இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
காதை பிளக்கும் ஹாரன் அதிரடி சோதனைகள் நடத்தி அகற்றிய போக்குவரத்து காவல்துறை!
மதுரை மாநகரில் அதிக அளவு ஒளி எழுப்பக்கூடிய மியூசிக்கல் ஹாரன் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றன. நாள்தோறும் இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில், இன்று மதுரை காளவாசல் பகுதியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் சுமார் 20க்கும் மேற்பட்ட லாரி மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக அளவு சத்தம் எழுப்பக்கூடிய ஹாரன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.
இது குறித்து, காவல் துறையினர் நம்மிடம் தெரிவித்த போது அதிக அளவு சத்தம் கொண்ட மியூசிக்கல் ஆரன்களை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும், இது பின்னால் வரும் வாகனங்களுக்கு ஒரு பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் எனவும் மேலும் அதிக ஒளி எழுப்பதால் காது செவித்திறன் பாதிக்கப்படும் எனவும் மீண்டும் அவர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து தகவல் தெரிவித்தனர். இதுபோன்று தொடர்ந்து நடவடிக்கை அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந் திருவிழா திருத்தேரோட்ட வைபவம் கோலாகலம்! பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்!
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்ரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை எதிர்கொண்டு அழைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாகளில் ஒன்றான மாசிப்பெருந்திருவிழா கடந்த 3 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா துவங்கியதையடுத்து சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், விழாவின் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் நேற்று (10ம் தேதி) நடைபெற்றதன் தொடர்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மைதருவார் மற்றும் பிரியாவிடையுடன் தேரில் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் மாசி வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
தேரோட்ட விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலிலும் நின்று சுவாமியை வரவேற்று தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் கோவில் மாசி திருவிழா – பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்!
சோழவந்தான் பேட்டை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் முதல் நாள் திருவிழாவான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
கோவில் முன்பு பொங்கல் வைத்து ஏராளமான பெண்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பேட்டை கிராமத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
காமெடி தர்பார் ஆகிக் கொண்டிருக்கும் கழக அரசின் முதல்வர் ஸ்டாலின் பல நேரங்களில் காமெடியன் வடிவேலுவின் வழியைப் பின்பற்றுகிறாரா, அல்லது கழக அரசு அமைய தன் திரையுலக வாழ்வையே தியாகம் செய்த வடிவேலு, கழக அரசின் காமெடித் தனங்களை பட்டவர்த்தனமாக திரைப்படங்களில் கிண்டல் செய்கிறாரா என்ற மதி மயக்கம், ரசிகப் பெருமக்களுக்கு வருவதுண்டு. அப்படி ஒரு காட்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சினிமாவால் வளர்ந்து ஆட்சியைப் பிடித்த திராவிட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு, சினிமா காட்சிகளையே உதாரணமாக்குவது தவறில்லை என்றே தோன்றுகிறது.
‘தலைநகரம்’ படத்தில் வரும் வடிவேலு காமெடிகள் இன்றைய திமுக., அரசின் செயல்பாடுகளுக்கு அப்படியே பொருந்திப் போயுள்ளது. இதுவும் ‘தலைநகர’ விவகாரம்தானே! அண்மையில் தான், பாஜக., தலைவர் அண்ணாமலையிடம், “அண்ணாசாலை பக்கம் வந்து பார்க்கட்டும்” என்று துணை முதல்வர் ‘ஆக்கப்பட்டுள்ள’ ஸ்டாலினின் மகன் உதயநிதி சவால் விட, மேற்படி படத்தில் வரும் – காந்தி தெருவுக்கு வந்துடுவியா, என் வீட்டுப்பக்கம் வந்துடுவியா என்று வடிவேலு ரவுடித்தன சவால் விடும் காமெடியை இணைத்து, சமூகத் தளங்களில் பலர் நகைச்‘ சுவைப்படுத்தி’னார்கள்!
இன்னொரு காட்சியில் வடிவேலுவை சிலர் துரத்த, தப்பித்து ஓடும் அவர், தப்பிக்க முடியாதபடி இரும்புக் கதவுக்கு முன் ஒரு முட்டுச் சந்தில் நிற்க, அப்போது தான் கையில் வைத்திருக்கும் பெட்டியைத் திறந்து பார்ப்பார். “மகனே, நீ பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நேரத்தில் இந்தப் பெட்டி கை கொடுக்கும், அதைத் திறந்து பார்” என்று தன் தந்தை சொன்னது நினைவு வரும். பெட்டியைத் திறந்தால் கத்தி இருக்கும். ‘இந்தக் கத்தி எப்புடிடா கை கொடுக்கும், அது கையைக் கிழிக்கல்லடா செய்யும்!’ என்று தனக்குள் பேசிக் கொண்டே, அதை எடுத்துக் கத்தியபடி, தன்னைத் துரத்தியவர்களை பயமுறுத்தி, தனக்குத் தானே ஒரு பட்டப் பெயரும் கொடுத்துக் கொள்வார், ‘நாய் சேகர்’ என்று!
இன்றைய திமுக., அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், அன்றைய திமுக., முதலமைச்சர் மு.கருணாநிதி தன் மகனுக்கு, ‘நெருக்கடி வரும் போது கையில் எடுத்துக் கொள், இது உனக்குக் கை கொடுக்கும்!’ என்று கொடுத்துச் சென்றிருக்கும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார். அவருக்கு நெருக்கடிக் காலம் வந்திருப்பதால்! அது கைகொடுக்குமா அல்லது கையைக் கிழிக்குமா என்பது, கூட்டாளிகளான ‘இண்டி’ கூட்டணியினரின் செயல்பாட்டில் இருக்கிறது!
கருணாநிதியின் பேரன் உதயநிதி முன்னர் கையில் எடுத்த ‘சநாதன அழிப்பு’ பேச்சு, வட மாநிலங்களில் ‘இண்டி’ கூட்டணியின் வெற்றியைப் பெருமளவு பாதித்தது என்றே கருத்துகள் எழுந்தன. இப்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கையில் எடுத்துள்ள ‘ஹிந்தி எதிர்ப்பு’, அவர் சார்ந்துள்ள ‘இண்டி’ கூட்டணித் தலைவர்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்துள்ளது.
இதன் பின்னணி தெளிவு. புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிடில், அதற்கான நிதியை வழங்க முடியாது’ என்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். ஆனால் நிதிகளை மட்டுமே பெற்று கபளீகரம் செய்யும் ‘நிதி’ குடும்ப அரசு, இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், ஆனால் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் என்று கூறியது. பின்னர், மத்திய அரசு, தமிழகத்துக்கு நிதி அளிக்காமல் வஞ்சம் செய்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதது. தான் ஏன் இதை எதிர்க்கிறோம் என்பதற்குக் காரணமாக, ‘பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது, ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும்’ எனக் கூறி, மக்களிடம் தன் ஊடகங்களின் மூலம் பொய்யான தகவலைச் சொல்லி, அரசியல் செய்தது. பின்னர், மும்மொழிக் கொள்கையை ஹிந்தி திணிப்பு எனக் கூறி, ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மீண்டும் திமுக., கையில் எடுத்தது.
தான் அரசியல் செய்தாலும், எதிர்க்கட்சிகள் ‘அவியல்’ மட்டுமே செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரி ஆட்சியின் கொள்கைக்கு தலையசைத்து, ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது, மத்திய அரசு நிதியை அளிக்க வேண்டும்’ என அதிமுக., பாமக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மத்திய அரசுக்கு ‘அறிவுரை’ கொடுத்தன.
இந்த நெருக்கடியில், தந்தை கருணாநிதி கற்றுக் கொடுத்த வழியில், ‘ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்; உயிரைக் கொடுத்தாவது தமிழைக் காப்போம்’ என்று குறிப்பிட்டு, ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதுகிறார். அவரது அழைப்பை ஏற்று, முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய போராட்டம் போல ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க திமுக.,வினர் தார் டின்களுடன் உலா வருகின்றனர்.
