Home Blog Page 116

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

71st sankaracharya of kanchi - 2026

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார். பின்னர் அவருக்கு சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று தீக்ஷா நாமம் வழங்கினார் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தொடர்ந்து, காஞ்சி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று பொறுப்பேற்றார். அவருக்கு சன்யாஸ தீட்சை வழங்கப்பட்டபின்னர்  ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்தத்தில், அட்சய திருதியை நாளான இன்று காலை 6 மணி முதல் இளைய மடாதிபதியான, ஸ்ரீ சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

முன்னதாக, காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்த தெப்பக்குளத்தில் நடந்த விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேச சர்மாவுக்கு தீட்சை வழங்கி காவி வஸ்திரத்தை வழங்கினார். தொடர்ந்து கமண்டலத்தையும், தண்டத்தையும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர், குருவான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வணங்கினார். கணேச சர்மாவுக்கு சாளக்கிராமத்தை தலையில் வைத்து சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து ஆசி வழங்கினார் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி , ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

IPL 2025: போட்டி கொல்கத்தாவின் பக்கம்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs டெல்லி –டெல்லி – 29.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (204/9, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, அஹிங்க்யா ரஹானே 26, மிட்சல் ஸ்டார்க் 3/43, விப்ராஜ் நிகம் 2/41, அக்சர் படேல் 2/27) டெல்லி கேபிடல்ஸ் அணியை (190/9, டியு பிளேசிஸ் 62, அக்சர் படேல் 43, விப்ராஜ் நிகம் 38, சுனில் நரேன் 3/29, வருண் சக்ரவர்த்தி 2/39, அனுகூல் ராய், வைபவ் அரோரா, ரசல் தலா 1 விக்கட்) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் ரஹமானுல்லா குர்பாஸ் (12 பந்துகளில் 26 ரன், 5 ஃபோர், 1சிக்சர்), சுனில் நரேன் (16 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அஹிங்க்யா ரஹானே (14 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் நல்ல் ரன்ரேட்டுடன் ரன் சேர்க்க உதவினர்.

வெங்கடேஷ் ஐயர் (7 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அதன் பின்னர் வந்த ரிங்கு சிங் (25 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆண்ட்ரூ ரசல் (9 பந்துகளில் 17 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அதே ரன் ரேட்டைத் தொடர்ந்தனர்.

20ஆவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் ரோமன் போவெல் (5 ரன்), அனுகூல் ராய் (பூஜ்யம் ரன்), ரசல் மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கொத்தா அனி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (4 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டியூ பிளேசிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) 15.2ஆவது ஓவர் வரி ஆடினார். இவரைத் தவிர அக்சர் படேல் (23 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (19 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

மற்றா வீரர்களான கே.எல். ராகுல் (7 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (7 ரன்), மிட்சல் ஸ்டார்க் (பூஜ்யம் ரன்), சமீரா ( 2 ரன்), குல்தீப் யாதவ் 1 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வருண், சுனில் மற்றும் ரசல் இன்று சிறப்பாக பந்துவீசி மொத்தம் 6 விக்கட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 190 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனால் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

madurai chithirai vizha kodiyetram - 2026

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர் காவல் ஆணையாளர் டாக்டர் லோகநாதன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் கோயில் இணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை வைகை நதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பல லட்சம் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை தரிசித்து விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் சிறப்பு நகரப் பேரூந்துகள் இயக்கப்படும்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று ஏப் 29 செவ்வாய்க்கிழமை காலை வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சிக் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் உலக சுற்றுலா பிரியர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரைக்கு வருகை தருவர்.

சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார்.

பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 6-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சங்களாக ஏப்ரல் 29 (செவ்வாய்) இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

மே 6 (செவ்வாய்): மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம், இதில் மீனாட்சி மதுரையின் அரசியாக முடிசூடப்படுகிறார்.

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும். இந்த நாளில் பக்தர்கள் திருமண வைபவத்தைக் காண கூடுவர், மேலும் பல பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வர்.

மே 9 (வெள்ளி): மீனாட்சி திருத்தேரோட்டம், இதில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்கத் தேரில் பவனி வருவர். தேர் சுமார் 14.5 அடி உயரமும், 6.964 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படும்.

மே 10 (சனி): கள்ளழகர் புறப்பாடு, இதில் அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி பயணம் தொடங்குவார்.

