Home Blog Page 118

2026ல் தொகுதி மறுசீரமைப்பின் அவசியம்!

write thoughts - 2026
#image_title

விஜயகுமார் அருணகிரி

2026 ல் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ் நாட்டை விட வட மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றவுடன் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கொதித்து மத்திய அரசிற்கு எதிராக
மல்லுக்கு நிற்கிறார்கள்.

இதே மாதிரி தான் இப்பொழுது வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் நம்மை விட குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்திற்கு அதிக லோக்சபா தொகுதிகளா? என்று பிஜேபி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இப்பொழுது பாராளுமன்றத்தில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளும் 1971 ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது 2026 மக்கள் தொகை
அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு அமைய இருக்கிறது.

இதனை தான் தமிழக அரசியல்
கட்சிகள் எதிர்த்து வருகின்றன
1971 ல் உள்ள மக்கள் தொகை
அடிப்படையிலேயே இப்பொழுது உள்ள தொகுதிகள் அளவில்தான் இருக்க வேண்டும் என்கின்றன.

தமிழகத்தில் 1971 ல் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 15
ஆகும். இப்பொழுது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகும். மக்கள் தொகை அதிகரிப்பால் நிர்வாக வசதிக்காக 1971ல் இருந்து 2025 வரை 23 புதிய மாவட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்.

ஆனால் மத்திய அரசு மக்கள்தொகை அதிகரிப்பால் மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் இது தப்பு கூடாது 1971 ல் உருவாக்கிய படி தான் லோக்சபா தொகுதிகள் இருக்க
வேண்டும் என்று நியாயம் பேசுகிறார்கள்.

இப்பொழுது தமிழகம் சுமார் 7•70 கோடி மக்கள்தொகையைக் கொண்டு இருக்கிறது. இந்த வருடத்தின் முடிவில் சுமார் 8 கோடியை தாண்டி இருக்கும்.

ஆனால் பீகார் 2025 ம் ஆண்டின்
முடிவில் சுமார் 14 கோடி மக்கள்தொகையை வைத்து இருக்கும்.
அதாவது தமிழக மக்கள் தொகையை விட இன்னொரு மடங்கு மக்கள் தொகையை பீகார் வைத்து இருக்கிறது.

இருந்தாலும் தமிழகத்திற்கு 39
லோக்சபா தொகுதிகள் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையை கொண்ட பீகார்க்கு 40 லோக்சபா தொகுதிகள்.
இதுவா உண்மையான அரசியல் அமைப்பின் அடையாளம்?

மத்திய பிரதேசத்தின் மக்கள்தொகை இந்த வருடத்தின் முடிவில் சுமார் 9 கோடியாக இருக்கும். இப்பொழுதே மத்திய பிரதேசத்தின் மக்கள் தொகை தமிழ் நாட்டை விட சுமார் 1 கோடி அதிகமாக இருக்கிறது.

ஆனால் மத்திய பிரதேசத்திற்கு தமிழகத்தை விட 10 லோக்சபா தொகுதிகள் குறைவாக 29 ஆக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது 8•5 கோடியை தாண்டி விட்டது அதாவது தமிழகத்தை விடஅதிகமாக இருக்கிறது.

ஆனால் தமிழகத்தை விட 14 லோக்சபா தொகுதிகள் ராஜஸ்தானுக்கு குறைவாக இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் மக்கள்தொகை இப்பொழுது சுமார்7•5 கோடிகளாகி விட்டது. கிட்டத்தட் ட தமிழகத்தில் உள்ள மக்கள்தொகை மாதிரி தான் குஜராத்தும் இருக்கிறது.

ஆனால் அங்கு 26 லோக்சபா தொகுதிகள் தான். அதாவது தமிழகத்தை விட 13 லோக்சபா
தொகுதிகள் குறைவாக இருக்கிறது. இதுவா உண்மையான மக்கள் ஆட்சியின் அடையாளம்? நிச்சயமாக இல்லை.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இந்த வருட முடிவில் சுமார் 25 கோடியாக இருக்கும். அதாவது தமி ழகத்தை விட சுமார் 3 மடங்கு மக்கள் தொகை உடைய உத்தர பிரதேசத்தில் இப்பொழுது 80 லோக்சபா தொகுதிகள் தான் இருக்கிறது.

அதாவது தமிழகத்தை விட 2 மடங்கு தொகுதிகள் தான் அதிகமாக இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது சுமார் 4•2 கோடி இருக்கும். அதாவது தமிழகத்தின் மக்கள் தொகையை விட பாதிக்கும்மேல் இருக்கிறது.ஆனால் ஜார்கண்டில் 14 தொகுதிகள் தான்
இருக்கிறது.

ஹரியானா மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது சுமார்
3•2 கோடி . கிட்டதட்ட தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு சிறிது குறைவு அவ்வளவு தான். ஆனால் லோக்சபா தொகுதிகள் 10 தான்.

மகாராஷ்டிராவின் மக்கள் தொகை இப்பொழுது சுமார் 13•5 கோடியாகும். இது தமிழகத்தைவிட சுமார் 1 மடங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. அங்கு 48 லோக்சபா தொகுதிகள் தான். அதாவது தமிழகத்தை விட 11 தொகுதிகள் தான் அதிகம்.

மேற்கு வங்காளத்தில் 2025 முடிவில் சுமார் 10-6 கோடி மக்கள்தொகை இருக்கும் . மேற்கு வங்காளத்தில் 42 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது. அதாவது தமிழகத்தை விட சுமார் 2-5 கோடி மக்கள் அதிகமாக உள்ள மேற்கு
வங்காளத்திற்கு தமிழகத்தைவிட 3 லோக்சபா தொகுதிகள்தான் அதிகம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 4 கோடியாகும்
ஆனால் அங்கு உள்ள லோக்சபா தொகுதிகள் 14 தான். அதாவது தமிழகத்தை விட பாதி அளவில் மக்கள் தொகை உள்ள அஸ்ஸாமிற்கு தமிழகத்தின் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை படி பார்த்தால் குறைந்தது 19 தொகுதிகள் வரை இருக்க வேண்டும்.

ஒடிசா மாநிலத்தின் மக்கள் தொகை இப்பொழுது சுமார் 5 கோடியாகும். தமிழகத்தை போன்று முக்கால் மடங்கு மக்கள் தொகை உடைய ஒடிசாவில் இப்பொழுது 21 தொகுதிகள்தான் இருக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ள மாநிலங்களில் எங்களுக்கு ஏன் இது வரை குறைவான லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன என்று மத்திய அரசிற்கு எதிராக
போராடவில்லை. ஏன் என்றால்
அந்த மாநிலங்கள் தொகுதி மறு
சீரமைப்பு வரும் பொழுது தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று காத்து இருக்கின்றன.

மக்கள் தொகையின் உயர்விற்கு ஏற்ப ஒரு மாநிலத்தின் லோக்சபா தொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும். அதன் எல்லைகள் மாற்றப்பட வேண்டும். இதற்குதான் தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் என்று இந்தியாவில் ஒரு தனி அமைப்பு இருக்கிறது.

இந்த அமைப்பின் பரிந்துரையின் படி 2026 ல் இந்தியாவில் உளள மக்கள் தொகையின் அடிப்படையில் லோக்சபா தொகுதிகள் உயர இருக்கிறது. இது வரை உள்ள 543 லோக்சபா தொகுதிகள் இனி இருக்காது. அது நிச்சயமாக 800 ஐ தாண்டி இருக்கும்

பீகாரில் குறைந்தது 70 லோக்சபா தொகுதிகள் இருக்கும். இதே
மாதிரி வட இந்திய மாநிலங்கள்
அனைத்தும் அதிகமான லோக்சபா தொகுதிகளை பெற இருக்கிறது. 2026ல் தொகுதி மறு சீரமைப்பு ஆணையத்தின் அறிவுரைப்படி லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

எந்த ஒரு மாநிலத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது தமிழகத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது.தமிழகத்தில் 7-10 தொகுதிகள் வரை அதிகரிக்க இருக்கிறது.

