Home Blog Page 36

ஆபரேஷன் சிந்தூர் உள்பட 2025ன் சாதனை மிகு தருணங்கள்; மனதின் குரலில் நினைவுகூர்ந்த பிரதமர்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் (129ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 28-12-2025
தமிழில்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம்.  சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, என் மனதில் ஓராண்டுக்கால நினைவுகள் நிழலாடுகின்றன – தேசத்தை ஒன்றாக இணைத்துவைத்த பல காட்சிகள், பல விவாதங்கள், பல சாதனைகள்.  2025ஆம் ஆண்டின் பல கணங்கள் பாரத நாட்டு மக்களான நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன. 

தேசத்தின் பாதுகாப்புத் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை, அறிவியலின் பரிசோதனைக்கூடங்கள் தொடங்கி உலகின் பெரும் மேடைகள் வரை.  பாரதம் அனைத்து இடங்களிலும் தனது வலுவான முத்திரையைப் பதித்தது.  இந்த ஆண்டு ஆப்பரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையின் அடையாளமாக ஆனது.  பாரதம் தனது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ளாது என்பதை உலகமே பார்த்தது.  ஆப்பரேஷன் சிந்தூரின் போது தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் பாரத அன்னையிடம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் காட்சிகள் காணக் கிடைத்தன.  மக்களெல்லோரும் அவரவருக்கு உரித்தான வகையிலே தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

நண்பர்களே, வந்தே மாதரத்திற்கு 150 ஆண்டுகள் நிறைவான வேளையிலும் கூட இதே உணர்வு மேலோங்கியது.  ‘#VandeMataram150’ என்பதில் உங்கள் ஆலோசனைகளையும், செய்திகளையும் அனுப்பித்தாருங்கள் என்று உங்களிடம் வேண்டிக் கொண்டேன்.  நாட்டுமக்கள் இந்த இயக்கத்தில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள்.

நண்பர்களே, 2025ஆம் ஆண்டு விளையாட்டுக்கள் என்ற வகையிலும் கூட நினைவில் கொள்ளத்தக்க ஆண்டாக இருந்தது.  நமது ஆடவர் கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி. சேம்பியன்ஸ் கோப்பையை வெற்றி பெற்றார்கள்.  பெண்கள் கிரிக்கெட் அணியும் கூட, முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றெடுத்தார்கள்.  பாரதத்தின் பெண்கள், பார்வைத்திறனில்லா மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தார்கள்.  ஆசியக் கோப்பை டி20 போட்டிகளிலும் கூட மூவண்ணத்தின் வண்ணங்கள் பளிச்சிட்டன.  மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றதன் மூலம், தன்னம்பிக்கைக்கு முன்னால் எந்தத் தடையும் தடையல்ல என்பது நிரூபணமாகியிருக்கிறது. 

விஞ்ஞானம் மற்றும் விண்வெளித் துறைகளிலும் கூட பாரதம் மிகப்பெரிய எல்லையைத் தாண்டியிருக்கிறது.  சுபான்ஷு சுக்லா அவர்கள் தாம் சர்வதேச விண்வெளி நிலையம் வரை சென்ற முதல் இந்தியர் ஆவார்.  சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்போடு தொடர்புடைய பல முயற்சிகளிலும் கூட 2025ஆம் ஆண்டு தனது அடையாளத்தைப் பதித்திருக்கிறது.  பாரதத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை இப்போது 30க்கும் அதிகமாகி இருக்கிறது.  2025ஆம் ஆண்டிலே நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பாரதத்தின் ஈடு இணையற்ற பாரம்பரியம் அனைத்தையும் ஒன்றுசேரப் பார்க்க முடிந்தது.  ஆண்டின் தொடக்கத்திலே பிரயாக்ராஜிலே மகாகும்ப மேளாவின் ஏற்பாடுகள், உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

ஆண்டின் இறுதியிலே அயோத்தியிலே, இராமர் ஆலயத்தில் கொடியேற்றம் நிகழ்ந்து, இந்தியர்கள் அனைவரின் உள்ளங்களிலும் பெருமையை நிறைத்தது.  சுதேசி தொடர்பாக அனைவரின் உற்சாகமும் மிகத் தெளிவாகக் காணப்பட்டது.  இந்தியர்களின் வியர்வை சிந்தப்பட்ட, இந்தியர்களின் உழைப்பு மணம் வீசும் பொருளையே மக்கள் வாங்குகிறார்கள்.  2025ஆம் ஆண்டு பாரதத்திற்கு, மேலும் தன்னம்பிக்கையை அளித்தது என்று நாம் பெருமையோடு கூறிக் கொள்ளலாம்.  இந்த ஆண்டு இயற்கைப் பேரிடர்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது உண்மைதான், பல துறைகளிலும் சந்திக்க வேண்டிவந்தது.  இப்போது 2026ஆம் ஆண்டிலே புதிய நம்பிக்கைகள், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேகிச் செல்ல தேசம் தயாராக இருக்கிறது. 

எனதருமை நாட்டுமக்களே, மிகுந்த நம்பிக்கையோடு உலகம் இன்று பாரதத்தை உற்று கவனிக்கிறது.  பாரதத்தின் மீது உலகு வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய காரணம் என்னவென்றால், நமது இளைஞர்கள் சக்திதாம்.  விஞ்ஞானத் துறையிலே நமது சாதனைகள், புதியபுதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தின் பரவல் ஆகியவை அனைத்தும் உலக நாடுகளை மிகவும் கவர்ந்திருக்கின்றன. 

நண்பர்களே, பாரதத்தின் இளைஞர்கள் எப்போதுமே புதியது எதையாவது கண்டுபிடிக்கும் பேரார்வம் உடையவர்களாக இருக்கும் அதே வேளையில், விழிப்புணர்வு உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.  தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை எப்படி இன்னும் அதிகப்படுத்த முடியும் என்று எப்போதும் என்னுடைய இளைய நண்பர்கள் என்னிடம் வழக்கமாகக் கேட்பார்கள்.  எப்படி தங்களுடைய எண்ணங்களைப் பகிரலாம் என்று கேட்பார்கள்.  என் முன்பாக எப்படி அளித்தல் மூலமாகத் தங்களுடைய எண்ணங்களை முன்வைக்கலாம் என்றும் பலர் வினவுவார்கள். 

நம்முடைய இளைய நண்பர்களின் இந்த பேரார்வத்திற்கான விடை தான் விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக்.  கடந்த ஆண்டு இதன் முதல் பதிப்பு நடந்தது, இப்போது சில நாட்களுக்குப் பிறகு அதன் இரண்டாவது பதிப்பு நடக்கவிருக்கிறது.  அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படும்.  இதே நாளன்று இளம் தலைவர்கள் உரையாடலும் நடக்கும், நானும் கூட கண்டிப்பாக இதில் பங்கேற்பேன். இதிலே நமது இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகள், உடலுறுதி, ஸ்டார்ட் அப், விவசாயம் போன்ற மகத்துவம்வாய்ந்த விஷயங்கள் குறித்து தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்பாக நான் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன். 

நண்பர்களே, இந்த நிகழ்ச்சியிலே நமது இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்து வருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.  சில நாட்கள் முன்பாகத் தான் இதோடு தொடர்புடைய ஒரு வினாவிடைப் போட்டி நடந்தது.  இதிலே 50 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  ஒரு கட்டுரைப் போட்டியும் நடந்தது, இதிலே மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.  இந்தப் போட்டியிலே தமிழ்நாடு முதல் இடத்தையும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

நண்பர்களே, இன்று தேசத்திலே இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் புதியபுதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து வருகின்றன.  இளைஞர்கள் தங்களுடைய தகுதி-ஆர்வங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த உதவும் பல தளங்கள் மேலும் உருவாகி வருகின்றன.  இப்படி ஒரு தளம், கருத்துக்களும் எண்ணங்களும், செயல்வடிவம் பெறுகின்ற ஒரு தளம் என்றால் அது தான் ‘Smart India Hackathon’.

நண்பர்களே, ‘Smart India Hackathon 2025’ இதன் நிறைவு நிகழ்ச்சி இந்த மாதம் தான் நடந்தது.  இந்த ஹேக்கத்தானின் போது 80க்கும் அதிகமான அரசுத் துறைகளின் 270க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாணவர்கள் ஈடுபட்டார்கள். மாணவர்கள் அளித்த தீர்வுகள், நிஜ வாழ்க்கையின் சவால்களோடு தொடர்புடையவையாக இருந்தன.  

