Home Blog Page 116

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

annamalai bjp tn leader - 2026

திமுக., அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையினை இன்று வெளியிட்டுப் பேசினார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, திமுக ஆட்சியில், தமிழகத்தின் மொத்த கடன் ரூபாய் 9,29,959 கோடி என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை :

வழக்கம் போல, கழகக் கண்மணிகளின் ஒரு நாள் கரகோஷத்துக்காக, வெற்று விளம்பர அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு, தனது ஆண்டொரு நாள் கடமையை நிறைவு செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு.

தனது தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்புப் பொதுமக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது இந்த பட்ஜெட்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையான, 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும், என எந்த வாக்குறுதிகள் குறித்தும், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

ஆனால், வழக்கமாக, திமுக பட்ஜெட்டில், அறிக்கையளவிலேயே நின்று விடும் அறிவிப்புகளான, வடசென்னை வளர்ச்சித் திட்டம், அடையாறு சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி, மின்சாரப் பேருந்துகள், இந்து ஆலயங்களை புனரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை தவறாது இடம்பிடித்திருக்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நான்கு ஆண்டுகளில், இவர்கள் அறிவித்த மின்சாரப் பேருந்துகள் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. ஆனால், அவற்றில் ஒரு பேருந்து கூட இன்னும் சாலையில் ஓடவில்லை என்பதுதான் நகைச்சுவை.

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.7,890 கோடி ரூபாய் அறிவித்தார்களே தவிர ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு, ஒகேனக்கல் என்ற பெயரே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.

இது தவிர, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பெயர்மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் தவிர, மக்களுக்கான எந்தத் திட்டங்களும் இல்லாத, வழக்கமான திமுக பட்ஜெட்டாகவே இந்த ஆண்டும் இருக்கிறது.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக இலைமறை காயாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கேற்ற அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த திமுக அரசு, இனி வரும் எந்த ஆண்டுகளிலும் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காது என்பது தெரிந்ததும், வெளிப்படையாகவே சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் பட்ஜெட்டில், கிழக்குக் கடற்கரை சாலை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்திலும், திமுக.,வுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏற்கனவே தடம் பதித்திருப்பதைத் தற்செயலாக எடுத்துக் கொள்ள முடியாது.

பொதுமக்கள் வரிப்பணத்தில், தனியார் நிறுவனங்கள் கொழிக்கத் திட்டங்கள் அறிவிக்கும் ஒரே அரசு திமுக.,வாகத்தான் இருக்க முடியும்.

தமிழக அரசின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, டாஸ்மாக் மதுபான விற்பனை. சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது. மது விற்பனை வருமானம் இல்லாத குஜராத் அரசு, ரூ. 19,695 கோடிக்கு வருமான மிகை பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் தமிழகம் ரூ.46,467 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது.

குஜராத் அரசு உட்கட்டமைப்புக்குச் செலவிடும் தொகை ரூ.95,472 கோடி. தமிழகம் அதை விட மிகக் குறைவாக, ரூ.57,231 கோடி மட்டுமே உட்கட்டமைப்புக்குச் செலவிடுகிறது. குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கையில், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்காக, ரூ.9.62 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியிருப்பதுதான் திமுக., அரசின் சாதனை.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. வெற்று விளம்பர அறிவிப்புகளும், அதற்கான வீண் செலவுகளும் உயர்ந்துள்ளது. திமுக.,வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

rupees to ru in tn budget 2025 - 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல – இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான ‘₹’ ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.

திமுகவிற்கு (@arivalayam) உண்மையிலேயே ‘₹’ உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு @INCIndia தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

‘₹’ – இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

மேலும், ரூபாய் என்ற வார்த்தை ‘வெள்ளியால் செய்யப்பட்ட’ அல்லது ‘வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்’ என்று பொருள்படும் ‘ருப்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, ‘ரூபாய்’ என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக ‘ரூபாய்’ அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.

‘ரூபாய்’ என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.

ரூபாய் சின்னம் ‘₹’ என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.

இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல – இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது.


பாஜக., மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன்

ரூபாய் குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்திய திருநாட்டிற்கு ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்கு தான் தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா ??

2010 ல் உங்கள் திமுக மத்திய ஆட்சியில் இருந்த போது தான் ரூபாய் கான இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா??

அப்போதெல்லாம் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

ரூபாய் என்ற வார்த்தை மூலச் சொல் தமிழ் அல்ல அது சமஸ்கிருத வார்த்தை என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதைத்தானே பயன்படுத்த முன் வந்திருக்கிறீர்கள்…

சத்தியமேவ ஜெயதே என்ற உபநிடத முழக்கம் தான் நீங்கள் அரசு முத்திரைகளில் பயன்படுத்தும் வாய்மையே வெல்லும் என்கிற வாசகம்!!!

உபநிடதம் ஹிந்துத்துவா இல்லையா??
அதை இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்ல உங்களால் முடியுமா?

சிங்கங்களை கொண்ட அரச முத்திரை என்பது அசோகரின் சின்னம் என்பது உங்களுக்கு தெரியுமா?

நம் தேசிய கீதம் ஜன கன மன வங்க மொழியில் பாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் திமுக அரசாங்கம் தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா??

இதற்கு உங்களிடம் இருந்து பதில் நான் எதிர்பார்க்க மாட்டேன்…

ஏனென்றால் நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்


ரா. சரத்குமார், பாஜக.,

இந்திய ரூபாய்க்கான அடையாள சின்னத்தை மாற்றும் செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி இருப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இந்திய ரூபாய்க்கு தனி சின்னங்களை நமது தேசத்திலுள்ள 28 மாநிலங்களும் தங்களுக்கென தனித்தனியாக வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்தால், என்ன ஆகுமென்று சிந்தித்து பார்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும், டாலருக்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவோம் என்று சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது.

அமெரிக்காவின் டாலர் மற்றும் பிற நாட்டு யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது போல இந்திய ரூபாய்க்கான தனி சின்னம் உருவாக்க கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 5 காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு, ஒரு பொது போட்டியை அறிவித்து பெறப்பட்ட 3,331 வடிவமைப்புகளில், ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் MLA திரு.மருதூர் N.தர்மலிங்கம் அவர்களின் மகன் திரு.த.உதயகுமார் அவர்கள் வடிவமைத்த புதிய குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு 15.07.2010 அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய ரூபாய்க்கு அடையாள குறியீடு வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியுடன் திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்ததுடன், மத்திய அமைச்சரவையில், தயாநிதி மாறன், S.S.பழனிமாணிக்கம், அ.ராசா. T.R. பாலு, S.ரகுபதி. K.வெங்கடபதி, V.ராதிகாசெல்வி ஆகிய 7 திமுக அமைச்சர்கள் ஆட்சியிலும் அங்கம் வகித்துள்ளனர் என்பதையும், தமிழ்நாட்டில் அப்போது கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்தார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே ஏன் திமுகவினர் இந்த அடையாள சின்னத்தை ஏற்றுக்கொண்டீர்கள்? தமிழை ஊக்குவிக்க ‘ரூ”எழுத்தை இப்போது பயன்படுத்துகிறீர்கள் என்றால், அன்று முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் அவர்களுக்கு தமிழ்மீது பற்று இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?

