ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கார் குண்டு வெடிப்புச் சம்பவம், நாட்டின் தில்லியில் செங்கோட்டை அருகே நடைபெற்றுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அடிக்கடி நடைபெற்ற குண்டுவெடிப்புகள், தற்போதைய பாஜக ஆட்சியில் இல்லை என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அதை முறியடிக்கும் வகையில் தலைநகர் தில்லியில் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தில்லி செங்கோட்டை அருகே, திங்கள் அன்று மாலை 6:52க்கு, சிக்னலில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், சுற்றிலும் தீயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சில வாகனங்கள் தீயில் நாசம் அடைந்தன. பத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கொல்லப்பட்டார்கள். அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ – ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன.
சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் அச்சத்துடன் அப்பகுதியில் இருந்து அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இது காரை வெடிக்கச் செய்து ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கூறப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக, ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியது. அதே நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த நபரின் கார், பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
தில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது. தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பயங்கரவாதிகள் நிறைந்த புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது தெரிய வந்துள்ளது. சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமா பகுதிக்கு மாறியுள்ளது.
முன்னதாக, ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதே நாளில் தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், வெடிபொருள் பதுக்கிய கும்பலுக்கும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை தீவிரமடைந்தது.
இந்நிலையில், தில்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என தில்லி போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு – காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. இந்நிலையில் நேற்று தலைநகர் தில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், 12 பேர் உயிரிழந்தனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், பரிதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்த தனது கூட்டாளிகள் போலீசாரிடம் சிக்கியதால், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புல்வாமா டாக்டர் உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது தில்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதி உமர் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கலைக்கடல் சங்கமத்திலே, கலைகள் அரங்கேற்றப்பட்டன. கலைகள் ஆனந்தத்தை அளிக்கின்றன மனதை மகிழ்விக்கின்றன. ரசிகர்கள் என்ற வகையிலே நாம் அனைத்தையும் அனுபவித்தோம். எங்கே கைத்தட்ட வேண்டுமோ, அங்கே கைதட்டினோம். நாம் கவனிக்கத் தவறி இருந்தாலும் கூட, பாராட்டுங்கள் என்று உணர்த்தப்பட்டது. அப்படியும்கூட நாம் செய்தோம்.
இயல்பாக, இப்போது 22 தேதியன்று, ராம்லலா அயோத்தியிலே வந்த பிறகு, இதன் விளைவாக எப்போதெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் ஜய் ஸ்ரீ ராம் கோஷம் எழுகிறது. நான்கு நாட்களில் என்னவெல்லாம் நடந்தன…… அது பற்றி விரிவாக நாம் கேட்டிருக்கிறோம்.
மிகவும் உற்சாகமாக இருந்தது ஆனந்தமாக இருந்தது. மிகவும் உத்வேகம் இருந்தது. அருமையான விஷயம். நிறைவு விழாவின் ஒரு பகுதியாக என்றால், உத்வேகத்தைத் தங்களுடைய இதயத்திலே….. பாதுகாப்பாய் வைத்து, உள்ளதைப் உரைக்க வேண்டியிருந்தது. கைதட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை நீங்கள் கைதட்ட வேண்டாம். இப்போது மனவமைதியோடு கேளுங்கள்!!
சம்ஸ்கார் பாரதி அமைப்பு ஒரு நிலைக்கு வந்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதற்கென ஒரு இடம் கலை உலகத்திலும் ஏற்பட்டு விட்டது. அதற்கென ஒரு வல்லமையும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வல்லமைக்குட்டு முன்னேற வேண்டுமென்றால், நாம் முன்னோக்கி சிந்தனை செய்ய வேண்டும். முன்னோக்கிய சிந்தனை என்பது ஒன்றும் புதிய கருத்து அல்ல. ஏனென்றால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது அதன் பின்னணியில் ஒரு இலட்சியம் இருக்கிறது. செயல் வளர்ச்சியில் பல கட்டங்களை கடக்கும் போது, அதன் போக்கின் திசையில் மாற்றம் ஏற்படுவதில்லை. செயலின் இலக்கு மாறுபடுவதில்லை. அந்த வகையிலே, அடுத்த கருத்து என்பது புதிய கருத்து அல்ல. ஒரு செயலைத் தொடங்கும் முன்பாக கருத்து கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும், ஆனால் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று கருத முடியாது. இப்படி சங்கப்பணிகளிலும் கூட நாம் பார்க்கிறோம்.
1925ஆம் ஆண்டிலே சங்கம் நிறுவப்பட்டது அதற்கு 5 ஆண்டுகள் முன்பாக, டாக்டர் ஹெட்கேவார்….. நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் அமைப்புத் தலைவராக இருந்தார். காந்தியடிகள் மாநாட்டின் தலைவராக இருந்தார். டாக்டர் ஹெட்கேவார் அப்போது விதர்பா காங்கிரஸின் உறுப்பினராகவும் இருந்தார். விவாதப்பொருளைத் தீர்மானிக்கும் குழுவில் முன்மொழிவு என்னவாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தில், அவருடைய கருத்துக்களும்….. ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவரும் இரண்டு முன்மொழிவுகளை அளித்தார். இரண்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை…. விவாதப் பொருளாக. ஆனால் அந்தக் காலத்தில் காங்கிரசுக்கு இருந்த கொள்கைப் போக்கினை அனுசரித்தே இருந்தது. காந்தியடிகள் தலைவராக இருந்தார் டாக்டர்ஜியின் முதல் முன்மொழிவு என்னவென்றால், முழுமையாக பசுவதைத் தடுப்பை முன்னிட்டு காங்கிரஸ் பாடுபட வேண்டும். மேலும் 2ஆவதாக, முழுமையான சுதந்திரம், என்ற இலட்சியத்தை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் அதுவரை காங்கிரஸ் இதைச் செய்யவில்லை. அதைச் செய்யத் தான் வேண்டும்.
லோக்மான்ய திலகர். அண்ணல் காந்தியடிகள் எல்லோரும், மனதில் இதையே இருத்திக் கொண்டு பணியாற்றினார்கள் லோல்மான்ய திலகர் கூறியும் இருந்தார், எத்தனை…. கிடைக்கிறதோ அதைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கிப் போராட வேண்டும். சுயராஜ்ஜியம் என்னுடைய பிறப்புரிமை. மனதில் இருந்ததா என்ற சந்தேகமில்லை மனதில் இருந்தது. ஆனால் உகந்த சமயத்தில் உகந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்றால் எது உகந்த சமயம்?
இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அப்போது காங்கிரஸில் இருந்த மூத்தோர் சுபாஷ் பாபு ஜவஹர்லால் நேரு. இவர்கள் அந்த நாளைய காங்கிரசின் மூத்தவர்கள். டாக்டர் ஹெட்கேவாரின் வயதை ஒத்தவர்கள். அப்போது கல்கத்தா காங்கிரசின்….. மாநாட்டிலும் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார் ஆனால் 1920இலே அதற்கும் முன்பாக, டாக்டர் ஐயா கூறினார் முழுமையான சுதந்திரம், இதனை காங்கிரஸ் தனது இலட்சியமாக அறிவிக்க வேண்டும். மேலும், சுதந்திரமான பாரதம், அடிமைத்தளையில் பீடிக்கப்பட்டிருக்கும் பிற தேசங்களை விடுவிக்கும்.
இதையும் அவர் அறிவித்தார். அதாவது சங்கத்தை நிறுவும் முன்பாகவே டாக்டர் ஐயாவின் மனதிலே தீர்மானித்து விட்டார், அதிலே பாரதம் பற்றியும் சிந்தித்தார், அதோடு பாரத த்தின் தாக்கமுடைய இருப்பு உலகை எப்படிப் படைக்கும், அதற்கான வரைபடமும் அவர் மனதிலே தயாராக இருந்தது. ஆனால் இவை எதையுமே அவர் சங்கத்தை நிறுவும் காலத்திலே தெரிவிக்கவில்லை. அவர் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டும் கூறினார். செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? தினமும் ஷாகாவிற்கு வர வேண்டும்.
மோரோபந்த் பிங்க்ளே…… நம்முடைய மூத்த காரியகர்த்தர். ராம்ஜன்மபூமி இயக்கத்தினுடைய….. வழிகாட்டி அவர். அவர் ஒருமுறை பௌத்திக்கின் போது வெகுகாலம் கழித்து கூறினார், அதாவது ஷாகா செல்லும் போது தெரிய வந்திருந்தால், இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று, அப்போது ஒருவேளை நாங்கள் ஷாகா போவதையே நிறுத்தியிருப்போம். டாக்டர் ஐயா இதையெல்லாம் கூறவேயில்லை. ஒவ்வொன்றாக மெல்லமெல்ல இணைந்து கொண்டன. சக்தி அதிகரிக்கும் வேளையிலே, செயல்சக்தி அதிகரித்த போது, அப்போது இதைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. சக்தி இல்லாத போது பெரிதாகப் பேசினால், அதனால் பயனேதும் கிடையாது. தத்தோபந்த்ஜி இந்தச் செயல்பாட்டை செயல்முறையை ப்ரோக்ரெசிவ் அன்ஃபோல்ட்மெண்ட் என்று அழைக்கிறார். படிப்படியாக வெளிப்படுத்தல்.
என் கருத்துப்படி இந்த சன்ஸ்கார் பாரதி அமைப்பின் பயணத்திலே, இப்போது நம்மிடம் போதுமான சக்தி வந்து விட்டது நமக்மென ஒரு இடம் உருவாகி விட்டது, நாம் திட்டமிட்ட நீண்டதூர இலக்கு நாம் நினைக்கும் தொலைநோக்கு சிந்தனை, இதன் அடுத்த கட்டத்தை நாம் எட்ட வேண்டும் அதை நோக்கி நாம் பயணப்பட வேண்டும். சம்ஸ்கார் பாரதி, கலைத்துறையிலே, மிக முதன்மையான அமைப்பாக, ஆவது உறுதி. ஏனென்றால் நாம் எப்போதும் விரிவாக்கம் பற்றியே பேசுகிறோம். மேலும் ஆதாரபூர்வமாக கலை கலாச்சாரத்தை ஊடகங்களாக கருதி, நாட்டுநலனிலே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க, நாம் பணியாற்றி வருகிறோம். ஆகையால் நாம் முன்னேறுவோம் முதன்மை நிலை அடைவோம். இதற்காக வித்தியாசமாக எதையும் சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் ஏன் பெரிதாக வேண்டும் ஏன் முதன்மையாக வேண்டும்? ஏனென்றால் நாமனைவரும் பாரதீய கலையுலகில், பாரதீய கலை ஆய்வினை நிறுவ வேண்டும்.
