பாதுகாப்புடன் பாஜக கவுன்சிலர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு….

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துவங்கி நடைபெற்றது..

இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் துவங்கியது .அப்போது பாஜக மாமன்ற உறுப்பினர் குமரிபாஸ்கர் மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து தேசிய கீதம் அவமரியாதை செய்யப்படுவதாகவும் மேயர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கையில் பதாகை உடன் கேள்வி எழுப்பினார். அதற்கு அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் அதற்கு விளக்கம் அளித்து விட்டாச்சு என்று கூறினார்.

நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை மேயரிடம் தான் கேள்வி எழுப்பினேன் என்று பாஜக மாமன்ற உறுப்பினர் கூறினார் இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பாஜக மாமன்ற உறுப்பினரின் கையில் இருந்த பதாகையை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பிடுங்கி எறிந்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த சக கவுன்சிலர்கள் அவர்களிடம் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மன்ற பொருளின் மீதான விவாதம் துவங்கியது அப்போது திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா எழுந்து நின்று பேசத் துவங்கினார்.

மேயரிடம் கேள்வி எழுப்பும் போது அதற்கு அருகில் இருந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபுதீன் பதில் அளித்தார் நான் மேயரிடம் தான் கேள்வி எழுப்புகிறேன் உங்களிடம் கேட்கவில்லை என்று ஸ்ரீனிகா கூறினார் இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சக கவுன்சிலர்கள் எழுந்து நின்று மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மேயர் ஆணையாளர் பதிலளிக்க வேண்டும் மற்ற கவுன்சிலர்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபுதீன் மேசையை கீழே தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாமன்ற உறுப்பினரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தை நடத்த அனுமதியுங்கள் என்று மாமன்ற உறுப்பினர்களிடம் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்திய தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் அமைதியாக தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்தது.

மாமன்ற கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கரை சூழ்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ பாஜக கவுன்சிலரும் காங்கிரஸ் நிர்வாகிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக கவுன்சிலரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

கடந்த மார்ச் 11-ம் தேதி சிவகாசி மாநகராட்சி கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் கோரி 5 தீர்மானங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு எதிராக மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தம் செய்து  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிட்டது.

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

pm modi interview - 2026

அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது. 

இதில், ஆர்.எஸ்.எஸ்., அனுபவங்கள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டவை…

எங்கள் பகுதியில் ஆர்எஸ்எஸ்.,ஸின் ஷாகா நடக்கும்.  ஷாகாவில் விளையாட்டுக்களோடு தேசபக்திப் பாடல்கள் பாடுவோம்.  அது மனதுக்கு இதமாக இருக்கும் மனதுக்கு அது பெரும் உற்சாகத்தை அளிக்கும்.  இப்படித் தான் நாங்கள் சங்கத்தில் இணைந்தோம்.  

சங்கத்தின் கலாச்சாரம் எங்களைத் தொட்டது.  என்னவென்றால், என்ன நினைத்தாலும் என்ன செய்தாலும், எதைப் படித்தாலும் கூட நிறைய படிக்க வேண்டும் அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.  உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அதிகம் செய்து அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.  இதைத் தான் அங்கே தொடர்ந்து கற்பித்து வந்தார்கள்.  சங்கம் அது மிகப்பெரிய ஒரு அமைப்பு.  மேலும், அது தனது நூற்றாண்டை இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது.  

அதோடு உலகத்திலே இத்தனை பெரிய, ஸ்வயம்சேவக அமைப்பு, இருப்பதாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.  கோடிக்கணக்கான மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள்.  ஆனால் சங்கத்தினைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதானது இல்லை.  சங்கத்தின் பணிகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.  மேலும் சங்கம், தன்னைத் தானே, ஒரு, வாழ்கையின் குறிக்கோள் என்போம் இல்லையா, இது தொடர்பாக, ஒரு நல்ல வழியைக் காட்டுகிறது.  இரண்டாவதாக தேசமே அனைத்தும் ஆகும். 