தேவநாகரி எழுத்தான Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டு, Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், ₹’ என்ற குறியீட்டால் இந்திய ரூபாயை குறித்து அதன் மேற்பகுதியில் உள்ள 2 கோடுகள் தேசியக்கொடியையும், சமம் என்ற அடையாளத்தையும் குறிப்பதாக தெரிவித்துள்ளார் உதயகுமார்.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதே, ரூபாயின் அடையாளச் சின்னத்தை மாற்றுபவர்கள் விரைவில் ரூபாய் நோட்டுகளையும் மாற்றும் திட்டம் கொண்டுள்ளார்களா? தமிழ்நாட்டை தனிநாடாக மாற்றும் எண்ணம் என்று இதை எடுத்துக் கொள்வதா?

மக்கள் நலனுக்கானது தான் அரசாங்கம் நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான் அரசாங்கம். மக்களின் தேவைகள் ஏராளம். ஆனால், தமிழ்நாடு அரசு மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு செயலாற்றுவது போல் தெரியவில்லை. அதை விடுத்து இன்று வாக்கு அரசியலுக்காக மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு என்று சொன்னால் எப்படி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவீர்கள்? திமுகவின் இத்தகைய செயலை அதன் கூட்டணி கட்சியான தேசிய கட்சி காங்கிரஸும் சிந்திக்க வேண்டும்.

இந்த குறியீடுகளை மாற்றிவிட்டால் தமிழகத்தின் கடன் உயர்வதை தடுக்க முடியுமா? இதனால் மக்களுக்கு என்ன பயன்? இது மக்கள் நலன் காக்கின்ற செயலும் அல்ல. மக்களுக்கு நேரடியாக உதவுகின்ற செயலும் அல்ல. ஏற்கெனவே ஒப்புக்கொண்டு நடைமுறையில் உள்ள செயலை மாற்றுகிறீர்கள் என்று சொன்னால், வேறு எவற்றையெல்லாம் மாற்ற எண்ணம் இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்தால், உங்கள் மனநிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்திய ஒருமைப்பாட்டை, தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

₹ அடையாளம் நீக்கம்: கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்; எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை திமுக மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை திமுக ஆதரித்தது.

₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.

அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது திமுக.

தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

thangam thennarasu budget 2025 - 2026

2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. முன்னதாக, முன்னாள் திமுக., முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்றார்.

இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய போது, அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அண்மையில் தமிழக அரசின் சாராயக் கடைத் துறையான டாஸ்மாக் துறையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக பேச அனுமதி மறுத்ததாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் முக்கியமான பகுதிகள்…

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்

திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்

அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்

சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்

இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்

புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு.

பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்-நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்

கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு

100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்

மகளிர் விடியல் பயண திட்டம் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.

சுய உதவிக்குழு திட்டத்திற்கு ரூ.37000 கோடி ரூபாய் கடன்கள் வழங்க திட்டம்.

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்.

சென்னைக்கு அருகில் 2000 ஏக்கரில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம்.

புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும்.

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்த ரூ.160 கோடி ஒதுக்கீடு.

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.2000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

மூத்த குடிமக்களுக்கான ரூ.10 கோடியில் அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

தமிழக பட்ஜெட்டில் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு.

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில், செயற்கை நுண்ணறிவு (AI) இணையப் பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்.

2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.

பள்ளி பாடத்திட்டத்தில் செஸ்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும்.

அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.

சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.

777 கோயில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனடைகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி பெறும் வகையில் சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்.

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்

சென்னை – திண்டிவனம் – விழுப்புரம்
சென்னை – காஞ்சிபுரம் – வேலூர்,
கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம்
– மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.

நடப்பாண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% சலுகை.

தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் மீண்டும் அமல்.

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் உள்ள்ட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

2676 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 2000 பள்ளிகளில் ரூ160 கோடி மதிப்பில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இருக்கும் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ56 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

வரும் நிதியாண்டில் 1721 முதுகலை ஆசிரியர்கள், 840 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்.

‘நான் முதல்வன் கல்லூரிக் கனவு’ திட்டம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் அகில இந்திய உயர்கல்வி, வெளிநாட்டு பல்கலை. கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு சென்றடைய முயற்சிகள் எடுக்கப்படும்.

முதற்கட்டமாக 388 ஊராட்சி ஒன்றியங்களில் 500 அரசுப் பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் சிறப்புப் பயிற்சி.

பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கில் பாப்பிரெட்டிப்பட்டி, சத்தியமங்கலம், சின்னசேலம், தாளவாடி, கல்வராயன் மலை, தளி, கோத்தகிரி, ஜவ்வாதுமலை ஆகிய இடங்களில் உள்ள 14 உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

சேலம், கடலூர், நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26; நிதி விபரங்கள்.

வருவாய்: மொத்த வருவாய் ரூ.3.31 லட்சம் கோடியாக இருக்கும். இதில், சொந்த வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பீடு.

வரியில்லாத வருவாயாக ₹28,818 கோடி கிடைக்கும் என மதிப்பீடு. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப் பங்கீடு ரூ.58.021 கோடியாக மதிப்பீடு.

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்கள் வரும் நிதியாண்டில் ரூ.23,834 கோடியாக மதிப்பீடு.

செலவினம்: மொத்த செலவினம் ரூ.373 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கடன் வட்டி செலவீனம் ரூ.70,753 கோடியாக இருக்கும். மானியங்கள் உள்ளிட்ட செலவினங்கள் ரூ.1.53 லட்சம் கோடியாகவும், ஓய்வுதியம் வகை செலவினமாக ரூ41,290 கோடி இருக்கும் என மதிப்பீடு.

மூலதனக் கணக்கு: 2024-25 நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.46,766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் இது ரூ.57,230 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. – இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து விவாதம், மானிய கோரிக்கை உள்ளிட்டவை நடத்த ஏப்.30 வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

pm shri schools - 2026
#image_title

மும்மொழி, ஹிந்தி திணிப்பு என்று மொழி உணர்வுப் பிரச்னையில் மிகப் பெரும் எதிர்காலத் திட்டம் பாழாகிக் கொண்டிருக்கிறது. எதிர்கால இந்தியாவின் செழிப்பும் வளர்ச்சியும் வருங்கால இளைய தலைமுறையின் கையில் தான் என்பதால், அவர்களை வலுவுள்ளவர்களாகச் செய்யும் கல்வியை, பொது அறிவை, திறன் மேம்பாட்டை வளர்க்கும் பிரதமர் மோடியின் கனவுத் திட்டத்தை வேரிலே அமிலம் ஊற்றி அழித்துக் கொண்டிருக்கிறது திமுக.,! 