ஆனால் மற்ற வட மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எணிக்கை மிக அதிகமாகி விடும்.
உத்தரபிரதேசம்-63 பீகார்-39 மகாராஷ்டிரா-28 ராஜஸ்தான் -25
மத்திய பிரதேசம்-23 மேற்கு வங்காளம்-18 குஜராத்-17 ஜார்கண்ட்
-10 ஹரியானா-8 சட்டிஸ்கர்-8 ஒடிசா-8 என்று வட மாநிலங்களில் இருந்து
சுமார் 250+ தொகுதிகள் அதிகமாக இருக்கிறது.

1971 ல் இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 55 கோடியாக இருந்தது.அதன்படி 543 லோக்சபா தொகுதிகள் உருவானது. இப்பொழுது சுமார் 146 கோடியாகும். இப்பொழுதும் அதே 543
தொகுதிகள் தான் இருக்க வேண்டும் அது தான் சரியானது என்று கூறினால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை.

.

மும்மொழிக் கொள்கை: திமுக., பழனிவேல் தியாகராஜனின் கேள்விகள் அபாரமா? அபத்தமா?

write thoughts - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

பழனிவேல் தியாகராஜன் ஒரு முக்கியத் தமிழக அமைச்சர். பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த யூ-டியூப் பேட்டியில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தார், எதிர்த்துக் கேட்டார். அதை X தளத்தில் மெச்சிப் பகிர்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.

மும்மொழிக் கொள்கை என்பது, மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்ய விரும்புகிறது மத்திய அரசு. தமிழகத்தில் மாநில அரசு எதிர்க்கிறது.

மும்மொழிக் கொள்கையின் படி, நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை, முடிந்தால் எட்டாம் வகுப்பு வரை, முக்கியப் பிரதேச மொழி தான் பயிற்று மொழியாக இருக்கும். தமிழ்நாடு என்றால், தமிழ். ஆங்கிலப் பாடமும் கட்டாயம். தவிர, மாணவர்கள் தங்களின் விருப்பப்படி வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை ஒரு பாடமாகப் பயில்வார்கள்.

சரி, பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளரிடம் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து என்ன பேசினார்? அதிலென்ன சாரம், அதிலென்ன லாஜிக்? அவர் பேசியதின் ஒரு முக்கியப் பகுதி இது:

“இருமொழிக் கொள்கை மூலம்தான் தமிழகம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை. உத்தரப் பிரதேசம், பீஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்? எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழி தெரியும்?”

ஒரு தேசத்தின் அல்லது பிரதேசத்தின் மக்களுக்குக் கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதிகமாக அல்லது குறைவாகக் கிடைத்திருக்கச் சில காரணங்கள் இருக்கும். அதனால் உ. பி மாநிலத்தை விட, பீஹார் மாநிலத்தை விட, தமிழகம் அதிகளவு வளர்ச்சி பெற்றிருக்கலாம். தமிழகத்திற்குள் ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களை விட கோயம்பத்தூர் அதிக வளர்ச்சி கண்டிருக்கலாம். இதற்கெல்லாம் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை காரணமல்ல என்பது அமைச்சருக்குப் புரியுமா? புரியாவிட்டால் அவருக்கு இப்படிச் சொல்லி விளக்கலாம்.

ஜப்பான் மொழியால்தான் ஜப்பான் வளர்ச்சி அடைந்தது, ஹீப்ரு மொழியால்தான் இஸ்ரேல் வளர்ச்சி அடைந்தது என்றும் சொல்லலாமா? ஒரு மக்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில் சிந்தனை, அவர்களின் அரசியல் தலைமை எல்லாம் சேர்ந்தல்லவா அவர்களின் வளர்ச்சிக்கு வழி காட்டும்? தமிழகத்தில் அதற்கு வலுவான அடித்தளம் இட்டது திமுக-வுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியல்லவா?

இன்னொன்று. தேசிய கல்விக் கொள்கை இப்போதுதான் சில மாநிலங்களில் ஆரம்ப நிலையில் அமல் ஆகி வருகிறது. அதைப் பூரணமாக அமல் செய்து அந்த மாநிலங்களில் மூன்றாவது இந்திய மொழியையும் பரவலாகப் பயிற்றுவிக்க, அதன் பலன்கள் தெரிய, வருடங்கள் ஆகும். இந்த நிலையில், “உ. பி, பீஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்?” என்று பழனிவேல் தியாகராஜன் கேட்டதன் லாஜிக், அவரும் முதல்வரும் மட்டும் அறிந்த ரகசியம்.

அடுத்ததாக, வட மாநிலத்து மாணவர்களில் “எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் தெரியும்?” என்றும் கேட்கிறார் அமைச்சர். அதாவது, “தமிழக மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு உ.பி, பீஹார் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது. ஹெ ஹே!” என்கிற தொனியில் பேசியிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

உ. பி மற்றும் பீஹார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்றால் அது இருக்கட்டும், அது கவனிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதய தமிழக மாணவர்களுக்கு – பன்னிரண்டு கிளாஸ் படித்தவர்களுக்கும் – தமிழே முறையாகப் பேசவும் எழுதவும் தெரிகிறதா? பலர் கோர்வையாகக் கூடத் தமிழ் பேசுவதில்லையே? முதலுக்கே இங்கு மோசமாக இருக்கிறதே?

1967-ல் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தின் பள்ளிகளில், அதுவும் அரசுப் பள்ளிகளில், படித்த மாணவர்களின் தமிழறிவு குறைந்துகொண்டே வருகிறது. இதை நினைத்து வருத்தப் படாமல் உ. பி, பீஹார் மாணவர்களின் ஆங்கில அறிவைப் பற்றி அங்கலாயப்பதில் என்ன பயன்? அதிலும் கூட, தற்காலத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்களின் ஆங்கில மொழியறிவு எப்படி இருக்கிறதாம்? ஆங்கிலப் பாடத்தில் ஒரு பீஹார் மாணவன் நூற்றுக்கு இருபது மார்க் வாங்குகிறான், தமிழக மாணவன் சிறப்பாக இருபத்தி ஐந்து மார்க் வாங்குகிறான் என்று தம்பட்டம் அடிக்கிறாரா பழனிவேல் தியாகராஜன்?

தேசிய கல்விக் கொள்கை நாட்டில் பெரிதும் அமலானால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துதான் ஆகும். அதற்கான கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது அந்தக் கொள்கை. அப்போது அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்க முன் வருவார்கள். அதன் விளைவாக, மூன்றாவது மொழியை இப்போதும் கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் திமுக தலைவர்களின் கொழுத்த கல்வி வியாபாரம் அடி வாங்கும். அது அவர்களின் கவலை.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறையானால், சாதாரண மக்களின் பிள்ளைகளின் கவனம் கல்வியில் பிடித்து வைக்கப்படும் – முக்கியமாக இது அரசுப் பள்ளிகளில் நிகழும். அதோடு இன்னொரு இந்திய மொழியையும் அவர்கள் கற்றால் தங்களின் கல்வி, சுய அபிவிருத்தி, தமிழகம் தாண்டியும் வேலை என்று அவர்கள் முனைப்பாக இருப்பார்கள். அது நடந்தால், தமிழக மக்களின் அறியாமையை, எதற்கும் அரசை நோக்கிக் கையேந்தி நிற்கும் நிலையை மூலதனமாக்கி இப்போது ராஜாங்கம் நடத்தும் அரசியல் தலைவர்களின் நஷ்டங்கள் சொல்லி மாளாதே?

