பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இதை அடுத்து, இன்று மாலை புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணம், தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் தொடர்ந்து முன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். மிகச் சரியாக 7.25க்கு அவர் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டு, கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோஹர் லால், தர்மேந்திர பிரதான், ஹெச்டி குமாரசாமி, ஜிதன் ராம் மாஞ்சி உள்பட பாஜக.,வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பாரதத்தின் முக்கியத் தலைவர்கள், கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 8000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இன்று மாலை 7.15 மணி அளவில் புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமைச்சர் பதவிகள் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்கள் வர உள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வார்நாம்கியேல் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவாஹர்லால் நேரு சாதனை சமன்!
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவர் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
நாட்டில் தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்கிறாா். மேலும், காங்கிரஸ் அல்லாத முதல் மூன்று முறை பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.
முன்னதாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா்.
அதன்பேரில், மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு விடுத்தாா். பிரதமராக மோடியை நியமித்து, அதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.
இந்நிலையில், மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்கும் விழா, குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில், பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்கவுள்ளாா். அவருக்கு குடியரசுத் தலைவா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைப்பாா். இந்த விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
அமைச்சரவை எப்படி?
மத்திய அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தை இறுதி செய்ய தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டே போன்ற தலைவா்களுடன் பாஜக மூத்த தலைவா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனா்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் சித்தாந்த ரீதியில் முக்கியமான கலாசாரம், கல்வி ஆகிய துறைகளை பாஜக தன்வசம் வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ரயில்வே உள்ளிட்ட துறைகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
பாஜக தரப்பில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற முக்கியத் தலைவா்கள் மீண்டும் மத்திய அமைச்சா்களாக பதவியேற்பா்; அதேநேரம், மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வா்கள் சிவராஜ் சிங் செளஹான், பசவராஜ் பொம்மை, மனோகா் லால் கட்டா், சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், சஞ்சய் ஜா, ராம்நாத் தாக்கூா், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது.
மோடி என்ற சாதனை வீரர்
பாஜக.,வின் முக்கியக் கொள்கைகள் மூன்று : காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ரத்து அயோத்தி ராமர் கோவில் பொது சிவில் சட்டம்
இதில் இரண்டு இரண்டு கால ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதற்கு கடந்த ஆட்சியிலேயே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, தொடக்க வேலைகள் நடந்தன. ஆனால் இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக.,வின் கொள்கையை நிறைவேற்ற கூட்டணிகள் ஒத்துழைக்குமா என்பது தெரியாத நிலையில், பொது சிவில் சட்டம் அமலாகுமா என்ற கேள்வி எழுகிறது. இதையும் செய்து முடித்தால், பிரதமர் மோடி நிறைநிலை எய்தியவராவார்.
இஸ்ரோவின் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (சுக்ராயன்) திட்டம் தயாராக உள்ளது மற்றும் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று, இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். உண்மையில், விண்வெளித் துறையில் பாரதத்தின் சாதனையைச் சொல்லியே ஆக வேண்டும். சந்திரயான், மங்கள்யான் என தொடர்ந்த வெற்றி, நிலவின் தென்பகுதியில் இறங்கி சாதித்த சாதனை, சூரியனை ஆய்வு செய்யச் சென்ற கலம் என தொடர்ந்த வெற்றிகளால் ஏற்பட்ட நற்பெயர் காரணமாக, இப்போது வர்த்தக ரீதியில் இஸ்ரோ செயற்கைக் கோள்களை ஏவி, சாதனை புரிந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், பிரதமர் மோடி கொடுத்த தன்னம்பிக்கை, உற்சாகம், அதிக நிதி ஒதுக்கி விடுவிப்பு என சொல்லலாம். அதன் வெளிப்பாடுதான், பாரதம் வல்லரசாகும் என்ற நம்பிக்கையை நாட்டு மக்களுக்கு விதைப்பதில் இஸ்ரோவின் பங்கு மிக முக்கியமானது.
ராணுவத்தினருடன் சேவையாளர் மோடி
2014 முதல் ஒரு பிரதமராக தீபாவளியை அவர் கொண்டாடிய விதம், நம் நாட்டின் ராணுவத்தினருக்கும் மக்களுக்கும் உற்சாகமூட்டும் விஷயம்தான். 2014 தீபாவளியை சியாச்சினில் கொண்டாடினார்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஆண்டான 2014ஆம் ஆண்டு சியாச்சினில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை பிரதமர் கொண்டாடினார். “சியாச்சின் பனிமலையின் உச்சி உயரத்தில் இருந்து, துணிச்சலான ஜவான்கள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுடன், உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று அவர் அந்த நேரத்தில் ட்வீட் செய்தார்.
2015 தீபாவளியை பஞ்சாபில் கழித்தார்: 1965 போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிகளைப் போற்றும் வகையில், 2015ல், மோடி பஞ்சாபில் உள்ள மூன்று நினைவிடங்களுக்குச் சென்றார். இது 1965 ஆம் ஆண்டு போரின் 50 வது ஆண்டு நினைவு நாளில் அமைந்தது! அப்போது, “இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்கள் இரத்தம் சிந்திய மற்றும் அந்தப் போரின் போது மிக உயர்ந்த தியாகம் செய்த இடங்களைப் பார்வையிடத் தேர்ந்தெடுத்ததாக” மோடி கூறினார். டோக்ராய் மற்றும் பார்கி களங்கள் 1965 போரின் போது பெற்ற முக்கிய வெற்றிகள்.
