பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது….
“2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்!
The Q4 GDP growth data for 2023-24 shows robust momentum in our economy which is poised to further accelerate. Thanks to the hardworking people of our country, 8.2% growth for the year 2023-24 exemplifies that India continues to be the fastest growing major economy globally. As…
தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு ஜூன் 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்.) உள்ளன.
இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்த நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச். மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையம் மூலம் ஜூன் 3 ஆம் முதல் ஜூன் 21 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி, பலர் ஏமாந்து வருகின்றனர்.
பல முன்னணி நிறுவனங்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக தங்களது நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்களை, ‘டிஜிட்டல்’ விளம்பரம் செய்து வருகின்றன.
இது போன்று விளம்பரம் செய்ய, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில், வேலை, கடன் வசதி, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் என, பல வகைகளில் மோசடி கும்பல்கள், போலி டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கி, விளம்பரங்கள் செய்ய துவங்கி விட்டன.
விபரம் தெரியாத மக்களும், அவற்றை உண்மை என நம்பி, போலி விளம்பரங்களின், ‘லிங்க்’ பயன்படுத்தி, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.
குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், மொபைல் போன் உதிரிபாகங்கள், பிரபல பிராண்ட் காலணிகள் என, பல பொருட்கள் 50 முதல் 90 சதவீதம் வரை எங்களிடம் கிடைக்கும் எனக்கூறி, போலி விளம்பர கும்பல் ஏமாற்றி வருகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
பிரபல வாட்ச் நிறுவனத்தின் பெயரில் பேஸ்புக்கில் விளம்பரம் வந்தது. அதில், தள்ளுபடி விலை என்று கூறப்பட்டிருந்தது. குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி பணம் செலுத்தினோம். ஐந்து நாட்கள் கழித்து, அதே நிறுவன பக்கத்தில் பார்த்த போது, அது போலி என்று தெரிய வந்தது.
மோசடி கும்பல் பயன்படுத்திய மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
இனி சமூக வலைதளங்களில் வரும் விளம்பரத்தை நம்பி பொருட்கள் வாங்கும் போது, எச்சரிக்கையுடன் உண்மை தன்மையை பார்த்து வாங்க வேண்டும்.
டிஜிட்டல் விளம்பரங்களுக்கான கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி கண்காணித்தால் மட்டுமே, இம்மாதிரியான மோசடியை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை
பிரிட்டனிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி தனது பெட்டகத்துக்கு மாற்றியிருக்கிறது.
ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தங்கத்தில் பாதியளவுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்து வங்கியிலும் சர்வதேச பங்கீடு வங்கியிலும் வைத்திருந்தது.
பாக்கி தங்கத்தை தன் வசம் வைத்திருந்தது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி, 100 டன் தங்கத்தையும் தன் வசம் மாற்றியிருக்கிறது.
இதன் மூலம், தங்கத்தை பாதுகாக்க இங்கிலாந்து வங்கிக்கு ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் ஆண்டு புள்ளிவிவரப்படி, ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக 822.10 டன்கள் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 794.63 டன்களாக இருந்தது.
கடந்த 1991ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 18ம் தேதிக்கு இடையில், பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட நெருக்கடியின்போது, அதனை சமநிலைப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கி 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலும் ஜப்பான் வங்கியிலும் அடகு வைத்து, 400 மில்லியன் டாலர் பணத்தை திரட்டியது. இதற்கிடையே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் தங்கத்தை வாங்கியிருந்தது.
அதுபோல, 2009 ஆம் ஆண்டில், மத்திய அரசு தனது சொத்துக்களை பெருக்கும் நடவடிக்கையாக 6.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 200 டன் தங்கத்தை வாங்கியது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி தனது கொள்முதல் நடவடிக்கை மூலம் தங்கப் பங்குகளில் கவனம் செலுத்தி நிலையான வளர்ச்சியை தொடர்ந்து பராமரித்து வருகிறது.
இந்தியாவின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.75 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இது 8.7 சதவீதமாக அதிகரித்தது.
மும்பையின் மின்ட் ரோடு மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டடங்களில் இந்த கையிருப்பு தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள், இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 17 சதவீதத்தை பெட்டகங்களில் வைத்துள்ளன. அதாவது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 36,699 டன்கள் தங்கம் வங்கிகளின் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் தியானமும் தவமும் மேற்கொண்டாலும் ஒரு பக்கம் நாட்டின் நிகழ்வுகள் குறித்த கவலையை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வழக்கம்போல் தனது சமூக வலைதளப் பதிவில் செய்தியை பகிர வைத்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், விவேகானந்தர் பாறைக்கு சென்று, தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாளை மாலை வரை விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் பாறை பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் நிலையில், இன்று தனது எக்ஸ் தளத்தில் நாட்டின் நிகழ்வுகள் குறித்த தனது வழக்கமான கவலை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்,” என குறிப்பிட்டுள்ளார்.
Unfortunately, Assam, Manipur, Meghalaya, Mizoram, Tripura and West Bengal have witnessed natural disasters in the aftermath of Cyclone Remal. My thoughts and prayers are with all those who have been affected there. Took stock of the prevailing situation. The Central Government…
மற்றொரு பதிவில், “2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
The Q4 GDP growth data for 2023-24 shows robust momentum in our economy which is poised to further accelerate. Thanks to the hardworking people of our country, 8.2% growth for the year 2023-24 exemplifies that India continues to be the fastest growing major economy globally. As…
சாதாரண மனுஷனுக்குக் கூட தெரியும், ஒரு சிறிய வீட்டைக் கட்டணும்னா கூட, அப்ப மறுபடிமறுபடி மேஸ்திரியை மாத்த மாட்டாங்கய்யா.
இப்ப இந்த சமாஜ்வாடி காங்கிரஸ்….. இண்டிக் கூட்டணிக்காரங்க, இவங்க சொல்றாங்க, அஞ்சு ஆண்டுகள்ல அஞ்சு பிரதம மந்திரிகளாம்.
இப்ப நீங்களே சொல்லுங்கய்யா. இந்த அஞ்சு ஆண்டுகள்ல அஞ்சு பிரதம மந்திரிகளை, யாராவது வச்சுப்பாங்களா என்ன? இப்படி மேஸ்திரியவே யாரும் வச்சுக்க மாட்டாங்கன்னா, அப்ப பிரதம மந்திரிய…… சிரிப்பு என்னத்தைச் சொல்ல.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். காவி உடை உடுத்திக் கொண்டு, தவசியாக தவம் செய்து வரும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி உள்ளன.
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட பிரச்சாரம் ஓய்வடைந்த நிலையில் வழக்கம்போல் தனிப்பட்ட வகையில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார் பிரதமர் மோடி. அவர் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார். பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.
பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்குச் சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்திக் கொண்டார். தனது 3 விரல்களால் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு, அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துவிட்டு, முழு அளவிலான பக்தர் கோலத்தில் தெரிந்தார்.
பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவியாகவே தோற்றமளித்தார். கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனைத் தன் விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி வந்தார்.
மண்டபத்தின் கிழக்குப் பகுதிக்குச் சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சொம்பில் இருந்த தீர்த்தத்தை கடலில் அர்க்யம் என ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று கூறப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடல் அழகையும் ரசித்துப் பார்த்தார். பின்னர் விவேகானந்தரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மண்டபத்துக்குச் சென்ற மோடி, விவேகானந்தர் சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் தியானம் செய்ய அமர்ந்தார்.
விவேகானந்தரின் சிலையைப் பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். ருத்ராட்ச மாலையை விரல்களால் உருட்டியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். பிறகு தியான மண்டபத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவிக் கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.
அந்நேரம், தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான வகையில், மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இந்தக் காட்சிகள் இன்று வீடியோவாக வெளியிடப்பட்டது. இது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் தியானம் நாளை மதியத்துக்கு மேல் நிறைவுறுகிறது. பின், பிற்பகல் 3.30க்கு அவர், கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். நாளை பிற்பகலில் தியானத்தை முடித்தபின், திருவள்ளுவர் சிலையைச் சென்று பார்வையிடுகிறார். இதன் பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் தில்லிக்குச் செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது.
கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரிக் கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில்வந்து கண்காணித்து வருகின்றனர்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
பல கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் சில மாநிலங்களிலும் இல இடங்களிலும் நடக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதுவரை நடந்த தேர்தல் முறையைப் பார்க்கும் போது சில அம்சங்கள் தெளிவாகின்றன. வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இல்லை. சாதாரணமாக அறுபது சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. சில இடங்களில் ஓரளவு பரவாயில்லை.
வருத்தமளிக்கும் செய்தி என்னவென்றால் தொழில்நுட்பம் பல துறைகளில் வியக்கத்தக்க அளவுக்கு வளர்ச்சியும் சீர்திருத்தங்களும் அடைந்தாலும் தேர்தல் அமைப்பில் தகுந்த அளவு முன்னேற்றத்தை சாதிக்க இயலவில்லை. மத்திய, மாநில தேர்தல் அதிகாரிகளின் உள்ளத் தூய்மையை சந்தேகிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் சரியான வகையில் பல இடங்களில் நிர்வாகம் நடக்கவில்லை என்ற உண்மையை மறுக்க முடியாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் பல இடங்களில் மோசடிகள் நடந்துள்ளன. அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு ஆளான போலீசாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்குச் சாவடி அலுவலர்கள் அச்சம் காரணமாக அக்கிரமங்களைத் தடுக்க முடியாமல் போனார்கள். சில கொடுமைகள் நடந்தேறின.
ஜனநாயக தேசத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தேர்தல்களை சரிவர நடத்த இயலாமல் போவது வருத்தத்திற்குரியது. பல தொகுதிகளில் வாக்காளர்களின் பெயர்களே காணாமல் போயின. தமக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அதிமுள்ள இடங்களை முன்பாகவே கணித்து, அவர்களின் பெயர்களை ஓட்டர் லிஸ்ட்லிருந்து நீக்கிவிட்ட செயல்களும் நடந்தேறின.
இனி, கள்ள ஓட்டுகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மத வெறியர்கள் திட்டமிட்டு திருட்டு அடையாள அட்டைகளைத் தயாரித்து இந்தியரல்லாதவருக்கும் அக்கிரமமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கும் பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு வாக்குரிமை அளித்தார்கள்.
பலர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வாக்களிக்க வராமல் போவதால்தான் வாக்குப்பதிவு குறைந்தது என்று இத்தனை காலம் நினைத்து வந்தோம். ஆனால் பலர் ஓட்டுப் போடுவதற்கு சென்ற போது அவர்களின் பெயர்கள் ஓட்டர் லிஸ்டில் இல்லாமல் போனதால்தான் ஓட்டு சதவிதம் குறைந்தது என்ற விஷயம் தெளிவாகப் புரிகிறது.
இப்படிப்பட்ட அக்கிரமங்கள, கொடுமைகள், வாக்காளர் பெயர்கள் காணாமல் போவது போன்றவை ஹைதராபாத், கோயம்பத்தூர், மேற்கு வங்காளம் முதாலான பல இடங்களில் நடந்ததாக அதிகாரப் பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன.
தேச முன்னேற்றம், பாதுகாப்பு, தேச நலன் போன்றவற்றுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டு, ஓட்டுக்காக மதவாதிகளை திருப்திப்படுத்துவதே நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட கட்சிகள், மத வெறியைத் தூண்டுவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, “குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவருக்கே தேச வளத்தில் முதன்மை உரிமை ஏற்படுத்துவோம் என்றும் ரிசர்வேஷன்களை அவர்களுக்கு மட்டுமே ஒதுக்குவோம்” என்றும் அறிவிக்கின்றன.
உண்மையில் கடந்த பத்தாண்டுகளாக பாரத தேசத்தின் பன்முக வளர்ச்க்கு முயற்சித்து வருபவர்களின் மேல் மதவாதம் என்று அபாண்டத்தைத்தைச் சுமத்தித் தம்முடைய குதர்க்கமான மத தத்துவத்தை செக்யூரிலசம் என்று ஏமாற்றி வருவது எதிர்க்கட்சிகளின் வியூகமாக உள்ளது. தேசத்தைத் துண்டாக்குவோம் என்று முழங்கியவர்களைக் கட்சித் தலைவர்களாக்கி டிக்கெட் கொடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஜாதிக் கணக்கெடுப்பு, மத முக்கியத்துவம் போன்றவையே தம் வழிமுறை என்று அறிவித்து வருகிறார்கள்.