மேலும் மக்கள் சேவையே மகேசன் சேவை.  இதைத் தான் எங்களுடைய, வேதகாலத்திலிருந்து கூறுவது எங்கள் ரிஷிகள் கூறியது ஸ்வாமி விவேகானந்தர் கூறியது, இதைத் தான் சங்கத்தவர்கள் கூறுகிறார்கள்.  ஸ்வயம்சேவகர்களிடம் கூறுவதெல்லாம், சங்கத்திலிருந்து நீங்கள் கற்ற பாடங்களை, ஒரு மணிநேரம் ஷாகாவில் இருப்பது அல்ல சீருடை அணிவது மட்டுமல்ல, நீங்கள் சமூகத்துக்காக உங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும்.

இந்த உத்வேகத்தால், இன்று ஏராளமான பணிகள் எடுத்துக்காட்டாக, சில ஸ்வயம்சேவகர்கள் சேவாபாரதி என்ற சுயவுதவி அமைப்பை ஏற்படுத்தினார்கள்.  இந்த சேவாபாரதி ஏழைகள் வசிக்கும் பகுதிகள் அவர்களின் குடிசைப் பகுதிகள், இதனை அவர்கள் சேவா பஸ்தி என்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த வரையில் கூறுகிறேன், கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம், சேவை மையங்களை நடத்துகிறார்கள். 

எந்தவொரு அரசின் உதவியேதும் இல்லாமல், சமூகத்தின் உதவியோடு, அங்கே செல்வது குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது, அவர்கள் உடல்நலம் பற்றி அக்கறை போன்று பணியாற்றுகிறார்கள்.  நற்பண்புகளை சொல்லித் தருவது.  அந்தப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளுதல்.  நீங்களே பாருங்கள் ஒண்ணேகால் இலட்சம் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல.  அதே போல சில ஸ்வயம்சேவகர்கள், சங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தை நடத்துகிறார்கள். 

அவர்கள் காடுகளிலே வனம்வாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து, வனவாசி மக்களின் சேவையில் இப்படி 70000க்கும் மேற்பட்ட, ஏகல் வித்யாலயாக்கள் ஓராசிரியர் பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள்.  மேலும் அமெரிக்காவிலும் சிலர் இருக்கிறார்கள், இவர்கள் பழங்குடிக்ளுக்காக, 10-15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள், இந்தப் பணிக்காக.  அவர்கள் சொல்கிறார்கள், ஒரு மாதம் ஒரு கோகோ கோலா குடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு கோகோகோலா குடிக்காமல், அந்தப் பணத்தை, ஓராசிரியர் பள்ளிக்குத் தருவோம். 

இப்படி 70000 ஓராசிரியர் பள்ளிகளை பழங்குடியினக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  சில ஸ்வயம்சேவகர்கள், கல்வித் துறையில் மாற்றம் உண்டாக்க வித்யா பாரதி அமைப்பை ஏற்படுத்தி, சுமார் 25,000, பள்ளிகளை நடத்துகிறார்கள், தேசத்திலே.   30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் நான் கருதுகிறேன் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது.  நற்பண்புகளுக்கும் முதன்மை அளிக்கப்படுகிறது.  களப்பணி அனுபவம் உள்ளவர்களால்.  திறன் மேம்பாட்டில் கவனம்.  சமூகத்துக்கு சுமையாக இருக்க கூடாது. 

அதாவது…… வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர்கள் பெண்களாகட்டும் இளைஞர்களாகட்டும், தொழிலாளிகள் ஆகட்டும்.  ஒருவேளை, உறுப்பினர் அடிப்படையில் கூறவேண்டும் என்றால், பாரதீய மஸ்தூர் சங்கம், அதற்கு சுமார்…. 55000 சங்கக் கிளைகள் இருக்கின்றன.  மேலும் கோடிக்கணக்கானோர் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.  ஒருவேளை உலகத்திலே, இத்தனை பெரிய தொழிலாளர் சங்கம் இருக்காது என்று நினைக்கிறேன்.  

கற்பித்தல் எப்படி இருக்கிறது?  இடதுசாரிகள் எல்லாம், தொழிலாளர் இயக்கத்துக்கு வலு சேர்த்தார்கள்.  தொழிலாளர் இயக்கங்களின் கோஷம் என்னவாக இருக்கிறது?  Workers of the World Unite.  உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருங்கள்!!   ஒரு கை பார்க்கலாம்…இதுவே உணர்வு.  ஆனால் மஸ்தூர் சங்கத்தினர் ஆர் எஸ் எஸ்ஸின் ஷாக்காக்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?  

