பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
Democracies are strange animals. Take the US of A, the oldest. The Presidential candidate ( POTUS) wins the popular vote across 50 States by three million votes. Yet Hilary Rodham Clinton loses in 2016. Not the first one. Out of the past 6 elections, every Republican President made it to the White House despite losing the popular stakes in the hustings. Strange. Yes.
The U.S. Constitution has devised a peculiar creature called the ‘Electoral College’ comprising identified electors from the 50 States. The winning candidate has to get 272 electors to become POTUS. And the electors come in different shapes and sizes from the fifty different States and popular votes get thrown into the dustbin. That is US democracy for you! Much like that, we today have this peculiar phenomenon in the Indian General Elections. The India Alliance has sought the resignation of the Prime Minister who led the National Democratic Alloance to an ‘unprecedented third time running’ win, as the ruling dispensation, on the ground that he had suffered a ‘moral’ loss.
It is true that the NDA rhetoric was ‘ Chaar so paar’ – past 400. That was political rhetoric. It was akin to India Alliance suggesting that they were getting 295 plus and ‘defeating NDA lock, stock and barrel’. And they are also reported to be getting into the act of poaching the 3 Ns- Nitish ( Kumar), Naidu ( Chandrababu) and Naveen ( Patmaik). And that is as moral as it comes, in Indian politics!
NDA was a pre poll alliance. They have handsomely crossed the 272 mark. Go back to pre 2014 era after 1984 Rajiv Gandhi win. 290 seats plus would have been treated as hugely satisfying and extremely difficult to accomplish. The leading national parties would have taken it any day and not asked the leader who led them, to ‘resign’.
It is only because Modi led two NDA terms with BJP crossing 272 seats, the perception has gained ground that BJP has lost. Have they? Yes, by the lofty standards or utopian at one level they set for themselves. Otherwise, they are literally two and half times that of INC seats. For the sin of not making the high water mark, after two terms- Narendra Modi has to resign? Ridiculous demand by any yardstick.
We have the Victor perceived by the prejudiced, as Vanquished. And the Vanquished is claiming to be Victorious. One is sure that BJP would take it, in any and every state election or national election, to fall short of a majority themselves but forming the government as THE major coalition partner. No shame in it. Politics is all about power grab. Might is right. Morality takes a back seat, all the time. INC is a past master at that. All other parties are their juniors, well trained by their ways. It is only that ‘others’ have bettered INC ways and now teaching them back. No party has the moral high ground to assume or occupy in the power game. First Past the Post wins. And by a Simple Majority.
Yes, perception matters in politics. But it cannot become the reality. It is numbers that matter. Failure of NDA to go beyond four hundred taints their win. No doubt. But, they have still Won as the pre poll alliance. That alone is fair game. That alone matters.
Modi’s tweet that it was an ‘unprecedented’ third term win is real. After two terms to triumph to get over anti-incumbency, is no joke. This is a near impossible task. That he set out on the 400 plus path itself sounds mind boggling. One seriously and sincerely felt NDA was setting too high a bar. So it has proved to be. But, still they cleared the primary target of 272 bar. The other side did not. Could not.
While NDA and BJP and Modi & Co may have a lot to introspect, their win is a WIN by any standard and an ‘unprecedented one’. Ultimately, crushing the false propaganda that Indian Democracy was in Danger, Democracy has actually Triumphed, with a strong opposition, say the voters in We the People!
(Writer is a practicing advocate in the Madras High Court)
கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை…
என் சக இந்திய மக்களே, ‘அடுத்த 50 ஆண்டுகளை இந்த தேசத்துக்காக மட்டும் நாம் அா்ப்பணிக்க வேண்டும்’ என்று 1897-ல் சுவாமி விவேகானந்தா் கூறினாா். இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது.
சுவாமி விவேகானந்தா் கூறியதைப் போன்று, நாமும் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்துக்காக மட்டும் அா்ப்பணிக்க வேண்டும். நமது முயற்சிகள் வருங்கால சந்ததியினருக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவதுடன், வரவிருக்கும் நூற்றாண்டுகள் பாரதத்தை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.
நாட்டின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தைப் பாா்க்கும்போது, நாம் விரைந்து முயற்சிப்பதுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், லட்சிய பாரதத்தை (வளா்ச்சியடைந்த பாரதத்தை) உருவாக்குவதற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான, 2024 மக்களவைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூன் 1) நிறவடைந்துள்ளது. கன்னியாகுமரியில் மூன்று நாள் ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு தில்லி சென்றேன்.
என் மனம் பல அனுபவங்களாலும் உணா்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. எனக்குள் எல்லையற்ற சக்தியின் பிரவாகத்தை உணா்கிறேன். 2024 மக்களவைத் தோ்தல் அமிா்த காலத்தின் முதல் தோ்தலாகும். இந்தத் தோ்தலின்போது இறுதிப் பேரணி என்னை பஞ்சாபில் உள்ள ஹோஷியாா்பூருக்கு அழைத்துச் சென்றது. பஞ்சாப் மாபெரும் குருக்களின் பூமியும், துறவி ரவிதாஸ் அவா்களுடன் தொடா்புடைய பூமியுமாகும். அதன் பிறகு கன்னியாகுமரிக்கு பாரத அன்னையின் காலடியில் வந்து நின்றேன்.
தோ்தல் உற்சாகம் என் இதயத்திலும் மனதிலும் எதிரொலித்தது இயல்பானதே. நானே ஒரு வேட்பாளராக, எனது பிரசாரத்தை எனது அன்புக்குரிய காசி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு கன்னியாகுமரிக்கு வந்தேன்.
கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தா் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பாா் என்று யோசித்தேன். என் தியானத்தின் ஒரு பகுதி இதே போன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது. இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிா்காலத்தைப் பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் தொடா்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது.
கன்னியாகுமரியின் இந்த மண், குறிப்பாக பாரதத்தின் தேசியம் மற்றும் ஒற்றுமை உணா்வின் மீது சந்தேகம் கொண்ட எந்தவொரு நபருக்கும், ஒற்றுமையின் அழிக்க முடியாத செய்தியைத் தெரிவிக்கிறது.
தற்போது, பாரதத்தின் ஆட்சி முறை, உலகிலுள்ள பல நாடுகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளது. 25 கோடி மக்களுக்கு அதிகாரமளித்து, அவா்கள் 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து மீண்டது இதுவரை கண்டிராதது. மக்களுக்கு உகந்த நல்லாட்சி, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்) போன்ற புதுமையான நடைமுறைகள், தற்போது உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் முதல் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன் சென்றடையச் செய்வதற்கான நமது முயற்சிகள், சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் தனிநபா்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் உலக நாடுகளுக்கு உத்வேகமளித்துள்ளன.