தேசம் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும், பின்தங்கி இருந்தாலும், துண்டு துண்டானாலும் அவர்களுக்கு மறுப்பேதும் இல்லை. எங்கள் மதம் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும், எங்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் போதும் என்ற கூவும் கும்பல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
வியாபாரத்திற்காகவும் வேலைக்காகவும் பிற தேசங்களில் வசிக்கும் தம் மதத்தைச் சேர்ந்த இந்தியர்களை சொந்தச் செலவில் வரவழைத்து அவர்களைக் கொண்டு தம் மதத்திற்கு அனுகூலமாக ஓட்டளிக்கக் வைக்கிறார்கள்.
அத்தகைய விடாமுயற்சி ஹிந்துக்களுக்கு இல்லை. அதுமட்டுமில்லை. எண்ணற்ற ஹிந்துக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. சில இடங்களில் ஹிந்து வாக்காளர்களை அச்சுறுத்தி ஓட்டளிக்கக் விடாமல் தடுத்தார்கள்.
இப்படிப்பட்ட விபரீதங்களுக்கு, வெளிநாட்டு வியாபாரிகளும் பாரத தேசத்தின் ஆதிக்கத்தை சகிக்க இயலாத வெளிநாட்டு ஆட்சியாளர்களும் மத நிலையங்களும் முழுஅளவில் உதவி புரிகின்றன.
நம் தேசத் தேர்தல்களின் மேல் உலக நாடுகளின் பார்வை மையம் கொண்டுள்ளது. பாரத நாட்டு முன்னேற்றத்திற்கே தம்மை அர்ப்பணித்திருக்கும் ஆளும் கட்சியின் ஆட்சி முறையைத் தவறாக விமர்சிக்கும் ‘ஒட்டுப்போட்ட’ கட்சிகளும் அவர்களுக்கு ஒத்தூதும் ஊடகங்களும் பொய்ப் பிரசாரம் செய்வதற்கும் பின் வாங்கவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
உலக அளவில் பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடக்கும் வழிகளை ஆராய்ந்து பார்ப்பதோ, தகுந்த மாற்றங்களைக் கொண்டுவருவதோ இந்திய தேசத்தில் முழமையான அளவில் நடப்பது இல்லை. உலகில் பல நாடுகளில் 92 முதல் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கையில் சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அறுபது சதவிகிதத்திலேயே உள்ளோம். அதிலும் நேர்மையாக ஒட்டளிக்கும் வாய்ப்பு பல வாக்காளர்களுக்குக் கிடைப்பதில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு வாக்காளர் தம் ஓட்டுரிமையை இழக்காதபடி பல வழிகளை ஏற்படுத்த முடியும். ஆனால் அந்த வழிமுறைகளை எதனால் கடைப்பிடிக்க இயலாமல் இருக்கிறோம்? வங்கி விவகாரங்கள் போன்ற முக்கியமான வழிமுறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது தேர்தல் வழிமுறைகளில் அவற்றை ஏன் எடுத்து வரவில்லை?
சிலர் தேர்தல் தினத்தன்று கட்டாயம் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் ஒட்டு போட முடியாமல் போகிறார்கள். தொலைவான இடங்களுக்குச் சென்றவர்கள் தகுந்த அடையாள அட்டைகளைக் காட்டி அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த இயலாதா? நூற்றுக்கு நூறு சரியான வாக்குப் பதிவு நடக்கும்படி தேர்தல் அமைப்பின் வழிமுறையைத் திருத்துவது சாத்தியம் இல்லையா? உண்மையான வாக்காளர்களின் பங்களிப்பு எப்போது கிடைக்கும்?
எது எப்படியானாலும் வரப் போகும் தேர்தல் முடிவுகள் தேசத்திற்கும் தர்மத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று பகவானை பிரார்த்திப்போம்.