59 வயதாகும் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். அவர் பேட்டியளித்ததும் ஆங்கிலத்தில். இளமையில் படிப்பு, வேலை என்று அமெரிக்காவில் இருபது வருடங்கள் வாழ்ந்தவர். அப்படி இருந்ததால், அவர் தமிழ் மிகக் சரளமாகப் பேசுபவர் அல்ல. ஆங்கிலம் படித்து அவர் அமெரிக்கா போய் மேற்படிப்பு முடித்து நிறைய சம்பாதிக்கலாம், சற்றுத் தடுமாறித் தமிழ் பேசிக் கொள்ளலாம், ஆனால் வேறு இந்திய மொழியை அரசுப் பள்ளியில் ஒரு தமிழக மாணவர் எளிதாகப் படித்து வேறு மாநிலத்தில் எளிதாக ஒரு நல்ல வேலைக்குப் போகக் கூடாதா?

தமிழ் 2,000 ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையானது. இன்றுவரை அது நம்மிடையே வழக்கு மொழியாக நீடித்திருக்க ஒரு முக்கிய காரணம் அதன் அபரித அழகும் செறிவும். அதாவது, ஒருவர் நேராகக் கைகால் வீசி நடப்பது போல் மட்டும் இல்லாமல், ஒரு நாட்டிய மங்கையின் வசீகர அசைவுகளையும் நகர்வுகளையும் தனது சொற்பிரயோகத்தில் ஏற்றி நம்மை மகிழ்விப்பது தமிழ். அதோடு, தமிழ் மொழியின் அந்த அழகையும் செறிவையும் ரசிக்கத் தெரிந்த மக்களாகத் தமிழர்கள் தொடர்ந்து வந்ததும் தமிழை நம்மிடையே இன்றுவரை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது.

தமிழ் மக்களின் தமிழார்வத்தைத் திமுக உளமாறப் பேணுவதில்லை, 1967-ல் இருந்து. தமிழ்நாட்டில் தமிழின் அழகையும் செறிவையும் கற்றறிந்து கொண்டாடுபவர்களின் ஆர்வம் குறைந்து வருவதற்குத் திமுக-வும் ஒரு காரணம். முறைகேடான அரசு நிர்வாகத்தை நிலைநிறுத்தி, தமிழைத் தங்கள் அரசியல் வியாபாரத்துக்கான கடையாக மட்டும் உபயோகித்து வரும் திமுக என்ன சாதித்திருக்கிறது? பொதுவாழ்வில் தமிழர்கள் தரம் தாழவும் அதைத் தொடர்ந்து தமிழ் வாடவும் வகை செய்திருக்கிறார்கள் அதன் தலைவர்கள்.

தமிழகப் பள்ளிகளில் மூன்றாவது இந்திய மொழி ஒரு பாடமாக வருவது இருக்கட்டும். திமுக மாடல் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்தால், முதல் மொழி தமிழ் பிழைக்குமா, செழிக்குமா?

Author: R. Veera Raghavan Advocate, Chennai  
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

அழகர்கோவில் அருகே மகா பெரியவா கோவில் பூமி பூஜை!

mahaperiyavah temple boomi pooja in maduarai - 2026

மதுரை: ஆதரவற்றவர்களுக்கு செய்யும் சேவையில்தான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறார் – மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்ய தீபாநந்தா பேச்சு

ஆதரவற்றவர்களுக்கு செய்யும் சேவையில்தான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறார் என்று, மதுரை அழகர் கோவில் அருகே நடைபெற்ற காஞ்சி மகா பெரியவர் கோவில் பூமி பூஜை தொடக்க விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத் தலைவர் சுவாமி நித்ய தீபானந்தா பேசினார்.

மதுரை அழகர்கோவில் அருகே, பொய்கைக் கரைப்பட்டியில், ஸ்ரீமகா பெரியவா கோயில் கட்டுமான பணி பூமி பூஜை நடந்தது.
சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே, அரசுப் பள்ளிக்கு அடுத்துள்ள சிட்டி பால்ஸ் வளாகத்தில் இக்கோயில் அமைய இருக்கிறது.

காலை 9 மணி மணிக்கு, சிறப்பு ஹோமங்கள், ஆராதனைகள், மஹன்யாசம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன், ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் அதிபர் எம்.ஆர்.பிரபு, ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், மகா பெரியவா குரூப் சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத் தலைவர் சுவாமி ஸ்ரீ நித்ய தீபாநந்தா குத்துவிளக்கேற்றி திருப்பணியைத் தொடங்கி வைத்தார். அப்போது,
அவர் பேசியதாவது:

ஆதிசங்கரர் வைதீக தர்மத்தை நிலைநாட்ட பாரதத்தின் நான்கு திசைகளில் சிருங்கேரி, துவாரகை, பத்ரி, பூரி மடங்களை ஸ்தாபனம் செய்தார். பின், காஞ்சிபுரத்தில் மூலாம்னாய ஸ்ர்வ ஜன பீடம் அமைத்து அங்கே மகா சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த பரம்பரையில் வந்தவர் ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரசுவதி. அவர் பூத உடலில் இருக்கும் போதே நடமாடும் தெய்வமாகப் போற்றப்பட்டவர். அவர் நிகழ்த்திய உரையாடல்கள் தெய்வத்தின் குரல் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அவருக்கு தனிக்கோயில் எழுப்புவது மிக சிறந்த காரியமாகும்.

இதயத்தின் தூய்மையான அன்பில்தான் மதம் வாழ்கிறது. தீர்த்த தலங்கள் புனித பொருட்களாலும் மகான்களாலும் நிரம்பி இருக்கின்றன. மகான்கள் வாழ்கின்ற இடத்தில் கோயில் இல்லை என்றாலும் அவை
புனிதமானவை தான்.

எல்லா வழிபாடுகளும் உணர்த்துவது மனத்தூய்மையையும் பிறருக்கு நன்மை செய்வதையும் தான். சிலை வடிவங்களில் மட்டும் இறைவனை காண்பது, பக்தியின் ஆரம்ப நிலை. ஏழைகள், பலவீனமானவர்கள் நோயாளிகள் ஆதரவற்றவர்களிடத்தில் இறைவனை காண்பதே, உண்மையான இறைவனை காண்பது ஆகும். அப்படி உதவி செய்வதே, இறைவனுக்கு செய்யும் தொண்டு. அதில் தான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறார். இத்தகைய பணிகளை செய்து வருகிறது மதுரையின் அட்சய பாத்திரம்.

மக்கள் சேவை மகேசன் சேவையாக, மனிதரில் இறைவனை காணும் பணியை பல ஆண்டாக செய்து வரும் இவர்களது பணியும் முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியது. இந்த கோயிலோடு முதியோர் இல்லமும் அமையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”. – இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுதும் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், ஸ்ரீமகா பெரியவா புகைப்படம், அழகர்கோவில் தோசை பிரசாதம் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகள் செய்திருந்தார்.

வலுவான கூட்டணி அமைத்து திமுக.,வை வீழ்த்துவோம்: இராம. சீனிவாசன்!

madurai rama seenivasan - 2026

2026ல் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவோம் எங்களுக்கு எதிரி திமுக தான் என பேராசிரியர் இராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நகர த் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகுமாரை அறிமுகப்படுத்தும விழா மற்றும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து வீடு தோறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன்,மாநிலச் செயலாளர் எஸ்.சி.சூர்யா,மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நகரத் தலைவர் சசிகுமாரை வாழ்த்திய பின் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை பேராசிரியர் இராம. சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இராம. சீனிவாசன்
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் பாஜக தொடங்கியுள்ளது. திமுக, இதில் கபட நாடகமாடுகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்பது 500 பக்க ஆவணம் அதை திமுகவில் யாராவது முழுதாக வாசித்துள்ளார்களா?அதில் இரண்டு அல்லது மூன்று பக்கம் மொழிக் கொள்கையை பற்றி வருகிறது தேசிய கல்விக் கொள்கை என்பதாலும் ஏற்கனவே மும்மொழி பகுதியை பல மாநிலங்கள் ஏற்றுக்
கொண்டு நடைமுறைப்படுத்திய காரணத்தினாலும் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழி இருக்கலாம் என்று மோடி சொல்லி இருக்கிறார்.

