டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
ரூ.1,20,60,000/- பரிசு வென்று கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 335 பேர் இதுவரை சாதனை!
தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய தலைநகர் கரூர் என மாவட்ட கல்வி அலுவலர் புகழாரம்!
தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு-2025ன் கரூர் பரணி பார்க் வித்யாலயா 100 சாதனையாளர்களுக்கும், அவர்களுக்கு மிகச் சிறப்பாக பயிற்சியளித்து கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டு விழா இன்று பரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ் மொழியில் தலைசிறந்த ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூ.36,000/- வீதம் பரிசுத்தொகை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு-2022ல் 46 பேர், 2023ல் 103 பேர், 2024ல் 86 பேர், 2025ல் 100 பேர் வெற்றி பெற்று மொத்தம் 335 மாணவர்கள் இதுவரை சாதனைப் படைத்துள்ளனர்.
இவ்விழாவிற்கு தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் – தனியார் பள்ளிகள், திருமதி. ப.க.செல்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் சாதனைப் படைத்த அனைத்து வெற்றியாளருக்கும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன், பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர் சாதனைகளின் மூலம் தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய தலைநகர் என்று கரூர் பெரும் புகழ் பெற்றுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் புகழாரம் சூட்டினார்.
கரூர் பரணி ஆசிரியர்களின் மிகச்சிறப்பான தன்னலமற்ற தம் கடும் உழைப்பால், தமிழ் பயிற்சியால் சாதனை படைத்த 100 வெற்றியாளர்களும் தமிழக அரசிடம் இருந்து மொத்தமாக ஊக்கத்தொகை ரூ.1,20,60,000/- பெற்று இமாலய சாதனை புரியும் வகையில் சிறப்பாகப் பயிற்றுவித்த முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்களையும் உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் சிலர் தன்னிடம் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான தங்க காசுகளை கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் நடந்த இடம் ராஜபாளையம் உட்கோட்ட பகுதியான முறம்பு என்ற பகுதி என்பதால் இந்த தகவல் ராஜபாளையம் டிஎஸ்பி பசிணா பிவி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்தி குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு (67) விழுப்புரம் மாவட்டம் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் ( 60) இவரது மனைவி அரசாகி ( 56) சென்னையைச் சேர்ந்த சண்முகம்( 61) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிராம் மதிப்புள்ள 11 தங்க காசுகளும் ஏராளமான போலி தங்க காசுகளும் இரண்டு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து டிஎஸ்பி பசினா பிவி யிடம் கேட்டபோது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இவர்கள் குழுவாக சேர்ந்து ஏதாவது ஊரில் பொது இடங்களில் தங்கி கொண்டு கூலி வேலைக்கு செல்வது போல் நடித்து யாரையாவது ஒருவரை தேர்வு செய்து அவர்களிடம் தங்கள் கூலி வேலை செய்யும்போது பூமிக்கு அடியில் சில தங்க காசுகள் கிடைத்ததாகவும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் உண்மையிலேயே இது தங்க காசு தானா என்று சோதனை செய்து தந்து உதவுங்கள் என்று ஒரு ஒரிஜினல் தங்க காசை அவர்களிடம் கொடுப்பதும் அவர்கள் அதை சோதனை செய்து ஒரிஜினல் என்று தெரிந்தவுடன் இன்னும் சில காசுகள் உள்ளது குறைந்த விலை ஏதாவது தாருங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் நாங்கள் மொத்த காசையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறி கிடைத்த பணத்துக்கு ஏற்றவாறு போலியான தங்கக் காசுகளை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.
இதுபோல் இவர்கள் பல இடங்களில் செய்து பல லட்சங்களை சுருட்டிதாக தெரிகிறது எங்களுக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை செய்து கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளோம் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.
வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை..
பாரத நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலை போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக விளங்கியது வந்தே மாதரம் என்ற மந்திர சொல். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உற்சாகத்தை உணர்ச்சியை உத்வேகத்தையும் கொடுத்தது வந்தே மாதரம் என்ற தாரக மந்திரம். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தடி அடியையும் கண்ணீர் புகையையும் துப்பாக்கி குண்டையும் தாங்குவதற்கு மருந்தாக அமைந்தது வந்தே மாதரம் என்ற சொல்.
1892-ல் ஆனந்தமடம் என்ற நாவலில் பக்கிங் சந்தர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டு வெளியிட்ட பாடல் தான் வந்தே மாதரம் என்ற பாடல். இந்த பாடல் பாரதத்தின் மேன்மை உணர்த்தும் உணர்ச்சிகரமான பொருளுடைய கீதம் அது.
இந்தப் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை ஒட்டி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் அது பற்றிய கருத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
வந்தே மாதரம் முழக்கம் நாட்டில் உள்ள எல்லோரையும் ஒன்றிணைத்தது. வந்தே மாதரம் என்றால் தாயை வணங்குகிறோம் என்று அர்த்தம். வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான அரசியல் முழக்கம் அல்ல, பாரத்தாயை போற்றும் பாடல். வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம் என பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசினார்.
மேலும் பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னா முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் எதிர்த்ததால் வந்தே மாதரம் பாடல் பிளவுபட்டது என்பதையும் மதச்சார்பின்மை சமூக ஒற்றுமை என்ற பெயரில் வந்தே மாதரம் பாடலின் வரிகளை நீக்கி காங்கிரஸ் இந்த நாட்டிற்கு அநீதி இழைத்தது என்ற உண்மையை தெளிவாக சுட்டிக்காட்டி பேசினார்.
