ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறந்த கட்டிடகலை உயர்ந்த ராஜகோபுரம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் தென்றல் காற்று,பழமையும் புராண வரலாற்று பெருமை நிறைந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஐப்பசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வியாழக்கிழமை கோலாகோலமாக நடந்தது.திரளான பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து தேர்இழுத்து பல்வேறு நேர்ச்சை கள் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள பழமையும் புராண வரலாறு பெருமை நிறைந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடைபெறும்.
இந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி வேதபாராயணமுறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வீதி உலா நடைபெற்று வந்தது.
திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வரும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் காலை 9.35 இழுக்க தேரோட்டம் துவங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலை வந்து சேர்ந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை துவங்கி நடைபெற உள்ளது.
தஸ்லிமா நஸ்றீனின் நீண்ட பதிவிலிருந்து: “முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தம் தேவை. அது இல்லாமல், முஸ்லிம் உலகம் மட்டுமல்ல, முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் இருளில் மூழ்கும் – பயங்கரத்தால் நிறைந்த இருள்.”
1, முஸ்லிம்கள் முகமதுவையும் அல்லாஹ்வையும் தங்கள் இதயங்களின் தனிப்பட்ட கருவறைக்குள் வைத்துக் கொள்க – வேறு எங்கும் (பொதுவெளியில்) அல்ல.
2, தூதுவரின் வாழ்க்கை மற்றும் புனித நூல் ஆகியவை விவாதத்துக்கும் – விமர்சனத்துக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
3, “ஷரியா மூலம் அரசாள வேண்டும்” என்ற கருத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
6, புர்கா, ஹிஜாப் இத்யாதிகள் நிராகரிக்கப்பட வேண்டும்.
7, மாற்று மதங்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்.
8, தன் நாட்டுக்கும் அதன் கலாச்சாரத்திற்கும் விசுவாசம் காட்டப்பட வேண்டும்.
9, குடும்பக் கட்டுப்பாடு, பெண்களுக்கு சம உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
‘From the very birth of Islam, violence has been given such sanctity that breaking free from it has become almost impossible. Among the Prophet Muhammad and the caliphs who followed him, there was hardly any room for non-violence. After the Prophet, except for Abu Bakr, all—Uthman, Umar, Ali, Imam Hasan—met with gruesome deaths. The way jihad has been glorified in the Islamic scriptures makes it extremely difficult for Muslims to cultivate a spirit of non-violence.
Sometimes people can overcome violence through the pursuit of art and culture. But in Islam even that is forbidden. The religion is openly hostile to the fine arts. Islam, in essence, is a faith largely bereft of culture. Dance, music, instruments, singing, painting, sculpture—all are declared haram. Many individual Muslims have, of course, excelled in various branches of culture, but only by transcending the boundaries of religion. They achieved greatness because they could rise above dogma.
Today, in almost every Muslim-majority country, we witness the eruption of violence—democracy is absent, non-Muslim minorities face extinction. How do we escape this nightmare? Terrorism and Islam are increasingly seen as synonymous in the public mind. This is not a baseless accusation, nor can it be dismissed as a conspiracy of the RSS or BJP. The same picture of violence is visible across the entire world.
Labeling this reality as “Islamophobia” cannot save us. We must face the truth. That is why I say: not jihad, but non-violence must be nurtured within Muslim society. What is needed is reform. The educated and enlightened Muslims must realize that blaming others is futile—the solution lies in self-reflection and self-correction.
Today, arguing over a tangible God versus a formless Allah is meaningless. Both are products of imagination. No one has ever been able to prove the existence of Allah, nor will anyone ever be able to. It will remain a matter of belief, not evidence. Hence the belief that anyone who questions or criticizes Islam or the Prophet must be eliminated is not only destructive for Muslim society—it is disastrous for all humanity.
A large section of Muslims remain preoccupied with prayer, fasting, burqa, and hijab. They may become doctors or engineers, yet refuse to examine religion through the lens of reason. I have visited several Islamic missions where students are trained rigorously to become doctors—but alongside this, blind dogmatism is also cultivated. Thus, a doctor emerges with both medical skill and a deep-rooted bigotry. Within such a milieu, even the educated find it hard to renounce the path of jihad.
What, then, is the way forward?
