Home Blog Page 205

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

tn secretariat - 2026
#image_title

தமிழகத்தில் 42 யானை வழித்தடங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறும் அறிக்கை.

புரியாத ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்போவதாக கூறுவதா?

தமிழக அரசின் அறிக்கையை, தமிழில் தயாரிக்க திராணியற்ற இவர்கள் தான், தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்

அப்பாவி மக்களின் நிலத்தை அபகரிப்பதன் மூலம், அவர்களின்  வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிக்கும் கொடூர மனம் கொண்ட  திமுக அரசு.

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

யானைகளுக்குத்  தீங்கு விளைவிக்காத அப்பாவி மக்களை, வெளியேற்றி விட்டு திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா? – இவ்வாறு கேள்வி எழுப்பி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளைப் பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியைச் சேர்ந்த, 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதிவாழ் மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 80 யானைகள் இருப்பதாக  அன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன.

அதேபோல மசினக்குடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன.

கூடலூரில், தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் குத்தகை காலம் முடிந்த  தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற  வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினக்குடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை  யானை வழித்தடம் எனக் கூறியுள்ளார்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வருகின்றன; மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை.  அப்படிப்பட்ட சூழலில், திடீரென யானை வழித்தட  அறிக்கை ஏன் என்பது தான் அப்பகுதி மக்கள் முன் வைக்கும் கேள்வி.

பொதுமக்கள்  பல ஆண்டுகாலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று சூழலியல் நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது.  சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக அரசு பின்பற்றுவதாகத்  தெரியவில்லை. மனம்போன போக்கில் தன்னிச்சையாக இந்தத்  திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிகிறது. 

2000-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில், 18 வழித்தடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது 42 என்கிறார்கள்.

மேலும் இந்த அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். சாதாரண மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என பீற்றிக்கொள்ளும் திமுக அரசின் லட்சணம் இது தான். தமிழக அரசின் அறிக்கையை தமிழில் தயாரிக்க திராணியற்ற இவர்கள் தான் தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். 

ஆங்கிலத்தில் சாதாரண மக்களுக்குப் புரியாத மொழியில் அறிக்கை என்று ஒன்றை வெளியிட்டு, என்ன நடக்கிறது என்று யாரும் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதும், இதனைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதும் தான் இதன் பின்னால் இருக்கும் திமுக அரசின் சதித்திட்டம்.

தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதாக இவர்கள் கூறுவது வேடிக்கையான ஒன்று. 

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களோ, கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை, இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம் என்கிறார். 

தமிழக அரசிடம் நான் கேட்கும் கேள்வி இது தான். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அவசர கதியில் இந்த அறிக்கையை வெளியிட  வேண்டிய அவசியம் என்ன? மக்களிடம் கருத்துக் கேட்கக்கூட கால அவகாசம் இல்லை என்றால், ஏன் உடனடியாக வெளியிட வேண்டும்? 

யாரையும் வெளியேற்றினால், அவர்களுக்குத்  தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மதிவேந்தன் கூறுகிறார். இதில் இருந்தே அந்தப் பகுதியில் காலம் காலமாக வசிக்கும் மக்களை வெளியேற்றி விட்டு அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் திட்டம் திமுக குடும்பத்திற்கு வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. 

கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தரப்படுவதாக சொன்ன வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. 

பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் ஒருபோதும் யானைகளின் வாழ்விடங்களையோ, வழித்தடங்களையோ ஆக்கிரமித்ததில்லை. அப்படிப்பட்ட மக்களை வெளியேற்றி விட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்காகத்  தான் அவசர கதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதியை திருட்டு மாடல் திமுக அரசு செய்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

யானைகள் வழித்தடத்தை காக்க வேண்டும் என்ற கடமை எல்லோருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. அதேசமயம் மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல், அப்பாவி மக்களின் நிலத்தை அபரிக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மக்களிடம் கருத்து கேட்பதை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள இருப்பதாகத்  தெரிகிறது. அதற்குப் பதிலாக கடைக்கோடி மக்களிடமும் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

-Dr.L. முருகன் (மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை  மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர்)

IPL 2024: அந்த சம்பவத்துக்கு பின்… சுதாரித்துக் கொண்ட கே.எல்.ராகுல்!

ipl 2024 - 2026

58ம் நாள்: ஐபிஎல் 2024 – 17.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும் என்பதையும்  மும்பையில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நேற்று தெரிவித்திருந்தோம்.

எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவதாக மும்பை அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆட்டம் முழுமையாக நடைபெற்றது. 

லக்னோ அணி (214/6, நிக்கோலஸ் பூரன் 75, கே.எல். ராகுல் 55, மார்கஸ் ஸ்டோயினிஸ் 28, ஆயுஷ் பதோனி 22, க்ருணால் பாண்ட்யா 12, நுவன் துஷாரா 3/28, பியுஷ் சாவ்லா 3/29) மும்பை அணியை (196/6, ரோஹித் ஷர்மா 68, நமன் தீர் 62*,  டிவால்ட் ப்ரிவிஸ் 23, ஹார்திக் பாண்ட்யா 16, இஷான் கிஷன் 14, ரவி பிஷ்னோய் 2/37, நவீன் உல் ஹக் 2/50) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. இதனால் லக்னோ அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று லக்னோ அணிக்கு கே.எல். ராகுலும் தேவதத் படிக்கலும் தொடக்கவீரர்களாக இறங்கினர்.

படிக்கல் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுல் (41 பந்துகளில் 55 ரன் 3 ஃபோர், 3 சிக்சர்) 17.1ஆவது ஓவர் விளையாடினார்.

மூன்றவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (22 பந்துகளில் 28 ரன்), தீபக் ஹூடா (9 பந்துகளில் 11 ரன்), அர்ஷத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோருக்கு இன்று நல்ல நாளாக அமையவில்லை.

ஆனால் நிக்கோலஸ் பூரன் இன்று அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 29 பந்துகளில் 5 ஃபோர், 8 சிக்சர்களுடன் 75 ரன் எடுத்தார். 75 ரன்களில் 68 ரன் கள் ஃபோர்களிலும் சிக்சர்களிலும் வந்தன.

ஆயுஷ் பதோனி (10 பந்துகளில் 2 ரன்), க்ருணால் பாண்ட்யா (12 ரன்) இருவரும் கடைசி ஓவர்களில் அதிக ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கட் இழப்பிற்கு 214 ரன் எடுத்தது. மும்பை அணியி நுவன் துஷாராவும் பியுஷ் சாவ்லாவும் தலா 3 விக்கட் எடுத்தனர். 

215 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மா (38 பந்துகளில் 68 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவருடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய டிவால்ட் ப்ரிவிஸ் (20 பந்துகளில் 23 ரன்), இஷான் கிஷன் (15 பந்துகளில் 15 ரன்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 16 ரன்) என அனைவரும் ரன்ரேட்டை தொடர்ந்து தேவையான அளவில் வைத்திருந்தனர்.

மும்பை அணியில் இன்று சரியாக விளையாடதவர்கள் சூர்யகுமார் யாதவ் (பூஜ்யம் ரன்), மற்றும் நெஹல் வதேரா (1 ரன்) இருவரும்தான். கடைசி கட்டத்தில் நமன் தீர் (28 பந்துகளில் 62 ரன், 4 ஃபொர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார்.

இருப்பினும் 20 ஓவர்களில் மும்பை அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை பெங்களூருவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். நாளை பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 

17.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
சென்னை1376140.528
டெல்லி147714-0.377
லக்னோ147714-0.667
பெங்களூரு1367120.387
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை144108-0.318

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

santhanam movie - 2026
#image_title

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்
பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்.28 ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து, சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு, ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில், சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, ஜி.என். அன்புச்செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச்செழியன் ஆகியோர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பேனரில் தயாரித்தனர்.

இதில், எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம். தியாகராஜன் எடிட்டிங் பணிகளை செய்தார்.

பாடல் வரிகளை, விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து , மே.17- ல் உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் சார்பில், மதுரையில் ரசிகர்களை சந்திக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் சந்தித்து குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கலந்துரையாடினார்.

IPL 2024: குஜராத் Vs ஹைதராபாத்… வென்றது மழை!

ipl 2024 - 2026

57ம் நாள்: ஐபிஎல் 2024 – 16.05.2024

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழைகாரணமாக ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இந்த முடிவின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு கொல்கொத்தாவுடன் ஒரு ஆட்டம் பாக்கியிருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்னும் ஒரு ஆட்டம் பாக்கியிருக்கிறாது. இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து யார் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பெறுவார்கள் என முடிவாகும். 

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். மும்பையில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

16.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
சென்னை1376140.528
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை13498-0.271

IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

ipl 2024 - 2026

56ம் நாள்: ஐபிஎல் 2024 – 15.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

ராஜஸ்தான் அணியை (144/9. ரியான் பராக் 48, அஷ்வின் 28, டாம் கோலர் காட்மோர் 18, சஞ்சு சாம்சன் 18, போல்ட் 12, சாம் கரண் 2/24, ஹர்ஷல் படேல் 2/28, ராஹுல் சாஹர் 2/26) பஞ்சாப் அணி (18.5 ஓவரில் 145/5, சாம் கரன் 63, ஜிதேஷ் ஷர்மா 22, ரிலீ ரோஸ்கோ 22, ஜானி பெயிர்ஸ்டோ 14, ஆவேஷ் கான் 2/28, சாஹல் 2/31) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. முதல் ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் டாம் கோலர் காட்மோர் (18 ரன்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 18 ரன்) நிலைத்து ஆடவில்லை.

இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரியன் பராக் (34 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர்) மற்றும் அஷ்வின் (19 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இவகளுக்குப் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் (பூஜ்யம் ரன்), ரோவ்மன் போவல் (4 ரன்), டொன்னொவன் ஃபெரேரா (7 ரன்), போல்ட் (12 ர்ன), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் சரிவர விளையாடாததால் ராஜஸ்தான் அணி 20ஆவது ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினர்.

145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் வீரர்கள்  4.5ஆவது ஓவருக்குள் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (14 ரன்), ரிலீரோஸ்கோ (22 ரன்), ஷஷாங்க் சிங் (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 8 ஓவர் முடிவில் 4/48.

அதன் பின்னர் அணித்தலைவர் சாம்கரன் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஜித்தேஷ் ஷர்மா (20 பந்துகளில் 22 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசியாக அஷுத்தோஷ் ஷர்மா (11 பந்துகளில் 17 ரன்) சாம் ரனுடன் இணைந்து ஆடி அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.

பஞ்சாப் அணி 18.5 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. 

இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் நிலையில் மாற்றமில்லை; அது 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே உள்ளது. 

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

15.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்135711-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை13498-0.271

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

madurai chozhavanthan spiritual news - 2026
#image_title

உலக வேண்டியும், ஆதிசங்கரர் ஜெயந்தி விழா!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ க்ருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில் பல வேத விற்பன்னர்களாலும், மற்றும், வேத பாடசாலை வித்யார்த்திகளாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.

மேற்படி, வைபவம் லோக க்ஷேமத்திற்காகவும், மழை வேன்டியும், குருவின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டியும், அன்று காலை 7.05 க்கு மேல் குரு வந்தனம், விக்னேஷ்வரர் பூஜை, புண்யாகவாசனம், ஶ்ரீ சங்கர பகவத் பாதாச்சார்யர் க்ராம ஊர்வலம், சங்கர பகவத் பாதர் த்யான ஆவாஹன சோடஷ உபசாரங்கள், சங்கர பகவத் பாத அஷ்டோத்திரம், மகன்யாச ருத்ர ஜெபம், உபநிஷத் பாராயணங்கள், அதனைத் தொடர்ந்து, கணபதி ஹோமம்,
ருத்ர ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், சொத்தாரா ஹோமம், மஹா பூர்நாஹுதி, சங்கர பகவத் பாத புணர் அர்ச்சனை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம்,திராவிட வேதம், ஸ்தோத்ர பாராயணம்,
தட்சிணா மூர்த்தி அஷ்டகம், தோடகாஷ்டகம், சங்கர பகவத் பாத பிக்ஷா வந்தனம், மஹா தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெற்றது.


சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது.

பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண் வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம் பிள்ளை குடும்பத்தினர் சார்பாக, அன்னதானம் வழங்கப் பட்டது.பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம். கே. முருகேசன், கமிட்டி செயலாளர் ஆதி பெருமாள், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வீரணன், முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா, பைனான்சியர் முத்துராமன் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாலை திருவிளக்கு பூஜை . இரவு அம்மனும் சுவாமியும், யான வானத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதி உலாவும் நடைபெறும்.