இதற்குப் பதில் அளித்து பேசிய தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பி ஆ.ராசா அவர்கள் வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் எதிரானது என்றும் அது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் இதனால் தான் காங்கிரஸ் அதை புரிந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் பேசி உள்ளார்.
இந்த நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தாலும் தயவு செய்து தமிழகத்திற்கு கொடுக்காதீர்கள், லண்டனில் இருந்தாவது தமிழகத்தை ஆளுங்கள் என்று மாநாட்டில் தீர்மானம் இயற்றியது திமுகவின் தாய் அமைப்பான திராவிட கழகம். அந்த திராவிட கழகத்திலிருந்து வந்த திமுக “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தியது.
இப்படிப்பட்ட தேசவிரோத கருத்துக்களை பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
தற்போது இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்ட காலத்தில் முஸ்லிம்களை திருப்தி படுத்துவதற்காக காங்கிரஸ் தேசிய மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை தவிர்த்ததும் பல்வேறு சலுகை வாரி வழங்கியும் தாஜா போக்கு கடைப்பிடித்தது. அதனாலேயே இந்த தேசம் மதத்தின் அடிப்படையில் வெட்டி பிளக்கப்பட்டது.
அதேபோல் தமிழகத்திலும் ஓட்டுக்காக முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தாஜா போக்கை கடைப்பிடிப்பதே திமுகவின் வாடிக்கையாக உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பல்வேறு மேடையில் நான் திருவாரூர் தெருக்களில் பாகிஸ்தான் கொடி பிடித்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கத்தி சென்றுள்ளேன் எனவும் மேடையில் பேசி உள்ளார். அதேபோல் OBC மக்கள் 30 சதவீத இட ஒதுக்கீட்டை பிடுங்கி அதிலிருந்து 3.5% இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வாரி கொடுத்தார் கருணாநிதிஅவர்கள். தற்போது அமைந்துள்ள திமுகவின் ஸ்டாலின் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முஸ்லிம்கள் திருமணத்திற்கு சென்றும் இந்துக்களின் திருமண சடங்குகளை அவமானப்படுத்துவதும், இந்துக்களின் புனித தலமான முருகனின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் மலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற மறுத்து தமிழ் கடவுள் முருகனை முருக பக்தர்களையும் அவமானப்படுத்துகிறது.
இப்படி முஸ்லிம்களின் ஓட்டுக்காக காங்கிரசும் திமுகவும் மாறி மாறி அவர்களை தாஜா செய்வதுடன் தேசத்திற்கு எதிரான கருத்துக்களையும் சொல்ல வைக்கிறது.
இந்த பாரத நாட்டை நேசிக்கின்ற ஒவ்வொரு குடிமக்களும் வந்தே மாதரம் பாடலை தனது தேசிய கீதமாக உணர்கின்றனர்.
தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை தாங்கியதும், கோவை சிறையில் வ.உ.சிதம்பரனர் செக்கிழுக்க உத்வேகத்தை கொடுத்ததும், திருப்பூர் குமரன் தடியடி தாங்கி உயிர் நீக்கும் தருவாயிலும் தேசியக் கொடியை கீழே விழாமல் தாங்கிப் பிடிக்க சக்தியை கொடுத்ததும் வந்தே மாதரம் என்று சொல்லும் பாடலும் தான். தேசிய கவி பாரதியார் வந்தே மாதரம் என்ற தொடங்கும் பல்வேறு உணர்ச்சி மிக்க பாடல்களை உருவாக்கி தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கை உருவாக காரணமாக இருந்தார்.
இதெல்லாம் திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார். ஏனென்றால் திட்டமிட்டு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் மறைத்து தமிழ்நாடு பாரத நாட்டிற்கு எதிராக தனிநாடு பிரிவினை கேட்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியது திமுக என்ற உண்மையை திமுக எம்பி ஆ.ராசா எப்படி மறந்திருப்பார்.
தொடர்ந்து தமிழகத்தில் தேசத்திற்கு எதிராக கருத்துக்களை விதைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் திமுக எம்பி ஆ.ராசா அவர்கள். தமிழகம் அன்றும் இன்றும் என்றும் தேசியத்தின் பக்கம் தான். தில்லையாடி வள்ளியம்மையும் முத்துராமலிங்க தேவரும், வாஞ்சிநாதனும் பிறந்த மண் தமிழகம்.
பாரத நாட்டை தெய்வமாக நினைக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக ஏற்கத் தயாராக இருக்கின்றனர்.
முகமது அலி ஜின்னாவிடம் சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்ன காயிதே மில்லத்தின் வாரிசுகளுக்காகவும் அவர்களின் ஓட்டுக்காகவும் வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்கள் மனதை புண்படுத்துகிறது என்று பாராளுமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பேசிய பேச்சுக்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்ந்து ஓட்டுக்காக தேசவிரோத கருத்துக்களை சொல்லும் திமுகவிற்கு தமிழக மக்கள் வருகின்ற தேர்தலில் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…
It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence. In 2017, UNESCO formally acknowledged what rasikas long knew in their hearts, by admitting Chennai into its Creative Cities Network as a City of Music. This badge of honour sparkles anew each December, as sabhas compete with one another in a symphonic display of tradition, talent, and tantalizing tiffin.