நாம் கலைஞர்கள், நமது கலையினை வெளிப்படுத்துகிறோம். மற்ற கலைஞர்களின் வெளிப்பாட்டினைப் பார்க்கிறோம். ரசிகத்தன்மையோடு அதை அணுகுகிறோம். நம்முடைய கலையை மிகச் சிறப்பாக அளிக்கிறோம். வெறும் கலை பற்றி மட்டும் என்றால் இதோடு போய் விடும். ஆனால் இதற்காக ஒருங்கிணைக்க வேண்டாம் நமது கலையின் சாதனை எத்தனை சிறப்பானதோ, அந்த அளவுக்கு சிறப்பிடம் கிடைத்து விடும்.
ஆனால் கலை, நற்பண்புகளை ஏற்படுத்தவே படைக்கப்பட்டவை. சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உருவானவை. எப்படிப்பட்ட சமூகமென்றால், ஒட்டுமொத்த உலகத்தையுமே, ஸ்வம்ஸ்வம் சரித்ரம் சிக்சரண் ப்ருதிவ்யாம் சர்வமானவ:. நம்முடைய நற்பண்புகளை எடுத்துக்காட்டாக்கி, அதை வாழ்க்கைப் பாடமாக்க வேண்டும். அப்படிப்பட்ட மனித சமூகத்தை நம்முடைய தேசத்திலே உருவாக்கியளிக்க, பணியாற்ற வேண்டுமென்றால், இந்த கலையுலகில் சில கலைஞர்களால் மட்டுமே ஒன்றும் ஆகாது. அனைத்துக் கலையுலகத்தின் பணி இது, அனைத்துக் கலையுலகும் இந்த நோக்கோடு பயணிக்க வேண்டும்.
இன்று இந்த நிலை இல்லை. கலையின் பங்குபணி என்னவென்றால், சமூக வாழ்க்கையிலே, இந்த உணர்வோடு கலைஞர்கள் கலை சாதனையை செய்ய வேண்டும். நாம் என்னவோ செய்கிறோம் சம்ஸ்கார் பாரதியோடு தொடர்பு இருக்கிறது அவர்கள் கருத்து அளித்தார்கள். நம்மோடு தொடர்பில் இல்லை என்றாலும் அதே எண்ணப்பாடு கொண்ட பல கலைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர்களின் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையினர், மெய்யான சாதனை என்னவோ செய்கிறார்கள்.
ஆனால் இது வெறும் தனிப்பட்ட பயிற்சி அல்ல. நம் நாட்டிலே ஒவ்வொரு பயிற்சியும், அவை…. அவரவர் செயல்களின் மாலை, இறைவனுக்கு அர்ப்பணம் செய்யவே பயனாகிறது. இறைவனை எவ்வாறு வழிபடுவது? தங்களுடைய, நற்கருமங்கள் என்ற மலர்மாலையை ஏற்படுத்தி, அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது. மேலும் இறைவன், துரும்பிலும் இருப்பவன். விசாலமான விண்ணிலும் இருப்பவன். எங்கும் நீக்கமற நிறைந்தவன்.
அனைத்தும் இறைவனே. இதைத் தான் மிகச் சிறந்த பாடகர்களும் கூட, தங்கள் கலையை வெளிப்படுத்திய பிறகு கேட்க வந்தவர்களை விழுந்து வணங்குகிறார்கள். உள்ளபடியே அவர்களுடைய பாடலைக் கேட்க வந்தவர்கள், அவர்களை இறையாகப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த இறைவன், கேட்க வந்த ரசிகர்களை இறைவர்களாகப் பார்க்கிறார்.
நம்முடைய சமூகம் வழிபடக்கூடியது. இந்த சமூகத்திலே கலையுலகம் தனது பங்குபணியை ஆற்றினால், அனைத்துக் கலைஞர்களும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் இதைப் புரிந்து கொண்டு, தங்களுடைய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆக கலைபற்றிய விளக்கம் பாரதீயம் பற்றிய விளக்கமாகி விடும். அப்படி இன்று இல்லை. பாரதீய கலையின் சாராம்சம் என்ன சத்யம் சிவம் சுந்தரம். அவர் வாய்மைவழி நடக்கிறார். சத்தியத்தை அவர் மறைப்பதில்லை. ஒளித்து மறைத்து எல்லாம் அவர் பேசுவதில்லை. உள்ளதை உள்ளபடி, அப்படியே உரைக்கிறார்.
ஆனால் எந்த வகையாக உரைக்கிறார் என்றால், இதைத் தெரிந்த பிறகு, சத்தியத்தைக் கண்ட பிறகு, சிந்தனை முழுக்க சிவத்தை நோக்கித் திரும்புகின்றது. இப்போது கலையின் கண்ணோட்டம்…. சமூகத்தின்பால் இல்லை என்பதால், சில பொருளற்ற விவாதங்களில் சிக்கிக் கொள்கிறது. அல்லது, கலையின் கண்ணோட்டம், சமூகத்திலே தன்னுடைய சுயநலத்தை நிறைவு செய்வதற்காக, சமூகத்தைப் பிளவுபடுத்தவல்ல கண்ணோட்டத்தை ஏற்படுத்த திருப்பப்படுகிறது. 13.00 ஏனென்றால், உலகின் 2000 ஆண்டுக்காலக் நிலையைப் பார்த்தால், வாழ்வதற்கான போராட்டம். மேலும் பலமுடையவரின் வெற்றி. பலமுடையவரே ஆள்வார். இந்த இரண்டு தத்துவங்களை ஆதாரமாக கொண்டது.
ஆக இந்தக் கருத்தியல்படியே 2000 ஆண்டுகளாக உலகம் இயங்கி வந்திருக்கிறது. நிலையை அப்படியே வைத்திருப்பதில் யாருக்கு நன்மையாக இருக்கிறதோ, அவர்கள் சமூகத்திலே ஏதோ வகையான பிரிவினையை ஏற்படுத்தியபடி இருப்பார்கள். இதையே முயல்வார்கள். சமூகத்திலே கண்ணியமற்றவைகளை முன்னிறுத்துவார்கள். கண்ணியமற்றவை என்பது என் கற்பனையில் உதிக்கவில்லை. அனைத்து உலகமும் இந்தச் சங்கடத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது.
கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நம்முடைய வாழ்க்கையின் நலன்கள், நம்முடைய வாழ்க்கையின் அமைப்பு, நம்முடைய நடவடிக்கைகளின் ஒழுங்குமுறை, அனைத்தின் மீதும் தாக்குதலை உலகத்து மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முன்னேறிய நாடுகள். வோகிஸம், கல்சுரல் மார்க்ஸிஸம் என அநேக பெயர்களில் இவை முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை, கையளவு பேர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக, ஒரு கோட்பாட்டை….. கோட்பாடும் இல்லை, பொய்கள் புனைவுகளை உருவாக்கி, அதன் வாயிலாக, நாடுகள் அனைத்தையும் சின்னாபின்னப்படுத்துவது, இதனால் தாங்கள் சுயலாபம் அடைந்து மற்றவர்களை, நிரந்தரமாக ஆட்சி புரிவது. ஒரு பெரிய கதை உலகிலே அரங்கேறி வருகின்றது. இதன் மீது புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
அனைவருமே, இதிலிருந்து மீள்வது குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கலையின் வாயிலாக நலன்களை நிறுவக்கூடிய கலையின் வாயிலாக சமத்துவத்தை நிறுவக்கூடிய, கலையின் வாயிலாக நல்லிணக்கத்தை நிறுவக்கூடிய பார்வை. இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த பாரதம் இந்தப் பார்வையை முன்னிறுத்தி, செயலாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தக் கண்ணோட்டத்தின் பின்னே வாய்மை இருக்கிறது.
சர்வம் கலு இதம் பிரம்மம். எந்த வேற்றுமையும் பாராட்ட வேண்டிய தேவையில்லை. मातृवत् परदारेषु, परद्रव्येषु लोष्ठवत्।आत्मवत् सर्वभूतेषु. இது எதன் ஆதாரமாக விளங்குகிறதோ அந்தக் கலாச்சாரத்தைக் கலைகள் வாயிலாக வெளிப்படுத்தும் பார்வை. அது பலமடைய வேண்டும். நம் தேசம் சமூகத்திற்காக, நம்முடைய கலைகளுக்காக இறைவன் விதித்த கடமைப்படி, அதை வெற்றிபெறச் செய்ய, நாம் இதைச் செய்தாக வேண்டும். இந்த நோக்கில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அந்த வ்கையிலே சமூகத்திலே தேவைகள் இருக்கின்றன, சமூகத்திலே பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றால் பாதிக்கப்பட்ட, பிரிவினர் இருக்கின்றார்கள். அவர்கள் மனதில் வினாக்கள் இருக்கின்றன. இவற்றை மறுக்க முடியாது ஏற்க வேண்டும். இவற்றை நாம் கையாள வேண்டும். நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்ய வேண்டும். ஆனால் இவையனைத்தும் சிவத்துவத்தை நோக்கிச் செல்ல வேண்டும், என்றதான கண்ணோட்டத்தை நிறுவ வேண்டும். அதன் அழகினை, நம் நாட்டிலே, சிவத்துவத்தோடு மட்டும் அல்லது சத்தியத்தோடு மட்டும்,
நாம் கலைகளின் அழகை அளவீடு செய்வதில்லை. சத்தியமும் சிவமும் ஒன்றுபோலச் செல்லும் போது தான், கலையின் அழகு மெருகேறும். மேலும் சத்தியம் சிவம் சுந்தரம், நம் கலைகளின் அடையாளம். இந்தப் பணியை ஆற்ற வேண்டும். பணியாற்ற வேண்டுமென்றால், கார்யகர்த்தர்கள் வேண்டும். अधिष्ठानं, तथा कर्ता करणं च पृथग्विधम् | विविधाश्च पृथक्चेष्टा, दैवं चैवात्र पञ्चमम्.
தெய்வம் இருக்கிறது. அது சரியான காலத்தில் தான் வெளிப்படுகிறது. ஆலயத்திற்கான போராட்டம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. ஆனால் ஆலயம் இப்போது தான் உருவானது. அதனால் தியாகமோ உழைப்போ குறைவாகச் செய்தார்கள் என்பது பொருளல்ல. அனைவரும் அனைத்தையும் செய்தார்கள், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு செய்தார்கள். உயிர்த்தியாகங்களையும் புரிந்தார்கள்.
ஆனால், 100 குடம் தண்ணீரை தோட்டக்காரன் ஊற்றினாலும், பருவம் வரும் போது தான் பழம் தரும். ஆனால் மேலும்…. 5 ஆவதாக ஒன்று உண்டு தெய்வத்தோடு கூட. அதோடு. அதாவது தெய்வத்தோடு கூட மேலும் ஒன்று 5. அதற்கு முன்பாக நான்கையும் நிறைவேற்ற வேண்டும். இதிலே ஒரு கோட்பாட்டு அடிப்படை உள்ளது. பயணத்தில் நாம் கொள்ள வேண்டிய கண்ணோட்டம். அடுத்ததாக….. செயலாற்றும் முறை.
மூன்றாவதாக, அந்த செயல்முறையை வெற்றியடையச் செய்வதற்கு, அநேக வகையான, முயற்சிகளின் தேவை இருக்கிறது. ஆனால் இவையனைத்தையும் செய்பவரே கார்யகர்த்தர் அவரே கர்த்தா. எலிகளின் நாடாளுமன்றம் திடீரென…… கூடியது. கூட்டப்பட்டது. ஏன்? பூனை என்ற ஒரு விலங்கு உள்ளது. அது நம்மை வேட்டையாடிக் கொல்கிறது. அப்போது வேறேதும் இருக்கவில்லை. எலிகள் மட்டுமே இருந்தன, எலிகள் காரணமாக உலகம் பீடிக்கப்பட்டது. ஆகையால் பிரம்மன் பூனையைப் படைத்து அனுப்பி வைத்தார். பூனை சீறிப் பாய்ந்தது, அடுத்து என்ன? ஏகப்பட்ட எலிகள் இதுவோ பூனை. இதற்கு தினமும் தீபாவளி பொங்கல் தான். ஒரு கையால் ஒரு வீச்சு, 4-5 எலிகள் பிடிக்குள் வந்தன. கொன்று தின்றது. எலிகளுக்கோ பிராண சங்கடம்.
ஆகையால் நாட்டாளுமன்றம் கூட்டப்பட்டது. அனைத்து விதமான எலிகளும் கூடின. பெரியபெரிய உரைகள் ஆற்றப்பட்டன. அந்த கலந்தாய்வு முடிவில் ஒரு தீர்மானம் மேற்கொண்டன. பூனையின் கழுத்திலே ஒரு மணியைக் கட்டுவது. முன்மொழிவு நிறைவேறியது. ஓர்மனதாக. அவையில் இருந்தோருக்கெல்லாம் ஒரே ஆனந்தம் தான். பிரச்சனைக்கு முடிவு கட்டியாகி விட்டது. வழியைக் கண்டுபிடித்தாயிற்று. கிளம்பத் தொடங்கின. அப்போது வெளியேறும் வாயிலிலிருந்து ஒரு வயதான எலி வெளிப்பட்டது. கைகளை அகல விரித்து அந்த வயதான எலி, அனைவரையும் நிறுத்தியது. நல்ல வேலையை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றது, இது சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் என்றது.
ஒரு சின்ன குறையை மட்டும் சரி செய்யுங்கள் என்றது. அது என்ன என்றன மற்றவை. மணியைக் கட்டும் எலியின் பெயரையும் இப்போதே தீர்மானம் செய்யுங்கள் என்றது. தீர்மானிக்கவே முடியவில்லை. அனைத்தும் தங்கள் கருத்தை உரைத்தன. ஆகையினாலே தான், ஏராளமான கட்டுக்கதைகள் பிரசுரிக்கப்படுகின்றன. இப்போதெல்லாம். ஆனால் இதுவரை பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுவது பற்றி பிரசுரிக்கப்பட்டதேயில்லை. ஏனென்றால் யார் செய்வார்கள் என்று தீர்மானிக்கப்படவில்லை என்றால் வேலை எப்படி நடக்கும்? ஆகையால் நாம் கார்யகர்த்தர்கள் ஆக வேண்டும். நாம் பணியாற்றும் போது ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கும்.
ஸ்ரீ இராமன் இலங்கை மீது மாபெரும் போரினைத் தொடுத்த பிறகு வெற்றி கொண்டார். பின்னர் தான் வெற்றி கிடைத்தது ஜயித்த பிறகு, வானர வீரர்களோடு கூட புஷ்பக விமானத்தில் அயோத்தி வந்தார். அதன் பிறகு அனைவரும் வரவேற்கப்பட்டார்கள். அவரவர்க்கு ஏற்ற வகையிலே வெகுமதிகளை வழங்கினார் பலவிதமான கௌரவங்கள்….. எத்தனை பெரிய திருவிழா அது!! அனைவருக்கும் ஆனந்தம்…. ஒருபுறம் வெற்றியின் ஆனந்தம். மறுபுறம் திருவிழா கோலாகலம். அனைவரும் அதில் லயித்தார்கள். ஆனால் அனுமனோ எங்கும் காணப்படவில்லை. அனுமன் எங்குமே தென்படவில்லை. பிராட்டி அவரைத் தேடினார் வரப்பணித்தார். அனுமனுக்கு ஒன்று தர வேண்டும் என்று அவருக்குத் தன் மாலையை அளித்தார். அனுமனோ அதில் இருக்கும் ஒவ்வொரு முத்தையும் உடைத்துப் பார்க்க ஆரம்பித்தார். ஏன் என்று மற்றவர்கள் கேட்க அவரோ, முத்துக்களுக்காக நான் சேவை செய்யவில்லை. முத்துக்கள் தாம் இருந்து விட்டுப் போகட்டும். இவற்றைக் குறைத்துச் சொல்லவில்லை. அது முத்துமாலை தான் நான் மறுக்கவில்லை. ஆனால் சேவை செய்பவர்கள் இதையெல்லாம் கவனிப்பதில்லை. ஒவ்வோர் முத்திலும் ராமன் இருக்கிறானா என்று பார்த்தார். அவர் இதயத்திலே இராமன் குடியிருந்தார் ஒரு நாள் அதைக் காட்டவும் செய்தார்.
வித்யாவான் குணீ அதிசாதுர. பரந்து ராமகாஜ கரிபேகோ ஆதுர. கார்யகர்த்தரின் கவனம் காரியத்தின் மீதே இருக்கிறது புகைப்படத்தின் மீது அல்ல. இப்போது பழக்கமாகி விட்டது. இதுவே ஃபேஷன். நாமோ கலையை வழிபடுவோர். கலைகளிலே அளிப்பு வெளிப்பாடு, கண்டிப்பாக வேண்டும். நிகழ்ச்சியை எப்படி அளிப்பது? இதன் நல்ல நினைவுகள், புகைப்படமாகப் பாதுகாக்க வேண்டும் இதுவும் ஒரு கலை. இவையெல்லாம் இருக்க வேண்டும்… சரிதான். ஆனால் காரியகர்த்தருக்கென ஒரு வரையறை இருக்கிறது.
அவருடைய கவனம் செயல்களின் மீதே இருக்க வேண்டும் அதாவது யார் கார்யகர்த்தா என்றால் காரியங்களைச் செய்பவரே கார்யகர்த்தா. அப்படிப்பட்ட கார்யகர்த்தர்களாக நாம் ஆக வேண்டும். கலை ஒரு சாதனை. கலை ஒரு திறமை, இறைவனளித்த கொடையாகும். அது நம்மிட த்திலே இருக்கிறது. நாம் அதை வழங்குகிறோம். அதைத் துதிக்கவும் செய்கிறோம். போற்றவும் வேண்டும். ஆனால் அந்தத் துதியை, கேட்க மட்டும் செய்தால், பரவாயில்லை, பார்க்க மட்டும் செய்தால், பரவாயில்லை. அது ஆழமாகச் சென்றுவிடக் கூடாது தலைக்கேறிவிடக் கூடாது. இதை அனைவரும், பழகிக் கொள்ள வேண்டும்.
நீங்களனைவரும் கலைஞர்கள், சமூகத்தில் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறீர்கள். எங்கள் அமைப்பில் வாத்தியக்குழு பேண்டு வாத்தியம் உண்டு. சங்கத்தின் தேவைகளுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அங்கேயும் நாங்கள் பார்க்கிறோம், அதிலே எனக்கு 5 பாடங்கள் தெரியும் இல்லை 12 பாடங்கள் தெரியும் இது தொடர்பாக பரஸ்பர மிதப்பு, ஏற்பட சாத்தியமிருக்கிறது, ஏற்பட நாம் அனுமதித்தால்.
ஆகையால் நாம், ஒரு வாத்தியத்தில் ஒருவர் தேர்ச்சி பெற்று விட்டால் அவருடைய வாத்தியத்தை மாற்றி விடுகிறோம். இப்போது இந்த அனைத்துத் தடைகளும், ஏற்படுவதோடு, நல்ல திறமையாளர்களுக்கு குறிப்பாக ஏற்படுகிறது. ஆகையால் தான் நான் உங்களிடம் கூறுகிறேன். அனைத்து மனிதர்களும், இதன் காரணமாக, இந்த, அகங்காரத்தால் பீடிக்கப்பட்டாலு ம் கூட, இந்த அகங்காரம் அனைவரையும் விட்டுவிட்டாலும், திறமையாளர்களைப் பிடித்துக் கொள்கிறது. காரியகர்த்தர்கள் இதை விட்டு விலகி கருமமே கண்ணாக இருக்க வேண்டும். விடுபட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஏற்பாடுகளோடு ஒன்றிவிடக் கூடாது. அவசியமானால் அவர்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். தேவைப்படும் வரை பங்கேற்பார்கள்.
தேவை முடிவுக்கு வந்தால், பங்கேற்பும் முடிந்து விடும். அடுத்து யார் பணியாற்ற வேண்டுமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை நான் கவனிப்பேன். இதைத் தான் தொடர்ந்து பழக வேண்டும். நான் என்னுடையது என்று கிடையாது. சம்ஸ்கார் பாரதி என்ன தீர்மானிக்கிறதோ அதுதான். இடம் பெயர் புகழ் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சங்கத்திற்காக இடம் பெயர் புகழை ஏற்க வேண்டும் என்றால், அதையும் ஏற்பேன். ஆனால் அதிலிருந்து விலகி இருப்பேன். நான் விலகி இருப்பேன்.