இப்போது திமுக., விரித்துள்ள திசை திருப்பும் அரசியல் வலையில் தமிழர்கள் சிக்கிக் கொண்டு, மொழிப் பிரச்னையைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். இருமொழி, மும்மொழி என்பது வெறும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி அளவிலே நின்றுவிடும். சிறு வயதில் மனதில் பதியும் விஷயம் தான் ஒருவரின் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும். எனவே பள்ளிக் குழந்தைகளின் கல்வியில் தேவையற்ற பாடங்களை எடுத்துவிட்டு, தொழில்நுட்ப அறிமுகம், மொழி, தகவல் தொடர்பு போன்ற உலகளாவிய விஷங்களைப் புகுத்தலாம். அதற்கான முன்னோட்டம்தான் பிரதமர் மோடி எடுத்த கனவுத் திட்டமான பிஎம் ஸ்ரீ பள்ளிகள், சமக்ர சிக்ஷா அப்யான்! 

உள்ளடக்கம்

சமக்ர சிக்ஷ அப்யான்

அதென்ன சமக்ர சிக்ஷா அப்யான்? அதன் நோக்கம், செயல்பாடு, திட்டமிடல்தான் என்ன? அரசின் கல்வித் தளத்தில் சமக்ர சிக்ஷ அப்யான் – சமக் கல்வி திட்டம்  குறித்து அரசின் தளத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள்!

கல்விக்கான முழுமையான அணுகுமுறை

  • பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை முழுமையான தொடர்ச்சியாகக் கருதுதல்
  • முதல் முறையாக பள்ளிக் கல்விக்கான ஆதரவில் மூத்த இடைநிலை நிலைகள் மற்றும் பாலர் பள்ளி நிலைகளைச் சேர்த்தல்

நிர்வாக சீர்திருத்தம்

  • ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பு இணக்கமான செயல்படுத்தலுக்கு வழிவகுக்கிறது
  • திட்டத்தின் கீழ் தங்கள் தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மை
  • ‘பள்ளி’யை தொடர்ச்சியாகப் பார்க்கும் ஒருங்கிணைந்த நிர்வாகம்

கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துதல்

  • ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கவனம்
  • ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்களின் மேம்பட்ட திறன் மேம்பாடு
  • அமைப்பில் வருங்கால ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த SCERTகள் மற்றும் DIETகள் போன்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்
  • பணியில் இருக்கும் மற்றும் சேவைக்கு முந்தைய ஆசிரியர் பயிற்சிக்கான முக்கிய நிறுவனமாக SCERT இருக்க வேண்டும் – பயிற்சியை ஆற்றல்மிக்கதாகவும் தேவை அடிப்படையிலானதாகவும் மாற்றும்.
  • பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதக் கற்றலை ஊக்குவிக்க ராஷ்ட்ரிய அவிஷ்கர் அபியானுக்கு ஆதரவு.
  • தொடக்க நிலையிலேயே அடிப்படைத் திறன்களை வளர்க்கும் பதே பாரத் பதே பாரத் திட்டத்தை ஆதரிக்கவும்.
  • ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.5000 முதல் ரூ.20000 வரை நூலக மானியங்களை வழங்குதல்.

டிஜிட்டல் கல்வியில் கவனம் செலுத்துதல்

  • அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 5 ஆண்டுகளுக்கு ‘ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு’-ஐ ஆதரிக்க, இது கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் – புரிந்துகொள்ள எளிதானது, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் வகுப்பறைகள் திருப்பப்பட்ட வகுப்பறைகளாக மாறும்.
  • ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் பலகைகள் மற்றும் DTH சேனல்கள் மூலம் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட பயன்பாடு
  • UDISE+, ஷாகுன் போன்ற டிஜிட்டல் முயற்சிகள் வலுப்படுத்தப்படும்
  • உயர் தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளில் ICT உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

பள்ளிகளை வலுப்படுத்துதல்

  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்கு உலகளாவிய அணுகலுக்காக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி
  • கூட்டுப் பள்ளி மானியம் ரூ.14,500-50,000-லிருந்து ரூ.25,000-1 லட்சமாக அதிகரிக்கப்பட்டு பள்ளி சேர்க்கையின் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
  • தூய்மை நடவடிக்கைகளுக்கான குறிப்பிட்ட ஏற்பாடு – ‘தூய்மை வித்யாலயா’வை ஆதரித்தல்
  • அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துதல்

பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்

  • கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் (KGBVs) 6-8 ஆம் வகுப்பு முதல் 6-12 ஆம் வகுப்பு வரை மேம்படுத்துதல்.
  • ஆரம்ப நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை உள்ள பெண்களுக்கான தற்காப்புப் பயிற்சி
  • ‘பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ’ என்ற உறுதிப்பாட்டை மேம்படுத்துதல்

சேர்ப்பதில் கவனம் செலுத்துதல்

  • RTE சட்டத்தின் கீழ் சீருடைகளுக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ.400 லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டது.
  • RTE சட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்களுக்கான ஒதுக்கீடு, ஆண்டுக்கு ரூ.150/250 லிருந்து ரூ.250/400 ஆக உயர்த்தப்பட்டது. உற்சாகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான ஒதுக்கீடு (CwSN) ஆண்டுக்கு ரூ.3000 லிருந்து ரூ.3500 ஆக உயர்த்தப்பட்டது. ரூ. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிறப்புத் தேவைகள் உள்ள சிறுமிகளுக்கு மாதத்திற்கு 200 ரூபாய் உதவித்தொகை.

திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துதல்

  • உயர் தொடக்க நிலையில் தொழில் திறன்களை வெளிப்படுத்துதல் நீட்டிக்கப்படும்.
  • 9-12 ஆம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேலும் நடைமுறை மற்றும் தொழில்துறை சார்ந்ததாக மாற்றப்படும்.
  • ‘கௌஷல் விகாஸ்’ மீதான முக்கியத்துவத்தை வலுப்படுத்துதல்
  • விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் கவனம் செலுத்துதல்
  • விளையாட்டுக் கல்வி பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு பள்ளியும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ. 5000, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 10,000 மற்றும் இடைநிலை மற்றும் மூத்த மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 25,000 வரை விளையாட்டு உபகரணங்களைப் பெறும்.

பிராந்திய சமநிலையில் கவனம் செலுத்துதல்

  • சமச்சீர் கல்வி மேம்பாட்டை ஊக்குவித்தல்
  • கல்வியில் பின்தங்கிய தொகுதிகள் (EBBs), இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், சிறப்பு கவனம் செலுத்தும் மாவட்டங்கள் (SFDs), எல்லைப் பகுதிகள் மற்றும் நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 117 விருப்ப மாவட்டங்களுக்கு முன்னுரிமை

சமக்ர சிக்ஷ அப்யான் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கல்வித் தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் சமக்ர சிக்ஷ அப்யான் – திட்டம் நன்றாக அமலில் உள்ளது. அது குறித்த விவரங்களை கேரள அரசின் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். 

https://education.kerala.gov.in/samagra-shiksha-kerala

https://ssakerala.in

பி.எம் ஸ்ரீ பள்ளிகள்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் என்பவை, இதனுடன் இணைந்த அடுத்த படிநிலையிலான முன்னெடுப்பு. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் குறித்த திட்டமிடலை வெளியிட்ட போது கொடுக்கப்பட்ட எதிர்காலத் திட்டமிடல்கள் இவை…

உறுதியான வலுவான பாரதத்தை உருவாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் தகுந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் என்பது தற்போதைய இளைய தலைமுறையின் கையில் அல்லவா உள்ளது ! அவர்களுடைய கல்வி மற்றும் திறனை வளர்த்தால் தான் அவர்களை உலகளாவிய வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர் கொள்ள வைக்க முடியும். “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்” திட்டம் இந்திய அளவில் பள்ளிகளின் தரம் உயர்த்தலுக்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆகும்.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன ?

”பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்” அதாவது  PM SHRI Scheme ,  அதாவது Pradhan Mantri Schools for Rising India  என்பது மத்திய அரசின் நிதி ஆதார ஆதரவுடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மத்திய, மாநில , நகராட்சி அல்லது ஊராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பள்ளிகளின் திறன் மற்றும் தரம் மேம்படுத்தும் திட்டமாகும்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடைபெற்று, நாடு தழுவிய முன்னோடிப் பள்ளிகள் குறித்து கருத்துரையாடல் நடைபெற்றது. மத்திய அமைச்சர், தர்மேந்திர பிரதான், இந்த முன்னோடிப் பள்ளிகள் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஆய்வகங்களாகவும், மாணவர்களை எதிர்கால மாற்றங்களுக்குத் தயார் செய்யும் களங்களாகவும் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

அதே ஆண்டு, செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் “ திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

வளரும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகள் திட்டம் ( PM SHRI Schools ) மத்திய அரசின் நிதி ஆதார உதவியுடன், செயல் திட்ட வழிகாட்டுதல்களுடன் 2022-23 கல்வியாண்டு முதல் 2026-27 வரை ஐந்தாண்டுகளில், படிப்படியாக, இந்தியா முழுவதிலும் சுமார் 14,500 பள்ளிகளில்  , சுமார் 27000 கோடி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

நோக்கமும் முக்ய அம்சங்களும்

மகிழ்வான கற்றல் சூழலில் தரமான, மேம்படுத்தப்பட்ட, சமச்சீரான , மாணாக்கர்களை அடுத்த நூற்றாண்டுக்குத் தயார்படுத்தும் கல்வி வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மாணாக்கர்களின் மதி நுட்பத்தை வளர்த்தல், கலை மற்றும் தொழில் திறனை வளர்த்தல், மொழித்திறன், சமூக உளவியல் கூறுகளின் மலர்ச்சி, வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகள், உள்ளூர் கலைஞர்கள் துணையுடன் கலை, கைத்தொழில் திறன் பெறுதல் என பல்வேறு முன்னெடுப்பகளைக் கொண்டது இத்திட்டம்.

புதிய தேசியக் கல்வித் திட்டம் 2020 இப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இளம் பிராயத்தினருக்கான அடித்தரக் கல்வி, பாதுகாப்பான , சுமையில்லா விளையாட்டு / செயல் முறை கற்றல் முறையில் தரப்படும். ஆயத்த நிலை அதாவது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வியில் சில வகுப்பறைப் பாடங்களும், ஒளிப்படபாடங்களும் ( வீடியோ, திரை) இருக்கும். நடுத்தர ( 6 முதல் 8 ம் வகுப்பு ) நேரடி ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பில் கலை மற்றும் அறிவியல் எனக் கடினமான பாடுபாடு இல்லாமல், பலதரப்பட்ட இயற்கையுடன் இயைந்த பாடங்களும் இருக்கும்.

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் அமலாக்கப்படும் பள்ளிகள் இத்தகைய முன்மாதிரியான கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் தர மேம்பாடு :

கற்றல் முறையில் தரம், புத்தாக்க முறைகள் ( முழுமையான சமச்சீரான அணுகுமுறை, புதிய கற்றல் முறைகள், புத்தகப்பையிலா நாட்கள், உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பு, திறன் தேர்ச்சி – கற்றல் முறை நம்பகத்தன்மை / வெற்றியை சோதித்தல் , முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்)

மாணாக்கர்களின் ஆரோக்கிய குறியீடுகள் / முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்

கல்வி உரிமை சட்டப்படியான சலுகைகள் (ஆர்.டி.ஈ)

அறிவியல், கணித பாடங்களுக்கான கருவிகள்

அடித்தரக் கல்வி (இளஞ்சிறார் ) பாதுகாப்பான கல்விச்சூழல், அடிப்படை எண்ணும் எழுத்தும்

மாணவர்கள் விருப்பம் போல பாடங்களைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளும் வசதி

உள்ளூர் மொழியில் கல்வி, மொழி இடையூறு தவிர்க்க தொழில் நுட்பக்கருவிகள் தயார் நிலையில் இருத்தல்

கணினி வழிக் கல்வி, ஸ்மார்ட் போர்ட், டிஜிட்டல் நூலகம், மேம்படுத்தப்பட்ட அறிவியல் / கணித/ மொழி/ கணினி ஆய்வகங்கள்

விளையாட்டுக் கருவிகள்/ விளையாட்டுத் தளங்கள் அமைத்தல்

கலை/ உள்ளூர் சிறு தொழில் கற்க வசதியான கூடங்கள் / தேவையான கருவிகள்

பள்ளியை பசுமை வளாகமாக மேம்படுத்துதல் : சூரிய சக்தி உற்பத்தி, நெகிழி இல்லா வளாகம் ( பிளாஸ்டிக் தவிர்த்தல் ), கழிவுகள் மறுசுழற்சி, பசுமைத் தோட்டப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு.

பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆங்காங்கு செயல்படும் மாநில,  நகராட்சி, ஊராட்சி அமைப்புகள் மற்ரும் தன்னார்வல அமைப்புகள் உதவியுடன் மேம்படுத்துதல் .

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தேர்வு

நாட்டின் அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பள்ளிகள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகள் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முன்னோடி ஆய்வகப் பள்ளிகளாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாகும். அவை மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டிகளாக அமையும்.

பள்ளிகள் தற்போது எந்த அமைப்பில் இருந்தாலும் ( நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மாநில அரசு, மாநகராட்சி, ஊராட்சி என எதுவாகிலும் ) பி.எம்.ஸ்ரீ பள்ளி இணைய தளத்தில் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போதுள்ள வசதிகளுடன், பள்ளிகள் அங்கிகரிக்கப்பட்டு, தர மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், நிதி உதவி போன்றவை பகிரப்படும். மாநில அரசுகள் மற்றும் தன்னார்வல அமைப்புகளின் பங்கெடுப்பும் வரவேற்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் திட்டப்பயன்கள் :

புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்

மாணவர்கள் வருகை மற்றும் கல்வி /திறன் மேம்பாட்டைக் கண்கணிக்கும் தொடர்ச்சியான ஆவணங்கள்

ஒவ்வொரு மாணாக்கரின் கல்வி /திறன் தேர்ச்சியானது மாநில அல்லது தேசிய சராசரி திறன் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருக்க முயற்சித்தல்.

அடிப்படைக்கல்வி தவிர ஏதேனும் ஒரு திறன்கல்வியில் தேர்ச்சியுறுதல்

கலை/ விளையாட்டு / ஐ.சி.டி வசதி ஒவ்வொரு மாணாக்கருக்கும்  சென்றடைவதை உறுதி செய்தல்

பள்ளி ஒரு பசுமை வளாகமாக மாறுதல்

ஒவ்வொரு மாணாக்கருக்கும் உளவியல் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகள் / வாய்ப்புகள்

நமது நாட்டின் பாரம்பரியம், உன்னதக் கலைகள், வரலாறு பற்றிய கல்வி, நாட்டுப்பற்று கொண்ட குடிமக்களை உருவாக்குதல்

நற்பண்புகளை ஊக்குவிக்கும், நற்குடிமக்களை உருவாக்கும் ஆக்கபூர்வ கல்வி.

புத்துணர்வூட்டும் புதிய முயற்சி

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்ட வரைவு, செயல்படுத்தும் முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள், திட்ட முன்னெடுப்பைக் கடுமையாக சோதித்தல்  என மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் சுமார் பதினெட்டு லட்சம் மாணாக்கர்களுக்கு பயனளிக்கும்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது.  

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் இருபத்தைந்து பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

”ஸ்ரீ” என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும். பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் நம் பிள்ளைகளின் கல்விச் செல்வத்தை உறுதி செய்யும் !

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து, மொழி அரசியலில் இந்த அறிவிலிகள் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள்! 

நாகரீகக் கோமாளிகள்!

stalin udhayanidhi - 2026

கவிதை ஆக்கம் :
கண்ணன்  திருமலை ஐயங்கார்,

நாக்பூர், மஹாராஷ்டிரம்

நாங்கள் தமிழர்களே! நாகரீகம்  உள்ளவரே!
கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்;
நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 01

மூன்றுபடி  ரூபாய்க்கு அரிசியென்றோம் ஆட்சிகண்டோம்
மூன்றுபடி  எம்கணக்கில் ஒருபடிதான் என்றளித்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 02

“நீட்”டின்  ரகசியத்தை  அறிவிப்போம்  என்றுரைத்தோம்
நீட்டிவைத்து  பொதுஜனத்தை  டாஸ்மாக்முன்  புரளவைத்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 03

மதுவில்லா தமிழகத்தை  ஆக்கிடுவோ மென்றுரைத்தோம்
பொதுவாக்கி  மதுவெள்ளம் தரையோட மகிழ்ந்திட்டோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 04

இந்திமொழி  திணிப்பென்று  நீளெதிர்ப்பு  முழக்கமிட்டோம்
சந்தடியாய்  அதில்’விலக்கு எம்குடிக்கே’  அதைமறைத்தோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 05

சமத்துவம்  பேசிடுவோம்  உண்மையென்று நம்பவைப்போம்
கமுக்கமாய் முட்டுதரும்  கூட்டணியை அடக்கிவைப்போம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!!  06

பனையளவாய்  நிதிதரினும் வாங்கியதை பதுக்கிடுவோம்
தினையளவாய் ஒன்றியத்தை  புறங்கூறி  பழித்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 07

வரிசைகட்டி  ஊடகத்தை  கூர்வாள்மேல்  நடக்கவைப்போம்
தெரிகண்ணை கட்டிவைத்து யெம்திசையில்  செலுத்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 08

உயர்ந்தவிடம் செங்கோலை வைத்ததற்கும் முரண்பட்டோம் 
உயர்ந்ததமிழ் வடவர்பேச  தவறுகண்டு நகைத்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 09 

கேள்விகேட்கும்  யாரெனினும்  துச்சமென விலங்கிட்டோம்
ஆள்வதெனும் மமதையினால் தற்குறிபோல் சிரித்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 10

திருவேடகம் கல்லூரியில், சுவாமி சித்பவானந்தர் ஜயந்தி விழா!

thiruvedagam vivekananda college day - 2026

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தின விழா!

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 54வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம்
சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழா இனிதே துவங்கப்பட்டது. கல்லூரி பஜனைக் குழு மாணவர்கள் கல்லூரி வாழ்த்து பாடலை பாடினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் பற்றி கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த உரையாற்றினர்.

அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சதிஷ்பாபு, மேனாள் முதல்வர் முனைவர் ராமமூர்த்தி மேனாள் துணை முதல்வர்கள் முனைவர் இளங்கோ மற்றும் பேராசிரியர் ஜெயபாலன் மற்றும் மேனாள் வேதியல் துறை பேராசிரியர் செவ்வேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதன்மையரும் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆகிய முனைவர் ராம கணேஷ் கல்லூரி நாள் சிறப்புரை ஆற்றி சிறப்பித்தார். துறை சார்ந்த பாடப்பிரிவுகள், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு சேவை சார்ந்த கல்லூரி குழுவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

கல்லூரியின்  தமிழ் துறை தலைவர் பொறுப்பில் உள்ள முனைவர் ராமர் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வரலாற்று துறைத் தலைவர் பொறுப்பில் உள்ள திரு குமரேசன் தொகுத்து வழங்கினார்.

பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பிடிஆர் மகன்கள் படித்த இரு மொழி என்ன தெரியுமா? அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு பதிலடிகள்!

annamalai bjp tn leader - 2026

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்க கூடிய பள்ளியில் தான் படிக்கிறார், அவரது மகன் இந்தியக் குடிமகனா? அல்லது அமெரிக்கக் குடிமகனா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில், எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன், அவர்கள் LKG முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழிக் கொள்கையில்தான் பயின்றார்கள் என அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்லியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “அண்ணன் பிடிஆர் பழனிவேல்ராஜன் அந்த இருமொழிகள் என்ன என்று விளக்கியிருக்க வேண்டும்!” என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை முன்வைத்து, மத்திய அரசைக் கண்டித்து மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் திமுக., மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தப் பொதுக் கூட்டத்தில் தமிழக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், “நமது எதிரிகளான பாஜக அரசின் அமைச்சர் முன் வைக்கும் வாதம் குறித்து பேச விரும்புகிறேன். இந்திரா காந்தி ஆட்சியில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. பிறகு திருந்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. NEP 2020, எந்தவித சட்ட மசோதாவும் நிறைவேற்றாமல், விருப்ப மசோதாவாக நிதியை நிறுத்தி வைத்து அடாவடி செய்கின்றனர். 