எடுத்துக்காட்டாக போக்குவரத்துப் பிரச்சினை.  இது தொடர்பாக இளைஞர்கள்  ‘Smart Traffic Management’ அதாவது புத்திசாலித்தனமான போக்குவரத்து மேலாண்மையோடு தொடர்புடைய பல சுவாரசியமான கோணங்கள் பகிரப்பட்டன.  நிதிசார் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைதுகள் போன்ற சவால்களுக்கான தீர்வுகளுக்கும் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.  கிராமங்களில் டிஜிட்டல் வங்கிச் சேவைகளுக்கான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்கள்.  பல இளைஞர்கள் விவசாயத் துறையின் சவால்களுக்கான தீர்வு காண்பதிலே ஈடுபட்டிருந்தார்கள். 

நண்பர்களே, கடந்த 7-8 ஆண்டுகளிலே ‘Smart India Hackathon’லே, 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், 6,000த்துக்கும் அதிகமான நிறுவனங்களும் பங்கெடுத்தன. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கும், உகந்த தீர்வுகளை அளித்திருக்கிறார்கள்.  இவை போன்ற ஹேக்கத்தான்கள், அடிக்கடி நடந்து வருகின்றன.  இந்த ஹேக்கத்தான்களில் நீங்களும் கண்டிப்பாக பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் எனது இளைய நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 

நண்பர்களே, இன்றைய வாழ்க்கை தொழில்நுட்பம் சார்ந்து இருக்கிறது, எந்த மாற்றங்கள் ஏற்பட பல நூற்றாண்டுகள் பிடித்ததோ, அவையெல்லாம் இன்று சில ஆண்டுகளிலேயே நடந்து விடுவதை நாம் பார்த்து வருகிறோம்.  ரோபோக்கள் மனிதர்களின் இடத்தைப் பிடித்து விடுமோ என்றுகூட பல வேளைகளில் மக்கள் கவலையைத் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட மாறிவரும் காலத்திலே மனித மேம்பாட்டின் பொருட்டு நாம் நமது வேர்களோடு இணைந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.  நமது அடுத்த தலைமுறை புதிய சிந்தனைகளோடும், புதிய வழிமுறைகளோடும் தனது கலாச்சாரத்தின் வேர்களோடு, நன்கு ஒன்றரப் பிணைந்திருப்பதைக் காணும் வேளையில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

நண்பர்களே, நீங்கள் Indian Institute of Science இந்திய அறிவியல் கழகத்தின் பெயரைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆய்வு மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்பு ஆகியன இந்த நிறுவனத்தின் அடையாளங்கள்.  கல்விக்கும் ஆய்வுக்கும் இடையே இசைக்கும் ஓரிடம் வேண்டும் என்று சில ஆண்டுகள் முன்பாக இங்கே சில மாணவர்கள் உணர்ந்தார்கள். அவ்வளவு தான்.  அதிலிருந்து இசை வகுப்பு தொடங்கியது. பெரிய மேடை இல்லை, பெரிய பட்ஜெட்டும் இல்லை.  மெல்லமெல்ல இந்த முன்னெடுப்பு அதிகரித்துக் கொண்டே சென்று, இன்று இதை நாம் ‘Geetanjali IISc’  என்ற பெயரால் அறிகிறோம்.  இப்போது இது ஒரு வகுப்பு மட்டுமல்ல, வளாகத்தின் ஒரு கலாச்சார மையம்.  இங்கே இந்துஸ்தானி பாரம்பரிய இசை இருக்கிறது, மக்களின் பாரம்பரிய இசை இருக்கின்றது, பாரம்பரிய முறைகள் இருக்கின்றன, மாணவர்கள் இங்கே அமர்ந்து கொண்டு சாதகம் செய்யலாம்.  பேராசிரியரும் உடன் அமர்வார், அவர்களுடைய குடும்பத்தாரும் இணைகிறார்கள்.  இன்று 200க்கும் மேற்பட்ட மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள்.  இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், யார் அயல்நாடுகளுக்குச் சென்று விட்டார்களோ, அவர்களும் கூட இணையவழியில் இணைந்து இந்தக் குழுவோடு தொடர்பை வலுவாக வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களே, நமது வேர்களோடு இணையும் இந்த முயற்சி, பாரதத்தோடு மட்டும் கட்டுப்பட்டு இருக்கவில்லை.  உலகின் பல்வேறு இடங்களிலும், அங்கே வசிக்கும் பாரத நாட்டவர்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றார்கள்.  மேலும் ஒரு எடுத்துக்காட்டு, நமது தேசத்திற்கு வெளியே நம்மை இட்டுச் செல்கிறது, அந்த இடம் தான் துபாய்.  அங்கே வசிக்கும் கன்னடக் குடும்பங்கள் தங்களிடத்தில் ஒரு வினாவை எழுப்பிக் கொண்டார்கள் – நமது குழந்தைகள் தொழில்நுட்ப உலகில் முன்னேறிக் கொண்டு என்னமோ இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய மொழியை விட்டு விலகிச் செல்கிறார்களோ?  இங்கிருந்து தொடங்கியது தான் கன்னடப் பாடசாலை.  இந்த முயற்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு கன்னடம் படித்தல், எழுதுதல், பேசுதல், கற்றல் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.  இன்று இதோடு ஓராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இணைந்திருக்கிறார்கள்.  உண்மையிலே, கன்னட நாடு-நுடி, நம்ம ஹெம்மே.  அதாவது கன்னட பூமியும் மொழியும், நம்முடைய பெருமிதம் என்பதே இதன் பொருள்.

நண்பர்களே, ஒரு பழமொழி ஒன்று உண்டு.  மனம் போல் வாழ்வு.  இந்த முதுமொழியை மீண்டும் உண்மை என நிரூபித்திருக்கிறார்கள் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞரான மோயிராங்க்தேம் சேட் அவர்கள்.  இவர் 40 வயதுக்கும் குறைவானவர்.  மோயிராங்க்தேம் அவர்கள் மணிப்பூரின் மிகத் தொலைவான பகுதியில் வசிக்கிறார், இங்கே மின்சாரம் தொடர்பான பெரும்பிரச்சினை இருந்து வந்தது.  இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் இவர் உள்ளூர்மட்டத்திலேயே ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார், அந்தத் தீர்வு சூரியசக்தியால் கிடைத்தது.   நமது மணிப்பூரில் சூரியசக்தியை உற்பத்தி செய்வது எளிதானது.  மோயிராங்க்தேம் அவர்கள் சூரியசக்தி பேனலைப் பொருத்தும் இயக்கத்தைத் தொடங்கினார், இந்த இயக்கம் வாயிலாக இன்று அவருடைய பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளில் சூரியசக்தி சென்றடைந்து விட்டது.  குறிப்பாக, இவர் சூரியசக்தியைப் பயன்படுத்தி உடல்நலப் பராமரிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறார்.  இன்று இவருடைய முயற்சிகளால் மணிப்பூரில் பல உடல்நல மையங்களுக்கும் சூரியசக்தி கிடைத்து வருகிறது.  இவருடைய இந்தப் பணிக்காக மணிப்பூரின் பெண்சக்திக்கும் மிகப்பெரிய ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது.  உள்ளூர் மீனவர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கிறது.

நண்பர்களே, இன்று அரசாங்கம் பிரதம மந்திரி சூரியசக்தி இல்லம் இலவச மின்சாரம் திட்டம் வாயிலாக பயனாளிக் குடும்பங்கள் அனைவருக்கும் சூரியத் தகடுகளைப் பொருத்த கிட்டத்தட்ட 75 முதல் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது.  மோயிராங்க்தேம் அவர்களின் இந்த முயற்சி என்னவோ தனிப்பட்ட முயற்சியாக இருக்கலாம், ஆனால் சூரியசக்தியோடு தொடர்புடைய இயக்கத்துக்குப் புதிய வேகத்தை அளித்து வருகிறது.  நான் மனதின் குரல் வாயிலாக அவருக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

என் இனிய நாட்டுமக்களே, வாருங்கள் நாம் சற்று ஜம்மு கஷ்மீரம் வரை சென்று வருவோம்.  ஜம்மு கஷ்மீரத்தின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம், அதன் ஒரு விஷயம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், இது உங்கள் அனைவரையும் பெருமைப்படச் செய்யும்.  ஜம்மு கஷ்மீரத்தின் பாராமூலாவிலே, ஜெஹன்போரா என்ற பெயருடைய இடம் இருக்கிறது.  அங்கே பல்லாண்டுகளாக சில உயரமான மேடுகளை மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்.  பொதுவாக இந்த உயரமான மேடுகள் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  ஆனால் ஒருநாள் அகழ்வாய்வாளர்களின் கவனம் இவற்றின்பால் திரும்பியது. 

