பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூரதேரோட்டம் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெகு சிறப்பு பெற்றதாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த இங்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் அவதரித்த நாளின் போது மிக பிரமாண்டமான தேரில் ஆண்டாளும் ரங்க மன்னரும் எழுந்தருள்வர்.
இந்தத் தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியே நிலைக்கு சேர்ப்பார்கள். இந்தத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மிக குறிப்பிடத்தக்க விழாவாகவும் உள்ளது.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்த் திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக ஆண்டாள் சந்நிதியில் விஸ்வரூப பூஜை முடிந்த பின்னர் புண்யாகவாசனம், ஸ்தம்ப ஆவாஹன பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் நடத்தி, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தேர் நிலைக்கு வந்து முகூர்த்தக்காலுக்கு பல்வேறு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க ஆவாஹணம் செய்யப்பட்டது.
ஆகம முறைப்படி பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இரா.இலட்சுமணன், ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ், மணியம் கோபி ஸ்ரீ ராமன், சுதர்சன், ஏழுர் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள், சங்க செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
இராமேஸ்வரம் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வு ஊதிய திட்டப்படி கட்ட வேண்டிய தொகையை தற்காலிக ஊழயர் சிவன் அருள் குமரன் கணக்காளர், இணை ஆணையர் துணையோடு முறைகேடாக திருடியது குறித்து சிபிசிஐடி பிரிவால் இராமேஸ்வரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கமானது 2016இல் துவங்குகிறது.இந்த குற்றச்சாட்டு 2020இல் விசாரணைக்கு வந்தது. ஆக இந்த குற்றத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. 2000 பக்கங்கள் கொண்ட இந்த குற்ற பத்திரிகையை நீதிபதி படித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளிடம் இருந்து சுமார் ஒரு கோடி மோசடி பணத்தை எப்போது மீட்பார்கள்?
இதுபோல இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு பொருட்காட்சியில் இருக்கும் பாரத கலை பொக்கிஷமான நமது தெய்வங்களின் விக்கிரகங்கள் தெரிய வந்துள்ளன. இவை ஏலம் போடும்போது தான் தெரியவருகிறது என்பது வேதனையானது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று தமிழக காவல்துறையில் செயல்படுகிறது. ஆனால் அது சுதந்திரமாக செயல்படுகிறதா?என்ற சந்தேகம் எழுகிறது.
விக்ரகங்கள் கிடைக்கும் போது அதனை திருடி கடத்தியவர்கள் யார் யார் என விசாரணை நடைபெறுகிறதா? அந்த விக்ரகங்கள் எந்த திருக்கோயிலுக்கு சொந்தமானவை என்பதும் அது திருடு போனது குறித்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என உரிய அதிகாரிகள் மீது வழக்கு போடப்படுகிறதா? என்பது ரகசியமாகவே இருக்கிறது.
பல கோடி மதிப்பிலான நிலங்கள் இடங்கள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்து முதல்வரின் ஆன்மிக ஆட்சி என பெருமை பேசினார். ஆனால் அதனை ஆக்கிரமித்து அனுபவித்தவர்கள் யார் யார் என்று தெரிவித்தாரா? அவர்களின் சொத்துக்களை வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தாரா? இல்லையே! ஏன்? திருடுகிறவனுக்கு அனுபவிக்கும் உரிமை இந்த திராவிட அரசு கொடுத்து மகிழ்கிறதா?
திருக்கோவிலை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை போல ஒரு மோசடி நிர்வாகத்தை வேறு எந்த துறையிலும் பார்க்க முடியாது. மற்ற துறைகளினால் பலனடைபவரிடம் இருந்து லஞ்சம் பெறுவார்கள். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் பக்தர்கள் தங்கள் சொந்த பணத்தை கோவிலுக்கு கைங்கர்யம் செய்வதற்கு கூட லஞ்சம் பெறப்படுகிறது என்பது எத்தனை அநியாயம்.
மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விசாரணை முடியும் வரை வேலை நீக்கம் செய்து அவர்கள் வங்கி கணக்கு சொத்து முதலானவற்றை முடக்கி வைக்க வேண்டும்.
ஆனால் அரசியல்வாதிகளைப் போல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஜாமீன் பெற்ற உடனே அமைச்சரின் செல்வாக்கில் உலா வருவது அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளுக்கு முரணானது. அமைச்சரும் முறைகேடு கடத்தல் வழக்கிற்கு உடந்தையோ என்ற சந்தேகத்தை இத்தகைய செயல்பாடு ஏற்படுத்துகிறது.