1968க்கு பிறகு கொண்டு வந்த கல்விக் கொள்கையில் தென் மாநில மொழியைக் கற்கவேண்டும் என்று சிபாரிசு சொன்னார்கள். குறிப்பாக ஆசிரியர்கள் நியமிக்க முடியாத சூழல் நிலவியது, இந்தி பேசாத மாநிலங்களில் அது தோல்வி என்று 20 ஆண்டுகளில் அறிந்து. உத்திர பிரதேசத்தில் கூட ஒருமொழிக் கொள்கையைகூட நிறைவேற்ற முடியாமல் பிஎம்ஸ்ரீ நிதியை நிறுத்தி வைத்துவிட்டு தெருவில் ரவுடி பேசுவது போல் பேசி வருகின்றனர். LKG மாணவன், உயர்கல்வி பயின்ற மாணவனுக்கு கற்பிப்பது போன்று உள்ளது. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவது இன்றைக்கு சாத்தியமே இல்லை, அதற்கான நிதி உட்கட்டமைப்பு என்பது இல்லை, அனைவருக்கும் ஒரே கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவால் தமிழ்நாடு சிறந்த முறையில் கல்வியில் சிறந்து காணப்படுகிறது.

அதைவிடுத்து 34 அமைச்சர்கள் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகின்றார்கள், விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் வகுப்பு சென்று படிக்கட்டும். தமிழ்நாட்டில் 8 கோடி பேருக்கு சேர்த்த கல்விதான் சிறந்தது. பாஜக பிரதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார்கள்., எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன் அவர்கள் LKG முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழிக் கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள். 

எங்காவது ஒரு இடத்தில் மும்மொழிக் கொள்கையில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பிறகு நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம், அதுவரை இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டில்” என்று பேசினார்.  

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அண்ணாமலை வெளியிட்ட சமூகத்தளப் பதிவில்,

நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் திரு பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்

தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, திமுக.,வினர் தங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை, ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு வேறொரு கொள்கை என இரட்டை வேடம் போட்டு செயல்பட்டு வருகின்றனர். இதுவா சமூக நீதி? நாம் சமுக நீதியுடன் சம கல்வியை கோருகிறோம் என்று குறிப்பிட்டு கருத்துகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை.

உங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை; ஏழைகளுக்கு ஒரு கொள்கையா? சம கல்வி நம் உரிமை!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

திமுக.,வினர் தங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை, ஏழைகளுக்கு வேறொரு கொள்கை என செயல்படுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. நமக்குத் தேவை சம கல்வி என்று, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அண்ணாமலை வலியுறுத்தி வருகிறார்.  இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகத் தளப் பதிவில் வெளியிட்ட கருத்து…

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சில கருத்துகளை தெரிவித்தார். ஆனால், அவர் எங்கு தவறு செய்கிறார் என்றால்

*தி.மு.க., அரசு தனது தவறுகளை மறைக்க அமைத்த ஒரு பிரிவு பிப்.,2025ல் தமிழகத்தில் 1835 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருப்பதாகக் கூறியது. இன்று, கல்வி அமைச்சர் அதை 1,635 சி.பி.எஸ்.இ., பள்ளிகளாகக் குறைத்து உள்ளார்.

*தமிழக அரசு பள்ளிகளில் 1.09 கோடி பேர் படிப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால், பள்ளி கல்வித்துறை சார்பில் கொள்கை குறிப்புகளின் கீழ் வெளியிடப்பட்ட தகவலில், 2023- 24 ம் கல்வியாண்டில் 56 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ.,, ஐ.சி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு) படிக்கின்றனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 53 லட்சம் பேர் படிக்கின்றனர்.

*மெட்ரிக் பள்ளிகளுக்கு என தனித்துவமான பாடத்திட்டம் உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் தான் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனக்கு வசதியாக, தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளை மாநில பாடத்திட்ட பள்ளிகளுடன் இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் 4,498 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 30 லட்சம் பேர் படித்து வருகின்றனர். இந்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் 8 ம் வகுப்பு வரை மும்மொழி பாடத்திட்டத்தை அனுமதிக்கின்றன.

*15.2 லட்சம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும், மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களும் 3 மொழிகளை படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 50 சதவீத மாணவர்களுக்கு 3 மொழிகளை படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எஞ்சிய 50 சதவீத மாணவர்கள் இரு மொழிகளை படிக்கின்றனர். ஏன் இந்த பாசாங்குத்தனம்?

*தி.மு.க.,வினர் நடத்தும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் அல்ல. விருப்பப்பாடம் தான். ஏன் இந்த இரட்டை வேடம்.

*மாநில பாடத்திட்டம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு, சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு இருந்தால், தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் குழந்தைகள் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

*தி.மு.க., அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு அப்பால் எழ வேண்டும். இது 1960 கள் அல்ல. மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப நமது கொள்கைகளும் உருவாக வேண்டும்.

*உங்கள் குடும்பத்திற்கு என ஒரு கொள்கையையும், ஏழைகளுக்கு என இன்னொரு கொள்கையையும் நீங்கள் வைத்திருக்க முடியாது. உங்கள் பாசாங்கு தனத்தை தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம். சமகல்வி என்பது நமது உரிமை.

பள்ளியில் மும்மொழி; மு.க.ஸ்டாலினுக்கு ஒரு தமிழன் எழுதும் கடிதம்!

stalin press meet - 2026

— ஆர். வி. ஆர்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு,

வணக்கம்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை. அதிலும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக, தமிழகப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர மாணவர்கள் விரும்பும் வேறு ஒரு இந்திய மொழியைப் பயிற்றுவிப்பதற்கு உங்கள் கட்சியும் அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. உங்கள் எதிர்ப்பு சிறுபிள்ளைத் தனம், அசட்டுத்தனம், என்று உங்களுக்குப் புரியவே இல்லையா?

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது ஔவையார் வாக்கு. ‘கடல் கடந்து வெளிநாடு சென்றாவது செல்வத்தைத் தேடவேண்டும்’ என்பது அதன் பொருள்.

ஒளவையார் சொல்லுக்கு நடைமுறையில் என்ன அர்த்தம்? ‘இன்னொரு நாட்டுக்குச் சென்று அந்நாட்டு மக்களை ஒரு வருடம் பொறுமையாகத் தமிழ் கற்க வைத்து, பிறகு தமிழில் மட்டும் அவர்களிடம் பேசிப் பணம் சம்பாதித்துக் கொள், தமிழா!’ என்று அர்த்தமா? அல்லது, ‘தொலைதூரம் செல்லவிருக்கும் நீ, அந்த இடத்து மொழியையும் தேவையான அளவு கற்று அந்த மக்களிடம் எளிதாகப் பொருள் ஈட்டிக் கொள், தமிழா!’ என்று அர்த்தமா?

பாரதம் பல மொழிப் பிரதேசங்களைக் கொண்டது. வேலையின்மை அதிகம் உள்ள நாடு. இங்கிருந்து பிற நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்க முடிகிறவர்களை விட, உள்நாட்டில் மற்ற பிரதேசங்களுக்குச் சென்று சம்பாதிக்க நினைக்கிற மக்கள் அதிகம் – அது எளிதில் அவர்களுக்கு சாத்தியமும் ஆகும். அவர்களின் முயற்சி வெற்றி பெற, அந்த மற்ற பிரதேசத்தின் மொழியை அவர்கள் கற்க முன்வர வேண்டும். தமிழ் மொழியை நடிகர் ரஜினிகாந்த் கற்றது போல்.

இல்லையென்றால் நமது தொழிலைப் பொறுத்து, மற்ற பிரதேசத்து மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்து அந்தப் பிரதேசத்தில் நாம் தொழில் செய்ய வேண்டும். சன் டிவி பல இந்திய மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்காகப் பிற மாநிலங்களில் அலுவலகங்கள் அமைத்து அந்த அந்தப் பிரதேச மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைப்பது போல்.

என்ன இருந்தாலும், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் தாய்மொழி தவிர இன்னொரு இந்திய மொழி பயில்வது மிகவும் அனுகூலம். பள்ளிப் படிப்பின் போதே நமக்கு உணர்வு ரீதியாக அல்லது வேலை நிமித்தமாகப் பொருந்தி வரும் இன்னொரு இந்திய மொழியைத் தேர்வு செய்து கற்பது புத்திசாலித் தனம். முதல்வரே! இந்தக் கட்டம் வரை, இந்த எண்ணத்தின் லாஜிக் பற்றி, உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதல்லவா?

சரி, பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நீங்கள் பேசுவதின் சாராம்சம் என்ன? அதை இப்படிச் சொல்லலாம்: “தமிழகப் பள்ளி மாணவர்கள் பிரதேச மொழி தமிழையும் அதோடு ஆங்கிலத்தையும் பள்ளியில் கற்கட்டும். இன்னொரு இந்திய மொழியை அவர்கள் கற்க விரும்பினால், அவர்கள் வேறு எங்காவது போய் அதைக் கற்றுக் கொள்ளட்டும். அதை மாநில அரசு தடுக்காது. ஆனால் அந்த இன்னொரு இந்திய மொழியை அவர்கள் பள்ளியில் கற்றால், அவர்களே எந்த மொழியைத் தேர்வு செய்தாலும், அது மொழித் திணிப்பு. அது ஹிந்தித் திணிப்பாக உருவெடுக்கும்.”

உங்கள் எண்ணம் தமிழகத்தின் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களைக் குறிப்பாக பாதிக்கும். தாம் விரும்பும் இன்னொரு இந்திய மொழியை அவர்கள் எளிதாகப் பள்ளியில் படிக்க முடியாவிட்டால், எங்கே எப்போது அதைக் கற்பார்கள்? அதற்காக அவர்களுக்கு ஏன் வீண் செலவு, வெட்டி சிரமம், கால விரயம் ஏற்படுத்துகிறீர்கள்? அவற்றைச் சந்திக்க முடியாமல் அவர்கள் மூன்றாவது மொழியைப் பெரும்பாலும் கற்கவே மாட்டார்களே?

உங்கள் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘தமிழகத்தில் பெருவாரியான தமிழர்கள் இந்த விஷயத்தில் விவரமானவர்கள் அல்ல, ஆகையால் அநேக தமிழர்கள் என் எதிர்ப்பை வரவேற்பார்கள்’ என்று நீங்கள் நினைத்தால் அது அசட்டுத்தனம்.

நீங்களும் உங்கள் கட்சியினரும் தெருவில் இறங்கி மும்மொழிக் கொள்கையை எதிர்த்துக் கூட்டங்கள் போடலாம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம். ஆனால் உங்கள் வாதத்தை ஏற்காத பொதுமக்கள் தாமாகத் கூடி தெருவுக்கு வந்து எதிர்க் கோஷம் போட மாட்டார்கள். திமுக என்னும் கட்சியை –மொழி பற்றிய அதன் நிலைப்பாட்டை – வெட்டவெளியில் பகிரங்கமாக எதிர்ப்பது இந்த ஜனநாயகத்தில் தமக்கு ஆபத்தானது என்று உணர்ந்தவர்கள் சாதாரண மக்கள்.

இது போக, தங்கள் ஏழ்மையிலும் இயலாமையிலும் தேசிய கல்விக் கொள்கை பற்றி அக்கறை காட்ட முடியாத மிக எளிய மக்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் இவர்கள் உங்கள் நிலைப்பாட்டை ஏற்றவர்கள் என்று அர்த்தமல்ல. இவர்களின் நலனும் காக்கப் படவேண்டும்.

வேலைக்காக இடம் விட்டு இடம், மாநிலம் விட்டு மாநிலம், மாறும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். பரந்த இந்தியாவில், வளர்கிற இந்தியாவில், இடம் பெயர்தல் அதிகம் நிகழும் காலம் இது. அதற்கு ஏற்ப சாலைகள் நீள்கின்றன, புதிய அதிவேக ரயில்கள் விரைகின்றன, புதிய விமான நிலையங்கள் எழுகின்றன.

தமிழகத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வட மாநிலத்தவர்கள் வந்து எல்லா வேலைகளையும் செய்து பிழைப்பதைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இதன் விளைவாக, இன்னொரு இந்திய மொழி நமக்குத் தெரிந்தால் நாம் நல்ல வேலைகள் தேடும் இடம் இந்தியாவில் விரிவடையும் என்று தமிழக இளைஞர்கள் நினைப்பார்கள், பெண்கள் உட்பட. இதை நீங்கள் உணரவில்லையா முதல்வரே?

வெளி மாநிலம், வெளி நாடு என்று தமிழர்கள் போய் விட்டால், அந்தந்த இடங்களில் தமக்கான கோவில்களைக் கட்டிக் கொள்ளலாம். தமிழ்ச் சங்கங்களும் அமைத்துத் தங்களின் தமிழ் உணர்வைக் காத்துக் கொள்ளலாம். அது நடக்கிறது.

அமெரிக்காவில் பல ஊர்களிலும் ஹிந்துக் கோவில்கள் உண்டு. மிக அதிகமாகத் தமிழ்ச் சங்கங்களும் அந்த நாட்டில் உண்டு. அந்தத் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தியது அங்கு குடியேறிய தமிழர்களின் தமிழ்ப் பற்றுதானே? அந்தத் தமிழ்ச் சங்கங்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் சம்பந்தம் கிடையாதே? திமுக-வைத் தவிர்த்து தமிழும் தமிழ் உணர்வும் அங்கு வாழ்கிறதல்லவா, வளர்கிறதல்லவா? தமிழகத்தில் மட்டும் அது நடக்காதா?

‘எதுவானாலும், மும்மொழிக் கொள்கையை நான் எதிர்ப்பதால், மக்களின் மொழி உணர்ச்சியை நான் கிளறுவதால், முன்காலம் போல் திமுக-வுக்கு இப்போதும் அதிக ஓட்டுகள் கிடைக்கும்’ என்று ரகசியமாக நினைக்கிறீர்களா? அப்படித்தான் தெரிகிறது. ஆனால் உங்கள் நினைப்பு சரியல்ல, இக்காலத்தில் அது பயன் தராது.

தமிழகச் சிறுவர்கள் தங்கள் பள்ளிகளில் இன்னொரு இந்திய மொழி கற்பதைத் தமிழக மக்கள் பரவலாக விரும்புவதால், மக்களின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மாற்று அரசியல் சக்தி அசாதாரண உறுதியுடன் தமிழகத்தில் செயல்படுகிறது, வலுப்பெறுகிறது. அதுவே தமிழக மக்களை இந்த விஷயத்தில் தைரியப் படுத்துகிறது. இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் அசட்டுத்தனம் முதல்வரே!

வாழ்த்துகளுடன்:
தமிழக மாணவர்களின் நலம் விரும்பும்,

ஒரு தமிழன்

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!

dharmendra pradhan main 1 - 2026

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக., எம்பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிய தர்மேந்திர பிரதான், பிரச்னைக்குரியதாகக் கூறப்பட்ட தான் சொன்ன ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு அந்தப் பேச்சை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் அவர் பேசியபோது, திமுக.,வினரின் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்துப் பேசினார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சட்டசபையில் திமுக.,வினர் நடத்திய விதம் எத்தகைய நாகரீகமானது என்பதை தமிழ்நாடே அறியுமே என்றும் குறிப்பிட்டார்.

மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது…

திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலர் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது எனக் கூறியிருந்தார்.

மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டது. 1963ல் கொண்டு வரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும், தற்போதைய மும்மொழிக் கொள்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. உலகத்தின் தேவையை கருத்தில் கொண்டுதான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 5ம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் மொழியில்தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மொழியைக் கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல. எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. திமுக., எம்.பி.,க்களின் வலி புரிகிறது. என் பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் நூறு முறை மன்னிப்பு கேட்கத் தயார். தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை எப்படி நடத்தினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யாரும் பாடம் எடுக்க வேண்டாம்.

ஆந்திராவில் 10 மொழிகளைக் கற்பிக்கத் தயார் என சந்திரபாபு கூறியுள்ளார். எங்களுக்கு இரு மொழியே போதும் எனக் கூறுபவர்களின் அரசுப் பள்ளிகளில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டனர். தமிழகத்தில் உள்ள 1500 சிறுபான்மையின பள்ளிகளில் 900 பள்ளிகளில் மும்மொழி கற்றுத் தரப்படுகிறது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் மும்மொழிகளில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது. நாமக்கல்லைச் சேர்ந்த பெண்ணிடம் பேசிய போது ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளதாகக் கூறினார். இது தான் புதிய தமிழகம்.

ஹிந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என எங்கேயும் கட்டாயப் படுத்தவில்லை. இந்தியாவின் வரலாற்றைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை என்ன செய்வது? திமுக.,வினர் தனி உலகில் வாழலாம். ஆனால், அதுதான் உண்மை. என்னை நீங்கள் முட்டாள் எனக் கூற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை அவர்கள் தொடரட்டும் – என்று பேசினார்.

பின்னர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேருவதாகக் குறிப்பிட்டு, இரண்டு தவணைகள் நிதி விடுவிக்கப்பட்டதைப்போல், அடுத்த தவணை நிதியையும் அளிக்குமாறு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலர் அனுப்பிய கடித்தத்தை வெளியிட்ட தர்மேந்திர பிரதான், திமுக., சொல்லும் பொய்களை தோலுரித்துக் காட்டியுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவு…

தர்மேந்திர பிரதான் @dpradhanbjp
நேற்று, திமுக எம்.பி.க்கள் மற்றும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினும், பிரதமர்-எஸ்.ஆர்.ஐ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்றத்தில் நான் வெளியிட்ட அறிக்கைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், மேலும் மார்ச் 15, 2024 தேதியிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் கடிதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

திமுக எம்.பி.க்களும் மாண்புமிகு முதல்வரும் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம், ஆனால் உண்மை சரியும்போது தட்டிக் கேட்பதில்லை. மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழக மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டும். மொழிப் பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரமாகப் பேசுவதும், அவர்களின் வசதிக்கேற்ப உண்மைகளை மறுப்பதும் அவர்களின் ஆட்சி மற்றும் நலப் பற்றாக்குறையைக் காப்பாற்றாது.

NEP மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? நிச்சயமாக அரசியல் பிரவுனிகளுக்காகவும், திமுகவின் அரசியல் செல்வத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகவும். திமுகவின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல் தமிழ்நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் பெரும் அவமானமாகும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

மொழித் திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை குறித்த திமுகவின் சமீபத்திய கூச்சல் அவர்களின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020க்கான எதிர்ப்பு, தமிழ்ப் பெருமை, மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் எந்தத் தொடர்பும் இல்லை, மாறாக அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில்தான் உள்ளது.

தமிழ் மொழியை மேம்படுத்த திமுக போராடுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இலக்கியச் சின்னங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்கள் சிறிதும் செய்யவில்லை.

UDISE+ தரவுகளின்படி, தமிழ் வழியில் சேர்க்கை 2018-19ல் 65.87 லட்சத்திலிருந்து 2023-24ல் 46.83 லட்சமாகக் குறைந்துள்ளது, ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் குறைந்துள்ளனர்.

📊 67% மாணவர்கள் இப்போது ஆங்கில வழியில் பள்ளிகளில் படிக்கின்றனர், அதே நேரத்தில் தமிழ் வழியில் சேர்க்கை 54% (2018-19) இலிருந்து 36% (2023-24) ஆகக் குறைந்துள்ளது.

📈 அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து ஆண்டுகளில் 3.4 லட்சத்திலிருந்து 17.7 லட்சமாக 5 மடங்கு உயர்ந்துள்ளது.

📉 அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 7.3 லட்சமாகக் குறைந்துள்ளது, இது விருப்பத்தில் ஆழமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்த எண்கள் உண்மையான கதையை வெளிப்படுத்துகின்றன – தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது மொழி விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமல்ல, காலனித்துவ மனநிலையும் இதில் உள்ளது. ஆங்கிலம் அந்தஸ்து மற்றும் வேலைகளுக்கான நுழைவாயிலாகக் கருதப்படுகிறது, இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாகக் காணப்படுகின்றன.

தாய்மொழியில் கல்வியை ஊக்குவிப்பது NEP 2020 இன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இளம் மனங்களில் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும் இந்தியாவின் மக்கள்தொகையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கும் இது உறுதியான பாதைகளில் ஒன்றாகும்.

NEP மற்றும் மொழி திணிப்பு குறித்த திமுகவின் வெற்று வார்த்தைகள் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. அவர்களின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை விலையாகக் கொடுத்து தெளிவான அரசியல் மற்றும் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

https://x.com/dpradhanbjp/status/1899469771952787556

https://twitter.com/dpradhanbjp/status/1899469771952787556/photo/1