இது எப்படி இந்தி திணிப்பாகும்.ஸ்டாலின் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இடத்தில் பிஜேபி நபர் இருந்தால் உத்தர பிரதேச முதல்வரை சந்தித்து மூன்றாவது மொழியாக தமிழை அறிமுகப்படுத்துங்கள் என்று கூறுவோம்.மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை தாண்டி தமிழை கொண்டுவர வலியுறுத்துவோம்

இதை விடுத்து விட்டு ஹிந்தியை கொண்டு வரக்கூடாது என்று கருத்து திணிப்பை வைத்து கபட நாடகம் ஆடுகிறார்.திமுக தூங்கவில்லை தூங்குவது போல் நடிக்கும் கட்சி அதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறிய குராம.சீனிவாசன் எந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு என்று பேசி இருக்கிறார்கள்.

அறிவிப்பதற்கு முன்பு புலி வருது,புலி வருது கதையை போல ஸ்டாலின் பயப்படுகிறார். இந்த விஷயத்தில், அனைத்துக் கட்சிகூட்டம் என்ற நாடகத்தை நடிப்பதால் நாங்கள் புறக்கணிக்கிறோம் என பேசினார்.

2026 ல் வலுவான கூட்டணி அமையும் என்றால், அதிமுகவுடன் கூட்டணி அமையுமா ? என்ற கேள்விக்குஉறுதியாக 2026 ல் வலுவான கூட்டணி அமையும் ஏனென்றால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சக்திகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் எண்ணத்திற்கு ஏற்றார் போல் அரசியல் கட்சிகள் முடிவு செய்யும். திமுக அரசு மேல் மக்களுக்கு கோபம் அதிர்ச்சி வந்த பிறகு கட்சிகள் மாறி முடிவெடுத்தால் மக்களுடைய கோபம் இவர்கள் பக்கம் திரும்பும். அதனால் நிச்சயமாக திமுகவிற்கு எதிரான சக்திகளை எல்லாம் ஓரணியில் திரளும் வலுவான கூட்டணி அமையும் திமுக ஆட்சிஅகற்றப்படும் என்று கூறினார்.

எங்களுக்கு எதிரி திமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து பதில் அளித்த இராம.சீனிவாசன் அரசியலில் அடிப்படை பாடம் என்னவென்றால் எதிரியை முதலில் தீர்மானிக்க வேண்டும் எங்களுக்கு எதிரி திமுக தான் என்பதில் எங்களுக்கு எப்போதுமே கருத்து மாறுபாடு வரவில்லை.அரசியல் ரீதியாக கொள்கை ரீதியாக எங்களுக்கு எதிரி திமுக தான்.அதை அகற்றுவது தான் எங்கள் வேலை. எடப்பாடியும் எங்கள் எதிரி திமுக தான் என்று கூறியதை பாஜக சார்பில் நான் வரவேற்கிறேன்.

அது நல்ல கருத்து தான் அதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். போகப் போக பார்க்கலாம் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது தெரியாது.
ஆனால் திமுக எதிர்ப்பு நிலையில் எப்போதும் பாஜக பின்வாங்காது.

மத்திய அரசின் மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு முக்கிய கவனம் செலுத்தி தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் டெல்லி தலைமையே குறியாக உள்ளது.இந்த முறை மத்திய, மாநிலதலைமைகள் கட்சிகள் பிரதமர் உட்பட தமிழகத்தில் திமுக ஆட்சி வருவதை அனுமதிக்க மாட்டோம்… என்றார்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் நயினார் பாலாஜி ஓ பி சி அணி மாநில செயலாளர் வெங்கடேஷ் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் மாவட்டப் பார்வையாளர் ராஜரத்தினம், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசிம்மன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஜூன் 22ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; இந்து முன்னணி அழைப்பு!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜூன் 22 ல் மதுரையில் மாபெரும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதற்கு அனைவரும் வர வேண்டும் என்றும் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

சங்க இலக்கியங்கள் வணங்கும் குறிஞ்சி நில தெய்வம், தமிழ் கடவுள் முருகப்பெருமானின் லட்சக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் முருக பக்தர்கள் மாநாடு நடத்திட இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் சதி செய்ததை நாம் நன்கு அறிவோம்.

இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் கடல் அரிப்பால் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை தடுக்க தமிழக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மூன்றாம் படை வீடான பழனிமலை பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு கூட தமிழகஅரசு தடை விதித்து வருகிறது.

இதுபோன்று முருகனின் அற்புத தலங்கள் பலவும் சீரழிந்து வருவது பற்றிய கவலை பக்தர்களிடம் எழுந்துள்ளது.

வேற்று மத பண்டிகைகளுக்கு தமிழக அரசு வாழ்த்து சொல்லும் நிலையில் தமிழ் தெய்வம் முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழாவிற்கு வாழ்த்து சொல்வதற்கு கூட தற்போதைய தமிழக அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் மனமில்லை.

இத்தகைய சூழ்நிலையில் நமது தர்மத்தை காக்க, நமது ஆலயங்களை காக்க, நமது பண்பாட்டை காக்க உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் ஒருங்கிணைந்திட வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகிறோம்.

இந்நிலையில்தான் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டை நடத்திட இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.

இதற்காக வீடுவீடாக சென்று முருகபக்தர்களை அழைப்பதற்கும் முருக பக்தர்கள் மாநாட்டின் நோக்கத்தை பொதுமக்களுக்கு விளக்கிடவும் வருகிற நான்கு மாதங்களும் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்திடவும் இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.

இந்த மாபெரும் மாநாட்டிற்கு முருக பக்தர்களான பாதயாத்திரை குழுக்கள், இந்து ஆன்மிக குழுக்கள், மன்றங்கள், சிவனடியார்கள், வைணவ அமைப்புகள் என எல்லாரையும் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

அதர்மத்தை சம்ஹாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய முருகப்பெருமானின் சேனைகளாக வருகிற ஜூன் 22ஆம் தேதி மதுரையில் அணி திரள்வோம் அனைவரும் வாரீர்.

அடுத்த மூன்று மாதங்களில் திட்டமிட்டு இம்மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்‌.

ஒரேயொரு செயல்திட்டம் – ஹிந்து மத ஒழிப்பு!

stalin udhayanidhi - 2026

சென்னை நங்கநல்லூரில் ஹஸ் கமிட்டி இல்லம் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று திமுக., அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிவிப்புக்கு கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. வழக்கம் போல், எரிகிற பிரச்னைகளில் இருந்து திசை திருப்பி, மத மோதல்களின் பக்கம் தள்ளிவிடும் திமுக.,வின் வழக்கமான அரசியலாகவே சிலர் இதைப் பார்த்தாலும், திமுக.,வின் செயல்திட்டமான ஹிந்து ஒழிப்பு வேலை இது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை பெரியமேட்டில் ஏற்கெனவே ஹஜ் கமிட்டிக்கான இல்லம் இருக்கும் போது, நங்கநல்லூரில் ஹஸ் இல்லம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? யார் அப்பன் வீட்டுப் பணம் 65 கோடி? பெரும்பான்மை மக்களின் வரிப் பணத்திலா? திமுக., தனது தேர்தல் அறிக்கையில் கோயில்களுக்கு ரூ.1000 கோடி கொடுப்போம் என்று சொன்னது என்னாச்சு? – என்று சமூகத் தளங்களில் கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.

மேலும் சில சமூகத்தளப் பதிவுகள்..


ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல..!!

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கஞ்சி காய்ச்ச 19 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 மெட்ரிக் டன் அளவுள்ள உயர்தர பச்சரிசியை தமிழக அரசே இலவசமாக வழங்கி இருக்கிறது.