Muslims must keep Muhammad and Allah within the private sanctum of their hearts—nowhere else. A modern society must be cultured and founded on gender equality. Violence has no place there.
The life of the Prophet and the Qur’an must be open to both discussion and criticism.
The idea of ruling a state by Sharia law must be abandoned completely.
Muslims must return from madrasa education to secular schooling.
Culture must be given its rightful place in individual and collective life.
The burqa, hijab, and puritanical dress codes should be discarded.
Respect must be extended to people of other faiths—and to atheists.
Loyalty must be shown to one’s land and its culture.
Family planning must be accepted.
Women’s equal rights must be embraced from the heart.
In short, Muslim society needs a profound reformation. Without it, not only the Muslim world but the future of all humankind will sink into darkness—a darkness filled with terror. ‘
–Osman Mallick
'From the very birth of Islam, violence has been given such sanctity that breaking free from it has become almost impossible. Among the Prophet Muhammad and the caliphs who followed him, there was hardly any room for non-violence. After the Prophet, except for Abu Bakr,…
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி பெரிய கோயிலில் செவ்வாய் கிழமை நடந்த காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஒருவரை போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் புராண சிறப்புமிக்க நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் திங்கள் கிழமை இரவு காவலாளிகள் பேச்சிமுத்து (50), சங்கரபாண்டியன் (65) ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கொலையாளிகள் கோயிலில் இருந்த சில சிசிடிவி கேமராக்கள் மற்றும் பதிவுகளையும் எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 6தனிப்படை அமைத்து தேடி வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் கூறினார். மேலும் எஸ்பி அளித்த பேட்டியில், “முதற்கட்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் குற்றவாளிகள் என அடையாளம் தெரியவந்துள்ளது. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்றார்.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை இரவு வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் (25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் நடந்த கோயில் பகுதிக்கு அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது கோயில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் விசாரித்த போது தானும் இப் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரும் சேர்ந்து கோவிலில் உண்டியல் கொள்ளையடிக்க வந்தபோது கோயில் காவலாளிகள் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கோவிலில் உண்டியல் கொள்ளையடித்த பொருட்களை தேவதானம் அருகே கல்லணை பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாக போலீசாரிடம் நாகராஜ் கூறியதையடுத்து போலீசார் அவரை அப்பகுதிக்கு அழைத்து சென்றனர். ஒளித்து வைத்திருந்த பொருட்களை நாகராஜ் எடுத்த போது அவர் கொலை செய்ய பயன்படுத்தி அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டை சாமியை வெட்டியுள்ளார். உடன் அவர் தப்பித்து சென்றதால் போலீசார் நாகராஜ்யை காலில் சுட்டு பிடித்துள்ளனர். தற்போது இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டிவிட்டு குற்றவாளி தப்ப முயன்றபோது. உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது .
குற்றவாளி நாகராஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயில் முன் பொதுமக்களுடன் சேர்ந்து கொலைக் குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோயில் காவலர்கள் கொலை சம்பவம் குறித்து அறிந்தது செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான பொது மக்கள் கோயில் முன் திரண்டனர். பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளி நாகராஜ் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போலிசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான நபர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நடித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாரை ஏமாற்ற முயன்று உள்ளார்.கொலை வழக்கில் கைதான நாகராஜ் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளி வந்ததும், சிசிடிவி காட்சிகளில் அவரது உருவம் தெரிந்ததை வைத்து போலீஸார் நாகராஜை கைது செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கொலையாளி அப்பாவி போல் நடித்தது போலீசார் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அருள்மிகு அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவள்ளி, தேவசேனா ஸமேத ஸ்ரீஷண்முக சுப்பிரமணியர் ஸ்வாமி சன்னதி முன்பு வைத்து வைத்து நகர இந்து முன்னனி மற்றும் கந்த சஷ்டி பாராயண குழு சார்பில் கந்தசஷ்டி பாராயணம் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் வேடம் அணிந்து வந்த குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு நகர இந்து முன்னனி தலைவா் மாசாணம் தலைமைதாங்கினார். குழு நிர்வாகிகள் தாயின் மடியில் அறக்கட்டளை நிறுவனத்தலைவா் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன் விஸ்வகர்மன் ராஜேஷ்வரி ஆகியோர் முன்னிலைவகித்தனா் பாராயண குழு ஒருங்கிணைப்பாளா் தேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து முருகன் வேடமணிந்த சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. .