அவர்கள் கூறுகிறார்கள், தொழிலாளர்களே, உலகத்தை இணையுங்கள்.  அவர்கள் கூறுகிறார்கள், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!!  இவர்கள் கூறுகிறார்கள் தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்!!   எத்தனை பெரிய வித்தியாசம்……. வாக்கியத்தில் சொற்கள் இங்கே அங்கே மாற்றி இருந்தாலும் எத்தனை பெரிய, கருத்தியல் மாற்றம்!! 

சங்கத்தின் ஷாகாவிலிருந்து வெளிப்பட்ட இவர்கள், தங்கள் விருப்பம் நாட்டம் இயல்புக்கு ஏற்ப பணியாற்றும் போது, இந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.  

இவர்கள் ஆற்றும் பணியைப் பார்த்தீர்களென்றால், அப்போது நீங்கள், 100 ஆண்டுகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கமானது, பாரதத்தின், பகட்டுநிறைந்த உலகிலிருந்து விலகியிருந்து, ஒரு சாதகனைப் போல, அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்.  

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

(தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்)

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் உட்பட பல பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுக்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்களை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது.

ஜனநாயக வழியிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என எதற்கும் அனுமதியில்லை. சமூக வலைத்தளங்களில் அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள், எதிர் கருத்து தெரிவிப்பவர்கள், பதிவு போடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள்கள் புழக்கம் பள்ளி கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில், சிறைகளில் என எல்லா இடங்களிலும் பரவியுள்ளதை பார்க்கிறோம். அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்களை திட்டமிட்டு காட்டிக்கொடுத்து அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகிறார்கள். நீதிமன்ற வாசலிலே கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு தரம் கெட்டு கிடக்கிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த அவலட்சண நிலையை கண்டித்து தனி மனிதரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பொதுவெளியில் பேசினால் அவர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை.

ஜனநாயக ரீதியாக ஆட்சியினுடைய குறைகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு திமுகவை விமர்சிக்கும் அனைவரையும் கைது செய்வது என்பது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.

டாஸ்மாக் மூலமாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் துணையுடன் இந்த ஊழல் அரங்கேறி உள்ளது.

இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் – என்று காடேஸ்வரா சுப்பிர்மணியன் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்துள்ளார்.

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

bjp leaders arrested for tasmac corruptions - 2026

சென்னையில் தமிழக அரசின் சாராய விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பி, பாஜக., முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட, பாஜக.,  மூத்த தலைவர்களை ஆளும் திமுக., அரசின் போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம், மது ஆலைகளில் இருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லறை மதுக்கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. கடந்த மார்ச் 6ஆம் தேதி திமுக. அரசின் சாராய நிறுவனம், திமுக., அரசின் சாராய நிறுவனத்துக்கு மது கொள்முதல் செய்யும் திமுக.,வினருக்குச் சொந்தமான சாராய ஆலைகள், சாராய விற்பனை நிறுவனங்கள், அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம், இந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், மார்ச் 17 இன்று, அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முன்னதாகவே அறிவித்துவிட்டு, செல்ல திட்டமிட்ட  பாஜக., தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கு.அண்ணாமலை உள்ப்ட, சில தலைவர்கள் செல்லும் வழியில்  கைது செய்யப்பட்டனர். 

பாஜக., சட்ட மன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோருடன், பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக பாஜக., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக., மாநில செயலாளர்கள் வினாத் செல்வம், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, போராட்டத்திற்குச் செல்லும் வழியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது: “நானும் பாஜக., நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்து விடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்கு செல்லும் பாஜக.,வினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து திமுக., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து திமுக., சந்திக்க உள்ளது – என்று கூறினார். 