ஆனால் திருவண்ணாமலைக்கு பெளர்ணமி தரிசனத்திற்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், கார்த்திகை தீபத் திருநாளன்று தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கும் ஹிந்துக்கள் அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை அரசு தடை விதித்தது.

அடுத்ததாக திருச்செந்தூருக்கு சூரசம்ஹார விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.

அடுத்ததாக பழனிக்கு தைப்பூச திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.

அடுத்ததாக தற்போது அய்யா வைகுண்டரின் அவதார திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தர்மபதியில் தரிசனத்திற்கு வருகைதந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சமையல் பாத்திரங்களை அங்கிருந்து காவல்துறையினர் மூலம் எடுத்திருக்கிறது.

பண்டிகை காலங்களில் ஆலயங்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இந்துக்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் தொன்று தொட்ட மரபு. அதற்கு தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. இந்துக்கள் திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வரும் போது ஹிந்துக்கள் அன்னதானம் வழங்க தடை விதிப்பது சட்டத்திற்கு புறம்பானது. ஆலயங்களின் வருவாய் முழுவதையும் எடுத்துக் கொள்கிற இந்து சமய அறநிலையத்துறை ஏன் பண்டிகை காலங்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டியது தானே? அதை செய்யாமல் ஹிந்துக்கள் அன்னதானம் வழங்குவதை தடுப்பது எந்த வகையில் நியாயம்?

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்கிற சொல் வழக்கு தமிழகத்தில் உண்டு. காரணம் பிறரின் பசியாற்றவது உன்னதமான சேவை என்பதே நிதர்சனம்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வடலூர் வள்ளலார் பெருமான் சத்திய ஞான சபையை நிறுவி வடலூரில் அணையா அடுப்பை பற்ற வைத்து அது பல்லாண்டுகளாக பல லட்சம் பக்தர்களுக்கு அன்னமுது பாலித்து வருவதை நாம் இன்றும் பெருமையோடு பேசி வருகிறோம்.

அப்படிப்பட்ட தமிழகத்தில் அன்னதானம் வழங்க தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்? அது பாவமில்லையா?

கடவுளுக்கு ஹிந்துக்கள் அளித்த காணிக்கை பணத்தை எடுத்து கடவுளே இல்லை என்று சொன்ன தமிழக முன்னாள் முதல்வர் திமுகவின் நிறுவனர் நாஸ்திகர் திரு.அண்ணாதுரை அவர்களின் நினைவு நாளன்று ஆண்டுதோறும் ஆலயங்களில் சம்பந்தி போஜனம் என்கிற பெயரில் தெவச சாப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம்? அதை செய்ய சட்டம் அனுமதி அளித்ததா? ஹிந்துக்கள் அப்படி செய்யச் சொல்லி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் கேட்டார்களா? வருடத்தில் ஒருநாள் இறை நம்பிக்கை இல்லாத ஒருவரின் இறந்த நாளன்று சம்பந்தி போஜனம் நடத்துவது சரி என்றால்?

பன்னெடுங்காலமாக பண்டிகை நாட்களில் ஆண்டவனுக்கு கைங்கர்யம் செய்யும் நோக்கில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது மட்டும் எப்படி தவறாகும்?

கேள்வி கேட்டால் உணவு பாதுகாப்புத்துறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று ஒரு புதிய அறிவிப்பை அந்த நேரத்தில் வாய்மொழி பதிலாக முன்வைக்கிறது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம்.

ஹிந்துக்கள் அன்னதானம் வழங்குவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரிவு தடை விதிக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தயாரா?

இந்து மத திருவிழாக்களின் போது இஸ்லாமியர்கள் ஹிந்துக்களுக்கு ரசாயன நிறமேற்றிகள் பயன்படுத்தப்பட ரோஸ்மில்க் என்கிற குளிர்பானத்தை வழங்க மட்டும் எப்படி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அனுமதிக்கிறது?

திமுகவின் மாநாடுகளில் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க அக்கட்சி எப்போதாவது உணவு பாதுகாப்புத்துறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்கிறார்களா?

ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறதே அதற்கு என்றைக்காவது தமிழக அரசு தடை விதித்திருக்கிறதா?

ஹிந்துக்கள் பண்டிகை காலங்களில் அன்னதானம் வழங்க மட்டும் திமுக அரசு தடை விதிப்பது ஏன்?

ஹிந்துக்களை விரோதித்து வீழ்ந்து போன அரசுகளின் வரிசையில், ஹிந்துக்களை அழிக்க முனைந்து அழிந்து போன அரசியல் கட்சிகளின் பட்டியலில் அடுத்ததாக திமுக இடம் பெறும்.

  • சமூகத் தளப் பதிவு

சென்னை நங்கைநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் – திருப்பதியில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்!

என்னங்க சொல்றீங்க? நங்கநல்லூர்ல ஹஜ் இல்லமா?? சரி அதுக்கும் திருப்பதிக்கும் என்ன சம்பந்தம்??

மறதி ஹிந்துக்களுக்கு ஒரு கொடிய வியாதி. முதலில் வரலாற்றை சற்று சிந்தித்து பார்ப்போம். ஏன் பாரதம் சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்பட்டது? இஸ்லாமிய தனி நாடு என்று போர்க்கொடி உயர்த்திய கொடுங்கோலன் முஹம்மத் அலி ஜின்ஹாவை இயக்கியது யார்? பாரதம் பிளவுபடவேண்டும் என்று நினைத்தவர்கள் யார்? பாரதத்தில் அமைதி இல்லாமல் என்றுமே மத கலவரங்கள் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சதி செய்தவர்கள் யார்? இதற்க்கெல்லாம் காரணம் கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள்.

அவர்களின் ஒரே நோக்கம், சனாதன ஹிந்து தர்மத்தை வேரோடு அழித்துவிட வேண்டும் என்பதுதான். இன்றளவும் அதே அவலம் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொள்கைகள் மூலமாக தொடர்கிறது.

2011ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி. உலகத்தில் புகழ்பெற்ற சனாதன நகரமான திருப்பதியில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார். மத்தியிலும் சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர்கள் நோக்கம் என்ன? அதுவும் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் ஒரு கோயிலுக்கு சொந்தமானது. பாஜக, ஹிந்து அமைப்புகள் களத்தில் இறங்கின. பெரும் போராட்டம் வெடித்தது. சட்ட ரீதியாக நீதிமன்றத்திற்கு சென்றனர். தீர்ப்பு சாதகமாக வந்தது. தற்போது அந்த ஆறு மாடி கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இது ஹிந்து ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

இதோடு நின்றார்களா அந்த மிஷனரி கைக்கூலிகள்? 2021ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த காலத்தில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில், அதுவும் திருமலை அடிவாரத்தில், மும்தாஜ் என்ற ஒரு 5 star ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின் அனுமதி ரத்துசெய்யப்பட்டது.

சரி தமிழகத்திற்கு வருவோம். ஆளும் கட்சியின் தாய் கழகம் எப்படிப்பட்டது என்று நாம் நன்கு அறிவோம். அவர்களின் தந்தை பாரத நாடு ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் என்று கூப்பாடு போட்டவர். இவர்கள் ஹிந்து மத விரோதிகள். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட மிஷனரிகளின் கைக்கூலிகள். இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

நங்கநல்லூர் பல சிறப்புமிக்க கோயில்கள் அமைந்திருக்கும் ஒரு சனாதன தர்ம புண்ய ஸ்தலம். பெரும்பாலும் ஹிந்துக்கள் வசிக்கும் பகுதி. இங்கே எதற்கு ஹஜ் இல்லம்? மேலும் சென்னை விமான நிலையம் பரந்தூருக்கு மாற்றப்பட உள்ளது. அங்கே ஹஜ் இல்லம் அமைக்கலாமே? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன? சென்னையில் வேறெங்கும் இடம் இல்லையா?

இந்த கேடுகெட்ட திராவிட ஆட்சியாளர்கள், ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தங்கும் இடம் கொடுத்து, குளிர்சாதன பேருந்தில் முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்போடு, ராஜ மரியாதையுடன் விமான நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் விமான நிலையம் அருகாமையிலேயே ஹஜ் இல்லம் தேவையா?

சென்னையில் எங்கு பார்த்தாலும், நாளில் ஒரு கடை முஸ்லிம்கள் கையில். தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள். ஆட்டோக்கள் பார்த்தல் அரேபிய மொழியில் பெயர்கள். பெரும்பாலான வணிகம் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. ஒரு சில பகுதிகளே மிச்சம். தற்போது அத்தகைய பகுதிகளையும் target செய்கிறார்கள், கேடுகெட்ட அரசியல் லாபத்திற்காக.

இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு ஹிந்து ஒற்றுமை. களத்தில் இறங்கி போராட தயாராக வேண்டும். ஹிந்துக்களை மதிக்கும் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். தீய சக்தி, ஹிந்து விரோத திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும்.

“பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்” – பாரதி.

முதல்வருக்கு பேராசிரியர் எடுத்துள்ள பாடம்!

madurai srinivasan prof - 2026

தேஜாஸ் உள்ளிட்ட ரயில்கள் தமிழில் இல்லை, சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று குறிப்பிட்டு புகார் கூறிய தமிழக மாநில முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக., மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள்…

வந்தே பாரத் என்றும் தேஜஸ் என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்…

1) ஐயா அவர்களுக்கு எனது முதல் கேள்வியே ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்!!!

இது தமிழ் இல்லை என்பதும்…
ரசிய மொழி என்பதும் பலருக்கு தெரியாது.

2) உங்கள் மாமா கலாநிதி மாறன் அவர்கள் நடத்துகிற சன் டிவி என்பதில் வரும் சன் எந்த மொழி வார்த்தை என்பதை எடுத்துச் சொல்வீர்களா??

சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே சுயமரியாதை என்பது சமஸ்கிருதம் தான்,
திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தான்,
உதயசூரியன் என்பது சமஸ்கிருதம் தான்,
உதயநிதி என்பதும் சமஸ்கிருதம்,
துர்கா என்பது சமஸ்கிருதம்,
அழகிரி என்பது சமஸ்கிருதம்,
கருணாநிதி என்பது சமஸ்கிருதம்,
தயாளு அம்மா என்பது சமஸ்கிருதம்….ராஜாத்தி அம்மாவும் அப்படியே ஐயா….

கனிமொழி இதில் தப்பினார் என்பதே சற்று ஆறுதல்!!

3) உங்கள் அருமை நண்பர் வீரமணி என்கிற பெயரும் சமஸ்கிருதமே… சுப வீரபாண்டியன் என்பதும் சமஸ்கிருதம் தான் ஐயா….

இந்த பெயர்களை எல்லாம் இந்தியாவின் எந்த மாநிலங்களில் போய் நீங்கள் சொன்னாலும் அம்மக்களுக்கு அதன் பொருள் புரியும்..!

உங்களுக்கு ஆறுதலுக்காக இன்னும் சில தகவல்கள் சொல்கிறேன் ஐயா ராமதாஸ் அவர்கள் பெயர் சமஸ்கிருதம் தான்…
கேப்டன் விஜயகாந்த் என்கிற பெயர் சமஸ்கிருதம் தான்….

ரஜினிகாந்த் என்பதும் சமஸ்கிருதம்…
கமலஹாசன் என்பதும் சமஸ்கிருதம்…
விஜய் என்பதும் சமஸ்கிருதம்…
அஜித் என்பதும் சமஸ்கிருதம்…
தனுஷ் என்பதும் சமஸ்கிருதம்…
விக்ரம் என்பதும் சமஸ்கிருதம்…
சூர்யா என்றாலும் சமஸ்கிருதம்…
கார்த்தி என்றாலும் சமஸ்கிருதம்…

சமஸ்கிருதத்தில் ஸ்ரீமான் என்று சொல்லப்படுவது தான் தமிழில் சீமான் என்று அழைக்கப்படுகிறது என்பது சீமானுக்கே தெரியாது….!!!

கேள்விகள் இத்துடன் முடியவில்லை ஐயா ஸ்டாலின் அவர்களே…

  1. உங்கள் காவல்துறையில் கவச வாகனங்களை வஜ்ரா என்று அழைக்கிறீர்களே அது சமஸ்கிருதம் இல்லையா??!
  2. உங்கள் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துகிறீர்களே பாதாளம் என்பது சமஸ்கிருதம் இல்லையா?!
  3. அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடத்துகிறீர்களே ரத்த தானம் என்கிற வார்த்தை எந்த மொழி வார்த்தை என்பதை ஸ்டாலின் அவர்கள் சொல்வாரா???
  4. சங்க இலக்கியங்கள் என்று சொல்கிறீர்களே சங்கம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் என்பது உங்களுக்கு தெரியாது ஐயா…. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கும் இது தெரியாது என்பதுதான் கொடுமை…!

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன்.,
தங்கள் தந்தை எழுதிய குறளோவியத்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தீர்களே… ஏன் என்று தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாமா???

சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறும் திமுகவினர் தங்கள் தலைவரின் புத்தகம் செத்த மொழியில் வந்ததை ஏன் விரும்பினார்கள்???

பதில் கூறுவீர்களா ஐயா ஸ்டாலின் அவர்களே!!!?

– என்று கேள்வி எழுப்பியுள்ளார் பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன்.

சாம்பியன்ஸ் ட்ராபி: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்த்!

champions trophy - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா – அரையிறுதி ஆட்டம் – 05.03.2025

நியூசிலாந்து அணி அபார வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணி (50 ஓவர்களில் 362/6, ரவின் ரச்சீந்திரா 108, கேன் வில்லியம்சன் 102, டேரியல் மிட்சல் 49, கிளன் பிலிப்ஸ் 49, லுங்கி இங்கிடி 3/72, ரபாடா 2/70, முல்டர் 1/48) தென் ஆப்பிரிக்க அணியை (50 ஓவர்களில் 312/9, டேவிட் மில்லர் 100, வான் டெர் டுஸ்ஸான் 69, பவுமா 56, மர்க்ரம் 31, மிட்சல் சாண்ட்னர் 3/43, கிளன் பிலிப்ஸ் 2/27, மேட் ஹென்றி 2/43, ரவீந்திரா 1/20, ப்ரேஸ்வெல் 1/53) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ரச்சின் ரவீந்திரா அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு “சோக்கர்ஸ்” என்ற பெயர் உண்டு. அதாவது வெற்றிக்கு அருகில் வந்து தோற்பவர்கள் என்று பொருள். இன்று அந்த அணி மீண்டும் ஒருமுறை தாங்கள் ஒரு சோக்கர்ஸ் என நிரூபித்தது.

நியூசிலாந்து அணி கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றபோது, அந்த அணி வேண்டும் என்றே தோற்றார்கள் என ஒரு பேச்சு எழுந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவை வெல்வதை விட தென் ஆப்பிரிக்காவை வெல்வது சுலபம் என அனைவருமே எண்ணினார்கள். நினைத்து போலவே நடந்தது.   

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இறுதி ஆட்டம் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மார்ச்சு ஒன்பதாம் தேதி துபாயில் நடைபெறும்.   

      

சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 49  

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

49. அக்ஷி பாத்ர நியாய: – அக்ஷி பாத்ர – கண் விழி

கடவுளின் படைப்பில் இருக்கும் பல விசித்திரங்களில் மனித உடலும் ஒன்று. நம் உடலில் இருக்கும் ஐந்து புலன்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயல்பாடு. அவையனைத்திலும் கண்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

‘சர்வேந்த்ரியாணாம் நயனம் பிரதானம்’ என்பது உலக வழக்கு. கண்கள் சூட்சுமமானவை, மென்மையானவை. கண்களுக்கு இருக்கும் தனித்துவம் குறித்து ஆன்றோர் கூறிய இந்த சுலோகம் சிந்திக்கத்தக்கது. 

