Home Blog Page 204

பாரீஸ் ஒலிம்பிக் 2024; பத்தாம் நாளில்…

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பத்தாம் நாள் – 05.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்ஷ்யா சென் – வெண்கலப் பதக்க ஆட்டத்தில் தோல்வி

          லக்ஷ்யா சென் மலேசியாவின் லீ ஜியாவிடம் கடினமான ஆட்டத்தில் தோற்று, வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். பதக்கம் பெற லக்ஷ்யா சென் தவறவிட்டதால், 10வது நாளில் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அவர் 21-13 16-21 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய லக்ஷ்யா, “இந்தப் போட்டியை நான் நன்றாகத் தொடங்கினேன், ஆனால் என்னால் முன்னிலை வகிக்க முடியவில்லை, பின்னர் அவர் நன்றாக விளையாடத் தொடங்கியபோது, எனக்கு கடினமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, முடிவுகளில் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்.

கலப்பு குழு ஸ்கீட் ஷூட்டிங்

          மகேஸ்வரி சிங் மற்றும் அனந்த் ஜீத் நருகா ஆகியோர் தங்கள் கலப்பு குழு ஸ்கீட் ஷூட்டிங் வெண்கலப் பதக்கப் போட்டியில் சீனாவிடம் 43-44 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர், இதனால் அவர்கள் பதக்கத்தை இழந்தனர்.

          முன்னதாக, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத் மற்றும் மனிகா பத்ரா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் இரட்டையர் ஆட்டத்தில் எளிதாக வென்றனர், அதைத் தொடர்ந்து முதல் ஒற்றையர் ஆட்டத்தில் மனிகா பத்ரா வெற்றி பெற்றார், இதன்மூலம் இந்தியா காலிறுதிக்குச் செல்ல ஒரு வெற்றியை எட்டியது. இருப்பினும், அகுலாவும் அர்ச்சனாவும் தங்கள் ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்,

தடகளம்

          தடகளத்தில், கிரண் பஹல் பெண்களுக்கான 400 மீட்டர் சுற்று 1 ஹீட் 3 இல் ஏழாவது இடத்தைப் பிடித்தார், மேலும் ரெப்சேஜ் சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று 1 ஹீட் 2ல் அவினாஷ் சேபிள் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

துப்பாக்கி சுடுதல்

          மகேஸ்வரி சிங், அனந்த் ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய  கலப்பு குழு ஸ்கீட் தகுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கப் போட்டிக்கு வந்ததால், திங்களன்று நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் யிட்டிங் ஜியாங்கிடம் 43-44 என இந்த ஜோடி தோல்வியடைந்தது.

மல்யுத்தம்

          பெண்களுக்கான 68 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்தத்தில், நிஷா தஹியா உக்ரைனின் டெட்டியானா சோவா ரிஷ்கோவை தோற்கடித்து பெண்களுக்கான 68 கிலோ காலிறுதிக்கு முன்னேறினார். ஆனால் காலிறுதியில் வடகொரியாவின் பாக் சோல் கம்மிடம் தோற்றார்.

டேபிள் டென்னிஸ்

          மகளிர் அணி 16வது சுற்றில் இந்தியா 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது

படகோட்டம்

          விஷ்ணு சரவணன் 8 பந்தயங்களுக்குப் பிறகு 114 ரன்களுடன் 43 ஆண்களுக்கான டிங்கியில் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.

          நேத்ரா குமணன் 9 பந்தயங்களுக்குப் பிறகு 155 மதிப்பெண்களுடன் 43 பேரில் 21ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சயனக் கோல சேவை

IMG 20240806 WA0001 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூர பிரம்மோற்சவத்தில் 7 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோல நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில்‌ பிரபலமான திருவிழா ஆடிப்பூரத் தேரோட்ட .திருவிழா ஜூலை 30ல் வேத மந்திரங்கள் முழங்க காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் ஆக. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் – ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வந்தனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளினர்.

ஆக. 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பகதோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், நடைபெற்றது.

இன்று5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது

வாடிப்பட்டியில் களரி எடுப்பு உத்ஸவ விழா!

vadipatti kalari eduppu - 2026
#image_title

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கருப்புசாமி மதுரை வீரன் சுவாமிகள் திருக்கோயிலில் மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு உற்சவ விழா 2 நாட்கள்  நடந்தது. 

முதல் நாள் மாலை 3 மணிக்கு  கோவிலில் இருந்து பெட்டி எடுத்து வாடிப்பட்டி இந்துநாடார் உறவின் முறையினருக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்திற்கு சென்றனர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஆச்சி அம்மன் சாமிக்கு கரகம் ஜோடித்து பெரிய கருப்புசாமி, மதுரை வீரன், சங்கிலி கருப்பு, பட்டகொலைகாரன்,  பூச கருப்பு, ஆண்டி சாமிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலு க்கு வந்தனர்.

நள்ளிரவு12 மணிக்கு சுவாமிகளுக்கு காவு கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இரண்டாம் நாள் காலை8 மணிக்கு அனைத்து சாமிகளும் அருள்வாக்கு கூறுதல் மற்றும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடந்தது.11.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மாலை 3 மணிக்கு அனைத்து சாமிகளும் மழவராயர் பங்காளி மற்றும் சோழகர் மாமன் மைத்துனர் வீடுகளுக்கு  சென்று அருள் பாலித்து மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. இரவு 9 மணிக்கு கரகம் கரைத்தலோடு திருவிழா முடிந்தது.

இதன் ஏற்பாடுகளை, மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு விழா குழுவினர் சோழகர் மாமன் மைத்துனர்கள் செய்திருந்தனர்.

ஆப்பிள் தயாரிப்பான ஐபோன், ஐபேட் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு!

apple iphone - 2026

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள், ஐபேட்கள், உள்ளிட்ட சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்( CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும் ஆப்பிள் மென்பொருட்கள் விபரம்:

  • ஐஓஎஸ் மற்றும் ஐபேட்: 17.6 மற்றும் 16.7.9 முந்தைய பதிப்புகள்
  • மேக் ஓஎஸ் (OS) :14.6 13.6.8 மற்றும் 12.7.6க்கு முந்தைய பதிப்புகள்
  • வாட்ச் ஓஎஸ்: 10.6 பதிப்புக்கு முந்தையது
  • டிவி ஓஎஸ்: 17.6க்கு முந்தைய பதிப்பு
  • சபாரி: 17.6க்கு முந்தைய பதிப்பு

இந்த மென்பொருளில் உள்ள குறைபாடுகள் மூலம் சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் முக்கிய தகவல்களை திருடவும், பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தவும் முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் அனைவரும் ஆப்பிள் சாதனங்களின் மென்பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும் என சிஇஆர்டி- ஐஎன் அறிவுறுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனமும், ஐபோன்களை குறிவைத்து ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சிஇஆர்டி – ஐஎன் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

போராட்ட எதிரொலி; வங்கதேச பிரதமர் ராஜினாமா, ஆட்சியில் ராணுவம்!

sheik hasina bangladesh - 2026
#image_title

மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவத்துக்குச் சொந்தமான சி-130 விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். இதை அடுத்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலானது. ஷேக் ஹசீனா திரிபுரா தலைநகர் அகர்தலா சென்று, அங்கிருந்து தில்லி செல்ல உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் உ.பி. மாநிலம் ஹிண்டன் ஏர்பேஸுக்கு வந்தார்.  பின்னர் அவர் வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் மகள் வீடு லண்டனில் இருப்பதாகவும், அவர் அங்கே சென்று தங்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. எனினும் ஷேக் ஹசீனாவுக்கு லண்டனில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்க அந்நாடு தயங்கியதாகவும் தகவல் வெளியானது. 

இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மாணவர் போராட்டம் வலுவடைந்ததால் வேறு வழியின்றி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலர்  உயிரிழந்தனர் இதை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.  இதை அடுத்து அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. குறிப்பாக வங்கதேச நாட்டின் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் சொத்துக்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன.  கடைகள் வணிகத்தலங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்த நிலையில் இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி, தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன..

இதன் பின்னர் போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை  முற்றுகையிட்டு சூறையாடினர்.  ஷேக் ஹசீனாவின்  படுக்கையறையில் படுத்துக் கொண்டும் வீட்டில் உள்ள பொருள்களை சுருட்டிக் கொண்டும், குறிப்பாக ஷேக் ஹசீனாவின் ஆடைகளை கையில் பிடித்தபடியும் படங்கள் எடுத்து அவற்றை சமூகத் தளங்களில் பகிர்ந்தனர். கடந்த வருடம் இலங்கையில் நடந்தது போன்ற அதே பாணியில் இந்த பிரச்சனைகள் நடந்து முடிந்தன.

இதுகுறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்” என்றார்.

ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, போராட்டக்காரர்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத் தக்கது.

பதவி விலகி பிரதமர் வெளியேறிய நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ளது. போராட்டம் வெடித்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி  ஷேக் ஹசீனாவுக்கு ராணுவமும் கெடு விதித்து இருந்தது.

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலான நிலையில், அந்நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி வக்கார் ஜமான் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார் அதில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஆட்சி அமைக்க நாங்கள் உதவி செய்வோம். முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராணுவம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் கடினமான நேரத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். நாட்டில் அவசர நிலையோ அல்லது கட்டுப்பாடுகளோ தேவையில்லை. இன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் ஏர்பேஸ் வந்தடைந்தார். அங்கே பாரதத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதனிடையே ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் உலக அரசியல் நிலவரம் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

வங்கதேசத்தை அடுத்துள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டன. எல்லைப்புற மாநிலங்களில் இரவு முதல் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் அவர்கள் மேற்கு வங்க எல்லை வழியாக இந்தியா வந்தால் அவர்களுக்கு மத்திய அரசால் அண்மையில் அமல்படுத்தப்பட்ட சிஏஏ சட்டம் மூலம் குடியுரிமை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் உயர்வு: திமுக., அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு!

annamalai bjp tn leader - 2026

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் உயர்வுக்கு திமுக., அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை.

பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு?

பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். – கு.அண்ணாமலை


வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100%க்கும் அதிகமாக உயர்வு: ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? என்று குறிப்பிட்டு, இதனை திரும்பப் பெற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலிறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100%க்கும் கூடுதலாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112% அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள அறிவிக்கையின்படி சென்னையில் 8900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது 112% உயர்வு ஆகும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10% ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பத்திரப் பதிவுக் கட்டணம், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு, சொத்துவரி என அனைத்தையும் உயர்த்திய தமிழக அரசு, இப்போது வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் இனி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

தமிழக அரசு மக்களை பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கக் கூடாது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆக. 05: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

gold rate today - 2026
#image_title

தங்கம் விலை இன்று சிறிதளவு அதிகரித்து, சவரன் விலை ரூ. 51,760 க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் நேற்றைய விலையில் இருந்து சவரன் ரூ. 160 உயர்ந்து ரூ.51,760க்கு விற்பனை ஆனது.

திங்கள்கிழமை இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,470 க்கு விற்பனையானது.

வெள்ளி விலை – நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.1.00 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.91க்கு விற்பனையாகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024 : ஒன்பதாம் நாளில் இந்திய அணி …!

paris olympics 2024 - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

படகோட்டம்

இந்திய வீராங்கனை நேத்ராகுமணன் 25ஆவது இடம் பெற்றா. மற்றொர்ய் இந்திய வீரர் விஷ்ணுசரவணன் 18ஆவது இடம் பெற்றார்.

கோல்ஃப்

ஆண்களுக்கான தனிநபர் ஸ்ட்ரோக் ஆட்டம் – ககன்ஜீத்  டி40ஆவது இடத்தையும் சுபங்கர் டி45ஆவது இடத்தையும் பிடித்தனர்.

டென்னிஸ்

        ஆண்கள் டென்னிஸில் நோவக் ஜோகோவிச் தங்கப் பதக்கம் வென்றார். அவர் இப்போது செரீனா வில்லியம்ஸ், ரஃபேல் நடால், ஆண்ட்ரே அகாஸி மற்றும் ஸ்டெஃபி கிராஃப் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவில் நான்கு கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே வீரராக இணைகிறார்.

துப்பாக்கி சுடுதல்- மகளிர்ஸ்கீட்

         மகளிர் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச் சுற்றில் மகேஸ்வரி, ரைசா வெளியேறினர்

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய்வீர், அனிஷ் ஆகியோர் தகுதி பெறவில்லை.

இறகுப்பந்து லக்ஷ்யா சென்

லக்ஷ்யாசென் 20-22, 14-21 என்ற கணக்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனிடம் அரையிறுதி ஆட்டத்தில் தோற்றார்.

குத்துச்சண்டை

  லோவ்லினா போர்கோஹைன் நாக் அவுட்

ஆண்கள் ஹாக்கி

   ஷூட்அவுட் முறையில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்

பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஹீட் 1ல் பாரூல் சவுத்ரி 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

IND VS SL ODI 2024: சுழலுக்கு சரிந்த இந்திய பேட்ஸ்மென்கள்

ind vs sl odi - 2026

இலங்கை-இந்தியா இரண்டாவது ஒருநாள் ஆட்டம் – கொழும்பு – 04.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

       இலங்கை அணி (9 விக்கெட்டுக்கு 240, அவிஷ்கா 40, கமிந்து 40, வாஷிங்டன் 3-30, குல்தீப் 2-33) இந்திய அணியை (42.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையிம் இழந்து 208, ரோஹித் 64, அக்சர் 44, வான்டர்சே 6-33, அசலங்கா 3-20) 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இலங்கை, முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை நிறுத்தவும், பிடிக்கவும், சில சமயங்களில் விறுவிறுப்பாகத் பந்து திரும்பவும் பெற்றனர், மேலும் ஆறு விக்கட்டுகளுக்கு 150 ரன்களுக்கு கீழே இருந்து அனியின் ஸ்கோரை இலங்கை அணி வீரர்கள் அற்புதமாக மீட்டனர். துனித்வெல்லலகே ஆட்டக்களத்தின் நிலையை மீறி, ஒரு சிறப்பான பங்களிப்பைச் செய்தார். ஒரு பந்திற்கு மேல் ஒரு ரன் கணக்கில் ரன் எடுத்தார்.

இரண்டாவதாக விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் ரோஹித் சர்மா ஆடிய அபராமன ஆட்டட்டால் ஒரு நல்ல ரன் ரேட்டுடன் அனியை முன்னோக்கி வைத்தார். பின்னர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியா சரிந்தது, மேலும் அவர்கள் 140 ரன்களை எடுப்பதற்குள் பாதி பேர் ஆட்டமிழந்து திரும்பினர்.

வெள்ளியன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும்  இவை அனைத்தும் நடந்தன, மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று இந்தியாவின் இந்த வெள்ளைப் பந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை தனது முதல் வெற்றியைத் துரத்தியதால் அவை மீண்டும் நடந்தன. அவர்கள் மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஐ சமன் செய்திருந்தனர், இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றனர். முதல் ஒருநாள் போட்டியையும் டை செய்திருந்தனர்.

       இலங்கை ஒரு சிறப்பாகச் செல்ல ஆசைப்பட்டது, இறுதியாக அவர்கள் அதற்கான பணியைச் செய்தார்கள், மேலும் அவர்களின் ஹீரோ அவர்களின் அசல் அணியில் கூட இல்லை. 2015 டிசம்பரில் அறிமுகமான ஜெஃப்ரி வான்டர்சே, இதற்கு முன்பு 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர், நீண்ட காலமாக அண்டர்ஸ்டடி அந்தஸ்துக்கு அனுப்பப்பட்ட லெக் ஸ்பின்னர், வனிந்து ஹசரங்காவின் தொடை எலும்புகளுக்கு நன்றி, இந்த போட்டிக்கு முன்னதாக அணியில் மட்டுமே அழைக்கப்பட்டார். ரோஹித், ஷுப்மான் கில், ஷிவம் துபே, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை 29 பந்துகளில் அவுட்டாக்கி இந்தியாவின் பேட்டிங்கின் இதயத்தை வான்டர்சே கிழித்தெறிந்தார், அவர் முடிவில் 29 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார்.

வெள்ளியன்று இந்தியா ஒரு வித்தியாசமான சரிவில் இருந்து மீண்டு வந்த நிலையில், இந்த முறை அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை. அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தங்கள் இலக்கை 56 ரன்களுக்குள் கொண்டு வந்தனர், இந்த நேரத்தில் வாண்டர்சே பெரும்பாலும் தாக்குதலில் இருந்து வெளியேறினார், ஆனால் இந்தியா முன்னேற அச்சுறுத்தியபோது, சரித் அசலங்கா தனது பகுதி நேர ஆஃப்ஸ்பின் மூலம் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார், இப்போது அவர் தன்னை மீண்டும் அழைத்து வந்து அக்சர் மற்றும் வாஷிங்டன் இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் எடுத்தார்,

         ஜூலை 2021க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் 32 ரன் வெற்றி இதுவாகும். வெள்ளிக் கிழமை சமன் செய்வதற்கு முன்பு அவர்கள் தொடர்ந்து ஏழு சந்திப்புகளில் தோல்வியடைந்தனர். வான்டர்சேயின் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் ஒரு பெருமைமிக்க பாரம்பரியத்தைத் தொடர்ந்தன: முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் அகிலா தனஞ்சய ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆறு விக்கட்டுகள் எடுத்த ஐந்தாவது இலங்கை பந்துவீச்சாளர் ஆனார்.

ஆடி அமாவாசை : சதுரகிரியில் லட்சக் கணக்கில் பக்தர்கள் தரிசனம்!

sathuragiri adi amavasai - 2026
#image_title

மதுரை விருதுநகர் மாவட்டங்களை இணைத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் , மதுரை ,சென்னை ,திருச்சி ,கோவை , நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகாலை முதலிலே பக்தர்கள் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,11 காவல் துணை கண்காணிப்பாளர்கள் ,25 காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் உட்பட 1420 காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றச்சம்பங் வகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அடிவாரப் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டது.

தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து 60 பேரிடர் மீட்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமிக்கும் சுந்தரமூர்த்தி மற்றும் பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அமாவாசை பூஜைகள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நடந்தது. பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.