மே 11 (ஞாயிறு): கள்ளழகர் எதிர்சேவை, இதில் கள்ளழகர் மதுரையில் பக்தர்களால் வரவேற்கப்படுவார்.

மே 12 (திங்கள்): கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், இது திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் கரையில் கூடுவர்.

இன்று முதல் துவங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் முதல் நாளிலேயே அதிக அளவில் வரத்து வாங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது வரும் தெரு கல்யாணத்தன்று மிக முக்கிய நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மே 8 ல் நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண அறநிலையத்துறையின் hrce.tn.gov.in இணையதளத்திலும், கோயில் இணையதளத்திலும் maduraimeenakshi.hrce.tn.gov.in இன்று (ஏப்.,29) முதல் மே 2 இரவு 9:00 மணி வரை ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெறமுன்பதிவு செய்யலாம். ரூ.500 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும்.ரூ.200 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை பதிவு செய்ய முடியாது.

மே 3க்குள் தகவல் தெரிவிப்பு; ஆதார் கார்டு, போட்டோ அடையாள சான்று, அலைபேசி, இ-மெயில் முகவரியுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு மே 3க்குள் தகவல் தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் மே 4 முதல் 6 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைமேலசித்திரை வீதியில் உள்ளபிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி மையத்தில் தங்களுக்கு வந்த தகவலை காண்பித்து பணம் செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். திருக்கல்யாணத்தன்று அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு உள்ளவர்கள் வடக்கு – கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்திருவிழாவின் இணைப்பாக நடைபெறும் அழகர் கோயில் திருவிழா மே 8ம் தேதி தொடங்குகிறது. மே 10ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ம் தேதி அழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 12ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. மே 13ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், மே 14ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

senkottai temple villakku poojai - 2026

செங்கோட்டை அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வைத்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன்  தலைமைதாங்கினார். பிஎல்எம்.போர்ட்ஸ் கிளப் நிறுவனத்தலைவா் பொறியாளா் எல்எம்.முரளி, தொழிலதிபர் மோகன்படேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் மணிமகேஸ்வரன், முன்னாள் இராணுவ வீரர் நடராஜன், ஆகியோர் முன்னிலைவகித்தனா். கேந்திர மாவட்ட பொறுப்பாளா்  கருப்பசாமி அனைரையும் வரவேற்று பேசினார்.

கேந்திர சகோதரி தெய்வானை  இறைவணக்கம் பாடினா். இலஞ்சி விவேகானந்தா கேந்திர பாலா் பள்ளி  மாணவியா்களின் கலைநிகழ்ச்சி தனித்திறன் சமய உரையாற்றினா்.

சாம்பவர்வடகரை சமய வகுப்பு மாணவி வரவேற்பு நடனம் ஆடினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசாரதா ஆஸ்மர நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா அம்பாள், ஆசியுரை வழங்கினார். பின்னா்  யதீஸ்வரி ஆத்மப்ரியா அம்பாள், ரமீலாமோகன்படேல், செண்பகவல்லிமாடசாமி, மல்லிகாவேல்சாமி, முத்துமாரிலெட்சுமணன் ஆகியோர் முதல் குத்துவிளக்கினை ஏற்றி பூஜையை துவக்கி வைத்தனா்.

திருவிளக்கு பூஜையினை கேந்திர சகோதரிகள் சந்திரா, சரஸ்வதி, ஆகியோர் நடத்தினர். பூஜையில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்று சென்றனா்.

முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமுதாய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், சமூக ஆர்வலா்கள் விவேகானந்தா கேந்திர தொண்டர்கள், தன்னார்வலா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள் தொண்டர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கேந்திர மருத்துவமனை உதவியாளா் கண்ணன் நன்றி கூறினார். 

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

write thoughts - 2026
#image_title

பஹல்காம் கொடூரத்திற்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் #IndusWatersTreaty என மத்திய அரசு அறிவித்துள்ளது. தண்ணீர தர மாட்டோம் என்பது இதன் பொருளல்ல.

“நீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்: என்கிற பொறுக்கித்தனமான பேச்சுக்குத் தான் “ஒரு சொட்டு நீர் கூடக் கிடையாது” என்கிற வார்த்தை பதிலடி. நம்மிடம் அவ்வளவு நீரைத் தேக்கும் அளவு உள்கட்டமைப்பு இல்லை. ஆனால் முன்பு போல கால இடைவெளியில் முறைப்படி நீர்ப் பகிர்வு நடக்காது. கொள்கை மாற்றம் என்ன என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும்.

இந்திய அரசுக்கு மனிதாபிமானம் இல்லை என்று வாதிடும் (ஞாபக மறதி) சகாக்களுக்கு….

● கோவிட் தடுப்பூசிகளை உலகம் முழுவதும் உள்ள 45 நாடுகளுக்கு அனுப்பியது நமது அரசு. திட்டத்தின் பெயர் #VaccineMaitri

● முற்போக்கு பேசும் நண்பர்கள் ஆதரவு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் திரு. ஜோ பைடன் அப்போது என்ன செய்தார் தெரியுமா ? தேவைக்கு அதிகமாக இருந்த தடுப்பூசிகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று நிறுத்தி விட்டார்.

● மருத்துவ விசா நீடிக்கவில்லை. நாளை வரை (ஏப்ரல் 29) காலக் கெடு ஏற்கனவே கொடுத்துள்ளார்கள். பாகிஸ்தான் பிரஜைகள் என்றாலும் கருணை கூர்ந்து குறைந்த ஆவணங்களுடன், விரைவாக விசா அனுமதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டாலும் அதனையும் அரசு பரீசிலிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

● ஒரு வேளை சிகிச்சை தாமதம் ஆனால் பாதிக்கப்பட்ட நபருக்கு வேண்டிய மருத்துவ ஆலோசனைகள், பரிந்துரைகளை டாக்டர்கள் வழங்குவார்கள். ஊடகங்கள் அல்ல.

● இந்தியா தனது 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட 12 வருடம் ஆகும் என்று (இன்று நியாயம் பேசும்) போலி முற்போக்கு ஊடகங்கள் மிகக் கேவலமான பொய்யை எழுதின. இன்று வரை தங்களின் தவறுகளுக்கு அவை மன்னிப்பு கேட்டதேயில்லை. அதனால் இந்த ஊடக அழிச்சாட்டியங்கள் “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழும் கதை”. கண்டு கொள்ள அவசியம் இல்லை.

● காஷ்மீர் மாநில மக்களுக்கு மட்டும் ஹூரியத் மாநாடு கட்சித் தலைவர்கள் பரிந்துரையில் பாகிஸ்தானில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பு அனுமதி, கட்டணச் சலுகை போன்றவை விஷம் தோய்ந்த கத்திகள்.

● இந்தியாவில் ரூ.80 இலட்சம் செலவாகும் மருத்துவப் படிப்பு, வங்கதேசத்தில் ரூ.40 இலட்சம். பாக்.கில் ரூ.20 இலட்சத்திற்கு வழங்கப்பட்டது. அத்தனையும் மோசடி. தரமான கல்வியும், மருத்துவ வசதியும் இல்லாத நாடும், நாட்டு மக்களும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் நாட்டின் மீது துரோகம் செய்யத் துணியக் கூடாது.

● 2019 சட்டப்பிரிவு நீக்கத்திற்குப் பின் இவை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் உள்ள முறைகேடுகள், கல்விக்கான பணம் பயங்கரவாதிகள் பயிற்சிக்கு உதவியது என்று பல கோணங்கள் உள்ளன. தேடிப் படியுங்கள்.

● இது தான் சாக்கு என்று “ராம்” படத்தில் கஞ்சா கருப்பு மேல் பாவாடை காணாமல் போன கேஸ் போடுவது போல வேறு சில அதிமேதாவிகள் “மணிப்பூர் வன்முறை”, “கோவிட் மரணங்கள்”, “சிறப்பு அந்தஸ்து நீக்கம் தோல்வி” என்று அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.

● #AFSPA குறித்து இவர்கள் விவாதிப்பார்களா ? யார் ஆட்சியில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது என்ற வரலாறு அறிவார்களா ? காஷ்மீர், பஞ்சாப், அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து என்று பறந்து விரிந்து கிடந்த சிறப்பு ஆயுதச் சட்டத்தின் இன்றைய நிலை என்ன ? வட கிழக்கில் இப்போது நிலவும் அமைதிக்கான காரணம் யார் ?