2016 தீபாவளி அன்று, ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்தார் மோடி: சீன எல்லைக்கு அருகே ராணுவ வீரர்களுடன் ஹிமாச்சலப் பிரதேச எல்லையில் தீபாவளியைக் கொண்டாடிய அவர், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), டோக்ரா சாரணர்கள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஆண்களுடன் சும்தோவில் உரையாடினார். சாங்கோ என்ற கிராமத்தில் திட்டமிடப்படாத வகையில் திடீர் விசிட் அடித்தார். அங்கு மக்கள் அளித்த வரவேற்பும் அவர்களின் மகிழ்ச்சியும் தன்னை ஆழமாகத் தொட்டதாகக் கூறினார்.
2017 தீபாவளி அன்று, காஷ்மீரின் குரேஸ் செக்டாரில் இருந்தார் மோடி. வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் செக்டருக்குச் சென்ற அவர், “எங்கள் படைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது” என்றார்.
2018 தீபாவளியை மோடி உத்தராகண்டின் ஹர்சிலில் கழித்தார், அங்கே அவர் படை வீரர்கள் முகாமுக்கு திடீர் விஜயம் செய்தார். தொடர்ந்து கேதார்நாத் ஆலயத்துக்கும் சென்றார்.
2019ல் இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின், காஷ்மீரின் ரஜோரி சென்றார். ரஜோரி முகாமில் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி, அவர்களுடன் அன்றைய தினத்தைக் கழித்தார்.
2020ல் கோவிட் தொற்றுக் காலத்திலும் தயங்காமல், தீபாவளி அன்று லோங்கேவாலா சென்றார். ராஜஸ்தானில் உள்ள லோங்கேவாலாவின் எல்லைப் பகுதிக்குச் சென்ற மோடி, பனி படர்ந்த மலைகளில் இருந்தாலும் சரி, பாலைவனத்தில் இருந்தாலும் சரி, ராணுவ வீரர்களுடன் இருக்கும்போதுதான் என் தீபாவளி நிறைவடைகிறது என்று குறிப்பிட்டார்.
2021ல் காஷ்மீரின் நவ்ஷேராவில் மோடி தீபாவளி கொண்டாடினார். “நவ்ஷேராவில் உள்ள நமது துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியை பிரதமராக அல்ல, அவர்களது குடும்ப உறுப்பினராகக் கழித்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்று சமூகத் தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.
2022 தீபாவளி அன்று, கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய மோடி, 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியா போருக்கு எதிரானது, ஆனால் அமைதியை உறுதிப்படுத்த வலிமையின் அவசியம் எந்த அளவுக்குத் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ந்து வரும் நம் வலிமை, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றார்.
2023ல் ஹிமாசலப் பிரதேசத்தின் லேப்சாவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி, நம் வீரர்களின் மன உறுதியும் திறமையும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பது என்றார்.
இப்படி ஒரு நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமராக இருந்து, ராணுவ வீரர்களுடன் இருந்து, நாடும் அரசும் உங்களுடன் என்ற வலிமையான செய்தியை அவர்களுக்குக் கொடுத்து நாட்டின் வலிமைக்கு உரமூட்டிய பிரதமர் மோடி, இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்று, தன் வழக்கமான பழக்கத்தைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
மக்களின் குரலை எதிரொலித்த மனதின் குரல்
பிரதமர் நரேந்திர மோடி தன் எளிமையான கருத்துக்களை எளிய மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியமான முதன்மையான நிகழ்ச்சியாக அமைந்தது தான் நம் அகில இந்திய வானொலியில் முதலில் ஒலிபரப்பான மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி.
எங்கோ ஒரு தொலை தொடர்பு அற்ற ஓர் எல்லை கிராமத்தில் அங்கிருந்த மனிதர்கள் வானொலிப் பெட்டியை வைத்து இந்த நாட்டுடன் இணைந்திருக்கும் தன்மையைக் கண்ட நரேந்திர மோடி, தாம் பிரதமர் ஆன உடனே மக்களைத் தொடர்பு கொள்ள வானொலியையே முதன்மையான சாதனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அப்படி உருவானது தான் மன் கி பாத் நிகழ்ச்சி. இதன் மூலம் நாட்டு மக்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உற்சாகமூட்டும் வகையில் நாட்டைக் குறித்த பெருமித உணர்வையும் நாட்டின் சாதனையாளர்களைக் குறித்த ஆரோக்கியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் இது அவரது முதல் ஆட்சியிலும் சரி இரண்டாவது முறை ஆட்சியிலும் சரி மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக தொடர்ந்து ஒலிபரப்பானது. 100 பாகங்களைக் கடந்து ஒரு பிரதமரின் தொடர் நிகழ்ச்சி வானொலி தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது இதுவே முதல் முறை என்பதுடன் சாதனையாகவும் வரலாற்றில் பதிவாகிவிட்டது. அந்த சாதனை இந்த மூன்றாவது ஆட்சியிலும் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு!
மதுரை:
பதவி பணம் புகழ் வரும் போது தன்னடக்கம் வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு
மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது
மாயமான் என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது.
ராமன் கானகம் சென்று முனிவர்களை நமஸ்கரித்து அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வணங்கினார்.
அகஸ்தியர் ராமனுக்கு தமிழ் மொழியில் வரவேற்பு கொடுத்தார். அகஸ்தியர் ராமனை எட்டு குணம் சொல்லி போற்றினார்.
நல்ல மாணவனாக இருந்தால் குருவும் போற்றுவார் என்பதற்கு ராமன் உதாரணம்.
நாராயணனே அவதரித்திருக்கிறார் என்று ராமனை முனிவர்கள் போற்றியபோது நான் தசரதன் மகன் அவ்வளவுதான் என்று தன்னடக்கத்தோடு ராமர் சொன்னார்.
பணம் புகழ் பதவி வரும்போது நாம் தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். அதன்படி வாழ்ந்து காட்டியவர் ராமன். அதனால்தான் நாம் அவரை தெய்வமாக வணங்குகிறோம்.
ராவணன் பொன்மானை அனுப்பி ஏமாற்றி சீதையை கடத்திச் சென்றான். ஜடாயு இராவணனை எதிர்த்து உயிரை விட்டான். இறந்த ஜடாயு உடலை தகனம் செய்து ராமர் கர்மா செய்தார்.
மனிதன், பட்சி, மிருகம் யாருக்கு வேண்டுமானாலும் நாம் இறுதி கர்மா செய்யலாம் என்பதே நம் பெரியோர்கள் வேதத்தில் உணர்த்தி இருக்கிறார்கள். சபரி தந்த பழத்தை ராமர் சாப்பிட்டு வேடர் குலத்தைச் சேர்ந்த அவளுக்கு மோட்சம் கொடுத்தார்.
பக்தி தான் முக்கியம் என்பதை ராமர் காட்டினார். நாமும் ராமனை போல் எல்லோருக்கும் இனியவனாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
2024 லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி வென்றதா? இல்லை, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வெற்றியா? இதில் சிலருக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஏன் என்ன என்று பார்க்கலாம்.
பாஜக-வை, முக்கியமாக நரேந்திர மோடியை, தீவிரமாக எதிர்க்கும் எதிர்க் கட்சிகளில் பிரதானமானவை, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவார்), மற்றும் சில. இவைகள் இன்னும் சில கட்சிகளுடன் சேர்ந்து, 2024 லோக் சபா தேர்தலில் மோடியை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கின. அதுதான் ‘இண்டி’ கூட்டணி (I.N.D.I. Alliance) என்பது.
இன்னொரு புறத்தில், பாஜக-வும் அதன் ஆதரவுக் கட்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது.
நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மை எண் 272-ல் கிட்டிவிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் ஜெயித்தது – அதில் பாஜக-வின் கணக்கு 240. ‘இண்டி’ கூட்டணி கைப்பற்றியது 232 இடங்கள் – அதில் காங்கிரஸுக்கு வந்தது 99. மற்றவர்கள் 18.
வெறும் கூட்டல் கழித்தல் தெரிந்தால் போதும், வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி, அந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் முறை, அவர்கள் தேர்ந்தெடுத்த நரேந்திர மோடி பிரதமர் ஆவதுதான் இயற்கை என்று அனைவருக்கும் புரிய. ஆனால் இண்டி கூட்டணித் தலைவர்கள் இந்த நிதர்சனத்தை ஏற்காமல், துளியும் வெட்கமில்லாமல் வில்லத்தனமாக, பித்துக்குளித்தனமாகப் பேசுகிறார்கள்.
நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இந்த லோக் சபா தேர்தலில் தே. ஜ. கூட்டணி 400 இடங்களில் ஜெயிக்கக் குறி வைத்தது. ஆனால் அது எட்டியது 293. அதுவும் 21 இடங்கள் கூடுதலான பெரும்பான்மைதான். ஆனால் இண்டி கூட்டணிக் கட்சிகளுக்குத் தங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. அகில இந்தியத் தேர்தல் கள நிலவரம் அப்படி இருந்தது.
இண்டி கூட்டணித் தலைவர்கள் வெளிப்பேச்சுக்கு “நாங்கள் குறைந்தது 295 இடங்களில் ஜெயிப்போம்” என்று சொன்னார்கள். ராகுல் காந்தி அப்படிப் பேசினார். மற்ற இண்டி கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் அதைச் சொன்னார்.
‘295 சீட்டுகளில் ஜெயிப்போம்’ என்று ராகுல் காந்தி கூறியது, அவர் மனமறிந்த பொய். இதை அமேதி தொகுதியின் கதை தெளிவாகக் காண்பிக்கிறது.
தொடர்ச்சியாக மூன்று லோக் சபா தேர்தல்களில் அமேதி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்வானவர் ராகுல் காந்தி. அதில் கடைசி முறையான 2014-ம் வருடத்தில், அவர் பாஜக-வின் ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்தார். ஆனால் அடுத்த தேர்தலில், 2019-ம் ஆண்டில், ராகுல் காந்தி அதே ஸ்மிருதி இரானியிடம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.
இப்போது நடந்த 2024 தேர்தலில், தான் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி இரானியிடம் மீண்டும் தோற்போம், அது மானக் கேடு, என்று நினைத்த ராகுல் காந்தி, இந்த முறை அமேதியில் போட்டியிடவில்லை. ஆகையால் ராகுலுக்கு மாற்றாக வேறு யாரோ ஒரு சாதா காங்கிரஸ் வேட்பாளர் அந்தத் தொகுதியில் இப்போது பலி ஆடாக வைத்து இறக்கப் பட்டார். ஆனால் இந்த முறை அந்த சதா வேட்பாளர் அமேதியில் பாஜக-வின் ஸ்மிருதி இரானியை ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வென்று விட்டார்.
தனது சொந்தத் தொகுதியில், தான் மூன்று முறை வென்ற அமேதி தொகுதியில், இந்த முறை ஜெயிப்போம் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு இருந்ததில்லை என்பது தெளிவு.
இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும்.
“இண்டி கூட்டணி குறைந்த பட்சம் 295 தொகுதிகளில் வெல்லும்” என்று ராகுல் காந்தி சொன்னபோது, அதில் அமேதி தொகுதி சேர்த்தியா இல்லையா? ஆம் என்றால் ராகுல் காந்தியே அங்கு நின்று ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்து வஞ்சம் தீரத்திருப்பாரே? இல்லை, அந்த 295-ல் அமேதி சேர்த்தி இல்லை என்றால், தனது சொந்தத் தொகுதி மக்களின் மனநிலையைக் கூட சரியாக அறியாத ராகுல் காந்தி, எப்படி 295-ஐ நம்பி இருப்பார்?
இண்டி கூட்டணி எதிர்பார்த்த தோல்விக்கு, அவர்களே பின்னால் சொல்லிக் கொள்ள நொண்டிச் சாக்குகள் தேவை என்பதற்காக, அந்தக் கூட்டணித் தலைவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது சந்தேகம் எழுப்பி வந்தார்கள்.
அடுத்ததாக, வாக்கு எண்ணிக்கை தினத்துக்கு மூன்று நாட்கள் முன்னர், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தடாலடிப் புளுகாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ”அமித் ஷா மாவட்ட கலெக்டர்களை தொலைபேசியில் அழைத்து வருகிறார். இதுவரை 150 கலெக்டர்களிடம் பேசிவிட்டார். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் இணங்காமல், அரசியல் சட்டப்படிதான் நடக்கவேண்டும். அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்” என்றது அவர் அறிக்கை.
தாங்கள் எதிர்பார்த்த பெரிய தோல்விக்கு, ‘அரசு மிரட்டியது. வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் முறைகேட்டுக்கு உடன்பட்டு இண்டி கூட்டணியைத் தோற்கச் செய்துவிட்டார்கள்’ என்று பின்னால் விளக்கம் சொல்ல இப்படி ஒரு மலிவான செய்கையில் ஈடுபட்டது காங்கிரஸ்.
வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்பாக, காங்கிரஸ் தலைவர் கார்கே அரசுப் பணியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: “யாரிடமும் அச்சப் படாதீர்கள். அரசியல் சட்டத்திற்குப் புறம்பான வழிகளுக்கு அடிபணியாதீர்கள். வாக்கு எண்ணும் தினத்தில் முறையாகப் பணி செய்யுங்கள்” என்று சொன்னார் அவர். அதே குயுக்தி, அதே மலிவான தந்திரம், அதே கெட்ட நோக்கம்.
தேர்தல் முடிவுகள் வந்தவுடன், பெரும்பான்மை இடங்களைப் பெறாத இண்டி கூட்டணியின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி – 99 தொகுதிகளை மட்டும் வென்ற ஒரு கட்சியின் தலைவர் – “இந்தத் தேர்தலின் முக்கியச் செய்தி என்னவென்றால், ‘நாட்டை ஆள்வதற்கு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வேண்டாம்’ என்று மக்கள் தெளிவாக ஏகோபித்துச் சொல்லிவிட்டனர்” என்று கூசாமல் பிதற்றினார். “மக்கள் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றி விட்டனர்” என்றும் அவர் உளறினார்.
ராகுல் காந்திக்குச் சளைக்காத மு. க. ஸ்டாலின், “அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்த பாஜக-வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு இது” என்று பேசினார்.
இண்டி கூட்டணியிடம் ஆட்சிப் பொறுப்பைத் தர விரும்பாத மக்களை ராகுல் காந்தியும் மு. க. ஸ்டாலினும் பெரிய மனதுடன் மன்னித்து விட்டார்கள் போலும்!
ஒரு சீரியஸான விஷயம்: அரசியல் என்பது ஒரு கோர விளையாட்டு, அதன் முக்கிய ஆடுகளம் தேர்தல். இன்னொரு விஷயம்: கல்வியின்மையால், ஏழ்மையால், இந்திய மக்கள் சில அரசியல் விஷயங்களில் வெகுளியானவர்கள். இந்த இரண்டும் கலக்கும்போது, தேர்தல்களில் வெற்றி தோல்விகள் யாருக்குக் கிடைக்கும், எந்த அளவு கிடைக்கும் என்று பல சமயங்களில் நாம் சரியாகக் கணிக்க முடியாது. இதைப் புரிந்துகொண்டு, வந்திருக்கும் தேர்தல் முடிவுகளை ஏற்று, மக்களுக்காக, நாட்டு நலனுக்காக, அயராது உழைப்பவர் நரேந்திர மோடி என்னும் மாமனிதர்.
பாஜக என்ற கட்டுக் கோப்பான கட்சி, நரேந்திர மோடி என்ற நேர்மையான சாதுரியமான தேசபக்தர் இன்றைய இந்தியாவுக்கு ஒரு வரப் பிரசாதம்.
தனது உயர்ந்த இலக்கிலிருந்து பார்வை விலகாமல், இண்டி கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் கையாளக் கூடியவர் மோடி. இதில் அவருக்கு உறுதுணையாக இருப்பது பாஜக-வின் அடுத்த கட்டத் தலைவர்கள். பாஜக-வின் கூட்டணிக் கட்சிகளை அணைத்து, தேவையானால் அவர்களை சமாளிக்கவும் வல்லவர் மோடியும் அவரது சகாக்களும். சீனாவையும் பாகிஸ்தானையும் கூட சாதுரியமாகச் சமாளித்தவர் அல்லவா மோடி!
இப்போது நாம் செய்யக் கூடியது: தேச நலனைப் போற்றுவோம். மீண்டும் பிரதமர் ஆகும் மோடியை வாழ்த்துவோம்.
Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com
மோதிஜி நாடாளுமன்ற மத்திய அரங்கில் ஆற்றிய உரை, 7.6.24 தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
நீங்கள் அனைவரும், என் மீது வெளிப்படுத்தியிருக்கும் நம்பிக்கை, வெளிப்படுத்தியிருக்கும் அன்பு, இவை தவிர, அளித்திருக்கும் ஆதரவு, பாரதநாட்டு ஜனநாயகத்தில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று உள்ளபடியே நம்புகிறேன்.
எத்தனை உங்களுக்கு நன்றி தெரிவித்தாலும் அது குறைவு தான் மேலும் நான் நம்பிக்கை அளிக்கிறேன், மோதி நான், உங்களுடைய ஆர்வங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான, உழைப்பினிலே எந்தக் குறைவும் வைக்க மாட்டேன். நானெடுத்த பிறப்பு, ஒரே காரணத்துக்காகவே.
ஒரு வாழ்க்கை ஒரே இலக்கு. அது தான், என்னுடைய, பாரத…. அன்னை. இந்த இலக்கு, 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பணியில், என்னை அர்ப்பணிப்பது. இந்த இலக்கு, 140 கோடி மக்கள் ஆயிரமாண்டுகளாக தலைமுறைதலைமுறையாக அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து, விடுதலை அளித்து, கௌரவத்தோடு உலகில் இருக்க வேண்டும்.
என்னுடைய நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும், உலகம் நம்மவர்களைக் கண்டு, அவர்கள் எண்ண வேண்டும், ஆம் இவர் இந்துஸ்தானத்தவர், இவரை சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று!! இதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அவர்கள் பேரார்வத்தோடு அட நீங்கள் இந்தியரா, நான் உங்களுடன் கைகுலுக்கவா, எனக்கும் கொஞ்சம் சக்தி கிடைக்குமே!! நான் தேசத்தை இந்த உயரத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
மேலும் நண்பர்களே!! எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய நம்பிக்கையும் உங்கள் ஆதரவும், உங்களுடைய அனுபவமும், மிகப்பெரிய விளைவுகளைத் தரும் சாத்தியக்கூறுகளைத் தாங்கி வந்திருக்கிறது.
மக்களவையின் இந்தப் பதிப்பு, அந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைக்கும். நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும், இதய பூர்வமாக பலப்பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம் காட்டுவது அதைத்தான்… நாளை என்ன எழுதப் படப் போகிறது என்பதைக் காட்டுகிறது.. என்று பேசினார் மோடி.
அவர் இன்று நாடாளுமன்ற மத்திய அரங்கில் தே.ஜ.கூட்டணி கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களிடையே பேசிய போது குறிப்பிட்டவை…
கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம் காட்டுவது அதைத்தான்… நாளை என்ன எழுதப் படப் போகிறது என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் வருங்காலத்திலும் பாஜகவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.
ஜகன்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிஷாவில் பாஜக ஆட்சி தொடரும் . அடிமட்டத்தில் இருந்து இறங்கி உழைத்ததால்தான் இவ்வளவு வலுவான கூட்டணி சாத்தியமானது.
காற்று கூட உள்நுழைய முடியாத அளவிற்கு கூட்டணிக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும். 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தேர்தல் காலங்களில் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தான் பெண்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பாஜக தலைமையிலான அரசு எப்போதும் முக்கியத்தும் அளித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மதிப்பார்கள் என நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் காலங்களில் EVM இயந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பிய எதிர்க்கட்சியினர் தற்போது அமைதி காத்து வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக வெளிநாடுகளுக்கு சென்று சிலர் குற்றம் சாட்டினர்.
NDA கூட்டணியின் எண்ணிக்கையே சொல்கிறது எங்கள் பலம் எப்படி என்று… என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.
டி20 உலகக் கோப்பௌ போட்டி 01.06.2024 அன்று தொடங்கின. ஆட்டங்கள் அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கின்றன. 05.06.2024 வரை நடந்த ஆட்டங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை குரூப் A, B, C, D என நான் கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 05.06.2024 வரை அணிகள் ஒவ்வொரு குரூப்பிலும் ஆடிய ஆட்டங்களின் வழி பெற்ற புள்ளிகள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
அட்டவணை
குரூப் A
குரூப் B
குரூப் C
குரூப் D
இந்தியா – 2 பாகிஸ்தான், கனடா – 0 அயர்லாந்து 0 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 2
ஆஸ்திரேலியா, நமீபியா 2 ஸ்காட்லாந்து 1 ஓமன் 0 இங்கிலாந்து 1
நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் 2 ஆப்கானிஸ்தான் 2 பாபுவா நியூகினியா 0 உகாண்டா 2
தென் ஆப்பிரிக்கா 2 இலங்கை 0 வங்கதேசம், நேபாளம் 0 நெதர்லாந்து 2
முதல் ஆட்டம் 01.06.2024 அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள மைதானத்தில் கனடா அணிக்கும் (194/5) அமெரிக்க ஐக்கிய நாடுகள் அணிக்கும் இடையே நடந்தது (197/3). கனடா அணியில் நவ்நீத் தஹ்லிவால் 61 ரன், நிக்கோலஸ் கிர்டொன் 51 ரன், ஷ்ரேயாஸ் மொவ்வா 32 ரன் அடித்தனர். அமெரிக்க அணியில் ஆன்றிஸ் கௌஸ் 65 ரன்னும் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்னும் அடித்தனர் அமெரிக்கா 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது. ஆரோன் ஜோன்ஸ் ஆடிய அதிரடி ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
02.06.2024 அன்று மே.இ. தீவுகளில் உள்ள கயானா ப்ராவிடன்ஸ் மைதானததில் பாப்புவா நியூ கினியா (136/8) மேற்கு இந்தியத் தீவுகள் (13.7 ஓவரில் 137/5) அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
03.06.2024 மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் பிரிட்ஜ் டவுனில் ஓமன் (19.4 ஓவரில் 109) நமீபியா (20 ஓவரில் 109/6) அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டு அணிகளும் சம்மான ரன் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் நமீபியா வென்றது. இரண்டாவது ஆட்டம் நியூயார்க்கில் ஆஃப்கானிஸ்தான் (183/5), உகாண்டா (16 ஓவரில் 58) அணிகளுக்கிடையே நடந்தது. இதில் ஆஃப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மூன்றாவது ஆட்டம் இலங்கை (77) தெ ஆப்பிரிக்கா (16.2 ஓவரில் 80/4) அணிகளுக்கிடையே நடந்தது. இலங்கை அணி தெ ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 77 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா விளையாடி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
04.06.2024 – அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் ஸ்காட்லாந்து (10 ஓவரில் 90) இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படது. இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஆட்டம் டல்லாஸில் நேபாளம் (106), நெதர்லாந்து (18.4 ஓவரில் 109/4) அணிகளுக்கிடையே நடந்தது. இதில் நெதர்லாந்து அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
05.06.2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன முதல் ஆட்டம் நியூயார்க்கில் அயர்லாந்து (96), இந்தியா (12.2 ஓவரில் 97/2) அணிகளுக்கிடையே நடந்தது. இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.
அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரியு பாப்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத அயர்லாந்து பேட்டர்கள் மளமளவென விக்கெட்டைப் பறிகொடுத்தனர். பால் ஸ்டிர்லிங் 2 ரன்னிலும், ஆண்ட்ரியு பால்பிர்னி 5 ரன்னிலும், லோர்கன் டக்கர் 10 ரன்னிலும், ஹாரி டெக்டர் 4 ரன்னிலும், குர்டி கேம்பெர் 12 ரன்னிலும், ஜார்ஜ் டாக்ரெல் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அயர்லாந்து அணி 9.4 ஓவர்களில் 46 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், அயர்லாந்து வீரர்களில், கரேத் டெலானி மட்டும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். மறுமுனையில், மார்க் அடைர் 3 ரன்னிலும், பேரி மெக்கார்த்தி 0 ரன்னிலும், ஜோஷுவா லிட்டில் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மறுமுனையில் உறுதியாக விளையாடிய கரேத் டெலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால், இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத அயர்லாந்து அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்று விராட் கோலி களமிறங்கினர். அயர்லாந்து அணி பந்துவீச்சாளர் மார்க் அடைர் தொடக்கமே அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து, மார்க் அடைர் பந்தில், பெஞ்சமினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் காயம் காரணமாக பெவிலியன் சென்றார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். அவர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெஞ்சமின் ஒயிட் பந்தில், ஜார்ஜ் டோக்ரெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 பந்துகளை மட்டுமே சந்தித்தார். ஆனால், அதற்குள் ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய அணி, 12,2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.
இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆனால் கோலி சரியாக விளையாடவில்லை. சூர்யகுமாரும் சரியாக விளையாட வில்லை. எனவே ஒரு அணியாக இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இரண்டாவது ஆட்டம் பாப்புவா நியூ கினியா (77), உகாண்டா (18.2 ஓவரில் 78/7) அணிகளுக்கிடையே நடந்தது. உகாண்டா அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியா (164/5) ஓமன் (125/9) அணிகளுக்கிடையே நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா அயர்லாந்து ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் சாதனைகள்
இந்தியா அயர்லாந்து ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தால் திணறிய அயர்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரன் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4026 ரன்கள் அடித்து, பாபர் அசாமை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும், டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 1000 ரன்களை கடந்தார்.
இந்த போட்டியில் அவர் மூன்று சிக்ஸ் அடித்திருந்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார். மேலும், ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதாவது விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட மிகக் குறைந்த பந்துகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார்.
அது அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மட்டுமே அந்த சாதனையை செய்திருந்தார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறார். முன்பு தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக சாதனை படைத்து இருக்கிறார்.
2024ஆம் ஆண்டிற்கான டி-20 உலகக் கோப்பை போட்டி 27.05.2024 அன்று அமெரிக்காவில் கனடா மற்று நேபாள நாடுகளின் அணிகளுக்கிடையில் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்கியது. கனடா அணி (183/7) நேபாள அணியை (19.3 ஓவரில் 120) 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இரண்டாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கிந்தியத் தீவில் ஓமன் அணிக்கும் பாப்புவா நியூ கினியா அனிக்கும் இடையே நடந்தது. இந்தப்போட்டியில் ஓமன் அணி (141/7) பாப்புவா நியூ கினியா அணியை (137/9) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
மூன்றாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கு இந்தியத் தீவுகளில் நமீபியா அணிக்கும் (18.5 ஓவர்களில் 135/5) உகாண்டா அணிக்கும் (134/8) இடையே நடந்தது. நமீபியா அணி உகாண்டா அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நாள் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி (19 ஓவரில் 161) நெதர்லாந்து அணியிடம் (181/6) 20 ரன்கள் வித்தாசத்தில் தோவியியைச் சந்தித்தது. 28ஆம் தேதி அன்றே அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
29ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டம் பாதியில் நின்றுபோனது. அடுத்த நாள் மேற்கு இந்தியத் தீவுகள் தாருபாவில் நடந்த ஆட்டமும் பாதியில் நின்று போனது. 30ஆம் தேதி அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டமும் ரத்தானது.
இந்த வரிசையில் ஜூன் 1ஆம் நாள் இந்தியா வங்கதேசம் இடையே நியூயார்க் நகரில் ஒரு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட வந்தது. ரோஹித் ஷர்மாவும் யஶஸ்வீ ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனும் தொடக்கவீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி ஆடவில்லை.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. ரோஹித் ஷர்மா 23, ரிஷப் பந்த் 53, சூரியகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 14, ஹார்திக பாண்ட்யா 40 ரன் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கட் இழப்பிற்கு 122 ரன் எடுத்தது. அந்த அணியின் மகமத்துல்லா அதிக அளவாக 40 ரன் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷதீப் சிங், ஷிவம் துபே இருஅவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். பும்ரா, சிராஜ், ஹாதிக், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். இவ்வாறு இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது
கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த பணிகளை தொடர்ந்து செய்வோம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது, மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில்,
People have placed their faith in NDA, for a third consecutive time! This is a historical feat in India’s history.
I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the aspirations of…
தேஜ கூட்டணி மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவை ஆட்சியை செய்ய மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி . கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது… என்று பதிவிட்டுள்ளார்.
பின்னர் பாஜக., தலைமை அலுவலகத்தில் அவர் உரையாற்றிய போது,
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், NDA கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் கிடைத்த வெற்றி; இந்த வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்; அனைவரும் 10 மணி நேரம் வேலை செய்வார்கள், ஆனால் நான் 18 மணி நேரம் உழைக்கிறேன்!
கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது இங்கு வந்துள்ளீர்கள், இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்துள்ளது!
இது 140 கோடி மக்களின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. 10 ஆண்டுகளுக்கு பிறகும் பாஜகவுக்கு 240 எம்பிக்கள் கிடைத்துள்ளனர். ஐஎன்டிஐ கூட்டணியின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட நாம் அதிகம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு தனிநபரிடமும் வறுமையை இல்லாமல் ஆக்குவோம். ஊழலை முற்றிலும் ஒழிப்போம்.
21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. விரைவில் உலகின் 3வது பொருளாதார நாடாக உயருவோம். என்று, தில்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் பாஜக., 240 இடங்களில் வென்று அல்லது தனிப்பெரும் கட்சியாக இருந்து உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி இடங்களான 272க்கு 30 இடங்களுக்கும் குறைவாகப் பெற்ற போதிலும், கூட்டணியாக மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து தில்லி, பாஜக., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பாஜக வினர் கொண்டாடினர்.
அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தொண்டர்களிடம் உற்சாகம் குறையாமல் பேசினார். தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்திருப்பதை கண்கலங்கியபடி தெரிவித்தார் மோடி. இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன். தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது தேஜ கூட்டணி மற்றும், பாஜக., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதைக் காட்டுகிறது.அவர்களுக்கு நன்றி.தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி… என்று கண்கலங்கிய படி தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்திய மக்கள் என்மீது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒடிசாவிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திராவில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றுள்ளோம். நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இத்தேர்தல் வெற்றி கொடுக்கிறது என்று கூறினார் பிரதமர் மோடி.
இந்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. தற்போது, பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி 290 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
பொதுவாக, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிராக மக்களின் கோபம் அல்லது எதிர்ப்பு உணர்வு திரும்புவது எங்குமே வழக்கம் தான். ஆனால் பல்வேறு எதிர்நிலைப் பிரசாரங்கள், வாக்காளர்களின் மனநிலையில் பேராசை காட்டி எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய குழப்பங்கள், நாடெங்கும் நிலவிய வெப்ப அலை என பல்வேறு காரணிகளையும் மீறி, ஆளும் பாஜக., தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் வாக்களித்து வாய்ப்பளித்து இருக்கிறார்கள் வாக்காளர்கள்.
கடந்த முறை பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2014 தேர்தலின் போது,மக்களின் நிராகரிப்புக்கு உள்ளாகி, 50 இடங்களுக்குள் முடங்கிப் போய், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தக்க வைக்க முடியாத நிலைக்குச் சென்றிருந்தது. அப்படிப்பட்ட நிலையை எல்லாம் பார்க்கும் போது, பாஜக.,வுக்கு, குறிப்பாக மோடிக்கு அப்படியான நிலையின்றி, வழக்கம் போல் தங்களது ஆதரவைக் கொடுத்து, 240 இடங்களுக்கு மேல் தனிப்பட்ட வகையில் கொடுத்திருக்கிறார்கள். ஓரிரண்டு மாநிலங்களில் ஏற்பட்ட பின்னடைவு, பாஜக.,வுக்கு பின்னடைவு போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தந்திருந்தாலும், வழக்கமான அல்லது எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையே பல்வேறு இடையூறுகளையும் கடந்து மக்கள் அளித்திருக்கிறார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்னர் பத்து வயதுக்குள்ளும், பதின்ம வயதுகளிலும் இருந்தவர்கள் இப்போது முதல்முறை வாக்காளர்களாக தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், அதற்கு முன் கூட்டணி ஆட்சிகளில் இருந்த நிலையற்ற தன்மை போன்றவை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். அவர்களைக் கவரும் வகையில், பாஜக., கூட்டணி தங்களது நியாயத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் வாக்குகளை அதிக அளவில் கவர்ந்திருக்க வேண்டும் என்றும் இப்போது கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
பொதுவாக, நாடு எங்கும் நிலவிய கடுமையான வெப்பத்தின் தாக்கம், சாதாரண வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதில் சுணக்கம் காட்டியிருப்பதும், எதிர்நிலை வாக்காளர்களை கட்டாயம் வாக்களிக்க உந்தித் தள்ளியிருப்பதும் உ.பி., வங்கம் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. மேலும், ஏழு கட்டங்களாக நடைபெற்ற நீண்ட நெடிய தேர்தலானது, பெரும் சோர்வையும் மக்கள் மனதில் வெறுப்பையும் அளித்திருப்பது வெளித்தெரிகிறது.