மேலும், ‘உ.பி., பீஹாரில் பேசப்படும் போஜ்புரி, மைதிலி, ஆவ்தி போன்ற மொழிகளை, ஹிந்தி விழுங்கி விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி, உ.பி. பீஹார் கூட்டணிக் கட்சியினரும் தன் கோஷத்துக்கு ஒத்து ஊதுவார்கள் என்று நினைத்தார். திமுக., அந்நாளில் ஹிந்தி எதிர்ப்பு நாடகம் போட்ட போது, தமிழகத்தில் மட்டுமேயான தனிக் கட்சி. ஆனால் இப்போது, தேசிய அளவிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி! இதனால், அதன் தீவிர ஹிந்தி எதிர்ப்பு அரசியலை இண்டி கூட்டணியின் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., போன்றவை விரும்பவில்லை. இந்த ஆண்டு இறுதியில் பீஹாரில் தேர்தலை சந்திக்கும் நிலையில், திமுக.,வின் அரசியல் தமிழகத்தில் மட்டுமே பாஜக.,வை பலவீனப் படுத்தும், ஆனால் வடக்கே பாஜக., மேலும் பலப்படுத்தும் என்று எச்சரிக்கின்றன.
இந்நிலையில், ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு அரசியலின் பின்னணியை தெளிவாக வெளிச்சமிட்டார், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ‘சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளை வைத்து, தி.மு.க.,வின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை மறைக்க முடியாது” என்றார் அவர் அதே வழியில் தமிழகத்தில் அண்ணாமலையும் திமுக., அரசின் பொய்களையும், தோல்விகளையும் பட்டியலிட்டுக் காட்டி வருகிறார்.
ஆட்சிக்கு வருவதற்காக ஸ்டாலின் அவிழ்த்து விட்ட பொய்கள், ஒன்றா இரண்டா, எதைச் சொல்ல? பிரசாரம் செய்து, ஊடக பலத்தில் எப்படியெல்லாம் மக்களை நம்ப வைத்தார்கள்! உதாரணத்துக்கு சில…
ஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க, ரோடு மட்டும் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது! ஸ்டெர்லைட் ஆலையை இடித்து தரைமட்டமாக்கி அங்கே, மருத்துவமனை கட்டப்படும்! இனி வட நாட்டு தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு போய்விடுவார்கள்! சௌகார்பேட்டை முழுக்க தமிழர்கள் குடி அமர்த்தபடுவார்கள். ஒரு மார்வாடி கடையைக்கூட இனி இங்கே பார்க்க முடியாது.
கேஸ் சிலிண்டர் 600 ரூபாய்க்கு வந்துடும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்படும். பெட்ரோல் மீதான மாநில வரி முழுவதும் நீக்கப்படும். இனி நீட் தேர்வு தமிழகத்தில் மட்டும் இருக்காது! ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், திமுக.,வினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்’ என்று தங்கை கனிமொழி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டாலின் கையெழுத்து போட்டு, எல்லா மது ஆலைகளையும் மூடிவிடுவார்கள்.
அம்பானி, அதானி குடும்பம் தமிழ்நாட்டில் இனி ஒரு குண்டூசி கூட விற்க முடியாது. ஜியோ, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் எல்லாம் மூடப்படும். தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கம்பெனிகள் இனி இருக்காது. விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள் என்பதால், இனி எந்த நெடுஞ்சாலையும் விரிவாக்கம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவருக்குமே மாதம் 1000 ரூபாய் கிடைப்பதால் செலவுகளுக்கு ஆண்களின் கையை எதிர்பார்க்க வேண்டியதில்லை! தனியார் பள்ளிகளில் இனி லட்சக்கணக்கில் கட்டணம் இருக்காது. அரசுப் பள்ளிக் கட்டணம் போலவே தனியாரும் வாங்க சட்டம் வரும். முக்கியமாக, பாஜக., உள்ளே வந்துவிடும் என்பதால் விழிப்புடன் இருந்து விரட்டுவோம். இனி பாஜக., கொடி ஒரு இடத்தில்கூட தமிழ்நாட்டில் பறக்காது.
இப்படியெல்லாம் நம்ப வைக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு திமுக., அரசு அளித்த பரிசு என்ன?!
திமுக., அகராதியில் சீரமைப்பு என்றாலே கட்டண உயர்வு என்றுதான் பொருள் ஆகிவிட்டது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி குப்பை வரிகள் உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, டாஸ்மாக், கஞ்சா நடமாட்டம், சிந்தடிக் போதைப் பொருள் அதிகரிப்பு, கள்ளச்சாராய நடமாட்டம் அதிகரிப்பு, கள்ள சாராய உயிரிழப்புகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை, பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், எங்கும் அதிகரித்துவிட்ட சட்டம் ஒழுங்கு சீரழிவு, பள்ளி ஆசிரியர்களின் பாதுகாப்பற்ற நிலை, குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆளும் கட்சியுடனான தொடர்புகள், அவற்றில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை என்று திமுக., அரசின் தோல்விகள் பட்டியலில் பக்கம் பக்கமாக நீளுகின்றன.
திமுக., அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தின் கடன் சுமை இரட்டிப்பாகியுள்ளது. இவை முதலீடுகளுக்கும் நலன் தரும் திட்டங்களுக்கும் என்றால் பரவாயில்லை, ஆனால் எல்லாமே கமிஷன் மற்றும் கொள்ளை அடிக்கும் வெற்றுத் திட்டங்களுக்கு என்பதாகத்தான் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். சென்னை வெள்ள சீரமைப்புக்கு ரூ.4 ஆயிரம் கோடி என்றார்கள், ஆனால் அரசின் செயல்பாடுகளால், அடுத்த சில நாட்களிலேயே நக்கிட்டுப் போன நாலாயிரம் கோடி என்று சமூகத் தளங்களில் விமர்சனம் கொடிகட்டிப் பறந்தது. பூங்காக்கள் அமைக்க என்று ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கினார்கள். இப்போது சென்னையில் பொதுக் கழிவறைகள் பராமரிப்புக்கு என்று கோடிக்கணக்கில் கணக்கு வழக்கின்றி வாரியிறைக்கிறார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பக்கம் புதிய முதலீடுகள் எதுவும் இல்லை, இருக்கும் முதலீடுகளும் நிறுவனங்களும் அண்டை மாநிலங்களுக்கு அலறிக் கொண்டு ஓடும் நிலை! சரிந்து வரும் வேலைவாய்ப்புகளும் குறைந்து வரும் கல்வித் தரமும் தமிழகத்தின் இளைய தலைமுறைக்கு பெரும் சவால்!
இந்தப் பின்னணியில்தான், இல்லாத இந்தி எதிர்ப்பு, சொல்லாத தொகுதி வரையறைகள் என, ஸ்டாலின் தன் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை மடைமாற்றுவதற்காகக் கையில் எடுத்த நாடகத்தனங்கள் இப்போது பொதுமக்களிடம் அவர் மீதான வெறுப்புணர்வை அதிகரிக்கவே செய்திருக்கிறது!
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்
விஜயபாரதம் (14.03.2025) வார இதழில் வெளியான கட்டுரை
பாலமேட்டில் அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன் அருள்மிகு மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழாவை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன தொடர்ந்து திங்கட்கிழமை மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி தண்ணீர் செம்பு ஊர்வலம் வந்து முளைப்பாரி திண்ணையில் வைத்து கும்மி அடித்து அபிஷேகம் தொடர்ந்து, சக்தி கிரகம் அலங்காரம் செய்து வாண வேடிக்கையுடன் நகர்வலம் வருதல் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் வாண வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து நகர்வலம் வருதல் அன்று மாலை பால்குடம் எடுத்து நகர்வலம் வருதல் வாணவேடிக்கையுடன் முளைப்பாரி நகர் வலம் வருதல் தொடர்ந்து, கோயிலில் உள்ள சக்தி கரகத்துடன் முளைப்பாரி தூக்கி கொடிக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கி அங்குள்ள முளைப்பாரிக்கு அபிஷேகம் செய்து சக்தி கரகத்துடன் கோயிலில் உள்ள முளைப்பாறியும் தூக்கி மங்கள வாத்தியத்துடன் மேளம் தாளம் முழங்க வான வேடிக்கையுடன் முளைப்பாரி தோட்டத்தில் இறக்கி வைத்து கும்மி அடித்து அபிஷேகம் செய்து தண்ணீர் விடுதல் நிறைவாக மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடு இந்த நாடார்கள் உறவின்முறை சங்கம் செய்திருந்தனர்.
மகா கும்பாபிஷேகம்:
மதுரை, அலங்காநல்லூர், பெரிய இலந்தைக்குளம் நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக வேதியர் கள், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது. ஹோமத்தை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரானது, பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் விழாக் குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்கான ஏற்பாடுகளை, நல்லதங்காள் ஆலய பங்காளிகள் செய்து இருந்தனர்.
இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடின. முதலில் மட்டையாடிய நியூசிலாந்து அணிக்கு விளையாடிய அனைத்து மட்டையாளர்களும் சிறப்பாக ஆடினர். முதல் 10 ஓவர்களில் அந்த அணி 64 ரன் எடுத்தது. ஆனால் அதன் பின்னர் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சால் அதிரடியாக ஆடமுடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் தவித்தனர். வருண் சகரவர்த்தி (எகானமி ரன் ரேட் 4.5), குல்தீப் யாதவ் (4.0), அக்சர் படேல் (3.62), ரவீந்திர ஜதேஜா (3.0) என ரன் கொடுக்காமல் இந்த நால்வரும் வீசிய பந்துவீச்சால் நியுசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (76 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு துணை நின்று ஆடினார். ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பந்தை கிளன் பிலிப்ஸ் மிக மிக அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்சைப் பிடிக்க அவருக்கு ரெஸ்பான்ஸ் டைம் 0.7 விநாடிகள் மட்டுமே இருந்தது. இருப்பினும் உயரப் பறந்த பந்தை ஒருகையால் அவர் கேட்ச் பிடித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. கில் ஆட்டமிழந்த இரண்டாவது பந்தில் கோலி அவுட் ஆனார்.
பின்னர் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் (48 ரன்), அக்சர் படேல் (29 ரன்), கே.எல் ராகுல் (ஆட்டமிழக்காமல் 34 ரன்), ஹார்திக் பாண்ட்யா (18 ரன்), ரவீந்தர ஜதேஜா (9 ரன்) ஆகிய அனைவரும் சிறப்பாக ஆடினர்; ஆயினும் வெற்றிக்குத் தேவையான ரன்களை எட்டுமுன்னர் ஆட்டமிழந்தனர். இந்திய மட்டையாளர்கள் எட்டாம் இடத்தில் இறங்கும் ரவீந்த ஜதேஜா வரை உள்ளனர் என்பதால் ஒரு ஓவர் மீதியிருக்கும்போது 254 ரன்கள் அடித்து இந்திய அணி சாம்பியன் ட்ராபி கோப்பையைக் கைப்பற்றியது.
இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த சாம்பியன்ஸ் ட்ராபியின் தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திரா அறிவிக்கப்பட்டார்.
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் உறுதி செய்வதுடன் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், போதையின் பாதையில் பலியாவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, இந்து இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி. சண்முகம் அறிக்கை மூலம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:
அன்றாடம் வெளியாகும் ஊடக செய்திகள் மூலம் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. இதனால் நாட்டின் எதிர்காலமாகிய மாணவ சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தங்கள் சுயநலத்திற்காக ஒருசில சமூகவிரோதிகள் அப்பாவி மாணவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி போதைக்கு அடிமையாக்கி அவர்களது எதிர்காலத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாணவர்களையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளராக மாற்றும் அவல நிலையும் சமீபகாலமாக வெளிவரும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. அந்த வகையில் போதை பொருள் விற்பனை கும்பல்களின் கொடுஞ்செயல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இது மாணவர் சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.
உதாரணமாக, நேற்றைய தினம் சிதம்பரம் பகுதியில் உள்ள சமூகவிரோதிகள் சிலர் ஐடிஐ மாணவர்களை கஞ்சா விற்க கட்டாயப்படுத்துவதுடன் மறுப்பு தெரிவித்தவர்களை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதேபோல தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் சிலர் மதுபானம் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதாக சட்டக் கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நபர் மாணவியின் வீட்டிற்கே சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை இச்சம்பவத்தில் மாணவியை தாக்கியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்று அம்மாணவி தெரிவித்துள்ளார். காவல்துறையின் இத்தகைய அலட்சியம் சிறிதும் ஏற்புடையதல்ல.
கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்தவர்கள்மீது புகார் கொடுத்த இரண்டு இளைஞர்களை கள்ளசாராய கும்பல் வெட்டிகொன்றது நாடறிந்ததே. அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஆபத்து இருப்பதை காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையின் மெத்தன போக்கால் கொலையானார்கள், அந்த வகையில் தற்போது கம்பம் பகுதியை சேர்ந்த சட்டகல்லூரி மாணவி தாக்கப்பட்டும் வழக்கு பதியாமல் காவல்துறை மெத்தனமாக செயல்படுவது கடும் கண்டனத்துகுறியது.
அன்றாடம் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது நம் மாநிலத்தில் போதை கும்பல்களின் ஆதிக்கம் சாதாரண பள்ளிக்குழந்தைகள் வரை நீண்டுள்ளதாகவே தெரியவருகிறது. ஆனால் இதை தடுக்க வேண்டிய காவல்துறையும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்வரும் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகவே நடக்கும் சம்பவங்கள் எடுத்துகாட்டுகிறது. மாநில அரசின் இவ்வாறான மெத்தனபோக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக அமையும் என்றால் மிகையில்லை.
போதைபொருள் விற்பனை கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என சூளுரைக்கும் தமிழக முதல்வரின் பேச்சு வெறும் வார்த்தை ஜாலங்களாகவே நின்றுபோகிறது என்பதில் ஐயமில்லை.
எனவே தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா போதை கும்பல்களின் மீதும் அவர்களது கூட்டாளிகளாக செயல்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து மாணவச் செல்வங்களது வாழ்வை காக்குமாறு இந்து இளைஞர் முன்னணி கேட்டுக்கொள்கிறது…
ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து 2023-ல் புதிய தமிழகம் வெளியிட்டதாகவும் அதுகுறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டு, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை:
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் :
1) மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை.
2) ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60% சரக்குகளுக்கு ஆயத்தீர்வை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 40% சரக்குகளுக்கு எவ்விதமான ஆயத்தீர்வையும் வசூலிக்கப்படாமல் கள்ளத்தனமான விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்களும், அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கக்கூடியவர்களுமே பெரும் பயன் அடைகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய ஆயத்தீர்வை வரியுடன், லாபமும் அரசியல் பிரமுகர்களின் கஜானாவை நிரப்புகின்றன. மதுபான கொள்முதலில் மட்டுமே ஆண்டொன்றுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கோடி அளவிற்கு மேல் ஊழல் நடைபெறுகிறது. அதில் ரூ 25,000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
3) ஆண்டொன்றுக்கு ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் கோடி முதல் ரூபாய் ஐம்பதாயிரம் கோடி வரை வரி வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறை எப்பொழுதும் நட்டத்தில் இயங்குவதாகவே கணக்கு காண்பிக்கப்படுகிறது. மேலும், மதுபான கிடங்குகளில் உள்ள மதுபான பாட்டில்களை அடகு வைத்து ரூ 500 கோடி முதல் ரூ 1,000 கோடி வரையிலும் பல்வேறு வங்கிகளில் டாஸ்மாக் நிறுவனம் கடன் பெற்று வட்டி செலுத்தி வருகிறது. தினமும் விற்பனையாகக் கூடிய மதுபானங்களின் அளவை சொத்தாகக் கணக்குக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று இருப்பதே வங்கிகளை ஏமாற்றுவதற்கும், அரசுத் துறையே மோசடி செய்வதற்கும் சமமாகும். ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் கோடி வரி வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறை நட்டத்தில் இயங்குவதாகக் கூறுவதே மோசடியும், ஊழலுமாகும். எனவே இதுகுறித்து முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும்.
4) மதுபான உற்பத்தி செலவுடன், பாட்டிலின் விலை, மூடியின் விலை, லேபிள் விலை என தனித்தனியாக ஒவ்வொன்றிற்கும் அபரிமிதமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு அவற்றில் கிடைக்கக்கூடிய லாபங்கள் அனைத்தையும் ஆளும் கட்சியின் அரசியல் உயர் மட்டத்தில் இருக்கக்கூடியவர்களே அபகரித்துக் கொள்கிறார்கள். இதன் மூலமாக அரசுக்கும் பேரிழப்பு ஏற்படுகிறது. தோராயமாக மூடி, பாட்டில், லேபிள் முறைகேடுகளால் மட்டுமே ஆண்டுக்கு ரூ 5,000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.
5) ஒட்டுமொத்தமாக 19 மதுபான ஆலைகளிலிருந்து மதுபானம் கொள்முதல் செய்யப்படுகின்ற பொழுது, அது எல்லா ஆலைகளிலிருந்தும் சீராக கொள்முதல் செய்யப்படாமல், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து அல்லது நெருக்கமான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அதிகமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, SNJ என்ற நிறுவனம் மிக அண்மையில் துவக்கப்பட்டது. இருப்பினும், இப்பொழுது SNJ நிறுவனத்திடமிருந்து மட்டுமே அதிக அளவில் மதுபான கொள்முதல் நடைபெறுகிறது. SNJ நிறுவனத்தின் உரிமையாளர் இன்றைய முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் என்பதும், அவரது வீட்டிற்கு எதிரே குடியிருந்து வருகிறார் என்பதும், கலைஞரின் ’உளியின் ஓசை’ என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜெயமுருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் மதுபான ஆலைகளின் உரிமையாளர்கள் அரசியல் பிரமுகர்களாகவும், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களாகவும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்துச் செயல்படுகிறார்கள்.
6) ஒவ்வொரு மதுபான ஆலையிலிருந்தும் கொள்முதல் செய்யப்படக்கூடிய மதுபானங்கள் எந்தெந்த சில்லறை விற்பனை மதுக் கடைகளுக்கு எவ்வளவு அனுப்பப்படுகின்றன என்பது குறித்து எவ்விதமான தகவலும் அரசிடம் இல்லை; அவை கணினி மயமாக்கப்படவுமில்லை; அவைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. சில்லறை விற்பனை கடைகளுக்கு தனித்தனியாக லைசன்ஸ் வாங்காமல் ஒட்டு மொத்தமாக 5362 கடைகளுக்கும் ஒரே உரிமம் பெற்று உள்ளார்கள். அதுவே மெகா ஊழலின் ஊற்றுக்கண்ணாகும். இதன் காரணமாக மதுபானங்களின் தரம் குறித்து சோதனை செய்யவோ, தரம் மோசமாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
7) பொதுவாக, டாஸ்மாக் சில்லறை மதுக் கடைகளில் விலை குறைவான மதுபானங்களே அதிகமாக விற்பனையாகும். ஆனால், அந்த ரகங்களில் அதிக லாபம் கிடைக்காது என்கிற காரணத்தினால் மது உற்பத்தி ஆலை அதிபர்கள் விலை கூடுதலான உயர் ரக மதுபானங்களை உற்பத்தி செய்து, டாஸ்மாக் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு டாஸ்மாக் சில்லறை கடைகளின் விற்பனை ஊழியர்கள் மீது திணிக்கப்பட்டு அதிக விலையுடைய மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுபோன்று மது பிரியர்களால் விரும்பப்படாத விலை உயர்ந்த மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் வாங்கி குவிப்பதால் மட்டுமே ஆண்டுக்கு ரூ 1,000 கோடிக்கும் மேலாக விற்கப்படாத மதுபான சரக்குகள் ஆங்காங்கே கடைகளில் தேங்கிக் கிடக்கின்றன.
8) ஏறக்குறைய 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற TASMAC நிறுவனம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆயத்தீர்வை மூலம் வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனத்திற்கு மதுபான ஆலைகளிலிருந்து மதுபானங்களை கிடங்கிற்குக் கொண்டு வரவோ அல்லது டாஸ்மாக் நிறுவனத்தின் கிடங்கிலிருந்து சில்லறைக் கடைகளுக்கு எடுத்துச் செல்லவோ சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லை. ஒப்பந்தங்கள் – வாடகை வாகனங்கள் மூலமாக மட்டுமே மதுபானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அது ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
9) டாஸ்மாக் கிடங்கிலிருந்து சில்லறைக் கடைகளுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒப்பந்த வாடகை வாகனங்களுக்கான டெண்டர் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. அண்மையில் நடைபெற்ற டெண்டரில் கூட வேறு எவரையும் பங்குபெற விடாமல் தடுத்து, தமிழகம் முழுவதும் மூன்று வருடத்திற்கு ஒரே ஒருவருக்கு மட்டுமே ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் நடைமுறையில் உள்ள ஒரு கி.மீ ரூ 8 என்ற கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாக ரூ 15 எனக் கட்டண நிர்ணயம் செய்து குறிப்பிட்ட அரசியல் புள்ளி ரூபாய் ஐந்து கோடி அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார்.
10) மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட TASMAC சில்லறை விற்பனை மதுக் கடைகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்; மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும்; ஒவ்வொரு மதுபான கடையின் அருகாமையிலும் மதுபானக் கூடங்கள் (BAR) இருக்க வேண்டும்; மதுக்கூடங்களில் எந்தவித மது விற்பனையும் செய்யக் கூடாது என்பன விதிகளாகும்; நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி, மதுக்கூடங்களில் மது விற்பனை செய்வது சட்ட விரோதமாகும். ஆனால், சட்ட விரோதமாக இயங்கும் 4000-க்கும் மேற்பட்ட மதுக்கூடங்களில் விடிய விடிய மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, பன்மடங்கு கூடுதலான விலையுடனும் விற்பனை செய்யப்படுகின்றன.
11) இந்த மதுக் கூடங்களில் வெளி மாநில மதுபானங்களும், போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பொட்டலங்களில் – பாட்டில்களில் அடைக்கப்பட்ட பொருட்களை தவிர, மதுக்கூடங்களில் அடுப்பு வைத்துச் சமையல் செய்து எவ்விதமான பொருட்களும் விற்பனை செய்யப்படக் கூடாது. மாறாக, மாமிச வகைகள் சமைத்து விற்கப்படுகின்றன. இந்த முறைகேடுகள் எவராலும் கண்காணிக்கப்படுவதில்லை. விலைப் பட்டியல் காட்சிப் படுத்தப்படுவதில்லை. தனி ஊழல் ராஜ்ஜியமாகப் பட்டவர்த்தனமாக நடக்கிறது.
12) தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களைச் சேகரிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயில் 1.80% பணம் டாஸ்மாக் சில்லறை கடை விற்பனைத் தொகை செலுத்தப்பட வேண்டும். அதற்காக மட்டுமே பார்கள் டெண்டர் விடப்படுகின்றன. சராசரியாக ஒரு பார் ஒரு மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பார் எடுத்தவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது வேண்டப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 2 மாதத்திற்கு பணம் செலுத்துவது, அதற்குப் பிறகு பணம் செலுத்தாமல் அந்தப் பார்கள் மூடப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். ஆனால், எதார்த்தத்தில் இந்த பார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். பார்களிலிருந்து அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய மாதாந்திர தொகை செலுத்தப்படுவதில்லை. மாறாக, அந்த தொகை அரசியல் அதிகாரம் பெற்றவர்களுக்குச் சென்று விடுகின்றன. தமிழகத்தில் ஏறக்குறைய 4,000 பார்கள் சட்டவிரோதமாக இயங்குகின்றன. இதன் வாயிலாக மாதம் ரூ 750 கோடி முதல் ரூ 1000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ 15,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது.
13) மதுவை ஏக போக விற்பனை செய்யும் உரிமை அரசிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே TASMAC டாஸ்மாக் நிறுவனம் துவங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது 60 சதவிகித மது விற்பனை மட்டுமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக் கடைகள் மூலமாக நடைபெறுகிறது; 40 சதவிகித மது விற்பனை உரிமம் பெறாத சட்டவிரோத பார்களுக்கு சென்று விடுவதால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் தோராயமாக ரூ 10, 000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது மிகப்பெரியக் குற்றமாகும்.
14) தமிழகத்தில் உரிமம் இல்லாமல் ஆயிரக்கணக்கான மதுக்கூடங்கள் சட்ட விரோதமாக ’மது விற்பனை நிலையங்களாக’ செயல்படுகின்றன. இந்த சட்ட விரோத – உரிமம் பெறாத பார்கள் மூலமாக மட்டும் சராசரியாக ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பதினைந்து லட்சம் வரையிலும் இடத்திற்கு தகுந்தவாறு கள்ளத்தனமாக மது விற்பனையாகின்றன. இவ்வித மது விற்பனையில் சராசரியாக தினமும் ரூ 100 கோடிக்கும் மேலாக, ஆண்டொன்றிற்கு ரூ 50,000 கோடி அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் கஜானாவுக்குச் சென்று விடுகிறது. இது மெகா ஊழலாகும்.
15) சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் Elite மால்கள் என்று அழைக்கப்படக்கூடிய பெரு வணிக நிறுவனங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. தென்சென்னையில் மட்டும் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட மால்களில் ’Elite’ என்ற உயர்ரக மதுபானங்கள் விற்கும் மதுபான கடைகள் உண்டு. அந்த கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக வாடகைக்கு எடுக்காமல் குறிப்பிட்ட இரு இடைத்தரகர் மூலமாக வாடகைக்கு எடுப்பதால் உண்மையான வாடகையை விட இரண்டு மூன்று மடங்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு தெரிந்தே இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் மட்டுமே Elite பார்கள் மாதத்திற்குக் கூடுதலாக ரூ ஐம்பது இலட்சத்திற்கு வாடகைக்கு இரு குறிப்பிட்ட நபர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் கொடுக்கிறது. இதேபோன்று தமிழகத்தின் அனைத்து பெரு நகரங்களிலும் ஊழல் மித மிஞ்சி நடைபெறுகிறது. தோராயமாக ’Elite’ பார்கள் அனுமதி மற்றும் விற்பனையில் ரூ 500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.
16) உச்சநீதிமன்ற விதிகளின்படி, நெடுஞ்சாலைத் துறையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மட்டுமே மதுபான கடைகள் இருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றங்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் நெடுஞ்சாலைகளிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய ஒரு கிராம சாலையில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு பின்புறம் வழியாக விற்பனைகள் செய்யப்படுகின்றன.’ மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் துவங்கக்கூடிய அந்த மனமகிழ் மன்ற மதுக்கூடங்களுக்கு அனுமதி பெற ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெறப்படுகின்றன. இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் தரப்பட்டுள்ளன. தினமும் புற்றீசல் போல மனமகிழ் மன்ற – மது விற்பனை நிலையங்கள் உத்தித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும், திட்டமிடப்பட்டு அந்த மனமகிழ் மன்றங்கள் அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை மதுக் கடைகளின் விற்பனையைப் பாதிக்கக் கூடிய வகையில் மிக அருகாமையிலேயே அரசே அனுமதி அளிக்கிறது. நெடுஞ்சாலை பகுதிகளில் மூடப்பட்டதாக கூறிய பல கடைகள் மீண்டும் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. இதிலும் பெரும் முறைகேடுகளும் ஊழலும் நடைபெறுகின்றன. இதன் வாயிலாக ரூ 1000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.
17) காலிப் பாட்டில்கள், காலி அட்டை சேகரிப்பிலும், அதனுடைய விற்பனையிலும், மிகக் குறைந்த அளவிற்கு டெண்டர் விடுவதிலும் பட்டவர்த்தனமாக மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது.
18) டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தினமும் லட்சக்கணக்கான மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் 180 மி.லி அளவுள்ள ரூ 140 மதிப்புள்ள ஒரு மதுபாட்டில் கூடுதலாக ’ரூ 10 முதல் ரூ 20 வரை வைத்து கரூர் பார்ட்டிகளின் உத்தரவின் பேரில் ரூ 150 – 160 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், எந்தப் பகுதி மதுபான கடைக்கும் தமிழகத்தில் பில் கொடுப்பதே இல்லை. அவை கணினி மயமாக்கப்படவுமில்லை. இத்தகைய முறைகேட்டின் மூலம் தினமும் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை ‘கரூர் பார்ட்டிகள்’ என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் கைப்பற்றிச் செல்கிறார்கள். ஒத்துழைக்க மறுக்கும் ஊழியர்களை மிரட்டுவதும், பணி இட மாறுதல் செய்வதும் வாடிக்கையாகியுள்ளன. இதன் வாயிலாக தினமும் ரூ 10 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெறுகிறது. மேலும், இந்த கரூர் பார்ட்டிகள் யார்? என்பது குறித்து தனியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் தினமும் ரூ 10 கோடி; மாதம் ரூ 300 கோடி என ஆண்டுக்கு ரூ 3600 கோடி வரை ஊழல் நடைபெறுகிறது.
19) நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு கடைக்கு ஒரு பார் என்பதற்கு பதிலாக தமிழ்நாட்டினுடைய மூலை முடுக்குகள்; தென்னந்தோப்புகள் என மூன்று முதல் ஐந்து பார்கள் மூலம் மதுபானங்கள் விற்பனையாக கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. எந்த கிராமத்திலும், எந்த நகரத்திலும் அத்தியாவசிய பொருட்கள் எது கிடைக்கிறதோ இல்லையோ, மது தாராளமாகக் கிடைக்கிறது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் நடைபெறக் கூடிய ஊழலையும், அதில் புரளும் தொகையையும் எளிதில் கணக்கிட முடியாது.
20) இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என்று எவ்விதமான வயது மற்றும் பாலினம் பாராமல் அனைவருமே குடிப்பழக்கத்திற்கு ஆளாவதும், அதனால் அவர்களுடைய உடல் நலமும் மிகப்பெரிய பாதிப்புக்கும் ஆளாகி, மரணம் எய்தும் துயர சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. ஒரு காலத்தில் வேலை செய்த பின்பு, உடல் வலிக்காக குடிப்பது என்ற நிலை இருந்தது, ஆனால் இப்பொழுது ’வேலைக்குச் செல்வதே குடிப்பதற்காகச் சம்பாதிக்கத்தான்’ என்ற அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கட்டுமானம், ஆட்டோ ஓட்டிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், தினக் கூலிகள் உள்ளிட்ட அடிமட்ட தொழிலாளர்கள் தங்களது தின வருமானத்தின் பெரும் தொகையை மது குடிப்பதிலேயே செலவழிக்கிறார்கள். அதனால் அவர்களது குடும்பம் சீரழிக்கப்பட்டு வருகிறது. ’மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு; உடல் நலத்திற்கும் கேடு’ என்று மட்டும் பாட்டிலில் இந்த அரசு எழுதி வைக்கிறது. ஆனால், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தி, வீட்டுக்கும் இழப்பை ஏற்படுத்தி, அவர்களது உடல் நலத்திற்கும் பட்டவர்த்தனமாக கேடு செய்கிறது. மதுபானங்கள் எளிதாக கிடைக்கின்ற காரணத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்திலும் இந்த பழக்கங்கள் எளிதாக தொற்றிக் கொண்டு மதுவிற்கு மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களுக்கும், சூதாட்டம் போன்ற பழக்கங்களுக்கும் இரையாகிறார்கள். மதுபானங்கள் தங்கு தடையின்றி எந்த நேரத்திலும் கிடைப்பதால் மதுபானம் அருந்திய வாகன ஓட்டிகளால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும், சாதாரண பிரச்சனைகள் கூட வன்முறையாகி கொலை வரை செல்வதும், எண்ணற்ற ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி ஈரல் கெட்டு மரணமெய்துவதால் பல பெண்கள் விதவையாகும் நிலைகளும் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
21) 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரையிலும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும்; முதல்வரது புதல்வர் இன்றைய அமைச்சர் உதயநிதியும்; நாடாளுமன்ற உறுப்பினரும், முதல்வரின் சகோதரியுமான கனிமொழி அவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரச்சாரங்களின் போதும் ”திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த ’முதல்’ கையெழுத்திடுவோம்; டாஸ்மாக் கடைகளை மூடுவோம்” என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மதுபான விற்பனையைக் குறைப்பதற்கு உண்டான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், ஒவ்வொரு ஆண்டும் அதனுடைய வரி வருவாயை அதிகரிப்பதற்கு மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தான் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. தமிழக அரசினுடைய தலைவர் – ஆளுநர் என்ற காரணத்தினால் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதைக் காப்பாற்றாத இந்த அரசு மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.!
22) டாஸ்மாக் நிறுவனம் நிறுவப்பட்ட பொழுது ஏறக்குறைய 35,000 பேர் ஊழியர்களாக இருந்தனர். அதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி பணியாளர்கள் என ஒவ்வொரு கடையிலும் தலா மூன்று பேர் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், இந்த 20 வருடத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பலர் குடிப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, ஏறக்குறைய 6000-க்கும் மேற்பட்டோர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, பலர் உடல் நலம் குன்றி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
23) பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் MA, BA படித்த பட்டதாரிகளே ஆவர். அவர்களுக்கான மாத சம்பளம் ரூ 14,850, ரூ12,350, ரூ11,340 மட்டுமே. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரக்கூடிய அந்த பணியாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களுக்கு ESI மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் கிடையாது; பணி பாதுகாப்பும் இல்லை; பணி நிரந்தரமும் இல்லை. ஆனால், மாநில அளவில் – மாவட்ட அளவில் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் கொள்ளையோ கொள்ளை என்று டாஸ்மாக் மூலமாகக் கொள்ளை அடிக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களோ ஈவிரக்கமின்றி சுரண்டப்படுகிறார்கள்.
24) டாஸ்மாக் பார்கள் வெளிப்படையாக Online Tender விடப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் BOX Tender மூலமாக பினாமிகளின் பெயர்களிலேயே பார்கள் டெண்டர் எடுக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான பார்கள் கரூர், பெங்களூரைச் சார்ந்தவர்களின் பெயரிலும்; பெரம்பலூரில் இருக்கக்கூடிய பார்கள் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்களின் பெயரிலும் டெண்டர் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பல பார்கள் பெண்கள் பெயரிலும் உரிமம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பார் உரிமையாளர்களுடைய பெயர்கள், விலாசங்கள் என அனைத்தும் போலியாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ”ராஜேந்திரன், சிம்மக்கல், மதுரை” என்று மட்டுமே தகவல்கள் இருக்கிறது. அது போன்ற ஒரு விலாசத்தை வைத்து எவராலும் மதுரையில் அவரை கண்டுபிடிக்க முடியாது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டெண்டர் மோசடியை விசாரிக்க தனி ஆணையத்தையே நியமிக்க வேண்டும் என இன்றுள்ள அனைத்து பார்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.
25) அபரிமிதமான மது விற்பனை உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி 24 மணி நேரமும் சட்டவிரோத மதுக்கூடங்களில் மது விற்பனை வியாபித்து இருப்பதால் பெரும்பாலான தமிழ் மக்கள் இம்மதுப் பழக்கத்திற்கு ஆளாகி, தங்கள் உடல் நலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்து வருகிறார்கள். தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற ஐயமே அனைவரிடத்திலும் எழுகிறது. கோடிக்கணக்கான தமிழ் மக்களுடைய உழைப்புகளை சட்டப்பூர்வமாக அரசு சுரண்டியும், சட்ட விரோதமாக ஒரு மிகப்பெரிய கும்பல் ஒன்று ரூபாய் 1 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்து, தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தையும் சீரழிக்கிறார்கள்.
26) தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செந்தில் பாலாஜி என்ற அமைச்சரின் கீழ் இருக்கிறது. அவரது துறையில் நடக்கும் இது போன்ற எண்ணற்ற முறைகேடுகள் அவரின் கவனத்திற்கு வராமலோ, அவருக்கும் இதில் பங்கு இல்லாமலோ நடக்க வாய்ப்பே இல்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் கொள்முதல் முதல் விற்பனை வரை ஊரெங்கும் வீதியெங்கும் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஊழலுக்கு செந்தில் பாலாஜி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். இன்றைய அரசும் தாங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒரு பக்கம் தரமற்ற மூன்றாம் தர மதுக்களை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறார்கள். மறு பக்கம் ஆண்டொன்றுக்கு ரூ 1½ லட்சம் கோடி முதல் ரூ 2 லட்சம் கோடி வரையிலும் விற்பனையாகும் மதுவின் மூலம் தமிழக மக்களுடைய பொருளாதாரம் சுரண்டப்படுகிறது. மக்களிடமிருந்து சுரண்டப்படுகிற அப்பணத்தினையும் பல்வேறு முறைகேடுகள் செய்து ரூபாய் 1 லட்சம் கோடிக்கும் குறைவில்லாமல் முதல்வர் குடும்பம், ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களாக விளங்கக்கூடிய திமுகவின் முன்னணி தலைவர்கள், உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், ஆளும் கட்சியின் அனைத்து உயர் மட்ட பிரிவினர் என பலரும் பயன் அடைவதோடு மட்டுமின்றி, தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தைச் சுரண்டவும், அழிக்கவும் செய்கிறார்கள்.
1937 ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜி அவர்கள் மதுவால் ஏற்படும் தீங்குகளை அறிந்து பூரண மதுவிலக்கை சேலத்தில் முதல்முறையாக அமல்படுத்தினார். மதுவால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் இப்பொழுது 86 வருடம் கழித்தும் பூரண மதுவிலக்கு நிழலாகவே இருக்கிறது; நிஜமாகவில்லை; எட்டாக் கனியாகவும் தேர்தல் வாக்குறுதிகளாகவும் மட்டுமே இருக்கிறது.
எனவே, மேதகு ஆளுநர் அவர்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியும் முறைகேடாக பணம் சம்பாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர், முதல்வர் குடும்பத்தினர் மற்றும் மதுவிலக்கு துறைச் சார்ந்த செயலாளர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு!
பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும் என்று மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு:
மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஸ்த்ரீ ரத்னா’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியின்ஓய்வு பெற்ற மூத்த மேலாளர் திருப்பதி, தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல சங்க மாவட்டத் தலைவர் பூபதி,ஆதவன் முன்னிலை வகித்தனர்.
இயற்கை விவசாயம், மருத்துவம், ஆராய்ச்சி, சமையல் கலை, கல்வி, தொழில் முனைவோர், பொதுநலம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்புற விளங்கிய பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். சாதனைப் பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஸ்திரீ ரத்னா விருது, கேடயம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணத்தின் போது, அனைத்தையும் விட்டு விட்டு கணவனை மட்டும் ஏற்றுக் கொண்டு வரும் பெண்ணிடம் மிகுந்த அன்பைக் காட்ட வேண்டும்.
முடிந்தவரை அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆனால், நாம் யாரும் பாராட்டுவதே இல்லை. தாய்மை என்பதே மகத்தான விஷயம். தாய்மை என்ற நிலை வரும் போது ஒரு மான் கூட, சிங்கத்தை எதிர்க்கும்.
இந்திய குடும்ப வாழ்க்கை மகத்தானது. நம் நாடு போல, வேறெங்கும் இல்லை. குடும்ப நிலையையும் உயர்த்தி கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கும் ஒரே நாடு இந்தியா தான். குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் பெண்களை நாம் போற்ற வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.
விழா ஏற்பாடுகளை, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
கற்றுக் கொள்வது என்பது ஒரு தொடர்ந்து வரும் செயல்முறையாகும். கற்பது என்பதோ ஒரு கசப்பான செயல்முறையாய் இருந்தாலும் அது கொடுக்கும் பலனோ மிகுதியானது.
என்னுடைய பெற்றோர் எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதற்கு ஊக்கமளித்தும் பல நல்ல புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தியும் உள்ளனர். என்னுடைய முதல் வரிகளான ‘ கல்லூரி நந்தவனத்தில்’ என என் மூன்றாம் வருட கல்லூரி நாட்களில் என் துறையில் சேர இருந்த முதலாம் வருட மாணவிகளுக்காக நான் எழுதியதை அனைவரும் ரசித்தனர். என்னுடைய திருமணத்திற்கு பின்னர், மராட்டி மண்ணானது எனது எழுத்துக்கு பலமான வேர்களை அடித்தளமாய் தந்தது. அதனால், நானும் தமிழில், ஆங்கிலத்தில், ஹிந்தியில், மராட்டியில் என் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுத ஆரம்பித்தேன். சுமார் 17 வருடங்களுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் ஆச்சார்ய வினோபா பாவே அவர்களது ‘கர்மபூமியாய்’ கருதப்படும் வர்தாவில் அச்சு ஊடகத்தில் சேர்ந்தேன். என்னுடைய அலுவலகத்தில் இருந்தவர்களின் உதவியால் என்னால் என்னுடைய பணியினை திறம்பட செய்ய முடிந்தது. என்னுடைய பணியில் நான் சந்தித்த பல பெண்களின் வார்த்தைகளில் இருந்த தைரியம், வாழ்வியல் நெறிகளால் எனக்கு ஏற்பட்ட, என்னுள் ஏற்பட்ட நேர்மறை தாக்கத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டுரையின் சாரமாகிறது.
மராட்டிய பெண்மணி பத்ம ஸ்ரீ விருது பெற்ற மறைந்த சிந்துதாயி சப்கால், 1,000க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளின் தாய் என அழைக்கப்பட்டவரின் ஒரு நிகழ்ச்சியில் நான் குறிப்பெடுக்கும் போது அவர் பெண்களின் திடமான மனதினைப் பற்றி பற்பல உதாரணங்களுடன் விளக்கியதோடு பெண்களே நம் கலாச்சாரத்தை காக்கும் தூண்கள் என்று விவரித்தார். ( அவர் உரையினால் பெண்களின் சக்தியை என்னால் உணர முடிந்தது)
பத்ம விபூஷண விருதுக்கு சொந்தக்காரரான நம் தமிழ்நாட்டின் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், வர்தாவில் உள்ள மஹாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் இண்டஸ்ட்ரியில் நடந்த நிகழ்ச்சியின் நடுவில் பத்திரிக்கையாளராய் நான் அவரை சந்தித்த போது அவர், ஆச்சார்ய வினோபா பாவேவுடன் ‘பூதான்’ இயக்கத்தில் தான் 14 வருடங்கள் ஈடுபட்டதை நினைவு கூர்ந்தார். மனிதர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால் மரத்தையும், காகிதங்களையும் தான் உண்ண வேண்டும், என்றார். ( ஒரு விடுதலை போராட்ட தலைவியின் சுற்றுச்சூழலைப் பற்றிய அவருக்கு இருந்த கவலையை எனக்கு உணர்த்தியது.)
இப்போது, நான் அறிமுகப்படுத்த இருப்பவர் கௌசல்யா லடி, அப்போதைய துல்ஜாபூர் (வர்தா மாவட்டத்தில்) பஞ்சாயத்தின் ‘சர்பஞ்ச்’. அவருடனான என் கலந்துரையாடலின் போது கிராம குழந்தைகளின் படிப்பிற்காக அவ்வூர் பெற்றோர்களை தயார்படுத்தியதையும், கிராம மக்களுக்காக ஆரோக்கிய காப்பீடு திட்டம் கொண்டு வந்ததையும், கிராமத்தில் ஆண்கள் ஒரு கடன் வாங்குவது இருந்தாலோ அதற்கு வீட்டில் உள்ள பெண்களிடம் இருந்து அனுமதி பெற்றே ஆகவேண்டும் என்ற பல வரைமுறைகளை தான் வகுத்ததை என்னுடன் பகிர்ந்து கொண்டார். தன் கிராமத்தில் பெண்களின் மேம்பாட்டிற்கான உறுதியான திட்டங்களை கொண்டு வந்ததை “எனக்கு மகிழ்ச்சியை அளித்த விஷயம்,” என்றார் அவர். ( கிராமிய பெண்ணின் மனபலம் தானே அது.)
வர்தாவின் விடுதலை வீராங்கனை ரமாபென் ரூயாவுடம் ஹைதரபாத்தில் இருந்து செயல்படும் ஒரு தேசிய நிறுவனத்திற்காக நான் பேட்டி எடுத்தபோது விடுதலை இயக்கத்தில் அவர் பங்கு கொண்டதையும், வர்தாவில் ‘மஹிளா ஆஷ்ரமம்’ போன்ற பல காந்திய அமைப்புகள் நிறுவப்பட்டதையும் கூறினார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மக்கள் மிக மகிழ்ச்சியாய் இருந்ததாகவும், தேசியக் கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றியதையும், மக்கள் தாய் மண்ணை முத்தமிட்டதையும், மராட்டியில் நாட்டுப்பற்று பாடல்களை பாடியதையும் அவர் விளக்கி சிலாகித்தார். நம் நாடு சுதந்திரம் அடைந்த அன்று அவர் பாடிய ஒரு பாடலின் இரு வரிகளை அவர் கைப்பட ஒரு காகிதத்தில் எனக்கு எழுதி தந்தார். ( அவரின் ஞாபக சக்தியும், அவரின் நினைவலைகளை விளக்கிய விதத்தாலும் நான் கவரப்பட்டேன்.)
ஒரு அச்சு ஊடகத்திற்காக சந்தாலி மொழி எழுத்தாளரும், கவிதாயினியுமான ஜோபா முர்மு அவர்களை சந்தித்தேன். அவருக்கு இந்திய மொழிகளில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்களது இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்ற தன் அவாவை அவர் வெளிப்படுத்தினார். நம் நாட்டு எழுத்தாளர்கள் அவர்களது பகுதியில் உள்ள பழங்குடி இலக்கியங்களை வெளிக்கொணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ( நம் நாட்டின் களஞ்சியங்களில் ஒன்றான பழங்குடி இலக்கியங்களை பற்றிய அவரது ஈடுபாடு எனக்கு தெரிந்தது.)
பதினெட்டு மொழிகளை அறிந்த முனைவர் குமுத் பாலா தன்னுடைய காவிய காமுதி பன்னாட்டு பன்மொழி புலவர்கள் குழாமின் மூலமாக ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளை அனைவருக்கும் அவர் அறிமுகப்படுத்தும் பணியை விவரிக்கும் ஒரு சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. ( அவரின் மொழிகளைப் பற்றிய தொலைநோக்கு பார்வையை கண்டறிய முடிந்தது.)
மஹாராஷ்டிராவின் நாந்தேட் நகரில் இருக்கும் மாற்றுத்திறனாளியான கோதாவரி ஜங்கில்வாட் (கோலக் கலைஞர்)யின் மனதிடத்தை அவரை ஒரு நேர்முக கானலில் பேட்டியெடுக்கும் போது புரிந்தது. “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனித்திறமையையும் அவர்களின் கலையார்வத்தையும் உற்சாகப்படுத்த வேண்டும்,” என்றார் அவர். தன்னாலான சமூக உதவிகளை தேவையானவர்களுக்கு செய்யும் அவர், தன் சமூக ஊடக பக்கங்களில் அவர் ‘இந்த வாழ்க்கை மிக அழகானது’ என்ற வாசகத்தையே வைத்துள்ளார். (அவருடைய நேர்மறை வாழ்வியல் முறையை எனக்கு ஒரு வாழ்க்கைப் பாடமானது.)
நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் மியூசிக் கார்டனின் பரிதாபமான நிலையை படத்துடன் ஒரு ரிப்போர்ட்டாக நான் பணிபுரிந்த நாளிதழில் பதிவு செய்தேன். அந்த ரிப்போர் 2019 – ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அன்று அந்த நாளிதழில் வெளியானது. ( லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள் என் இந்த முயற்சியை அப்போது பாராட்டினார்கள்.)
இவ்வாறு, என்னுடைய பேனாவின் பாதை இன்னும் சில ஊக்கம் அளிக்கக்கூடிய விஷயங்களை கடந்து சென்றுள்ளது. வாசகர்களின் ஆதரவோடு என் பேனாவின் பாதை தொடரும், பல மைல்கள் இன்னும் அதன் முன்னே – என்ற ஒரே நம்பிக்கையோடு.
எப்படி நீட்-டை தடுப்போம் என ஏதும் செய்ய முடியவில்லையோ, நீட் மக்களைச் சென்றடைந்ததோ, மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல மும்மொழிக் கொள்கைத் திட்டமும் மக்களைச் சென்றடையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் – என, உசிலம்பட்டியில் பாஜக செயற்குழு உறுப்பினர் ரவிபாலா செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரில் பாஜக சார்பில் மொம்மொழி கொள்கை குறித்தும் அதனை ஆதரிப்பது குறித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பாஜக தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளருமான ரவிபாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரவிபாலாம் எப்படி நீட்-டைத் தடுப்போம் என சொல்லிக் கொண்டு அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லையோ, மக்களை சென்றடைந்ததோ, மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல இந்த திட்டமும் மக்களை சென்றடையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் இன்னும் 10 ஆண்டுகளில் அதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.
அதற்கு பின் திமுக இந்த திட்டத்திலும் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள், கருணாநிதி, ஸ்டாலின், அண்ணா படம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.,மொம்மொழி கொள்கையை இந்த மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எங்களது முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை திமுகவினர் கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனத்தை தெரிய படுத்திக் கொள்கிறோம். இந்தக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு வீடாக சென்று கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளோம்.,
40 ஆண்டுகளுக்கு முன் நடத்தியது போல திமுக அரசின் கபட நாடகம் அரங்கேற முடியாது. அனைத்து கட்சி கூட்டம் நடத்தி மும்மொழி கொள்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது குறித்த கேள்விக்கு
திமுகவிற்கு அரசை தக்க வைக்க முடியுமா என்ற பயம் வந்துவிட்டது, ஒன்று மத்திய அரசிடமிருந்து, இன்னொன்று மக்களிடமிருந்து, இவர்கள் செய்யும் செயல்கள் வெட்ட வெளிச்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
அதனால் நாளைக்கே கூட ஏதாவது கூட்டம் நடத்துவார்கள், ஏற்கனவே பாராளுமன்ற தொகுதியை குறைக்க போகிறார்கள் புலிக்கு பயந்தவர்கள் என்மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்பதை போல இதை தான் மற்ற கட்சிகளோடு கூட்டம்., நிச்சயமாக மக்கள் தொகை அதிகமாக இருந்தால் குறைந்தது 25% மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்.,
மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கை என்பதை காட்டி காட்டி மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை இந்த அரசாங்கம் செய்து வருகிறது.
மத்திய அரசின் வரி 9%, மாநில அரசின் வரி 9% கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த நிதியை விட அதிகமாக தான் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கொடுத்துள்ளது., கொடுக்கவில்லை கொடுக்கவில்லை என்று சொல்வதை விடுத்து விவாதத்திற்கு திமுகவை வர சொல்லுங்கள் என எங்கள் மாநிலத் தலைவர் அண்ணமலை கேட்டு வருகிறார்.
தமிழ் நம் தாய்மொழி, ஆங்கிலம் இரண்டாவது மொழி அமெரிக்காவிலேயே ஆட்சியை பிடிக்கும் அளவு வளர்ந்துவிட்டோம், மூன்றாவதாக ஸ்டாலின் அவர்களின் தாய்மொழி தெலுங்கை படிக்க சொல்லுங்க, இந்தியை மட்டும் தான் படிக்க சொல்கிறோம் என சொல்வது வதந்தி., 40 வருடத்திற்கு முன் ஏமாற்றியது போல இன்று எங்களை ஏமாற்ற முடியாது.
பிரான்சு, ஜெர்மன் மொழி வேண்டும் என்றால் ஜெர்மன் மொழி வேண்டும் என போராடுங்க இந்திய மொழியை மட்டும் சொல்லாதீங்க உலக மொழியையும் 10 யை சேருங்க என கேட்கலாம்.
தமிழ்நாடு மக்கள் மேதாவி நாங்கள் இந்திய மொழி மட்டும் வேண்டாம் உலக மொழியையும் சேருங்கள் என நாம் கேட்க வேண்டும்.
சாதாரண பாமரனிடம் சொன்னால் கூட நாடாளுமன்ற கட்டிடமே இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை விட அதிகமாக தான் கட்டி வைத்துள்ளோம், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்.
குறையும் என நம்பி கூட்டணியில் அந்த பக்கம் போய்டுவான், இந்த பக்கம் போய்ருவானானு சொல்லும் போது மத்திய அரசு பாஜக தமிழ்நாட்டுக்குள் ஏதாவது சொல்லி உள்ளே வந்திருமானு பயந்து எல்லாக் கட்சியும் காலையில் எழும் போதெல்லாம் செக் செய்யும் வேலையை ஸ்டாலின் செய்து வருகிறார்.
நாளைக்கே ஏதாவது அறிக்கை கொடுத்தால் ஏதாவது கட்சி வரவில்லை என்றால் கூட்டணியில் இல்லை என கணக்கெடுத்து வருவதற்காக ஒரு கூட்டத்தை நடத்துவதை பற்றி பாஜக விளக்கம் கொடுக்க தேவையில்லை.