தற்போது, பாரதத்தின் வளா்ச்சி மற்றும் எழுச்சி, பாரதத்திற்கு மட்டுமான சிறந்த வாய்ப்பாக அல்லாமல், உலகெங்கிலுமுள்ள நமது நட்பு நாடுகள் அனைத்திற்குமான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக திகழ்கிறது. ஜி-20 மாநாடு வெற்றி பெற்றதிலிருந்தே, இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து உலகம் முழுதும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
21-ம் நூற்றாண்டின் உலகம், பல்வேறு நம்பிக்கைகளுடன் இந்தியாவை எதிா்நோக்கி உள்ளது. எனவே, உலக அரங்கில் முன்னேறிச் செல்ல, நாமும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். அத்துடன், சீா்திருத்தங்கள்குறித்த நமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் அவசியம்.
பாரதத்தின் சீா்திருத்தங்கள், பொருளாதார சீா்திருத்தங்களோடு நின்று விடாமல், வாழக்கையின் ஒவ்வோா் அம்சத்திலும், சீா்திருத்தப் பாதையை நோக்கியே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நமது சீா்திருத்தங்களும், 2047-க்குள் ‘லட்சிய பாரதத்தின்’ (வளா்ச்சியடைந்த பாரதம்) எதிா்பாா்ப்புகளுக்கேற்ப அமைய வேண்டும். எனவேதான், சீா்திருத்தம், அதைச் செயல்படுத்துதல், மாற்றியமைத்தல் என்ற தொலைநோக்குப் பாா்வையை நான் வகுத்துள்ளேன். அதன் அடிப்படையில், நமது அதிகார வா்க்கம் செயல்படுவதோடு, மக்கள் பங்கேற்பு என்ற உணா்வோடு மக்களும் இணையும்போது, மாற்றம் நிகழும்.
நம் நாட்டை, ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ ஆக மாற்றுவதற்கான அடிப்படைக் கொள்கைகளை நாம் மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும். நான்கு திசைகளிலும் நாம் விரைந்து பணியாற்றுவது அவசியம்: வேகம், அளவு, வாய்ப்பு மற்றும் தரம். உற்பத்தியோடு சோ்த்து, தரம் மற்றும் ‘குறைபாடு இல்லை-விளைவுகள் இல்லை’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நாடாக, காலங்கடந்த சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்வதும் அவசியம். அவநம்பிக்கையை தொழிலாகவே கொண்டவா்களின் பிடியிலிருந்து சமூகத்தை நாம் விடுவிப்பதும் அவசியம். எதிா்மறையிலிருந்து விடுபடுவது என்பது, வெற்றிக்கான முதல்படி என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நோ்மறை எண்ணம் இருந்தால்தான் வெற்றி மலரும்.
20-ம் நூற்றாண்டின் நான்காவது மற்றும் ஐந்தாவது தசாப்தங்களை சுதந்திரப் போராட்டத்சுத்து புதிய உத்வேகம் அளிக்க நாம் பயன்படுத்தியுள்ள வேளையில், 21-ஆம் நூற்றாண்டின் இந்த 25 ஆண்டுகளில், ‘வளா்ச்சியடைந்த இந்தியா’வுக்கு நாம் அடித்தளமிட்டுள்ளேம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவது, அந்தக் காலத்தில் பெரும் தியாகமாக கருதப்பட்டது; தற்காலமானது ஒவ்வொருவரின் பெரிய அளவிலான, நீடித்த பங்களிப்பை வலியுறுத்துகிறது.
(மேலே குறிப்பிட்ட கருத்துகள் பிரதமா் மோடி, கன்னியாகுமரியிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) தில்லிக்குத் திரும்பியபோது மூன்று மணி நேரத்தில் அவா் எழுதியது.)
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று தனது வாடிக்கை குறித்து மோதிஜி
கேள்வி – தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதி. ஆனா பொதுவா தேர்தல் முடிவுகள் வெளியாகற நாளன்னைக்கு உங்க வாடிக்கை என்னவா இருக்கும்?
பதில் – பொதுவா அந்த நாட்கள்ல நான், கூடுதல் எச்சரிக்கையா இருப்பேன், அந்த நாட்கள்ல. சில விஷயங்கள்லேர்ந்து விலகியே இருப்பேன். நான் 2002ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். நான், 2001ஆம் ஆண்டு முதலமைச்சரா ஆனேன் 2002ஆம் ஆண்டு தேர்தல் வந்திச்சு. நான் ஜெயிக்கறது கடினம்னு பொதுவா கருதப்பட்டிச்சு. ஒரு ஒண்ணரை மணிவாக்குல என் வீட்டு வாசல்ல மேளம் கொட்ட ஆரம்பிச்சாங்க.
அப்ப அங்க….. நான் கீழிருந்து, ஒருத்தரை வரச் சொன்னேன். அவரு கையில ஒரு கடிதத்தைக் கொண்டு வந்தாரு. அங்க, பார்ட்டிக்காரங்க பேர் வெளிய இருக்காங்க. உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கணுங்கறாங்கன்னாரு.
எனக்கு ஒரு ஒண்ணு ஒண்ணரை மணிக்குத் தான் முதல்ல தெரிய வந்திச்சு, என்ன ரிசல்டுன்னு. இப்பக்கூட நான், எக்ஸிட் போல் வருது முடிவுகள் வெளியாகுற அன்னைக்குக் கூட கிட்டத்தட்ட, நான் விலகியே இருக்கேன்.
கேள்வி – ஒவ்வொரு தேர்தல்லயும், மதம் பேசுபொருளாகுது, இப்ப வோட் ஜிஹாத் வந்திருக்கு. முஸ்லிம்கள் பற்றி பேசப்படுகிறது. தேர்தல் கடந்து சென்று விடுகிறது, ஆனால் சமூகத்தின் சகோதரத்துவமும், மதநல்லிணக்க இழையும் சேதப்படுகிறதே?
பதில்- நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கவலை ரொம்ப சரியான ஒன்று தான். வோட் ஜிஹாத், ஏதோ, மதரசாவைச் சேர்ந்த ஒரு மௌல்வி கூறியிருந்தார்னா, அவருடைய புரிதல் தவறானது அப்படீன்னு நாம கருத வாய்ப்பிருக்கு. நல்லா மெத்தப் படிச்ச ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க, வோட் ஜிஹாத் பத்திப் பேசும் போது, அப்ப கவலை அதிகரிக்குது.
அப்ப கவலை அதிகமாகுது. இது தவறான பாதையில போயிட்டு இருக்கு. இப்ப நடக்க விடக் கூடாது. யாரோ ஏறுக்குமாறா, பேசற சின்ன நபர்கள் எங்கயும் இருக்க வாய்ப்பிருக்கு அதை ஒரு பெரிய குற்றச்சாட்டா தெரிவிக்கலை. ஆனா ராஜகுடும்பத்துக்கு நெருக்கமான குடும்பத்தவங்க, நல்லா படிச்ச குடும்பக்காரங்க. அவங்க இந்தப் பாதையை தேர்ந்தெடுக்கறது, ரொம்ப கவலையை அளிக்கக்கூடியது.
கேள்வி – எதிரணியில் பல தலைவர்கள் தனிப்பட்ட முறையிலே உங்களை விரும்புகிறார்கள் என்றாலும் மோதி அவர்கள் விரும்புவது யாரை?
பதில் – நான் பேரைச் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது இருந்தாலும் பதில் சொல்றேன். எதிரெதிர் தரப்பு வக்கீல்களுக்கு இடையில எப்படி மோதல் இருக்கும்? ஆனா அவங்களோட குடும்ப அளவிலான நட்புல பாதிப்பு இருக்காது. அரசியல் துறையில கூட, நிறைய விஷயங்கள் நடந்தாலும், நல்ல இணக்கமும் இருக்கு..
நல்ல இணக்கம் இருக்கு. எப்படீன்னா, பிரணவ் முகர்ஜி காங்கிரஸைச் சேர்ந்தவரு. எனக்கு நினைவிருக்கு என்னென்னா, 2019 தேர்தல்ல, அவரு சொன்னாரு மோதிஜி, என்னோட….. விஷயம் இல்லை ஆனா, இத்தனை உழைச்சீங்கன்னா உடல்நலத்தை யாரு கவனிப்பாங்கன்னாரு?
அவரு காங்கிரஸைச் சேர்ந்தவரு, நானோ பிஜேபியைச் சேர்ந்தவன். நானோ காங்கிரஸைத் தோக்கடிக்க வேலை செஞ்சிட்டு இருக்கேன். 2019இல. இருந்தாலும் எனக்கு ஃபோன் போட்டுச் சொன்னாரு.
நடந்து முடிந்த லோக் சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை முடிந்து நாளையே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் அமோகமாக வெல்லும், எதிர்க் கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி தோற்கும், என்று இரண்டு நாட்கள் முன்பே பரவலாகத் தெரிந்தது. காரணம், வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் (exit polls) இந்த முடிவுகளைக் கணித்து அறிவித்தன.
அரசியல் நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்த தேர்தல் முடிவா இந்தக் கணிப்புகள்? ஆம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் – ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, மு. க. ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் – எதிர்பார்த்த தேர்தல் முடிவும் இதுதானா? ஆம், இதுதான்.
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது ஜெயிக்கும், மத்தியில் மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும், என்று கணிக்கத் தெரியாத மண்டூகங்கள் அல்ல எதிர்க்கட்சித் தலைவர்கள். அவர்களின் தேர்தல் தோல்வி அவர்களே ஊகித்ததுதான். ஆனால் பிரதமர் மோடியின் பெருமையை, தங்கள் தோல்வியை, மக்களின் முடிவை, ஏற்றுக் கொள்ளும் நேர்மையும் ஜனநாயகப் பக்குவமும் அவர்களிடம் இல்லை.
இந்த லோக் சபா தேர்தலில் ஆறேழு கருத்துக் கணிப்பு அமைப்புகள் வெளிவாசல் கருத்துக் கணிப்பு நடத்தி, அவை எல்லாமே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அந்தக் கூட்டணி சராசரியாக சுமார் 360 தொகுதிகளில் வெல்லும், எதிர்க் கட்சிகளின் இண்டி கூட்டணி சுமார் 149 இடங்களை மட்டும் கைப்பற்றும் என்று அறிவித்தன. சற்று கூடக் குறைய தேர்தல் முடிவுகள் அமையலாம். ஆனால் இண்டி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைப்பதாக இறுதி முடிவுகள் அமையாது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு, இந்த கருத்துக் கணிப்பை நிராகரித்த ராகுல் காந்தி, “இது மோடி ஊடகங்களின் கருத்துக் கணிப்பு. இண்டி கூட்டணி 295 இடங்களில் வெல்லும்” என்று சவாலாகப் பேசினார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் கார்கேயும் “மக்கள் வெளிப்படுத்திய வெளிவாசல் கருத்துக் கணிப்பின் படி, இண்டி கூட்டணி 295 இடங்களிலாவது வெல்லும்” என்று சொன்னார். காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சல்மான் குர்ஷித்தும் அதையே சொன்னார்கள். சமஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் அப்படியே 295-ஐ பிடித்துக் கொண்டு பேசினார்.
இண்டி கூட்டணி 295 எம். பி. இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்று ஏன் இந்த எதிர்க் கட்சித் தலைவர்கள் அப்பட்டமாகப் பொய் பேசினார்கள்? தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளிவந்தவுடன், தயங்காமல் இன்னொரு பெரிய பொய்யைச் சொல்லத் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்களா? அந்தப் பெரிய பொய் என்ன என்பதை அவர்களில் ஒருவரான அரவிந்த் கேஜ்ரிவால் இப்போதே சொல்லிவிட்டார்.
கேஜரிவால் சொன்னது: “வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் போலி. ஓட்டு எண்ணுவதற்கு மூன்று நாட்கள் முன்பு ஏன் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்? இதற்கான ஒரு விளக்கம்: அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு செய்யப் பார்க்கிறார்கள்.”
கேஜ்ரிவால் சொல்ல வருவது இதுதான்: ‘தேர்தலில் மக்கள் நிஜமாக வாக்களித்தபடி, இண்டி கூட்டணிதான் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டால், அது அவர்களின் போலியான வெற்றி. அப்படி நடந்தால், தேர்தல் ஆணையமும் பாஜக-வும் கூட்டு சதி செய்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படச் செய்து, இண்டி கூட்டணி தோற்றதாகக் காண்பித்து ஜனநாயகத்தையும் மோசடி செய்துவிட்டார்கள் என்று அர்த்தம்.’ கூசாமல், முகத்தில் சலனம் இல்லாமல், பொய் பேசுவது கேஜ்ரிவாலுக்குக் கைவந்த கலை.
“எதுவாக இருந்தாலும், வாக்குப் பதிவில் மக்களின் முடிவு தெரிந்தபின் எல்லாக் கட்சிகளும் அதை ஏற்பது ஜனநாயகத்தில் அவசியம். அதன்படி புதிய அரசு அமைந்து நாடு முன்னேறட்டும்” என்று எதிர்க் கட்சிகள் பேசி இருந்தால் நல்லது. அத்தகைய உயர்ந்த ஜனநாயகப் பண்பு நமது எதிர்க் கட்சிகளிடம் இல்லை.
அது இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம், “வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், தேர்தல் முடிவுகள் என்ன என்று நாம் மூன்று நாட்களில் பார்க்கப் போகிறோம். பிறகு எங்கள் கருத்தைச் சொல்கிறோம்” என்று மதிப்பாகவாவது எதிர்க் கட்சித் தலைவர்கள் பேசி இருக்கலாம். ஆனால் எதிர்க் கட்சிகளின் அரசியல் உலகில் மதிப்பு மரியாதை என்பது கிடையாது. எல்லாம் சின்னத்தனம்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு ஒரு நாள் முன்பாக, சோனியா காந்தி மட்டும் வேறு வழி இல்லாமல் “நாம் பொறுத்திருப்போம். வெளிவாசல் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பின்னால் எப்படியும் பேச வசதியாக, இப்படியும் அப்படியுமாகச் சொல்லி இருக்கிறார்.
எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து, ஒரு எண்ணத்தில் ஒன்றுபடுகிறார்கள். அதாவது, ‘மக்களின் தேர்வு மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும், நாம் ஏன் அதை ஏற்கவேண்டும்? தேர்தல் ஆணையத்தின் நன்மதிப்பை, அதன் நடு நிலைமையை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை, நாம் இழித்தாலும் பழித்தாலும் பரவாயில்லை. அந்த ஆணையத்தின் சிறப்பான பணிகளால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் உபயோகிப்பதால், ஜனநாயக உலகில் இந்தியாவுக்குக் கிடைக்கும் நற்பெயர் ரிப்பேர் ஆனாலும் பரவாயில்லை. நமக்கு வேண்டியது, மோடி பிரதமர் ஆகக் கூடாது, பாஜக பெரிய சக்தியாக இருக்கக் கூடாது.’
‘பாஜக-வின் முக்கியத் தலைவராக மோடி இருந்தால், அதுவும் அவர் பிரதமராக இருந்தால், நாம் விரும்பியபடி பெர்பாமன்ஸ் செய்ய முடியவில்லை. எது எக்கேடு கேட்டால் என்ன? மேலும் மேலும் நாம் கஷ்ட-நஷ்டப் பட முடியாது. இதில் கோர்ட் கேஸ்கள் வேறு புதுசு புதுசாக வருகின்றன. எல்லாவற்றையும் தாங்க முடியாது. எந்தத் தீர்ப்பு யாருக்கு எதிராக எப்போது வருமோ? அதனால் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, மோடியின் வெற்றிக்கு வகை செய்யும் எதையும் தாம் தூம் என்று கண்டபடி எதிர்ப்போம், அவரை வீழ்த்த கன்னாபின்னா பேச்சு எதையும் பேசுவோம். மான அவமான சிந்தனைகள் நமக்கு உதவாது.’
இந்த எண்ணம்தான் எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரையும் பிதற்றலாக, பைத்தியக்காரத்தனமாக, வில்லத்தனமாக, நமது தேச நலன்களையும் ஜனநாயக நெறிகளையும் காலில் நசுக்கும் விதமாகப் பேச வைக்கிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டுக்குச் செய்த பணிகளும் நன்மைகளும் அசாத்தியமானவை, உலக அளவில் நமக்குப் பெருமை சேர்ப்பவை. அவற்றை நாம் கண்ணால் காணலாம், எண்களில் அளக்கலாம்.
எளிதில் அளக்க முடியாத ஒரு பெருமையும் மகிமையும் மோடி என்ற மனிதனின் மறு பக்கத்திற்கு உண்டு. அவர் ஒரு மாமனிதன் என்பதற்கு அதுவும் சம அளவில் முக்கியமானது. அது என்னவென்றால்: நாட்டின் சுயநல தேச விரோத எதிர்க் கட்சிகளைத் தேர்தலில் வென்று, அவைகளைப் பத்தாண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளி வைத்திருப்பது. வரும் ஐந்தாண்டுகளுக்கும் இந்தப் பேறு நமக்குக் கிடைக்கும்.
மோடி இந்தியாவுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய சேவை இது. மோடியின் சேவை இன்னும் பற்பல ஆண்டுகள் நாட்டுக்குத் தேவைதானே?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தரிசனம் செய்தார்.
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார்இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்தனர்
கோவிலுக்கு வருகை தந்த அவர்களை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துரை ராஜா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார் சன்னதியில் ராதிகா சரத்குமார் சுமார் 15 நிமிடங்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து தங்க கோபுரம் கண்ணாடி மாளிகை தங்கத்தேர் ஆகியவற்றை தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜ ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று சென்றனர்
இது ஒரு பிரபலமான நியாயம் இது ஏதோ விலங்குகளின் கதையல்ல. இந்த நியாயத்தில் இரண்டு விதமான செய்திகள் உள்ளன.
ஒன்று வேதாந்த அர்த்தம். நம் உண்மை சொரூபத்தை அறிவது. இரண்டாவது உலகியல் அர்த்தம். ‘நீ வலிமை கொண்டவன்’ என்ற தன்னம்பிக்கையை அளிப்பது.
வேதாந்த வகுப்புகளில் இந்த ‘சிம்ஹ மேஷ’ நியாயத்தொடு தொடர்புடைய கதையை எடுத்துக்காட்டுவது வழக்கம்.
ஒரு ஊரில் ஒரு ஆடு மேய்ப்பவன் இருந்தான். அவன் ஒருநாள் ஆடுகளை மேய்த்து வருகையில் ஒரு சம்பவம் நேர்ந்தது. நிறைமாத கர்ப்பத்தோடு இருந்த ஒரு சிங்கத்தை ஒரு வேடுவன் அம்பு விட்டு அடித்தான். அந்தச் சிங்கம் ஒரு குட்டியை ஈன்றுவிட்டு ஓடி மறைந்தது.
ஆடு மேய்ப்பவன் கருணையோடு அந்தச் சிங்கக் குட்டியை எடுத்து வந்து ஆடுகளோடு சேர்த்து வளர்த்து வந்தான். அது ஆடுகளைப் போலவே இலை, தழைகளைத் தின்று, வளர்ந்து வந்தது. ஆடுகளைப் போலவே ம்மே ம்மே என்று கத்தியது.
ஒருநாள் ஒரு பெரிய சிங்கம் அந்த ஆட்டுமந்தையில் இருந்த சின்னச் சிங்கத்தைக் கண்டது. ஆடுகளோடு சேர்த்து அதுவும் ஓட்டம் பிடித்தது. இயல்பான பகைவர்களின் இடையில் ஆட்டைப் போலவே நடந்து கொண்ட சிங்கக் குட்டியை, பெரிய சிங்கம் பிடித்து நிறுத்தியது. புதிய விலங்கைப் பார்த்து அஞ்சிய சிங்கக் குட்டி, ம்மே ம்மே என்று கத்தியது. பெரிய சிங்கம், அஞ்சாதே என்று கூறி சிங்கக் குட்டியை ஒரு நதியருகில் அழைத்துச் சென்று, அதன் நிழலை அதில் காண்பித்தது. “சரியாகப் பார். நாம் இருவரும் ஒன்று போல் இருக்கிறோம். உன் பிடரி மயிரைப் பார்” என்று சிங்கக் குட்டிக்கு உண்மையை உணர்த்தியது. கர்ஜனை செய்வதற்குக் கற்றுக் கொடுத்தது. குட்டிச் சிங்கத்தை ஆட்டு மந்தையில் இருந்து விலக்கி, தன்னோடு அழைத்துச் சென்றது. இது சுருக்கமாக ‘சிம்ஹம் மேஷம்’ கதை.
சுவாமி விவேகானந்தர், இந்தக் கதையைத் தன் சொற்பொழிவுகளில் அடிக்கடி எடுத்துக் காட்டுவார். வெளிநாட்டு மதமான கிறித்தவம் சர்ச்சுகளில் மக்களைப் பார்த்து, “பாவிகளே” என்று அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளித்தது. பல சந்தர்பங்களில் அவர் உரையாற்றும் போது, “நீங்கள் பாவிகள் அல்ல. அமிர்தத்தின் புதல்வர்கள். நாம் அமிர்தப் புத்திரர்கள்” என்று கர்ஜனை செய்வார்.
“சிங்கங்களே, விழித்தெழுங்கள் நீங்கள் ஆடுகள் என்ற பிரமையிலிருந்து வெளியே வாருங்கள். அமிர்தப் புதல்வர்கள் நீங்கள். எத்தனை இனிமையான உற்சாகமூட்டும் பெயர்
அமிர்தம்” என்று கூறும் சுவாமிஜி, “நீ என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே ஆவாய். நீ உன்னை பலவீனனாக நினைத்தால் பலவீனமாக ஆவாய். வலிமையுள்ளவனாக நினைத்தால் வலிமையுள்ளவனாக ஆவாய். இந்த சிம்ஹ மேஷ நியாயத்தின் அர்த்தங்களில் இதுவும் ஒன்று. கள்ளமற்ற மனிதர்களைப் பாவிகள் என்று அழைப்பது எத்தகைய பாவம்?” என்று கூறுவர் சுவாமிஜி, மேற்சொன்ன கதையிலுள்ள பெரிய சிங்கத்தைப் போல, இந்த இளைய சுவாமிஜி உண்மையைத் தெளிவுபடுத்தி குருவாக ஆனார்.
வெளிநாட்டு யாத்திரைக்குப் பின்னர் அவர் பாரத மண்ணில் பாதம் பதித்தபோது ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்வாமிஜி, சிங்கத்தைப் போல் கர்ஜித்தார். “எழுமின், விழிமின், மனிதர்களாகுங்கள். நாம் அடிமைகள் என்றும் எதற்கும் பயன் படமாட்டோம் என்றும் நம் மூதாதையரான ரிஷிகள் சொல்லியதெல்லாம் நகைப்புக்குரியன என்றும் எவனோ வெளியாள் கூறியவுடன் அதுவே உண்மையென்று நம்பி அவனுடைய பூட்சைத் துடைப்பது எத்தகைய கீழ்மை வாய்ந்தது? எத்தனை பரிதாபம்” என்று கூறி இந்த ‘சிம்ஹ மேஷ’ நியாயத்தை எடுத்துக் காட்டினார். “நீங்கள் என் பாரத தேசச் சிங்கங்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
இந்த நியாயத்திற்கான வேதாந்தப் பொருள் என்னவென்றால், “தத்வமசி, அஹம் பிரஹ்மாஸ்மி, நான் உடல் என்ற ‘தேக பிராந்தி’ இருக்கக் கூடாது” என்று கூறுவது. “ஸ்வ – ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்” என்று கூறுவதே இதன் சாராம்சம். வேதாந்த சாத்திரத்தில் இந்தக் கதையை மற்றொரு விதமாக விளக்குவார்கள்.
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். எதிரிகளின் தாக்குதலில் நாட்டை இழந்தான். அந்த அரசனின் ராணி கருவுற்றிருந்தாள். மந்திரிகள் சாமர்த்தியமாக அவளை எதிர்களிடமிருந்து பாதுகாத்து காட்டில் மறைத்து வைத்தனர். சில நாட்களில் அவள் ஒரு ஆண் சிசுவுவைப் பெற்றெடுத்தாள். காட்டில் வேடுவர்களிடையே வளர்ந்த அந்த சிறுவன் தான் அரசகுமாரன் என்ற உண்மையை மறந்தான்.
சில காலம் கழிந்தது. இளைஞனான அரச குமாரனுக்கு மந்திரி உண்மையை எடுத்துரைத்தான். “நீ வனவாசி இல்லை. நீ ஒரு அரச குமாரன்” என்றான். ரோஷம் மிகுந்த அரசிளங்குமரன் படைக்கலை பயின்று படைதிரட்டிச் சென்று பகையரசன் மீது முற்றுகையிட்டு வெற்றி பெறும்படி உற்சாகம் பெற்றான். “உன் சக்தியை நீ அறிந்து கொள்” என்ற உலகியல் அர்த்தத்தோடு கூட நம் உண்மை சொரூபம் என்ன என்பதை உணரவேண்டுமென்பது வேதாந்தம் காட்டும் பொருள்.
“நீ யார்?” என்ற கேள்விக்கு எட்டு வயது ஆதிசங்கரர் மனித இனத்திற்கு எடுத்துரைத்த உண்மையே ‘நிர்வாண ஷட்கம்’ என்ற சுலோகமாகப் புகழ்பெற்று விளங்குகிறது.
பொருள் – மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவும் நானல்ல. காது, நாக்கு, மூக்கு, கண் எதுவும் நானல்ல. பஞ்ச பூதங்களும் நானல்ல. நான் சிதானந்த ரூபமான சிவம். நான் சிவம்.
குருமார்கள் ஒரே கருத்தையே கூறுகிறார்கள். “நாம் வெறும் ஐந்து கோசங்கள், ஏழு தாதுக்கள் கொண்ட உடம்பு அல்ல” என்று போதிக்கிறார்கள். “ஆடு அல்ல. சிங்கம்” என்று எடுத்துரைக்கிறார்கள்.
ஆதி சங்கரரின் நிர்வாணஷட்கம் கூறும் கருத்தை அனுசரித்து, ‘ஆச்சார்ய புல்லெல ஸ்ரீராமச்சந்த்ருடு’, நாம் பாரதியர்கள் என்று நினைவுபடுத்தும் ‘மஹான் பாரதோஹம்’ என்ற பத்து சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திர மாலையைப் படைத்துள்ளார்.
“நாம் எதோ ஒரு இடத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. நாம் பாரதியர்கள்” என்ற உண்மையை வெளியிடும் இந்த தசகத்தில் எல்லா சுலோகங்களும் இந்த நியாயத்திற்குப் பொருளாக உளளன. அவற்றுள் ஒன்றை இங்கு பார்ப்போம்.
“ந வங்கோ நவாங்கோ நவாஹம் கலிங்கோ ந வா மத்யதேஸ்யோ மமாராஷ்ட்ரகோ வா ந வா சைந்தவோஹம் ந வா காமரூப: நிரஸ்த ப்ரபேதோ மஹான் பாரதோஹம் ||”
பொருள் – நான் பெங்காலிக்காரனோ, ஒரிஸ்ஸாகாரனோ, மத்தியப்பிரதேஷ்காரனோ அஸ்ஸாம்காரனோ மட்டுமல்ல. நான் பாரதியன். மகிமை பொருந்திய பாரத தேசத்தவன்.
இந்த ‘சிம்ஹ, மேஷ நியாயம்’ அளிக்கும் வேதாந்தச் செய்தியை சங்கரர், கீதாசாரியன் மற்றும் பலர் எடுத்துரைத்துள்ளனர். ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடரான ஹஸ்தாமலகர் இந்த கருத்தை அளிக்கும் ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார். இவற்றுக்கு சாட்சாத் குருவான ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார் என்பது சிறப்பு.
ஹஸ்தாமலகரின் பிறவி விசித்திரமானது. மரணித்த ஒரு குழந்தையின் உடலில் ஒரு மகா ஞானி பிரவேசித்த சம்பவம் அது. நிரந்தரமான பரகாய பிரவேசம். அந்தக் குழந்தைக்கு ஏழு வயது நிரம்பினாலும் பேச்சு வரவில்லை. கவலை கொண்ட பெற்றோர் ஆதி சங்கரரிடம் அழைத்து வந்தார்கள்.
சங்கரர் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தார். “ஓ சிசுவே, நீ யார்? யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வந்தாய்? உன் பெயர் என்ன? எங்கு செல்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, அது வரை பேசாத சிறுவன், வசந்த காலம் வந்தவுடன் குயில் கூவத் தொடங்குவது போல, சங்கரரின் எதிரில் பேசத் தொடங்கினான். அதுவே
‘ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்’. பதினான்கு சுலோகங்கள் கொண்ட வேதாந்த நூல். சங்கரரின் கேள்விகளுக்கு ஹஸ்தாமலகரின் பதில்கள் நமக்காக.
பொருள் – நான் மனிதன் அல்ல. தேவனோ யக்ஷனோ அல்ல. நான் நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவனும் அல்ல. நான்கு வர்ணாசிரமங்களைச் சேர்ந்தவனும் அல்ல. நான் பிக்ஷுவுமல்ல. நான் சுத்தமான ஞான சொரூபன்.
உன் உண்மை சொரூபத்தை நீ அறிந்து கொள் என்று கூறும் ஸ்தோத்திரம் இது. ‘ஸ்வ ஸ்வரூப’ ஞானமே முக்கியமானது. நான் உடலே என்ற உணர்வு சரியல்ல.
அப்படிப்பட்ட ஞானத்தை அறிவது அவசியம் என்பதை ஒருகதை வடிவில் கூறும் நியாயமே இந்த ‘சிம்ஹ மேஷ நியாயம்’.
தத்வமஸி, அஹம் ப்ரஹ்மாஸ்மி, ப்ரஞ்ஞானம் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரஹ்ம என்ற வேத வாக்கியங்களின் சாரத்தைக் கூறும் நான்கு மஹா வாக்கியங்களின் சாரம் இந்த நியாயத்தில் உள்ளது.
ஆத்மவிஸ்ம்ருதி – நம் சுய ஸ்வரூபமான ஆத்மாவை மறப்பது :-
*தன்னம்பிக்கையிழந்த மனிதனுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது இந்த நியாயம். இதற்கு உதாரணமாக, ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ‘கேசவராவ் பலிராம் ஹெட்கேவர்’ ஹிந்து சமூகத்தைத் தட்டி எழுப்பிய சம்பவத்தைக் கூறலாம்.
“ஹிந்துர்விசால குண சிந்து ரபீஹலோகே பிந்தூயதே விகடிதோ ந கரோதி கிஞ்சித் | தத்ஸம்ஹிதம் கடியதும் ஜனனம் யதீயம் தம் கேசவம் முஹுரஹம் மனஸா ஸ்மராமி ||
பொருள் – இந்த உலகில் ஹிந்து என்பவன் நற்குணங்கள் நிரம்பியவன். ஆனால் ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை. அதன் காரணமாக ‘சிந்து’ போன்ற ஹிந்து நீர்த்துளி போல் வாழ்கிறான். அதனால் சாமர்த்தியம் அற்றவனாகிறான். இந்த நிலையில் இருக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைத்து, அவர்களிடம் இருக்கும் ‘ஆத்ம மறதி’யை நீக்குவதற்காகப் பிறந்தவர் ஸ்ரீ கேசவ் டாக்டர்ஜி. நான் என் மனதில் ஒவ்வொரு கணமும் அவரை சிந்தனை செய்கிறேன்.
ஆத்மாவை மறப்பது என்ற நிலையில் இருந்த ஹனுமனுக்கு ஜாம்பவான் நிஜ சொரூபத்தை எடுத்துரைத்தது போல, நம் தேசத்தை ‘விஸ்வகுரு’ என்ற ஸ்தானத்தில் மீண்டும் நிலைநிறுத்துவதற்குத் தேவையானது ஆத்மஞானம்.
*சீதையைக் கண்டுபிடிப்பதற்காக சமுத்திரத்தைத் தாண்டும் செயலைச் செய்யக் கூடிய சாமர்த்தியம் கொண்டவன் ஹனுமனே என்றுணர்ந்தான் ஜாம்பவான். வாயுபுத்திரனை உற்சாகப்படுத்தித் தூண்டினான். “ஓ வானரங்களில் சிறந்தவனே, பலம் புத்தி, தேஜஸ், தைரியம் என்ற குணங்கள் உன்னிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இல்லை” என்று அவனுடைய பிறப்பின் ரகசியத்தை விவரித்து, “செயல்படு” என்று ஊக்கமூட்டியவுடன் ஹனுமனிடமிருந்த ‘ஆத்ம மறதி’ விலகியது. “சகார ரூபம் மஹதாத்மனஸ்ததா’ – என்று தன் உடலைப் பெரிதாக்கி, நூறு யோசனை தொலைவுள்ள சமுத்திரத்தைத் தாண்டுவதற்குத் தாயரானான் என்கிறது வால்மீகி ராமாயணம்.
“மாருதஸௌர்யஸ: புத்ர: ப்லவனேனாஸ்மி தத்ஸம:” – வாயுதேவனின் புத்திரனனான நான் பறப்பதில் அவனுக்குச் சமமானவன் என்ற ஆத்ம ஞானத்தை ஹனுமன் பெற்றான்.
“ஆத்மாவை மறப்பது என்ற நோய்க்கு ஆத்மஞானம் என்பதே மருந்து. ஒரு அறிஞர் வம்சத்தில் பிறந்த படித்தவன் தீய சகவாசத்தால் போதை மருத்துக்கு அடிமையாகி ஒரு சாக்கடையின் அருகில் விழுந்து கிடந்தான். அவனுடைய நன்பவன் அவனைப் பார்த்து, “இது உனக்குத் தகாது. எப்படிப்பட்ட உயர்ந்த வம்சத்தில் பிறந்தாய்? அவருக்கு வாரிசான நீ இந்த நிலையில் இருப்பது தவறு” என்று எடுத்துரைத்து புத்தி கூறுவதும் இந்த நியாத்தை நினைவுபடுத்துகிறது.
ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு தேசம் தம் வாரிசத்துவ உயர்வை அடையாளம் கண்டு நடந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு இந்த நியாயத்தில் உட்பொருளாக உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், அதன் மீது பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. காஷ்மீர் கவிஞரும் பத்திரிகையாளருமான அகமது பர்ஹாத் ஷா கடத்தப்பட்ட வழக்கில் பாகிஸ்தானின் கூடுதல் அட்டர்னி ஜெனரலிடமிருந்து வெள்ளிக்கிழமை (மே 31) நேற்று இந்த அரிய ஒப்புதல் கிடைத்தது.
பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புகளால் ராவல்பிண்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்ட அகமது பர்ஹாத் ஷா மீதான வழக்கை இஸ்லாமாபாத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. கவிஞரின் மனைவி அளித்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹ்சின் அக்தர் கயானி, ஃபர்ஹாத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரினார்.
வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) ஃபர்ஹாத் ஷா போலீஸ் காவலில் இருப்பதாகவும், அவரை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்றும் நீதிபதி கயானி முன் பாகிஸ்தானின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார் என்று உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி அறிக்கையின்படி, காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு மற்றும் அதன் சொந்த நீதிமன்றங்களைக் கொண்ட ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், POK இல் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளாகத் தோன்றுவதாகவும் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கூறினார்.
பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி எதிர்த்தார்.
விசாரணையின் போது, மக்களை வலுக்கட்டாயமாக கடத்தும் நடைமுறையை பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் தொடர்வதாக கயானி விமர்சித்தார்.
காஷ்மீரி கவிஞர் அகமது ஃபர்ஹாத் ஷா
நீதிமன்ற விவாதத்தின் போது அகமது பர்ஹாத் ஷாவை திர்கோட் போலீசார் தடுத்து வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இவர் மீது பிஓகேயில் இரண்டு வழக்குகள் உள்ளன. பாகிஸ்தான் உளவுத்துறையால் ஃபர்ஹாத் ஷாவின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், 1947 முதல் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது, இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தினார். “இது (POK) எப்போதும் இந்தியாவுடன் உள்ளது, அது எப்போதும் இந்தியாவாகவே இருக்கும்” என்று ஜெய்சங்கர் கூறினார்.
கவிஞரும் பத்திரிக்கையாளருமான அகமது பர்ஹாத் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதன் மக்களின் உரிமைகளுக்காக ஆர்வலர். அவர் இராணுவத்தை கடுமையாக விமர்சிப்பதற்காக அறியப்படுகிறார். அவர் கடந்த காலங்களில் POK இல் பல அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார், அவற்றில் பங்கேற்றார்.
மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. கடந்த முறை 333 இடங்களை கூட்டணியாகப் பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாகப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக.,வுக்கு தென்மாநிலங்களும் கைகொடுக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங். கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தற்போதைய கருத்துக் கணிப்பில் 19 முதல் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளத்தில் பாஜக., கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 4 இடங்கள் அதிகமாகப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களைப் பிடித்திருந்தது. தற்போது 70 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா: 17 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக., கடந்த முறை 4 தொகுதிகளில் வென்றது. இந்த முறை 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்: தமிழகத்தில் இந்த முறை 5 தொகுதிகள் வரை பாஜக., கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, பெரும்பாலான ஊடகங்கள், பாஜக., கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கின்றன.
அதன் விவரம்:
மொத்த இடங்கள்: 543 இடங்கள் பெரும்பான்மை: 272 இடங்கள்
ரிபப்ளிக் டிவி:
பாஜக.,, கூட்டணி: 371 இடங்கள் இண்டி கூட்டணி: 127
இந்தியா டிவி; பாஜக.,, கூட்டணி: 371 இண்டி கூட்டணி 125
முஸ்டாங் பாண்டா என அழைக்கப்படும் இணைய உளவுக் குழு கடந்த ஐந்து மாதங்களாக மால்வேர் ஒன்றை உலவ விட்டு, “நார்வே, கிரீஸ் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த சரக்குக் கப்பல் நிறுவனங்களுக்குச் சொந்தமான கணினி அமைப்புகளுக்கு ரிமோட் ஆக்சஸைப் பெறுகிறது. ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET கருத்துப் படி, சரக்குக் கப்பல்கள் தாங்களாகவே அதை வழியாக எடுத்துக் கொள்கின்றனவாம்!
கடந்த மாதம், இங்கிலாந்து (U.K) மற்றும் அமெரிக்க (U.S.) உயர் அதிகாரிகள் சீனாவில் இருந்து வளர்ந்து வரும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரித்ததால், குறிப்பாக முக்கியமான உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதத்தில் இருந்ததால், இந்த செய்தி வெளிவந்தது.
அந்த செய்தி அறிக்கையின்படி, ஆசியா முழுவதும் உள்ள அரசுகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிராக உளவு பார்த்ததாக முஸ்டாங் பாண்டா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அண்மையில் ஐரோப்பாவிலும், முந்தைய உளவு குறித்த தகவல்களிலும் இதே போன்ற மால்வேர் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். “ரிமோட் அக்சஸ் ட்ரோஜன்” வகை மால்வேர், மின்னஞ்சல், தீங்கிழைக்கும் இணையதளம், பாதிக்கப்படக்கூடிய மென்பொருள் அல்லது பாதுகாப்பற்ற இயந்திரம் மூலம் ஊடுருவிய பிறகு, ஒரு சாதனத்திற்கான முழு அணுகலையும் அது பெறவும், கட்டளைகளை வழங்கவும் அனுமதிக்கிறது. இதன் மூலம், மிகவும் சென்சிடிவான உளவுத் தகவல்கள் தாக்குதலைத் தொடுக்க முஸ்டாங் பாண்டா நிறுவனம் போன்றவை முழுவீச்சில் இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனாவுடன் இணைக்கப்பட்ட இணைய உளவுக் குழு, வணிகக் கப்பல் போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது என்பதற்கான முதல் ஆதாரம் இதுவாகும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ESET இன் முதன்மை அச்சுறுத்தல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் ராபர்ட் லிபோவ்ஸ்கி கூறுகையில், “நாங்கள் கடந்த காலத்தில் இவ்வாறு பார்த்ததில்லை. இது இந்தத் துறையில் தெளிவான அவர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது. இது ஏதோ வெறும் ஒரு நிகழ்வு அல்ல. இவை வெவ்வேறு, தொடர்பில்லாத அமைப்புகளின் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள்” என்று அவர் கூறினார்.
“இணைய உளவு முயற்சியில், இத்தகைய நிறுவனங்கள் அல்லது கப்பல்களில், பிஸிகலாகப் பொருத்தப்பட்ட USB சாதனங்களின் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை” என்றார் அவர்.
வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார். “சீனாவுக்கு எதிரான எந்த ஆதாரமற்ற அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். உண்மையில், சைபர் தாக்குதல்களில் சீனா பெரியளவில் பலியாகி உள்ளது,” என்று செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறினார்.
“அனைத்து வகையான சைபர் தாக்குதல்களுக்கும் எதிராக நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை வைத்திருக்கிறோம்; அவற்றைச் சமாளிப்பதற்கு சட்டப்பூர்வமான வழிமுறைகளை நாடுகிறோம். ஹேக்கர்களால் தொடங்கப்படும் தாக்குதல்களை சீனா ஊக்குவிக்கவோ, ஆதரிக்கவோ அல்லது மன்னிக்கவோ இல்லை.” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
எனினும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுகே) அண்மையில் நடைபெற்ற சைபர் செக்யூரிட்டி மாநாட்டில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சீன இணைய உளவு மற்றும் சீன ஹேக்கிங்கில் இருந்து உலகத்துக்குப் பெருகிவரும் ஆபத்தை விவரித்தனர். பர்மிங்காமில் இங்கிலாந்து அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டின்போது, ஒரு பிரிட்டிஷ் சைபர் செக்யூரிட்டி அதிகாரி செய்தியாளர்களிடம் இது பற்றிக் குறிப்பிட்ட போது, “இப்போது நாங்கள் சைபர் செக்யூரிடி துறையில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய பகுதி சீனாவாகும்” என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்..
அந்த மாநாட்டில் ஓர் உரையில், U.K. இன் சைபர் உளவுத்துறை நிறுவனமான GCHQ இன் தலைவர், “ரஷ்யா, ஈரான் ஆகியவை இப்போது உடனடி அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தினாலும், இணையம் மற்றும் சர்வதேச ஒழுங்கு தொடர்பில், சீனா “ஒரு சகாப்தத்தை வரையறுக்கும் சவாலாகவே உள்ளது. அது, பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் முன்வைக்கிறது” என்று கூறினார்.
“சீனா, மேம்பட்ட இணையத் திறன்களை உருவாக்கியுள்ளது. அதன் வசம் உள்ள ஹேக்கிங் தரவுகள், தரகர்களின் வளர்ந்து வரும் வணிகச்சூழல் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது” என்று அன்னே கீஸ்ட்-பட்லர் கூறினார். “முக்கியமாக, சீனா ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு (U.K) உண்மையான மற்றும் அதிகரித்துவரும் இணைய அபாயத்தை முன்வைக்கிறது.” என்றார் அவர்.
அதே மாநாட்டில் இன்னோர் உரையில், வெள்ளை மாளிகையின் தேசிய இணைய இயக்குனர் ஹாரி கோக்கர், “சீனாவின் இணைய உளவு பார்க்கும் தன்மை, அமெரிக்காவின் குடிமக்கள் உள்கட்டமைப்பை சீர்குலைக்கிறது. மேலும், குடிமக்களுக்கான உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் திறனை பெய்ஜிங் கொண்டுள்ளதையே அது வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.
“ஒரு நெருக்கடி அல்லது மோதல் சூழ்நிலை ஏற்படும்போது, குடிமக்கள் உள்கட்டமைப்பில் அழிவை ஏற்படுத்தவும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் சீனா அவர்களின் முன், நிலைப்படுத்தப்பட்ட சைபர் திறன்களைப் பயன்படுத்தக் கூடும்” என்று கோக்கர் கூறினார்.
“வோல்ட் டைபூன்” எனப்படும் ஒரு பெரிய உளவு முயற்சியை சீனா மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் பிடன் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
சைபர் உளவுகள், சைபர் தாக்குதல்கள் அல்லது அறிவுசார் சொத்து திருட்டு என, சீனா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற அரசுகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீன இணைய நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை U.K மீண்டும் மீண்டும் பரப்பி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அந்த மாநாட்டில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், சீனாவின் சைபர் தந்திரோபாயங்கள், அறிவுசார் சொத்து அல்லது வெளிநாட்டு உளவுத்துறையை அப்படியே திருடிச் செல்ல முயற்சிப்பதில் இருந்து, முக்கியமான பயன்பாடுகள் அல்லது பிற உள்கட்டமைப்பு அமைப்புகளுக்கான ஆக்சஸஸை திருட்டுத்தனமாகப் பெற (அணுகலைப் பெறுவதற்கு) மாறிவிட்டதாக”க் கூறினார்.
அறிவுசார் சொத்து திருட்டில் இருந்து சீனா “முன்னேறிவிட்டது” என்று தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் நடாலி பித்தோர் ஒரு மாநாட்டு குழு விவாதத்தில் கூறினார்.
மேலும், “வெளிநாட்டு உளவுத்துறை அணுகல், அல்லது ஐபி திருட்டு போன்ற தகவல்களை, அவர்கள் தீவிரமாக முயற்சி செய்யவில்லை,” என்றார் அவர். “மாறாக, இந்த சீன APTகளில் இருந்து (மேம்பட்ட பரவலான அச்சுறுத்தல்கள்) நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை உள்ளே நுழையும், பின் கட்டுப்பாட்டின் அளவைப் பெறுகின்றன, நெட்வொர்க்கைக் கட்டுப்படுத்தும் திறன் அளவைப் பெறும், பின்னர் அவை மிகவும் அமைதியாகச் செல்லும்.” என்று அதன் மால்வேர்களின் தன்மையை எடுத்துக் கூறினார்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது….
“2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்!
The Q4 GDP growth data for 2023-24 shows robust momentum in our economy which is poised to further accelerate. Thanks to the hardworking people of our country, 8.2% growth for the year 2023-24 exemplifies that India continues to be the fastest growing major economy globally. As…