செய்தியாளர்களிடம் பேசிவிட்டு போராட்டத்துக்குப் புறப்பட்ட அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

பின்னர், ஆளும் திமுக., அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கை தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், 

தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? – என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

thiruvedagam vivekananda college temple conference - 2026

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை கல்லூரி நூலகம், சமஸ்கிருத துறை மற்றும் காந்திகிராம் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி சார்பில் நடைபெற்றது. கல்லூரி இறை வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி தொடங்கியது. சமஸ்கிருதத்துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். ஆர். எஸ். எஸ் .மண்டல பி.ஆர்.ஓ.கணேஷ்பாபு துவக்க உரை ஆற்றினார். விவேகானந்த கல்லூரி மாணவர் சங்கச் செயலர் முனைவர் தீனதயாளன் கல்லூரியின் மேனாள் முதல்வர்  முனைவர் வன்னியராஜன் சிறப்புரை ஆற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.

கல்லூரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ மேனாள் விலங்கியல் துறை பேராசிரியர் சந்திரன் கல்லூரியின் அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு லட்சுமி கல்வியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் லட்சுமி கல்வியல் கல்லூரியின் நூலகர் முனைவர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிற்சி பட்டறையில் மேனாள் சமஸ்கிருத துறை தலைவர் பேராசிரியர் ஆனந்தராமன் கோவில்களில் பொதுவான வடிவமைப்பு என்ற தலைப்பிலும், கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர்  கரிகாலன் ஒரு கோவிலின் வரலாற்றை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பிலும், விவேகானந்த கல்லூரி சமஸ்கிருதத் துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் சிவபெருமானின் உருவ சின்னங்கள் என்ற தலைப்பிலும் சிறப்பு பட்டறை பயிற்சியுடன் உரையாற்றினர்.

இறுதி நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி நூலகர் முனைவர் பிரபாகரன் நன்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியினை வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் வடிவேல் மற்றும் முனைவர் வடிவேல் ராஜா ஒருங்கிணைத்தனர். நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

ஊடகவாதிகளே… திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!

write thoughts - 2026
#image_title

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு – இந்திய மாணவியின் விசா ரத்து . அமெரிக்கா அரசு அதிரடி. இது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய அக்கறையின் வெளிப்பாடு.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்த நிலையில் அந்த மாணவி தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்று இந்திய தமிழக ஊடகங்களில் செய்தி வருகிறது. இது இந்திய ஊடகங்களின் சில்லறை தனத்தின் சான்று.

விசா ரத்து செய்த பிறகு அவர் அங்கு தங்கியிருந்தால் சட்டவிரோத குடிபுகல் குடியேறல் விதியின்படி அவர் கைது செய்யப்பட்டு அமெரிக்கா சிறையில் அடைக்கப்படுவார். அமெரிக்க நீதிமன்றத்தில் கிடைக்கும் தண்டனை அவர் வாழ்நாளில் பாதியை அமெரிக்க சிறையில் கழிக்கும்படியாக கூட இருக்கலாம்.

நகர்ப்புற வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சிக்கு கௌரவ படிப்பிற்காக போன மாணவிக்கு இந்த சட்டவிதிகள் நிச்சயம் தெரிந்திருக்கலாம் அல்லது யாரேனும் எச்சரித்து இருக்கலாம். அந்த எச்சரிக்கை உணர்வில் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறி இருக்கிறார்.

ஆனால் ஏதோ அந்த மாணவிக்கு எவ்வளவு பெருந்தன்மை? பாருங்கள். .தன்மானம் உள்ளவர். அதனால் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்ற கருத்தியலை உருவாக்கும் விதமாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவது இந்த உலகில் எப்படி எந்த காலத்திலும் பாகிஸ்தான் திருந்தாதோ? அப்படியே இந்திய ஊடகங்களும் உருப்படாது என்பதையே இந்த செய்தி காண்பிக்கிறது.

ஒருவேளை US AID என்ற பெயரில் பாரத நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்குவதற்காக தேச விரோத சக்திகள் எல்லாம் ஒன்றிணைத்து பெரும் சில்லறையை வாரி இறைத்து இங்கு ஒரு குழப்பத்தை உருவாக்க அமெரிக்காவின் சில சக்திகள் முயன்றதே . அதில் பெரும் பலன் அடைந்தவர்களில் இந்தியாவில் உள்ள எதிர்க் கட்சிகளுக்கு அடுத்து இருப்பவர்கள் ஊடக வாதிகள் என்ற போர்வையில் இருக்கும் இந்து இந்திய விரோதிகள் தான்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட சக ஊடகவாதிகளின் மன காயத்திற்கு மருந்திட இந்த கருத்தியலா? .