எனவே இந்து சமய அறநிலையத்துறையினால் நடக்கும் அனைத்து கிரிமினல் சிவில் வழக்குகளை விரைவாக விசாரித்து உடனடியாக தீர்ப்பு வருவதற்கு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
மோடி குடும்பம் என்று மோடியின் அன்பர்கள் சமூகத் தளங்களில் போட்டுக் கொண்டது போதும், அவற்றை எடுத்து விடலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Through the election campaign, people across India added 'Modi Ka Parivar' to their social media as a mark of affection towards me. I derived a lot of strength from it. The people of India have given the NDA a majority for the third consecutive time, a record of sorts, and have…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியை குடும்பம் இல்லாத நபர் என விமர்சித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜக., அமைச்சர்களும், நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் தங்களின் பெயருக்கு பின்னால் தாங்கள் மோடியின் குடும்பம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ‘மோடி கா பரிவார்’ என, மோடியின் குடும்பத்தினர் என்ற வார்த்தையை சேர்த்து, தங்கள் ப்ரொபைல் பிக்சர் ஆக வைத்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகத் தளப் பதிவில் வெளியிட்ட தகவல்:
என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாடு முழுதும் பலர் சமூக வலைதள கணக்கில், தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் எனப்படும் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தை தந்தது.
தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வெற்றியைக் கொடுத்துள்ளனர். இது சாதனை. இந்த வெற்றியின் வாயிலாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி.
இனி, மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்… என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பெயர் வைப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்ற வகையில் திபெத்தில் உள்ள இடங்களுக்கு இந்தியா புதிதாக பெயர் சூட்டியுள்ளது
இந்தியாவின் பகுதியான அருணாசலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு, புதிதாகப் பெயர்களை சூட்டிய சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக திபெத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இதற்காக பல கட்ட பேச்சு வார்த்தைகளும் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2020 மே 5ல் லடாக் எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது இந்திய சீன வீரர்களுக்கு இடையே அது மோதலாக வெடித்தது. பாங்காங் ஸோ பகுதியில் சீன நாட்டு வீரர்கள் தடுக்கப்பட்டு, இந்திய வீரர்கள் பெரும் பதிலடி கொடுத்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பின் இந்தியா – சீனா இடையேயான ராஜீய உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. வர்த்தக உறவைத் தவிர மற்ற உறவுகள் சுமுகமாக நடைபெறவில்லை.
இந்நிலையில் வேண்டுமென்றே இந்தியாவை உசுப்பேற்றும் விதமாக இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனது நாடு தொடர்பிலான பெயர்களை வைத்து, அதனை வரைபடத்தில் குறிப்பிட்டு, சீனா அவ்வப்போது சீண்டி வருவது வழக்கமாகிவிட்டது.
அந்த வரிசையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் கடந்த ஏப்ரல் மாதம் பெயர்களை மாற்றியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ‘புதிதாக பெயர்களை சூட்டுவதன் வாயிலாக, அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்ற உண்மை நிலை மாறிவிடாது’ என்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு, தற்போது சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவும் சீனாவின் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு வேறு பெயர்களைச் சூட்டி வருகிறது.
திபெத்தில், இந்தியா வசம் உள்ள 30 இடங்களுக்கு இந்திய மொழியில் புதிய பெயர்களை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, பிராந்திய உரிமையை உறுதிப்படுத்துவதே நம் அரசின் நோக்கம். புதிய பெயர் சூட்டும் இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைப் பிரதேசங்கள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைவழிப்பாதை மற்றும் ஒரு நிலப்பரப்பு இடம் பெற்றுள்ளன.
திபெத்தின் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில் சூட்டப்பட்டுள்ள இந்த பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்தப் புதிய பெயர்ப் பட்டியலுடன் கூடிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் வரைபடத்தையும் இந்திய ராணுவம் விரைவில் வெளியிட உள்ளது.
இது குறித்து பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியபோது, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மற்றும் சிக்கல்கள் வெவ்வேறானவை. சீனாவுடன் தொடர்ந்து வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். ஆனால், பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முயற்சித்து வருகிறோம் என்றார்.
நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால், அவர்களின் 20-25 நிமிட உரைகளில் 10 நிமிடங்கள் வரை, கரீபி எனும் ஏழ்மை பற்றி பேசுவார்கள். எந்த ஒரு தேர்தல்காலப் பரப்புரையை வேண்டுமானாலும் கேளுங்கள், அவர்கள் ………. ஜபமாலையை உருட்டித் தீர்ப்பார்கள்.
நேரு, 1951 – நாம் இரண்டாவது போராட்டத்தை நடத்த வேண்டும், அந்த உண்மையான போராட்டம், இந்தியாவின் ஏழ்மையோடு நாம் தொடுக்கும் போர். இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு போர்.