● 2013 இல் திரு.சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் மணிப்பூர் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது நினைவில் உள்ளதா ? அப்போது முதல் பாஜக தான் ஆட்சியில் உள்ளதா ?

● நாகலாந்து மக்கள் தனி நாடு கேட்ட போது இராணுவம் ஏன் வந்தது ? அமைதிப் பேச்சுவார்த்தை ஏன் வெற்றி பெறவில்லை ? மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

  • சக்கரவர்த்தி மாரியப்பன்

IPL 2025: எப்படி சாத்தியம்… ரசிகர்களை கவர்ந்திழுத்த சூர்யவன்ஷியின் பேட்டிங்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ராஜஸ்தான் –ஜெய்பூர் – 28.04.2025 –

வைபவ் சூர்யவன்ஷியின் தாம்தூம் ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணியை (209/4, ஷுப்மன் கில் 84, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 50, சாய் சுதர்ஷன் 39, தீக்ஷணா 2/35, ஆர்ச்சர் 1/49, சந்தீப் ஷர்மா 1/33) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (15.5 ஓவர்களில் 212/2, வைபவ் சூர்யவன்ஷி 101, ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 70, ரியன் பராக் 32, பிரசித் கிருஷ்ணா 1/47, ரஷீத் கான் 1/24) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் அணி முதலில் மட்டையாட வந்தது. அதன் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (30 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (50 பந்துகளில் 84 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் 11ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது ஆடவந்த ஜாஸ் பட்லரும் (26 பந்துகளில் 50 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அதிரடியாக ஆடினார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது.

          210 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், இள வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி (38 பந்துகளில் 101 ரன், 7 ஃபோர், 11 சிக்சர்) மற்றும் யசஶ்வீ ஜெய்ஸ்வால் 940 பந்துகளில் 70 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவைத்து எடுத்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி 12ஆவது ஓவரில் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. மீதம் பெறவேண்டிய ரன்களை ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரியன் பராக் (15 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) பெற்றார். இதனால் 15.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.

          ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று 17 பந்துகளில் 50 ரன்னும் அடுத்த 18 பந்துகளில் சதமும் அடித்தார். இது டி20 ஆட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது வேகமான சதமாகும்.

முதலிடத்தில் இருப்பவர் 30 பந்துகளில் சதமடித்த கிறிஸ் கெயில் ஆகும். டி20 ஆட்டங்களில் மிகவும் இளவயதில் சதிமடித்தவர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி செய்தார்.  

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

madurai meenakshi kalyanam - 2026

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே8ல் மீனாட்சி திருக்கல்யாணம்…

மதுரை சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்தரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 – சித்திரை திருவிழா கொடியேற்றம்
மே 06 – மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 – மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 – மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 – கள்ளழகர் புறப்பாடு
மே 11 – கள்ளழகர் எதிர்சேவை
மே 12 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி நடைபெறும்.

மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரா பெளர்ணமி தினத்தில் நடைபெறும். இது இந்துக்களின் மிகவும் சிறப்புக்குரிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஆகும்.

அக்னி நட்சத்திரம் வெயிலுக்கே சவால் விடும் வகையில் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழா சைவ-வைணவ ஒற்றுமையின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் உத்ஸவம் ஆகும்.

16 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்றால், அது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமே. தற்போது இதற்கு ஈடாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணமும் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கடந்த பல ஆண்டுகளாக பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.

சித்திரை திருவிழா நடைபெறும் காலங்களில் மதுரை மட்டும் இல்லாது சுற்றி உள்ள ஊர்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். மதுரை மட்டுமின்றி அதன் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரை அனைத்து மாதங்களும் திருவிழா மாதங்கள் என்றாலும் சித்திரை திருவிழா, வழக்கமான உற்சவங்கள், திருவிழாக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இதில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நாளில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் நேரடியாக சென்று திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் அதே சமயத்தில் திருமணமான பெண்கள் பலரும் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். இப்படி மாற்றுவதால் அன்னை மீனாட்சியே போலவே தங்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மதுரையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், உலகின் பல நாடுகளிலும் இருக்கும் பெண்கள் டிவி.,யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் திருக்கல்யாண காட்சியை தரிசித்து, தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 29 – சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக துவங்கி திருவிழா க்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

முக்கிய நிகழ்வாக மே 06 – மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 – மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 – மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 – கள்ளழகர் புறப்பாடு
மே 11 – கள்ளழகர் எதிர்சேவை
மே 12 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் நடைபெறும்.

கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வருவது விழாவின் முக்கிய அம்சம். அதே போல் சித்திரைத் திருவிழாவின் போது பதினாகாவது மற்றும் இறுதி நாளில் தேவேந்திர பூஜை நடத்தப்படும். இது மண் செழிப்பதற்காக நடத்தப்படும் மிக அற்புதமான பூஜை. கள்ளழகர், அழகர்மலை சென்றடைவதுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 27.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை vs லக்னோ

மும்பை இந்தியன்ஸ் அணி (215/7, ரியன் ரிக்கிள்டன் 58, சூர்யகுமார் யாதவ் 54, நமன் திர் 25, கோர்பின் போஷ் 20, ரோஹித் ஷர்மா 12, மயாங்க் யாதவ் 2/40, ஆவேஷ் கான் 2/42, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (161, ஆயுஷ் பதோனி 35, மிட்சல் மார்ஷ் 34, நிக்கோலஸ் பூரன் 27, டேவிட் மில்லர் 24, ரவி பிஷ்னோய் 13, பும்ரா 4/22, போல்ட் 3/20, வில் ஜேக்ஸ் 2/18, கோர்பின் போஷ் 1/26) 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர், கடந்த இரண்டு ஆட்டங்களாகச் சிறப்பாக ஆடிய, ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 12 ரன, 2 சிக்சர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் (32 பந்துகளில் 58 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

அவருடன் வில் ஜேக்ஸ் (21 பந்துகளில் 29 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். திலக் வர்மா (6 ரன்) மாற்றும் ஹார்திக் பாண்ட்யா (5 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை.

பின்னால் வந்த நமன் திர் (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் கோர்பின் போஷ் (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) வேகமாக ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஏழு விக்கட்டு இழப்பிற்கு 215 ரன் எடுத்தது.

வெற்றிக்கு 216 ரன் என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய லக்னோ அணி மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, போல்ட் இருவரின் வேகப் பந்துவீச்சிலும் வில் ஜேக்ஸின் சுழலிலும் திணறியது.

வழக்கமாக அதிக ரன் எடுக்கும் வீரர்கள் அதிக பட்சமாக 35 ரன்னைத் தாண்டவில்லை. மிட்சல் மார்ஷ் (34 ரன்), நிக்கோலஸ் பூரன் (27 ரன்), ஆயுஷ் பதோனி (35 ரன்), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை அடையும் வகையில் வேகமாக ஆடமுடியவில்லை.

16ஆவது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா டேவிட் மில்லர், அப்துல் சமத் (2 ரன்), ஆவேஷ் கான் (பூஜ்யம் ரன்) ஆகிய மூவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

எனவே மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மும்பை அணியின் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டெல்லி vs பெங்களூரு

டெல்லி கேபிடல்ஸ் அணியை (162/8, கே.எல். ராகுல் 41, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அபிஷேக் போரல் 28, டியு பிளேசிஸ் 22, அக்சர் படேல் 15, விப்ராஜ் நிகம் 12, புவனேஷ் குமார் 3/33, ஹேசல்வுட் 2/36, யஷ் தயாள் 1/42, க்ருணால் பாண்ட்யா 1/28) ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.3 ஓவர்களில் 165/4, க்ருணால் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 73, விராட் கொலி 51, அக்சர் படேல் 2/19, சமீரா 1/24) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

தொடக்க வீரர்கள் அபிஷேக் போரல் (11 பந்துகளில் 28 ரன்) மற்றும் டியு பிளேசிஸ் (26 பந்துகளில் 22 ரன்) சுமாரான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த கருண் நாயர் (4 ரன்) இன்று சரியாக ஆடவில்லை.

அதன் பின் ஆட வந்த கே.எல். ராகுல் (39 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர்), அக்சர் படேல் (15 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (18 பந்துகளில் 34 ரன்) இருவருடனும் இணைந்து அனியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.