இல்லை பெரும் வரும்படி நின்று போன எரிச்சல் அந்த வருமானத்தை நிறுத்திவிட்ட ட்ரம்ப் அரசுக்கு எதிராக தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த செய்தியை இந்திய ஊடகங்கள் பயன்படுத்த அந்த மாணவி தன்மானத்தோடு அமெரிக்காவை விட்டு வெளியேறும் கருத்தியலில் செய்தி வெளியிடுகிறதா?

உண்மையில் இவர்கள் பொறுப்புள்ள ஊடகங்களாக இருந்தால் படிப்பதற்காக வெளிநாடு போன இடத்தில் அந்த நாட்டுக்கு எதிரான கொள்கை உடைய ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பை இந்த மாணவி எதற்காக ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி இருப்பார்கள்.

இவர் அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவரானால் எதற்காக அமெரிக்காவிற்கு படிக்கப் போனார்? இவரின் பின்னணி என்ன? என்ற கேள்வியை முன் வைத்திருப்பார்கள்.

அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான நட்பில் இருக்கும்போது மோடி எனது நண்பன் என்று அமெரிக்கா அதிபர் பகிரங்கமாக சகோதர உணர்வோடு குறிப்பிடும்போது இந்தியாவிலிருந்து போய் அமெரிக்காவிலிருந்து கொண்டு அந்த நாட்டிற்கு எதிரான ஒரு பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது இருநாட்டு உறவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதானே? அப்படியானால் இவளின் உண்மையான நோக்கம் இந்தியாவுக்கு எதிரான சதியா? இந்திய அமெரிக்க உறவை கெடுக்கும் சக்திகளின் கைப்பாவையா இவள் ? என்று கேட்டிருக்க வேண்டும்.

தேசப்பற்று உள்ள ஊடகங்களாக இருந்திருந்தால் அந்த மாணவியின் பின்னணி என்ன?. ஹமாஸ் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாத அமைப்பு மட்டுமல்ல. அது இந்தியாவிற்கும் எதிரானது தான். பாரதத்தில் காஷ்மீர் பிரிவினையை உள் நாட்டு பயங்கரவாதத்தை பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரித்த ஆதரிக்கும் ஒரு அமைப்பு தான் ஹமாஸ்.

அப்படிப்பட்ட ஒரு அமைப்பை இவர் ஆதரிக்கிறார் என்றால் இவளின் பின்னணி என்ன? இவளுக்கு தேசவிரோத சக்திகள் பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பார்கள்

கொஞ்சமேனும் இந்த நாட்டின் பாதுகாப்பு மக்களின் நலன் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருந்தால் மாணவர்களே! படிக்கும் வயதில் உங்களின் ஒழுக்கம் படிப்பு பாதுகாப்பு குடும்ப பாதுகாப்பு கடந்து வேறு எவரோடும் தேவையில்லாத தொடர்புகள் வேண்டாம். அது உங்களை தேவையில்லாத சிக்கலில் கொண்டு போகும் என்று எச்சரிக்கை விடுப்பார்கள்..

பெற்றோர்களிடம் உலகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களை மூளை சலவை செய்தும் கட்டாயமாக கடத்திப் போய் – போதை – கடத்தல் – தேசவிரோத – பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும் அதனால் அவர்கள் பயங்கரவாதிகளாக உருவெடுப்பதும் பல இடங்களில் உயிரிழப்பதும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

அந்த செய்திகளை குறிப்பிட்டு பெற்றோர்களே.உங்களின் குழந்தைகள் நலனுக்கும் தேச நலன் கருதியும் தயவு செய்து அவர்களை கண்காணியுங்கள் . அவர்கள் பிரிவினைவாத தேசவிரோத பயங்கரவாத அமைப்புகளின் பிடிக்குள் போகாமல் அவர்களை பத்திரமாக பாதுகாத்திடுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பெயரில் இருக்கும் இந்திய ஊடகங்கள் தேசத்தை உள்ளிருந்தே அரிக்கும் நோய் கிருமிகளுக்கும் இங்கேயே உண்டு கொழுத்து இந்த தேசத்தை சிதைக்க வேண்டும் என்று வன்மத்தோடு அலையும் விஷஜந்துக்களுக்கும் சாமரம் வீசி அவர்களை நாயகர்களாக சித்தரிக்கும் கேவலமான செய்கையை ஊடக வாதிகள் என்ற பெயரில் செய்கிறார்கள். அதற்கு கண் கண்ட சாட்சியம்தான் இந்த செய்தியின் கருத்தியல்.