Yet, 2025 marks something of a renaissance. Sabhas, those chandeliered sanctums of classical culture, have gone unabashedly digital. The venerable Music Academy, the Lords of Carnatic cricket, now in its 99th year, has opened its portals not to an overnight serpentine queue of rasikas with photo IDs in hand, but to the ethereal click of the online cart. The once-sacrosanct ritual of waiting from the wee hours for the December 2nd bonanza of season tickets has vanished—this Margazhi, not a single physical queue sullies the Academy gates. Technology has pranced in, wielding both convenience and controversy.
But if commerce can evolve, can the concerts themselves remain immune? For decades, the auditorium has been a temple, and the act of physical presence a pilgrimage. Performers swear their music takes flight when eyes meet eyes and applause crackles through the hall like celestial thunder. A sabha connoisseur once put the matter less delicately: “Attendance is divine. And besides, who will replace the holy trinity of Kasi Halwa, Rava Dosa, and filter coffee?” It has long been the unspoken credo that Carnatic music must be experienced with stomach and soul alike.
Yet, this romantic proclamation begs a sobering question: who, truly, fills the seats today? Walk into any major hall and the demographic truth reveals itself—silver hair, slow gait, eyes sparkling with undiminished ardour. These are the rasikas who built Margazhi brick by brick, whose devotion sustained the art through decades of cultural churn. Many of them now find themselves unable to journey into the city’s labyrinth of traffic, logistics, and late-night concerts. There exist countless others, dispersed across India and the world, who ache to be part of this seasonal joy but cannot.
Why must participation be limited by mobility? Why confine Margazhi within walls when it can flow like the Cauvery into waiting homes?
Live streaming—at a reasonable fee—offers a new front-row experience, the best of acoustics without the scramble for seats. Families may gather, young ears may be initiated, and the diaspora may feel the warmth of Chennai’s musical embrace across oceans and time zones. Far from cannibalizing physical attendance, a thriving virtual audience could enlarge revenues and democratize access. And even where tickets sell out on paper, the empty chairs that often dot auditoriums would no longer signify opportunity lost. They would be portals to a global rasika community.
As for the gastronomic ritual so fiercely guarded—fear not. The era of quick commerce ensures that Kasi Halwa and its delectable allies can reach the home audience with almost the same punctuality as an alapana.
Chennai’s Margazhi Season has always been a dialogue between heritage and reinvention. The sabhas must now recognize that the elder rasikas, who once waited in queues under winter skies, deserve to enjoy the art they nurtured from the gentle comfort of home, without guilt and without longing. The music will soar, the devotion will remain undiminished, and perhaps a new kind of divinity will arise—where the living room becomes the kutcheri hall, and every household a connoisseur’s haven.
Margazhi is too magical to be gated. Let it stream, and let the world listen.
கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி அமைப்பினர் ஆளுநரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.
தமிழக அரசின் தலைவர் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியை இந்து முன்னணி மாநிலத் தலைவர் தலைமையில் ஒரு குழு நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், கடந்த சட்டப்பேரவை நடைபெற்ற நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் 17.10.25 அன்று எண்:40/2025 என்ற ஒரு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் கோவிலுக்குச் சொந்தமான அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் அதன் நிதியில் கல்வி நிறுவனங்கள், இசைப்பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா தமிழகத்தில் உள்ள கோவில்களை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற உள்நோக்கம் கொண்டது என்றும், தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்ற கல்வி நிறுவனங்கள் எவையும் முறையாக பராமரிப்பு இன்றியும், நிர்வாகச் சீர்கேடுகளை உடையதாகவும் உள்ளது. இந்த மசோதா காரணமாக மேலும் நிலங்கள் கொள்ளை போவதற்கும், கோவில் நிதியில் ஊழல் நடைபெறவும் வாய்ப்புள்ளது என்று ஐயம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து பல தீர்ப்புகளும், வழிகாட்டுதல் நடைமுறைகளையும் கூறியுள்ளது. அவற்றையும் மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு எண்ணுவது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே மேதகு தமிழக அரசின் தலைவர் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று அந்த ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரங்கள் குறித்து தமிழக தலைவர் ஆளுநர் அவர்களிடம் விசாரித்து அறிந்தார். திருப்பரங்குன்றத்தில் நீதித்துறையை தமிழக அரசு மதிக்கவில்லை. ஜனநாயகத்தின் ஒரு தூணான நீதித்துறையை இழிவுபடுத்தும் நோக்கில் அரசு செயல்படுவது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை சீர்குலைப்பதாகும். இதனால் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். இது மிகுந்த கவலையளிப்பதாகும் என்று ஆளுநரிடம் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
இந்தக் குழுவில் இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில செயலாளர் சேவுகன் ஆகியோர் இருந்தனர்.
எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.
சௌராஷ்டிரர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்றைப் பேசும் கதைகள். இருப்பினும், இந்தியாவிலும் உலகிலும் வெளியாட்கள் கூட அறிந்திராத ஒரு வரலாறு இது. தங்கள் கதையைச் சொல்ல வேண்டிய அவசியம், தங்கள் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும், மேலும் தங்கள் சொந்த எதிர்கால சந்ததியினருக்கு தங்களைப் பற்றிய அறிவின் மரபை உருவாக்க வேண்டும் – இதுவே இந்தப் புத்தகத்தின் பின்னணியில் உள்ள கூட்டு உத்வேகம்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் தொடங்கிய அவர்களின் இடம்பெயர்வுப் பாதையைக் கண்டுபிடிப்பதன் மூலம் கதை தொடங்குகிறது, சூழ்நிலைகள் சௌராஷ்டிரர்களை இந்தியா முழுவதும் சென்று இறுதியாக தமிழ்நாட்டின் மதுரையில் குடியேற கட்டாயப்படுத்தியதால்.