அமைப்பு என்னை அமர வைத்திருக்கும் இடத்தில் ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால், அங்கு இருப்பது, அவசியமானது என்றால், மேலும், அதைப் பொறுத்துக் கொள்வது அவசியமானது என்றால், அதை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் இது என்னுடையது இல்லை. எனக்கு அந்த முத்து தேவையில்லை. எனக்கு இராமனிடம் தான் வேலை. அப்படிப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தால், அவர் தான், கார்ய கர்த்தர் என்போம்.
மேலும் செயல்களில் தடைகள் ஏற்படுகின்றன. நான் செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியே கிடைக்குமா, அப்படி ஒன்றும் இல்லை. ஒவ்வொரு முறையும் செயல்களை, புகுந்து செய்ய வேண்டுமா என்றால் அப்படியும் இல்லை. தன்னுடைய பராக்கிரமத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் விருப்பம் இருப்பவர், அவர் எங்கே நுழையத் தேவையில்லையோ அங்கேயும் நுழைந்து விடுகிறார். அல்லது ஏதோ காரணத்தால், அவருக்கு என்று ஒரு புகழ் பராக்கிரமம் கிடைத்து விட்டால், அவர் பணிய மாட்டார், உடைந்து விழுந்தாலும் கூட பணிய மாட்டார். இதற்கும் ஒரு வழக்கு உண்டு இதற்கும் ஒரு ஆதர்ஸம் உண்டு. அதுவும் கூட பின்பற்றக்கூடிய ஒரு விஷயம் தான்.
ஆனால், எப்போது என்றால், செய்யப்படும் காரியம் அவரை விட மகத்தானதாக இருக்கும் வேளையில். சிவாஜி மகராஜுக்கு தோன்றியது சுயராஜ்ஜியத்தை பெற வேண்டும் என்று சொன்னால், முதுகைக் காட்டி ஓடி ஒளிவது அவசியம் என்றால், அவர் கொஞ்சமும் கூச்சப்படவேயில்லை. சுயராஜ்ஜியத்தைப் பாதுகாக்க, நான் உங்களுடைய சேவகன் என்று ஔரங்கசேபுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றால், அப்படியொரு கடிதத்தை எழுத அவர் கூச்சப்படவில்லை. இலக்கு சிவாஜி மகராஜுக்குத் தெளிவாக இருந்தது. ஆனால் அதற்கான கொள்கை, மேற்கொண்ட காரியத்திற்குப் புகழ் சேர்க்கும் திசையில் கொண்டு செல்வது. என்னுடைய சொந்த புகழ் அதனால் அதிகமாகுமா குறையுமா, இதைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
ஆகையால் இந்தக் காரணத்தால், அஃப்சல்கான் என்ற ஒரு சங்கடம் அவருக்கு ஏற்பட்ட போது, அப்போது புத்திகூர்மையோடு புரிந்து கொண்டார், களத்தில் அவனோடு மோதுவது சாத்தியமில்லை, எல்லாம் நாசமாகி விடும் என்று. சுயராஜ்ஜியம் மண்ணோடு மண்ணாகி விடும் என்று. ஆகையால் அவர் அவனை, சமவெளியிலிருந்து வெளிப்படுத்தி, மலை-காடுகளில் வரவழைத்தார், முழுமையாக அழித்தார். இதற்குள்ளாக பெரும் அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. மக்கள் பலவாறாகப் பேசினார்கள் அவரும் சகித்துக் கொண்டார். ஏனென்றால், தூற்றுதலோ, போற்றுதலோ இவற்றோடு எனக்கு என்ன சம்பந்தம்?
निन्दन्तु नीतिनिपुणा यदि वा स्तुवन्तु. लक्ष्मी: समाविशतु, गच्छति वा यथेष्टम् । अद्यैव वा मरणमस्तु, युगान्तरे वा, न्याय्यात्पथ: प्रविचलन्ति पदं न धीरा: ।।
சத்தியம்-நியாயத்துக்குட்பட்டு எந்தப் பாதையை ஏற்றிருக்கிறோமோ அந்தப் பாதையை விட்டு, நாம் சற்றும் விலகிச் சென்று விடக்கூடாது. இதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள், போற்றுதல் தூற்றுதல், செல்வம் ஈட்டுதல் கௌரவிக்கப்படுதல் இல்லையென்றாலும் கூட, கேடு விளைந்தாலும், பயணிக்கும் போது மரணமேற்பட்டாலும், மரணத்தையொத்த வாழ்கையை வாழ நேர்ந்தாலும், ஆனால் இவ்வாறு நடந்தால், நாம் கொண்ட பாதையிலேயே செல்லுவோம். சமநிலை, பொறுமை, உற்சாகமும் வேண்டும். உற்சாகம் இல்லாமல் பணியாற்ற முடியாது. ஆனால் உற்சாகத்திற்கும் ஒரு தேவை உண்டு, காரியம் உன்னதமாக இருக்க வேண்டும், இது தான் உற்சாகத்துக்கான தேவை. இல்லையென்றால் காத்திருக்க வேண்டியிருக்கும். இதன் பிறகும் கூட, வெற்றி தோல்விகள் பாதிக்காமல் இருக்க வேண்டும். எல்லா செயல்களும் வெற்றியிலேயே முடிவடைவதில்லை. தொடர்ந்து பணியாற்றி வர வேண்டும். ஆகையால் முழுமையாக முயற்சிகளில் கசடில்லாமல் ஈடுபட்டால், காரியம் நமது கைகளில், பலன் இறைவன் கைகளில்.
இப்படிச் செல்ல வேண்டும். லோக்மான்ய திலகர் மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் கழித்தார். திரும்பி வந்து பார்த்தால், எத்தனை விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாரோ, அத்தனையும் நீர்த்துப் போயிருந்தன, யாருமே கூட இல்லை. 28.21அடுத்த நாளே கேசரியில் அவர் கட்டுரை எழுதினார், புனஸ்ச ஹரிஓம். என்ன இது இப்படி ஆகி விட்டதே என்று, அவர் சோர்ந்து போய்விடவில்லை. இது தான் பாதை இப்படித் தான் செய்ய வேண்டும் அப்படியே செய்யவேண்டும், என்று ஆரம்பத்திலிருந்து தொடங்கினார். அப்படியே செய்தார். கார்யகர்த்தர்களும் கூட தங்கள் நோக்கத்திற்காக சாதனையில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கணமும் இதை கவனத்தில் கொண்டு நமது நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும். நமது செயல்பாடுகளின் அடிப்படையில் நமது அமைப்பின் சகபயணிகளையும், நமது நடவடிக்கைகள் நட்பின் மூலமாக அவர்களையும் நம்மைப்போல மாற்றியமைக்க வேண்டும். அமைப்பினுடைய மெய்யான வலிமை, எண்ணிக்கையில் அல்ல. அதன் மற்ற குணங்களும்கூட அல்ல.
அடிப்படையில் மூன்று விஷயங்கள் தாம். கொள்கைப்பிடிப்பு. கொள்கை என்பதே பிரதானம். அதேபோலத் தான் ஒழுங்குமுறையும். என்னதான் சிறப்பாக நான் செயல்பட்டாலும், அணியில் இருந்தாலும், ஒவ்வொருமுறையும் நானே வருவேன் என்பதல்ல, கேப்டன் யார் என்ன செய்வார்கள் என்று கூறுவதுபடியே நடக்கும். நான் ஒழுங்குமுறைப்படி நடப்பேன் எனக்கு என்ன கூறப்படுகிறதோ, அதை ஏற்று நடப்பேன். ஆனால் இந்த ஒழுங்குமுறை எப்படிப்பட்டது? இது திணிக்கப்பட்டது இல்லை ஏனென்றால், கொள்கைப்பிடிப்புகூட, தீவிரப்போக்கை ஏற்படுத்துகிறது, ஒழுங்குமுறைகூட, தீவிரப்போக்கை ஏற்படுத்துகிறது, ஆனால் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஏன் புன்முறுவலோடு ஏற்கிறார்கள் என்றால், ஆத்மார்த்தமான ஒரு இணக்கம் ஏற்படுகிறது. இதை அனைவரும் செய்கிறார்கள், அன்போடு. நமது தொடர்புகள் ஆத்மார்த்தமாக இருக்கட்டும், பரஸ்பர அன்போடு ஒருவரோடு ஒருவர் பழகலாம், ஒருவரை ஒருவர் முன்னேற்ற செயல்களை, ஆற்றுவோம், காழ்ப்பு எரிச்சல் பொறாமை ஏதும் இல்லாமல் இருப்போம், இப்படியாகப் பழகுவோம். இதற்கு முக்கியமானதான குரல் தேவை. இதற்கான மனம் வாக்கு வேண்டும். அதனடிப்படையிலே, நமது செயல்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையை நாமும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்றச் செய்வோம். நமது கொள்கைகளை முன்னிறுத்தி முன்னேறிச் செல்வோம்.
இது தான் நமது பலம். இந்த பலத்தின் துணையோடு நாம் பயணித்தால், வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நாம் கவலையே இல்லாமல் பயணிக்கலாம். யாருடைய தயவையும் நாடத் தேவையில்லை. இந்த வகையிலே நாம் பயணிக்க வேண்டும். அப்போது தான் நாம் நமது இலக்கை அடைய முடியும். நாம் இந்த பலத்தை அடையும் நிலையை எட்டிக் கொண்டிருக்கிறோம். இதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலே நமது சமூகத்திலே, இருக்கும் பலவகையான கலைஞர்களை, அவர்களை இணைக்க வேண்டும்.
சமூகத்திலே பலவகையான, பிரச்சனைகள் இருக்கின்றன. கலைவாயிலாக அவற்றுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும், மேலும் சமூக கண்ணோட்டம் மாற வேண்டும், அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும், நம்மைவிட்டுப் போனவர்கள் திரும்பி வர வேண்டும், இவையனைத்தும் அந்த விழிப்பின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும், அப்படிப்பட்ட விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும், இதற்கென பிரத்யேகத் திட்டங்களை நாம் கைக்கொள்ள வேண்டும். இந்த வழியில் பயணித்து நாம் முன்னேறினோம் என்று சொன்னால், கலை கலாச்சாரத் துறையினிலே, பாரதத்தின் முன்னெடுப்பு நிறுவப்பட்டு, உலகம் முழுவதற்கும், அவர்களுக்காக ஒரு புதிய முன்னெடுப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலே, ஒட்டுமொத்த உலகிலுமே, மங்கல விஷயங்களை படைத்தளிக்கும், அமுதப்பெருக்கினை உருவாக்கும்.
மனம் வாக்கு செயல்களினால், உலகம் அனைத்தும் நாகரிகம் உடையதாய் உருமாற்றும். உலக சகோதரத்துவத்தை ஏற்று பயணிப்போம், அனைவரையும் ஒன்றிணைப்போம், அனைவரையும் அரவணைத்து முன்னேறுவோம். ஆக, விஸ்வகுருவான பாரதம், அனைவரும் மகிழ்வாய் எந்த நோய்நொடியும் இல்லாமல், அனைவரும் மங்கலங்களையே காணட்டும் யாருக்கும் துக்கமே இருக்க கூடாது.
இப்படிப்பட்ட உலகத்தை நிர்மாணம் செய்யப்படுவதை, இந்த விஷயம், செய்யப்படுவதை, நடைமுறையாவதை, நாம் நம்முடைய இந்த வாழ்க்கையிலேயே கூட காண முடியும். அந்தத் திக்கில் நாம் பயணிக்க முடியும். அந்த அளவுக்கு நாம் பலமடைந்திருக்கிறோம், என்று கூறி அமைகிறேன், நன்றி வணக்கம்.
பொங்கல் பயண முன்பதிவு இன்று துவங்கியது.துவங்கிய சில நிமிடங்களில் பல ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர் பலர்.
தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று (நவம்பர் 10) முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.
60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு
தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை வருகிற 2026 ம் வருடம் – ஜனவரி 15 வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ——- பயண நாள் — பயண கிழமை
நவம்பர் 14 —– ஜனவரி 13- 2026 —- செவ்வாய்
நவம்பர் 15 —– ஜனவரி 14-2026 —– புதன் – போகிப் பண்டிகை
நவம்பர் 16 —– ஜனவரி 15-2026 — வியாழன் – பொங்கல்
நவம்பர் 17 — ஜனவரி 16-2026 — வெள்ளிக்கிழமை — மாட்டுப்பொங்கல்
நவம்பர் 18 — ஜனவரி 17-2026 — சனிக்கிழமை — உழவர் திருநாள்
நவம்பர் 19 — ஜனவரி 18-2026 — ஞாயிறு
நவம்பர் 20 — ஜனவரி 19-2026 — திங்கள்
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கிப்போதே முன் பதிவு செய்து பயணிக்க தயாராகுங்கள்.
இப்போது, “Search your name in electoral roll” (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) https://electoralsearch.eci.gov.in/ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 2: தேடல் விருப்பங்கள்
உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும்: EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) விவரங்கள் மூலம் தேடுதல் மொபைல் எண் மூலம் தேடுதல்
விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல் உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும். உங்க EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும். மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து ‘தமிழ்நாடு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும். “Search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல் உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம். “Search by details” என்பதைக் கிளிக் செய்யவும். மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும். பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்: உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்) பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி) பாலினம் மாவட்டம் மற்றும் தொகுதி Captcha குறியீட்டை நிரப்பி, “Search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல் உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும். “Search by Mobile” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும். Captcha குறியீட்டை நிரப்பி, “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு, “Search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும்.
பிரிட்ஜோப் காப்ராவின் நேர்காணல் தொடர்ச்சி — கார்லோ பிஸ்ஸாட்டி —
— தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார் —
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாக கருதப்படுவது அவர் எழுதிய தாவோ ஆப் பிசிக்ஸ் (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. அது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்….
ஓபன் மேகஸினில் வந்த அவருடைய நேர்காணலில் இருந்து… இரண்டாம் பகுதி!
கேள்வி : நம்முடைய மனதில் , நீங்கள் வடிவியலின் சிறை (Prison of geometry) என்று, சொல்லுகின்ற அழிவு திட்டங்கள் எப்படி வந்து சேர்கின்றன? அந்த கணத்தை விளக்க முடியுமா ?
பதில் : 1970 களில் தாவோ ஆப் பிஸிக்ஸ் வெளியானது. 1960 இல் தோன்றிய மாற்று கலாச்சாரம் என்ற உலகளாவிய வலை பின்னலில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன். அதுதான் 1970 களில் புதுயுக இயக்கத்துக்கு வழிகோலியது . உலகை பற்றிய புதிய பார்வை, புதிய ஆன்மீகம், புதிய மதிப்பீடுகள், புதிய வாழ்க்கை முறைகள், பாலின விடுதலை, போதை மருந்துகள் என்று லட்சியபூர்வமான இயக்கங்கள் தோன்ற வழி வகுத்தது. அவற்றிற்கு அரசியல் நோக்கம்/ பரிமாணம் இல்லை.
1980 களில் பசுமை/ சூழலியல் இயக்கங்கள் மூலம் அரசியல் பரிமாணம் ஏற்பட்டது. 1983 இல் ஜெர்மானிய பசுமைக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. அதன் பிறகு அந்த இயக்கம் உலகமெங்கும் பரவியது. 1986 இல் கோர்ப்பச்சேவின் செயல்களால் 1980 களின் இறுதியில் புதுயுக இயக்கங்கள் திருப்புமுனையை சந்தித்தன. சமுதாயத்தை முற்றிலும் வேறு விதமாக வடிவமைப்பதற்கான எல்லா விஷயங்களும் எங்களுக்கு கிடைத்தன.
அப்போதுதான் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. அது உலகின் பல பகுதிகளுடனான தொடர்பை, இணைப்பை அதிகரித்தது. ஆனால் ,அதே வேளையில், பணம் பண்ண வேண்டும் என்கின்ற புது வகையான முதலாளித்துவத்தை உலகில் உருவாக்கியது. பணம் சம்பாதிப்பதா அல்லது ஆரோக்கியம் , சமூக நீதி, பொருளாதார சமத்துவம் போன்ற மனித விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா என்ற தேர்வு முன்வந்தபோது செல்வம் சேர்ப்பதற்கே முன்னுரிமை என்ற முடிவை கணிணிகள் மேற்கொண்டன.
எனவே புதுவகையான உலகியல் உருவானது. ‘உலகமயமாக்கல்’ என்பது அந்த மாயச் சொல். எல்லோரும் அதை பயன்படுத்த தொடங்கினர். உலகமயமாக்களில் பல நல்ல, பயனுள்ள அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் உள்ள கார்ப்பரேட் மற்றும் பொருளாதார உலகமயமாக்கல் மிகவும் கேடு விளைவிக்க கூடியவை. நான் அங்கம் வகித்த மாற்று கலாச்சார இயக்கங்களுக்கு புதிய உலகமயமாக்களை எதிர்கொள்ள ஒரு தசாப்த்திற்கும் மேலான காலம் தேவைப்பட்டது. 1990 களில் இறுதியில் சியாட்டிலில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை எதிர்த்து உலக சிவில் சமுதாயம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தான் நாங்கள் 1980 களில் இருந்த நிலைக்கு மீண்டும் வந்தோம்.
தாவோ ஆப் பிசிக்ஸ் உருவாக்கிய , நான் அங்கம் வகித்த இயக்கம், எதிர்காலத்தைப் பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கியது என்று சொல்லலாம். ‘மற்றொரு உலகம் சாத்தியம்தான்’ என்ற கோஷத்துடன் உலக சமுதாய அமைப்பின் சார்பில் சர்வதேச அளவில் பல மாநாடுகள் நடத்தப்பட்டன. அது ஒரு உலக கண்ணோட்டம். அந்த உலக கண்ணோட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தாவோ ஆப் பிசிக்ஸ் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இதுவொரு மரபின் தொடர்ச்சி எனலாம்.
கேள்வி : திட்டமிட்ட ரீதியிலான உங்கள் கண்ணோட்டத்தின்படி பர்மெனிடேஸூக்கும் ஹெராக்களிட்டஸூக்கும் இடையேயான முரண்பாடு – இருப்பது × விழைவு – விஷயத்தில் ஆசிய தத்துவங்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமா ? ( இருவரும் பண்டைய கிரேக்க தத்துவவாதிகள். ஒருவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது ஒன்றுதான் என்றார். மற்றவர் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன என்றார். – மொழிபெயர்ப்பாளர்)
பதில் : தாவோ ஆப் பிசிக்ஸில் ஹெராக்ளிட்டஸை நான் கிரேக்க தாவோயிஸ்ட் என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் அவரிடம் அந்த கருத்துக்கள் வலுவாக இருந்தன. ஒவ்வொரு கட்டமைப்புக்கும் அடியில் ஒரு வழிமுறை உள்ளது. அந்த வழிமுறைகளின் மூலமாகத்தான் அந்த கட்டமைப்பே வெளிப்படுகிறது. எனவே அந்த இயக்க விசை பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நவீன அறிவியலையும் கீழைய ஆன்மீகத்தையும் இணைக்கின்ற இரண்டு பெரிய அம்சங்களை என்னுடைய நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஒன்று, எல்லா பொருள்களும் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இரண்டு, உலகின் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பு. இரண்டும் வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டங்கள். வாழ்க்கையை ஒரு வழிமுறை. வாழ்க்கை ஒரு வலை பின்னல். நீங்கள் பர்மெனிடெஸ் மற்றும் ஹெராக்ளிட்டஸ் என்று சொன்ன போது இருப்பு, விருப்பு என்ற சுவாரஸ்யமான சிந்தனை என் மனதில் எழுந்தது.
திட்டமிட்ட ரீதியில் வாழ்க்கையை பார்த்தோமானால் வளர்ச்சிதை மாற்றமே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பதை பார்க்கலாம். சக்தியின் தொடர் ஓட்டம் மூலமாகவும் வேதிப்பொருள்களின் வினைத் தொகுப்பின் மூலமாகவும் பொருள்களின் வலை பின்னலும் வளர்சிதை மாற்றமும் நிகழ்கின்றன. இரண்டு அம்சங்கள் இதில் உள்ளன. ஒன்று, தொடர்ச்சியான ஓட்டம். இரண்டு, வலை பின்னல் . வலைப் பின்னல் தான் கட்டமைப்பு. சக்தி ஓட்டம் தான் வழிமுறை. ஒருவகையில் தொன்மையான இருப்பு , விருப்பு என்ற இரட்டையை இது பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த இரண்டின் இணைப்புதான் வளர்ச்சிதை மாற்றத்துக்கு வழிகோலுகிறது . இந்த கோணத்தில் யோசிக்கும் போது இதுபற்றி மேலும் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
கேள்வி : இந்த கருத்தை மேலும் விரிவாக்கி நீங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது செயற்கை நுண்ணறிவு – ஏ ஐ – வந்துள்ளது. இது உலக அளவில் வேறொரு வகையான வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்ட தொழிற்புரட்சியை கடந்து நாம் புதிய தொழில்நுட்பமான அல்கரிதம், சர்வர்கள், இப்போது ஏ ஐ க்கு வந்துள்ளோம். ஏ ஐ என்பது இன்னொரு கருத்தியல் சிறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது மனித சமுதாயத்தை, மனிதனின் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு என்று கருதுகிறீர்களா ?
பதில் : இரண்டுமாகவும் அது இருக்கலாம். எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து அது சிறையாகவும் மாறலாம். இப்போது அது பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது, உற்பத்தி வழிமுறைகளை நெறிப்படுத்துவது அதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிப்பது என்பதை பார்க்கும்போது, அது மேலும் அதிக பணம் பண்ணுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதார லாபத்தில் கவனத்தைக் குவிப்பது ஆபத்தானது.
எல்லா உயிரினங்களின் வாழ்க்கையிலும் உள்ள இயற்கையான அறிவிலிருந்து வேறுபட்டது இந்த ஏ ஐ என்கின்ற செயற்கை நுண்ணறிவு. வாழும் அறிவு என்பது எல்லா வாழ்க்கை முறையிலும், உயிரினங்களிலும், உள்ளது. அது (சொல்ல முடியாத ஆனால்) உணர்வதையும், உயிரின் இயல்பையும், ஒழுங்கையும் கொண்டது. இந்த உலகில் இருப்பதையும், சுற்றி வருவதையும், உயிர் பிழைத்து இருப்பதையும், மேலும் வளர்ச்சியை , மாற்றத்தை அடைவதையும் தனது முக்கிய தன்மையாக கொண்டுள்ளது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.
ஏ ஐ யின் பயன்பாட்டை நாம் அதிகரிக்கும்போது அது நம்முடைய இயல்பான அறிவு செயல்பாட்டில் , வாழும் முறையில் குறுக்கிடும் அபாயம் உள்ளது. சற்றே சிந்தித்துப் பாருங்கள், இப்போது நாம் சமுதாயத்தில் ஆரோக்கியத்தை விட பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும் இல்லை, ஆனால் பெரும்பாலான நேரங்களில் பணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பணம் சம்பாதிப்பதற்காக, அதிக பணம் சம்பாதிப்பதற்காக இயற்கை சூழலை நாம் அழிக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் நம் வாழ்க்கையே இயற்கை சூழலைச் சார்ந்து தான் இருக்கிறது. வெளியில் இருந்து நம்மை பார்த்தீர்களானால், நம்முடைய நாகரீகமே மனித நலனை விட பணம் சம்பாதிப்பதற்கே அதிக முன்னுரிமை கொடுப்பதாக, அதற்காக இயற்கை சூழலியலையே அழிப்பதாக இருப்பதை காணலாம் . இது மிகவும் அறிவார்ந்த செயலாக, நாகரீகமாக கருத முடியாது. எனவே வாழும் அறிவுக்கு செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே மோதல் இருக்கிறது.
கேள்வி : இன்றுள்ள எண்ம புரட்சி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஒளியில் தாவோ ஆப் பிசிக்ஸை மீண்டும் எழுவதுவாக இருந்தால் அதில் எதை அப்படியே தக்க வைத்திருப்பீர்கள்? எதை மாற்றி எழுத முனைவீர்கள் ?
பதில் : எதற்கு அழுத்தம் கொடுத்து எழுதுவது என்பது மாறிவிடும். அந்த நூலில் பூட்ஸ்ட்ரேப் (Bootstrap) கொள்கையின் மீது கவனத்தை ஈர்த்திருந்தேன். அது இயற்பியலில் இப்போது பின்னகர்ந்து விட்டது. இப்போது சரக்கோட்பாடு (Sting Theory) என்ற நேர்த்தியான அதே வேளையில் சிக்கலான கோட்பாடு இயற்பியலின் மையமாக உள்ளது. அது பற்றிய விவாதத்தை முழுமையாக ஒருங்கிணைக்க விரும்புகிறேன்.
ஆனால் கீழைய ஆன்மீகம் மற்றும் அதன் இணைகளை பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டேன். இப்போதும் அந்த நூலை புரட்டிப் பார்க்கும்போது அதில் உள்ள அஸ்வகோஷ் , நாகார்ஜுனரின் மேற்கோள்களின் அழகு என்னை ஈர்க்கிறது. அவை காலத்தை மீறி நிற்பவை.
அந்த நூலின் கடைசி பாராவை இன்று ஏறத்தாழ ஒரு கோட்பாடாகவே படிக்க முடியும். ‘ உலகத்தைப் பற்றிய இயற்பியலின் பார்வை இன்று நம்முடைய நவீன சமுதாயத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணலாம். இயற்கையில் ஒத்திசைவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும் இருப்பதை பார்க்கலாம். அது நம்முடைய சமுதாயத்தில் இன்று பிரதிபலிக்கவில்லை. அந்த சமநிலையை கொண்டு வர வேண்டுமென்றால் சமூக, பொருளாதார கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் தேவை. வார்த்தையின் உண்மையான பொருளில் சொல்ல வேண்டுமென்றால் , கலாச்சார புரட்சி ஏற்பட வேண்டும்.’ என்னை பொறுத்தவரையில் தாவோ ஆப் பிஸிக்ஸின் உண்மையான தொடர்ச்சி அதுதான்.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாக கருதப்படுவது அவர் எழுதிய தாவோ ஆப் பிசிக்ஸ் (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. அது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.
கேள்வி : மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையேயான விவாதத்தில் தாவோ ஆப் பிசிக்ஸ் இன்றும் நிலைத்திருப்பது எப்படி ?
பதில் : அந்த புத்தகத்தை படித்துவிட்டு மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கருத்துக்களை சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். இயற்பியல் உலகில் எந்திரத்தனமான உலகியல் பார்வை மாறி முழுமையானதாகவும் சூழலியல் சார்ந்ததாகவும் மாறி விட்டிருந்ததே அந்த உணர்வுபூர்வமான எதிர் வினைக்கு காரணம். அது இப்பொழுது அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டு வருகிறது.
‘ நான் நீண்ட காலமாக நினைத்திருந்ததை ஆனால் வார்த்தைகளில் சொல்ல முடியாமல் இருந்ததை நீங்கள் சரியாக சொல்லி இருந்தீர்கள்’ என்றும் ‘இந்த புத்தகம் என் வாழ்க்கையை மாற்றி விட்டது’ என்றும் மக்கள் மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்கிறேன். வாழ்க்கையை பற்றிய சீரான பார்வை என்று நான் சொல்லும் புதிய உலக கண்ணோட்டத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
உலகை பற்றிய இந்த ஒருங்கிணைந்த பார்வை உருவாகி வருவதும், கிழக்கத்திய தத்துவங்கள் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்பு ஆகியவை இந்த நூல் நீடித்திருப்பதற்கு காரணம்.
கேள்வி : தாவோ ஆப் பிசிக்ஸ் நூல் மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மீகத்தை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதே. ஆசிய தத்துவங்களை மேற்கத்திய அறிவியல் முறைகள்படி விளக்க முடியாவிட்டால் அவற்றின் சாரம் குறைந்து விடுவது மட்டுமின்றி அவற்றை கற்றுக் கொள்வதும் கடினமாகி விடும் இல்லையா ?
பதில் : தர்க்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் மட்டுமே விளக்க வேண்டும் என்றால் நீங்கள் சொல்லியது போல் அது கடினமாக இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் தாவோ ஆப் பிசிக்ஸ் நூலை எழுதியபோது அறிவுபூர்வமாக மட்டுமன்றி உணர்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அதில் ஈடுபட்டேன். அதனால்தான் அந்த நூலுக்கு மக்கள் பெருமளவில் உணர்வுபூர்வமாக பதில் வினையாற்றினர்.
இயற்பியலுக்கும் கிழக்கத்திய ஆன்மீகத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பற்றி விவாதித்த போது அது பற்றி மிக ஆழமான நிலையில் அவற்றை நான் அனுபவித்தேன். எனவே அது வெறும் கொள்கை அளவிலான அலசல் அல்ல. மேலும் இது மக்களை விலகிச் செல்ல செய்யும் என்றோ அல்லது அவர்களால் புரிந்து கொள்வது கடினமாகிவிடும் என்றோ நான் கருதவில்லை.
ஆன்மீக மரபுகளை அனுபவத்தால் மட்டுமே விளக்க முடியும் என்பது அதன் சாரத்தை குறைப்பதற்கு மாறாக ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் ஆக்கி விடுகிறது. பொதுவான கலாச்சார பயணத்தில் இதுவொரு இயல்பான செயல்பாடு.
1960 அல்லது 1970 களில் நீங்கள் ஒரு கம்பெனி வேலையில் இருந்து கொண்டு , எனக்கு யோகா வகுப்பு அல்லது தியான வகுப்பு அல்லது கீகோங் வகுப்பு இருக்கிறது. அதனால் கம்பெனியில் நடக்கும் கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னால், சிரித்துக்கொண்டே உங்களை வேலையிலிருந்து நீக்கி விடுவார்கள். இன்று அப்படியல்ல . அதுவொரு வழக்கமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனவே ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுவது இப்பொழுது மிகவும் விரிவானதாக ஆகியுள்ளது.
கேள்வி : ஆனால் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசிய தத்துவ பயிற்சிகளான யோகா மற்றும் தியானத்தை பலரும் உலகியல் லாபங்களுக்காக – தியானம் பயிலும் மேனேஜர்கள் மேலும் திறமையானவர்களாக, யோகாசனம் செய்யும் மக்கள் மேலும் போட்டியில் நிலைத்து நிற்க என்று உலகியல் லாபங்களுக்காக – பயில்வதாக தெரிகிறது. தாவோ ஆப் பிஸிக்ஸ் நூலை படித்த வாசகர்கள் பலரும் ஆன்மீகத்தின் பயன்பாட்டுத் தன்மையை அந்த நூல் சிதைக்கிறது என்று கருதுகிறார்கள். இதை நீங்கள் ஏற்கிறீர்களா? இந்த தவறான புரிதல் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லையா ?
பதில் : அமெரிக்காவில் உள்ள சில வலதுசாரி குழுக்கள் இந்த புதுயுக கருத்துக்களை கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மைதான். அதே வேளையில் சூழலியல் மாற்றங்கள் தொடர்பான அருணோதய இயக்கம், விடியலுக்கு வெள்ளிக்கிழமை போன்ற பெரிய இளைஞர்களின் இயக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் செனட்டார் பர்னி சாண்டர்ஸின் பணிகள் ஆக்குபை அமைப்பின் தாக்கம் போன்றவை எல்லாம் உலகில் எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று மக்களை கருதச் செய்கின்றன. அவர்கள் இந்த பூவுலகின் அழகை பாதுகாக்க விரும்புகிறார்கள். இங்குள்ள வாழ்வனைத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள்.
ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில் பிளவுவாத சக்திகளின் எழுச்சி, குறுகிய தேச நலன் சார்ந்த செயல்பாடுகள், வன்முறை, போர் ஆகியவற்றின் வேகமான எழுச்சிகளால் மேற் சொன்ன மாற்று இயக்கங்கள் வலிமை பெற முடியாமல் ஆகி வருகின்றன. இது மிகவும் வலி தரக்கூடிய விஷயமாக இன்று இருந்தாலும் இது கடந்து போகும், இது மாற்றத்திற்கான காலம் என்றே எனக்கு தெரிகிறது. இவை சுழற்சி வட்டங்கள் போல். நாம் இதிலிருந்து வெளியேறி விடுவோம். குறுகிய கால அரசியல் செயல்களை விட மாற்றத்திற்கான பரிணாம வளர்ச்சியின் செயல்பாடுகள் வலிமையானவை.
கேள்வி : முன்னெப்போதையும் விட இப்போது குவாண்டம் இயற்பியலை அதிகமாக கற்கிறார்கள். ஆனாலும் சமுதாயத்தில் நியூட்டனின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் இன்னமும் சமுதாயத்தில் அர்த்தமுள்ள வகையில் இணைந்து விடவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏன் அது பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தவில்லை ?
பதில் : நீங்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு நீங்கள் மருந்து, மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை பாருங்கள். அவை மனித உடலை ஒரு இயந்திரமாக பார்க்கின்றன. நோய் என்றால் அந்த இயந்திரத்தின் ஏதோ ஒரு பாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளது. அதை வேதி பொருள்களை கொண்டு மாற்ற வேண்டும், சரி செய்ய வேண்டும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டும். இப்போது ஆரோக்கியம் தொடர்பான ஒருங்கிணைந்த முழுமையான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. ஆனால் இயந்திரமாக பார்க்கும் கண்ணோட்டமே வலுவாக உள்ளது.
அதேபோல் நீங்கள் நிர்வாகங்களை பாருங்கள். மேனேஜர்கள் தங்கள் நிறுவனத்தை ஒரு இயந்திரமாக பார்ப்பதும், அதை நுட்பமாக மேம்படுத்த முயல்வதையும் பார்க்கலாம். இந்த மனப்பான்மை நீண்ட காலமாக இருப்பதால் அது வலிமையாக இருக்கிறது. இயந்திரமாக பார்க்கும் மாதிரியில் ஏராளமாக நிதியும் அறிவும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் இதை மாற்ற முனைவது கடுமையான எதிர்ப்பை கிளப்புகிறது.
இப்போதுள்ள எரிசக்தி நிறுவனங்கள் இந்த உலகையே அழிக்கின்ற வர்த்தக மாதிரிகளை பின்பற்றும் விகாரமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த மோசமான நிலை தொடர காரணம் அவர்கள் அதில் ஏராளமாக முதலீடு செய்துள்ளது தான். அவர்கள் தங்கள் முதலீட்டை இழக்க விரும்பவில்லை.
இயந்திரமாக பார்க்கும் கண்ணோட்டத்தில் இருந்து மாறி சீரான, சரியான உலக பார்வைக்கு மாறுவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் சுலபமாகவும் இலகுவாகவும் நிகழ்ந்து விடாது. என் வாழ்க்கையில் அறிவியல் புரட்சிகளை பார்த்திருக்கிறேன். அதற்கு பழமையான உலக பார்வையின் அடிப்படையில் எதிர்வினைகளும் எதிர்ப்பு இயக்கங்களும் எதிர்த்தாக்குதல்களும் நடந்துள்ளன.
நம்முடைய உலக பண்பாட்டில் பரிணாம மாற்றம் ஏற்படுவதை தற்காலிக மற்றும் குறுகிய கால அரசியல் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆனால் இந்த மாற்றத்திற்கான வழி கடினமானது. அது சுலபமான பயணம் அல்ல. கரடு முரடான, கூரான கற்கள் நிரம்பிய சாலையது….
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சர்சங்கசாலக் (தலைவர்) மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் கஸ்வா-இ-ஹிந்தை எதிர்க்கிறார்கள், ஆனால் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளின் ஒரு பிரிவை ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறினார்.
பெங்களூரில் ஆர்எஸ்எஸ்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 100 Years of Sangh Journey: New Horizons’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மோகன் பாகவத் பேசினார். இந்த விரிவுரை அமர்வின் போது, ஆர்.எஸ்.எஸ் குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…
நாட்டில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ‘லவ் ஜிஹாத்’ அல்லது கஸ்வா-இ-ஹிந்தை (இந்தியாவிற்கு எதிரான புனிதப் போர் என்று கூறப்படுவது) அங்கீகரிக்கவில்லை, ஆனால் சமூகத்தில் கணிசமான ‘கட்டர்பந்திகள்’ (அடிப்படைவாதிகள்) உள்ளனர். “நல்லவர்களே, அவர்களை கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து பிரிக்க வேண்டும்,” என்றார்.
நம் வீடுகளில் ‘சம்ஸ்காரம்’ – பண்பாடு – நடத்தையின் மதிப்பை நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது நமது பொறுப்பு. நாம் தடுமாறிவிட்டோம், அதன் விளைவு ‘லவ் ஜிஹாத்’ வெற்றி. இரண்டாவதாக, அனைவரையும் (அ) ஒற்றை அடைப்புக்குள் வைக்காதீர்கள்.
கஸ்வா-இ-ஹிந்த் மற்றும் ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளிகளை இழிவுபடுத்தும் ஒரு பிரிவும் முஸ்லிம்களிடையே உள்ளது. அவர்களை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை தொடர்பில் வைத்திருக்க வேண்டும்.
கணிசமான அடிப்படைவாதிகள் இருந்தாலும், ‘லவ் ஜிஹாத்’ அல்லது இதுபோன்ற பிற நிகழ்வுகள் வெளிப்படும் போதெல்லாம், முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரே அடைப்புக்குள் வைக்கிறோம். அது நல்லதல்ல. நாங்கள் இந்துக்கள், நாங்கள் அப்படி நினைக்கவில்லை. முழு சமூகத்தையும் குறை கூறினால் அடிப்படைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
“‘சம நீதி’ (சமரசக் கொள்கை) அவசியம். நாம் நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, ‘தண்ட் நீதி’ (தண்டனை கொள்கை) அவசியம். நல்லவர்கள், கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து நாம் பிரிக்கப்பட வேண்டும். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும். அவர்கள் பிரிக்கப்பட வேண்டும். நாம் அனைவரையும் சமமாக நடத்த முடியாது. வெவ்வேறு மக்களுக்கு சிகிச்சை வித்தியாசமாக இருக்க வேண்டும். நாம் இதைச் செய்ய வேண்டும்… என்றார்.
சிறுபான்மையினருக்கான சமூக நலத் திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்துமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த் அவர் “சங்கத்தில் தனிப்பட்ட வகையில் பிராமணருக்கு அனுமதி இல்லை. சங்கத்தில் வேறு எந்த சாதியினருக்கும் அனுமதி இல்லை. முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை… கிறிஸ்தவர்களுக்கு அனுமதி இல்லை. சைவர்களுக்கு அனுமதி இல்லை… ஹிந்துவுக்கு மட்டுமே அனுமதி. வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம்கள்… கிறிஸ்தவர்கள் சங்கத்திற்கு வரலாம்… உங்கள் சிறப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், நீங்கள் ‘ஷாகா’விற்குள் வரும்போது, நீங்கள் ‘பாரத மாதாவின்’ மகனாக வருகிறீர்கள்… பரந்த இந்து சமூகத்தின் உறுப்பினராக வருகிறீர்கள்” என்றார் அவர.
ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளைத் தடை செய்யக் கோரினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு எண் மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ்., தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்., அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளோம், மேலும் நாங்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்.,ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன. எங்கள் ‘குரு தக்ஷிணா’வுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கங்கள் எங்களை அங்கீகரித்துள்ளன. பதிவு செய்யப்படாததற்கு பல விஷயங்கள் உள்ளன. சனாதன தர்மம்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ஸில் காவிக் கொடியே குருவாகக் கருதப்பட்டாலும், இந்திய மூவர்ண கொடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம்.
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. நாங்கள், வாக்கு அரசியல், தற்போதைய அரசியல், தேர்தல் அரசியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்க மாட்டோம். சமூகத்தை ஒற்றுமைப்படுத்த சங்கம் பாடுபடுகிறது. அரசியல் இயற்கையிலேயே பிரிவினையை ஏற்படுத்தும். இதனால், அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம்.
நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம். குறிப்பாக, நாம் ஒரு சக்தியாக இருப்பதால், சரியான கொள்கையை ஆதரிக்க எங்கள் ஆற்றலை பயன்படுத்துவோம். தனிநபரையோ, கட்சியையோ இல்லை. கொள்கையை மட்டும் ஆதரிப்போம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என விரும்பினோம். இதனால், கோயில் கட்டுவதற்கு ஆதரவானவர்களை ஆர்எஸ்எஸ்., உறுப்பினர்கள் ஆதரித்தனர். பாஜக.,தான் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருந்தால் அக்கட்சிக்கு தொண்டர்கள் வாக்களித்து ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்.
எங்களுக்கு எந்தவொரு கட்சி மீதும் தனிப்பாசம் ஏதும் இல்லை. ஆர்எஸ்எஸ்., கட்சி என ஏதும் இல்லை. எந்தக் கட்சியும் எங்களுடையது அல்ல. அனைத்து கட்சிகளும் பாரதிய கட்சிகள் என்பதால், எங்களுடையது. நாங்கள் ராஷ்ட்ர நீதியை ஆதரிக்கிறோம். ராஜநீதியை அல்ல. மக்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் உரிமை. ஆனால், நாங்கள் பெருமைப்படும் ராஷ்ட்ர நீதிக்கு ஆதரவாக எங்களது கொள்கையை செலுத்துவோம்… என்று தெளிவுபடுத்தினார்.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சமீபத்திய குரல் குறித்து பகவத் கூறினார்: “நாங்கள் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. எங்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் உள்ளன… விமர்சனம் எங்களை மேலும் பிரபலமாக்குகிறது. நாங்கள் இப்போதுதான் கர்நாடகாவில் (அதை) பார்த்திருக்கிறோம். அவர்கள் மேலும் கேள்விகளை எழுப்ப நாங்கள் ஊக்குவிப்போம்.” என்றார்.
கோவாவில் நடந்த ‘அயர்ன்மேன்’ போட்டியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று, இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளார்.
கோவாவில் அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது நீச்சல் (1.9 கிமீ), சைக்கிள் ஓட்டுதல் (90 கிமீ) ஓட்டப்போட்டி(21.1 கிமீ) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு.சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது இந்தப் போட்டி.
இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். இதில் அவர், 1.9 கி.மீ., தூர நீச்சல் போட்டியில் 55:20 நிமிடங்களில் கடந்தார். தொடர்ந்து 90 கி.மீ., தொலைவு சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களை எடுத்துக் கொண்டு, இலக்கை எட்டினார் அண்ணாமலை.
இந்தப் போட்டியில் அண்ணாமலை பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாமலை தனது சமூகத் தளப் பக்கங்களிலும் இவற்றைக் குறிப்பிட்டு, உடல் திறன் குறித்த தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
பாஜக எம்பியும், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கோவா அயர்மேன் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ளார். இருவரும் இணைந்து இறுதி இலக்கை எட்டி சாதித்துள்ளனர். அவர்கள் பங்கேற்ற படங்களையும் சமூகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ஃபிட் இண்டியா குறித்த தனது எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது கட்சியின் இளைய உறுப்பினர்கள் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா இதில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் பதிவினைப் பகிர்ந்து அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவிக்கும் வ்கையில், என் அன்புக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐயா, #FitIndia இயக்கத்தின் மூலம் நமது நாட்டின் இளைஞர்களின் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.
உங்கள் தலைமையின் கீழ், உடற்பயிற்சி ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது, ஆரோக்கியமான மற்றும் வலுவான பாரதத்திற்கான பகிரப்பட்ட நோக்கத்தில் அனைத்து தரப்பு குடிமக்களையும் ஒன்றிணைக்கிறது. உங்கள் நீடித்த உத்வேகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஐயா, இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்திற்கு எங்கள் சிறிய பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். – என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் முதல் ஜனவரி வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மகரஜோதி விழாவுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சபரிமலை சீசனை முன்னிஷட்டு கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தென்காசி வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு அறிவித்துள்ளது.இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி நடந்து வருகிறது.
அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது H.S. நாந்தேட் – கொல்லம் இடையே வருகின்ற 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1,8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கமாக கொல்லம் – H.S. நாந்தேட் இடையே வருகின்ற 22, 29 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரு மார்க்கமாகவும் 9 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் கேரளா ஆந்திரா மஹாராஷ்டிரா வழியாக ஆன்மீக பெருநகரங்களை இணைத்து HSநான்டெட் மஹாராஷ்டிரா-கொல்லம்(கேரளா) சபரிமலை சிறப்பு இரயில்(07111/07112) அறிவித்துள்ளது சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வைகுண்ட ஏகாதேசி, திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் மற்றும் தேர்வு விடுமுறை பயணங்களுக்கு இந்த வண்டியைப் பயன்படுத்தலாம்.
புனலூர் தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை இரயில் வழித்தடத்தில் முதன்முறையாக மஹாராஷ்டிரா, திருப்பதி மற்றும் தெலங்கானா உட்புற மாநகரங்களை இணைத்து இயக்கப்படுகிறது.
நான்டெட்-கொல்லம்(07111): இயக்க தேதி 20,27.11.25, 04,11,18,25.12.25 & 01,08,15.01.26 – 9 நடைகள்
வகுப்புகள்: ஸ்லீப்பர், 3ஏ/சி, 2ஏ/சி, General ஆன்மீக நகரங்கள் இணைப்பாக புனலூர்(சபரிமலை) திருவண்ணாமலை, திருப்பதி, கர்னூல்(ஸ்ரீசைலம் மற்றும் அஹோபிலம் மேடம்), நான்டெட்(ஹஸுர் சாஹிப் குருத்வாரா)
வந்தே மாதரம் பாடலின் ஓரிரு சொற்களை மாற்றியமைத்து, தேசம் முழுமைக்கும் வலம் வர வைத்தவர் ரவீந்திரநாத் டாகுர். அவரே வங்கத்தில் மட்டும் சுருங்கிக் கிடந்த இந்த மந்திரத்தை தேசிய எழுச்சிக்குக் காரணி ஆக்கினார்.
பங்கிம் சந்திரரால் எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் சரணத்தில், பிரிவுபடாத வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு, பங்கிம் சந்திரர், ஸப்த கோடி கண்ட கலகல நினாதகராலே… நிசப்த கோடி புஜைர் த்ருத கர கரவாலே…. கே போலே, மா துமி அபலே என்று எழுதியிருந்தார். அதாவது ஏழு கோடி சிரங்கள் தரை பணிந்து உனைப் போற்றுதலும், ஈரேழு கோடித் தோள்கள் கரம் உயர்த்தி உனைப் பாடுதலும் எனும் பொருளில் எழுதியிருந்தார்.
1896ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில் முதன்முறையாக அவரே வந்தே மாதரத்தைப் பாடினார். மாநாட்டுக்கான கீதத்தை வடிவமைத்த டாகுர், தம் மாகாணத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரரின் வந்தே மாதர கீதத்தை ஓரிரு வரிகளில் திருத்தம் செய்து பாடினார்! ஏழு கோடி என்பதை பாரத தேசத்தின் முழுமைக்குமான மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு கோடி கோடி கண்ட கல கல நினாத கராலே.. கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே… என்று மாற்றினார். கே போலோ, மா துமி அபலே என்பதை எடுத்தார். இன்னும் சிற்சில மாற்றங்களுடன்… வந்தே மாதரம் காங்கிரஸ் அவையில் டாகுராலேயே பாடப் பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பும் பேரெழுச்சியும்தான், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை ஜீவனுள்ள போராட்டமாக மாற்றி, இந்தத் தாய் நாட்டை வணங்குகின்ற, ‘தாயை வணங்குவோம்’ எனும் கோஷத்துடன் வந்தே மாதரம் எனும் சக்திமிகு மந்திரமாய் உருப்பெற்றது.
1896 செப்.28ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் டாகுரால் பாடப்பட்ட பின்னர் 1905ல் கவிஞர் சரளா தேவி சௌதுராணி பனாரஸ் காங்கிரஸ் அமர்வில் தேசியப் பாடலாக இதனைப் பாடினார். லாகூரிலிருந்து, லாலா லஜ்பத் ராய் வந்தே மாதரம் என்ற பத்திரிகையை வெளியிட்டார். 1905ல் ஹிராலால் சென் தயாரித்த முதல் அரசியல் படத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
இந்தப் பாடல், பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தேசியக் கொடியில் குறியீடாக வந்தேமாதரம் என்ற எழுத்துகள் சேர்க்கப்பட்டன. அதுவே இந்த மந்திரச் சொல்லின் மரியாதையை உணர்த்தும்!
“வந்தே மாதரம்” என்பது மக்கள் உள்ளங்களில் வெறும் பாடலாகப் புகவில்லை; தேசபக்தி, பக்தி மற்றும் பாரதீயர்கள் தங்கள் தாய்நாட்டுடனான வலுவான உணர்ச்சிப் பிணைப்பின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக இதனைக் கண்டனர்.
இந்தப் பாடலின் வரிகள் தாய்நாட்டுக்கு அஞ்சலி செலுத்துகின்றன. பாரதத்தை தெய்வீகத் தாயின் உருவமாகச் சித்திரித்து, அதன் அழகு, வலிமை, கம்பீரத்தை மகிமைப்படுத்தின. தொடக்கத்தில் டாகுரால் இசையமைக்கப்பட்டு, மக்களின் உணர்வுகளைப் பேசும் ஒரு மெல்லிசையாக வலம் வந்தது. பின் பல வகைகளாகவும் விளக்கங்களாகவும் பரிணமித்து, இறுதியில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புணர்வின் அடையாளமாக மாறியது.
பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 24, 1950 அன்று, நாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய வந்தே மாதரம் பாடலை ஜன கண மன பாடலுடன் சமமாக மதிக்க வேண்டும் என்றும், அதற்கு சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சபையில் ஒரு பிரகடனத்தை முன்வைத்தார். எனவே தேசியவாதத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறிய இந்தப் பாடல், அன்று இந்திய அரசியலமைப்பு சபையால் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டு, தேசிய கீதத்துடன் சமமான அந்தஸ்தைப் பகிர்ந்து கொண்டது.
வந்தேமாதர கீதத்தின் சுருக்கப்பட்ட பல்லவி இன்றும் காலை வேளைகளில் வானொலியில் இசைக்கக் கேட்கலாம். இன்றும், தேசிய நிகழ்வுகளில், வந்தே மாதர கீதம், நம் கலாச்சாரம் மற்றும் தேசிய வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து பாடப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள், அரசு விழாக்கள், பள்ளிக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் உட்பட தேசிய நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. மகாகவி பாரதி வந்தேமாதர கீதத்தின் தமிழாக்கமாக இரு வடிவங்களை அளித்தார். இதன் பெருமையை இந்த 150ம் ஆண்டில் மேலும் வளர்க்கச் செய்வோம்!