இவ்வளவிற்கும் மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் மறந்தும் தங்களை கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ மாட்டார் என்ற நம்பிக்கையாக கூட இருக்கலாம். ஆனந்த விகடன் மீது நடவடிக்கை எடுத்த போது வாய் கிழிய பேசியவர்கள் யாரும் இதை கண்டிக்க கூட மாட்டார்கள். காரணம் எல்லோரும் கூட்டு களவாணிகள்.

ஊடகவாதிகளே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் உங்களைப்போல தரமற்ற மனிதர்களால் தான் தேசத்தை அரிக்கும் புற்றுநோய் போல மாறி வருகிறது. திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.

ஜான்சி ராணி ஹிந்துஸ்தானி.

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

rupees to ru in tn budget 2025 - 2026

வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 26

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு நிதிநிலை அறிக்கை ஆகவே உள்ளது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது கடந்தாண்டை விட 3000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது விவசாயிகளுக்கான பட்ஜெட் சுமார் 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றம் அளித்துள்ளது

ஆட்சியில் நான்காம் ஆண்டில் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை என்பதால் சிறப்பான திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வருவாயை பெருக்க ஏதுவான திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாது விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் தங்கள் தேவைகளை குறித்து கலந்தாய்வு கூட்டங்களில் அரசிடம் கொடுக்கப்பட்ட எந்த ஒரு கோரிக்கையும் சேர்க்கப்பட்டதாக தெரியவில்லை

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள்,பயறு வகை உற்பத்தி, மலை பயிர் மேம்பாடு, சூரிய சக்தி மற்றும் இயந்திர மையமாக்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது

மூன்றுலட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நடைபெறும் நிலையில் 35 ஹெக்டர் நிலங்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு என்பது அர்த்தமற்றது சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்ற வகையில் பயிர் காப்பீடு ஒரு ஏமாற்றம் அளிக்கக் கூடிய நிலையில் தான் உள்ளது

விவசாயம் வயலுக்கு தண்ணீர் தரக்கூடிய சி மற்றும் டி வாய்க்காலில் சுமார் 3000 கிலோமீட்டர் தூர்வாரப்படும் என அறிவித்துள்ளது ஆனால் இவைகள் பொதுப்பணி துறையின் மூலமாக தூர்வாரப்பட்டால் சிறப்பாக இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை போன்றவற்றால் தூர்வாரப்படும் என கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது இது குறித்து அரசின் கொள்கை மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிதிநிலை அறிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடியதாக விவசாயிகள் உணருகிறார்கள்

வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றால் முந்திரிக்காக தனி வாரியம் அமைத்துள்ளது மற்றும் M S சாமிநாதன் விருது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்
விதை உற்பத்தியில் கவனம் கொடுத்து அவற்றை பெருக்க பாரதிய கிசான் சங்கம் வழங்கிய பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது காணும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது அதாவது விதை உற்பத்தி விவசாயிகளை அதிகப்படுத்த வேண்டும். விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதர்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்

  • வீரசேகரன்
    மாநில செயலாளர். பாரதீய கிசான் சங்கம்

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

sabarimala aiyappa concluding pooja - 2026

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை வழிபாடுகள் துவங்கியது.

தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து பூஜை அபிஷேகம் வழிபாடு மேற்கொண்டார்.

இன்று (மார்ச் 15) முதல் மார்ச் 19ம் தேதி வரை நாள்தோறும் வழிபாடுகள் நடைபெறுகிறது.

