பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பரமாத்மா செய்ய விரும்பற செயல்களை என் வாயிலாச் செய்யறான்னே நான் நினைக்கிறேன். அவன் என் மூலம் செய்பவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இந்த விஷயங்கள் எல்லாத்திலயும் பார்க்கும் போது பிரும்மாண்டத்தில நாம தலைவணங்கற ரொம்ப சக்திவாய்ந்தவங்க எல்லாம் அவங்க பற்றற்றவங்களாவே காணப்படுறாங்க. முழுமையா பற்றே இல்லாதவங்க.
அவங்க உடல்ல ஆடைகள் இல்லை. அவங்க மேல அலங்கார அணிகலன்கள் இல்லை. மாளிகை இல்லை. ஒண்ணுமே இல்லை. அவங்க மலைகள்ல சுற்றித் திரியறாங்க, பற்றற்ற வாழ்க்கை.
சிவபெருமானுடைய இந்த பற்றற்ற தன்மை தான், எனக்கு ஒருவேளை, ஆணையிட்டிருக்கணும், நீ பற்றற்றவனா வாழணும்னு. நானும் கூட, அமைப்புகளுக்கு உட்பட்டு எந்த இடமா இருந்தாலும், என்னுடைய உடல் என்ன வகையா வேணா இருக்கலாம், ஆனா நான் மனதாலும் ஆன்மாவாலும் பற்றற்ற நிலையில வாழறேன். இந்த பற்றற்ற நிலையில வாழ எனக்கு சிவபெருமான் தான் ஆணையிட்டிருக்கிறான்னு நான் நினைக்கறேன்.
T20 ஆண்கள் கிரிக்கட் உலகக் கோப்பை 01.06.2024 முதல் 29.06.2024 வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கவுள்ளது. அந்தப் பகுதியின் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வெளியில் அமெரிக்காவில் முதன் முதலில் நடைபெறுகின்ற உலகக் கோப்பைப் போட்டி இது. இங்கிலாந்து நடப்புச் சாம்பியனாகும். சென்ற முறை நடந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து அந்தப் பட்டத்தைப் பெற்றது.
இதுவரை 16 அணிகள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. இம்முறை 20 அணிகள் கலந்துகொள்கின்றன. 20 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் உள்ளன. குரூப் B பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய நாடுகள் உள்ளன. குரூப் C பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், பாபுவா நியூகினியா, உகாண்டா ஆகிய நாடுகள் உள்ளன. குரூப் D பிரிவில், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஒன்றோடொன்று 01.06.2024 முதல் 19.06.2024 வரை லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குரூப்பிலும் பட்டியலில் முதலிரண்டு அணிகள் சூப்பர் எட்டு பிரிவுக்குச் செல்லும்.
சூப்பர் எட்டில் அணிகள் குரூப் 1 குரூப் 2 என இரண்டாக பிரிக்கப்படுகின்றன. குரூப் 1இல் A1, B2, C1, D2 அணிகள் இடம்பெறும். A2, B1, C2, D1 அணிகள் இடம்பெறும். இந்த இரண்டு குரூப்புகளிலும் முதலிரண்டு இடம் பெறும் அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும். இங்கிருந்து ‘நாக் அவுட்’ போட்டிகள் தொடங்குகின்றன. இதில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்த டி20 ஆட்டங்களை பல்வேறு நாடுகளில் வெவ்வேறு ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கின்றன. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் இணையத்திலும் ஒளிபரப்பு செய்கின்றன.
இந்திய அணி அமெரிக்காவில் நடக்கும் லீக் சுற்று ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு ஏதுவாக பெரும்பாலும் காலையில் நடக்கின்றன. அந்த நேரத்தில் இந்தியாவில் இரவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் எல்லா போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அமெரிக்க நேரப்படி மூன்று போட்டிகள் காலை 9.30 மணிக்கும், ப்ளோரிடா மாகாணத்தில் நடக்கும் ஒரு போட்டி மட்டும் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. ஆனால் இந்த போட்டியும் இந்திய நேரப்படி நாம் இரவு 8 மணிக்கு பார்க்கலாம். மேலும் இந்தப் போட்டிகளை டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஆன்லைனில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம். இந்தியாவின் லீக் சுற்று ஆட்டங்கள் பின்வரும் நாட்களில், பின்வரும் மைதானங்களில் நடக்கின்றன:
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார். இங்கே, இரு தினங்கள் தியானம் மேற்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி, சனிக்கிழமை மாலை வரை அவர் அங்கே தியானம் மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்துக் கொண்ட பின்னர், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதன் ஒரு பகுதியாக, இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த அவர், புகழ்பெற்ற சக்தி பீடக் கோயிலான பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார். அங்கே சுவாமி விவேகானந்தர், பகவால் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி சந்நிகளில் வழிபட்டு, தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கும் அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தான் தியானத்தை நிறைவு செய்கிறார். சுமார் 48 மணி நேரங்கள் தொடர்ந்து தியானத்தில் இருக்கவுள்ளார் பிரதமர் மோடி. இந்த இரு நாட்களும் உணவு ஏதும் ஏற்காமல், முழுமையான தியான நிலையில் இருப்பதாக தீர்மானித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு நாட்டின் வட கோடியில் உள்ள இமயமலையின் கேதார்நாத் சென்று அங்கே குகைகளில் தியானம் மேற்கொண்டார். இப்போது நாட்டின் தென்கோடி முனையான கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல் அரசியலில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான திமுக., ஆகியவை. ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் நடத்தையில் வராது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை மாலை வரை தியானம் மேற்கொண்டிருக்கிறார்.
பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஐபிஎல்-2024இன் இறுதிப்போட்டிக்கான ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (18.3 ஓவரில் 113, பேட் கம்மின்ஸ் 24, ஐடன் மர்க்ரம் 20, கிளாசன் 16, ராகுல் திரிபாதி 9, ஷபாஸ் அகமது 8, ரசல் 3/19, மிட்சல் ஸ்டார்க் 2/14, ஹர்ஷித் ராணா 2/24) கொல்கொத்தா அணி (10.3 ஓவரில் 114/2, ரஹ்மானுல்லா குர்பாஸ் 39, வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 6 ரன், சுனில் நரேன் 6 ரன்) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்), அபிஷேக் ஷர்மா (5 பந்துகளில் 2 ரன்), ராகுல் திரிபாதி (13 பந்துகளில் 9 ரன்) மிக மோசமான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்த ஐடன் மர்க்ரம் (23 பந்துகளில் 20 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 13 ரன்), கிளாசன் (17 பந்துகளில் 16 ரன்), ஷபாஸ் அகமது (7 பந்துகளில் 8 ரன்), அப்துல் சமது (4 பந்துகளில் 4 ரன்) பாட் கம்மின்ஸ் (19 பந்துகளில் 24 ரன்), ஜெய்தேவ் உனக்தத் (4 ரன்) புவனேஷ் குமார் (றன் எடுக்கவில்லை, ஆட்டமிழக்கவில்லை) ஆகியோர் இன்று சரியாக ஆடவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 113 ரன் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோராகும்.
114 ரன் அடித்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு இரண்டாவது ஓவர் இரண்டாவது பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது, அதிரடி பேட்டர் சுனில் நரேன் இரண்டு பந்துகளைச் சந்தித்திருந்த நிலையில் 6 ரன் கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பஆஸ் (32 பந்துகளில் 39 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) வெங்கடேஷ் ஐயர் உடன் (26 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை 100 ரன்னுக்கு எடுத்துச்சென்றார். அவருக்குப்பின்னர் ஆட வந்த அணியின் தலைவர் ஷ்ரேயாச் ஐயர் மூன்று பந்துகளில் 6 ரன் அடித்து கொல்கொத்தா அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவி செய்தார்.
இந்த வருட ஐபிஎல் ஆட்டங்களில் ஆறு முறை 200க்கும் மேல் ரன் எடுத்த சன்ரைசர்ஸ் அணி இன்று 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது மிகவும் பரிதாபம்.
கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். அதே அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் சுனில் நரேன் இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணி (175/9, ஹெராவிஸ் ஹெட் 34, ஷபாஸ் அகமது 18, அபிஷேக் ஷர்மா 12, போல்ட் 3/45, ஆவேஷ் கான் 3/27, சந்தீப் ஷர்மா 2/25, ஹென்றிச் கிளாசன் 50, ராகுல் திரிபாதி 37, ட்) ராஜஸ்தான் அணியை (139/7, துருவ் ஜுரல் 56*, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 42, டாம் கோலர் 10, சஞ்சு சாம்சன் 10, ஷாபாஸ் அகமது 3/24, அபிஷேக் ஷர்மா 2/24) 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (28 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அபிஷேக் ஷர்மா (5 பந்துகளில் 12 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (15 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) அதிரடி ஆட்டம் ஆடினார். அதற்குப் பின்னர் வந்த ஐடன் மர்க்ரம் (1 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (5 ரன்), அப்துல் சமது (பூஜ்யம் ரன்), பாட் கம்மின்ஸ் (ஆட்டமிழக்காமல் 5 ரன்), ஜெய்தேவ் உனக்தத் (5 ரன்) ஆகியோர் இன்று சரியாக ஆடவில்லை. இடையில் ஹென்றிச் கிளாசன் (34 பந்துகளில் 50 ரன், 4 சிக்சர்) ஷபாஸ் அகமது (18 பந்துகளில் 18 ரன், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
176 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யசஷ்வீ ஜெய்ஸ்வால் (28 பந்துகளில் 42 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் டாம் கோலர் காட்மோர் (16 பந்துகளில் 10 ரன், 1 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர். இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 10 ரன், 1 ஃபோர்) மற்றும் ரியன் பராக் (10 பந்துகளில் 6 ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. இதன் பின்னர் ஆடவந்த ஷிம்ரன் ஹெட்மயர் (4 ரன்), அஷ்வின் (பூஜ்யம் ரன்) ரொவ்மன் போவல் (6 ரன்) ஆகியோர் இன்று சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரல் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன், 4 சிக்சர்) வெற்றி பெற இன்னமும் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருந்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கட் இழப்பிற்கு 139 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. தமிழக வீரர் நடராஜன் கடைசி இரண்டு ஓவர்களை பிரமாதமாக வீசினார். ஆனால் துருவ் ஜுரலுக்கு அவர் வீசிய ஒரு பந்து தொண்டையில் பட்டது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம். சுழல்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் அகமதும் அபிஷேக் ஷர்மாவும் சிறப்பாக பந்து வீசினார்கள். சன்ரைசர்ஸ் அணிக்காக 15 பந்துகளில் 37 ரன் எடுத்த ராகுல் திரிபாதி போல ராஜஸ்தான் அணியில் ஒருவர் கூட ஆடாததே தோல்விக்குக் காரணமானது.
இனி வருகின்ற 26ஆம் தேதி சென்னையில் இறுதிப்போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடும். சன்ரைசர்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷாபாஸ் அகமது தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தி வருகின்றனர்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் காலை , மாலை இரு வேளைகளிலும் வீதி உலா வருவார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடனாக பால்குடம் மற்றும் இளநீர் காவடி, தேர் , பறவை காவடி, அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வைகை ஆறு சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், போன்ற பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
அதிகாலை 4. மணிக்கு மதுரையில் பல்வேறு பகுதிகளிலிருந்து, பால்க் குடத்துடன், திருப்பரங் குன்றம் முருகன் கோயில் வரை நடந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், அருள்மிகு சித்திவிநாயகர் கோயில், சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகத்தை செய்யப்பட்டது. இதையடுத்து, முருகன் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழஙாகப்பட்டது. இதறாகான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.
வைகாசி விசாக விழா.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை, குப்பு லால் பட்டர் செய்தார்.
கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் |அலங்காநல்லூர் அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவிலில் கருவறையில் உள்ள முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தெத்தூர் கொழிஞ்சிபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்..
சோழவந்தான் அருகே, மன்னாடி மங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ,கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு முதல் கால யாக வேள்வி, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, இரவு 9 மணி அளவில் கணபதி ஹோமம், நடைபெற்று 21 பந்தி தெய்வங்களின் ஹோமம் மற்றும் பரிகார தேவதை ஹோமங்கள் மகாபூர்ணாகதி நடைபெற்று மகா தீபாராதனையுடன் முதல் காலையாக பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து , இன்று காலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை தொடங்கி, கோமாதா பூஜை, கன்னியா பூஜை, பூஜையுடன், முத்தையா சாமிக்கு 21 பந்தி தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் விசேஷ மூலிகை ஹோமங்கள் பூஜையுடன் மகாபூர்ணாகதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, காலை 9 . 35 மணிக்கு முத்தையா சாமி மாரியம்மன் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சோழவந்தான் தொழிலதிபர் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா, சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், 8-வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, எம். வி.எம். குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். கும் பாபிஷேகத்திற்கான பூஜைகள் அனைத்தும் சோழவந்தான் ஸ்ரீ வே வரதராஜ் பன்டிட்ஜி தலைமையில் அர்ச்சகர்கள், யாக வேள்வி மற்றும் பூஜைகள் செய்தனர்.
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா மகாபாரதத்தில் வரக்கூடிய கதைக்கேற்ப பாத்திரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர்.பின்னர் பூ வளர்த்தனர்.
பகல் 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது.அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் மருதுபாண்டியன், சங்கோட்டை கிராம நல சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் ,செயல் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் சேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டைகிராமம்,முதலியார்கோட்டை கிராமம்,ரயில்வேபீடர்ரோடு வழியாக மார்க்கெட் ரோடு,நான்குரதவீதி பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும்தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயத்தில், நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது . இதை ஒட்டி, இக்கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சக்கரத் தாழ்வாருக்கு, மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகத்தின் வழிபாடு நடைபெற்றது.
இதை அடுத்து நரசிம்மருக்கு அலங்காரமாகி அர்ச்சனைகள் தீபாராதனை நடைபெற்றது. இதை அடுத்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பெண்கள் நரசிம்மருக்கு துளசி மாலை பானகம் படைத்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தொழில் அதிபர் எம். பி .எம் .மணி கவுன்சிலர் வளிமயில் மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல, மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சௌபாக்கிய ஆலயத்தில், நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
எலிமினேட்டர் ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான் – 22.05.2024
இன்று முதல் இறுதிப்போட்டிக்கான தகுதி ஆட்டம் அகமதபாத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
பெங்களூரு அணியை (172/8, ரஜத் படிதர் 34, விராட் கோலி 33, மஹிபால் லோமர் 32, காமரூன் கிரீன் 27, டியு பிளேசிஸ் 17, ஆவேஷ் கான் 3/44, அஷ்வின் 2/19) ராஜஸ்தான் அணி (யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 41, டாம் கோலர் 20, சஞ்சு சாம்சன் 11) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (24 பந்துகளில் 3 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் டியு பிளேசிஸ் (14 பந்துகளில் 17 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய காமரூன் கிரீன் (21 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) கோலிக்கு கம்பனி கொடுத்தார். ஆனால் கிளன் மேக்ஸ்வெல் (பூஜ்யம் ரன்), தினேஷ் கார்த்திக் (11 ரன்), ஸ்வப்னில் சிங் (ஆட்டமிழக்காமல் 9 ரன்), கரண் ஷர்மா (5 ரன்) ஆகியோர்இன்று விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஆயினும் ரஜத் படிதர் (22பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மஹிபால் லோமர் (17 பந்துகளில் 32 ரன்)இருவரும் அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர். இருப்பினும் அஷ்வினின் அருமையான சுழப் பந்துவீச்சால் பெங்களூரு அணி அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது.
173 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யசஷ்வீ ஜெய்ஸ்வால் (30 பந்துகளில் 45 ரன், 8 ஃபோர்) மற்றும் டாம் கோலர் (15 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த சஞ்சு சாம்சன் (13 பந்துகளில் 17 ரன், 1 சிக்சர்) மற்றும் ரியன் பராக் (26 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்தனர். இதன் பின்னர் ஆடவந்த துருவ் ஜுரல் (8 ரன்) இன்று ஜொலிக்கவில்லை.
ஆயினும் ஷிம்ரன் ஹெட்மயர் (14 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ரொவ்மன் போவல் (8 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியை 19 ஓவர்களில் தேவையான் ரன் (174/6) எடுத்து, அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
ராஜஸ்தான் அணி வெற்றிபெற்ற போதிலும் இடையில் தடுமாறினர். சஞ்சு சாம்சன் தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டபோதும் துருவ் ஜுரல் ரன் அவுட் ஆனபோது அந்த தடுமாற்றம் தெரிந்தது.
இருந்தாலும் 19ஆவது ஓவரில் ரொவ்மன் போவல் முதலிரண்டு பந்துகளில் அடித்த இரண்டு ஃபோர்களும், கடைசி பந்தில் அடித்த ஒரு சிக்சரும் வெற்றியை 19ஆவது முடிவிலேயே உறுதி செய்தன.
ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இரண்டாவது இறுதி தகுதி ஆட்டத்தில் நுழைகிறது. 24.05.2024 அன்று சென்னையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் கொல்கொத்தா அணி 26.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.
முதல் அரையிறுதி ஆட்டம் கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ் – 21.05.2024
இன்று முதல் அரையிறுதி ஆட்டம் அகமதபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (19.3 ஓவரில் 159, ராகுல் திரிபாதி 55, கிளாசன் 32, பாட் கம்மின்ஸ் 30, மிட்சல் ஸ்டார்க் 3/34, வருண் சக்ரவர்த்தி 2/26) கொல்கொத்தா அணி (13.4 ஓவரில் 164/2, ஷ்ரேயாஸ் ஐயர் 58, வெங்கடேஷ் ஐயர் 51, ரஹ்மானுல்லா குர்பாஸ் 23, சுனில் நரேன் 21) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன்), மற்றும் அபிஷேக் ஷர்மா (3 ரன்)அதிர்ச்சித் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (35 பந்துகளில் 55 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) சற்று நிலைத்து ஆடினார். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி (9 ரன்), ஷபாஸ் அகமது (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த கிளாசன் (21பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), அப்துல் சமது (16 ரன்) அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் ஆட்டம் கொல்கொத்தா அணியின் கைக்குள் வந்துவிட்டது. சன்வீர் சிங் (பூஜ்யம் ரன்), புவனேஷ் குமார் (பூஜ்யம் ரன்), விஜய்ஸ்கந்த் (7 ரன்) ஆகியோரால் குறைவான் ரன்னே எடுக்க முடிந்தது. எனினும் பேட் கம்மின்ஸ் (24 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அதிரடியால் ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
160 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (23 ரன்), மற்றும் சுனில் நரேன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) சிறப்பாக ஆடினார்கள்.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (28 பந்துகளில் 51 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (24 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்து 13.4 ஓவரில் தேவையான் ரன் (164/2) எடுத்து, அந்த அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
கொல்கொத்தா அணியின் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா அணி இறுதி ஆட்டத்தில் நுழையும் முதல் அணியாகிறது.
நாளை அகமதாபாத்தில் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.