அதற்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு விளையாட அதிகம் பந்துகள் இருக்க வில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. வெற்றிக்கு 163 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பெதெல் (6 பந்துகளில் 12 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதே ஓவரில் தேவதத் படிக்கல் (பூஜ்யம் ரன்) விக்கட்டைப் பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரஜத் படிதர் (6 ரன்) ரன் அவுட் ஆனார். எனவே விராட் கோலி (47 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர்) க்ருணால் பாண்ட்யா (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறுதியில் டிம் டேவிட் (5 பந்துகளில் 19 ரன்) வெற்றிக்கு வழிவகுத்தார். டெல்லி அணியில் அக்சர் படேலைத் தவிர பிற பந்துவீச்சாளர்கள் சரியாகப் பந்துவீசவில்லை.

அக்சர் படேல் பந்துவீச்சாளர்களைப் பயன் படுத்திய விதமும் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

ஆட்ட நாயகனாக க்ருணால் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இன்று முதலிடத்தில் உள்ளது.

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

whatsapp ai - 2026
#image_title

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், போரில் காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட வீரர்களுக்கும் நன்கொடைகளைக் கோருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நிதியை செலுத்துவதாகவும் இந்த வாட்ஸ் அப் தகவல் தவறாகக் கூறுகிறது.

இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சரவை கூடி முடிவு எடுத்ததாக தவறாகக் கூறுகிறது, மேலும் நடிகர் அக்ஷய் குமாரை இந்த முயற்சியின் முக்கிய ஆதரவாளராகக் குறிப்பிடுகிறது.

“இந்தச் செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை, இதனால் ஆன்லைன் நன்கொடைகள் மறுதலிக்கப்படுகின்றன. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் இதுபோன்ற மோசடித் தகவல்களுக்கு பொதுமக்கள் இரையாகக்கூடாது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற வீரர்களுக்காக அரசாங்கம் பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டில், அரசாங்கம் ‘ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியை (AFBCWF)’ நிறுவியது, இது செயலில் உள்ள இராணுவ நடவடிக்கைகளில் தங்கள் உயிரைக் கொடுத்த அல்லது படுகாயமடைந்த வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

railway news - 2026
#image_title

திருநெல்வேலி – செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் ஒரு வழியா பெட்டிகள் எண்ணிக்கை கூட்டியாச்சு. இந்த செங்கோட்டை மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போது விடிவுகாலம் வருமோ? என பயணிகள் ஏக்கத்தில் உள்ளனர். வெறும் பத்து பெட்டிகளுடன் மட்டும் இயங்கும் செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் குறைந்தபட்சம் 18 பெட்டிகளாக்கி இரண்டு ரிசர்வேஷன் கோச்சுக்களும் என ஏற்படுத்தித் தர பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கும் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து 16 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் விட்ட நாள் முதல் பயணிகள் நெரிசலாக உள்ள செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயிலில் எப்போது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்கப்படும் என தென்காசி கொல்லம் திருவனந்தபுரம் விருதுநகர் மதுரை மாவட்ட பயணிகள் பெரும் ஏக்கத்துடன் உள்ளனர்.

செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில், திண்டுக்கல் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இணைத்து 450 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலில், 10 பெட்டிகள் மட்டும் உள்ள நிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர்.

மதுரை- – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 நேரம், 16 முதல் 18 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதில் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயணித்து வந்தனர். மதுரையில் இருந்து மயிலாடுதுறை/ஈரோடுக்கு தினமும் ஒரு ரயில் இயங்கியது. திண்டுக்கல்லில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதி ஈரோடுக்கும், மற்றொரு பாதி மயிலாடுதுறைக்கும் செல்லும்.

இந்நிலையில் மயிலாடுதுறை– திண்டுக்கல், மதுரை- – செங்கோட்டை இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை– மயிலாடுதுறை ரயிலாக தற்போது இயங்கி வருகிறது.

16 பெட்டிகளுடன் இயங்கிய மதுரை – செங்கோட்டை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் உயிரைப் பணயம் வைத்து படியில் தொங்கிக்கொண்டு பயணித்து வருகின்றனர்.

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஏப். 24ல் மதுரையில் நடந்த எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மறுநாளே கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், செங்கோட்டையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக, இருந்ததையும் குறைத்து இந்த ரயில் இயங்குவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் சாதாரண நாட்களில் கூட உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை தொகுதி எம்.பி.க்களும் ரயில்வே உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மக்களுடன் ரயிலில் பயணித்து அவர்களின் சிரமங்களை உணரச் செய்து, கூடுதலாக 6 பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.