உபயதார் செந்தில் என்ற தில்லை சிதம்பரம் பிரசாதம் வழங்கினார். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சுகாதார பணி மற்றும் கூடுதலாக தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து இருந்தனர். நாளை மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம், வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.


பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை வந்தடைந்த பக்தர்களை மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு ,பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்.

இதையொட்டி , 10 நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 21ந்தேதி பக்தர்கள் சந்தனக்குடம், பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் காரணக்காரர்கள், விழாக் குழுவினர், அசோக்நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

IPL 2024: சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த டில்லி அணி!

ipl 2024 - 2026

55ம் நாள் :ஐபிஎல் 2024 – 14.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றாது.

          டெல்லி அணி (208/4, அபிஷேக் போரல் 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57*, ஷாய் ஹோப் 38, ரிஷப் பந்த் 33, அக்சர் படேல் 14*, நவீன் உல் ஹக் 2/51) லக்னோ அணியை (189/9, நிக்கோலஸ் பூரன் 61, அர்ஷத் கான் 58*, க்ருணால் பாண்ட்யா 18, யுத்வீர் சிங் 14, க்விண்டன் டி காக் 12, இஷாந்த் ஷர்மா 3/23) 19 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

          பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் டெல்லி அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (பூஜ்யம் ரன்) முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் (33 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய ஷாய் ஹோப் (27 பந்துகளில் 38 ரன்), ரிஷப் பந்த் (23 பந்துகளில் 33 ரன்) ஆகியோர் 16.2ஆவது ஓவர் வரை ரன்ரேட்டை சீராகக் கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்துகளில் 57 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் அக்ஸ்ர் படேல் (10 பந்துகளில் 14 ரன், 2 ஃபோர்) இருவரும் 20ஆவது ஓவர் வரை விளையாடி அணியின் ஸ்கோரை 208/4 என்ற நிலைக்கு கொண்டுவந்தனர்.

          209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த லக்னோ அணியின் வீரர்கள்  4.1ஆவது ஓவருக்குள் கே.எல். ராகுல் (12 ரன்), க்விண்டன் டி காக் (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (5 ரன்), தீபக் ஹூடா (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 4/44. அதன் பின்னர் ஆயுஷ் பதோனியும் (6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு க்ருணால் பாண்ட்யா (18 ரன்), அர்ஷத் கான் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), யுத்வீர் சிங் (7 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் லக்னோ அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை தக்க வைக்கும் விதத்தில் ஆடினர்.

இருப்பினும் 19ஆவது மற்றும் 20ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் மற்றும் ரசிக் சலாம் இருவரும் திறமையாகப் பந்து வீசினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 189 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டுடன் நான் காவது இடத்தில் உள்ளது அந்த அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன.

அந்த இரண்டு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி தோல்வியடைந்தால், அதன் ரன்ரேட் இப்போது இருப்பதைவிடக் குறைந்தால் டெல்லி அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இந்த ஆட்டத்தின் முடிவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்துவிட்டது.

          டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

14.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான்1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்135711-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

IPL 2024: முதலிடத்தில் கொல்கத்தா

ipl 2024 - 2026

ஐம்பத்திநான்காம் நாள்: ஐபிஎல் 2024 – 13.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆயினும் மழை காரணமாக ஆட்டம் இரவு 1036 மணிக்கு கைவிடப்பட்டது. 

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் கொல்கொத்தா அணி புள்ளிப்பட்டியலில் வகிக்கும் முதலிடம் உறுதியானது. குஜராத் 11 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

13.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
பெங்களூரு1367120.387
டெல்லி136712-0.482
லக்னோ126612-0.769
குஜராத்135711-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

IPL 2024: சென்னை, பெங்களூர் அணிகள் வெற்றி!

ipl 2024 - 2026

53ம் நாள்: ஐபிஎல் 2024 – 12.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன். முதல் ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் அணியை (141/5, ரியன் பராக் 47, துருவ் ஜுரல் 28, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, ஜாஸ் பட்லர் 21, சஞ்சு சாம்சன் 15, சிம்ரஜீத் சிங் 3/26) சென்னை அணி (145/5, ருதுராஜ் கெய்க்வாட் 42*, ரச்சின் ரவீந்திரா 27, ட்ரில் மிட்சல் 22, ஷிவம் துபே 18, சமீ ரிஸ்வி 15*, மொயீன் அலி 10, அஷ்வின் 2/35) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (21 பந்துகளில் 24 ரன்) மற்றும் ஜாஸ் பட்லர் (25 பந்துகளில் 21 ரன்)சுமாரான் தொடக்கம் தந்தனர்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் இன்று 15 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ரியான் பராக் (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), துருவ் ஜுரல் (18 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன் பின்னர் ஷுபம் துபே (பூஜ்யம்ரன்), அஷ்வின் (1 ரன்) ஆகியோர் விளையாடியதால் ராஜஸ்தான் அணி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது. சுழல் பந்து வீச்சாளர் சிம்ரஜீத் சிங் 26 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். 

142 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா (18 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (41 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய டரியல் மிட்சல் (22 ரன்), மொயீன் அலி (10 ரன்), ஷிவம் துபே (11 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), சமீர் ரிஸ்வி (ஆட்டமிழக்காமல் 15 ரன்) என அனைவரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடினார்கள். இதனால் சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கட்டு இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை அணியின் சுழல் பந்துவீச்சாளர், சமீர் ரிஸ்வி தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் கடைசியில் அடித்த தொடர் இரண்டு ஃபோர்களுக்காகவும் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் 

பெங்களூரு அணியை (187/9, ரஜத் படிதர் 52, வில் ஜேக்ஸ் 41, காமரூன் கிரீன் 32*, விராட் கோலி 27, மஹிபால் லோமர் 13, கலீல் அகமது 2/31, ரசிக் சலாம் 2/23) டெல்லி அணி (19.1 ஓவரில் 140, அக்சர் படேல் 57, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 21, ஷாய் ஹோப் 29, யஷ் தயால் 3/20, லாக்கி ஃபெர்கூசன் 2/23) 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (13 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (7 பந்துகளில் 6 ரன்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் (29 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ரஜத் படிதர் (32 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன் பின்னர் மஹிபால் லோமர் (13 ரன்), தினேஷ் கார்த்திக் (பூஜ்யம் ரன்), ஸ்வப்னில் சிங் (பூஜ்யம் ரன்), கரண் ஷர்மா (6 ரன்), முகமது சிராஜ் (6 ரன்) ஆகியோர் விளையாடியதால் ராஜஸ்தான் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. 

188 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் இன்று ரிஷப் பந்த் ஆடவில்லை. குறைவான ஓவர் ரேட்டுக்காக அவருக்கு அணித்தலைவர் என்ற முறையில் ஒரு ஆட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் போரல் மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (8 பந்துகளில் 21 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அக்சர் படேல் (39 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) வெற்றிக்கான நம்பிக்கையைத் தந்தனர்.

ஆனால் அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (3 ரன்), ரசிக் சலாம் (10 ரன்), குல்தீப் யாதவ் (6 ரன்), முகேஷ் குமார் (3 ரன்), ஆகியோர் அதிரடியாக ரன் சேர்க்கத் தவறியதால் டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 140 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

டெல்லி அணி பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்போது 4 கேட்சுகளைத் தவறவிட்டது. டெல்லி அணியின் இன்றைய அணித்தலைவர் அக்சர் படேல் திறமையாக ஆடியபோதும் பிற பேட்டர்கள் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இது பெங்களூரு அணியின் ஐந்தாவது தொடர் வெற்றி. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த அந்த அணி இப்போது வெற்றிப்ப் பாதையில் செல்கிறது.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 200 ரன் எடுத்து சென்னை அணியை 18 ரன் கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃபுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 

டெல்லி அணியின் சுழல் பந்துவீச்சாளர், அக்சர் படேல்  ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் பெங்களூரு அணியிந் காமரூன் கிரீன் (32 ரன், 1 விக்கட்) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

12.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1293181.428
ராஜஸ்தான் 1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
பெங்களூரு1367120.387
டெல்லி136712-0.482
லக்னோ126612-0.769
குஜராத்125710-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

railway news - 2026
#image_title

கிட்டத்தட்ட 50ஆண்டுகளுக்கு பிறகு கேரளா தமிழ்நாடு தலைநகர் களுக்கு இடையே மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை வழியாக தாம்பரம் – கொச்சுவேலி கோடை சிறப்பு ரயில் தென்னி ரயில்வே இயக்குகிறது.இதற்கான முன்பதிவு சனிக்கிழமை துவங்கிய நிலையில் முன்பதிவு அதிக வேகம் இல்லாமல் உள்ளது.தமிழக கேரள மக்கள் இந்த சிறப்பு ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த வழித்தடத்தில் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் வாய்ப்பு உள்ளது.

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் – கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06035) மே 16 முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங் கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் (06035) தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 16 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருத்துவர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவல்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவுனீஸ்வரம், கொட்டரக்காரா, குண்டரா, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலானது (வண்டி எண்; 06036) வரும் 17 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 14 + 2 லக்கேஜ் பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை துவங்கியுள்ளது.முன்பதிவு அதிக வேகம் இல்லாமல் உள்ளது.தமிழக கேரள மக்கள் இந்த சிறப்பு ரயிலை அதிகம் பயன்படுத்தினால் இந்த வழித்தடத்தில் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயங்கும் வாய்ப்பு உள்ளது.

14 ‘ஏசி’ பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளோ, முன்பதிவு இல்லாத பெட்டிகளோ கிடையாது. சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் முன்பதிவு இருக்கை அதிகம் உள்ளது.

விருதுநகர் -செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக இந்த ரயில் கொச்சுவேலிக்கு இயக்கப்படுவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக திருவனந்தபுரம் செல்லலாம்.

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை வரை எந்த ஊருக்கு பயணித்தாலும் ரூ. 990 கட்டணம். அதன்பின்பு விருதுநகர் ரூ.1040, சிவகாசி ரூ.1060, ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.1075, ராஜபாளையம் ரூ. 1085, தென்காசி ரூ. 1160, புனலுார் ரூ.1220, கொல்லம் ரூ.1275, கொச்சுவேலிக்கு ரூ. 1335 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலுார் ஆகிய எந்த ஊரில் இருந்தும் கொச்சுவேலிக்கு ரூ.990 என ஒரே கட்டணமாகும்.

திருவனந்தபுரம் -கொல்லம்-செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் முதல்முறையாக திருவனந்தபுரம் சென்னை இடையே விரைவு ரயில் சேவையை 50ஆண்டுகளுக்கு முன் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் துவக்கி வைத்தார்.திருவனந்தபுரம் கொல்லம் கொச்சி சென்னை வழித்தடம் உதயமானதும் இந்த வழித்தடத்தில் பிரதான வழியாக மாறி அதிக ரயில் இயக்கப்படுகிறது.கொல்லம் செங்கோட்டை மலைவழிப்பாதை முக்கியத்துவம் இல்லாமல் போனது.தற்போதுஇந்த வழியாக சிறப்பு ரயில் இயக்கம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1918 ஆம் ஆண்டு கொல்லம் – திருவனந்தபுரம் ரயில் பாதை தொடங்கியதில் இருந்து, 1976 ஆம் ஆண்டு அவசர காலத்தின் போது திருவனந்தபுரம் – கொல்லம் – கோட்டயம் – எர்ணாகுளம் வழித்தடம் அகலப்பாதையாக திறக்கப்படும் வரை, திருவனந்தபுரத்திலிருந்து கேரளாவிற்கு வெளியே செல்லும் ஒரே ரயில் பாதை திருவனந்தபுரத்தில் இருந்து மீட்டர் கேஜ் பெட்டிகள் மட்டுமே. கொல்லம் – தென்காசி வழியாக தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்தது முக்கியத்துவமானது.

திருவாங்கூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று மீண்டும் சென்னை எழும்பூருக்கு செங்கல்பட்டு – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சிராப்பள்ளி – திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – ராஜபாளையம்- தென்காசி – கொல்லம் வழியாக சென்னையை இணைக்கும் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான அனந்தபுரி திருவனந்தபுரம் இன்றைய அகலப் பாதை வழியாக எஸ் ரயில்கள் (கொச்சுவேலி) – சென்னை (தாம்பரம்) சிறப்பு சேவையின் நினைவைப் புதுப்பிக்கும் வகையில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது