Home Blog Page 185

மின் கட்டண உயர்வு- திமுக., அரசு வாக்களித்த மக்களின் முதுகில் குத்தி விட்டது!

mkstalin - 2026

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆகவும், 401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ. 6.15லிருந்து ரூ.6.45ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

0-400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.

401-500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.

501-600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.

601-800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.

801-1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.

1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.

ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

annamalai bjp tn leader - 2026

மாதாந்திர மின்கட்டண கணக்கீட்டு முறையை அமல் செய்க!

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

திமுக அரசு, கடந்த 2023 – 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், இந்த மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார். மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, மாதாமாதம் மின் கட்டணத்தைக் கணக்கெடுப்போம் என்று சொல்லி, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?

தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.

இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)

பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.

2021-22: 39,365 கோடி ரூபாய்
2022-23: 50,990 கோடி ரூபாய்
2023-24: 65,000 கோடி ரூபாய்

கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.

RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

anbumani ramadoss 2 16537188373x2 1 - 2026

மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு

மின்சாரக் கட்டணம்  ரூ.6000 கோடிக்கு உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு – தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசுபா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான  மின்சாரக் கட்டணத்தை  4.83%  அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது.  இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு  ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது.  ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை  ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை  விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு  ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில்  சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில்  ஊழல்  அதிகரிக்கவே வகை செய்யும்.

ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க.  உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம்  அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் முடிவடைந்த  பிறகு  இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.  விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான்  இந்த  கட்டண உயர்வு.

ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு  ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும். 

1205362 admkedappadi - 2026
#image_title

விடியா திமுக., அரசு – விடியா திமுக., முதல்வர்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் !

பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார்
விடியா திமுக முதல்வர்.

மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?

“சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்” என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. @mkstalin அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!
மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது,

மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி,
மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

தவெக., சார்பில் நடிகர் விஜய், காமராஜர் பிறந்த நாள் விழா!

kamaraj birthday by thaveka - 2026
#image_title

காமராஜர், விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

மதுரை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 ஆவது பிறந்த நாள் மற்றும் தவெக விஜய் 50 வது பிறந்த நாள் பொன்விழாவினை முன்னிட்டும், விளக்குத்தூண் அருகே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு விஜய் கல்லனை அன்பன் மற்றும் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து யானைமலைக் குவாரி அருகே உள்ள டான் போஸ்கோ துவக்கப்பள்ளியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட் புக், தட்டு, டம்ளர் மற்றும் நலத் திட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா த.வெ.க மாநில உறுப்பினர் சேர்க்கை துணைச் செயலாளரும் வடக்கு மாவட்டத் தலைவருமான விஜயன்பன் கல்லணை தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும், த.வெ.க நிர்வாகிகள் பாண்டியராஜன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மனோகர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், த.வெ.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெர்மனியில் ஸ்பெயின் கைப்பற்றிய யூரோ கால்பந்து கோப்பை!

euro football 2024 spain - 2026

யூரோ கால்பந்துக்கோப்பை 2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஜெர்மனியில் யூரோ கோப்பைப் போட்டி

          டி20 உலகக் கொப்பை கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது யூரோ கால்பந்துக் கோப்பை போட்டி 14 ஜூன் 2024 முதல் 14 ஜூலை 2024 வரை ஜெர்மனியில் நடந்தது. 24 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஜியார்ஜியா அணி முதன் முறையாகக் கலந்துகொண்டது. யூரோ கோப்பை ஜெர்மனியில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். ஆனால் ஒருங்கிணைந்த ஜெர்மனியில் நடப்பது முதல் முறை. 1988ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்தது.