முன்னதாக சண்முகசுப்பிரமணியா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது.
சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு எவ்வாறு வரி விலக்கு அளித்தது போல தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்க அளிக்க வேண்டும் – என உசிலம்பட்டியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்பினர் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் பஷீர் நடிப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான தேசிய தலைவர் திரைப்படத்தை படக்குழுவினர், உசிலம்பட்டி பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் தலைவர்களுடன் இணைந்து கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசியத் தலைவர் பட நாயகன் பஷீர், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இந்த ஜென்மத்திற்கான பலனை அடைந்து விட்டேன் என்றும், ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் சென்று வரும் போது எழுச்சி மிக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க வாழ்க என, கை தட்டல்களும், விசில் சத்தமும் தான் கடந்த 10 நாட்களாக எனது காதுகளில் கேட்க முடிகிறது.
விஜய், ரஜினி படம் மாதிரி இருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்வது போன்று தியேட்டருக்கு வருகின்றனர். ஏழாம் படை முருகனாக தேவரை சொல்வார்கள், இந்த உசிலம்பட்டிக்கு நான் வரும் போது அவர் சார்ந்த சமுதாய மக்கள் வரவேற்பது சந்தோசமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை கொண்டு சேர்ப்பதில் எனக்கும் ஒரு பங்காக மாறியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதியத் தலைவர் அல்ல தேசிய தலைவர் என்று சொல்லும் படம் இது. தமிழ்நாட்டிலேயே அதிகமான வரவேற்பு உசிலம்பட்டியில் தான் கிடைத்துள்ளது என , பேட்டியளித்தார்.
தொடர்ந்து, பேசிய பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி, சுதந்திர போராட்ட வீரர், மறைக்கப்பட்ட வரலாறுகளையும், எண்ணற்ற விமர்சனங்களுக்கு மத்தியில் யார் மனதும் புண்படாமல் எடுத்துள்ள படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பகுதியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்புகள், தேவரின் திருத்தொண்டர்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக வைக்கும் கோரிக்கை எப்படி சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரி விலக்கு அளித்தது போல பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
பஸ்ஸில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் வள்ளியூர் ஊருக்குள் போகாது என்று சொல்லி, அவமானப் படுத்தி, கோயில் பூஜாரியை பைபாஸ் சாலையிலேயே இறக்க முயன்ற ‘மதவாத’ அரசு பஸ் நடத்துனருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டியிட வைத்த பூஜாரியின் வீட்டுக்குச் சென்று இந்து முன்னணியினர் பாராட்டு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பணிமனையைச் சேர்ந்த டிஎன்.74 என்.2120 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு நவ.9ம் தேதி அதிகாலை, 4:50க்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. பின்னர் அதிகாலை 5 மணி அளவில் நாகர்கோவில் புறப்பட்டது. அந்த பஸ்சில் வள்ளியூரைச் சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார். அவர் மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார்.
இந்நிலையில், ‘பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்’ என, நடத்துனர் அந்தோணி அடிமை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், “இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லுமே. ஏன் இன்று என்னை பைபாசில் இறங்கச் சொல்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அகம்பாவத்துடன் பதிலளித்த நடத்துனர், “பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் சென்றுவர முடியாது” என அவதுாறாக பேசியுள்ளார்.
ஆனால் பயணி சுப்பிரமணியன் பஸ்ஸில் இருந்து இறங்க மறுத்தார். அவரது வற்புறுத்தலால் பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கே அவரது குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காரணம் அறிந்து வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து சுப்பிரமணியன் கூறுகையில், ”பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் நடத்துனருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர். இந்த பஸ் நாலுமாவடியில் இருந்து அவர்களுக்காக மட்டும் ஒப்பந்தம் பேசி இயக்கப்படவில்லை. அனைவரும் பொதுவான டிக்கெட் எடுத்து தான் பயணித்தோம். நடத்துனரும் என்னை அவதுாறாகப் பேசினார். இதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்” என்றார்.