இன்றுவரை ‘பட்னுல்காரர்கள்’ என்று அழைக்கப்படும் இந்த சமூகம், பட்டு மற்றும் பருத்தி இரண்டிலும் அதன் விதிவிலக்கான நெசவுத் திறன்களுக்குப் பெயர் பெற்றது. அவர்களின் தனித்துவமான சுங்குடி வேலை அவர்களின் பெருமை மற்றும் பல வழிகளில், அவர்களின் அடையாளம்.
இந்த புத்தகம் சௌராஷ்டிர மரபுகள், நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றின் நுணுக்கமான ஆவணமாகும்; ஜவுளி உலகில் அவர்களின் நிபுணத்துவம், அவர்களின் தொண்டு பணிகள், சமூக சேவை, தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு, மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களின் சுவாரஸ்யமான ஓவியங்கள் – அவர்கள் அனைவரும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தங்கள் சொந்த சமூகத்தின் எல்லைகளுக்கு அப்பால் சென்று உள்ளனர்.
இந்த புத்தகம் சௌராஷ்டிராக்களின் தனித்துவமான மொழியையும் முன்வைக்கிறது, இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் சாரத்தை படம்பிடிக்கும் ஒரு சிக்கலான, வண்ணமயமான சொற்களின் திரைச்சீலை. இது அவர்களின் உணவு வகைகளுக்கும் பொருந்தும், வழியில் சேகரிக்கப்பட்ட பல வெளிப்புற தாக்கங்களின் விதிவிலக்கான கலவை, அதே நேரத்தில் மையமானது சௌராஷ்டிரா சாராம்சத்தில் உறுதியாக உள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் உணவுக்காக ஒரு முழு அத்தியாயத்தையும் அர்ப்பணித்துள்ளனர், அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பங்கை வெளிப்படுத்தும் கதைகளுடன் சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளை வழங்குகிறார்கள். இது ஒரு வித்தியாசத்தைக் கொண்ட ஒரு வரலாற்று புத்தகம் – இது ஒரு கல்வி புத்தகம் அல்ல. அதற்கு பதிலாக இது பெரும்பாலும் தனிப்பட்ட விவரிப்பு, நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களால் நிரப்பப்பட்டது.
சொல்லும் புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களால் மேம்படுத்தப்பட்டது, இது கதையை வாசகர்களுக்கு உயிர்ப்பிக்கிறது. அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்ரமணியன் ஆகியோர், சௌராஷ்டிரா மக்கள் தங்கள் வேர்களுக்கு உறுதியாக உண்மையாக இருக்கும் அதே வேளையில், தகவமைத்துக் கொள்ளவும், உள்வாங்கவும், உள்வாங்கப்படவும் உள்ள உள்ளார்ந்த திறனை எடுத்துக்காட்டுகின்றனர்.
இந்த புத்தகம், சௌராஷ்டிரா என்றால் என்ன என்பதை, வார்த்தையின் ஒவ்வொரு அம்சத்திலும், அர்த்தத்திலும், இதயப்பூர்வமான கொண்டாட்டமாக வெளிப்படுத்துகிறது.
இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீபம் ஏற்ற வேண்டிய அறநிலையத்துறை நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அலட்சியம் செய்தது. தீபம் ஏற்றுவதை பார்க்க வந்த பக்தர்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து 7. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி மாநிலம் தழுவிய அறவழிப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இடங்களில் காவல்துறையினர் தங்களது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி இந்து முன்னணி பொறுப்பாளர்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
படித்த சில காவல்துறை அதிகாரிகளே இந்து முன்னணி பொறுப்பாளர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி இருப்பது காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பொய்க்க வைத்திருக்கிறது.
தென்காசி, அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவே இந்து முன்னணி பொறுப்பாளர்களை காவல்துறை வீட்டு காவலில் வைத்தது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
கோவை செல்வபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒரு மண்டபத்தில் காவலில் வைத்தனர். அந்தப் பகுதியின் உதவி ஆணையாளர் திரு. மகேஸ்வரன் அவர்கள் இந்து முன்னணி பொறுப்பாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார். சதீஷ் என்ற இளைஞரை காலால் உதைத்தும் கன்னத்தில் அறைந்து ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
சதீஷ் என்ற இந்து முன்னணி பொறுப்பாளருக்கு அவர் தாக்கியதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உதவி ஆணையாளர் அடித்ததை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஒவ்வொருவருடைய அலைபேசியையும் பிடுங்கி அந்த வீடியோவை அழித்துள்ளார். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யலாமே தவிர அடிக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் தந்தது என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை உதவி ஆணையாளராக செயல்படாமல் திமுகவின் மாவட்ட செயலாளராக செயல்பட்டு இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அருணாச்சலம் என்கின்ற ராமர் அவர்களை ASP அருண் அவர்கள் மிக பலம் கொண்டு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு வீடு விரும்பினார். அறவழி போராட்டம் நடத்தியவர்களை ரவுடிகள் போல் நடத்திய விதம் அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை மாநகரில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றும் சுப்ரமணியம் அவர்கள் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ரித்தீஷ் என்பவரை மூக்கில் குத்தியதோடு மட்டுமல்லாமல் மிகத் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
மதுரை புறநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய கிசான் சங்க தேசிய துணைத் தலைவர் திரு. பெருமாள் அவர்களின் சட்டையை கிழித்துள்ளனர். முதியவர் என்றும் பாராமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்.
வேலியே பயிரை மேய்வது போல சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையினரே நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என கூறிய இந்து முன்னணியிர் நிதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக புதுக்கோட்டையில் காவல்துறை அதிகாரி சுகுமார் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களை பார்த்து தீபம் ஏற்ற வக்கு இல்லை ஆர்ப்பாட்டம் பண்ண வந்து விட்டீர்களா? என்று தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் மரக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரியமங்கலம் மண்டல் பொறுப்பாளர் தமிழ்வாணன் அவர்களை காவல் உதவி ஆய்வாளர் தனபால் என்பவர் பலமாக தாக்கி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
கமுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல் துறையினரால் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்து செல்லும் போது கமுதி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் காவல்துறை உதவியோடு இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளை மிரட்டும் வகையில் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியும் இந்து மக்களை இழிவு படுத்தியும் மிரட்டும் வகையில் ஈடுபட்டார். இதனையும் காவல்துறை பார்த்துவிட்டு வாய்மூடி மௌனம் காத்திருக்கிறது.
இப்படியாக தமிழகத்தில் பல பகுதிகளில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்று முஸ்லிம் அமைப்புகள் பல இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தினர். பாபர் மசூதி பிரச்சனை என்பது முடிந்து போன ஒன்று. அதற்கு தமிழக அரசும் காவல்துறையும் அனுமதி வழங்கி பாதுகாப்பும் வழங்கி இருக்கிறது.
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுங்கள் என முருகபக்தர்களோடு போராடியதற்கு இந்து முன்னணியினரை தாக்கி இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்பாக கடையநல்லூரில் நடந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆர்ப்பாட்டத்தில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பொறுப்பாளரை இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை.
திருப்பரங்குன்றம் தீபம் சம்பந்தமாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஜி. ஆர் சுவாமிநாதன் அவர்களை வாடா போடா என்று ஒருமையில் பேசிய பியூஸ் மனுசை இதுவரை கைது செய்ய காவல்துறைக்கு திராணியில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாகப் போராடிய பக்தர்கள் மீது அடக்கு முறையை ஏவுகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. நியாயமான ஆர்ப்பாட்டம் போராட்டங்களுக்கு கூட அனுமதி வழங்குவதில்லை. மீறி போராடினால் தமிழக அரசின் சர்வாதிகார போக்கால் நசுக்கப்படுகின்றனர்.
இந்து முன்னணி பொறுப்பாளர்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லையெனில் சட்டப் போராட்டமும், அறப் போராட்டமும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு முன்னேற்றத்தை விரும்பாத பகைக் கூட்டங்களின் தீய சதிகள் ஒருபுறம், பயங்கரவாதிகளின் அழிவுத் திட்டங்கள் மறுபுறம் என்று தேசத்தை அலைக்கழிக்கையில், அவற்றைக் கண்டுபிடித்து, தேசத்தைக் காத்து வரும் உயர்ந்த ஆட்சியமைப்பை ‘நமோ’ என்று வணங்கிப் பாராட்டத்தான் வேண்டும். தேசபக்தி, தேச நலன் என்ற விருப்பம் கொண்ட யாரானாலும் இந்த தேசத்தின் குடிமகனாக இருந்தால் இதனை ஏற்பார்கள்.
அண்மையில் டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக இருக்கையில், அவை அனைத்தையும் கண்டறிந்து அந்தக் குற்றங்களைத் தடுத்த நம் உளவுத் துறையையும் பாதுகாப்பு அமைப்பையும் பாராட்ட வேண்டும்.
கண் மூடாமல் இரவும் பகலும் இமயம் முதல் குமரி வரைத் தேடி பகை நாடுகளின் வியூகங்களைக் கழுகுப் பார்வையோடு கவனித்து சிரமம் பாராமல் உழைக்கும் வலுவான பாதுகாப்புத் துறையை ஏற்பாடு செய்து, அவர்களை உற்சாகப்படுத்தும் தேசபக்தியே ஒரு உருவமெடுத்து இந்த தேசத்தை ஆண்டுவரும் தருணம் இது.
அதே நேரம், ஒவ்வொரு இந்தியனும் கவனிக்கவேண்டிய சில செய்திகள் உள்ளன. துருக்கி போன்ற பகை நாடுகளின் மதவெறி பிடித்த பயங்கரவாதிகளின் வியூகத்தால் காஷ்மீரில் வடிவம் பெற்ற வன்முறையாளர்கள், நம் தேசமெங்கும் பல இடங்களில் தம் நிலையங்களை ஏற்படுத்திக் கொண்ட செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏழ்மையும் பின்தங்கிய நிலையும் மட்டுமே மத வெறியர்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ற வாதம் உண்மையல்ல என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. தம்முடைய மதத்தில் போதிக்கப்படும் ‘பிற மத வெறுப்பு’ மட்டுமே தம் தர்மம் என்ற கொள்கையே இவற்றின் பின் உள்ள உண்மையான துண்டுதல்.
அதனைச் சிறுவயது முதல் போதித்து, மத வெறியர்களாக வளர்த்து, குறிப்பிட்ட ஆண்டிற்குள் இந்த தேசத்தையும் உலக நாடுகளையும் தம் மத தேசங்களாக மாற்ற வேண்டும் என்ற சதித் திட்டத்தோடு இத்தகு வன்முறைகள் நடந்துவருகின்றன.
ஹிந்து கோவில்களில் தீர்த்தத்திலும் பிரசாதத்திலும் கலப்பதற்கு மருத்துவக் கும்பல் ஒன்று விஷப் பொருளைத் தயார் செய்து வருவதும், உயர் கல்வி கற்றவர்கள் கூட மத மூடநம்பிக்கைக்கு உட்பட்டு தேசத்தின் பல இடங்களில் யூகிக்க இயலாத வகையில் ஒன்றுகூடுவதும் அதிர்ச்சியை விளைவிக்கின்றன.
தேசப் பிரிவினையின் போது அதற்குக் காராணமான மதத்தவர்கள், துண்டாடப்பட்ட பகுதியைத் தம் மத நாடாக அறிவித்துக் கொண்டபோது, மீதியிருந்த பகுதியை ஹிந்து தேசமாக அறிவிக்காமல் போனது கடுந்தவறு. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இங்கேயே குடியேறி அப்போதிலிருந்து தேப் பற்றில்லாமல், இந்த தேசத்தையும் தம் மத தேசமாக மாற்றுவதற்குச் சதித் திட்டம் தீட்டி பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்று, ஹிந்துக்களைக் கொல்வதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்பது தெளிவு.
வாக்கு வங்கி அரசியலின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு இருக்கிறது. தேசியவாத அரசாங்கம் அனைவரின் நலனுக்காகவும் முயற்சித்து வருகையில், தம்முடைய அழிவுத் திட்டம் ஈடேராது என்று உணர்ந்து இந்த நல்ல ஆட்சிக்கு மதச் சாயம் பூசி, தம்மைச் சார்ந்தவர் ஆளும் மாநிலங்களில் ஹிந்து எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள். பல இடங்களில் அரசியல்வாதிகளின் துணையோடு கோவில்களில் உத்யோகிகளாகவும், பொருட்களை விநியோகிப்பவராகவும், சுற்றுப்புறக் கடைகளின் உரிமையாளராகவும் கோவில்களைச் சுற்றிலும் கூட்டமாகப் பலர் நிலைபெற்று வருகின்றனர்.
பார்ப்பதற்கு முற்போக்குவாதிகள் போலவும், நல்லவர் போலவும் தோற்றமளித்து வாய்ப்பும் தேவையும் வரும்போது தம் மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் துணையும் அளிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு தேசம், முன்னேற்றம், வளர்ச்சி போன்றவற்றை விடத் தம் மதம் நிலைபெறவேண்டும் என்பதே முக்கியம். பிற மதங்களையும் பிற மதத்தவரையும் அழிப்பதே அவர்களின் நோக்கம்.
அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கும்பல்கள் சற்றும் வெட்கமின்றி நாட்டு நலனையும் பொருட்படுத்தாமல் நடந்து கொள்கின்றன. “எங்கள் கட்சியால் உங்கள் மதம் நன்றாக வளர்கிறது” என்று ஒரு அரசியல் கட்சி கூறுகையில், “எங்கள் மதத்தவரால் உங்கள் கட்சி வென்றது” என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகு அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை, மானமில்லை.
ஹிதுக்களனைவரும் விழித்துக் கொண்டு ஜாதி, பிரிவு, ஆத்திகர், நாத்திகர் என்ற வேறுபாடுகளை விட்டு ஒன்றிணைய வேண்டும். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீடுகளிலும் கோவில்களிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடுவதற்கு வன்முறை மதவாதிகள் பின்வாங்க மாட்டார்கள். எங்கெங்கே பயங்கரங்களையும் கொலைகளையும் நடத்த வேண்டும் என்று முன்னதாகவே எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு வருகிறார்கள்.
அண்டை நாடான பங்களாதேஷ் போலவே சதிகளை நிறைவேற்றுவதற்குத் திட்டம் தீட்டி வருவதைப் பார்க்கிறோம். அரசாங்கத்தைச் சீர்குலைத்து தாம் பொம்மலாட்ட பொம்மைகளாக ஆட்டி வைக்கும் மனிதர்களை நிறுத்துவதற்குச் சதி செய்யும் வெளிநாட்டுத் திட்டத்திற்கு இவர்கள் துணை போகிறார்கள். இந்தக் கைப்பாவைகள் கிழிக்கும் சாதனைகளான தேச துரோகச் செயல்கள், அசட்டை, மூடத்தனம் போன்றவை ஆபத்தான நிலையை எட்டியுள்ளன.
மத வெறியர்களால் நடக்கும் கொடுமைகளுக்கு ஹிந்துக்கள் மட்டுமின்றி பலரும் பலியாகிறார்கள். முன்னேற்றத்திக்குத் தடை ஏற்பட்டால் குடிமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அமைதியாகவும் சுகமாகவும் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்பும் யாரானாலும் சரி, மத பயங்கரவாதத்தை எதிர்க்கவேண்டும். இன்னும் பல வியூகங்களோடு பல இடங்களில் குடியேறி இருக்கும் பயங்கரவாதிகள் எல்லோரும் பிடிபடுவதற்கு ஒவ்வொருவரும் உதவவேண்டும். உளவுத் துறையின் கண்காணிப்புத் தேடல் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பவேண்டும்.
எல்லாவற்றையும் விட, தேசத்தைக் காக்கும் தெய்வீக சக்தியும், தவ யோக பலமும் மேலும் பெருக வேண்டும். அசுர சக்திகளின் திமிரைப் பல முறை அடக்கிய பராசக்தியின் பராக்கிரமம் மீண்டும் மீண்டும் இந்தப் புண்ணிய பாரத பூமியைக் காத்தருள வேண்டும்.
கார்த்தீகை தீபம் ஏற்ற அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது . இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரை பழங்காநத்தம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்து இந்து முன்னணி தொண்டர்கள் குவிந்திருந்தனர். 50 பெண்கள் உள்பட 300 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இந்து முன்னணி அமைப்பினரிடம் ஆர்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமலும் , அதற்கு அனுமதி வழங்காததைக் கண்டித்தும் தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர் .
திருச்சியில்:
திருச்சி , மரக்கடை பகுதியில் , ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லாததால் , மரக்கடை பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமின்றி அந்தப் பகுதியில் வந்தவர்களையும் போலீசார் வேனில் ஏற்றினர் . ஹிந்து முன்னணி மற்றும் பாஜக.,வினர் கோஷமிட்டபடி வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
கோவையில்…
தமிழக அரசை கண்டித்து கோவையில், ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாததால், அவர்களை போலீசார் கைது செய்தனர் . செட்டி வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சியினர் , சாலையில் அமர்ந்து , ‘தி.மு.க,வை தடை செய்ய வேண்டும்’ என கோஷமிட்டனர். தொடர்ந்து ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட, நாற்பதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் .
சென்னையில்:
சென்னையில் கோயம்பேடு நூறு அடி சாலையில் , ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், கனல் கண்ணன் , பாஜக,, மன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உள்பட இருநூறு க்கும் மேற்பட்டோரை அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்தனர். சிலர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்ளையும் போலீஸார் கைது செய்தனர் .
காசி தமிழ் சங்கமம் என்பது கங்கைக்கும் காவிரிக்கும்இடையிலான ஞானச் சந்திப்பு!
– டாக்டர் அரவிந்த் மிஸ்ரா ‘ஹர்ஷ்’
சிவன் விரும்பும் இமயமலையில் தோன்றி 2525 கிலோ மீட்டர் பாதையை உள்ளடக்கிய கங்கை நதியும், தெற்கில் உள்ள பிரம்மகிரி மலைகளில் தோன்றி 760 கிலோமீட்டர் பாதையில் கலாசாரத்தைப் பாதுகாக்கும் காவிரி நதியும் ஒருபோதும் நேரடியாக சந்திப்பதில்லை. அவை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும், அவற்றின் ஞானச்சந்திப்பு பண்டைய காலங்களிலிருந்தே நிகழ்ந்து வருகிறது. வட இந்தியாவின் பெரும்பகுதியை நாகரிகப்படுத்தும் கங்கை நதியும், தென்கிழக்கின் முக்கிய பகுதிகள் வழியாக மத ஓட்டத்தை நடத்தும் காவிரியும் பாரம்பரிய நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.
காசி ஏன் தென்னிந்தியாவிற்கு வெளியே தமிழ் சங்கமாக இருந்தது? இந்த கேள்விக்கான எளிய பதில் என்னவென்றால், காசியில் வசித்தவர் பண்டைய காலங்களில் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கு அடித்தளமிட்டார். இந்த உண்மைக்கான நிரூபிக்கப்பட்ட பதில்கள் நமது மத நூல்களில் மட்டுமல்ல, அந்த நிகழ்வுகளுக்கான சான்றுகளும் இன்று கிடைக்கின்றன.
இந்தக் கேள்விக்கான தர்க்கரீதியான பதில், காசியின் அறிஞர்கள் மத்தியில் பிரபலமான “அகஸ்திய யாத்திரை” என்ற சொற்றொடரில் உள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த சொற்றொடர் காசியில் வசித்த அகஸ்திய முனிவருடன் தொடர்புடையது. “அகஸ்திய யாத்திரை” என்பது ஒருபோதும் திரும்பி வராத பயணம் என்று பொருள். புகழ்பெற்ற அறிஞர்களின் மறைவு, மரணம் அல்லது துறவு என்று குறிப்பிடப்படுவதில்லை. மாறாக “புறப்பாடு” என்று அகஸ்திய யாத்திரையில் குறிப்பிடப்படுகிறது.
இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை என்னவென்றால், அவர்களின் ஆன்மா இரட்சிப்புக்கான பயணத்தில் புறப்பட்டு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சிக்குத் திரும்பாது. காசியிலிருந்து தெற்கே தனது முடிவில்லா பயணத்தை அகஸ்திய முனிவர் தொடங்கியிருக்காவிட்டால், தென்னிந்தியாவின் பக்திமிக்க கலாச்சாரத்தின் அடித்தளம் ஒருபோதும் அமைக்கப்பட்டிருக்காது. 3 தசாப்தங்களுக்கு முன்பு காசியில் அகஸ்திய மேளாவிற்கு பிரச்சாரம் செய்த மூத்த சிந்தனையாளரான விஜய் நாராயண், தெற்கில் அகஸ்திய முனிவர் செய்த மகத்தான செயல்களை வடக்கத்திய மக்களுக்கு நினைவூட்டுவதற்காக, அகஸ்திய புராணத்தை மேற்கோள் காட்டி, தெற்கின் வளர்ச்சியில் வடக்கின் பங்கு பற்றிய சுருக்கமான விளக்கத்தை வழங்குகிறார்.
வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே பாலத்தை முதலில் கட்டியவர் அகஸ்திய முனிவர் என்று அவர் விளக்குகிறார். தற்போது சோன்பத்ரா என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து தெற்கே செல்லும் பாதை ஒன்றே. இங்கே, 2 புராண அத்தியாயங்கள் அவசியமாகின்றன. அகஸ்திய முனிவர் 2 அத்தியாயங்களின் மையத்திலும் இருக்கிறார். ஒன்று அவரது மனைவி லோபமுத்ராவுடன் தொடர்புடையது. மற்றொன்று விந்திய மலைகளுடன் தொடர்புடையது. தற்போது அகஸ்தியகுண்ட சுற்றுப்புறம் அமைந்துள்ள காசியில், ஆனந்த் கனனின் அதே பகுதியில், அகஸ்திய முனிவரின் ஆசிரமம், அவர் நிறுவிய சிவலிங்கம் மற்றும் அவர் கட்டிய குளம் ஆகியவை இருந்தன. சிவலிங்கம் தற்போதும் உள்ளது, ஆனால் குளம் மறைந்துவிட்டது. அதன் மீது வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
எப்படியிருந்தாலும், நாம் புராண சகாப்தத்தைப் பற்றிப் பேசுகிறோம். லோபமுத்ரா, விந்திய மலைகள் மற்றும் தெற்கின் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கோண தொடர்பு குறித்து நாங்கள் கவனம் செலுத்தி வந்தோம். காத்திருக்கும் 2 உறவினர்களை விட்டுவிட்டு, அகஸ்திய முனிவர் கன்னியாகுமரி அருகில் வந்தார். அவர் வந்த இடம் கன்னியாகுமரியில் இருந்து 3 கிலோமீட்டர் வடக்கே அகஸ்தீஸ்வரம் என்ற பெயரில் இன்றும் உள்ளது. அகஸ்திய முனிவர் தவம் செய்து கடலை வற்றச் செய்த இடம் இது. இந்த இடம் தென்னிந்தியர்களிடையே ஒரு புனித யாத்திரைத் தலமாகப் போற்றப்படுகிறது.
அங்கு வந்த பிறகு, உள்ளூர் நிலைமைகளைக் கவனித்து மதிப்பிட்ட பிறகு, சமஸ்கிருதத்தின் பரவலை விரைவுபடுத்துவதற்காகவும், அதன் இலக்கணத்தை விரிவுபடுத்துவதற்காகவும் அவர் முதலில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கினார். இங்கிருந்து, வேதங்கள் மற்றும் வேதாந்தம் போன்ற ஆழமான பாடங்களின் கலாச்சார மற்றும் மதப்பயணம் தென்னிந்தியாவில் தொடங்கியது. காலப்போக்கில், தென்கிழக்கில் காவிரி கரையில் இந்த கலாச்சாரம் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் செழித்தது. அவர் அங்கு திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரது குழந்தைகள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அகஸ்திய முனிவர் தெற்கே புறப்படுவதற்கு முன்பு காசியில் நடந்த முந்தைய சம்பவத்தை அறிந்து கொள்வதும் முக்கியம். சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்காக அகஸ்திய முனிவர் ஒரு பயணத்தைத் தொடங்க முடிவு செய்தபோது, அவரது மனைவி முதலில், “நீங்கள் சென்ற பிறகு நான் இங்கே என்ன செய்வேன்?, நான் எப்படி வாழ்வேன்?” என்று கேட்டாள். அப்போது அகஸ்திய முனிவர் அவளை ஒரு கற்சிலையாக மாற்றினார். தான் திரும்பிய பிறகு அவளை மீண்டும் உயிர்ப்பிப்பதாக உறுதியளித்தார். லோபமுத்ராவை ஒரு கல் சிலையாக மாற்றிய பிறகு, அகஸ்திய முனிவர் தான் நிறுவிய சிவலிங்கத்தின் முன் நந்திக்கு பதிலாக அவளை வைத்தார். இந்தியாவில் சிவலிங்கத்தின் முன் நந்தி வைக்கப்படாத ஒரே சிவன் கோவில் இதுதான்.
காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்ட சில காலத்திலேயே ராணி அகில்யாபாய் ஹோல்கரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதற்குள், லோபமுத்ராவின் அசல் சிலை மறைந்துவிட்டது. மறுசீரமைப்பின் போது, பாரம்பரியத்தின் படி, ராணி அகில்யாபாய் ஹோல்கர், லோபமுத்ராவின் புதிய சிலையை நிறுவினார். விந்திய மலைகளின் உயரம் அவர்களின் தெற்குப் பயணத்திற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. அகஸ்திய முனிவர் தனது சீடர் விந்தியாவை வணங்கச் சொன்னார். மேலும் அவர் திரும்பும் வரை குனிந்து இருக்கும்படி கட்டளையிட்டார்.
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.