(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், ஜூன், 2024)
குற்றாலம், ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி,மகளிர் பயில்வு மையம் மற்றும் தென்காசி மாவட்ட சமுகநலத்துறை பெண்கள் அதிகாரம் அளிக்கும் மையம் ஆகியவை இணைந்து இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி பராசக்தி கல்லூரியில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி தலைமை தாங்கினார். விஜிலா நேசமணி அனைவரையும் வரவேற்று பேசினார். இலக்கமுறை கல்வியறிவு பயிற்சியாளர் உதயாவேனி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பயிற்சி அளித்தார்.
மகளிருக்கான ஒரு நிறுத்த மைய வழக்கு பணியாளர் முருகேஸ்வரி மகளிருக்கான அவசர உதவி அமைப்பு மற்றும் பாதுகாப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டினை நுகர்வது குறித்து எடுத்துரைத்தார்.
நிதி கல்வியறிவு நிபுணர் சுபாஷினி மகளிர் தன்னிறைவுடன் இருக்கவேண்டும், கண்டிப்பாக உயர்கல்வி ஒவ்வொரு மகளிரும் பெறவேண்டும் என்பது குறித்து உரையாற்றினார். முடிவில் இளங்கலை மூன்றாமாண்டு விலங்கியல் துறை மாணவி சிவசத்யா நன்றி கூறினார்.
வூஹானில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் COVID-19 என்ற உருவாக்கப்பட்ட வைரஸ் வெடித்துப் பரவியதில், சைனா குறித்து புகார் தெரிவித்து வெளியுலகுக்கு சொன்னது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைதாகி சிறையில் இருந்த ஜாங் ஜான் எனும் பெண் பத்திரிகையாளர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் வெளியிட்ட வீடியோ பதிவின்படி, தண்டனை முடிந்து வெளியான எட்டு நாட்களுக்குப் பிறகு வீடியோ மூலம் தகவல் சொல்வதாக அவர் அதில் தெரிவித்திருந்தார்.
சீனாவில் பதிவு செய்யப்படும் அரசியல் வழக்குகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தெளிவில்லாது வரையறுக்கப்பட்ட குற்றச்சாட்டாக, “சண்டைகளைத் தூண்டிவிட்டு, பிரச்சனையைத் தூண்டிய” குற்றச்சாட்டின் பேரில், ஜாங்கிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது விடுதலையை எதிர்பார்த்து பல்வேறு போராட்டங்கள் புதுவில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அவர் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.
ஆனாலும், அவர் விடுதலையான நாளில், அவரது முன்னாள் வழக்கறிஞர்கள் அவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ அணுக முடியவில்லை. அவர் விடுவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஷாங்காய் போலீசார், அந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரது முன்னாள் வழக்கறிஞர்களைப் பார்வையிட்டு விசாரித்துள்ளனர்.
வெளியான ஒரு சிறிய வீடியோவில், ஜாங் ஸங் தனது தண்டனையை முடித்த நாளான மே 13 அன்று தனது சகோதரர் ஜாங் ஜூவின் வீட்டிற்கு காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். மேலும், “அனைவருக்கும் அவர்களின் உதவி மற்றும் அக்கறைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் மெல்லிய குரலில் சொன்னார். இங்கிலாந்தில் ‘ஃப்ரீ ஜாங் ஜான்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கிய மற்றும் ஜாங் ஸங்கின் முன்னாள் வழக்கறிஞர்களில் ஒருவருடன் தொடர்புடைய வெளிநாட்டு ஆர்வலர் ஜேன் வாங் இந்த வீடியோவை வெளியிட்டார்.
“அவரது பெற்றோரும் சகோதரரும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதையும், ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்ததையும் நான் புரிந்துகொள்கிறேன். நண்பர்களின் அழைப்புகளுக்கும் பதில்கள் இல்லாமல் போய்விட்டது… இவை மிகவும் கவலையளிக்கும் அறிகுறிகள்,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், ஜாங்கிற்கு இன்னும் வரையறுக்கப்பட்ட சுதந்திரம் இருப்பதாக வாங் கூறியுள்ளார். ஜாங் இனி சிறையில் இல்லையென்றாலும், காவல்துறையினரால் மேலும் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார் என்று அவர்கள் பெரிதும் கவலையை வெளிப்படுத்தினர். ஜாங் ஸங்கின் நிலை குறித்த கவலையுடன் கூடிய அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறையும் வெளியிட்டது.
எல்லைகளற்ற நிருபர்கள் (RSF), ஜாங்கிற்கு 2021 இல் தனது பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியது, “முன்னதாக, அவர் தண்டனை முடிந்து வெளியான நாளும் கடந்த நிலையில், திங்கட்கிழமை அவரது நிபந்தனையற்ற விடுதலையை உறுதி செய்ய சர்வதேச சமூகம் அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று சமூக தளமான X வெள்ளிக்கிழமை ஒரு இடுகையில் அழைப்பு விடுத்தது.
ஷாங்காயின் பெண்கள் சிறையில் ஜாங் ஸங் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார், 2021 இல் ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜாங் ஸங்கின் குடும்பத்தினர், அவருடன் அடிக்கடி தொலைபேசியில் மட்டுமே பேச முடியும், அவர் சிறையில் இருந்தபோது போலீஸாரின் அழுத்தத்தை எதிர்கொண்டார், மேலும் அவரது பெற்றோர் செய்திகளைப் பேச மறுத்துவிட்டனர்.
தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், பிப்ரவரி 2020 இல் சீன அரசு அதைக் கட்டுப்படுத்திய பின்னர், மத்திய சீன நகரமான வூஹானுக்குச் சென்ற ஒரு சில பத்திரிகையாளர்களில் ஜாங்ஸங்கும் ஒருவர். கொரோனா வைரஸ் நாவலைப் பற்றிய அச்சம் அதிகரித்ததால், பொது வாழ்க்கையை ஆவணப்படுத்த அவர் நகரம் முழுவதும் நடந்தார்.
தொற்றுநோயின் ஆரம்ப நாட்களை ஆவணப் படுத்தியதற்காக பலர் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்தனர். இதில் ஃபாங் பின் உட்பட சிலர், கொரோனா வெடிப்பின் போது நெரிசலான மருத்துவமனைகள், மற்றும் கிடத்தப்பட்ட உடல்களின் வீடியோக்களை வெளியிட்டதால், ஃபாங்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஏப்ரல் 2023 இல் விடுவிக்கப்பட்டார்.
மற்றொரு பத்திரிகையாளரான சென் கியுஷி பிப்ரவரி 2020 இல் வூஹானில் படப்பிடிப்பின் போது காணாமல் போனார். செப்டம்பரில் 2021 ஆம் ஆண்டு தனது நண்பரின் யுடியூப் நேரலையில் சென் மீண்டும் தோன்றினார், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் அவர் காணாமல் போனது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
சீனாவில் கொரோனா வைரஸ் விவகாரம் இப்போதும் ஒரு முக்கியமான விஷயமாகவே உள்ளது. மே முதல் வாரத்தில், கோவிட்-19 வைரஸின் வரிசையை முதன்முதலில் வெளியிட்ட சீன விஞ்ஞானி, பல ஆண்டுகளாக பதவி இறக்கம் மற்றும் பின்னடைவுகளைச் சந்தித்தார். அதிகாரிகள் அவரை தனது ஆய்வகத்துக்குச் செல்வதைத் தடை செய்தனர். அதை எதிர்த்துப் போராடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
பிப்ரவரி 2020 தொடக்கத்தில், வூஹான் பூட்டப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஜாங் ஷாங்காயிலிருந்து மத்திய சீன நகரத்திற்கு சுமார் 400 மைல்கள் பயணம் செய்து, வைரஸ் பரவுவதைப் பற்றியும் அதைத் தடுக்கும் முயற்சிகள் பற்றியும் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் சீன ஊடகங்களின் தணிக்கையை கடுமையாக்கியது போலவே தனியார் சமூக ஊடகங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தினர்.
முன்னதாக, ஜங் ஸங் கடந்த 2020ல் மூன்று மாதங்களுக்கும் மேலாக, வூஹானில் ‘லாக் டவுண்’ வாழ்க்கையின் சிரமங்கள் மற்றும் அதன் நகரவாசிகள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்த வாழ்க்கை, நிரம்பி வழியும் மருத்துவமனைகள் முதல் வெற்றுக் கடைகள் வரை, உலகம் முழுவதும் வைரஸ் பரவுவதற்குத் தயாராக உள்ளது என்பது குறித்த, அவரது அவதானிப்புகள், கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை WeChat, Twitter மற்றும் YouTube இல் பதிவிட்டுள்ளார். ஆனால் இவற்றில் பிந்தைய இரண்டு சமூக ஊடகமும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
“எல்லாமே மறைக்கப்பட்டதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இந்த நாடு இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினை இதுதான். எங்களிடமிருந்து வரும் எந்தவொரு எதிர்க் கருத்துகளும் ‘வதந்திகள்’ என்று நிராகரிக்கப்படலாம், ”என்று அவர் வூஹானுக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு வீடியோவில் முகமூடி அணிந்தபடி சொன்னார்.
“நம் சொந்தக் குரல்கள் கூட நம் கட்டுப்பாட்டில் இல்லை. தொற்றுநோய் தடுப்பு என்ற பெயரில் நம்மைச் சிறையில் அடைத்து, நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்… உண்மையைப் பெற முடியாவிட்டால், சத்தியத்தின் மீதான அவர்களின் ஏகபோகத்தை நம்மால் உடைக்க முடியாவிட்டால், உலகம் நமக்கு அர்த்தமற்றதாகிவிடும்.” என்று தனது கருத்தை அவர் பகிரங்கப் படுத்தினார்.
இந்நிலையில் 2020 மே மாதத்தின் நடுப்பகுதியில் அவரது சமூகத் தள இடுகைகள் திடீரென நிறுத்தப்பட்டன. பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் ஷாங்காய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சீனாவில் நீண்டகாலமாக பணியாற்றிய மனித உரிமை வழக்கறிஞர்கள், ஜாங் ஸங் சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிகாரிகளின் நெருக்கமான கண்காணிப்பில் வாழ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். “ஜாங் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவள் சுதந்திரமாக இருப்பாள் என்று அர்த்தம் இல்லை” என்று ப்ரீடம் ஹவுஸ் என்ற வக்கீல் குழுவின் சீனாவின் ஆராய்ச்சி இயக்குனர் யாக்கியு வாங் கூறினார்.
“சீன அரசின் பதிவேடுகளில் ‘கடந்தகால பதிவுகள்’ ஏதேனும் அறிகுறியாக இருந்தாலும், அந்த நபர் அதிகாரிகளின் தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பை எதிர்கொள்வார். ஜாங் ஜானின் கடந்தகால நடவடிக்கைகள் ஏதேனும், அறிகுறியாக இருந்தால், அவரை அமைதிப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடுவார் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் சீன இயக்குநர் சாரா ப்ரூக்ஸ், ஜாங் ஸங்கின் பயணம் அல்லது உறவினர்கள் மற்றும் பிறருடன், குறிப்பாக சீனாவுக்கு வெளியே உள்ளவர்களுடன் அவர் தொடர்பு கொள்வது கடுமையாக கட்டுப்படுத்தப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.
“ஜாங் ஸங் முதலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது; இப்போது, அவளுடைய நேரத்தைச் சிறையில் செலவழித்ததால், அவளுடனும் அவளுடைய குடும்பத்துடனும் ஒரு பாதுகாப்பான மறு இணைவு மற்றும் ஆரோக்கியத்திற்கான பாதை, அவளுடைய முக்கியமான மனித உரிமைகள் பணியில் தொடர்ந்து ஈடுபாடு, இவை குறித்து எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,” என்று அவர் கூறினார்.
“ஜாங் ஸங்கை சீன அரசாங்கம் சிறையில் அடைத்தது அவரது மனித உரிமைகள் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். மேலும் அவரது விடுதலை ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.
சிறையில் இருந்தபோது ஜாங் ஸங்கின் மோசமான உடல்நிலை காரணமாக அவர் விடுவிக்கப்பட்டவுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பது குறித்து ஆதரவாளர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் கவலை கொண்டுள்ளன. 40 வயதான அவர் தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டில், ஜாங்கின் தாய், தனது மகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், வலிமை இல்லாததால் தலையை நிமிர்த்த முடியவில்லை என்றும், மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் கூறினார்.
ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஜாங் கட்டையால் கட்டப்பட்டு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியது. அவர்கள் அளிக்கும் சிகிச்சையானது சித்திரவதைக்கு சமம் என்று அந்தக் குழு கூறியது.