Home Blog Page 186

இந்தியா Vs ஜிம்பாப்வே டி-20 தொடர் (2024): சாதித்த இளம் பட்டாளம்!

ind vs zim - 2026

இந்தியா Vs ஜிம்பாப்வே டி-20 தொடர் (2024): சாதித்த இளம் பட்டாளம்!

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் ஜூலை 2024 இல் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட சுற்றுப்பயணம் செய்தது. பிப்ரவரி 2024 இல், ஜிம்பாப்வே கிரிக்கெட் இந்தப் பயணத்திட்டத்தை உறுதிப்படுத்தியது.

          இந்தத் தொடரில் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா அணித்தலைவராக இருந்தார்.  பிற வீரர்கள் வருமாறு – ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், தென்டை சத்தரா, லூக் ஜாங்வே, அப்பாவி காயா, கிளைவ் மடாண்டே (விக்கட் கீப்பர்), வெஸ்லி மாதவேரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, முசரபானி ஆசீர்வாதம், டியான் மியர்ஸ், அந்தும் நக்வி, ரிச்சர்ட் ங்கராவா, மில்டன் ஷும்பா.

          இந்திய அணி டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 29 ஜூன் 2024 அன்று விளையாடியதாலும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்தர் ஜதேஜா ஆகியோர் டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வினை அறிவித்ததாலும், இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்பி ஜிம்பாப்வே செல்ல நேரம் இல்லாததாலும் ஜிம்பாப்வேக்கு வேறு அணி அனுப்பப்பட்டது. அந்த அணிக்கு சுப்மன் கில் அணித்தலைவராக இருந்தார். பிற வீரர்கள் – கலீல் அகமது, ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கட் கீப்பர்), அவேஷ் கான், முகேஷ் குமார், ரியான் பராக், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கட் கீப்பர்), அபிஷேக் சர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கட் கீப்பர்), ரிங்கு சிங், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர்.

          இந்திய அணியில் முதலில் நிதீஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டார். ஆனால் 26 ஜூன் 2024 அன்று, காயம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார், அவருக்கு பதிலாக சிவம் துபே சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் சர்மா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அனியில் சேர்க்கப்படனர். அனைத்து ஆட்டங்களும் ஹராரேயில் உள்ள  ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடபெற்றன.

          முதாலவது டி20 ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 115/9 ரன் எடுத்தது. இரண்டாவடாக ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் 102 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணியில் கிளைவ் மடாண்டே 25 பந்துகளில் 29 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவி பிஷ்னோய் 13 ரன் கொடுத்து 4 விக்கட் எடுத்தார். ஷுப்மான் கில் 29 பந்துகளில்  31 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் டெண்டாய் சதாரா 16 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜிம்பாப்வேயின் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா அறிவிக்கப்பட்டார்.

          டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. டி20 போட்டிகளில் முதன்முறையாக இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்தார். துருவ் ஜூரல், ரியான் பராக் மற்றும் அபிஷேக் சர்மா (இந்தியா) ஆகியோர் டி20 ஐ அறிமுகம் ஆயினர்.

          இரண்டாவது டி20 7 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 234/2 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் 134 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன் அடித்தார். ஜிம்பாப்வே அணியின் வெலிங்டன் மசகட்சா 29 ரன் கொடுத்து 1 விக்கட் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி மாதவேரே 39 பந்துகளில் 43 ரன் எடுத்தார். அவேஷ் கான் 3 விக்கட்டுகள் எடுத்தார். இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா  அறிவிக்கப்பட்டார்.

          டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. சாய் சுதர்சன் (இந்தியா) தனது டி20யில் அறிமுகமானார். அபிஷேக் சர்மா (இந்தியா) டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு ரன் வித்தியாசத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி இதுவாகும்.

          மூன்றாவது டி20 ஆட்டம் 10 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா அனி 20 ஓவர்களில் 182/4 ரன் எடுத்தது. எதிராக ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில்  ஆறு விக்கட் இழப்பிற்கு 159 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் அணித்தலைவர் ஷுப்மான் கில் 49 பந்துகளில் 66 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 2 விக்கட் எடுத்தார். அந்த அணியின் டியான் மியர்ஸ் 49 பந்துகளில் 65 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாஷிங்டன் சுந்தர் 15 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக வாஷிங்டன் சுந்தர் அறிவிக்கப்பட்டார்.

          இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சிகந்தர் ராசா டி20யில் தனது 5,000வது ரன் எடுத்தார். டி20யில் இந்தியாவின் 150வது வெற்றி இதுவாகும்.

          நான்காவது டி20 13 ஜூலை 2024 அன்று நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 152/7 எடுத்தது. எதிராக இந்தியா 15.2 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 156 எடுத்தது. சிக்கந்தர் ராசா 28 பந்துகளில் 46 ரன் எடுத்தார். கலீல் அகமது 2 விக்கட்டுகள் எடுத்தார். இந்திய அணியின்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 93 ரன் எடுத்தார். இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. துஷார் தேஷ்பாண்டே தனது இந்த் ஆட்டத்தில் அறிமுகமானார். டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார்.

          ஐந்தாவது டி20 ஆட்டம் இன்று (14.07.2024) நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 167/6 ரன் எடுத்தது.  இரண்டாவதாக ஆடிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 125 ரன் எடுத்தது. இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் ஆசிர்வாதம் முசரபனி 2 விக்கட்டுகள் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் டியன் மையர்ஸ் 34 ரன் களும், தடிவானாஷே மருமணி 27 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியின் முகேஷ் குமார் 4 விக்கட்டுகளையும் ஷிவம் துபே 2 விக்கட்டுகளும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 42 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          முதல் ஆட்டத்தில் பயணக் களைப்பு காரணமாக இந்தியா தொல்வி அடைந்தது எனச் சொல்லலாம். ஆயினும் இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கிறது.

வருவாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்ல! ஆனாலும் இங்கே மதுரை கோட்ட அதிகாரிகளின் புறக்கணிப்பு ஏன்?

railway news - 2026
#image_title

ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதிக வருவாய் ஈட்டும் மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் வழித்தடமான கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில் செங்கோட்டை ராமேஸ்வரம் ரயில்களை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற 2023-2024 நிதியாண்டிற்காண ரயில்வே வருவாய் தரவினை இந்திய ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கோட்டவாரியான வருவாய் விவரத்தில் மதுரை கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மதுரை ரயில் நிலையம் முதலிடத்தையும், திருநெல்வேலி ரயில்நிலையம் இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் ரயில்நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

விருதுநகர் ரெயில்நிலையத்தினை பொறுத்த வரை ₹25,17,78,990 வருமானம் ஈட்டி ஆறாம் இடத்தில் உள்ளது.

மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.

இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் சென்னைக்கு பகல் நேர தினசரி ரெயில் இல்லை.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்க அறிவிக்கப்பட்டு ரயில்வே கால அட்டவணையில் இடம்பெற்ற செங்கோட்டை தாம்பரம் செங்கோட்டை தினசரி பகல் நேர ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில்ரயில்கள் தற்போது அகல ரயில் பாதையாக போடப்பட்டபின் மீண்டும் இயங்கவில்லை.

மேலும் தென்காசி மக்களவைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெங்களூரு கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு ரெயில் வசதி கிடையாது.

எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போது செங்கோட்டை-தாம்பரம், செங்கோட்டை சென்னை சிலம்பு அதிவிரைவு ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களை தினமும் இயக்க வேண்டும்.

மேலும் மும்பை, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி ராஜபாளையம் வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பெங்களூரு சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு திருவனந்தபுரம்-புனலூர் கன்னியாகுமரி புனலூர் ரயில்கள் செங்கோட்டை திருநெல்வேலி வரை நேரடி ரெயில் சேவையாக இயக்க வேண்டும் – என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக மோசடி; மதுரையில் பரபரப்பு!

madurai travels ayodhya issue - 2026
  • மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக அயோத்தியா அழைத்து செல்வதற்காக 106 பேரிடம் விமான டிக்கெட் புக் செய்து மோசடி!
  • பயணிகள் – டிராவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் 106 பயணிகளுக்கும் வரும் 18ம் தேதி அயோத்தியா செல்ல ஏற்பாடு.

மதுரையில் இருந்து ஆன்மீக சுற்றுலா மூலம் அயோத்தி செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்துச் செல்வதற்காக கூறி சேலம் ஜே.பி. டிராவல்ஸ் நிறுவனம் தலா 1 நபருக்கு விமான கட்டணம் தங்கும் வசதி உள்பட பணம் 29 ஆயிரம் வசூல் செய்து செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து அயோத்தியா செல்வதற்காக 106 பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தனர்.