அவர்கள் இந்தப் பகுதியை கவனமாக ஆராய்ந்த போது, இந்த மேடுகள் வித்தியாசமானவையாகப் பட்டன.  இதன் பிறகு இந்த மேடுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொண்டார்கள்.  ட்ரோன்கள் வாயிலாக மேலிருந்து படங்கள் எடுக்கப்பட்டன, தரையின் வரைபடம் உருவாக்கப்பட்டது.  அதன் பிறகு திகைப்பை ஏற்படுத்தும் விஷயம் புலனாகியது.  இந்த மேடுகள் இயற்கையாக உருவானவை அல்ல என்பது தெரியவந்தது.  இவை மனிதனால் உருவாக்கப்பட்ட ஏதோ பெரிய கட்டிடத்தின் மிச்சங்கள்.  இந்த வேளையில் மேலும் ஒரு சுவாரசியமான விஷயமும் தெரிய வந்தது. 

கஷ்மீரிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் ஃப்ரான்ஸ் நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தின் ஆவணக்காப்பகத்தில் ஒரு பழைய, மெல்லிய படம் ஒன்று கிடைத்தது.  பாராமூலாவின் அந்தப் படத்திலே மூன்று பௌத்த தூபிகள் காணப்பட்டன.  காலச்சக்கரம் சற்றே பின்னால் சென்றது, கஷ்மீரத்தின் மிக்க பெருமை வாய்ந்த கடந்தகாலம் நம் கண்களின் முன்னால் விரிந்தது.  இது கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு.  கஷ்மீரின் ஜேஹன்போராவின் இந்த பௌத்த வளாகம், கஷ்மீரின் கடந்தகாலம் என்ன, அதன் அடையாளம் எத்தனை வளமானதாக இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் இப்போது பாரதத்தை விட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவாக, ஒரு சிறப்பான முயற்சி குறித்து கலந்துகொள்ள இருக்கிறேன், இது இதயத்தைத் தொடவல்லது.  ஃபிஜியில் பாரதநாட்டு மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்ப ஒரு பாராட்டுதற்குரிய முன்னெடுப்பு நடந்து வருகிறது.  அங்கே இருக்கும் புதிய தலைமுறையினர், தமிழ் மொழியோடு இணைந்து கொள்ள பல நிலைகளில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.  

கடந்த மாதம் ஃபிஜியில் ராக்கீராக்கீ பகுதியில், அங்கிருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் முதன்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது.  அன்றைய தினத்தன்று குழந்தைகளுக்குக் கிடைத்த மேடையில் அவர்கள் தங்களுடைய மொழியின் பெருமை குறித்து தங்கு தடையின்று உரையாற்றினார்கள்.  குழந்தைகள் தமிழில் கவிதைகளை உரைத்தார்கள், சொற்பொழிவு ஆற்றினார்கள், தங்களுடைய கலாச்சாரத்தை, மெத்த தன்னம்பிக்கையோடு மேடையில் வெளிப்படுத்தினார்கள்.  நண்பர்களே, தேசத்திலேயும் கூட, தமிழ் மொழியின் பரவலாக்கம் தொடர்பாக தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.  சில நாட்கள் முன்பாகத் தான் என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியான காசியில் காசி தமிழ் சங்கமத்தின் 4ஆம் பதிப்பு நடந்தது.  இப்போது நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க இருக்கிறேன்.  நீங்கள் கேளுங்கள், தமிழில் பேச முயலும் இந்தக் குழந்தைகள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

#1 பாயல் குரல்

நண்பர்களே, தமிழ் மொழியில் இத்தனை சரளமாகத் தன்னுடைய கருத்தை முன்வைக்கும் இந்தக் குழந்தைகள் காசியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய தாய்மொழி ஹிந்தி, ஆனால் தமிழ்மொழியிடம் கொண்ட ஈடுபாடு இவர்களைத் தமிழ் கற்க உத்வேகப்படுத்தியிருக்கிறது.  இந்த ஆண்டு வாராணசியில் காசி தமிழ் சங்கமத்தின் போது தமிழ் கற்பது தொடர்பாக சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் கற்கலாம் என்ற மையக்கருவையொட்டி, வாராணசியின் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது.  இதன் விளைவாக நாம் இந்த ஒலிக்குறிப்பைக் கேட்க முடிகிறது. 

#2 வைஷ்ணவி குரல்

நண்பர்களே, தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி.  தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது.  காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் மனதின் குரலில் வேண்டிக் கொண்டிருந்தேன்.  இன்று தேசத்தின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள்-இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது.  இதுதான் மொழியின் பலம், இதுவே பாரதத்தின் ஒற்றுமை.

நண்பர்களே, அடுத்த மாதம் நமது தேசத்தில் 77ஆவது குடியரசுத் திருநாளை நாம் கொண்டாட இருக்கிறோம்.  இப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கும் போது, நமது மனம் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அரசியல்சட்ட நிறுவனர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்த்து, உணர்வுமயமாகி விடுகிறது.  நமது தேசம் விடுதலை அடைய மிக நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.  சுதந்திரப் போராட்டத்திலே தேசத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய பங்களிப்பை அளித்தார்கள்.  ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரம் பெற்றுத்தந்த பல வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அவர்களுக்கு உரித்தான மரியாதையும், பெருமையும் கிடைக்கவில்லை. 

இப்படிப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தாம் ஓடிஷாவின் பார்வதி கிரி அவர்கள். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பிறந்த நூற்றாண்டு கொண்டாடப்படும்.  அவர் 16 வயதிலேயே வெள்ளையேனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.  நண்பர்களே, சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, பார்வதி கிரி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை சமூகசேவை மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார்.  பல அனாதை இல்லங்களை நிறுவினார்.  கருத்தூக்கம் அளிக்கும் அவருடைய வாழ்க்கை, அனைத்துத் தலைமுறையினருக்கும் வழிகாட்டும் விளக்காக இருக்கும்.

“मूँ पार्वती गिरि जिंकु श्रद्धांजलि अर्पण करुछी |”நான் பார்வதி கிரி அவர்களுக்கு நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன் என்பதே இதன் பொருள்.

நண்பர்களே, நாம் நமது மரபுகளை மறக்காமல் இருப்பது அவசியம்.  நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த நாயகர்கள்-நாயகிகளின் மகத்துவம் வாய்ந்த கதைகளை அடுத்த தலைமுறைவரை கொண்டு செல்ல வேண்டும்.  விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அரசாங்கம் ஒரு சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கியிருந்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.  அதிலே ஒரு பகுதி, ‘Unsung Heroes’ புறக்கணிக்கப்பட்ட நாயகர்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.  இன்றும்கூட இந்த இணையத்தளத்திற்குச் சென்று, தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த ஆளுமைகளின் மாபெரும் பங்களிப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

என் கனிவான நாட்டுமக்களே, மனதின் குரல் வாயிலாக, சமூகத்தின் நன்மையோடு தொடர்புடைய மகத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க மிக நல்லதொரு சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்கிறது.  நம்மனைவருக்கும் கவலையளிக்கவல்ல ஒரு விஷயம் குறித்து நான் பேச விரும்புகிறேன்.   ICMR, அதாவது இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தற்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது.  நிமோனியா மற்றும்  UTI, அதாவது சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களுக்கு எதிராக ஆண்டிபயாட்டிக் மருந்துகள், அதாவது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பலம் குன்றியவையாக இருக்கிறது என்று இதில் கூறப்பட்டிருக்கிறது. 

நம்மனைவருக்கும் இது மிகவும் கவலைதரும் விஷயம்.  அந்த அறிக்கையின்படி, இதற்கான மிகப்பெரிய காரணம் என்றால், மக்கள் சற்றும் சிந்திக்காமல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது தானாம்.  போகிற போக்கில் எடுத்துக் கொள்ளக்கூடியவை அல்ல இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.  இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படியே மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு மாத்திரை போட்டுக் கொள்வோம், அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுதலை அடைவோம் என்று இப்போதெல்லாம் மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

இதன் காரணமாகவே நோய்களும், நோய்த் தொற்றுக்களும் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை பயனற்றுப் போகச் செய்கின்றன.  தயவுசெய்து உங்கள் இஷ்டப்படி மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன்.  நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் விஷயத்தில் இதை நினைவில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.  மருந்துகளை எடுத்துக்கொள்ள வழிகாட்டுதலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மருத்துவர்களும் அவசியம் என்றே நான் கூறுவேன்.  இந்தப் பழக்கம் உடல்நலத்தை மேலும் சிறப்பாக்க உதவுவதாக இருக்கும். 

என் உளம்நிறை நாட்டுமக்களே, நமது பாரம்பரியக் கலைகள், சமூகத்தை சக்தியுடையதாக ஆக்குவதோடு, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான ஊடகமாகவும் ஆக்கி வருகின்றன.  ஆந்திரப் பிரதேசத்தின் நார்சாபுரம் மாவட்டத்தின் லேஸ் கிராஃப்ட் தேசமெங்கும் பேசுபொருளாக ஆகி இருக்கிறது.  இந்த லேஸ் கிராஃப்ட், பல தலைமுறைகளாக பெண்களின் கைப்பொருளாகவே இருந்து வந்தது.  மிகுந்த பொறுமையோடும், நுணுக்கமாகவும் தேசத்தின் பெண்சக்தி இதனைப் பாதுகாத்து வந்தது. 

இன்று இந்தப் பாரம்பரியத்தின் ஒரு புதிய வண்ணமயமான வடிவம் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.  ஆந்திரப் பிரதேச அரசாங்கமும், நாபார்ட் வங்கியும் இணைந்து கைவினைஞர்களுக்குப் புதிய வடிவமைப்பைக் கற்பித்துக் கொண்டு வருகிறார்கள், சிறப்பான திறன்பயிற்சி அளித்து வருகிறார்கள், புதிய சந்தைகளோடு இணைத்து வருகிறார்கள்.  நார்சாபுரம் லேஸுக்கு புவிசார் காப்பீடும் கிடைத்திருக்கிறது.  இன்று இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெண்களுக்கு இதனால் வேலைவாய்ப்பு உண்டாகியிருக்கிறது.

நண்பர்களே, தங்களுடைய உழைப்பால், பாரம்பரியக் கலைகளை முன்னெடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் இதனால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரமளிக்கும் பணியைச் செய்யும் மக்களை முன்னிலைப்படுத்தப் படுவதற்கான மேடையாக மனதின் குரல் இருக்கிறது.  மணிப்பூரின் சுராசாந்துபுரின் மார்கரெட் ராம்தர்சியம் அவர்களுடைய முயற்சியும் இப்படிப்பட்டது தான். இவர் மணிப்பூரின் பாரம்பரியமான பொருட்களை, அங்கிருக்கும் கைவினைப் பொருட்களை, மூங்கில் மற்றும் மரத்தாலான பொருட்களை, ஒரு பெரும் தொலைநோக்கோடு அணுகியதால், இவர் தான் ஒரு கைவினைபொருள் கலைஞராக மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றமேற்படுத்தும் ஊடகமாகவும் ஆகியிருக்கிறார். இன்று மார்கரெட் அவர்களின் அலகில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  தன்னுடைய உழைப்பால் தில்லி உட்பட, தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய பொருட்களுக்கான சந்தையையும் மேம்படுத்தியிருக்கிறார்.

நண்பர்களே, மணிப்பூரிலிருந்து மேலும் ஒரு எடுத்துக்காட்டு சேனாபதி மாவட்டத்தில் வசிக்கும் சோகோனே கிரிசேனா அவர்களுடையது.  இவருடைய மொத்த குடும்பமும் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. கிரிசேனா அவர்கள் இந்த பாரம்பரிய அனுபவத்தை மேலும் விரிவாக்கினார்.  இவர் மலர்கள் பயிர் செய்வதைத் தனது ஆர்வமாக ஆக்கிக் கொண்டார்.  இன்று இவர் இதன் காரணமாக பல்வேறு சந்தைகளை இணைத்து வருவதோடு, தனது பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சமூகங்களுக்கும் அதிகாரமளித்து வருகிறார்.  நண்பர்களே, பாரம்பரியமான ஞானத்தோடு, நவீன தொலைநோக்கினை இணைத்து நாம் முன்னேறினோம் என்று சொன்னால் இது பொருளாதார வளர்ச்சிக்கான பெரிய ஊடகம் ஆகி விடும் என்பதையே இந்த எடுத்துக்காட்டு காட்டுகிறது.  உங்களுக்கு அருகிலே இப்படிப்பட்ட வெற்றிக்கதைகள் இருந்தால், கண்டிப்பாக அவற்றை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர்களே, நமது தேசத்திலே மிகவும் அழகான விஷயம் என்னவென்றால், ஆண்டு முழுவதும் தேசத்தின் ஏதாவது ஒரு பாகத்தில் உற்சவங்கள்-கொண்டாட்டங்கள் நடந்த வண்ணம் இருப்பது தான்.  பல்வேறு திருநாட்கள்-பண்டிகைகள் இருக்கின்றன, இவற்றோடு கூடவே பல்வேறு மாநிலங்களில், அந்த வட்டாரத்துக்குரிய கொண்டாட்டங்களும் நடந்து வருகின்றன.  அதாவது, நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால், அனைத்து நேரத்திலும், தேசத்தின் எங்காவது ஓரிடத்தில், ஏதாவது தனித்தன்மையான கொண்டாட்டம் காத்திருக்கும்.  இப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் இப்போது கட்சின் ரண் பகுதியில் நடந்து வருகிறது. 

இந்த ஆண்டு கட்சின் ரணோத்சவம் நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தொடங்கியது. இது பிப்ரவரி 20 வரை நடக்கும். இங்கே கட்சின் நாட்டுப்புறக் கலாச்சாரம், நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் கைவினைத் திறனின் பன்முகத்தன்மை காணக்கிடைக்கும். கட்சின் பாலை நிலத்தின் மீது வெண்ணிலவு கம்பளம் விரிக்கிறது, அந்தக் காட்சி அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளக்கூடிய ஒன்றாகும். இந்த ரண் உத்ஸவத்தின் Tent City, கூடார நகரம் மிகவும் பிரபலமானதாகும்.   கடந்த ஒரு மாதத்தில் இதுவரை 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்த ரணோத்ஸவத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.  உங்களுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால், நீங்கள் கண்டிப்பாக இதில் கலந்து கொள்ளுங்கள், பாரதத்தின் பன்முகத்தன்மையின் ஆனந்தத்தை உணர்ந்து பாருங்கள்.

நண்பர்களே, 2025இலே மனதின் குரலின் இது கடைசிப் பகுதி, நாம் 2026ஆம் ஆண்டிலே, இதே உற்சாகம்-பேரூக்கத்தோடு, உள்ளார்ந்த உணர்வோடு நமது மனதின் குரலில் கண்டிப்பாக ஈடுபடுவோம்.  புதிய ஆற்றல், புதிய விஷயங்கள், புதிய உள்ளெழுச்சி நிரப்பவல்ல நாட்டுமக்களின் கணக்கேயில்லாத நிகழ்ச்சிகள் தாம், நம்மை மனதின் குரலில் இணைத்து வைக்கிறது. 

ஒவ்வொரு மாதமும் இப்படிப்பட்ட அநேக செய்திகள் கிடைத்து வருகின்றன, இவை வளர்ச்சியடைந்த பாரதம் தொடர்பான நம்முடைய தொலைநோக்கை விளக்குகின்றன.  மக்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைகள், மேலும் இந்தத் திசையில் அவர்களின் முயற்சிகளைக் காணும் போது, இந்த நம்பிக்கை மேலும் வலுவடைகிறது;  அதோடு கூடவே இவையனைத்தும் என்வரை வந்து சேரும் போது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உறுதிப்பாடு கண்டிப்பாக மெய்யாகும்.  இந்த நம்பிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது. 

2026ஆம் ஆண்டு, இந்த உறுதிப்பாடு மெய்யாகும் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும், உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தாரின் வாழ்க்கை நலத்தோடு இருக்கட்டும் என்ற நல்விருப்போடு இந்த பகுதிக்கு நான் விடையளிக்கிறேன்.  ஆனால் ஒன்று – ‘Fit India Movement’, உடலுறுதி இந்தியா இயக்கம், இதன்படி நீங்களும் உடலுறுதியோடு இருக்க வேண்டும்.  இந்தக் குளிர்காலம் உடற்பயிற்சிக்கு உகந்த காலம், கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.  உங்களனைவருக்கும் 2026ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நன்றி.  வந்தே மாதரம்!!!

பரமன் அளித்த பகவத் கீதை(6): ஆன்மிகத்தில் மகாபாரதம் பெறும் இடம்!

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 6 :
மகாபாரதக் கதை
ஆன்மிகத்தில் மகாபாரதம் பெறும் இடம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

         பகவத்கீதை மகாபாரதத்தில் இடம் பெறுகிறது. அதனை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார். எனவே பகவத்கீதை தோன்ற, அதன் பின்னணியை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதாவது மகாபாரதம் பற்றி அறிய வேண்டியது அவசியம். எனவே நான் மகாபாரதக்கதையைச் சொல்ல முதலில் முயற்சிக்கிறேன்.

         மகாபாரதமும் இராமயணமும் நமக்கு இறைவனை அடையும் வழிகளைச் சொல்கின்றன. இறைவனை அடையும் வழிகள் என்ன என்பதை ஒரு ஸ்லோகம் சொல்கிறது.  

“ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம். அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்” 

என ஒன்பது வித பக்தியை பாகவதம் குறிப்பிடுகிறது.

  • ஸ்ரவணம் – ஆண்டவனுடைய புகழைக் காதுகளால் கேட்டு இன்புறுவது.
  • கீர்த்தனம் – பகவானுடைய புகழை எப்போதும் பாடிக் கொண்டிருத்தல்.
  • ஸ்மரணம் – ஆண்டவன் நினைவாகவே இருத்தல்.
  • பாதஸேவனம் – ஆண்டவனுடைய திருவடிகளை சேவித்தல்.
  • அர்ச்சனம் – பூஜித்து வழிபடுதல்.
  • வந்தனம் – ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்தல்.
  • தாஸ்யம் – இறைவனின் கட்டளைப்படி நடத்தல்.
  • ஸக்யம் – கடவுளையே நண்பராக பாவித்து அன்பு கொள்ளுதல்.
  • ஆத்மநிவேதனம் – ஆண்டவரிடம் முழுமையாக ஒப்படைத்தல்.

         இப்படி ஒன்பது விதமான பக்தி நிலைகள் இருந்தாலும் இதில் ஸ்ரவணம் எனும் கடவுளின் புகழினை கேட்கும் நிலையே பெரிதும் போற்றப்படுகிறது. எளிதான வழியும் இதுதான். எப்போதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களை, பாடல்களை, கதைகளை கேட்க முடியுமோ அப்போதெல்லாம் கேட்டு விடவேண்டும். இதுவே நமக்கான முக்தியை அளிக்கக்கூடியது.

         ஸ்ரீராமரோடு வைகுந்தம் செல்ல விருப்பமின்றி ஹனுமான் ஸ்ரவண பக்திக்காக சிரஞ்சீவியாக பூலோகத்திலே தங்கி விட்டார். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ராமநாமம் சொல்பவரை ஆசிர்வதிக்க வந்து விடுகிறார். எனவே எளிதான ஸ்ரவண பக்தியை மேற்கொண்டு எல்லோருமே முக்தியை அடையலாம் என ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். அதை நாமும் பின்பற்றலாமே.

         ஸ்ரவணம் என்றால் கேட்டல். எதைக் கேட்க வேண்டும்?

ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்களைப் பற்றிக் கேட்கலாம். வேத விளக்கங்களான -ஸம்ஹிதை. பிராமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகியவை பற்றிக் கேட்கலாம். வேதாங்கங்களான சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவைகளைப் பற்றிக் கேட்கலாம். இதிஹாசங்களான இராமாயணம், மகாபாரதத்தைப் பற்றிக் கேட்கலாம். இதிஹாசம் – இதி+ஹ+அஸ – இது இப்படி நடந்தது. இதிலே இராமாயணம்  வான்மீகி முனிவரால் எழுதப்பட்டது. அவர் இராமயணகாலத்தில் வாழ்ந்தவர். பாரதம் வியாச பகவானால் எழுதப்பட்டது. அவர் மகாபாரதகாலத்தில் வாழ்ந்தவர்.

மகாபாரதம் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. அவையாவன:

  • சிற்றின்ப நுகர்வை தியாகம் செய்யும் – பீஷ்மன்
  • தன் மனைவியை இன்னொருவர் மூலம் கருத்தரிக்கச் செய்யும் – பாண்டு
  • கணவனுக்காக வாழ்நாள் முழுவதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழும் மனைவி – காந்தாரி
  • ஐந்து கணவர்களோடு எந்தவிதச் சிக்கலும் இன்றி வாழும் பெண் – திரௌபதி.
  • ஓராண்டிற்கு பேடியாக வாழும் ஒருவன் – அர்ச்சுனன்
  • மிகப்பெரிய காடு அழிக்கப்பட்டது – காண்டவப் பிரஸ்தம்
  • சூதாட்டத்தில் நாட்டைப் பணயம் வைத்த அரசன் – தருமன்
  • போர்க்களத்தில் பிறக்கும் கீதை
  • தாயே பிள்ளைகளைக் கொல்லும் அதிசயம் – கங்கை

ஓம் சரவண பவ வேள்வி; விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் களைகட்டிய நிகழ்ச்சி!

tambaram vhp event - 2026

விசுவ ஹிந்து பரிஷத் – தாம்பரம் மாவட்டம் ‘ஓம் சரவணபவ’ வேள்வி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

10008 முறை ஓம் சரவணபவா எழுதக் கூடிய முருகன் நாம வேள்விக்காக, தமிழகம் முழுவதும் மட்டுமன்றி, உலகின் சில நாடுகளில் இருந்தும் குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் முருக பக்தர்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை 700 பக்தர்கள் எழுதி சமர்ப்பித்திருந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக 25.12.2025 வியாழன் வளர்பிறை சஷ்டி அன்று, காலை இரும்புலியூர் வேம்புலி அம்மன் கோயிலில் சத்ரு சம்ஹாரம் ஹோமம் மற்றும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய வேல்கள் ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்று மாலை கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் 4 முதல் இரவு 7 மணி வரை கந்தசஷ்டி கவசம் கூட்டுபராயணம், உலக நன்மைக்காக கூட்டு சங்கல்பம், ஆன்மீக பெரியோர்கள் உரை எனும் ஏற்பாட்டின் படி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓம் சரவணபவா 10008முறை எழுதிய பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட சிறிய வேலும், திருச்செந்தூர் பிரசாதமும் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், முருகன் விக்கிரஹத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. 500 பக்தர்கள் ஒன்று சேர கந்தசஷ்டி பாராயணம் மிக சிறப்பாக பக்தியுடன் பாடினர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான ஆன்மிகப் பெரியோர்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில செயலாளர் பால மணிமாறன், மாநில அமைப்புச் செயலாளர் சு வெ ராமன் ஆகியோரும் கலந்து கொண்டு, விழா சிறப்புரை வழங்கினார்கள்.

தாகூர் மருத்துவக் கல்லூரி சார்பாக இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. இதில், சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் உடல் பரிசோதனை செய்துகொண்டு பயன்பெற்றனர். ஆண்டாள் பக்தர் பேரவை சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சபரிமலை, அச்சன்கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு வழிபாடு!

sabarimala achankoil mandala pooja - 2026

சபரிமலையில் இன்று மண்டல பூஜை – தங்க அங்கியில் ஐயப்பன் அருள்பாலித்தார்.அச்சன்கோயில் ஆரியங்காவு கோவிலில் ஐயப்பன் தங்க திருபாவரணங்கள் அணிந்து அருள் பாலித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்தனர்.

மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டு, நேற்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

இந்தநிலையில இன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. நெய் அபிஷேகம் காலை 9 மணி வரை நடத்தப்பட்டது.

பின்பு தங்க அங்கியுடன் ஜொலித்த ஐயப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரத்தில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் மதியம் ஒரு மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை அடைக்கப்படும்.

அதன்பிறகு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இன்று நாள் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மண்டல பூஜையை முன்னிட்டு ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலமாக 32 ஆயிரம் பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 35 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு முறையில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 37 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. அத்துடன் 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவுக்கு வருகிறது.

இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 25-ந்தேதி வரை 30 லட்சத்து ஆயிரத்து 532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு(2024) மண்டல பூஜை சீசனில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25-ந்தேதி வரை 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்களே சபரிமலைக்கு வந்துள்ளனர்.

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 2 நாட்களுக்கு பிறகு, அதாவது வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி கோவில் நடையை திறப்பார். மறுநாள்(31-ந்தேதி) மகர விளக்கு பூஜை வைபவம் தொடங்குகிறது.

மரக ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். அதனை சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிப்பார்கள்.

மண்டல பூஜை காலத்தை போன்றே மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படைவீடு கோவில்களான அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை நிறைவு வழிபாடு சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது

இரு கோவிலிலும் ஐயப்பனுக்குரிய தங்கிருபவரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக கலசங்களில் புனித நீர் நிரப்பியும் வெள்ளி குடத்தில் அரைத்த சந்தனம் நிரப்பியும் ஐயப்பனுக்கு களம்பாபிசேகம் கலசபிஷேகம் நடத்தப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

சிவகாசி அருகே… வீட்டின் கேட் உடன் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் மரணம்!

sivakasi two girls died wall collapse - 2026

சிவகாசி அருகே வீட்டின் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த பெண் காவலரின் மகள் உள்ளிட்ட இரு சிறு சிறுமிகள் கேட் சுவர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்த்தை சேர்ந்தவர் ராஜாமணி-ராஜேஸ்வரி தம்பதி. சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரிக்கு 11 வயதில் கவின் என்ற மகனும் 9 வயதில் கமலிகா என்ற பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பெண் காவலர் ராஜேஸ்வரியின் சகோதரியான சங்கரன்கோவிலை சேர்ந்த தனலட்சுமி தனது 6 வயது மகன் நிஷாந்த் மற்றும் 4 வயது மகள் ரிஷிகாவுடன் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரியின் வீட்டின் முன்பாக உள்ள கேட்டில் கமலிகாவும், ரிஷிகாவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கேட்டுடன் சுவர் சரிந்து விழுந்ததில் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் கமலிகா 9, மற்றும் ரிஷிகா 4, ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதை அடுத்து இருவரையும் மீட்ட உறவினர்கள் உடனடியாக பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமன் அளித்த பகவத் கீதை(5): ஆன்மா மரணமெய்தாது!

bhagavat githa series - 2026

பகவத்கீதை: மானிடர் ஆன்மா மரணமெய்தாது!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பள்ளிப் பருவத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு என் வீட்டில் அதிகமான கட்டுப்பாடுகள் கிடையாது. என்னுடைய தாயார் அவருக்குப் பிடித்த படங்களுக்கு அழைத்துச் செல்வார். என் தந்தையாருக்கு பக்திப் படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, ஆந்திராவில் எடுக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் மிகவும் பிடிக்கும்.

இப்படி இருக்கையில் எங்கள் ஊருக்கு “கர்ணன்” படம் வந்தது. என் தாயார் என்னை மதியக் காட்சிக்கு அழைத்துச் சென்றார். என் தந்தையார் இரவுக்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். அடுத்த சில நாட்களுக்கு படத்தைப் பற்றிய விவாதம் இல்லத்தில் நடந்தது. எனது தாயார் கர்ணனும் துரியோதனனின் மனைவி பானுமதியும் சொக்கட்டான் விளையாடும்போது வரும் “எடுக்கவோ, கோர்க்கவோ” என்ற துரியோதனின் வசனத்தை சிறப்பாக எடுத்துப் பேசுவார்.

என் தந்தையார் பகவத் கீதையை ஏறத்தாழ மிகச் சரியாக ஒரு பாடலில் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னார். பின்னர் எப்படியோ பள்ளியில் எவனோ ஒருவன் வாங்கிவந்திருந்த கர்ணன் படத்தின் பாட்டுப்புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துவந்து என் தந்தையாரிடம் விளக்கம் கேட்டேன்.

அவர் சொன்னார் “பகவத்கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. அதில் முதல் ஆறு  அத்தியாயங்கள் மனிதனைப் பற்றியது. அடுத்த ஆறு அத்தியாயங்கள் கடவுளைப் பற்றியது. கடைசி ஆறு அத்தியாயங்கள் மனிதன் இறைவனை அடையும் வழியைப் பற்றியது. இந்தப் பாடலில் இந்த மூன்று பிரிவுகளையும் அழகாக பிரித்துப் பாடியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். பாடல் இதோ –

மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா..
மரணத்தின் தன்மை சொல்வேன்…
மானிடர் ஆன்மா மரணமெய்தாது.. மறுபடி பிறந்திருக்கும்.
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்..
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்.

இதற்கு அர்ஜுனன் சொல்கிறான் – கண்ணா உனக்கு எல்லாம்தெரியும்; ஆனால் எனக்கு உன்னை தான் தெரியும்; பரந்தாமனைத் தான் தெரியும்; நீயா என்னை இந்த பாவத்திற்க்கு தூண்டுவது.

பாடல் மூலமாக கண்ணன்,
என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ, காண்டீபம் நழுவ விட்டாய் … காண்டீபம் நழுவ விட்டாய்..
மன்னரும் நானே.. மக்களும் நானே.. மரம் செடி கொடியும் நா~னே..
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..
துணிந்து நில் தர்மம் வாழ

அர்ஜுனன் சொல்கிறான் – ஆனால் கொல்ல போவது நான் அல்லவா. அந்த பழி எல்லாம் எனக்கல்லவா. கண்ணன் காட்டிய வழியில் நீ எண்ணியதை நான் செய்து விட்டால்..
அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது?
இந்த பிழைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல்.. சொல்…

கண்ணன் பாடலில் பதில் சொல்கிறார்…
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்…
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான் … கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக ! நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க!

இந்தப் பாடல்தான் எனக்கு பகவத் கீதை பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை தந்த ஒரு பாடல். இதில் முதல் பத்தி மனிதனைப் பற்றி என்ன சொல்கிறது? மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டுமே. “பிற உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; மரணம் விளைவிக்கக் கூடாது” என்பது தர்மம். ஆனால் இங்கே கண்ணன் அர்ஜுனனைக் கொலை செய்யத் தூண்டுகிறார். 

காந்தியின் மூன்று குரங்குகளின் புதிய பரிணாமம் – எதிர்க்கட்சிகளின் தாஜா அரசியல்!

yogi adityanath - 2026
#image_title

அங்கே வங்கதேசத்திலே, ஒரு தலித் இளைஞரை உயிரோடு எரித்து விட்டார்கள்.  நீங்கள் எல்லாரும் காஸா பகுதியில் ஏதாவது நடந்தால் அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்களே!!  ஆனால், உங்கள் வாயிலிருந்து ஒரு சொல்கூட வரவில்லை, ஏனென்றால் ஒரு தலித் இளைஞர், வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான், ஆனால், அந்த இளைஞரின் மரணத்திற்காக, ஒரு வார்த்தை உங்கள் வாய் உதிர்க்கவில்லை.  ஏனென்றால், நீங்கள் அவர்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.  நீங்கள் சொல்லவே மாட்டீர்கள்.  காஸாவிற்காக மெழுகுவர்த்தி ஊர்வலம் எடுத்துச் செல்வீர்கள்.  ஆனால் பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்கள் கொல்லப்பட்டால் பேசா மடந்தைகளாகி விடுவீர்கள்.   ஏனென்றால் கொல்லப்படுபவர், ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர். 

காந்தியடிகளின் குரங்குகள் மூன்று இருந்தன.  காந்தியடிகள் அவற்றுக்கு உபதேசம் கூறியிருந்தார்.  தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, மற்றும் தீயதைப் பேசாதே.  ஆனால் இன்று இண்டிக் கூட்டணியில் மேலும் 3 குரங்குகள் இணைந்து விட்டன.  பப்பு டப்பு மற்றும் அப்பு அவற்றின் பெயர்கள்.  பப்புவால் நல்லதைப் பேசவே முடியாது.  டப்புவால் நல்லதைப் பார்க்கவே முடியாது.  அடுத்து…. அப்புவால், உண்மையைக் கேட்கவும் முடியாது.

வங்கதேசத்தில் ஓர் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை அன்று மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்.

எதிர்க்கட்சிகள் ‘தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டும் கோபப்படுவதாகவும், தாஜா அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சிகள் மௌனமாக இருப்பதாகவும், அதே சமயம் சர்வதேசப் பிரச்சினைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் போராட்டம் நடத்துவதாகவும் யோகி குற்றம் சாட்டினார்.

“காசா பகுதியில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நீங்கள் கண்ணீர் வடிக்கிறீர்கள், ஆனால் வங்கதேசத்தில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டபோது உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை,” என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளை ‘வாக்கு வங்கி மற்றும் தாஜா அரசியலுக்காக’ பயன்படுத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானும் வங்கதேசமும் உருவாக்கப் பட்டிருக்காவிட்டால், இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருக்காது என்று யோகிஜி கூறினார். “நீங்கள் காசாவுக்காக மெழுகுவர்த்தி பேரணிகளை நடத்துகிறீர்கள், ஆனால் பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ ஒரு இந்து கொல்லப்படும்போது, ​​பாதிக்கப்பட்டவர் ஒரு இந்து, ஒரு தலித் என்பதால் உங்கள் வாய்கள் மூடப்படுகின்றன,” என்றார் அவர் .

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

“எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து ஒரு கண்டனத் தீர்மானம் வர வேண்டும். நாங்கள் இந்த சம்பவத்தைக் கண்டிக்கிறோம், மேலும் வங்கதேச அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக எதிர்க்கட்சிகளையும் அவர் குறிவைத்து, அவர்கள் பங்களாதேஷ் நாட்டினருக்கும் ரோஹிங்கியாக்களுக்கும் ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

“நாங்கள் வங்கதேசத்தவர்களை இங்கிருந்து வெளியேற்றி, ரோஹிங்கியாக்களுக்கு வெளியேற வழி காட்டும் போது, ​​அவர்களுக்கு ஆதரவாக வராதீர்கள். நீங்கள் அவர்களில் பலரை வாக்காளர்களாகப் பதிவு செய்து, ஆதார் அட்டைகள் கூட எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்,.. என்றார்.

சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து பூஜை வழிபாடுகள்..

1001148555 - 2026
1001148414 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளதையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வெள்ளிக்கிழமை மாலை சன்னிதானம் வந்தடைந்ததும் சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து பூஜைகள் தீபாராதனை வழிபாடு நடைபெற்றன.

1001148615 - 2026

இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிச 27 சனிக்கிழமை காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஆண்டு தோரும் எடுத்து வரப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊா்வலம், ஐயப்பன் கோயிலை வெள்ளிக்கிழமை மாலையில் வந்தடைந்தது.

திருவாங்கூர் தேவசம் ரோடு அதிகாரிகள் சபரிமலை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் தந்திரி ஆகியோர் தங்கி வரவேற்றனர் 18 படி வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்கு அங்கி பெட்டகம் சுவாமி ஐயப்பன் சந்நிதிக்கு எடுத்து செல்லப்பட்டு மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மூலஸ்தானத்திற்குள் தங்கி அங்கியை எடுத்துச் சென்று சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து அலங்கரித்து சிறப்பு தீபாராதனை வழிபாடு இன்று மாலை 6:30க்கு துவங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தங்கி அணிந்த சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர் .

1001148485 - 2026

இந்த தங்காங்கி 4 21 பவுன் எடை கொண்டது இந்த தங்கி அங்கி திருவாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பனுக்காக சபரிமலை மூலஸ்தானத்தில் உள்ளது போல் செய்து வழங்கியது ஆகும்

நாளை சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மண்டல பூஜை. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த 41 நாட்கள் மண்டல காலத்தின் போது மட்டுமே நீண்ட நாட்கள் திறந்திருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல காலத்தில் மாலை அணிந்து, கடுமையாக விரதம் இருந்து சபரிமலை வந்து, சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு புனிதத் தலமாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது மண்டல பூஜை ஆகும்.
மலையாள மாதமான ‘விருச்சிகம்’ (கார்த்திகை முதல் தேதி) முதல் தேதியில் தொடங்கி, 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வழிபாட்டு காலமே மண்டல காலம் எனப்படுகிறது. இந்த 41 நாட்களின் நிறைவு நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையே ‘மண்டல பூஜை’ ஆகும். இது பொதுவாக டிசம்பர் மாதம் 26 அல்லது 27-ம் தேதிகளில் நடைபெறும். இந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதியான நாளை சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நடைபெற உள்ளது.

மண்டல பூஜையின் உண்மையான பலனைப் பெற ஒரு பக்தர் 41 நாட்கள் கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தைத் தொடங்கும் பக்தர்கள் துளசி அல்லது உருத்திராட்ச மாலையை அணிந்து ‘சுவாமி’யாக மாறுகிறார்கள். மது, புகை, அசைவ உணவுகளைத் தவிர்த்தல், பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தல் மற்றும் தரையில் உறங்குதல் போன்றவை கட்டாயமாகும். கறுப்பு, நீலம் அல்லது காவி நிற ஆடைகளை அணிவதன் மூலம், உலகியல் சுகங்களைத் துறந்து அனைவரும் சமம் என்ற மனநிலையை பக்தர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் தங்களின் பாவ-புண்ணியங்களை மூட்டையாகக் கட்டி, நெய் தேங்காயுடன் தலைப்பொதியாகச் சுமந்து வருவது ‘இருமுடிக்கட்டு’ எனப்படும். இது “நான்” என்ற அகந்தையை விட்டு இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கிறது.

மண்டல பூஜைக்கு சில நாட்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் மன்னரால் வழங்கப்பட்ட 421 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஆரண்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். மண்டல பூஜை அன்று இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும்.பக்தர்கள் கொண்டு வரும் பசு நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நெய் என்பது ஆத்மாவையும், தேங்காய் என்பது உடலையும் குறிப்பதாக ஐதீகம். மண்டல பூஜை அன்று வேத மந்திரங்கள் முழங்க சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படும். பிறகு பதினெட்டு படிகளுக்கும் பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 23ம் தேதி துவங்கியது. சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் தங்க அங்கி, இன்று மாலை நடைபெறும் சிறப்பு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

நாளை மண்டல பூஜை யின் போதும் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடைபெறும்.இரவு படிபூஜை நிறைவடைந்ததும் இரவு 10.30 மணியளவில் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்படும். அதோடு இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நிறைவு பெறும். மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15ம் தேதியன்று பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அறிவிக்கப்பட்டு, பூஜைகளை நடைபெற்ற பிறகு மாலை 6 மணிக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 19ம் தேதி இரவு வரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 19ம் தேதியன்று மாலையுடன் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தப்படும். ஜனவரி 20ம் தேதியன்று காலை 7 மணியளவில் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முன்னிலையில் சபரிமலை நடை அடைக்கப்படும்.

சுனாமி நினைவுகள்! அன்று நடந்ததும் பின்னணியும்!

tsunami 2004 memories - 2026

ஆழிப்பேரலை, டிசம்பர் 26, 2004 – அந்த இரண்டு மணி நேரம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பூமிக்கடியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக திரண்டுகொண்டிருந்த சக்தி திடீரென்று 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் ஓரு நிலநடுக்கமாய் வங்கக் கடலில் வெளிப்பட்டது. 1000 கிலோமீட்டர் நீளமான கடற்பரப்பில், சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு கடல் பரப்பில் கண்டத்தகடுகளுக்கிடையே இருந்த ஓரு பிளவு இந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமி அலைகளால் அன்று மாலைக்குள் பலிவாங்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வக் கணக்கின்படி 1,84,167. சுமார் 2.5 இலட்rம் மக்கள் இறந்திருக்கக்கூடும் என்பது வேறு ஓரு கணிப்பு.

இந்திய நேரப்படி டிசம்பர் 26, 2004 அன்று காலை 06 மணி 28 நிமிlத்திற்கு சுனாமி அலைகளை எழுப்பிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. சுனாமியின் முதல் அலைகளால் இந்தியக் கடற்கரை, குறிப்பாகத் தமிழகக் கடற்கரை தாக்கப்பட்டது காலை 0830 மணிக்காகும். இந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது ? இயற்கை நமக்கு நடத்திய பாடம் என்ன ?

இந்திய நேரம் காலை 06:28க்கு வடக்கு சுமத்ராவுக்கு 60 கிமீ மேற்கில் இந்தோ/ஆஸ்திரேலிய கண்டத்தகடும் யூரேசிய கண்டத்தகடும் ஓன்றின்மேல் ஓன்று சரிந்ததால் ஓரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. 10,000 அணுகுண்டுகள் வெடிக்கும்போது ஏற்படும் சக்தியை இந்த நிலநடுக்கம் வெளிக்கொணர்கிறது.

06:29க்கு இந்jனோசியாவின் படாங் நகரில் ஓரு நில-இயற்பியலாளரால் தன்னுடைய நிலநடுக்க அளவியிலிருந்து, ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவுள்ள நிலநடுக்கம் அருகாமையில் நிகழ்ந்துள்ளது என அறிகிறார். ஜகார்த்தாவில் உள்ள தேசிய நிலநடுக்க மையத்திற்கு செய்தி அனுப்ப முயற்சிக்கிறார், ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

இந்திய நேரம் 06:34க்கு பசுபிக் சுனாமி மையத்தில் பணிபுரியும் இருவர் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுப்படி 7.0ஆக இருக்கலாம் என முடிவு செய்து, அவர்களின் எச்சரிக்கை வலையத்துள் உள்ள நாடுகளுக்கு அறிக்கை அனுப்புகின்றனர். சிறிது நேரத்தில், சில கணக்கீடுகளுக்குப் பிறகு நிலநடுக்கத்தின் அளவு 8.0ஆக இருக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தாய்லாந்து நாட்டிலும் இந்த அறிக்கை பெறப்படுகிறது. ஆனால் சுற்றுலாத் துறைக்கு பொருளாதார அளவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற விவாதத்தில் சுனாமி எச்rரிக்கை தருவதில் தாமதமேற்படுகிறது. அடுத்த ஆறு நிமிlத்தில் சுனாமி சுமத்ராவின் பந்தா ஏக் பகுதியைத் தாக்குகிறது.

08:31க்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுனாமி எச்சரிக்கை தரப்படுகிறது. ஆனால் தூதரக உறவுகளில் உள்ள சிக்கல்கள் காரணமாய் சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய நாடுகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படவில்லை. உலகிலேயே மிக அதிநவீன கருவிகளோடு இயங்கும், ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா நகரத்தில் அமைந்துள்ள நிலநடுக்க எச்சரிக்கை மையம் உலகெங்கிலுமுள்ள 300 நிலையங்களிலிருந்து நிலநடுக்கம் பற்றிய தகவல்களைப் பெறுகிறது.

இம்மையத்திலுள்ள கணினிகள் நிலநடுக்கம் பற்றியும் சுனாமி பற்றியும் தானாகவே தகவல்கள் பெறக்கூடிய வசதியுடையது. இருப்பினும் அங்கிருந்து எந்தத் தகவலும் அல்லது எச்சரிக்கையும் தரப்படவில்லை. ஏனெனில் அன்று அந்த மையத்திற்கு விடுமுறைநாள்.

பசுபிக் சுனாமி எச்rரிக்கை மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அந்த இரண்டு அறிவியலாளர்கள் கடந்த ஓரு மணி நேரமாக தங்களின் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் புதிய கணக்குகள் நிலநடுக்கத்தின் வலு ரிக்டர் அளவுகோலில் 8.5ஆக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறது. இது நிலநடுக்கத்தின் சக்தி முன்னர் நினைத்ததைவிட பத்து மடங்கு அதிகம் என்பதனைக் காட்டியது.

குழப்பத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்களின் தலைவருக்கு தகவல் தருகின்றனர். இருப்பினும் பேரழிவைத் தரக்கூடிய சுனாமியை இந்நிலநடுக்கம் உருவாக்கும் என்ற எண்ணம் இன்னமும் இங்கு யாருக்கும் தோன்றவில்லை. இருப்பினும் இருபது நிமிlங்களுக்கப் பிறகு மீண்டும் ஓரு புதிய எச்சரிக்கை தரப்படுகிறது.

இந்திய நேரம் காலை 09:50க்கு தாய்லாந்தின் சுற்றுலாத்தலமான புகெட் நகரை சுனாமி அலைகள் தாக்குகின்றன. சில நிமிlங்களில் இந்திய மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை சுனாமி தாக்குகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய உடனடித் தகவல்கள் உலகத் தொலைக்காட்சிகளில் வெளிவரத் தொடங்குகிறது.

அதுவரை உறங்கிக் கொண்டிருந்த, அறியாமையில் விழித்துக் கொண்டிருந்த, கிறிஸ்த்மஸ் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருந்த உலகம் சுனாமி என்கிற ஓரு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதை உணரத் தொடங்கியது.

சுனாமி அலைகள் தொடர்ந்து மாலத்தீவுகள், ஆப்பிரிக்கா நோக்கி நகருகின்றது என உணரப்பட்டது. இயற்கை நமக்களித்த அந்த இரண்டு மணி நேரம் நம்மை நாம் காத்துக்கொள்ள பயன்படவில்லையா ?

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சுனாமி பற்றி மக்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்ளின் நிலவியல் பாடத்தில் சுனாமி இடம் பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு வரை தேர்வுகளில் ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ பகுதியில் ஓரு மதிப்பெண் தரக்கூடிய செய்தியாக அது இருந்தது. தமிழ் இலக்கியங்களிலும் ‘சுனாமி’ என்ற ‘கடல்கோள்’ பற்றிய செய்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளன.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
என்று கலித்தொகையும்

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடு’ கொடுங்கடல் கொள்ள – எனச் சிலப்பதிகாரமும் கடல்கோள் பற்றி நேரடியாகவே குறிப்பிடுகின்றன. 1883ஆம் ஆண்டு இந்தோனேசியப் பகுதியில் ஏற்பட்ட ஓரு எரிமலை வெடிப்பால் சென்னை உட்பட பல இடங்களைத் தாக்கிய சுனாமி பற்றிய ஓரு வரலாற்றுக் குறிப்பும் 1945இல் பாகிஸ்தானின் ‘மகரான்’ கடற்கரைப் பகுதியில் ஏற்ப்பட்ட ஓரு நிலநடுக்கத்தால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள் பாதிப்புக்குள்ளான மற்றொரு வரலாற்றுக் குறிப்பும் நமக்கு முன்னரே கிடைத்திருந்தன.

கடுமையான புயல்கள் இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடக்கும் போது சுனாமி அலைகள் போன்ற ஆனால் சற்றே அளவு குறைவாd ‘பொங்கலைகள்’ ஏற்படுவதும் நாம் அறிந்ததே, ஆயினும் இந்தியா போன்ற தகவல் தொழில்நுட்பம் சிறப்பான அளவில் இருக்கும் ஓரு நாட்டில் சுனாமி எச்சரிக்கைக் கட்டமைப்பு ஏற்படுத்தாது பற்றி டிசம்பர் 2004க்கு முன்னர் எவரும் நினைக்கவில்லை.

ஆனால் 2004க்கப் பிறகு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் அலைகளின் உயரத்தைக் கணக்கிட ‘பொங்கலைமானிகள்’ (tide gauges) அமைக்கப்பட்டுள்ளன, இவை புயற்கால பொங்கலைகள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்க மிகவும் உதவியாக இருக்கின்றன.

ஆனால் சுனாமி அலைகளைக் கண்காணிக்க, வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்க ஆபத்து அதிகமுள்ள ‘லைன் ஆப் ஃபயர்’ (line of fire) என்ற பகுதியிலிருந்து வரக்கூடிய சுனாமி அலைகளைக் கண்டுபிடிக்க அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய ஓரு கட்டமைப்பு தேவைப்பட்டது. இதற்கென வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

எனவே முழுவதும் இந்திய் தொழில்நுட்பத்தால் அமைந்த ‘தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்’ 2007ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் ஹைதராபாத்தில் தொடங்கப்பgட்டது. தற்போது ரிக்டர் அளவுகோலில் 6.0த்திற்குமேல் சக்தியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டால் அது தேசிய நிலநடுக்க மையத்தின் நிலநடுக்கமானிகளின் வலையமைப்பு மூலமாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும்.

ஆழ் கடலில் அமைக்கப்பட்டுள்ள கடல் அடிமட்ட அழுத்த உணரிகள், சுனாமி அலைகள் உருவாகியிருந்தால் அதனை உறுதி செய்யும். ‘சர்வே ஆப் இந்தியா’ சுனாமி அலைகள் நகர்வதைக் கண்காணிக்க 30 பொங்கலைமானிகளை அமைத்துள்ளது. ‘இன்டகரேட்டட் கோஸ்டல் அண்ட் மரைன் ஏரியா மேனேஜ்மென்ட்’ (Integrated Coastal and Maraine Area Management) என்ற அமைப்பு கணினியில் சுனாமி மாடல்களை (Tsunami Models) உருவாக்கி இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் எவ்வெப்பகுதிகள் சுனாமி தாக்குதலால் அதிகமான பாதிப்பைப் பெறகூடியவை என்று கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கணினி மாடல்களுக்குத் தேவையான கடலோரப் பகுதிகளின் வரைபடங்களை நேசனல் ரிமோட் சென்சிங் நிறுவனம் (National Remote Sensing Agency – NRSA) தன்னுடைய கார்டோசாட் (Cartosat) செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் தjருகிறது. சுனாமி எச்சரிக்கைகுத் தேவையான தகவல்களை உடனடியாகப் பெற்றுத் தருவதில் இஸ்ரோ (ISRO) தன்னுடைய செயற்கைக்கோள்கள் மூலம்  துணைபுரிகிறது.

இவ்வாறு அந்த இரண்டு மணி நேரம் இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

பகல் நேர நெல்லை – செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்

railway news - 2026
#image_title

நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில் வழித்தட பயணிகளுக்கு வசதிக்காக ஜனவரி 1 முதல் புதிய கால அட்டவணைப்படி பகல் நேர திருநெல்வேலி செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் நேரத்தில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 01.01.2026 முதல் இந்த புதிய நேர அட்டவணை அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் நெல்லை – தென்காசி வழித்தடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிய நேர அட்டவணைப்படி, நெல்லை ஜங்ஷனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. இந்த நேர மாற்றம் காரணமாக, செங்கோட்டை மற்றும் இடைநிலையங்களுக்கு பயணம் செய்யும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக வசதியைப் பெறுகின்றனர். நீண்ட காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சந்தித்து வந்த சிரமங்களுக்கு இந்த நேர மாற்றம் ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.

மேலும், இரணியல், நாகர்கோவில், வள்ளியூர் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் – திருச்சி (22628) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ஜங்ஷனுக்கு மதியம் 2.20 மணிக்கு வந்து சேர்வதால், அந்த ரயிலில் வரும் பயணிகள் நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு எளிதாக மாற்றிச் செல்ல முடிகிறது. இதனால் நீண்ட நேரக் காத்திருப்பு இல்லாமல் பயணம் சாத்தியமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்த நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில், நெல்லை – தென்காசி வழித்தட மக்களுக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் செங்கோட்டை – தாம்பரம் ‘சிலம்பு’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறந்த இணைப்பை வழங்குகிறது. இந்த இணைப்பின் மூலம் பயணிகள் சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு எளிதாகப் பயணம் செய்ய முடிகிறது.

முன்னதாக இந்த வழித்தட மக்களுக்கு நேரடி மற்றும் வசதியான ரயில் இணைப்புகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது செய்யப்பட்ட இந்த நேர மாற்றம் பயண நேரத்தை குறைப்பதோடு, மாற்றுப் போக்குவரத்து தேவையையும் பெருமளவில் குறைக்கிறது.

குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறுநகர மக்களுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். மொத்தத்தில், நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயிலின் இந்த நேர மாற்றமும், அதனுடன் கிடைத்துள்ள முக்கிய ரயில் இணைப்புகளும் தென் தமிழக ரயில் பயண வசதிகளை மேம்படுத்தும் ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.