ஊர்ணாபக்ஷ்ம யதைவ ஹி கரதல சம்ஸ்தம் ந வித்யதே பும்பி |
அக்ஷிகதம் து ததேவ ஹி ஜனயத்வ ரதிம் ச பீடாம் ச ||

பொருள் – சிலந்திப் பூச்சி (ஊர்ணநாபி:) உற்பத்தி செய்த நூல், நம் கை போன்ற உடலுறுப்புகளின் மேல் விழுந்தால் நமக்கு தெரியக் கூட தெரியாது. அதே சிலந்திக் கூட்டின் ஒட்டடை நம் கண்ணில் விழுந்தால் அதிக வலியும், வெறுப்பும் ஏற்படுத்தும்.

உடலுறுப்புகளில் கண்களுக்கு இருக்கும் தனித்துவம் இது. மணலைக் கையில் எடுத்தாலும், தலையில் அல்லது உடலின் வேறு எந்த உறுப்பின் மேல் தூவிக் கொண்டாலும் எதுவும் செய்யாது. காது மூக்கு, நாக்கு இவற்றில் மணல் துகள் புகுந்தாலும் பெரிய கஷ்டம் ஏற்படாது. ஆனால் அதே மணல் துகள் கண்ணில் விழுந்தால் ஒரேயடியாக வலி ஏற்படும். சிறிய தூசு விழுந்தாலும் கண் சகித்துக் கொள்ளது. இதுவே ‘அக்ஷிபாத்ர’ நியாயத்தில் இருக்கும் சிறப்பு.

சிறிய மணல் துகள் கண் விழிக்கு கஷ்டம் ஏற்படுத்துவது போல, சின்னச் சின்ன விஷயகளுக்குக் கூட சிலர் வருத்தப்படுவார்கள். இதுவே இந்த நியாயம் அளிக்கும் செய்தி.

உடலுறுப்புகளில் கண்களைப் போல மென்மையாக இருப்பவர்கள், ஒரு சிறிய வார்த்தையைக் கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் எத்தனை திட்டினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களை கெட்டியான தோல் கொண்டவர்கள் என்கிறோம்.  இந்த இரு தரப்பினரும் நமக்கு எதிர்ப்படுவதுண்டு. விரைவாக பாதிக்கப்படும் மென்மையான மனம் கொண்டவர்கள் சூட்சுமான கண்களைப் போன்றவர்கள். நாம் அவர்களோடு மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்த அக்ஷிபாத்ர நியாயம்.

மிக மென்மையான மனம் கொண்ட மனிதர்கள், எடுக்கும் தீவிரமான முடிவுகளோடு  தொடர்புடைய இரண்டு உண்மை சம்பவங்களை இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

சாப்பிட மாட்டேன் –

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு கிராமத்தில் ஒரு அக்ரஹாரம். அங்கு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து நவராத்திரி உற்சவம் நடத்திவந்தது ஒரு இளைஞர் குழு. கடைசி நாள் நடக்கப் போகும் அன்னதானத்திற்கு சந்தா வசூல் செய்வதற்காக வீட்டுக்கு வீடு சென்றார்கள். ஒரு புகழ் பெற்ற புரோஹிதரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவருடைய இல்லாள், அன்னதானத்திற்காக ஒரு அரிசி மூட்டையை  சமர்ப்பித்தாள். அவர்கள் மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார்களோ இல்லையோ, அவளுடைய புதல்வன் வந்தான். நடந்ததை அறிந்து கோபாவேசமானான்.

அதற்கு முன்பே பணமாக சந்தா கொடுத்திருந்த அந்த புதல்வன், தாயை கோபத்தோடு நிந்தித்தான். கணவர் புரோஹித உத்தியோகத்தில் சம்பாதித்து வாங்கி வந்த அரிசியை, தெய்வ காரியத்திற்கு கொடுப்பதை ஆட்சேபித்து மகன் கூறிய சொற்கள் அந்த தாயின் மென்மையான மனத்தைக் காயப்படுத்தின. பேச்சக்கு பேச்சு வார்த்தை தடித்தது. அவ்வளவுதான். ‘இன்றிலிருந்து நான் ஒரு பருக்கை அன்னம் கூட உண்ணமாட்டேன்’ என்று கடுமையான சபதம் செய்தாள் அந்த இல்லாள். அந்த சம்பவத்திற்குப் பிறகு இருபதாண்டுகள் உயிர் வாழ்ந்தாள். இறுதிவரை அவள் தன் சபதத்தை மீறவில்லை. காய்கறி மட்டுமே உண்டு வாழ்ந்தாள்.

மற்றுமொரு சம்பவம் வெளிநாட்டில் நடந்தது. ஒரு பெரிய மனிதரின் மூன்று மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். ஒரு முறை அவர் இந்தியாவிலிருந்து, தன் பிள்ளைகள் இருக்கும் தேசத்திற்குச் சென்றார். ஒரு நாள் புதல்வர்களின் இல்லத்திற்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவுக்குச் சென்றார். அங்கு அவர் வயதுள்ள ஒரு மனிதரோடு நட்பு ஏற்பட்டது. அந்தப் புதிய மனிதர், தன் மகனின் வீடு அருகில்தான் இருக்கிறது என்று கூறி இவரை அழைத்துச் சென்றார். வந்த பெரிய மனிதருக்கு காபி தரும்படி மருமகளிடம் கூறினார். நம் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் சகஜமே.

ஆனால் அங்கு? மருமகள், “இதுபோல் முன் பின் தெரியாதவரை எல்லாம் இனி எப்போதும் வீட்டுக்கு அழைத்து வராதீர்கள்” என்று மாமனாரிடம் கூறினாள். அவருடைய மென்மையான மனம் அந்த நிகழ்ச்சியால் காயமடைந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர், உயிரோடு இருந்தவரை, வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று எடுத்த பிரதிக்ஞையை நிறைவேற்றினார். முதிய வயதில் இந்தியாவிலேயே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கேயே இறுதி மூச்சை விட்டார் அந்த மென்மனம் கொண்டவர்.


ஒரே சொல். ஆனால் அதற்கு எதிர்விளைவு வேறு வேறாக இருக்கும். ஒரு மணல் துகள். மீதி உடல் உறுப்புகளில் பட்டால் இல்லாத வலி, கண்களில் விழுந்தால் வருகிறது இதுவே இந்த நியாயம் கூறும் நீதி. கவனமாகப் பேச வேண்டும் என்ற எச்சரிக்கையை  இவ்விதம், கண்ணில் விழுந்த மணல் துகள் மூலம் விளக்குகின்றனர் பெரியோர்.

மனிதர்கள் இவ்விதம் ஏன் நடந்து கொள்கிறார்கள்? என்று கேட்டால், அதற்கு என்ன பதில் கூற முடியும்? கண்ணில் விழுந்தால் மட்டுமே ஏன் வலிக்கிறது? என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்? அதே போல்தான்.

அதமா தனமிச்சந்தி
தனம் மானம் ச மத்யமா:
உத்தமா மானமிச்சந்தி
மனோஹி மஹதாம் தனம் ||

பொருள் – கடைநிலை மக்கள் செல்வத்தை விரும்புவர்கள். நடுநிலை மனிதர்கள், தனம், மானம் இரண்டையும் விரும்புவர்கள். உத்தமர்கள் மானத்தை விரும்புவர்கள். ஆனால் மஹா புருஷர்கள் தம் மானத்தையே தனமாக எண்ணுவார்கள்.

மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் மென்மையான மனத்தை வெளிப்படுத்தின. அவர்கள், கண்களைப் போலவே மென்மையானவர்கள். அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை வேறாக இருக்க வேண்டும்.


எனக்கு (ஆசிரியருக்கு) ஒரு நண்பர் இருந்தார். வாடா, போடா என்று பேசிக் கொள்வோம். ஒரு முறை போனில் பேசியபோது அவருடைய பெயரோடு அவர்கள் என்று சேர்த்து அழைத்து, விளையாட்டாக, ‘சொல்லுங்கள், சார்’’ என்றேன். உடனே அந்த நண்பர் மிகவும் நொந்துபோனார். ‘நீங்கள் மாறிவிட்டீர்கள். என்னை வெளியாளாக்கி விட்டீர்கள். என்னை சார், அவர்கள் என்றீர்கள்’ என்று வருந்தினார். வேறு ஒருவர், வாடா என்று பேசினால்  தவறாக எடுத்துக் கொண்டு வருந்தலாம். இதுவும் ‘அக்ஷிபாத்ர’ நியாயத்தில் உள்ள விசித்திரம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உடலுறுப்புக்கும்  ஒவ்வொரு மென்மை உணர்வு.

பல ஆண்டுகளுக்கு முன் பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண் மென்மை குணம் இல்லாத ஒரு மனிதர் பற்றி ஒரு கார்ட்டூன் போட்டார். ஒரு சேல்ஸ்மேன் கீழே விழுந்து கிடப்பார். அவரருகில் அவருடைய பை கிடக்கும். அவர்  இவ்வாறு கூறுவார், ‘இதில் அவமானம் என்ன இருக்கிறது? என் பையை வெளியில் தூக்கி எறிந்து விட்டு என்னை வெளியில் போ என்று விரட்டி விட்டார். அவ்வளவுதான்’ என்றார்.

அவமதிப்பிற்கு அப்பாற்பட்ட மனிதர் அவர். இதற்கு மாறாக சிலர் இருப்பார்கள். ஒரு சிறிய வார்த்தை கூட அவர்களை பாதிக்கும். சமீப காலமாக ‘போன் மார்கெட்டிங்’ அதிகமாகி விட்டது. கிடைத்த நம்பருக்கெல்லாம் போன் செய்து, தங்கள் பொருட்களைப் பற்றிக் கூறுவது அவர்களுடைய தொழில் தர்மம். சிலர் தம் கோபத்தை அவர்கள் மேல் காட்டுவார்கள். அது தவறு என்று இந்த நியாயம் தெரிவிக்கிறது.

‘எல்லா புலன்களும் ஒரே மாதிரி இருக்காது. அதே போல் மனிதர்கள் எல்லோரும் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். அவர்களின் மனங்கள் வேறு வேறு. ஒவ்வொரு மரத்தின் காயும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். ஒரு கொடியின் மலர்களைப் போல இன்னொரு கொடியின் மலர்கள் இருக்காது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகளின் புத்தி ஏன் ஒவ்வொரு விதமாக இருக்கிறது?’ என்று கேட்டார் ஒரு கவிஞர். அதை அறிந்து நடந்து கொள்ளவேண்டும் என்பது இந்த நியாயம் கூறும் செய்தி.

யாருடன் எவ்வாறு பேசுவது என்று அறிந்து நடந்து கொண்டால் தனி மனிதத் தொடர்புகள் விலகாது. ‘கண் உன்னுடையது. விரலும் உன்னுடையது என்பதால் குத்திக் கொண்டால் ரத்தம் வராதா’ என்றார் ஒரு கவிஞர். ‘அக்ஷி பாத்ர’ நியாயம் மானுட சம்பந்தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் உபாயத்தைக் கூறுகிறது. People never change their jobs, they change their bosses. என்கிறது ஒரு பழமொழி.

தமிழ் பிரசார சபா ஏன் அமையவில்லை?!

kashi tamil sangamam - 2026

ஹிந்தி பிரசார சபா போல்… இவர்களால் தமிழ் பிரசார சபா அமைக்க முடிந்ததா என்று ஒரு கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது- சரி நாம் இவர்கள் வழி தமிழ்லயே சொல்வோமே…  தமிழ் பரப்புரை அவை  🙂  – அமைக்க முடிந்ததா?!

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும்…! 1857 முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியப் பகுதிகள் வந்த பிறகு, மொழி வழி, கலாசார வழி, மத வழிப் பிரிவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டது பிரிட்டிஷ் அரசு.

அப்படித்தான், ஹிந்தி ஒரு தரப்பு, அடுத்த தரப்பு உருது, மற்ற தரப்பு ஆங்கிலம் என்று மத வழியே மொழிப் பிரிவினை வெளிப்படுத்தப்பட்டது. நாட்டில் ஹிந்துக்களை மொழி வழியே ஒருங்கிணைக்கத்தான் ஹிந்தி என்று பிரசாரம் பலமானது. உண்மையில், நாடெங்கும் உள்ள மக்களை மொழி வழியே ஒருங்கிணைக்க முன்னெடுக்கப்பட்டது இந்தி மொழி. 

ஆயிரம் ஆண்டு பலமான பாரம்பரியமான இலக்கண, இலக்கியச் செழுமை என்று சொல்ல முடியாதபோதும், தேசத்தின் ஒற்றுமை உணர்வு கருதி அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய மொழி இந்தியை தற்போதைய நாளில் இருந்து சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு  முந்தைய தேசாபிமானிகள் உரைநடை இலக்கியங்கள், கவிதைகள் படைத்து மக்களிடையே பரப்பினார்கள். அதன் முக்கிய நோக்கம் – தேசம் முழுதுமுள்ள மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பது! அப்படித்தான் பின்னாளில் மகாத்மா காந்தி ஹிந்தி பிரசார சபா நிறுவி தேசம் முழுதும் ஹிந்தி பரவலாக்கத்தை வளர்த்தார். அதேநேரம், உருது ஒருபுறம் வலிய வளர்க்கப்பட்டதும், தேசத்தில் மத வழி பிரிவினை ஏற்பட்டதும் வரலாறு. 

சரி, இருக்கட்டும்! தமிழ் பிரசார சபா ஏன் தோற்றுவிக்கப்படவில்லை அல்லது வளரவில்லை!? அத்தகைய எண்ணம் இருந்திருந்தால், ஆங்கிலேயன் மத வழி மொழியான ஆங்கிலத்தை ஓஹோவெனத் தூக்கிப் பிடித்து, தமிழை தங்கத்தட்டில் வைத்த ஏதோ ஒன்றென ஒப்புமை கூறி தரம் தாழ்த்தி இன்றைய செல்வச்செழிப்புச் சீமான்களின் கோல்மால்புரக் கோமான்களின் முன்னோடிகளே செய்திருப்பார்களே! ஏன் செய்யவில்லை? அட… இண்டிய நாடு என்ற அளவில் கொண்டு செல்லாவிட்டாலும், திராவிட நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் அல்லவா… அந்தப் பகுதிகளிலாவது தமிழை வளர்க்கவும் பிரசாரம் செய்யவும் செய்திருக்கலாமே!  சுமார் அறுபதாண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்த  திராவிட இயக்கங்களின் மாநில அரசால் செய்ய முடியாததா? ஏன் செய்யவில்லை? 

பிரதமர் நரேந்திர மோடி வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், தமது மேடைப் பேச்சுகளின் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும், தன் தொகுதியாக காசி தமிழ்ச் சங்கம் மூலம் உ.பி. யிலும், மேற்கொள்ளப்படும் தமிழ் பிரசார உத்தியைக் கூட, செய்து வரும் செயல்களில் சிறிதளவு கூட தமிழகத்தைக் கடந்து திராவிட அரசுகளால் செய்ய முடியவில்லையே! 

எனவே நம் வழி பாரதியின் வழியாகவே இருக்க வேண்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!