மார்ச் 19ம் தேதி இரவு அத்தாழ பூஜை முடிந்த பின்னர், அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இம்முறை 18ம் படி ஏறிய பின் சாமியை தரிசனம் செய்ய சோதனை அடிப்படையில் புதிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 18ம் படி வழியாக சந்திதானம் வந்த பிறகு, மேம்பாலம் வழியாக இல்லாமல் கொடிமரத்தில் இருந்து நேரிடையாக கோவில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்லலாம்.

இந்த நடைமுறை மூலமாக இம்முறை பக்தர்களுக்கு கூடுதல் நேரம் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

பக்தர்களுக்கு இனிமையான அனுபவத்தை உறுதி செய்வதற்காக திருவிதாங்கூர் தேவசம் வாரியம் ஒரு வரலாற்றுப் பணியைத் தொடங்கியுள்ளது.

சபரிமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் வசதியான தரிசன முறையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாரித்து வருகிறது.

18வது படியில் ஏறும் ஐயப்ப பக்தர்களை, கொடிக்கம்பத்திலிருந்து மேம்பாலம் கடந்து, நேரடியாக சன்னதியின் முன்புறம் அழைத்துச் செல்ல ஒரு அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

மீனமாச பூஜைக்காக கோயில் திறக்கப்பட்டு மார்ச் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த புதிய வழியாக பக்தர்கள் தரிசனம் தொடங்கியது . மேம்பாலம் வழியாக தரிசன முறை பக்தர்களை 2 முதல் 5 வினாடிகள் வரை தரிசனம் செய்ய அனுமதித்தால், புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், 20 முதல் 30 வினாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும்.

புதிய அமைப்புக்குத் தயாராவதற்கு பக்தர்களை இரண்டு வரிசைகளாகப் பிரிக்க புதிய மேடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்திலிருந்து இரண்டு வரிசைகளில் ஐயப்ப பக்தர்கள் கோயிலின் முன்புறம் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி கோயிலை விட்டு வெளியேறுவார்கள்.

இந்த வசதியை செய்த
தேவசம் அமைச்சர் ஸ்ரீ வி.என். வாசவன், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தேவசம், சபரிமலை சிறப்பு ஆணையர் ஸ்ரீ ஜெயகிருஷ்ணன், ஏடிஜிபி ஸ்ரீஜித், தேவசம் ஊழியர்கள்.
தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் நன்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சபரிமலையில் ஜால்ரா அடிக்கும் சில நபர்களுக்கு பக்தர்களுடன் வராமல் தனியாக வந்து கூட்ட நெரிசல் இல்லாமல் சிக்கி சிரமம் இல்லாமல் தரிசனம் செய்யும் விஐபி என்ற பெயரில் பின்புறமாக சென்று தரிசனம் செய்யும் சில நடைமுறைகளை கட்டுப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

48 நாள் விரதம் இருந்து இருமுடி கொண்டு வரும் பக்தர்கள் பின் வரிசையில் விரதம் இல்லாமல் வரும் பக்தர்கள் முன் வரிசையில் முன்பு பக்தர்கள் முதல் வரிசையில் குழந்தைகளையும் மாற்றத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் பெரியோர்களை அனுமதித்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

கோர்ட்டும் முதல் வரிசையில் குழந்தைகளை பெரியோர்களை அனுமதிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளது ஆனால் இவர்கள் தற்போது அவர்களுக்கு வசதியாக மட்டுமே இந்த புதிய வழிநடைமுறையை கொண்டு வந்துள்ளனர்

இந்த வழிமுறையினால் குழந்தைகள் சாமி பார்ப்பது மிக மிக சிரமம். முதல் வரிசை என்பது தற்போது தேவஸ்தானம் ஊழியர்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களும் முக்கியமானவர்களும் இந்த நடைமுறை அவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இந்த வழி தற்போது முதல் வழி அனுமதிக்கப் படுகிறது

முன்பு முதல் வரிசையில் சென்று தரிசனம் செய்வோம் இப்பொழுது தரிசனம் செய்ய ஓர் ஐந்து அடி தள்ளி நின்று தரிசனம் செய்ய வேண்டும் அப்பொழுது பின் வரிசையில் வரும் குழந்தைகள் சாமி தரிசனம் செய்வது சிரமம்.