18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், ஜூன் 4, செவ்வாய்க்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வந்த போதே, தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரதிபலிக்காத வகையில், ஆளும் பாஜக., கூட்டணி தரப்புக்கு 300 என்ற அளவிலும், எதிர்த் தரப்புக்கு 200+ என்ற அளவிலும் முன்னிலை நிலவரம் தொடர்ந்து வந்தது. அது நாள் முழுதும் அப்படியே பிரதிபலித்தது. கடந்த தேர்தலில் பாஜக.,வுக்கு விழுந்த வாக்கு சதவீதமும் அப்படியே நீடித்தது. எனினும், பாஜக., 272 என்ற தனிப் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் தொடர்ந்து ஆட்சியை நடத்திச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது, கடந்த 1999ம் வருடத்தின் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றன. தலைவர்கள் பலர் ஒன்று கூடி, ஒற்றை மனிதனாக பிரதமர் மோடியை மட்டுமே குறிவைத்து, எதிர் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட வகையிலும் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். முக்கியமாக, வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய், மகளிருக்கு உதவிப் பணம், விவசாயிகளுக்கு இலவச பணம், சிறுபான்மையினருக்கு மிகப் பெரும் அளவிலான சலுகைகள் என பல்வேறு ஆசைகளைக் காட்டி, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து மக்களை திசை திருப்பினர். இந்த வேகத்தால், பாஜக.,வுக்கு வர வேண்டிய நடுநிலை வாக்குகள் சற்றே சிதறிப் போனது.
பாஜக., அதிகம் எதிர்பார்த்த உ.பி., மேற்கு வங்கம், மஹாராஷ்ட்டிரா, ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் பின்னடைவைச் சந்தித்ததால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாலும், தென் மாநிலங்களில் தமிழகம், கேரளம் தவிர்த்து ஓரளவு பாஜக.,வுக்கு கைகொடுத்திருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்!
எனவே தான், மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றிருக்கிறார். சுதந்திர பாரதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர் மூன்றாவது முறை பிரதமர் ஆவது என்பது இதுவே முதல் முறை. எனவே இந்த வெற்றியை பாஜக., தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே எதிர்பார்ப்பும் இருந்ததால், பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் உடனடியாக வந்திருக்கின்றன. உலகத் தலைவர்கள் பலர் சமூகத் தளங்களின் வழியே தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடி, கடந்த 2014ல் முதல்முறையாகப் பதவி ஏற்றது முதல், உள்நாட்டின் சீரமைப்புக்கும், வெளிவிவகாரத் துறைக்கும் தன் கவனத்தை முன்வைத்தார். ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள், ஊழல் குற்றச்சாட்டே விழாத வகையில் பத்தாண்டுகள் ஆட்சியை நகர்த்திச் சென்றது இவை மோடியின் வெற்றி. மோடி செயல்படுத்திய அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் நடைமுறை மற்றும் பண பரிவர்த்தனையை எளிதாக்கியது இவற்றின் வெற்றி அவருக்கு நிச்சயமான ஓரிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக.,வுக்கு மூன்று முக்கிய கொள்கைகள் இருந்தன. காஷ்மீர் விசேஷ அந்தஸ்து 307வது சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்ட்ம் இம்மூன்றில் முதலிரண்டும் சட்டபூர்வமாக சுமுகமாக நிறைவேறி அவருக்கு நற்பெயரைத் தந்தது. கறுப்புப்பணம் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், பழைய சட்டங்களை ஒழித்தல் போன்றவற்றில் கடந்த தேர்தலிலேயே எதிர்பிரசாரம் அதிகம் இருந்தும் மக்கள் வெற்றியைத் தந்தனர்.
காஷ்மீரில் மோடி எடுத்த சில முக்கிய முடிவுகள், ஏழை, விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவித்தொகை, இலவச காஸ், குடிநீர் இணைப்புகள், பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, மருத்துவக் காப்பீடு, மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், பெண்களுக்கு அதிகாரம், ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், கோவிட் காலத்தில் சிறப்பான முறையில் கையாண்டது, கோவிட் நேரத்தில் மக்கள் தேவைகளுக்கேற்ப பணம், ரேஷன் பொருள்கள் இலவசமாக அளித்து உதவியது என பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடுகள் அவருக்கு பெரும் வெற்றியைத் தந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. அதற்கு ஏற்ப, எதிர்க்கட்சியினர் துர்பிரசாரங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில் பிரதமர் மோடி சிறப்பான வகையில் திட்டமிட்ட பிரசாரம் மேற்கொண்டார்.
எனவே தான் 400 இடங்களை பாஜக., கூட்டணி பெறும் என்று அவரும் சொல்லி வந்தார். ஆனால் 400ஐ எட்ட விடமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் சொன்னபோது, எங்களுக்குத் தேவை 272 இடங்கள் தான், ஆனால் உங்களை நான் 400 வராது என்று சொல்ல வைத்திருக்கிறேன் அல்லவா, அதுதான் வெற்றி என்றார் பிரதமர் மோடி. உண்மையில் பிரதமர் பேச்சின் உள்ளர்த்த நிலையை இப்போது எதிர்க்கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. ஆட்சிக்குத் தேவையான 272 இடங்களைக் கடந்து மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது பாஜக., கூட்டணி! அந்த வகையில் மோடியின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை!