Home Blog Page 169

வரவிருக்கும் வெற்றிகள் பாரத தேசத்துடையவையே!

hinduism - 2026

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

“ஒரு தேசம் தன் வழியில் தான் முன்னேறிச் சென்றால், இருபதாம் நூற்றாண்டு நாகரிகம் சும்மாயிருக்காது” என்றார் ஒரு கவிஞர். இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாகரிகமும் அதேபோல்தான் இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் அகம்பாவம், பிற தேசங்களின் வளர்ச்சியைப் பொறுப்பதில்லை. பொறாமையோடு கொடூரமான செயல்களைச் செய்வது வரலாறாக உள்ளது.

அண்மையில், பங்களாதேஷில் நடந்த வன்முறைகளும், அங்கிருந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நாட்டை விட்டே ஓடியதும் உலகறிந்த செய்தி. அத்தகைய அக்கிரமங்களுக்கு, வளர்ந்த நாடுகளின் தலையீடே முக்கிய காரணம் என்று அந்நாட்டு பிரதமரே அறிவித்த செய்தியும் உலகம் அறிந்ததே!

கடினமான சூழ்நிலைகளையும் திறமையோடு சமாளித்து, தேசத்தை அனைத்து விதத்திலும் முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லும் பாரத தேசத்தின் தலைமையின் மீது கொண்ட பொறாமையால், கையாலாகாத கோபத்தோடும், பாரத தேசத்தின் வளர்ச்சியைத் தாங்க இயலாத வெறுப்போடும், இந்த நிலையான தமைமையை, திறமையான பாரதத்தை, தற்சார்பு மிகுந்த தேசத்தை, சுயமான செழிப்பை, தலைகீழாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிநாடுகள் செய்து வரும் சதித்திட்டங்கள் இப்போது தான் பொது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்து வருகிறது.

அந்நிய நாட்டுத் தீய வியூகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஊழல் தலைவர்கள், தம் அதிகார தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக சதிகாரர்களோடு கை கோர்த்து, அவர் கையில் பொம்மலாட்ட பொம்மைகளாக, அவர்கள் ஏற்படுத்திய திட்டங்களின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஹிந்து அல்லாத மதங்களை சமதானப்படுத்துதல், தேசிய வெறுப்பு போன்ற கோஷங்களோடு கூத்தாடினார்கள்.

பாரத தேசத்தில் குல, மத வேறுபாடின்றி, ஒவ்வொரு குடிமகனுடைய நலனுக்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எடுத்த சிஏஏ, அக்னிவீர் போன்ற சிறந்த முடிவுகளையும் திட்டங்களையும் கூட தவறாகச் சித்திரித்து, பொய் சொல்வதே தம் வழிமுறையாக, மீண்டும் மீண்டும் பொய்களையே உண்மைகள் என்று வாதம் செய்து மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்ல முயற்சித்தார்கள். அந்த முயற்சியில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் கூட இடையூறு விளைவிக்கத் தயங்கவில்லை.

முழுமையான தேச முன்னேற்றத்திற்காகவும், பழுதடையாத ஒருமைப்பாட்டிற்காகவும், அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும், திடமான பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வலிமைக்காகவும், நிரந்தரம் உழைக்கும் அரசாட்சியை ‘ஹிந்துத்துவம்’ என்று முத்திரை குத்தி, மத வெறுப்பைத் தூண்டும் முயற்சி மும்முரமாக நடத்தப்பட்டது. தேசத்தைத் துண்டாடவேண்டும் என்று இந்த துக்கடா கும்பல்கள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல. அத்தனை வீராவேசமாக உக்கிர முயற்சி செய்தாலும் அவர்களால் எதிர்க் கட்சியாக மட்டுமே இடம் பெற முடிந்தது. அதையே பெரிய வெற்றியாக எண்ணி டம்பமடித்துக் கொள்கிறார்கள்.

அதோடு நில்லாமல், பொருளற்ற வாய்ச் சவடால்களால், வெட்கமின்றி பச்சைப் புளுகுகளை பரம சத்தியமாக பிரகடனம் செய்து, இரு சபைகளிலும் சற்றும் கௌரவமோ மரியாதையோ இன்றி நடந்து கொள்கிறார்கள். பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டம் என்ற பெயரில் தீவிரவாத மதக் குழுக்கள் மிருகத்தனமான, கொடூரமான செயல்களைத் தூண்டி, விபரீதமான திகிலூட்டும் ஹிம்சையைப் பரப்பியது போல, பாரத தேசத்திலும் செய்ய வேண்டும் என்று திட்டங்களை பலமாகத் தீட்டி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்தைப் போலவே போலி போராட்டங்களை நடத்திக் காட்டி, செயற்கை இயக்கங்களை ஏற்பாடு செய்து, வெளிநாட்டு நிதி உதவியோடு ஆட்டம் போடுகிறார்கள். “பாரத தேசம் என்னாவானாலும் பரவாயில்லை. வளர்ச்சி குன்றினாலும் நஷ்டமில்லை. தம்முடைய மதமே இந்த தேசம் முழுவதும் பரவ வேண்டும். தம் மதத்திற்கு மாறாதவர்களை ஹிம்சை செய்து, வன்கொடுமை செய்து, குரூரமாகக் கொல்ல வேண்டும்” என்பதையே கொள்கையாகக் கொண்ட மத வெறியர்களின் உதவியோடு, பாரத தேசத்திலும் மரண காண்டத்திற்கு வழிசெய்யத் துடிதுடிக்கிறார்கள்.

நம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தாலும், நம்மவர்களின் நட்பையும் உதவியையும் பெற்றாலும், இந்த ‘அமைதிவழியினர்’ என்று கூறிக்கொள்ளும் ஹிம்சைவாதிகள், தம் தலைவர்களிடம் இருந்து செய்தி வந்தவுடனே பெரும் பயங்கரவாதிகளாக மாறி விடுகிறார்கள். நேற்றுவரை ‘பாய், பாய்’ என்று பழகி விட்டு, தேவைக்கு உதவி புரிந்தவர்களைக் கூட தயவு தாட்சிண்யமின்றி நன்றிகெட்டு, கிழித்துக் கொன்ற வரலாற்றை அவர்களுடைய கடந்த காலத்தில் மட்டுமின்றி நிகழ்காலத்திலும் பார்க்க முடிகிறது.

ஆனால் செக்யூலர் என்ற முகமூடியிட்டு, கபட இயக்கங்களின் மறைவில் நின்று, கொடூரர்களின் உதவியோடு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, ஒன்றுபட விடாமல் தடுத்து, தேசத்தின் முன்னேற்றத்தை உடைத்துத் துண்டாடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

மத தீவிர வாதிகளின் வன்முறையால் சொந்த தேசமே வேற்று நாடாக மாறிப் போகையில், நடந்த, நடந்துவருகிற, கோரதாண்டவத்தைக் கண்டித்து, எந்த ஒரு தலைவரும், எந்த ஒரு முக்கியஸ்தரும் வாயே திறக்கவில்லை. அனுதாபமும் தெரிவிக்கவில்லை. தாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று டமாரம் அடித்துக் கொள்பவர்கள் ஊமையாகிப் போனார்கள்.

பகை நாடுகளில் இருந்து அக்கிரமமாக பாரத தேசத்திற்குள் நுழைந்து, மேற்கு வங்காளம், கேரளா முதல் ஹைதராபாத், தமிழ்நாடு, கர்நாடகா, காஷ்மீர் வரை செயற்கை அடையாள அட்டைகளோடு, இந்திய குடிமக்களாக, ஓட்டுரிமை பெற்று, வன்முறையையும் குற்றங்களையும் செய்து வரும் மத வெறிகள் குவிந்து வருகிறார்கள். அவர்களை ஒன்று திரட்டி, வளர்த்து, போஷித்து, தேச துரோக மாநில அரசுகள் அச்சமின்றி நடந்து கொள்கின்றன.

இந்த நிலையில் நம் தேசத்தின் கதி என்ன என்ற அச்சம் தேச பக்தி உள்ளவர் அனைவருக்கும் ஏற்படுகிறது. இதற்கான பதில் – சமூக ஊடகங்களின் புண்ணியத்தால் இப்போதுதான் சிறிது சிறிதாக, வெளிநாட்டு சதிகளும், எதிர்கட்சிகளின் தீய நோக்கங்களும் உலகில் அனைவருக்கும் தெரிய வருகின்றன. உண்மை என்ன என்பதை செய்திகளாக மக்கள் அறிகிறார்கள்.

வர்க்கம், மதம் என்ற பாகுபாடின்றி பாரத தேசத்தைச் சேர்ந்த அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சுயநலமின்றி அயராது பாடுபடும் தலைமையின் திறமையை அடையாளம் காண்கிறார்கள். சதிகளைத் தாங்க முடியாமல் தேசத்தை விட்டு வந்த தலைவிக்கு அடைக்கலம் கொடுத்து, வெளிநாட்டு சதிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை அளித்துள்ளது பாரதம்.

எத்தகைய போராட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு கொடுமைகளைத் தூண்டினாலும், அழிக்கும் சக்திகளைத் தகர்க்கும் பலமான பாதுகாப்பு அமைப்பை, பலம் பொருந்திய பாரத தேசம் ஏற்பாடு செய்துள்ளது.

ஒற்றுமையாக, உற்சாகத்தோடு பணி புரியும் அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் குறைவில்லை என்று அடித்துக் கூறும் நம் தேசத் தலைமை அற்புதமான வியூகத்தைத் திட்டமிடுகிறது. விழித்தெழுந்து வரும் பாரத தேசத்தவர் அனைவரும், இந்த தலையின் திறமையின் கீழ் தம் உண்மையான பாதுகாப்பும் நலனும் முன்னேற்றமும் இருப்பதை அறிந்து வருகின்றனர்.

உலகிலேயே அமைதியையும் சௌபாக்கியத்தையும் நிலைநாட்டக் கூடிய திறமை, தர்மம் மிகுந்த பாரத பூமிக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை வெகு விரைவில் உலகம் தெளிவாக உணரும்.

இந்தப் போராட்ட காலத்தில் மேலும் திடமாக இந்த தெய்வீக பாரத பூமியின் மகிமை வெளிப்படும். அதற்கு ரிஷிகளின் தவ சக்தியும், மகா யோகிகள் தாரை வார்க்கும் நற்செயல்களின் பலமும் ஆதரவாக இருக்கும்.

பரமேஸ்வரனின் அரவணைப்பும் நிரம்ப கிடைத்து வருகிறது. பாரத மாதா விஜயதுர்காவாக நிச்சயம் ஒளிர்வாள். வந்தே பாரதமாதரம்.

(ருஷிபீடம் மாத இதழ், தலையங்கம், செப்டம்பர், 2024)

மைசூர் ரயிலுக்கு செங்கோட்டை, அருப்புக்கோட்டையில் வரவேற்பு!

aruppukottai mysore train - 2026
#image_title

அருப்புக்கோட்டையில் புதிய ரயில் வருகைக்கு வரவேற்பு:

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் செங்கோட்டை மைசூர் சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு

ரயில் பயணிகளுக்கும் ரயில் ஓட்டுநருக்கும் கடலை உருண்டை வழங்கி சால்வை அணிவித்து வரவேற்பு

காரைக்குடியில் இருந்து மைசூர் வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதன்முறையாக அருப்புக்கோட்டை வழியாக மைசூரில் இருந்து செங்கோட்டை சென்ற இந்த சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் ரயில் ஓட்டுனருக்கு, சால்வை அணிவித்தும் கடலை உருண்டை வழங்கியும் வரவேற்பு அளித்தனர். அதேபோல அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த ரயில் பயணிகளுக்கும் கடலை உருண்டை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அருப்புக்கோட்டை வழியாக வாரம் இரண்டு நாட்கள் வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்த புறப்பட்டு விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி திருச்சி சேலம் நாமக்கல் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பெங்களூர் மைசூரு செல்ல உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ரயில் பயணி போர் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையில் புதிய ரயிலுக்கு வரவேற்பு:

மைசூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்த புதிய ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வரவேற்று இனிப்புகள் வழங்கினர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் இரவு 7 மணிக்கு புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

முதன் முதலாக பயணம் மேற்கொண்ட செங்கோட்டை – மைசூர் சிறப்பு விரைவு ரயில் துவக்க விழாவில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம், மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் சங்கர பாண்டியன், முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் அனந்த பத்மனாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரவு 7.45க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டாம் நடைமேடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலை வழியனுப்பி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள், ரயில் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

டிஆர்டிஓ.,வில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

employment career opportunities - 2026
#image_title

டி.ஆர்.டி.ஓ.,வில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு

பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., சோதனை தளத்தில் அப்ரென்டிஸ் ஆக பணியாற்ற 54 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defense Research and Development Organisation (டி. ஆர். டி. ஓ.,) இந்திய ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகள், பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதன் ஒருங்கிணைந்த சோதனை தளம் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் அமைந்துள்ளது.

இங்கு அப்ரென்டிஸ் பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள் மொத்தம் 30 பேரும், டிப்ளமோ படித்தவர்கள் 24 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 7.