முன்வரிசையில் விஐபிகள் நின்று கொண்டிருந்தால் பின்னாடி வரும் குழந்தைகள் எப்படி தரிசனம் செய்ய முடியும் இது பக்தர்கள் தரிசனம் செய்ய 20 நிமிடம் 30 நிமிடம் கூடுதலாக நேரம் கிடைக்கும் என்று தெரிவித்துவிட்டு இவர்கள் முதல் வரிசையில் நிற்கும் போது மற்ற பக்தர்கள் லைனில் வரும் பொழுது தள்ளுமுள்ளு ஏற்படுகிறது என்ற காரணத்தினால் இவர்கள் மீது நாம் இடித்து கொண்டு செல்லாமல் இருக்க இவர்கள் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் தரிசனம் செய்வதற்காகவே விஐபி அந்த முதல் வரிசையை விட்டுவிட்டு பக்தர்களை பின்னாடி இருந்து தரிசனம் செய்ய அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்

பக்தர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த தேவஸ்தானம் முதல் வரிசை வரைக்கும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும் இந்த ஏற்பாடும் விஐபிகள் எந்த ஒரு சிரமமும் இன்றி தரிசனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய வழிமுறை ஏற்பாடு தரிசனம் ஆகும் .

பக்தர்களுக்கு வசதி செய்கிறேன் என்ற பெயரில் அவர்கள் விஐபிகளை இடைஞ்சல் இல்லாமல் தரிசனம் செய்வதற்காகவே சில ஏற்பாடுகள் செய்கிறார்கள் முன்பு முதல் வரிசையில் விஐபிகள் நிக்கும் பொழுது நாமும் முதல் வரிசையில் செல்லும் பொழுது அவர்களை இடுத்திக்கொண்டு செல்வோம் காவல்துறை இழுத்து விடுவார்கள் இப்பொழுது அந்த சிரமம் கிடையாது .

விஐபிகள் எவ்வளவு நேரம் வேணாலும் நின்று கொண்டு அங்கே தரிசனம் செய்யலாம்.இந்த நடை முறையில் மாற்றம் செய்து கடும் விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஐயனை நன்கு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்க தேவமம்போர்டு நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

railway news - 2026
#image_title

வைகை எக்ஸ்பிரஸில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு .. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா…

பயணிகளின் வசதிக்காக மதுரை – சென்னை – மதுரை வைகை மற்றும் காரைக்குடி – சென்னை – காரைக்குடி பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.

தென்காசி நெல்லை விருதுநகர் மக்கள் வைகையில் பயணிக்க வசதியாக செங்கோட்டை மதுரை இடையே இணைப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

மதுரை – சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

அதேபோல காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவற்றில் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

இதற்காக இந்த ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த ரயில்கள் 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 12 முன்பதிவுள்ள இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.

இந்த நிலையில் தென்காசி நெல்லை விருதுநகர் மக்கள் வைகையில் பயணிக்க வசதியாக செங்கோட்டை மதுரை இடையே இணைப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரையில் இரவு வைகை ரயில் வந்தவுடன் செங்கோட்டை சென்று அதிகாலை செங்கோட்டையில் புறப்பட்டு மதுரைக்கு வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அழகர்கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கோலாகலம்!

azhagarkoil theppom - 2026

அழகர்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கோலாகலம்! கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்!

மதுரை மாவட்டத்தில், பிரசித்திபெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மாசி மாதம் பவுர்ணமி நாளில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மாசி மக தெப்பத்திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் திருக்கோவில் உறியடி மண்டபம் முன்பு கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்ச விழா நடைபெற்றது.

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. முன்னதாக, அழகர்மலை கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சப்பர பல்லக்கில் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் அருகில் உள்ள பொய்கைகரைப் பட்டியில் உள்ள தெப்பத்திற்கு புறப்பட்டார். வழி நெடுகிலும் நின்று பக்தர்களுக்கு சேவை சாதித்து, தெப்பத்தை சுற்றி வந்தார்.

இந்த விழாவை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அதன் பின்னர் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

திருவிழா ஏற்பாடுகளை துணை ஆணையர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாஜலம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். அப்பன்திருப்பதி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.