106 பயணிகள் அனைவரும் டெல்லி செல்ல இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர் . அப்படி எதுவும் புக் செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறியதையடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் ஜே.பி. டிராவல்ஸ் மேலாளார்
ராஜா பயணிகளிடம் கலந்து பேசி, வரும் 18ம் தேதி 106 பயணிகளையும் அயோத்தி அழைத்துச் செல்வதாகக் கூறியதை அடுத்து, பயணிகள் சமாதானம் அடைந்தனர்.

பின்னர் டிராவல்ஸ் நிறுவன ஏற்பாட்டின் படி, 106 பயணிகளும் சேலம் புறப்பட்டுச் சென்றனர்!

காங்கிரஸ் என்ற வாஷிங் மெஷின்

selvaperunthagai ks alagiri edited - 2026

என் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என்று அண்ணாமலை சொல்லி விட்டார் அவரை ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன் – சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் MP – இது செய்தி

இனி நம் கற்பனை உரையாடல்!

நிருபர் : ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?

சசி : அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் .

நிருபர் : ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார் எங்க கட்சியில் கிடையாது.

நிருபர் : நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள் அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார் அப்ப அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

அப்படி என்றால் ஒருவன் எத்தனை கொலை செய்தாலும் பரவாயில்லை, எத்தனை வெடிகுண்டு சம்பவங்களை நடத்தினாலும் பரவாயில்லை?

எத்தனை ரூபாய் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை,

எத்தனை முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை,

அதோடு உங்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அடித்து உடைத்தவன் என்றாலும் பரவாயில்லை,

ஏன் உங்கள் கட்சி தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகளோடு தொடர்பில் உள்ளவன் என்றாலும் பரவாயில்லை,

அவன் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட்டால் அவனுக்கு தலைவர் பதவி கொடுத்து விடுவீர்கள் அப்படித்தானே?

நீங்க பாஜகவை வாஷிங் மெஷின் என்று சொன்னீங்க பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷின் காங்கிரஸ் தான்.

–சமூகத் தள வைரல் பகிர்வு–

சங்கரன்கோவில் ஆடித் தபசு – நம் தினசரி பேஸ்புக் பக்கத்தில் இன்று முதல் நேரலை!

sankarankoil adi thapasu annct - 2026

2024 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 11.07.24 முதல் 22.07.24 வரை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முழுவதுமாக 12 நாட்களும் நமது “Dhinasari Tamil News” ஃபேஸ்புக் பக்கத்தில் https://www.facebook.com/dhinasarinews “நேரலையாக” (LIVE) காணலாம்.

மதுரை கோயில்களில் பஞ்சமி – வாராஹி சிறப்பு வழிபாடு!

vaarahi special pooja in madurai temples - 2026

மதுரை: மதுரை கோயில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பக்தர்களால் வராகி அம்மனுக்கு, பால், தயிர், மஞ்சள் பொடி, பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி,
சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கேற்றி வராஹி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு
பூஜைகள் செய்தனர் .

இதை அடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதே போல, மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் ஆலயத்திலும் மதுரை அண்ணாநகர், யானைக்
குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்திலும், வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல மதுரை ஆலயத்தில், வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

கப்பலூர் டோல்கேட்ட எப்பதான் அகற்றுவீங்க?

madurai kappalur tolgate protest - 2026

கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி குறித்து விட்டு 3 ஆண்டுகள் ஆகியும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் . டோல்கேட் விவகாரத்தில் எடப்பாடியாரின் ஆணை பெற்று மக்களுக்காக களம் இறங்கி போராடுவோம் என்று, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருமங்கலத்தில் டோல்கேட் பிரச்சனை தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம் பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மனு அளித்தனர் இதனைத் தொடர்ந்து, ஆர்.பி. உதயகுமார் செய்தி
யாளர்களிடம் கூறியதாவது:

தென்தமிழகத்தில் நுழைவுப் பகுதியான திருமங்கலம் தொகுதி கப்பலூர் டோல்கேட் விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றப்பட வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் நான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று கூறினார். அதனுடைய வீடியோ குறிப்பு தற்போது வலை
தளங்களில் பரவி வருகிறது மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார்.

இது குறித்து நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.

தற்போது, உள்ளூர் வாகன ஒட்டிகளுக்கு 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை அபதாரம் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. தற்பொழுது, உள்ளூர் வாகனங்கள் 50% கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று செய்தி வெளிவந்தது இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது.
இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது .
தற்பொழுது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மக்களிடத்தில் அரசு அக்கறை செலுத்தவில்லை.

இதன் மூலம் கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது . ஏற்கனவே, உள்ளூரில் சாலைகளை அடைத்தார்கள் மக்கள் போராட்டத்தின் பின்பு அது திறக்கப்பட்டது. இந்த அரசு மக்கள் பிரச்சனைக்கு அக்கறை செலுத்தவில்லை.

மத்திய அரசு ஏற்கனவே, 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டை அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள் அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அதை அரசு செய்யவில்லை

எடப்பாடியார் இருக்கும்பொழுது, டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால், தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மக்களுக்கு சேவை செய்யாமல் லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது. கப்பலூர் டோல்கேட் அகற்ற
பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் நாங்கள் மக்களுக்கு உறுதுணையாக எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராட்டங்களுக்கு, நாங்கள் இணைந்து தீர்வு காண போராடுவோம் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்பது போல உள்ளது.

தமிழகத்தில் போதை கலாச்சாரம்,கள்ளச்சாரயம் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளச் சாராயத்தால் குடித்து 68 பேர் பலியாகினர் ஆனால், கலெக்டர் மாற்றி விட்டோம் காவல்துறையை மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று தீர்வு காணப்பட்டதாக கூறுகிறார்.

இன்றைக்கு தேசிய கட்சி தலைவர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார். ஆனால்,
இதற்கு கமிஷனரை மாற்றம் செய்ய விட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டோம் என்ற தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்துகிறார் .

அரசியல் கட்சித் தலைவருக்கு இந்த நிலைமை என்றால், சாமானிய மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு அரசு கொடுக்கும் தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. இது எல்லாம் இரும்புகரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
சட்ட ஒழங்கு குறித்து, சட்டமன்றத்தில் கடந்தாண்டு எடப்பாடியார் பேசினார் அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது இந்த பிரச்சனை இருந்திருக்காது.

பிரச்சனை நடந்து பின்பு அரசு இப்போதுதான் தூங்கி எந்திரித்து இருக்கிறது. சட்டசபையில் கள்ளச்சார சம்பவம் குறித்து கவனம் ஈர்ப்பு தீர்மானம் விதி 55 படி கொண்டு வந்தோம். ஆனால், ஜீரோஹவரில் பேச வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார் . அதனைத் தொடர்ந்து, விதி எண் 56 படி பேச நாங்கள் வாய்ப்பு கேட்டோம். ஆனால், மறுக்கப்பட்டது.

ஏற்கனவே, விதி எண் 56 படி இதுபோன்ற விவாதம் எடுக்கப்பட்டது. எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது ஆனால், ஜால்ரா போடுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் பிரதிநிதியாக உள்ள நாங்கள் மக்கள் குரலாக நாங்கள் பேசுவதற்கு மறுக்கப்படுகிறது.

இது ஜனநாயகமா சர்வாதிகாரமா? எங்களுக்கு பேச வாய்ப்பளித்து விட்டு அது தவறு என்றால் விதிமீறல் என்று அவை குறிப்பிட்டு நீக்கலாம் அதையும் செய்யவில்லை என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமையா, ராமசாமி, கண்ணன், பிரபு சங்கர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவணபாண்டி, மாவட்ட கலைபிரிவு செயலாளர் சிவசக்தி உட்பட பலர் இருந்தனர்.

மாநில விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன ரக பஸ்கள்!

new buses tnstc setc - 2026

தமிழகத்தில் யாரும் செய்யாத சாதனையாக பழைய பஸ்களை புதிதாக பாடி கட்டி மஞ்சள் பெயிண்ட் அடித்து தமிழக சாலைகளில் பவனி வரச்செய்து வரும் நிலையில் புதிதாக பிஎஸ்‌6ரக பஸ்களைவாங்கி கூண்டு கட்டி அதற்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து இயக்கி வருகிறது.

இந்த நிலையில் தொலைதூர பயணிகளுக்கு சேவை செய்ய எஸ்இடிசிக்கு புதிதாக 200 பஸ்கள்‌வாங்கப்பட்டு கூண்டு கட்டி இளம் பச்சை கலர் அடித்து வந்துள்ள பஸ்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் இவ்ளோ வசதிகள் இருக்கிறது.

எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. புதிய பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பஸ்களில், பயணிகளுக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொலை தூரங்களுக்கு பேருந்துகளையே இயக்கி வருகிறது. எஸ்.இ.டிசி எனப்படும் இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, கோவை, சேலம், திண்டுக்கல், திருச்செந்தூர் என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களுக்கும் எஸ்.இ.டி.சி சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களும் உள்ளன. அந்த வகையில், புதிதாக பிஎஸ் 6 ரக பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்டதாக இந்த பேருந்துகள் உள்ளன.

கீழ் தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடியும். தற்போது அரசு பேருந்துகளில் ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலும் கீழே இருக்கைகளும் மேல் பகுதியில் படுக்கை வசதிகள் கொண்டதாகவே உள்ளது.

இதனால், வயதான பயணிகள், குழந்தைகளுடன் பயணம் செய்யும் பயணிகள் படுக்கைகளில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான் புதிதாக இயக்கப்பட இருக்கும் பேருந்துகளில் சிலவற்றில் கீழ் தளத்திலும் படுக்கை வசதி உள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் உள்ளது.

அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை உள்ளன. இதன் மூலம் தொலை தூரம் செல்லும் பயணிகள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். விரைவில் வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பேருந்துகள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதேபோல பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பேருந்துகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும், காருக்கு நிகரான தொழில்நுட்பம் கொண்டதாகவும் புதிய பேருந்துகள் உள்ளதாக ஒட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமண விழாவில் ரூ.1.71 லட்சம் மொய் பணம் திருடிய பெண்கள் கைது!

sivakasi crime news - 2026

ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உட்பட 2 பேர் கைது

காரியாபட்டியில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிக்கூண்டு பகுதியைச் சேர்ந்தவர் நக்கீரன். இவர் தனக்கு சொந்தமான இடத்தை அளந்து கொடுப்பதற்காக, நில அளவயரை சந்தித்துள்ளார். அப்போது கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் செல்வராஜ் (48), அந்த இடத்தை நாங்கள் அளந்து கொடுக்கிறோம் என நக்கீரனிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு ரூ. 25 ஆயிரம் மட்டுமே தன்னால் வழங்க முடியும் என நக்கீரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நக்கீரன், விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச புகார் அளித்தார்.

இந்த சூழலில் காரியாபட்டியில் அலுவலகத்ல் இருந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம், ரூ. 25 ஆயிரத்தை நக்கீரன் கொடுக்க சென்றுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர், அருகே உள்ள பக்கம் ஒன்றைச் சேர்ந்த தையல் கடைக்காரர் மோகன் தாஸிடம், அந்தப் பணத்தை கொடுக்க கூறியுள்ளார்.

இதையடுத்து, ரூ. 25 ஆயிரத்தை நக்கீரனமிடமிருந்து மோகன்தாஸ் பெற்ற போது, விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வாளர்கள் பூமிநாதன், சாலமன் துரை கையும் களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து, மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான செல்வராஜை கைது செய்தனர்.


திருமண விழாவில் ரூ.1.71 லட்சம் மொய் பணம் திருடிய இரு பெண்கள் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண விழாவில் நூதன முறையில் மோசடி செய்து மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் பணத்தை திருடிய உசிலம்பட்டியைச் சேர்ந்த இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. இவரது மகன் சக்திவேலுக்கு கடந்த ஞாயிறன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்த மொய்ப்பணம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் காணவில்லை என வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சக்திவேல் என்பவர் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு பெண்கள் மொய்ப்பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பணத்தை திருடிய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி முத்துச்செல்வி(54), அமாவாசை மனைவி பாண்டியம்மாள்(42) ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, ரூ.1.71 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: முத்துச்செல்வி, பாண்டியம்மாள் இருவரும் திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் போல் சென்று உள்ளனர். அங்கு மொய் எழுதுபவரிடம் சில்லறை வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி அங்கிருந்த பணத்தை திருடி உள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் சில்லரை வாங்குவது போல் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர்.


சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கிருஷ்ணமூர்த்தி என்பதற்கு சொந்தமான லாமா & கோ என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை இயங்கி வருகிறது. இது பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை குடோனில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் பேரில் நிலைய அலுவலர் வெங்டேஷன் தலைமையில் சம்பவத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரியும் தீயை அணைத்தனர். அதனால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் இது குறித்து உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரியில் பள்ளிகளுக்கான நேரத்தில் மாற்றம்!

school exams - 2026

புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது.

அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.

இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.