          இத்தாலி சென்ற முறை கோப்பை வென்றது நினைவிருக்கலாம். ஆனால் இந்த முறை இத்தாலி காலிறுதிச் சுற்றிற்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. போட்டியை நடத்துகின்ற ஜெர்மனி, இந்த முறை காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஆட்டம் நடந்த முறை

          விளையாடிய 24 அணிகளும் ஆறு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் B பிரிவில் ஸ்பெயின், க்ரோஷியா, இத்தாலி, அல்பேனியா ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் C பிரிவில் ஸ்லோவினியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் D பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஃப்ரான்சு ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் E பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ரோமானியா, உக்ரேன் ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப்  F பிரிவில் துருக்கி, ஜியார்ஜியா, போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

முதல் சுற்று – லீக் சுற்று

முதல் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14 முதல் 26ஆம் தேதி வரை நடந்தன. இதன் முடிவில் குரூப் A பிரிவில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் B பிரிவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.  குரூப் C பிரிவில் மூன்று அணிகள் தேர்வாயின. அவை இங்கிலாந்து (5 புள்ளிகள்), டென்மார்க் (3 புள்ளிகள்), ஸ்லோவினியா (3 புள்ளிகள்) அணிகளாகும். குரூப் D பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின. அவையாவன ஆஸ்திரியா (6 புள்ளிகள்), ஃபிரான்சு (5 புள்ளிகள்), நெதர்லாந்து (4 புள்ளிகள்).

          குரூப் E பிரிவிலும் குரூப் F பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின.  குரூப் E பிரிவில் ரோமானியா (4 புள்ளிகள்), பெல்ஜியம் (4 புள்ளிகள்), ஸ்லோவாகியா (4 புள்ளிகள்)  குரூப் F பிரிவில் போர்ச்சுகல் (6 புள்ளிகள்), துருக்கி (6 புள்ளிகள்) ஜியார்ஜியா (4 புள்ளிகள்) ஆகிய அணிகள் தேர்வாயின.

euro football 2024 - 2026

நாக்-அவுட் சுற்று ரவுண்ட் ஆஃப் 16

          இந்தச் சுற்று 29 ஜூன் முதல் ஜூலை ஒன்று வரை நடந்தது. இந்தச் சுற்றின் மிகப்பெரிய அப்செட் சுவிட்சர்லாந்து அணியிடம் நடப்பு சாம்பியன் இத்தாலி அணி தோற்றதுதான். காலிறுதிச் சுற்றிற்கு ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், ஃபிரான்சு, நெதர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் தேர்வாயின.

காலிறுதிச் சுற்று

காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5 மற்று 6 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனி  அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஃபிரான்சு அணியிடம் பெனால்டி கார்னர் முறையில் 5-3 என்ற கோல்கணக்கில் தோற்றாது. மூன்றாவது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி துருக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுவிட்சர்லாந்து  அணியை பெனால்டி கார்னர் முறையில் 5-3  என்ற கோல் கணக்கில் வென்றது.

அரையிறுதி ஆட்டங்கள்

          அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 மற்று 10 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஃபிரான்சு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதி ஆட்டம்

          இறுதி ஆட்டம் பெர்லினில் ஜூலை 14ஆம் தேதி அன்று நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாத்யில் 47ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார். இங்கிலாந்தின் கோல் பாமர் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் ஸ்பெயினின் மிகேல் ஒயர்ஸபால் 86ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

          ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கோப்பையைக் கைப்பற்றியுள்ளது, இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது.  கோப்பையை வென்ற அணிக்கு ஏறத்தாழ 2575 மில்லியன் ரூபாய் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

ஜூலை 15: காமராஜர் பிறந்த நாள் விழா… மதுரையில்!

kamarajar birthday in madurai - 2026
#image_title

மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா

நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி, கெவின் குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஆண்டனி மைக்கேல் விஜயன், கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கினார். முடிவில், அக்ஷிதா நன்றி கூறினார்.

சிறப்பு விருந்தினர்க்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை , ஜெயலட்சுமி, சுபா ஆகியோர்  செய்திருந்தனர்.


சோழவந்தான் மேலக்கால் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதியில், காமராஜரின் பிறந்தநாள்
விழா கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, இந்து நாடார் உறவின்முறை சார்ந்த பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் நாயக்கன்பட்டி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி. பி. கந்தசாமி, சோழவந்தான் காமராஜர் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் மேலக்கால் நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் மணிகண்டன் மற்றும் சோழவந்தனை சேர்ந்த சரவணன் ஐயப்ப ராஜா பாண்டித்துரை மேலக்கால் அழகர் நாகராஜ் பாண்டி பாலா மகளிர் அணி சேர்ந்த சித்ரா மங்கையர்க்கரசி கிருஷ்ணவேணி மல்லிகா மற்றும் இந்து நாடார் உறவின் முறை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள்
என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்ட து. தொடர்ந்து, மேலக்கால் நாடார் இளைஞர் பேரவை சார்பில் மேலக்கால், கிராமத்தில் காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி
மரியாதை செய்யப்பட்டது. இதில், நாடார் இளைஞர் பேரவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


விக்கிரமங்கலம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா

மதுரை, விக்கிரமங்கலம் பகுதியில், கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
விக்கிரமங்கலத்தில் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு ,
மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின் முறைத் தலைவர் ராஜேந்திரன், செயல் தலைவர் வையாபுரி, பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தர பாண்டியன், உப செயலாளர் நாகராஜ் என்ற மனோகரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மற்றும் கேரன் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி ஆகிய பள்ளிகளில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மாலை

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது . வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம், செந்தில், செல்வராணி, ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, அவைத் தலைவர் தீர்த்தம் முன்னால் பேரூராட்சி தலைவர் ஐயப்பன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி ,நிஷா கௌதம ராஜா, முத்துலட்சுமி, சதீஷ் சிவா நிர்வாகிகள் மில்லர், சங்கங்கோட்டை ரவி, சந்திரன், நூலகர் ஆறுமுகம், மற்றும் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

It’s the Democratic (D)evil Stupid!

donald tump shot - 2026

By      Narasimhan Vijayaraghavan

13th July, 2024 will go down in US history as yet another day when there was an attempt to assassinate a political leader. That Donald J Trump survived  a whistling bullet on the edge of his  right ear lobe is a miracle. Who knows? He survived as he may be destined to return to power on No, 6,2024.

American democracy may be the oldest.

But, it may be the most tragic ever, over  248 years since it declared independence on July 4,1776. Assassinations and assassination attempts have long marked American history, often as stark manifestations of hatred and political violence. It reads a weird and scary roll call of honour. From Abraham Lincoln to John F. Kennedy, these acts have not only shocked the nation but also left indelible marks on its political landscape.

The assassination of President Abraham Lincoln in 1865 stands as one of the most pivotal moments in American history. Lincoln, who led the nation through the Civil War and worked towards the abolition of slavery, was shot by John Wilkes Booth, a Confederate sympathizer, at Ford’s Theatre. Booth’s act was driven by deep-seated hatred and opposition to Lincoln’s policies, particularly his efforts to end slavery and reunite the nation. Lincoln’s death not only plunged the country into mourning but also highlighted the intense political and social divisions of the era.

In 1881, President James A. Garfield was shot by Charles J. Guiteau, a disgruntled office seeker. Guiteau’s motivations were rooted in personal grievances and delusions of political entitlement, reflecting the volatile nature of political patronage at the time. Garfield’s assassination underscored the dangers of the spoils system and eventually led to civil service reform. His death, after lingering for weeks, also exposed the limitations of medical knowledge and care in that era.

President William McKinley’s assassination in 1901 by Leon Czolgosz, an anarchist, brought the threat of radical political ideologies to the forefront. Czolgosz’s act was fueled by a belief that McKinley represented oppressive government and corporate power. This event highlighted the growing influence of anarchist movements and prompted the Secret Service to take on a permanent role in protecting the President.

The assassination of President John F. Kennedy in 1963 remains one of the most scrutinized events in American history. Lee Harvey Oswald, the alleged assassin, had a murky background with possible connections to both communism and anti-Castro movements.

Kennedy’s death not only shocked the nation but also gave rise to numerous conspiracy theories, reflecting widespread distrust in government and institutions. The tragic event profoundly affected the national psyche and marked a turbulent era of American history.

Presciently JFK  had said that if an assasination dared to risk his life no amount security or secret service protocols could save his life.

The 1960s were marked by significant social upheaval and violence. The assassination of civil rights leader Martin Luther King Jr. in 1968 by James Earl Ray was a raw exhibition of racial hatred. King’s death was a devastating blow to the civil rights movement and highlighted the intense racial tensions in the country.

Just two months later, Robert F. Kennedy, a presidential candidate and advocate for social justice, was assassinated by Sirhan Sirhan. Sirhan, a Palestinian Arab, cited Kennedy’s support for Israel as his motive. These assassinations underscored the era’s deep political and social divisions and the volatile nature of American society during this period.

In 1981, President Ronald Reagan survived an assassination attempt by John Hinckley Jr., who was driven by an obsession with actress Jodie Foster. While not politically motivated, the attack highlighted the perpetual vulnerability of U.S. Presidents and led to increased security measures. Reagan’s survival and subsequent handling of the incident boosted his popularity and underscored the resilience of American leadership.

Assassinations and assassination attempts on U.S. Presidents and political leaders serve as raw exhibitions of hatred and political violence, reflecting the deep-seated divisions and extreme sentiments that can arise in American society.

These acts have not only altered the course of history but also prompted significant changes in policies, security measures, and national consciousness. They remind us of the fragility of democratic institutions and the ever-present need to address underlying social and political tensions.

Where is USA  headed? In  recent times, American politics has become increasingly divisive and polarized, affecting not only the public sphere but also the private lives of citizens. This polarization is evident in the growing reluctance of families to discuss politics during gatherings, such as at the dinner table. There needs to be a serious exploration  the reasons behind this heightened polarization, its impact on interpersonal relationships, and the broader implications for American society.

Political polarization in the United States has deep historical roots, but recent trends have intensified the divide. Several factors contribute to this as Media Fragmentation and Echo Chambers. The rise of cable news, talk radio, and social media platforms has created echo chambers where individuals are exposed primarily to viewpoints that reinforce their own beliefs. This media fragmentation has led to a more divided public, with little common ground for constructive dialogue.

Both major political parties- Democrats & Republicans have increasingly catered to their base supporters, often adopting more extreme positions to energize their voter base.  The emphasis on identity politics has contributed to the polarization by framing political issues in terms of group identities rather than policy differences.  Growing economic inequality has also fueled political divisions.

So much so, this  heightened polarization in American politics has had a profound impact on family dynamics. Political discussions, once a staple of family gatherings, have become increasingly contentious and are often avoided to maintain harmony.

If this is the reality, headed to POTUS elections, it  is not dance of democracy, as in our 2024 Indian General Elections,  but a horrific  dance of the (d)evil!

No wonder a 20 year old GenZ in  Thomas Matthew ‘Crooks’ has emerged as the suspect.

It’s the Democratic D(e)vil Stupid! What else?


( Writer is practicing advocate in the Madras High Court)


மதுரையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்!

new busus in madurai - 2026

மதுரை: மதுரை மாட்டுத்தவணி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்துகள் இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (15.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக,
39 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், பத்தாண்டுகள் விபத்தின்று பேருந்து இயக்கிய 10 ஓட்டுனர்களுக்கு 100 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , தமிழ்நாடு அரசு போக்குவரத்
துக் கழக மேலாண் இயக்குனர் (மதுரை மண்டலம்) ஆ.ஆறுமுகம் , மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆடி மாத பூஜைக்காக கொட்டும் மழையில் சபரிமலை நடை திறப்பு!

sabarimalai nadai open - 2026
#image_title

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு கொட்டும் மழையில் திறக்கப்பட்டது.

நாளை கேரளாவில் ஆடி கற்கடக மாத பிறப்பு என்பதால் நாளை முதல் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.

தமிழகத்தில் ஆடி மாதம் வரும் புதன்கிழமை பிறக்கிறது. கேரளாவில் ஒரு நாள் முன்கூட்டியே நாளை ஆடி மாதப் பிறப்பு துவங்குவதால் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உதயஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் தொடங்கி நடைபெறும்.

கொட்டும் மழையால் தற்போது பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பக்தர்கள் மழையில் நடந்து சபரிமலைக்கு பம்பையில் இருந்து நடை பயணம் செல்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

கேரளாவில் கடந்த இரு நாட்களாக மீண்டும் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் சபரிமலை வனப்பகுதி பெரியார் புலிகள் வனச் சரணாலய பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை!

rail crew nest - 2026

ரயில்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஆவர். இவர்கள் ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், ஓடும் தொழிலாளர்கள் (Running Staff) என, அழைக்கப் படுகின்றனர்.

இரவு பகல் பாராது தொடர்ந்து, தொலைதூர ரயில் நிலையங்களுக்கு ரயில்களை இயக்கும் இவர்களுக்கு முக்கிய ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் அமைக்கப் படுகிறது.

இதே போல, மதுரை ரயில்வே காலனியில் ரூபாய் 5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய ஓடும் தொழிலாளர்கள் ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த ஓய்வு விடுதிக்கு “ரயில் மரம் – ஓடும் தொழிலாளர்கள் கூடு” என பெயர் வைக்கப்
பட்டுள்ளது.

இந்த நவீன ஓய்வு அறை 977 சதுர அடி தரைதளமும், 740 சதுர அடி முதல் தளமுமாக விசாலமாக அமைக்கப் பட்டுள்ளது. ஓடும் தொழிலாளர்களுக்கு, ஒருவருக்கு ஒரு அறை என்ற வகையில் 40 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில், குளிர்சாதன வசதி, கட்டில் மெத்தை, மின் விளக்குகள், மின் விசிறி, மேஜை, நாற்காலி, உடைமைகளை வைக்க தனி மேஜை, படிப்பதற்கான தனி மின் விளக்கு, கண்ணாடி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பெண் லோகோ பைலட்டுகளுக்கு மூன்று படுக்கைகள் கொண்ட இரண்டு தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கு, இரு படுக்கைகள் கொண்ட ஒரு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வறையில், ஒரே நேரத்தில் 48 பேர் தங்கி ஓய்வெடுக்க முடியும். இந்த நவீன ஓய்வு விடுதியில் சமையலறை, உணவு அருந்தும் அறை, புத்தகங்கள் படிக்கும் அறை, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிவளாகப் பகுதியில் நடைப்பயிற்சிக்கு பசுமை பூங்காக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கும் வகையில் ,
இந்த ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது.

ஓடும் தொழிலாளர்களுக்கு, ஓடும் தொழிலாளர் ஓய்வறை மேலாண்மை திட்டம் என்ற மென்பொருள் வாயிலாக அறைகள் ஒதுக்கப்படுகின்றன. கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எழில்மிகு விளக்குகள், சுவர் வண்ணங்கள், கட்டுப்பாடற்ற காற்றோட்டம் கொண்ட ஓய்வு விடுதி ஓடும் தொழிலாளர்களுக்கு, மன அமைதியுடன் ஓய்வெடுக்க சிறந்த இடமாக திகழ்கிறது. ஓய்வு விடுதியின் முக்கிய இடங்களில் அழகாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகள் மற்றும் பணி பயிற்சி செய்திகள், ரயில்களை பாதுகாப்பாக இயக்க தொழிலாளர்களுக்கு உதவுகிறது.

90% மானிய விலையில் தரமான, சுவையான சைவ, அசைவ உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்
பட்டுள்ளன. ஓய்வு அறைக் காப்பாளர் 24 மணி நேரமும் ஓய்வு அறையில் தங்கியுள்ள ஓடும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.

மேலும், ஓடும் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக அவர்களை ஓய்வில் இருந்து எழுப்பி குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க காப்பாளர் உதவுகிறார். இந்த ஓய்வு விடுதி அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர் வாயிலாக நிர்வகிக்கப் படுகிறது.

ஓடும் தொழிலாளர்கள் ஓய்வு அறையில் உள்ள “கியூ ஆர் கோடு” ஸ்கேன் செய்து ஓய்வு விடுதி செயல்பாடு பற்றிய பின்னூட்டம் அளிக்கும் வசதியும் உள்ளது.

ஓய்வு விடுதி செயல்பாடு குறித்து தினந்தோறும் மேற்பார்வையாளர் அளவிலான ஆய்வு நடைபெறுகிறது. மேற்பார்வையாளர் ஆய்வறிக்கை அதிகாரிகள் அளவில் விவாதிக்கப்பட்டு ஓய்வு விடுதி சிறப்பாக செயல்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன ஓய்வு விடுதி ஓடும் தொழிலாளர்கள் பணிக்கு பிறகு உரிய ஓய்வெடுத்து மீண்டும் ரயில்களை பாதுகாப்பாக, குறித்த நேரத்தில் இயக்க உதவும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜய் ஆதிராஜ் இயக்கும் ‘நொடிக்கு நொடி’ படப்பிடிப்பு ஆரம்பம்!

vijay adhiraj nodikku nodi - 2026

நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது

தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக ‘நொடிக்கு நொடி’ எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.

நாக்ஸ் ஸ்டுடியோஸ்’ ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் ‘செம்பி’ புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது ‘நொடிக்கு நொடி’.

திரைப்படம் குறித்து பேசிய விஜய் ஆதிராஜ், “விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு ‘நொடிக்கு நொடி’ மூலம் நனவகிறது.

பரபரப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய விஜய் ஆதிராஜ், “அம்ரேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமையான இசைக் கலைஞரான அவரது முழு பரிமாணமும் இப்படத்தில் வெளிப்படும். நான் இயக்கிய ‘புத்தகம்’ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் முன்னணி எடிட்டராக திகழும் கெவின் ‘நொடிக்கு நொடி’ திரைப்படத்தின் தொடர்பை கையாளுகிறார். நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவுக்கு கோபிநாத், கலை இயக்கத்திற்கு ராமலிங்கம், நடனத்திற்கு ராஜு சுந்தரம், சண்டை பயிற்சியாளர் தினேஷ் காசி என முன்னணி கலைஞர்கள் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஜி கண்ணன் & பாலு கே நிமோ. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் ‘நொடிக்கு நொடி’யை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.

இந்தியா Vs ஜிம்பாப்வே டி-20 தொடர் (2024): சாதித்த இளம் பட்டாளம்!

ind vs zim - 2026

இந்தியா Vs ஜிம்பாப்வே டி-20 தொடர் (2024): சாதித்த இளம் பட்டாளம்!

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் ஜூலை 2024 இல் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட சுற்றுப்பயணம் செய்தது. பிப்ரவரி 2024 இல், ஜிம்பாப்வே கிரிக்கெட் இந்தப் பயணத்திட்டத்தை உறுதிப்படுத்தியது.

          இந்தத் தொடரில் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா அணித்தலைவராக இருந்தார்.  பிற வீரர்கள் வருமாறு – ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், தென்டை சத்தரா, லூக் ஜாங்வே, அப்பாவி காயா, கிளைவ் மடாண்டே (விக்கட் கீப்பர்), வெஸ்லி மாதவேரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, முசரபானி ஆசீர்வாதம், டியான் மியர்ஸ், அந்தும் நக்வி, ரிச்சர்ட் ங்கராவா, மில்டன் ஷும்பா.

          இந்திய அணி டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 29 ஜூன் 2024 அன்று விளையாடியதாலும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்தர் ஜதேஜா ஆகியோர் டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வினை அறிவித்ததாலும், இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்பி ஜிம்பாப்வே செல்ல நேரம் இல்லாததாலும் ஜிம்பாப்வேக்கு வேறு அணி அனுப்பப்பட்டது. அந்த அணிக்கு சுப்மன் கில் அணித்தலைவராக இருந்தார். பிற வீரர்கள் – கலீல் அகமது, ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கட் கீப்பர்), அவேஷ் கான், முகேஷ் குமார், ரியான் பராக், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கட் கீப்பர்), அபிஷேக் சர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கட் கீப்பர்), ரிங்கு சிங், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர்.

          இந்திய அணியில் முதலில் நிதீஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டார். ஆனால் 26 ஜூன் 2024 அன்று, காயம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார், அவருக்கு பதிலாக சிவம் துபே சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் சர்மா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அனியில் சேர்க்கப்படனர். அனைத்து ஆட்டங்களும் ஹராரேயில் உள்ள  ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடபெற்றன.

          முதாலவது டி20 ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 115/9 ரன் எடுத்தது. இரண்டாவடாக ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் 102 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணியில் கிளைவ் மடாண்டே 25 பந்துகளில் 29 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவி பிஷ்னோய் 13 ரன் கொடுத்து 4 விக்கட் எடுத்தார். ஷுப்மான் கில் 29 பந்துகளில்  31 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் டெண்டாய் சதாரா 16 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜிம்பாப்வேயின் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா அறிவிக்கப்பட்டார்.

          டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. டி20 போட்டிகளில் முதன்முறையாக இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்தார். துருவ் ஜூரல், ரியான் பராக் மற்றும் அபிஷேக் சர்மா (இந்தியா) ஆகியோர் டி20 ஐ அறிமுகம் ஆயினர்.

          இரண்டாவது டி20 7 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 234/2 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் 134 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன் அடித்தார். ஜிம்பாப்வே அணியின் வெலிங்டன் மசகட்சா 29 ரன் கொடுத்து 1 விக்கட் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி மாதவேரே 39 பந்துகளில் 43 ரன் எடுத்தார். அவேஷ் கான் 3 விக்கட்டுகள் எடுத்தார். இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா  அறிவிக்கப்பட்டார்.

          டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. சாய் சுதர்சன் (இந்தியா) தனது டி20யில் அறிமுகமானார். அபிஷேக் சர்மா (இந்தியா) டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு ரன் வித்தியாசத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி இதுவாகும்.

          மூன்றாவது டி20 ஆட்டம் 10 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா அனி 20 ஓவர்களில் 182/4 ரன் எடுத்தது. எதிராக ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில்  ஆறு விக்கட் இழப்பிற்கு 159 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் அணித்தலைவர் ஷுப்மான் கில் 49 பந்துகளில் 66 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 2 விக்கட் எடுத்தார். அந்த அணியின் டியான் மியர்ஸ் 49 பந்துகளில் 65 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாஷிங்டன் சுந்தர் 15 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக வாஷிங்டன் சுந்தர் அறிவிக்கப்பட்டார்.

          இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சிகந்தர் ராசா டி20யில் தனது 5,000வது ரன் எடுத்தார். டி20யில் இந்தியாவின் 150வது வெற்றி இதுவாகும்.

          நான்காவது டி20 13 ஜூலை 2024 அன்று நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 152/7 எடுத்தது. எதிராக இந்தியா 15.2 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 156 எடுத்தது. சிக்கந்தர் ராசா 28 பந்துகளில் 46 ரன் எடுத்தார். கலீல் அகமது 2 விக்கட்டுகள் எடுத்தார். இந்திய அணியின்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன் எடுத்தார். இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. துஷார் தேஷ்பாண்டே தனது இந்த் ஆட்டத்தில் அறிமுகமானார். டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார்.

          ஐந்தாவது டி20 ஆட்டம் இன்று (14.07.2024) நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 167/6 ரன் எடுத்தது.  இரண்டாவதாக ஆடிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 125 ரன் எடுத்தது. இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் ஆசிர்வாதம் முசரபனி 2 விக்கட்டுகள் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் டியன் மையர்ஸ் 34 ரன் களும், தடிவானாஷே மருமணி 27 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியின் முகேஷ் குமார் 4 விக்கட்டுகளையும் ஷிவம் துபே 2 விக்கட்டுகளும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 42 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          முதல் ஆட்டத்தில் பயணக் களைப்பு காரணமாக இந்தியா தொல்வி அடைந்தது எனச் சொல்லலாம். ஆயினும் இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கிறது.