இதனிடையே, இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி நடப்பதாகவும், ஆக.31ம் தேதி இதே பஸ் வள்ளியூருக்குள் செல்லாததால் பஸ்ஸின் நடத்துனரும் ஓட்டுனரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. வள்ளியூர், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இது பேரவைத்தலைவர் அப்பாவு தொகுதி.
திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாமல் இயங்கும், ‘ஒன் டூ ஒன்’ பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூருக்குள் செல்வது கட்டாயம். அதை பின்பற்றாமல் சிலர் பயணியரிடம் கடுமையாக நடந்து கொள்வது தொடர்கிறது.
இத்தகைய பின்னணியில், பயணியிடம் மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட நடத்துனர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பூசாரி சுப்பிரமணியனை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பாராட்டிய இந்து முன்னணி அமைப்பினர், அவருக்கு தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகர், கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம், நெல்லை மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம். பொருளாளர் துணைத்தலைவர் ஜெயக்கிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் பரமசிவம், களக்காடு ஒன்றிய தலைவர் கணபதிராமன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், “நேற்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் சர்ச்சில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு ஏற முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற கோவில் பூசாரியை நடத்துனர் அந்தோணிஅடிமை, ‘இது நாலுமாவடி சர்சில் இருந்து வரும் பேருந்து. ஆட்களை ஏற்ற முடியாது’ என தகராறு செய்து, பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளதோடு, பூசாரி தோற்றத்தில் இருந்தவரை ஏளனமாக மனதில் வைத்து பேசியுள்ளார்.
பூசாரி பாலசுப்ரமணியன் தனது மனைவி குழந்தையோடு போராடி பேருந்தில் ஏறிய பின்பும் பேருந்தில் இருந்த சில பயணிகள் மற்றும் நடத்துனரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் வள்ளியூர் ஊருக்குள் பேருந்து செல்லாது என பயணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் வள்ளியூரில் பொதுமக்கள் போராடியுள்ளனர். நடத்துனரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத வன்மத்தோடு செயல்பட்ட நடத்துனர் அந்தோணிஅடிமையை தனிநபராய் எதிர்த்து உரிமையை நிலைநாட்டிய பூசாரி பாலசுப்ரமணியன் அவர்களை வள்ளியூர் பொத்தையடியில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம். தனிமனிதனாக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் இந்துக்கள் அனைவரிடத்திலும் உருவாக வேண்டும் என பாராட்டி, வாழ்த்தினோம்” என்றார்.
இதுபோன்ற கையாலாகாத ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான திரு. பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து விரோதமும் கோயில் பராமரிப்பில் மெத்தனமுமே காரணம் என்று அறிக்கையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இப்படி ஒரு கொடூரக் குற்றம் நிகழ்ந்துள்ளது, ஏட்டளவில் கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில், கோவில் சிலைகள் சேதத்தில் தொடங்கி உயிரைப் பறித்து கோவில் உண்டியல் பணத்தைத் திருடும் துணிகரம் வரை தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கையில், திமுக அரசின் தொடர் இந்து விரோதமும், கோவில் பராமரிப்பில் காட்டும் மெத்தனமும் தான் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மக்களின் மதநம்பிக்கைகளையும் சட்டம் ஒழுங்கையும் ஒரு சேரத் தாக்கிய இந்தக் கொடூரக் குற்ற வழக்கில், வழக்கம் போல கண்துடைப்பு விசாரணையில் ஏவல்துறை ஈடுபடக்கூடாது. மேலும், கோவில் பணத்தைக் களவாட அப்பாவி உயிர்களைக் காவு வாங்கிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கோவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது; தமிழக அரசு அலட்சியம் செய்வதை இந்து முன்னணி கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் உண்டியல் உடைத்து திருட திருடர்கள் வந்துள்ளனர். திருடர்களைத் தடுத்த இரு காவலர்களை கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்துள்ளனர். கோவிலில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கொலை செய்யும் அளவு துணிச்சல் வருவதற்கு காவல்துறையின் மெத்தனபோக்கே காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை சம்பவம் பெருகி வருகின்றது. மேலும் திருக்கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நகைகள் ஏதேனும் திருடுபோய் உள்ளதா என்பது போன்ற தகவல்களும் ஏதும் வெளிவரவில்லை.
இரவு நேரங்களில் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முறையான ரோந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட தவறுவதே காரணமாக அமைகிறது.
தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் சுவாமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே திகழ்கிறது.