இந்திரா காந்தி, 1982 – தேசத்திலிருந்து ஏழ்மை அகல வேண்டும் என்பது தான் இன்று நமது குறிக்கோள். பிற்பட்டிருக்கும் பகுதிகளில் இருப்போர் பிற்பட்ட நிலையிலிருந்து உயர வேண்டும்.
இந்திரா காந்தி, 1984 – தன்னிறைவான, மற்றவர்களை விடச் சிறப்பான வாழ்க்கை வாழ்வோரின் தேவைகளை நிறைவேற்றும் அதே வேளையில், வாழ்க்கையில் பின் தங்கிப் போன, ஏழ்மையில் இருப்போரின், பலவீனமானவர்களின் தேவைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
ராஜீவ் காந்தி, 1985 – பாரதநாட்டின் ஏழ்மையை நாம் அகற்றவில்லை என்று சொன்னால், நாம் செய்யத் திட்டமிடும் அனைத்துப் பணிகளும் வீணாகியே போகும். ஆகையால் நாம் ஏழ்மையை அகற்றும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.
ராஜீவ் காந்தி, 1987 – ஏழ்மையை அகற்றுவதற்கு நாங்கள் முதன்மை அளித்திருக்கிறோம். ஏழ்மையை அகற்றுவதில் எங்களின் முழுச் சக்தியையும் நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.
மன்மோஹன் சிங், 2005 – நமது இந்த வேகத்தை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமேயானால், வரவிருக்கின்ற 5-10 ஆண்டுகளில் பாரதம் முழுவதிலிருந்தும் ஏழ்மை, பட்டினிச் சாவு, நோய்களிலிருந்து விடுபட முடியும்.
ராகுல் காந்தி, 2013 – பாதி ரொட்டியாவது உண்போம் என்ற உங்களுடைய கோஷத்தை நான் மாற்ற விரும்புகிறேன். முழு ரொட்டியை உண்போம், 6 நாட்கள் வேலை செய்வோம், மருந்துகளை எடுப்போம், காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவோம்.
சோனியா காந்தி, 2014 – நம் மண்ணிலிருந்து ஏழ்மை என்ற சாபம் முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரை நம்மால் நிம்மதியாக உறங்க முடியாது.
ராகுல் காந்தி, 2019 – எங்களுடைய பணி, காங்கிரஸ் கட்சியின் பணி இந்தியாவைப் பாதுகாப்பது. இந்தியாவின் ஏழைகளைப் பாதுகாப்பது. பலவீனமானவர்களைப் பாதுகாப்பது.
ராகுல் காந்தி, 2024 – ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு அடியில், இந்தியாவிலிருந்து ஏழ்மையை நாங்கள் அகற்றி விடுவோம்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா, இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா? என்று, தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என்று ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார் பொதுவெளியில் பேசியது நாமெல்லாம் அறிந்ததே.! அதற்கு திமுகவோ முதல்வரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக கடந்த 2021-ஆம் ஆண்டு CSI மிஷனரியின் 75 வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்களால்தான் என்று பேசினார். அதுமட்டுமில்லாமல் முதல்வரும் திமுக தலைவர்களும் இந்த அரசு சிறுபான்மையினருக்கான அரசு என்று மேடைதோறும் கட்டியம் கூறிவந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக கிறிஸ்தவரான லியோனி நியமிக்கபட்டார், தமிழக அரசு தேர்வாணைய உறுப்பினராக கத்தோலிக்க பாதிரியார் A.மரியசூசை என்பவர் உறுப்பினராக நியமிக்கபட்டார், பாதிரியார் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வேறு கிறிஸ்தவர்கள் நியமிக்கபட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கடந்த 09/06/2024 அன்று Group-4 பணியிடங்களூக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் முதல் கேள்வியே ஏசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த வினாவிற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு செய்திருப்பார்கள், அதன்மூலம் இந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில் வினாத்தாள் வடிவமைக்கபட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது .
Group-4 தேர்வு தமிழக அரசின் கடைநிலை ஊழியர்களை தேர்வு செய்யும் தேர்வாகும் அதற்கும் ஏசுவின் வருகையை அறிவித்தவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குறிப்பாக இந்த வினா தேர்வின் தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது, தமிழ் மொழி சார்ந்து சங்க இலக்கியம் முதலாக பதிணென் மேல் கணக்கு நூல்கள் பதினென் கீழ் கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுதொகை, புறநானூறு, அகநானூறு, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என ஆயிரமாயிரம் பண்டைய நூல்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அவற்றையெல்லாம் பாட்த்திட்டத்தில் இருந்து புறந்தள்ளி விட்டு அதிகமான அளவில் கிறிஸ்தவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுகளை பாடங்களாக சேர்க்கப்பட்டு வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழக அரசு செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு பணியாளர் தேர்வில் இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லாத கிறிஸ்தவ மதம் பற்றி அரசு பணியாளர் போட்டி தேர்வில் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? எனவே தமிழக அரசே மத மாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றே கருத வேண்டியுள்ளது. கிறிஸ்தவ மிஷனரிகள் வீதி தோறும் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழர் பண்பாடு, வாழ்வியல் முறை மற்றும் வழிபாட்டு முறையை அழிக்கும் வகையிலும் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசே நூதன மத திணிப்பில் ஈடுபடுவதும், அரசு பணியாளர் தேர்வுக்கான போட்டி தேர்வில் ஏசு கிறிஸ்துவின் வருகை என்று கேள்வி எழுப்புவதும் கடும் கண்டனத்திற்குரியது .
தமிழக அரசு அரசு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வை நடத்தியதா? அல்லது மதபிரச்சாரத்துக்கு பாதிரியார்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தியதா? என்று ஐயமுறும் வகையில் வினாத்தாள் அமைக்கபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.
தமிழக அரசு பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய பல தனியார் பயிற்சி மையங்களில் இணைந்து இளைஞர்கள் முன் தயாரிப்பு செய்துவருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய வினாத்தாளை பார்க்கும்போது இனி தமிழக அரசு பணியில் சேர இந்து இளைஞர்கள் பைபிள் வகுப்புக்கும் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று அச்சமும் ஏற்படாமல் இல்லை.
எனவே திமுக அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழர்களின் அடையாளத்தை , பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்படக் கூடாது என்றும் வினாத்தாள் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்க கூடாது என்றும் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தவேண்டும் என்றும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது!
மதுரை அருகே, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து. 17 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி தினசரி ஒவ்வொரு மண்டகப் படியுடன் திருவிழா விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்ற பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்து.சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை மகன் அழகப்பன் மற்றும்குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள்.
கொடியேற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல்சத்திய பிரகாஷ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி,கவிதா,வசந்த், பெருமாள் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சுகாதாரப்பணி,குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் செய்திருந்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி,பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஜூன் 16ல் கொண்டாடப்பட உள்ளது .
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம் இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து 1978ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். இவர் இயல் இசை நாடக துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கியவர்.
1940 – 1950களில் பிரபலமாக இருந்தவர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் டி.ஆர்.மகாலிங்கம். உச்சத் தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப் பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார். இவரது மேடை நாடக பாடலின் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13-வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, திரைத்துறையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார்.
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன் நன்கு இணக்கமாக இருந்தவர். 1962-ல் சோழவந்தானில் வீடு கட்டி வாழ்ந்து வந்தவர் தற்போது அவருடைய நூறாவது பிறந்த நாள் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அவரது நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, அவர் திரைத்துறையில் பங்காற்றி சாதனை புரிந்த விருதுகள் புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் வாழ்ந்து மறைந்த அவரது வீட்டில் படங்களாக சேகரித்து அவரது பேரன் ராஜேஷ் மகாலிங்கம் கண்காட்சிக்கு வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ள தென்கரையில் அவர் வாழ்ந்து மறைந்த டி ஆர் மகாலிங்கத்தின் வீட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அதில், திரைப்படத் துறையைச் சார்ந்த பல்வேறு கலைஞர்கள் வருகை தர உள்ளனர். மேலும், அவரது திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்று கண்காட்சிக்கு வைக்கப்படும் என, அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 05 ஜூன் முதல் 10 ஜூன் வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
அட்டவணை
(10 ஜூன் வரை)
குரூப் A
குரூப் B
குரூப் C
குரூப் D
இந்தியா – 4 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 4 கனடா – 2 பாகிஸ்தான், அயர்லாந்து 0
ஸ்காட்லாந்து 5 ஆஸ்திரேலியா 4 நமீபியா 2 இங்கிலாந்து 1 ஓமன் 0
ஆப்கானிஸ்தான் 4 மேற்கு இந்தியத் தீவுகள் 4 உகாண்டா 2 பாபுவா நியூகினியா 0 நியூசிலாந்து,
தென் ஆப்பிரிக்கா 4 வங்கதேசம் 2 நெதர்லாந்து 2 நேபாளம் 0 இலங்கை 0
05 ஜூன் முதல் 10 ஜூன் வரை நடந்த லீக் சுற்று டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வென்றதும் ஆஃப்பானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வென்றதும் இலங்கை அணியை வங்கதேச அணி வென்றதும் சில நம்ப முடியாத முடிவுகள். இனி ஒவ்வொரு ஆட்டமாகப் பார்க்கலாம்.
அம்ரிக்க அணி பாகிஸ்தான் அணியை வென்றது
06.06.2024 அன்று மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த பாப்புவா நியூ கினியா (19.1 ஓவரில் 77) உகாண்டா (18.2 ஓவரில் 78/7) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் உகாண்டா அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதே நாள் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (159/7) அமெரிக்க அணி (159/3) வென்றது. இது ஓர் அதிர்ச்சி முடிவு ஆகும்.
ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்க அணி ஒரு அனுபவ அணியைப் போன்று தன்னுடைய ஓவரில் நன்றாக விளையாடியது. இந்த அணி சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் அனுபவ பந்துவீச்சாளர் முகம்மது அமீர் ஓவரில் நிறைய வைட்கள் கொடுத்தார். அதற்குப் பின்னர் பாகிஸ்தான் ஆடியபோது அமெரிக்காவின் சௌரப் நேத்ரவால்கர் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை ஒரு விக்கட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்தார். இதனால் சூப்பர் ஓவரில் அமெரிக்கா வென்றது. .
அதே நாள் பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் நமீபியா அணியை (155/9) ஸ்காட்லாந்து அணி (18.3 ஓவரில் 157/5) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது
07.06.2024 அன்று நியூயார்க்கில் நடந்த ஆட்டத்தில் கனடா அணி (137/7) அயர்லாந்து அணியை (125/7) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நாள் மே.இ. தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் (159/6) அணி நியூசிலாந்து அணியை (75) 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவும் ஒரு அதிர்ச்சி முடிவாகும். கடந்த உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த அணி, கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி வரை வந்த அணி, இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் அணி ஆஃப்கானிஸ்தானிடம் தோற்றது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி ஆகும்.
அதே நாளில் பகலிரவு ஆட்டமாக டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை (124/9) அணியை வங்கதேச அணி (19 ஓவரில் 125/8) இரண்டு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
08.06.2024 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற நெதர்லாந்து (103/9) அணியை தென் ஆப்பிரிக்கா அணி (18.5 ஓவரில் 106/6) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம்கூட ஒரு திரில்லர் ரக ஆட்டம்தான். சென்ற முறை நெதர்லாந்து தென் ஆப்பிரிக்க அணியை வென்றிருந்தது. இந்த முறையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் டேவிட் மில்லரின் நிதானமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியைப் பெற்றது.
அதே நாள் ப்ரிட்ஜ்டவுனில் நடபெற்ற ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி (201/7) அதன் வழமையான எதிரி அணியான இங்கிலாந்து அணியை (165/6) அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அன்றைய தினம் மே.இ. தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் (173/5) உகாண்டா (39) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்
09.06.2024 அன்று நியூயார்க்கில் இந்தியா (119), பாகிஸ்தான் 113/7) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. தொடக்கத்திலேயே மழையின் குறுக்கீட்டால் டாஸ் தாமதமாக போடப்பட்டது.
பின்னர் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
ரிஷப் பந்த் 40 ரன்களும், அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், அமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது.
ஆனாலும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதி கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அன்றைய தினம் ஆண்டிகுவாவில் உள்ள நார்த் கிரௌண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஓமன் அணியை (150/7) ஸ்காட்லாந்து அணி (153/3) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
10.06.2024 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச (109/7) தென் ஆப்பிரிக்க (113/6) அணிகள் மோதிய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதை அடுத்து ஜூன் 09 ஞாயிற்றுக் கிழமை இன்று மாலை 7.15 மணி அளவில் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதை அடுத்து 7.25க்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்…
மத்திய அமைச்சர்கள் பட்டியல்
1)பிரதமர் மோடி 2)ராஜ்நாத் சிங் 3)அமித்ஷா 4)நிதின் கட்கரி 5)ஜே.பி.நட்டா
6)சிவராஜ் சிங் செளகான் 7)நிர்மலா சீதாராமன் 8)ஜெய்சங்கர் 9)மனோகர்லால் கட்டார் 10)H.D.குமாரசாமி (கூட்டணி)
11)பியூஸ் கோயல் 12)தர்மேந்திர பிரதான் 13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி) 14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி) 15)சர்பானந்த சோனாவால் 16)டாக்டர் வீரேந்திர குமார் 17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்) 18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி 19)ஜுவல் ஓரம் 20)கிரிராஜ் சிங்