மொத்த பணியிடங்கள்: 54

பட்டதாரி அப்ரென்டிஸ் (Graduate Apprentice)- 30
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரென்டிஸ் (Technician (Diploma) Apprentice)- 24

கல்வித் தகுதி என்ன?

  • பட்டதாரி அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்தில் பி.இ., பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பதவிக்காலம்

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 1 ஆண்டு பதவியில் இருப்பார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.drdo.gov.in/drdo/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை! பள்ளிச் சுவரில் மனிதக் கழிவு!

  • நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி சுவரில் மனித கழிவை பூசி நடந்துள்ள அட்டூழியம்…!
  • தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் அட்டூழியம்; தலைவரித்தாடும் தீண்டாமை கொடுமை…!
  • மனித நாகரீகம் அருவெறுக்கச் செய்யும் செயலை தடுத்து நிறுத்த திராணியற்ற போலி திராவிட மாடல் ஆட்சி…! – எல். முருகன்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிச் சுவரில் மர்ம நபர்கள் மனிதக் கழிவைப் பூசிச் சென்ற விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து பள்ளி சுவரிலும், சமையலறையின் பூட்டிலும், மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனித கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர்.அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இதுபோன்ற அருவெறுக்கத்தக்க வகையில் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தியுள்ளன.

ஆனால் 600 நாட்களை கடந்த பின்னரும் இந்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோலவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூசப்பட்ட சம்பவம் நடந்தது. இதுபற்றி எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதனை விசாரணை செய்து உண்மையை கண்டறியவில்லை. மாறாக சம்பவத்தையே மறைத்து விட்டனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே காவேரிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் மனிதக் கழிவை பூசி மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான்தெருவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த சம்பவம் நடந்தது. அதிகாரிகளை வைத்து தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக சம்பவத்தை வழக்கம்போல் திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது.

இதுதொடர்பான விசாரணையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையே சுட்டிக்காட்டி கண்டித்தது.

தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று.

தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன.
பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசு பள்ளிகளில் தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாததால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் திமுகவும், முதலமைச்சரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமான செயல்.

பள்ளி சுவரிலும் பள்ளி சமையலறை பகுதியிலும் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு பெரும் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. நாகரிகமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். – இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவரிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிசெயல்களை செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது எனில், இந்த விடியா ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஏற்கனவே #வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த இழிசெயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த விடியா அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. எங்கு மைக் கிடைத்தாலும் “சமூகநீதி” என்று வாய்கிழிய முழங்கிவிட்டு, அதனை தனது விடியா ஆட்சியில் நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே தனது வெற்று விளம்பரத்திற்காக மட்டும் உதட்டளவில் பயன்படுத்தும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். அரசுப்பள்ளி வளாகத்தில் மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை விளாச்சேரியில் ரூ.30 முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனை!

vinayakar chaturti staus in vilacheri - 2026
#image_title

மதுரை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விளாச்சேரி பகுதியில் , சுமார் 40 கோடி அளவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

வரும், செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, மதுரை விளாச்சேரி பகுதியில் பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர்.

இங்கு ,200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மட்பாண்ட பொருட்களில் விநாயகர் சிலை மற்றும் லட்சுமி, பார்வதி, சிவன், உள்ளிட்ட கொழு பொம்மைகளும் தயார் செய்யப் படுகிறது.

நான்கு அங்குள்ள பிள்ளையார் முதல் 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வரை இப்பகுதியில் தயாராகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மதுரை மட்டுமல்ல விருதுநகர், தேனி, திண்டுக்கல் இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் கரூர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீர் நிலைகளில் உள்ள களிமண்களை சேகரித்து பதப்படுத்தி விநாயகர் பொம்மை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைக்கு மோல்டில் களிமண் அச்சு தயார் செய்யப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டு ரூ.30 அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, எட்டடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. விற்பனைக்கு இதில் கஜ (யானை) முக விநாயகர், நந்தி விநாயகர் சிம்ம விநாயகர் மூஷிக
விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலை தயாரிக்
கப்படுகிறது.

ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை ரூபாய் 3 ஆயித்திற்கு எட்டடி வியாபாரம் உயரம் உள்ள விநாயகர் 24 ஆயிரம் ரூபாய்க்கும் கஜமுகம் மற்றும் வாகனங்களில் உள்ள விநாயகர் செய்வதற்கு எட்டடி வீரத்திற்கு 30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து விளாச்சேரி பகுதியில் வந்து விநாயகர் சிலைகள் செய்து வாங்கி செல்கின்றனர். மேலும், நவீன காலத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைக்குள் பனைமர விதைகள் வைத்து விற்பனை செய்யப் படுகிறது.

இதன் மூலம் , வீடுகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை நீர் நிலையில் கரைக்கும் போது அங்கு கரைகளில் பனை மரங்கள் வளர உதவியாக இருக்கும் என, சமூக அக்கறையோடும் சில விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.

சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, களிமண்ணால் செய்யப்படும் விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் நீர்வளம் பாதுகாக்கவும் முடியும் என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் பிஓபி எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குளம், கண்மாய்களில் கரைக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும்,
நீர் மாசடைந்து நீரில் வாழும் மீன்கள் மற்றும் உயிரினங்கள் மிகவும் நீர்நிலைகளும் பாதிப்படைந்தது துர்நாற்றம் வீசியது.

இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பு ஏற்படுத்தியதை அடுத்து, அதை தண்ணீரில் கரைக்கவும் அதனால் நீர் வளம், நீர்வாழ் உயிரினம் மற்றும் மண் வளம் ஆகியவற்றை பாதுகாக்கவும் முடியும்.

தற்போது விளாச்சேரி பகுதியில் தயாராகி வரும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. மற்றும் விறுவிறுப்பாக விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

பாலமேடு அருகே ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

kumbabishekjam ion muthalmman temple - 2026
#image_title

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே 66.மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, எஜமானர் அழைப்பு, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜையுடன் யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு விமான கலசம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

‘செங்கோட்டை மாப்பிள்ளை டி.ஆர்.மகாலிங்கம்’: நினைவலைகள்!

tr mahalingam - 2026

எனது நினைவலைகளில் இருந்து…

– By KH கிருஷ்ணன், செங்கோட்டை –

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஜூன் 16ல் கொண்டாடப்பட்டதாக அறிந்தேன். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையைச் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து 1978ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இயல், இசை, நாடகத் துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல்களைப் பாடி, தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக என பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியவர்.

தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என 1940 – 1950களில் மிகப் பிரபலமாக இருந்தார், டி.ஆர்.மகாலிங்கம். உச்ச த்வனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப் பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன. 

39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார். இவரது மேடை நாடகப் பாடலில் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, திரைத்துறையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார். இதுவே டி.ஆர்.மகாலிங்கத்தின் பின்னணி!

2017 ஜூன் மாதத்தில் சிருங்கேரி மஹா சன்னிதானம் மற்றும் சன்னிதானம் செங்கோட்டைக்கு விஜயம் செய்து, அம்மன் சந்நிதி தெருவில் அப்போது புதிதாக அமைக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னின்று சிறப்புற நடத்தி வைத்தார்கள்.

அதற்கு முன் சோழவந்தான் தென்கரை கிராமத்தில் இரண்டு ஆச்சார்யர்களும் முகாமிட்டு இருந்தார்கள். தென்கரையில் இருந்து ஆச்சார்யர்களை செங்கோட்டைக்கு அழைத்து வர ஒரு குழு தென்கரை சென்றது. அவர்கள் திரும்பி வந்தபோது சோழவந்தானில் மறைந்த பழம்பெரும் நடிகர் டி.ஆர். மஹாலிங்கம் வீட்டைப் பார்த்ததாகவும், அவர் தொடர்புடைய குடும்பத்தினரைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறினார்கள்.

சொல்லப் போனால், டி.ஆர். மஹாலிங்கம் செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெரு மாப்பிள்ளை. அவரது மச்சினர் திருவாளர் ஆண்டியின் வீடு பாரத் பெட்ரோலியம் ஹெச்.மஹாதேவன் வீட்டிற்கு எதிர் வீடுதான். நான் செங்கோட்டையில் ஆறாம் வகுப்பு படித்த காலத்தில் குற்றால சீசன் நேரத்தில் டி.ஆர்.மஹாலிங்கம் தனது குடும்பத்தோடு பெரிய காரில் அம்மன் சந்நிதித் தெருவில் இருந்த அவரது மாமனார் வீட்டுக்கு வருவார். அவரது பிள்ளை சுகுமார் ரொம்ப ஸ்டைல் பண்ணிக் கொள்வார். நாங்களும் அவரிடம் போய் ஏதாவது பேசிக் கொண்டிருப்போம்.

ஒரு முறை செங்கோட்டை மெயின் ரோட்டில் தற்போதும் இருக்கும் – ஸ்ரீ மூலம் ரீடிங் கிளப் – வாசகசாலையில் எனது தந்தை டி.ஆர்.மகாலிங்கத்திற்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்.

டி.ஆர்.மஹாலிங்கம் புதிய வெள்ளை ஜிப்பா, நல்ல வெளுத்த வேட்டி அணிந்து ஜம் என்று விழாவிற்கு வந்தார். விழா முடிந்ததும் அங்கு வந்திருந்த செங்கோட்டை மஹா ஜனங்கள், அவரை அவர் பாடிய பழைய பாடல் ஒன்றை பாடச் சொன்னார்கள்.

அவரும் தமது கந்தர்வக் குரலில் – பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா – என்ற பாடலைப் பாடினார். எனக்கு தலை கால் புரியவில்லை.
அந்தப் பாடலை எப்போது யுடியூப்பில் கேட்டாலும், அவரது அந்நாளைய அந்த ஸ்டைல்தான் நினைவுக்கு வரும். இந்தப் பாடலில் சாரங்கபாணியின் அபிநயம் ஜோராக இருக்கும். அதை இன்றளவும் பார்த்து ரசிக்கிறேன்.

ஓணம், சதுர்த்தி சிறப்பு ரயில்கள்; ராஜபாளையம் வழியாக ‘தாம்பரம்- கொச்சுவேலி’!

railway news - 2026
#image_title

விநாயக சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறைக்காக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக இரண்டு ஏ/சி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில்-1

வண்டி எண்:06035
தாம்பரத்தில் இருந்து.. 06.09.2024 முதல் 20.09.2024 வரை வெள்ளிக்கிழமைகளில் 3 சேவைகள்
தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில வெள்ளி
தாம்பரம் புறப்பாடு 19.30.கொச்சுவேலி வருகை: 11.30(சனி)

வண்டி எண்:06036
கொச்சுவேலியில் இருந்து … 07.09.2024 முதல் 21.09.2024 வரை சனிக்கிழமைகளில்.. 3 சேவைகள்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சனிக்கிழமை
கொச்சுவேலி புறப்பாடு 15.35 தாம்பரம் வருகை: 07.35(ஞாயிறு)

சிறப்பு ரயில்-2

வண்டி எண்:06153
தாம்பரத்தில் இருந்து.. 08.09.2024 முதல் 22.09.2024 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 3 சேவைகள்
தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில்
இயக்க நாள்: ஞாயிறு
தாம்பரம் புறப்பாடு: 21.4
கொச்சுவேலி வருகை: 13.40(திங்கள்)

வண்டி எண்:06154
கொச்சுவேலியில் இருந்து … 09.09.2024 முதல் 23.09.2024 வரை திங்கட்கிழமைகளில்.. 3 சேவைகள்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில்
இயக்க நாள்: திங்கள்
கொச்சுவேலி புறப்பாடு: 15.35.தாம்பரம் வருகை:*
07.35(செவ்வாய்) 3 அடுக்கு ஏ/சி எக்கானமி 14 பெட்டகள் இணைப்பு
முன்பதிவில்லா பெட்டிகள் கிடையாது.

முன்பதிவு நாளை(04.09.24/புதன்) காலை 08.00 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

modiji - 2026

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி முதல் முறையாக புருனே நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3, 2024) இன்று புருனே தாருஸலாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இது இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்புப் பயணமாகும்.

இந்தியா – புரூனே இடையே நட்புறவு 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இருநாட்டு இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று புரூனே புறப்பட்டு சென்றார்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி புரூனே புறப்பட்டு சென்றார். புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், விண்வெளிதுறை, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.

புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

“அடுத்த இரண்டு நாட்களில், புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்கிறேன். இந்த நாடுகளில் பல்வேறு ஈடுபாடுகளின் போது, ​​அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்,” என்று மோடி எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டார்.

புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை புதிய உச்சத்திற்கு முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக, சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த இதர மதிப்பிற்குரிய உறுப்பினர்களுடனான சந்திப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

புருனேயில் இருந்து, பிரதமர் மோடி புதன்கிழமை (செப்டம்பர் 4, 2024) நாளை சிங்கப்பூர் செல்கிறார்.

“ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் எமரிட்டஸ் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சிங்கப்பூரின் துடிப்பான வணிக சமூகத்தின் தலைவர்களையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.

“எங்கள் கிழக்காசியக் கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையில் இரு நாடுகளும் முக்கியமான பங்காளிகள். எனது வருகைகள் புருனே, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியத்துடனான நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனா – உலகுக்குப் பொதுவான பிரச்னை; இந்தியாவுக்கு சிறப்பு பிரச்னை: ஜெய்சங்கர்

jaishankar - 2026

உலகின் “பொதுவான சீனா பிரச்னை”க்கு மேலாக இந்தியாவுக்கு “சிறப்பு சீனா பிரச்னை” உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பேசினார். சனிக்கிழமை இன்று எல்லை மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளின் நிலை ஆகியவற்றில், சீனாவின் முதலீடுகளை ஆராய வேண்டும் என்று அவர்  கூறினார்.

புதுதில்லியில் எகனாமிக்ஸ் டைம்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய போது அவர் தெரிவித்த கருத்துகள்…

பல வழிகளில் சீனா பிரச்னையாக உள்ளது. அந்நாட்டின் தனித்துவமான அரசியல், பொருளாதாரமே இதற்கு காரணம். அதன் தனித்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், அங்கிருந்து வரும் தீர்வுகள், முடிவுகள் அனைத்தும் சிக்கலானதாக இருக்கும். வர்த்தகத்தில் சீனா அனுபவித்த நன்மைகளை கவனத்தில் கொள்ளாததால் பலர் அந்நாட்டுடனான வர்த்தகப் பற்றாக்குறை பற்றி புகார் செய்கிறார்கள்.

சீனாவைப் பற்றி நாம் மட்டும் விவாதிக்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு என அனைத்திலும் சீனாவைப் பற்றி மட்டுமே விவாதிக்கின்றனர். அந்நாட்டுடன் அமெரிக்கா பல வழிகளில் மோதி வருகிறது. எனவே, உண்மையில் இந்தியாவுக்கு மட்டும் சீனா பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும், உலகிற்கும் சீனா ஒரு பிரச்னையாக உள்ளது. 

சீனா விவகாரங்கள் என்பது, உலகின் முன் உள்ள ஒரு பொதுவான பிரச்னைதான்! ஆயினும்,  உண்மை என்னவென்றால், உலக நாடுகளுக்கான ஒரு பொதுவான பிரச்னையாக இருக்கும் சீனா பிரச்னைகள், இந்தியாவைப் பொறுத்தளவில் சிறப்பான பிரச்னையாக உள்ளது. அதாவது, சீனா என்பது, உலகின் பொதுப் பிரச்னையாக இருந்தாலும், இந்தியா தரப்பில் அது ஒரு சிறப்புப் பிரச்னையாகத் திகழ்கிறது… என்று குறிப்பிட்டார் ஜெய்சங்கர். 

இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான (WMCC) ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி பொறிமுறையின் 31வது கூட்டம் ஆகஸ்ட் 29 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை நிலவரம் குறித்து ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஜெய்சங்கரின் கருத்துக்கள் இவ்வாறு வெளி வந்துள்ளன.

கிழக்கு லடாக்கில் உள்ள (ஆக்சுவல் கண்ட்ரோல் லைன்) உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக 2020 மே மாதம் தொடங்கிய இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்களைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினரும் “வெளிப்படையான, ஆக்கபூர்வமான மற்றும் முன்னோக்கு” பரிமாற்றத்தைக் கொண்டிருப்பதாக இந்தியா வியாழக்கிழமை கூறியது. “வேறுபாடுகளைக் குறைக்கவும்” மற்றும் “நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு முன்கூட்டியே தீர்வு காணவும்” LAC உடன் உள்ள நிலைமை குறித்து பெய்ஜிங்கில் உள்ள  கருத்துகள் பகிரப்பட்டன. 

வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, இரு தரப்பினரும் “இராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலமான தீவிரத் தொடர்பை” ஏற்றுக்கொண்டனர். “வேறுபாடுகளைக் குறைத்தல்” என்ற சொற்றொடர் முதன்முறையாக எல்லைப் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பயன்படுத்தப்பட்டது. இது, இராஜதந்திர மொழியில், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

சனிக்கிழமையன்று, ஜெய்சங்கர் கூறுகையில், “பல வழிகளில் சீனா ஒரு தனித்துவமான பிரச்சனை, ஏனெனில் அது ஒரு தனித்துவமான அரசியல், அது ஒரு தனித்துவமான பொருளாதாரம். அந்தத் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளவும், அதைப் புரிந்துகொள்ளவும் ஒருவர் முயன்றாலொழிய, அதிலிருந்து வெளிவரும் தீர்வுகள், முடிவுகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் ஆகியவை சிக்கலாக இருக்கலாம்,” என்றார்.

“சீனாவுடனான வர்த்தகம், சீனாவுடனான முதலீடுகள், சீனாவுடனான பல்வேறு வகையான பரிவர்த்தனைகள் போன்றவற்றைப் பார்க்கும்போது… இது மிகவும் வித்தியாசமான வேலை செய்யும் நாடு என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உங்கள் அடிப்படைகள் குறையத் தொடங்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

“சீனாவுடனும் நமது சொந்த சூழ்நிலையுடனும் பொதுவான பிரச்சனை இருப்பதால், கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால். இந்தியா போன்ற ஒரு நாடு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே அதற்கான விவேகமான பதில் என்று நான் நினைக்கிறேன், ”என்று அமைச்சர் கூறினார்.

சீனாவுடன் முதலீடு செய்யக்கூடாது அல்லது சீனாவுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்ததில்லை என்றும்  வலியுறுத்திச் சொன்னார்.

“முதலீடுகள் விவகாரத்தில், சீனாவின் முதலீடுகள் ஆய்வு செய்யப்படும் என்பது பொது நிலைப்பாடு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளின் எல்லை நிலைக்கு ஏற்ப அது அமைகின்றது” என்றார் ஜெய்சங்கர்!

இருப்பினும், சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத தொலை நாடுகளும் அந்நாட்டின் முதலீடுகளை ஆய்வு செய்து வருகின்றன. ஐரோப்பாவிற்கு சீனாவுடன் எல்லைப் பகிர்தல் இல்லை, அமெரிக்காவிற்கு சீனாவுடன் எல்லை இல்லை, எனினும் அவர்கள் அதைச் செய்கிறார்கள். சீனாவுடன் உங்களுக்கு முதலீடுகள் உள்ளதா இல்லையா என்பது பிரச்சினை அல்ல, அது ஆம் அல்லது இல்லை என்ற பதில் அல்ல, சரியான அளவிலான ஆய்வு என்னவாக இருக்க வேண்டும், அதை நீங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுதான், ”என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

“சில நேரங்களில் இதை தேசியப் பாதுகாப்பு என்று நாம் தெளிவாகக் கண்டறிய வேண்டும் என மக்கள் எழுதும் விஷயங்களை நான் படிக்கும்போது, ​​அது இனி அப்படிச் செயல்படாது, ஏனெனில் தேசியப் பாதுகாப்பு என்பது விரிவடைந்துள்ளது. உங்கள் தொலைத்தொடர்பு சீனத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டால், நீங்கள் அதற்குச் செல்லாமல் இருக்க முடியுமா?” என்று  அவர் கேள்வி எழுப்பினார்.

“என் பார்வையில், ஒரு குறிப்பிட்ட மட்டத்தில், சில நாடுகளில் சில சூழ்நிலைகளில், பொருளாதாரத்திற்கும் பாதுகாப்புக்கும் இடையிலான கோடு மிகவும் மெல்லிய கோடு” என்ரார் அவர். 

எல்லையில் மோதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. மேலும் இரு தரப்பினரும் தலா 50,000-60,000 துருப்புக்களை கிழக்கு லடாக்கில் LAC யில் நிறுத்தியுள்ளனர். கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோவின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள் மற்றும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி போன்ற முந்தைய இருதரப்பு உரசல்களுக்கு, LAC உடன் இடையக மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் முட்டுக்கட்டையைத் தகர்த்து  சில தீர்வுகளை இரு தரப்பும் எட்டியுள்ளன. 

முன்னதாக, புதுதில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியபோது, பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலம் முடிந்து விட்டது” என்பதை வலியுறுத்திச் சொன்னார்.. 

“இனிமேல் பாகிஸ்தான் நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. எனவே பாகிஸ்தானுடன் எந்த மாதிரியான உறவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதே பிரச்னை.  

இந்தியா செயலற்ற நாடு கிடையாது. எந்த ஒரு நிகழ்வு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும், அதற்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம்.

பாகிஸ்தானில், பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டது. இத்தகைய அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது செயல்திட்டமாக வைத்து உள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பாகிஸ்தானின் கொள்கையை செயலற்றதாக்கி விட்டோம்.” என்று உறுதிபடத் தெரிவித்தார் அமைச்சர் ஜெய்சங்கர்.