திருக்கோவில்களில் பெயரளவில் காவலாளிகளை நியமிப்பதை விடுத்து பிற அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கொடுத்து முன்னாள் ராணுவ வீரர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
மேலும் இக்கொலை சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை விரைந்து கைது செய்திடவும், கோவிலை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த இருவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
டெல்லியில் நடந்த தீவிரவாதிகளின் அட்டாக் என்பது அவசர கதியில் டாக்டர் முஷாமில் ஷகீல் கைது ஆனதும் உடனே வேலையை காட்டி அரைகுறையாக அட்டாக் செய்யப்பட்டிருக்கலாம். ஆம் அதன் டெரர் மாட்யூல் மிகப்பெரியதாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹரியானவில் கிட்டத்தட்ட 2.9 டன் அமோனியா வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகள் டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம். அதன் மூலத்தை கண்டுபிடித்த காரணமாக, அதை உடனடியாக அவசரகதியில் வெடிக்க வைத்திருக்க கூடும்.
அதுவும் அந்த காரில் மூவர் இருந்துள்ளதாக வருன் செய்திகளை பார்த்தால், தற்கொலைப்படையில் அவ்வாறு இருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் அதை டார்கெட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அது வெடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அதனை நெருங்கிய நிலையில் ரிமோட் மூலம் வேறொருவர் கூட அதை அவசரமாக வெடித்திருக்க கூடும்
அந்த வகையில் ரிமோட்டாக செயல்பட்டிருந்தால், அந்த வாகனம் கூகுள் மேப் போன்ற வழியில், வகையில் ட்ரேஸ் செய்யப்பட்டு வெடிக்க வைத்திருக்கக்கூடும்.
2014 ஆண்டு சல்மான் கான் என்பவன் அந்த Hyundai i20 (HR 26 CE 7674) காரை வாங்கியிருக்கிறான். அதை ஓலாவில் முகமது தாரிக் என்பவனிடம் விற்றதாகவும், அவனின் ஊர் புல்வாமா, இருப்பது ஃப்ரிதாபாத் (மா)வட்டம். அவனின் வாக்குமூலம் சந்தேகத்துக்கு இடமாக இருந்தகால் அவனை கைது செய்திருக்கரார்க்ள்.
அந்த கார் வந்தது புல்வாமவில் இருந்து, வந்திருக்க வேண்டும். அது பெட்ரோல், CNG கார் என்பதால், அதை அங்கே வெடிக்க திட்டமிட்டுருந்தால், அதற்கு அருகாமையில் CNG மட்டுமல்ல பெட்ரோலும் ஃபுல்லாக நிரப்பியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அதன் தாக்கம் அதிகரிக்க அது உதவும் என்பதால் அதை செய்திருக்க வேண்டும்.
இந்த வெடிகுண்டுகளை டாக்டர் முஷாமில் ஷகீல் (2,900 கிலோ) வெடிபொருள் கொண்டு வந்தவனும் புல்வாமா இப்போ இருப்பது ஃப்ரிதாபாத் என்பதால், பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் அதே வகையாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல இன்னொரு இடத்தில் முன்பு RDX கைப்பட்டப்பட்டதாக செய்தி வந்ததும் நாமும் பகிர்ந்திருந்தோம், அதுவும் இதே அமோனியா வகை வெடிபொருள் என்பதும், அதை ஏற்கனவே ட்ரிஸ்ட்ரிப்யூட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்பதும், அதில் ஒன்று வெடித்திருக்க கூடும் என்பதும் சாத்தியமாக இருக்கலாம்.
இந்த குழு ஹபி சையீத்தின் வட்டத்தில் தொடர்பில் இருப்பதாக ஆரம்ப கட்சி விசாரணைகல் கை காட்டுவதும், அது பங்ளாதேஷ் வழியாக இந்தியாவில் கொண்டு வந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் தோராயமான விசாரணை செல்லும் திசைகளை கைகாட்டுகிறது.
எனவே மொத்தமாக பங்க்ளாதேஷில் இருந்து ஊடுறுவியவர்கள இந்தியா முழுவதும் வேட்டையாட வேண்டிய அவசியம் இப்போது இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்ரியாவின் சிலிகுறி எல்லையில் பங்க்ளாதேஷ் அதன் HQ17 வகை (அதாங்க பாகிஸ்தானில் பல்லிளித்த HQ-19 இன் குறைந்த வகைக் வான் பாதுகாப்பு சிஸ்டம்).
அத்துடன் அங்கே சீனாவுடன் 5 பில்லியன் டாலரில் நவீனப்படுத்தப்பட்ட ஏவுகணைகள், அங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்றவை தாக்குதலுக்கு தயாராகும் சூழலில் மட்டும் அந்த ஆயுதங்கள் அங்கே வைக்கப்படும் என்றாலும், பாகிஸ்தான் பட்ட பாட்டிற்கு பிறகு அதை பங்க்ளாதேஷ் எப்படி செய்ய முடியும்?
அதன் நோக்கம் இதன் மூலம் இந்தியா தனது கடும் நடவடிக்கைகளை பங்க்ளாதேஷுக்கு எதிராக எடுக்கும்போது அங்கே இருக்கும் அடிப்படைவாத இஸ்லாமியர்களை ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு எதிராக திருப்ப முடியும் என்பதும் டீஃப் ஸ்டேட்டின் திட்டமிடலாக இருக்கும்.
இந்த நிலையில் இதுவரை BSF மூலம் மட்டும் பாதுகாக்கப்பட்ட் பங்ளாதேஷ் எல்லையில் (இந்தியாவின் அதிக 4300+ கிமீ எல்லை தூரம்) இந்தியா முதன் முதலாக மூன்று ராணுவத்தின் படைகளை, நவீன ஆயுதங்களை பெர்மெனெண்டாக நிருவியிருக்கிறது. அது சிலிகுறி என்பது பங்க்ளாதேஷ், நேபாள், சீனாவின் எல்லைகள் அருகில் உள்ள 22 கிமீ தூரம் கொண்ட ஒரு சிக்கன் நெக் என்ற பகுதி என்பதால், அதை சீனா செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இருக்கும் அவ நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் டீஃப் ஸ்டேட்டின் திட்டமிடலாக இருக்கலாம்.
ஆஃப்கானில் பக்ராம் விமானப்படை தளத்தை இந்தியா கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால், அதை அமெரிக்காவிற்கு கொடுக்கவோ, அது பயன்படுத்தவோ செய்த முயற்சிகளை தோற்கடித்து விட்டதாலும், அதில் இந்தியா, ரஷ்யா, சீனா ஒரே குரலில் அமெரிக்காவை எதிர்ப்பதாலும், இந்த வேலையஒ டீஃப் ஸ்டேட் செய்திருஜ்க கூடும்.
அதை பாகிஸ்தான் மூலம் செய்ய வாய்ப்புகள் குறைவான சூழலில், அப்படி செய்யும் செயல்கள் இந்தியா மீது தொடுக்கப்பட்ச போராகவே கருதுவோம் என்று அறிவிக்கப்பட்டதால், பங்ளாதேஷ் வழியாக செய்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவவின் ஆறு வடகிழக்கு மாநிலங்களை இணைத்து படா பங்க்ளாதேஷ் என்று வரைபடத்தை யூனுஸ் ராணுவ தளபதிக்கு கொடுத்தது என்று எல்லாம் பார்க்கும்போது, இந்தியா, பங்க்லாதேஷுக்கு எதிராக கடும நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் பங்ளாதேஷிகளை, திருப்பூர் உற்பட இந்தியா முழுவதும் வேட்டையாட வேண்டும். அது பல வகைகளில் இந்தியாவிற்கு உதவும். குறிப்பாகி 5 கோடி பங்க்ளாதேஷிகளும், ரோஹிங்காக்களும் இந்தியாவில் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது.
அவர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் வெறும் உடுறுவல்காரர்கள் மட்டுல்ல, அவர்கள் திரிணமுல் முதல் திமுகவின் ஓட்டு வங்கிகளாகவும் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியேற்றியாக வேண்டும்.
இரண்டாவதாக, அவர்களில் சிலர் நாசவேலையில் ஈட்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு, அவர்களை வேட்டையாட வேண்டியது மிக அவசியம். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு இங்கே ஆதார் முதல் ஓட்டுரிமம்.பெற்றித்தஙவர்கள் வரை கைது செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட மசூதிகள் சீல் வைக்கப்பட வேண்டும்.
இது தற்போதைக்கான நடவடிக்கையாக இல்லாமல், எல்லையில் ஊடுறுகிறவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் ஒழிய அந்த பயம் ஊடுறுவல்காரர்களுக்கு வராது. எனவே அதில் திருட்ட் வழியில் உள்ளே நுழைகிறவர்கள் ஆணா, பெண்ணா, குழந்தையா என்றெல்லாம் மனிதமாக பார்க்காமல், நமது எல்லைப்படையினர் தயவு தாட்சினியமின்றி சுட்டுக்கொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதுபோன்ற பலர் இருக்கக்கூடும். நம்மிடையே நட்பாக, அருகில் இருக்கிற மர்ம மனிதர்களில் கூட அவர்கள் ஒளிந்திருக்க கூடும். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்தால் அரசுக்கு தகவல் சொல்ல வேண்டியது அவசியம்.
இந்த தாக்குதலின் தொடர்புகல் எல்லாம் பங்க்ளாதேஷ் வழியாக வந்தாலும் அதன் செயல் பாகிஸ்தானில் இருந்து ஹபீஸ் சையது மற்றும் பாக் ராணுவத்தால் செய்யப்பட்டிருக்கும். இருந்தாலும் அதன் மூலம் டீஃப் ஸ்டேட் ஆந்ப் அமெரிக்கா என்பதில் சந்தேகமில்லை.
ஆரம்பத்தில் ட்ரம்ப் டீஃப் ஸ்டேட்டுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மாறி அவரும் டீஃப் ஸ்டேட்டின் கைகளுக்கு சென்றுவிட்டார். உலகில் 80% பிரச்சினைகளுக்கு மூலாதாரம் இந்த டீஃப் ஸ்டேட் என்பதனால் எப்போது டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா ஒழிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த உலகில் அமைதி திரும்பும்.
அதற்கு அமெரிக்காவின் மிக பலமான ஆயுதமான டாலர் அழிக்கப்படும்வரை அதற்கான சாத்தியங்கள் குறைவு. அதற்கு காரணம் அதை எதிர்க்கும் இந்தியா முதல் சீனா வரை அதன் தொழில்களும், முதலீடுகளும் டாலரை நம்பி இருப்பதால் அது உடனே நடக்க வாய்ப்பில்லை.
ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டாலரின் ஆதிக்கம் பெருமளவில் குறையும், அதற்கு பின்பும் அமெரிக்கா தன்னை மாற்றிக்கொள்ளாவிடால் அது குப்பையாகும். அது டீஃப் ஸ்டேடின் கைகளில் இருக்கும்வரை அது மாறுவதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்பதால், நாம் பாகிஸ்தான், பங்க்ளாதேஷை மட்டும் இப்போது வேட்டையாடி நம்மை காப்னாற்றிக்கொள்ள ஆபரேஷன் சிந்தூர் இரு நாடுகள் மீதும் டெக்டிகலாக தொடரவேண்டும்.
அதற்கு இந்த தேசத்தை நேசிக்கும் மக்களாகி நாம், அதை எதிப்பவர்களை தள்ளிவைக்க தயங்கக்கூடாது! #Indhea
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் இருந்து சாஸ்தாகோயில் செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்கிழமை காலை கோயில் திறக்க சென்றபோது இச்சம்பவம் நடந்தது தெரியவந்து உடன் சேத்தூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.கோவிலில் உண்டியல் மற்றும் சிலை கொள்ளையை தடுக்க முயன்றபோது இவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தேவதானம் சாஸ்தா கோயில் செல்லும் வழியில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்கட்கிழமை இரவு காவலர்கள் தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து(50)சங்கரபாண்டியன் (65) இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை சிலைகளை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது கொள்ளையடிக்க வந்தவர்களால் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கோவில் சேத்தூர் ஜமின் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து(50)சங்கரபாண்டியன்(65)என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன . இவைகள் மற்றும் நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியும் சாஸ்தா கோயில் செல்லும் சாலையில் ஆய்வு செய்தும் பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.
ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும் மிகப்பெரிய கோவிலை சுற்றி மிக உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளே சுவாமி சிலைகள் மூலவர் சன்னதியில் உள்ளன இந்த பழமை வாய்ந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம் இக்கோவிலில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது